search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224170"

      கன்னியாகுமரி:

      தக்கலைவட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையிலான அலுவலக பணியாளர்கள் நேற்று நள்ளிரவு சுமார் 11.30 மணி யளவில் கல்குளம் வட்டம், குளச்சல் அருகே யுள்ள லியோன் நகர் சுனாமி காலனியில் ரோந்து பணி யில் ஈடுபட்டனர்.

      அப்போது பயணிகள் ஆட்டோ நூதன முறையில் வடிவமைக்கப்பட்டு அங்கு வந்தது. அதனை சந்தேகத்தின் அடிப்படையில்போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

      அதில் சுமார் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 12 கேன்களில் சுமார் 420 லிட்டர் வெள்ளை நிற மானிய விலை மண்எண்ணை (மீனவர்களின் படகுகளுக்கு பயன்படுத்துவதற்கு மானிய விலையில் மீன் வளத்துறை மூலமாக வழங்கப்படும் மண்எண்ணை) இருந்தது. அதனை வாகனத்துடன் போலீ சார் பறிமுதல் செய்த னர்.

      மேலும் அப்பகுதியில் மறைத்து வைத்திருந்த 100 லிட்டர் வெள்ளை நிற மண்எண்ணை லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் லாரி குளச்சல் போலீஸ் நிலைய வளாகத்தில் மேல் நடவடிக்கைக்காக பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேற்படி ஆட்டோவில் கைப்பற்றப்பட்ட மண்எண்ணை குளச்சல் கிட்டங்கியில் நாளை ஒப்படைக்கப்படுகிறது.

      ஆட்டோ தக்கலை வட்ட வழங்கல் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேற்படி இரு வாகனங்களின் ஓட்டுநர்களும் தப்பிச் சென்றுள்ளனர்.

      • 3 பேர் படுகாயம் அடைந்தனர்
      • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      கன்னியாகுமரி:

      குளச்சல் அருகே வாணி யக்குடி ஆனப்பான்குழியை சேர்ந்தவர் ஜூடி. இவரது மகன் ஜெபின் (வயது 19).ஜெபின் வெள்ளமோடி அருகே ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

      நேற்று காலை வழக்கம் போல் ஜெபின் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றார்.மோட்டார் சைக்கிளின் பின்னால் கோடிமுனையை சேர்ந்த மாணவர் ஜெனிஸ்டன் அமர்ந்திருந்தார். மோட்டார் சைக்கிள் குளச்சல் பெரிய பள்ளி முக்கு சந்திப்பு அருகே செல்லும்போது திடீரென நிலை தடுமாறி எதிரே புத்தளம் சேதுபதிவூரை சேர்ந்த தொழிலாளி குமார் (57) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. குமாரின் பின்னால் மற்றொரு தொழிலாளி சரவணன் உட்கார்ந்திருந்தார்.

      இந்த சம்பவத்தில் 2 மோட்டார் சைக்கிள் களில் வந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டு படு காயமடைந்தனர்.அப்பகுதி யினர் அவர்களை மீட்டு உடையார்விளையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெபின் பரிதாப மாக இறந்தார். ஜெனிஸ்டன், குமார், சரவணன் ஆகிய 3 பேரும் தொடர்ந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

      இது குறித்து தொழிலாளி குமார் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான ஜெபின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

      • கடந்த 3 நாட்களாக அவர் வீட்டை விட்டு வெளியே வராததனால் அவரது நண்பர்கள் அவர் வீட்டுக்கு தேடி சென்றனர்.
      • குளச்சல் போலீசார் சம்பவம் இடம் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

      கன்னியாகுமரி:

      குளச்சல் அருகே செம்பொன்விளையை சேர்ந்தவர் அருள்பாபி (வயது 48). தொழிலாளி. திருமணமாகவில்லை. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவர் சாஸ்தாங்கரை பகுதியில் சொந்தமாக வீடு கட்டி தனியாக வசித்து வந்தார்.

      இந்நிலையில் கடந்த 3 நாட்களாக அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் அவரது நண்பர்கள் நேற்று அருள் பாபியின் வீட்டுக்கு தேடி சென்றனர்.அப்போது உள்பக்கமாக கதவு பூட்டப்பட்டிருந்தது. உடனே அவர்கள் குளச்சல் போலீசாருக்கு தகவல் கூறினர்.

      சப் - இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையிலான போலீசார் சம்பவம் இடம் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அவர் தரையில் இறந்து கிடந்தார். வலது நெற்றியில் ரத்த காயம் காணப்பட்டது. அருகில் மதுபாட்டில், மிக்சர் பொட்டலம் கிடந்தது.

      பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அவர் அதிக போதையில் இறந்தாரா? அல்லது கட்டிலிலிருந்து தவறி விழுந்ததில் இறந்தாரா? என்பது தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்பே அவர் எப்படி இறந்தார்? என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

      • குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
      • கருங்கல் போலீசார் ஆட்டோ டிரைவரிடம் எழுதி வாங்கி எச்சரித்து அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

      கன்னியாகுமரி:

      குளச்சல் அருகே பாலப் பள்ளம் ஒற்றப்பனவி ளையை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி சிவஜோதி (வயது 35). இவர் மார்த்தாண்டத்தில் ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ம் தேதி வேலை முடிந்து சிவஜோதி வீட்டிற்கு வரும் வழியில் சேவிளையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மரியதாஸ் (56) என்பவர் தகராறு செய்தார்.

      இது குறித்து சிவஜோதி கருங்கல் போலீசில் புகார் செய்தார்.கருங்கல் போலீசார் மரியதாசிடம் எழுதி வாங்கி எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில் நேற்று முன்தினம் சிவஜோதி ஒற்றப்பனவிளையில் சென்றுக் கொண்டிருக்கும் போது, அங்கு வந்த மரியதாஸ் மீண்டும் சிவஜோதியை தகாத வார்த்தையால் திட்டி தகராறு செய்தார். இது குறித்து சிவஜோதி குளச்சல் போலீசில் புகார் செய்தார். குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மரியதாசை கைது செய்தனர்.

      • பள்ளி மாணவர்களின் நேர்மையை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
      • குளச்சல் இலப்பவிளை பகுதியை சேர்ந்த முகமது பயஸ், ராபில், ஷாகித் ஆகிய சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

      கன்னியாகுமரி:

      குளச்சல் இலப்பவிளை பகுதியை சேர்ந்த முகமது பயஸ், ராபில், ஷாகித் ஆகிய சிறுவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளி முடிந்து குளச்சல் அருகே உடையார்விளை பகுதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றனர்.

      பொருட்களை வாங்கி விட்டு இரவு வீடு திரும்பினர்.அப்போது சாலையில் செல்போன் ஒலிக்கும் சப்தம் கேட்டது.உடனே அவர்கள் அருகே சென்று பார்த்த போது விலை உயர்ந்த செல்போன் திரை உடைந்த நிலையில் ஒலித்து கொண்டிருப்பதை கண்டு அதை எடுத்தனர்.

      பின்னர் அதனை மாணவர்கள் நேராக குளச்சல் போலீஸ் நிலையம் கொண்டு சென்று இன்ஸ்பெக்டர் கிறிஸ்டியிடம் ஒப்படைத்தனர். சாலையில் கண்டெடுத்த செல்போனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த பள்ளி மாணவர்களின் நேர்மையை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

      • வனத்துறையினர் விசாரணை
      • 10 நாட்களுக்கு முன்பு மண்டைக்காடு பகுதியில் சுற்றித்திரிந்தது

      கன்னியாகுமரி:

      குளச்சல் தும்பாக்காடு குடியிருப்பு பகுதியில் நேற்று நள்ளிரவு 2 கடமான் (மிளா) குட்டிகள் நின்று கொண்டிருந்தன. இதனைக்கண்ட அப்பகுதி இளைஞர் ஒருவர் தனது செல்போனில் அந்த மிளா குட்டிகளை படம் எடுத்து வனத்துறையினருக்கு அனுப்பி தகவல் தெரிவித்தார்.

      தகவலறிந்த வனத்துறை ஊழியர்கள் தும்பாக்காடு குடியிருப்பு பகுதிக்கு விரைந்து வந்தனர்.அதற்குள் மிளா குட்டிகள் மாயமாகி விட்டது. இதனால் வனத்துறை ஊழியர்கள் திரும்பி சென்றனர்.கடந்த 10 நாட்களுக்கு முன்பு மண்டைக்காடு அருகே பிலாவிளை பகுதி வாழைத்தோட்டத்தில் இரவு இது போல் மிளா சுற்றித்திரிந்தது என அப்பகுதியினர் மண்டைக் காடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

      பின்னர் வனத்துறையினர் வருவதற்கு முன்பு மிளா அங்கிருந்து மாயமாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

      இதனை யாரேனும் சட்ட விரோதமாக வனப்பகுதியில் இருந்து பிடித்து வந்தார்களா? மாயமான கடமான் குட்டிகள் அப்பகுதி தோட்டத்தில் பதுங்கி உள்ளதா?எனவும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • 2 நபர்களுக்கு குடிபோதை வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய் யப்பட்டது.
      • 2 சிறுவர்கள் ஓட்டி வந்த வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

      கன்னியாகுமரி:

      குளச்சல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் மற்றும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து துறை மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் குளச்சல் காந்தி சந்திப்பில் வாகன சோதனை நடைபெற்றது.

      இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த நபர்கள் நவீன கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டனர்.பரிசோதனையில் 2 நபர்களுக்கு குடிபோதை வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய் யப்பட்டது. மேலும் 2 சிறுவர்கள் ஓட்டி வந்த வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

      இவைதவிர 58 ஹெல்மெட் வழக்குகள், 3 செல்போன் வழக்குகள் உட்பட மொத்தம் 114 வாகன விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

      • ஆழ்கடல் பகுதிக்கு முதலில் தொழிலுக்கு செல்லும் விசைப்படகுகள் மீன் பாடு குறித்து கரையில் உள்ள மீனவர்களுக்கு தகவல் கூறுவது வழக்கம்.
      • தற்போது முதலில் சென்ற விசைப்படகுகளிலிருந்து நல்ல தகவல் வரவில்லை.

      கன்னியாகுமரி:

      குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300- க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000- க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடி தொழில் செய்து வரு கின்றன.

      இதில் விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதி சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில் தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும்.

      பைபர் வள்ளங்கள் காலையில் கடலுக்குச் சென்று அருகில் மீன்பிடித்து விட்டு மதியம் கரை திரும்பி விடும். இவற்றுள் நெத்திலி, சாளை போன்ற சிறிய ரக மீன்கள் கிடைக்கும். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கரை திரும்பிய விசைப்படகுகள் நேற்று முன்தினம் முதல் மீண்டும் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்று உள்ளன.

      முதல் கட்டமாக குளச்சல் கடல் பகுதியில் இருந்து சுமார் 50 விசைப்படகுகளே மீன் பிடிக்க சென்றுள்ளன.மீதி படகுகள் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.அவை மீன்பிடிக்க செல்ல தயாராகி வருகிறது.

      ஆழ்கடல் பகுதிக்கு முதலில் தொழிலுக்கு செல்லும் விசைப்படகுகள் மீன் பாடு குறித்து கரையில் உள்ள மீனவர்களுக்கு தகவல் கூறுவது வழக்கம். இதன் அடிப்படையில் மற்ற விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லும்.அந்த வகையில் தற்போது முதலில் சென்ற விசைப்படகுகளிலிருந்து நல்ல தகவல் வரவில்லை.

      இதனால் குளச்சல் கடல் பகுதியில் இருந்து மீதி விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதற்கிடையே பைபர் வள்ளம், கட்டுமரங்களிலும் போதிய மீன்கள் கிடைக்க வில்லை. இதனால் வியா பாரிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். இது குறித்து மீனவர் ஒருவர் கூறுகையில்கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்து மீண்டும் ஆழ்கடல் பகுதிக்கு செல்லும் விசைப்படகுகளில் இந்த சீசனில் 'கேரை'மீன்கள் பிடிபடும். ஆனால் தற்போது கேரை மீன்கள் கிடைக்க வில்லை.ஓரளவு கிளி மீன்களே கிடைக்கிறது.பிடிபடும் இந்த மீன்களும் விசைப்படகின் டீசல் செலவுக்கு கூட பற்றாக்குறையாக உள்ளது என்றனர்.

      • இந்த வகை மீன்களின் உறுப்புகளிலிருந்து மருந்து பொருட்கள் தயாரிக்கப்படுகிறது
      • துறைமுக ஏலக்கூடத்தில் இந்த திருக்கை மீனை மீனவர்கள் ஏலம் போட்டு விற்பனை செய்தனர்.

      கன்னியாகுமரி:

      குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.

      விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதி வரை சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும்.

      ஆழ்கடல் பகுதியில் தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய் போன்ற உயர்ரக மீன்கள் கிடைக்கும். பைபர் வள்ளங்கள் காலையில் சென்றுவிட்டு அருகில் மீன்பிடித்து மதியம் கரை திரும்பி விடும்.இவற்றுள் நெத்திலி, சாளை போன்ற சிறிய ரக மீன்கள் கிடைக்கும். ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கரை திரும்பியது.

      விசைப்படகு மீனவர்கள் பண்டிகையை கொண்டாடிவிட்டு, மறுநாள் சுனாமி நினைவு நிகழ்ச்சி மற்றும் புத்தாண்டு ஆலய வழிபாடுகளிலும் கலந்து கொண்டு நேற்று முதல் மீண்டும் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்று உள்ளனர்.

      ஒரு சில படகுகள் சுனாமி நினைவு நாள் முடிந்ததும் மீன் பிடிக்க சென்றன. இதில் ஒரு படகு இன்று காலை கரை திரும்பியது. இந்த படகில் திரட்சி எனப்படும் ராட்சத திருக்கை மீன் சிக்கியது. சுமார் 1000 கிலோ எடை கொண்ட இந்த மீனை கரை சேர்க்க முடியாததால் மீனவர்கள் 8 துண்டாக வெட்டி கரை சேர்த்தனர்.துறைமுக ஏலக்கூடத்தில் இந்த திருக்கை மீனை மீனவர்கள் ஏலம் போட்டு விற்பனை செய்தனர். ஏல முடிவில் இந்த மீன் ரூ.61 ஆயிரத்திற்கு விலைபோனது. இந்த வகை மீன்களின் உறுப்புகளிலிருந்து மருந்து பொருட்கள் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

      • பணம் அரசு கணக்கில் சேர்ப்பு
      • தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்கு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

      கன்னியாகுமரி:

      குமரி மாவட்டம் குளச்சல் அரபிக்கடல் பகுதிக்கு வரும் கர்நாடகா விசைப்படகு மீனவர்கள் தமிழக அரசால் கடலில் பிடிப்பதற்கு தடை செய்யப்பட்ட 'சாவாளை' மீன்களை சட்ட விரோதமாக பிடித்து செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

      இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு குளச்சல் அரபிக்கடல் பகுதியில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த 3 விசைப்படகுகளில் வந்த 29 மீனவர்கள் தடை செய்யப்பட்ட சாவாளை மீன்களை பிடித்து வருவதாக குளச்சல் மீன்பிடி துறைமுக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து குளச்சல் விசைப்படகு மீனவர்கள் உதவியுடன் கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த கர்நாடகாவை சேர்ந்த 3 விசைப்படகுகளை சுற்றி வளைத்து பிடித்து குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் 3 விசைப்படகுகளில் இருந்த கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த 29 மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.

      விசாரணையில் அவர்கள் சட்ட விரோதமாக, தடை செய்யப்பட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான சாவாளை மீன்களை பிடித்து வைத்திருந்தது தெரியவந்தது.

      இதனையடுத்து அமிர்தேஸ்வரி, அமிர்தா னந்தா, அஜனா ஆகிய மூன்று விசைப்படகுகள் மற்றும் அதில் இருந்த மீன்களையும் அதிகளவில் பறிமுதல் செய்தனர்.

      தொடர்ந்து அமிர்தேஸ் வரி படகின் உரிமையாளர் சச்சின், அமிர்தானந்தா படகின் உரிமையாளர் நாகம்மா, அஜனா படகின் உரிமையாளர் அசரப் ஆகியோர் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்கு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

      இதனையடுத்து பறி முதல் செய்யப்பட்ட மீன்கள் நேற்று குளச்சல் துறைமுக ஏலக்கூடத்தில் குவித்து வைக்கப்பட்டு ஏலமிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. ரூ.10 லட்சத்திற்கும் மேல் இந்த சாவாளை மீன்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.இந்த மீன்கள் மீன் எண்ணை மற்றும் கோழி தீவனங்கள் தயாரிக்க பயன்படுவதால் மீன் எண்ணை நிறுவனத்தினர் இதனை வாங்கி சென்றனர்.இந்த சாவாளை விற்பனை செய்யப்பட்ட தொகை அரசு கணக்கில் செலுத்தப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

      • இரணியல் மின்விநியோக உதவி செயற்பொறியாளர் தகவல்
      • உயர் அழுத்த மின்பாதையில் மின் கம்பிகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணிகள் நடைபெற உள்ளது.

      கன்னியாகுமரி:

      இரணியல் மின்விநியோக உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

      செம்பொன்விளை துணை மின் நிலையம் குளச்சல் விநியோக பிரிவுக்குட்பட்ட உயர் அழுத்த மின்பாதையில் மின் கம்பிகளுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணிகள் வரும் 14-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நடப்பதால் உடையார்விளை, கோணங்காடு, அஞ்சாலி ஆகிய பகுதியிலும், 15-ந்தேதி செம்பொன்விளை மின் பிரிவுக்குட்பட்ட பாலப்பள்ளம், மிடாலக்காடு, நீர்வக்குழி, மத்திக்கோடு, பிடாகை, சகாய நகர், குப்பியந்தறை, நெடுவிளை பகுதியிலும், 16-ந்தேதி குளச்சல் விநியோகத்திற்குட்பட்ட நரிக்கல், கீழ்கரை பகுதியிலும், 21-ந்தேதி குளச்சல் விநியோகத்திற்குட்பட்ட இலப்பைவிளை, மரமடி, கொட்டில்பாடு, குழந்தை ஏசு காலனி, ஆசாத்நகர், காரித்தாஸ் காலனி பகுதியிலும், 22 ம் தேதி செம்பொன்விளை விநியோகத்திற்குட்பட்ட இரும்பிலி, கணேசபுரம், பனவிளை, சலேட்நகர், கண்டர்விளாகம், வாணியக்குடி, ஆலஞ்சி, குறும்பனை ஆகிய பகுதியிலும் மேற்கூறிய நேரங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

      • கேரளாவுக்கு கடத்தியபோது பிடிபட்டது
      • போலீசார் கூடுதலாக ரோந்து பணியில் ஈடுபடவேண்டும்

      கன்னியாகுமரி:

      குமரி மாவட்டம் வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் பொருட்கள் அடிக்கடி கடத்தப்பட்டு வருகிறது. இதனை போலீசாரும், வருவாய்த்துறையினரும் அடிக்கடி சோதனை நடத்தி தடுப்பதோடு, கடத்தல் பொருட்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

      நேற்று இரவு தக்கலை வட்ட வழங்கல் அதிகாரி சுனில் குமார் தலைமை யிலான பணியாளர்கள், கல்குளம் வட்டம் குளச்சல் பகுதியில் வாகன சோத னையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தே கத்திற்கு இடமாக ஒரு கார் வேகமாக வந்தது.

      அந்த காரை நிறுத்தும் படிஅதிகாரிகள் சைகை காட்டினர். இதனை தொடர்ந்து சற்று தூரம் தள்ளி கார் நிறுத்தப்பட்டது. ஆனால் அதில் இருந்த டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

      இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் காரை சோதனை செய்த னர். அப்போது காருக்குள் சுமார் 500 கிலோ ரேஷன் அரிசி மூடைகளில் இருப்பது தெரியவந்தது. அதனை கேரளாவுக்கு கடத்த முயன்றதும் கண்டு பிடிக்கப்பட்டது.

      இதனை தொடர்ந்து ரேஷன் அரிசி மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அரிசி மூடைகள் உடையார் விளை அரசு கிட்டங்கியில் ஒப்படை க்கப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் வட்ட வழங்கல் அலுவலகம் கொண்டு சென்று நிறுத்தி வைக்கப்பட்டது. கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் போலீசார் கூடுதலாக ரோந்து பணியில் ஈடுபடவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

      ×