search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்ஸ்"

    • ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு ஐஆர்சிடிசி சார்பில் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • பயனர்கள் தப்பித்தவறியும் இவ்வாறு செய்தால், அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு பயனர்கள் பாதுகாப்பு கருதி ஐஆர்சிடிசி சார்பில் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு பயனர்கள் "irctcconnect.apk," என்ற பெயர் கொண்ட தரவுகளை தங்களது சாதனங்களில் இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என்று ஐஆர்சிடிசி கேட்டுக் கொண்டுள்ளது. இந்த தரவுகளை டவுன்லோட் செய்யும் பட்சத்தில் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

    வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற தளங்களின் மூலம் இந்த தரவு வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் இதில் போலி வலைதளமான https://irctc.creditmobile.site முகவரியும் இணைக்கப்பட்டு இருக்கிறது.

    ஐஆர்சிடிசி வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி இந்த தரவை டவுன்லோட் செய்தால், உங்களது ஸ்மார்ட்போனில் அது மால்வேரை இன்ஸ்டால் செய்துவிடும். https://irctc.creditmobile.site வலைதளம் தோற்றத்தில் ஐஆர்சிடிசி வலைதளம் போன்றே காட்சியளிக்கிறது. இதில் உங்களின் தனிப்பட்ட விவரங்களை பதிவிட்டால், ஹேக்கர்கள் அவற்றை தவறாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது.

     

    இந்த தளத்தை உருவாக்கிய ஹேக்கர்கள் ஐஆர்சிடிசி அதிகாரிகளாக அறிமுகப்படுத்திக் கொண்டு பயனர்களிடம் ஆண்ட்ராய்டு செயலி ஒன்றை டவுன்லோட் செய்ய வலியுறுத்தி வருகின்றனர். இதன் மூலம் பயனர்களின் தனிப்பட்ட வங்கி விவரங்களான நெட் பேங்கிங் பெயர், கடவுச்சொல், யுபிஐ முகவரி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்களை அபகரிக்க முயற்சிக்கின்றனர்.

    இந்த ஐஆர்சிடிசி முறைகேடில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

    போலி செயலிகளை டவுன்லோட் செய்ய வேண்டாம் என்று ஐஆர்சிடிசி சார்பில் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்யும் போது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். இதுபோன்ற முறைகேடில் சிக்காமல் இருக்க பயனர்கள் ஐஆர்சிடிசி செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து மட்டுமே டவுன்லோட் செய்ய வேண்டும்.

    மேலும் ஐஆர்சிடிசி சார்பில் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களான (கடவுச்சொல்), கிரெடிட் கார்டு எண், ஒடிபி, வங்கி கணக்கு எண் அல்லது யுபிஐ உள்ளிட்டவைகளை மொபைல் போன் மூலம் கேட்கப்படாது. 

    • வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருக்கும் புதிய அப்டேட் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு வெர்ஷன் செட்டிங்ஸ்-இல் விரைவில் சர்ச் பார் வழங்கப்பட இருக்கிறது.

    மெட்டா நிறுவனத்தின் குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் தனது ஆண்ட்ராய்டு வெர்ஷனில் புதிய அம்சம் வழங்க இருக்கிறது. இதுகுறித்து WABetaInfo வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி செயலியின் செட்டிங்ஸ்-இல் சர்ச் பார் சேர்க்கப்பட இருக்கிறது. கூகுள் பிளே பீட்டா திட்டத்தின் கீழ் இந்த அம்சம் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

    அந்த வகையில், இந்த அம்சம் தற்போது பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து வெளியாக இருக்கும் எதிர்கால அப்டேட்களில் இந்த அம்சம் அனைவருக்குமான ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படலாம். ஆப்பிள் ஐபோன் வெர்ஷனில் சர்ச் பார் மூலம் ஆப் செட்டிங்ஸ்-ஐ இயக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் செயலியின் செட்டிங்ஸ்-ஐ குறிப்பிட்டு தேட முடியும்.

     

    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் இந்த அம்சம் எப்படி இயங்கும் என்ற ஸ்கிரீன்ஷாட்கள் வெளியாகி உள்ளன. அதன்படி பயனர்கள் செட்டிங்ஸ்-இன் மேல்புறத்தில் சர்ச் பார் கொண்டு தேட விரும்புவதை டைப் செய்யலாம். இவ்வாறு செய்தபின் தேடலுக்கான பதில்கள் பட்டியலிடப்படும். பீட்டா டெஸ்டர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்பட்டு விட்டதை உணர்த்தும் ஐகான் இடம்பெற்று இருக்கிறது.

    இவ்வாறு வாட்ஸ்அப் செட்டிங்ஸ்-இல் சர்ச் ஐகான் காணப்பட்டால் இந்த அம்சம் வழங்கப்பட்டு விட்டதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். சர்ச் பார் மட்டுமின்றி வாட்ஸ்அப் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த கம்பேனியன் மோட் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் ஏற்கனவே பீட்டா டெஸ்டர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.

    Photo Courtesy: WABetaInfo

    • வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருப்பதாக நீண்ட காலமாக கூறப்படும் அம்சமாக டெக்ஸ்ட் எடிட்டர் உள்ளது.
    • வாட்ஸ்அப் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டில் டெக்ஸ்ட் எடிட்டர் அம்சம் டெஸ்டிங் செய்யப்படுவதாக தகவல் வெளியானது.

    வாட்ஸ்அப் செயலியில் டெக்ஸ்ட் எடிட் செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த அம்சம் செயலியின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷன்களில் டெஸ்டிங் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டன. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் பீட்டா டெஸ்டர்களில் தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு இந்த அம்சம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

    எனினும், முதற்கட்டமாக இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிகிறது. தற்போது டெஸ்டிங்கில் உள்ள டெக்ஸ்ட் எடிட்டர் அம்சம் விரைவில் அனைவருக்குமான அப்டேட்டில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். டெக்ஸ்ட் எடிட்டர் மட்டுமின்றி எடிட் மெசேஞ்ச் அம்சத்தையும் வாட்ஸ்அப் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

     

    வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருக்கும் புதிய அம்சங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டு வரும் WABetainfo, புதிய அம்சம் கொண்டு பயனர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஜிஃப் உள்ளிட்டவைகளை டூல்ஸ் மற்றும் ஃபாண்ட்களை எடிட் செய்ய முடியும் என தெரிவித்து இருக்கிறது. தற்போது வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு 2.23.7.17 வெர்ஷனில் தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு மட்டும் இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய அம்சம் கொண்டு பயனர்கள் ஃபாண்ட்களிடையே எளிதில் ஸ்விட்ச் செய்ய முடியும். ஏற்கனவே இந்த அம்சம் வழங்கப்பட்டு இருந்த போதிலும், தற்போது எளிதில் விரும்பிய ஃபாண்ட்களை தேர்வு செய்துவிட முடியும். இத்துடன் டெக்ஸ்ட் அலைன்மெண்ட் வசதியின் மூலம் டெக்ஸ்ட்-ஐ இடதுபுறம், வலதுபுறம் மற்றும் நடுவில் வைத்துக் கொள்ள முடியும்.

    டெக்ஸ்ட் பின்னணியில் உள்ள பேக்கிரவுண்ட் நிறத்தை பயனர்கள் புதிய அம்சம் கொண்டு மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் மிகமுக்கிய டெக்ஸ்ட்-ஐ நிறம் கொண்டு வித்தியாசப்படுத்தி காண்பிக்க முடியும். அடுத்து வரும் சில வாரங்களில் புதிய டெக்ஸ்ட் எடிட் அம்சம் பலருக்கும் வழங்கப்பட இருப்பதாக WABetainfo தெரிவித்து இருக்கிறது.

    இதே போன்ற அம்சம் ஐஒஎஸ் சாதனங்களிலும் டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது. எனினும், ஐஒஎஸ் பீட்டா டெஸ்டர்களுக்கு இந்த அம்சம் விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    Photo Courtesy: WABetainfo

    • வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
    • ஐஒஎஸ் பயனர்களிடையே சிறிய வீடியோ நோட் அனுப்பும் வசதியும் வழங்கப்பட்டு வருகிறது.

    வாட்ஸ்அப் செயலியில் தொடர்ச்சியாக பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பயனர்கள் செயலியை பயன்படுத்தும் அனுபவத்தை முற்றிலும் மாற்ற முடியும். சமீபத்தில் வாட்ஸ்அப் வழங்கிய அப்டேட் டெஸ்க்டாப் தளத்திற்கானது ஆகும். இதைத் தொடர்ந்து தற்போது பயனர்கள் மற்றவர்களுக்கு அனுப்பிய மெசேஞ்ச்களை எடிட் செய்யும் வசதி வழங்குவதற்கான பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டு வருகிறது.

    வாட்ஸ்அப் உருவாக்கி வரும் புதிய அம்சம் பயனர்கள் அனுப்பிய மெசேஞ்ச்களை அழிப்பதற்கு மாற்றாக அதில் ஏற்பட்ட பிழையை மட்டும் சரிசெய்யும் வகையில் எடிட் செய்ய முடியும். அனுப்பிய மெசேஞ்ச்களை எடிட் செய்வதற்கு தற்போது 15 நிமிடங்கள் வரை வழங்கப்படுகிறது. இந்த காலக்கெடுவுக்குள் அனுப்பிய மெசேஞ்ச்களை எடிட் செய்து கொள்ள வேண்டும்.

     

    தற்போது வழங்கப்பட்டு இருக்கும் டெலிட் அம்சத்திற்கு மாற்றாக, புதிய அம்சம் இருக்கும். டெலிட் அம்சம் குறுந்தகவலை முழுமையாக அழிக்கச் செய்து வேறொரு தகவலை அனுப்ப உதவி வருகிறது. புதிய அம்சம் குறுந்தகவல்களை அழிக்காமல், அதில் சிறு மாற்றங்களை மேற்கொள்ளச் செய்கிறது. இவ்வாறு செய்த பின் குறுந்தகவல் எடிட் செய்யப்பட்டு இருப்பதை அனுப்பியவர் மற்றும் அதனை பெறுபவர் என இருவருக்கும் தகவல் இடம்பெற்று இருக்கும்.

    புதிய அம்சம் வாட்ஸ்அப்-இன் சமீபத்திய வெர்ஷனில் மட்டுமே வழங்கப்படுகிறது. இது மெசேஞ்ச்களை எடிட் செய்வதற்கு மட்டுமே பொருந்தும். இந்த அம்சம் ஐஒஎஸ் பயனர்களுக்காக மட்டும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு வருகிறது. விரைவில் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட இருக்கும் இந்த அம்சம் எதிர்கால அப்டேட்களில் அனைவருக்கும் கிடைக்கும்.

    இதுதவிர வாட்ஸ்அப் ஐஒஎஸ் வெர்ஷனில் வீடியோ மெசேஞ்ச் அம்சம் வழங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் அதிகபட்சம் 60 நொடிகளுக்கு சிறிய வீடியோ நோட்களை அனுப்பலாம். டெலிகிராமில் வழங்கப்பட்டு இருக்கும் வீடியோ நோட் போன்றே வாட்ஸ்அப்-இல் இந்த அம்சம் வழங்கப்பட இருக்கிறது. பயனர்கள் வாட்ஸ்அப்-இன் கேமரா பட்டனை க்ளிக் செய்து வீடியோக்களை பதிவு செய்து அனுப்பலாம்.

    • வாட்ஸ்அப் சேவையை பயனர்கள் ஒரே சமயம் நான்கு சாதனங்களில் பயன்படுத்தலாம்.
    • வாட்ஸ்அப் விண்டோஸ் டெஸ்க்டாப் தளத்தில் புதிய அம்சத்திற்கான அப்டேட் வெளியாகி உள்ளது.

    வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்கள் எளிதில் சாதனங்களுடன் இணைத்துக் கொள்ளும் வசதியை ஏற்கனவே வழங்கி வருகிறது. தற்போது வாட்ஸ்அப்-இன் தாய் நிறுவனமான மெட்டா, விண்டோஸ் தளத்திற்கென உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய செயலியை உருவாக்கி இருப்பதாக அறிவித்து இருக்கிறது.

    விண்டோஸ் டெஸ்க்டாப்-க்கான புதிய வாட்ஸ்அப் ஆப் அதன் மொபைல் செயலியை போன்றதாகும். இது வாட்ஸ்அப் சேவையின் அதிவேக அனுபவத்தை கூடுதல் சாதனங்களில் வழங்குகிறது. இதுதவிர பயனர்கள் அதிகபட்சம் நான்கு சாதனங்களில் தங்களின் அக்கவுண்ட்-ஐ லின்க் செய்து கொள்ளலாம் என வாட்ஸ்அப் அறிவித்து இருக்கிறது.

     

    இவ்வாறு செய்தபின் பயனர்களின் அக்கவுண்ட் சின்க் செய்யப்பட்டு இருக்கும். இப்படி செய்யும் போது போன் ஆஃப்லைனில் இருக்கும் போதிலும் சேவை சீராகவே இயங்கும். விண்டோஸ் டெஸ்க்டாப்-இல் வாட்ஸ்அப் ஆப்-ஐ அப்டேட் செய்த பின் பயனர்கள் புதிய அம்சங்களை பயன்படுத்த துவங்கலாம். இதில் வீடியோ, வாய்ஸ் காலிங் வசதி உள்ளிட்டவை அடங்கும்.

    "சார்ஜர் இல்லையா, பிரச்சினையே இல்லை. இனி உங்களின் வாட்ஸ்அப்-ஐ அதிகபட்சம் நான்கு சாதனங்களுடன் லின்க் செய்து கொண்டு ஸ்மார்ட்போன் ஆஃப் ஆன பின்பும் சாட்களுடன் எந்நேரமும் சின்க், என்க்ரிப்ட் செய்யப்பட்ட நிலையில் தொடர முடியும்," என வாட்ஸ்அப் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறது.

    பல்வேறு சாதனங்களில் வாட்ஸ்அப் லின்க் செய்வது எப்படி?

    - மொபைல் போன் நம்பர் லின்க் செய்யப்பட்டு இருக்கும் சாதனத்தில் வாட்ஸ்அப்-ஐ திறக்க வேண்டும்.

    - சாதனத்தில் செட்டிங்ஸ் (Settings) -- லின்க்டு டிவைசஸ் (Linked Devices) ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.

    - இனி லின்க் எ நியூ டிவைஸ் (Link a new device) ஆப்ஷனை கிளிக் செய்து திரையில் வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

    - விண்டோஸ் டெஸ்க்டாப்-இல் இரண்டாவது சாதனத்தை லின்க் செய்ய, வாட்ஸ்அப் வெப் வலைத்தளத்தை பிரவுசரில் திறக்க வேண்டும்.

    - இரண்டாவது சாதனத்தில் இருந்தபடி வலைத்தளத்தில் தெரியும் கியூஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்ய வேண்டும்.

    - சாதனங்கள் சின்க் ஆகும் வரை காத்திருக்க வேண்டும். உங்களின் சாட்கள் இரண்டாவது சாதனத்தில் தெரியும்.

    - இதே வழிமுறைகளை கொண்டு மேலும் அதிக சாதனங்களில் வாட்ஸ்அப்-ஐ லின்க் செய்ய முடியும்.

    அதிகபட்சம் நான்கு சாதனங்களில் உங்களின் வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ லின்க் செய்ய முடியும். இணைய இணைப்பில் இருக்கும் வரை உங்களின் வாட்ஸ்அப் அக்வுண்ட் கனெக்ட் செய்யப்பட்டு இருக்கும். விரும்பாத பட்சத்திலோ அல்லது தேவையில்லாத சமயத்திலோ என்று எப்போது வேண்டுமானாலும், எந்த சாதனத்தில் இருந்தும் வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ அன்-லின்க் செய்து விடலாம்.

    • அரசு வியாபாரங்களுக்கு எளிய நடைமுறைகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.
    • டிஜிட்டல் தனியுரிமை பாதுகாப்பை குடிமக்களுக்கு வழங்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ஸ்மார்ட்போன்களில் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படும் செயலிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கவோ அல்லது பாதுகாப்பு பரிசோதனை செய்யவோ திட்டமிடவில்லை என அரசு தெரிவித்து இருக்கிறது. உள்நாட்டில் மின்னசாதன பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டிஜிட்டல் தனியுரிமை பாதுகாப்பை குடிமக்களுக்கு வழங்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முன்னதாக இணையத்தில் வெளியான தகவல்களின் படி கைப்பேசிகள் மற்றும் ஒஎஸ் அப்டேட்கள் குறித்து ஆய்வு செய்ய சோதனை செய்ய ஆய்வகங்களை கட்டமைக்கும் பணிகளில் அரசு ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது.

    இதற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பதில் அளித்து இருக்கிறது. அதில் அரசு வியாபாரங்களுக்கு எளிய நடைமுறைகளை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது என்றும், 2026 ஆண்டு வாக்கில் மின்னணு உற்பத்தியில் 300 பில்லியன் டாலர்களை எட்ட இலக்கு நிர்ணயம் செய்து இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறது.

    மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ர அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களிடம் பாதுகாப்பு பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கை எடுக்கும் திட்டம் ஏதும் இல்லை என தெரிவித்து இருக்கிறார்.

    பாதுகாப்பான ஒஎஸ் அப்டேட் மற்றும் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படும் செயலிகள் குறித்த தரக்கட்டுப்பாட்டு பணிகளை பியூரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் (BIS) கவனித்துக் கொள்ளும் என இதுகுறித்து வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    உற்பத்தியாளர்கள், இதர சந்தையை சேர்ந்த பங்குதாரர்களுடன் கூடுதலாக சந்திப்புகளை நடத்திய பின் புதிய விதிகள் விதிக்கப்பட்டு, ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் இவற்றை ஒரு ஆண்டிற்குள் பின்பிற்ற வேண்டும்.

    • வாட்ஸ்அப் செயலியில் தொடர்ச்சியாக பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
    • ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷன்களில் புதிய அம்சங்கள் வழங்குவதை வாட்ஸ்அப் வாடிக்கையாக கொண்டுள்ளது.

    வாட்ஸ்அப் செயலியில் உங்களுக்கு அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் தொந்தரவாக இருக்கின்றதா? விரைவில், வாட்ஸ்அப் இந்த தொந்தரவை சரிசெய்யும் வசதியை வழங்க இருக்கிறது. உங்களது வாட்ஸ்அப் காண்டாக்ட்-இல் இல்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை மியூட் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

    மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் "Silence Unknown Callers" எனும் பெயரில் புதிய அம்சத்தை வழங்க இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் தெரியாத அல்லது மொபைலில் சேமிக்காத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை மியூட் செய்யலாம். இதுகுறித்து wabetainfo வெளியிட்டு இருக்கும் தகவல்களில் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     

    விரைவில், இது டெஸ்டிங்-கிற்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த அம்சம் வெளியாகும் பட்சத்தில், பயனர்கள் தங்களுக்கு அறிமுகமில்லா எண்களில் இருந்து வரும் அழைப்புகளை மியூட் செய்து அவற்றை தவிர்க்க முடியும். எனினும், மியூட் செய்த பின்பும் அழைப்பு வந்ததை தெரிவிக்கும் நோட்டிபிகேஷன் இடம்பெற்று இருக்கும். புதிய அம்சம் மூலம் பயனர்கள் Spam அழைப்புகளை தவிர்க்க வாட்ஸ்அப் கால் நோட்டிபிகேஷன் அனைத்தையும் மியூட் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

    இதுதவிர வாட்ஸ்அப் செயலியில் ஸ்ப்லிட் ஸ்கிரீன் அம்சமும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதை கொண்டு பயனர்கள் ஸ்கிரீனை இரண்டாக பிரித்து, ஒன்றில் சாட் விண்டோ மற்றொன்றில் ஸ்டேட்ஸ் பார், கால்ஸ் என இதர வாட்ஸ்அப் அம்சங்களை ஒரே சமயத்தில் பயன்படுத்தலாம். இந்த அம்சம் வாட்ஸ்அப் செயலியின் டேப்லெட் வெர்ஷனில் வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    Photo Courtesy: wabetainfo

    • உலகம் முழுக்க தகவல் பரிமாற்றத்தில் ChatGPT பெரும் புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
    • ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்கும் ChatGPT பயனர்கள் கேள்விக்கு அசத்தலாக பதில் அளித்து வருகிறது.

    வாட்ஸ்அப் உலகின் அதிக பிரபலமான குறுந்தகவல் செயலியாக இருக்கும் போதிலும், பெரும்பாலானோர் டெக்ஸ்ட் செய்வதை அதிகம் விரும்புவதில்லை. இவ்வாறு டெக்ஸ்ட் செய்ய பிடிக்காதவர்களுக்கு ChatGPT இனி உதவும். வாட்ஸ்அப்-இல் பயனர்கள் கிட்ஹப் மூலம் ChatGPT பயன்படுத்த முடியும். வாட்ஸ்அப்-இல் கிட்ஹப் இண்டகிரேட் செய்த பின் ChatGPT வாட்ஸ்அப் குறுந்தகவல்களுக்கு பதில் அளிக்க துவங்கி விடும்.

    ChatGPT-இன் உரையாடல் திறன், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பயனர் கேல்விகளுக்கு பதில் அளிப்பதில் கூகுள் செய்யாததை கூட ChatGPT செய்து அசத்துகிறது. இதே போன்று இந்த ஏஐ டூல் குறுந்தகவல்களை கையாளுகிறது. ChatGPT அளிக்கும் பதில்கள் மனிதர்கள் அனுப்புவதை போன்றே இருப்பதால், யார் பதில் அனுப்புகின்றனர் என்தை கண்டறிவது வித்தியாசமான விஷயம் ஆகும்.

    வாட்ஸ்-இல் ChatGPT-ஐ இண்டகிரேட் செய்ய டேனியல் கிராஸ் எனும் டெவலப்பர் பைத்தான் ஸ்க்ரிப்ட்-ஐ உருவாக்கி இருக்கிறார். இந்த ஸ்க்ரிப்ட் கொண்டு நண்பர்களுக்கு வாட்ஸ்அப்-இல் பதில் அனுப்ப ChatGPT-ஐ பயன்படுத்தலாம். பைத்தான் ஸ்க்ரிப்ட்-ஐ பயன்படுத்த பயனர்கள் வலைத்தளத்தில் தேவையான ஃபைல்கள் அடங்கிய language library-ஐ டவுன்லோட் செய்ய வேண்டும்.

    டவுன்லோட் செய்தபின் "WhatsApp-gpt-main" ஃபைலை திறந்து "server.py" டாக்குமெண்ட்-ஐ இயக்க வேண்டும். இவ்வாறு செய்த பின் வாட்ஸ்அப் செயலியில் ChatGPT செட்டப் செய்யப்பட்டு விடும். சர்வர் ரன் ஆகும் போது "Is" என டைப் செய்து எண்டர் க்ளிக் செய்து, "python.server.py"-யை க்ளிக் செய்ய வேண்டும்.

    இது பயனரின் மொபைல் நம்பரை OpenAI சாட் பக்கத்தில் செட்டப் செய்து விடும். இதைத் தொடர்ந்து பயனர் தான் மனிதன் என்பதை உறுதிப்படுத்த "Confirm I am a human" பாக்ஸ்-ஐ க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தபின், வாட்ஸ்அப் அக்கவுண்டில் OpenAI ChatGPT இடம்பெற்று இருப்பதை பார்க்கலாம். இனி ChatGPT மூலம் சாட் செய்ய துவங்கலாம்.

    • வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் புது அப்டேட் மீடியா ஃபைல் ஷேரிங்கை எளிமையாக்கி இருக்கிறது.
    • வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகுதியிலும் ஏராள மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிதாக கூடுதல் வசதிகள் வழங்கப்படுகின்றன.

    வாட்ஸ்அப் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய அம்சம் கொண்டு ஒரே சமயத்தில் 100 மீடியா ஃபைல்களை மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். தற்போது வாட்ஸ்அப் செயலியில் 30 மீடியா ஃபைல்களை மட்டுமே ஒரே சமயத்தில் அனுப்ப முடியும். வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.24.4.3 வெர்ஷனில் புதிய அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட சில பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் புதிய அம்சம் தற்போது வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிய செயலியினுள் ஒரே சமயத்தில் 30-க்கும் மேற்பட்ட மீடியா ஃபைல்களை தேர்வு செய்து முயற்சிக்கலாம். 30-க்கும் மேற்பட்ட ஃபைல்களை தேர்வு செய்ய முடியும் பட்சத்தில் உங்களுக்கு இந்த அம்சம் வழங்கப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். ஒருவேளை இந்த அம்சம் வழங்கப்படவில்லை எனில், உங்களால் 30-க்கும் அதிக ஃபைல்களை தேர்வு செய்ய இயலாது. அந்த வகையில், கிடைக்காதவர்கள் இந்த வசதியை பெற சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.

    தற்போது 100 மீடியா ஃபைல்களை அனுப்பும் வசதி வழங்கப்பட்டு இருப்பதை கொண்டு, ஒரே புகைப்படம் அல்லது வீடியோவை பலமுறை தேர்வு செய்ய முடியாது. தற்போது டெஸ்டிங்கில் இருப்பதால், இந்த அம்சம் விரைவில் அனுவருக்குமான ஸ்டேபில் வெர்ஷனில் வெளியிடப்படலாம். எனினும், சரியான வெளியீட்டு காலம் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    பீட்டா டெஸ்டிங் ஒருபுறம் இருக்க, வாட்ஸ்அப் தனது ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ் பகுதியில் சில புதிய அம்சங்களை அறிவித்து இருக்கிறது. இந்த அம்சங்களை கொண்டு வாட்ஸ்அப் காண்டாக்ட்களுக்கு புதிய வழிகளில் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும்.

    பிரைவேட் ஆடியன்ஸ்:

    பெயருக்கு ஏற்றார்போல் இந்த அம்சம் ஸ்டேட்டஸ் அப்டேட்களை யார் பார்க்க வேண்டும் என்பதை குறிக்கும். இது முழுக்க முழுக்க புதிய அம்சம் இல்லை என்ற போதிலும், இது பிரத்யேக அனுபவத்தை வழங்கும் வகையில் இருக்கும். சமீபத்தில் தேர்வு செய்தபடி யார்யாருக்கு ஸ்டேட்டஸ் காண்பிக்கப்பட வேண்டும் என்ற காண்டாக்ட்களின் பட்டியல் சேமிக்கப்பட்டு, அடுத்த அப்டேட்டிற்கு தானாக பயன்படுத்தப்படும்.

    வாய்ஸ் ஸ்டேட்டஸ்:

    இந்த அம்சம் கொண்டு பயனர்கள் அதிகபட்சமாக 30 நொடிகளுக்கு வாய்ஸ் நோட்களை தங்களின் ஸ்டேட்டஸ்-ஆக வைத்துக் கொள்ளலாம். மிகமுக்கிய தனிப்பட்ட வகையில் அப்டேட்களை தெரிவிக்கும் மற்றொரு வழிமுறை இது என வாட்ஸ்அப் தெரிவித்து இருக்கிறது.

    ஸ்டேட்டஸ் ரியாக்ஷன்ஸ்:

    இந்த அம்சம் கொண்டு ஸ்டேட்டஸ் அப்டேட்களை ஸ்வைப் அப் செய்து அதிகபட்சம் எட்டு எமோஜிக்களை பயன்படுத்தி தங்களின் கருத்தை தெரிவிக்க முடியும். இது இன்ஸ்டாகிராமில் உள்ளதை போன்றே செயல்படுகிறது.

    ஸ்டேட்டஸ் ப்ரோஃபைல் ரிங்ஸ்:

    சாட் லிஸ்ட், க்ரூப் பட்டியல் மற்றும் காண்டாக்ட்களில் ஸ்டேட்டஸ் அப்டேட்களை பார்க்கும் வழிமுறையை இது எளிமையாக்கி விடும். குறிப்பிட்ட காண்டாக்ட் ஸ்டேட்டஸ் வைத்திருப்பின், அந்த பயனரின் ப்ரோஃபைல் படத்தை சுற்றி ரிங் ஒன்று காணப்படும். இதை கொண்டு அவர் ஸ்டேட்டஸ் வைத்திருப்பதை அறிந்து கொள்ளலாம்.

    லின்க் பிரீவியூஸ்:

    ஸ்டேட்டஸ்களில் ஒருவழியாக லின்க் பிரீவியூ வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் எப்போது லின்க்-களை ஸ்டேட்டஸ் ஆக வைத்தாலும், அந்த லின்க்-இன் பிரீவியூ காண்பிக்கப்படும். இதை கொண்டு ஸ்டேட்டஸ் பார்ப்பவர்கள் குறிப்பிட்ட லின்க்-ஐ திறந்து பார்க்காமலேயே அந்த லின்க்-இல் எதுபோன்ற தரவு உள்ளது என்பதை சற்று தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ஸ்டேட்டஸ் அப்டேட்கள் சர்வதேச அளவில் வெளியிடப்பட்டு வருகின்றன. அடுத்த சில வாரங்களில் இந்த அம்சம் அனைவருக்கும் கிடைத்து விடும் என வாட்ஸ்அப் அறிவித்து இருக்கிறது.

    Photo Courtesy: WABetaInfo

    • வாட்ஸ்அப் செயலியின் டெஸ்க்டாப் வெர்ஷனில் வழங்கப்பட இருக்கும் புது அம்சம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
    • முதற்கட்டமாக புது அம்சம் வாட்ஸ்அப் செயலியின் பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் ஸ்டேட்டஸ்-ஐ ரிபோர்ட் செய்யும் வசதி சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக இந்த வசதி கணினி அல்லது லேப்டாப் சாதனங்களில் டெஸ்க்டாப் செயலியை பயன்படுத்துவோருக்கு வழங்கப்படுகிறது. தற்போது போலியான குறுந்தகவல்களை ரிபோர்ட் செய்யும் வசதி வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    எனினும், தற்போதைய அப்டேட் செயலியை மேலும் பாதுகாப்பான ஒன்றாக மாறி இருக்கிறது. புது அப்டேட் மூலம் பயனர்கள் எதிர்கொள்ளும் போலி அல்லது சர்ச்சைக்குரிய ஸ்டேட்டஸ் அப்டேட்களை ரிபோர்ட் செய்யலாம். ஸ்டேட்டஸ் பகுதியில் உள்ள புது மெனுவில் ரிபோர்ட் செய்வதற்கான ஆப்ஷன் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. ரிபோர்ட் செய்யப்படும் ஸ்டேட்டஸ் பற்றிய விவரங்கள் வாட்ஸ்அப்-க்கு அனுப்பப்படும்.

    அழைப்புகள், குறுந்தகவல், மீடியா, லொகேஷன் ஷேரிங், ஸ்டேட்டஸ் அப்டேட் போன்றே ரிபோர்ட் செய்யப்படும் குறுந்தகவல்களும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. இவ்வாறு என்க்ரிப்ட் செய்யப்படும் குறுந்தகவல்களை யாராலும் பார்க்க முடியாது. தற்போது இந்த அம்சம் டெஸ்க்டாப் பீட்டா வெர்ஷனஷில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த அம்சம் எதிர்கால அப்டேட்டில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    சமீபத்திய தகவல்களின் படி வாட்ஸ்அப் டெஸ்க்டாப் வெர்ஷனில் புது ஸ்கிரீன் லாக் வைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்படுவதாக கூறப்பட்டது. தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷன்களில் கடவுச்சொல் வைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு செயலியை திறக்க பயனர்கள் பாஸ்வேர்டு பதிவிட வேண்டும்.

    Photo Courtesy: wabetainfo.com

    • வாட்ஸ்அப் செயலிக்கான ஆதரவு விரைவில் சில ஸ்மார்ட்போன்களுக்கு நிறுத்தப்பட இருக்கிறது.
    • அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயலியை இன்னும் சில தினங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

    புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கியவர்கள் வாட்ஸ்அப் விஷயத்தில் பாதுகாப்பான பக்கம் உள்ளனர் என்றே எடுத்துக் கொள்ளலாம். எனினும், சற்றே பழைய ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் கவலை கொள்ள வேண்டிய தருணம் இது. சில ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ்அப் விரைவில் இயங்காமல் போக இருக்கிறது.

    முன்னதாக இந்த ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி சில ஐபோன் மாடல்களுக்கான சப்போர்ட்-ஐ வாட்ஸ்அப் நிறுத்தியது. தற்போது வாட்ஸ்அப் சப்போர்ட் நிறுத்தப்படும் பட்டியல் சற்றே பெரிதாகி இருக்கிறது. புத்தாண்டு தினத்தில் இருந்து 49 ஸ்மார்ட்போன்களுக்கான சப்போர்ட் நிறுத்தப்பட இருக்கிறது.

    அந்த வகையில், 2022 டிசம்பர் 31 ஆம் தேதியுடன் பட்டியலிடப்படும் ஸ்மார்ட்போன்களுக்கு வாட்ஸ்அப் சப்போர்ட் நிறுத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து பழைய ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் தொடர்ந்து வாட்ஸ்அப் பயன்படுத்த புது ஸ்மார்ட்போனை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது.

    வாட்ஸ்அப் சப்போர்ட் நிறுத்தப்பட இருக்கும் ஸ்மார்ட்போன்கள் பட்டியல்:

    ஐபோன் 5

    ஐபோன் 5சி

    அர்கோஸ் 53 பிலாட்டினம்

    கிராண்ட் எஸ் பிலெக்ஸ் இசட்டிஇ

    கிராண்ட் எக்ஸ் குவாட் வி987 இசட்டிஇ

    ஹெச்டிசி டிசையர் 500

    ஹூவாய் அசெண்ட் டி

    ஹூவாய் அசெண்ட் டி1

    ஹூவாய் அசெண்ட் டி2

    ஹூவாய் அசெண்ட் ஜி740

    ஹூவாய் அசெண்ட் மேட்

    ஹூவாய் அசெண்ட் பி1

    குவாட் எக்ஸ்எல்

    லெனோவோ ஏ820

    எல்ஜி எனாக்ட்

    எல்ஜி லூசிட் 2

    எல்ஜி ஆப்டிமஸ் 4எக்ஸ் ஹெச்டி

    எல்ஜி ஆப்டிமஸ் எஃப்3

    எல்ஜி ஆப்டிமஸ் எஃப்3 கியூ

    எல்ஜி ஆப்டிமஸ் எஃப்5

    எல்ஜி ஆப்டிமஸ் எஃப்6

    எல்ஜி ஆப்டிமஸ் எஃப்7

    எல்ஜி ஆப்டிமஸ் எல்2 II

    எல்ஜி ஆப்டிமஸ் எல்3 II

    எல்ஜி ஆப்டிமஸ் எல்3 II டூயல்

    எல்ஜி ஆப்டிமஸ் எல்4 டூயல்

    எல்ஜி ஆப்டிமஸ் எல்5

    எல்ஜி ஆப்டிமஸ் எல்5 டூயல்

    எல்ஜி ஆப்டிமஸ் எல்5 II

    எல்ஜி ஆப்டிமஸ் எல்7

    எல்ஜி ஆப்டிமஸ் எல்7 II

    எல்ஜி ஆப்டிமஸ் எல்7 II டூயல்

    எல்ஜி ஆப்டிமஸ் நைட்ரோ ஹெச்டி

    மெமோ இசட்டிஇ வி956

    சாம்சங் கேலக்ஸி ஏஸ்2

    சாம்சங் கேலக்ஸி கோர்

    சாம்சங் கேலக்ஸி எஸ்2

    சாம்சங் கேலக்ஸி எஸ்3 மினி

    சாம்சங் கேலக்ஸி டிரெண்ட் II

    சாம்சங் கேலக்ஸி டிரெண்ட் லைட்

    சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 2

    சோனி எக்ஸ்பீரியா ஆர்க் எஸ்

    சோனி எக்ஸ்பீரியா மிரோ

    சோனி எக்ஸ்பீரியா நியோ L

    விகோ கின்க் ஃபைவ்

    விகோ டார்க்நைட் இசட்டி

    "தொழில்நுட்ப துறையின் வளர்ந்து வரும் புது அம்சங்களை வழங்கும் நோக்கில், நாங்கள் தொடர்ச்சியாக பழைய ஒஎஸ்-களுக்கு வழங்கி வந்த ஆதரவை நிறுத்தி வருகிறோம். இதன் மூலம் புது ஒஎஸ்-களுக்கு ஆதரவளித்து வருகிறோம். நாங்கள் பழைய ஒஎஸ்-க்கான ஆதரவை நிறுத்தும் பட்சத்தில், அதற்கான நோட்டிஃபிகேஷன் மற்றும் குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து வாட்ஸ்அப் பயன்படுத்த சாதனத்தை மாற்றக் கோரும் நினைவூட்டல்களை வழங்குவோம்," என வாட்ஸ்அப் தெரிவித்து இருக்கிறது.

    • வாட்ஸ்அப் செயிலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புது வசதி தற்போது வெளியிடப்பட்டு வருகிறது.
    • முன்னதாக இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் சிறிது காலம் சோதனை செய்யப்பட்டு வந்தது.

    வாட்ஸ்அப் பீட்டா v2.22.18.13 வெர்ஷனில் இருந்தே அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை மீட்க செய்யும் வசதியை வாட்ஸ்அப் சோதனை செய்து வருகிறது. தற்போது இந்த அம்சம் "Accidental Delete" எனும் பெயரில் வாட்ஸ்அப் ஸ்டேபில் வெர்ஷன்களில் வழங்கப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷன்களில் இந்த அம்சம் வழங்கப்பட்டு வருகிறது.

    நீண்ட காலமாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம், ஏற்கனவே "delete for me" ஆப்ஷனை தேர்வு செய்யும் போது, நீங்கள் அழித்த குறுந்தகவல் அனுப்பியவருக்கு தெரியும் வகையில் வழங்கப்பட்டு இருந்தது. "delete for everyone" அம்சம் அனுப்பியவருக்கும், அதனை பெற்றவருக்கும் குறுந்தகவலை அழித்து விடும். இவை தவிர குறுந்தகவல்களை அழிக்க வாட்ஸ்அப் வேறு எந்த வசதியையும் வழங்கவில்லை. இதன் காரணமாக க்ரூப்களில் குறுந்தகவல் அனுப்பியவருக்கு சங்கடமாக இருந்து வந்தது.

    தற்போது புது அப்டேட் மூலம், "delete for me" ஆப்ஷனை க்ளிக் செய்தால், அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை Undo செய்யலாம். குறுந்தகவலை "delete for me" ஆப்ஷன் மூலம் அழித்து இருந்தால், வாட்ஸ்அப் திரையின் கீழ்புறம் உள்ள undo ஆப்ஷன் மூலம் அதனை திரும்ப பெற முடியும். இந்த வழிமுறையை மேற்கொள்ள ஐந்து நொடிகள் வரை வழங்கப்படும். இந்த அம்சம் சீராக இயங்க குறுந்தகவல் அனுப்பியவர் மற்றும், அதனை பெற்றவர் வாட்ஸ்அப்-இன் புது வெர்ஷனை பயன்படுத்த வேண்டும்.

    ×