search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகழாய்வு"

    • தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.
    • முதல் கட்டப்பணியாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த ஆண்டு அகழாய்வு பணிகள் நடந்தது.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதன் முதல் கட்டப்பணியாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த ஆண்டு அகழாய்வு பணிகள் நடந்தது. இந்த பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் பணியில் கிடைத்த பொருட்களை ஆவணப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

    ஆவணப்படுத்தும் பணியின்போது ஒரு முதுமக்கள் தாழி பக்கவாட்டில் இரும்பால் ஆன 2 அடி உயரம் கொண்ட நங்கூரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இது ஆய்வாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த ஆதிச்சநல்லூருக்கும், கடல் சார் வணிகத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    • பட்டறைபெரும்புதூரில் ஏற்கனவே 2 கட்ட அகழாய்வு பணிகள் முடிந்து உள்ளன.
    • அகழ்வாராய்ச்சி வருகிற செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது.

    தமிழகம் 15 லட்சம் ஆண்டுகள் மனிதகுல வரலாற்று தொன்மை கொண்டது. இதன் தொன்மையை கண்டறிய முறையான அகழாய்வுகள் அவசியம் ஆகும். தமிழக அரசின் தொல்லியல் துறை செய்த அகழாய்வில் அறிவியல் அடிப்படையிலான ஆய்வின் முடிவுகள் மூலம் தமிழகத்தின் வரலாற்றில் புதிய வெளிச்சம் ஏற்பட்டு உள்ளது. கீழடி அகழாய்வு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து உள்ளது. இந்த அகழாய்வு தொல்லியலாளர்கள் இடையே மட்டும் இல்லாமல் உலக தமிழர்களிடையேயும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழர்கள் 6-ம் நூற்றாண்டில் படிப்பறிவும் எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை உறுதியாக நிலைநிறுத்தி இருக்கிறது.

    சமீபகால தொல்லியல்துறையின் சாதனைகள் மூலம் நமது நீண்ட கால வரலாற்றில் காணும் பண்பாடு மற்றும் கால வரிசை இடைவெளிகளை நிரப்புவதற்கு நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது. எனவே நிர்ணயித்த இலக்கை அடைய தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல், வரலாற்று காலம் வரையிலான தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழாய்வு செய்ய அரசு திட்டமிட்டு உள்ளது.

    அதன்படி திருவள்ளூர் மாவட்டம் பட்டறைபெரும்புதூர், கீழடி, அரியலூர் மாவட்டம் கங்கை கொண்டசோழபுரம், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை உள்பட 8 இடங்களில் அகழாய்வு செய்யும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் தொடங்கி வைத்தார்.

    இதில் பட்டறைபெரும்புதூரில் ஏற்கனவே 2 கட்ட அகழாய்வு பணிகள் முடிந்து உள்ளன. இதைத்தொடர்ந்து தற்போது 3-வது கட்டமாக அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

    அகழாய்வு பணி நடைபெறும் பட்டறை பெரும்புதூர் கிராமம் திருவள்ளூரில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொசஸ்தலை ஆற்றுப் படுகையில் இருந்து சிறிது தூரத்தில் உள்ளது. கடந்த 2015-16, 2017-18 ஆகிய 2 ஆண்டுகள் இப்பகுதியில் ஏற்கனவே அகழாய்வுகள் செய்யப்பட்டன. ஆலைமேடு, நத்தமேடு, இருளன்தோப்பு மற்றும் சிவன் கோவில் ஆகிய இடங்களில் தொல்லியல் துறையினர் 33 குழிகள் சுமார் 825 சதுர மீட்டர் பரப்பளவில் அகழாய்வு செய்து 1404 தொல்பொருட்களை கண்டு பிடித்தனர். மனித எலும்புத் துண்டுகள், கல்லாயுதங்கள், செம்பு, இரும்பு ஆகிய உலோகங்கள் கண்ணாடிப் பொருள்கள், சங்கு சார்ந்த வளையல்கள், பவள மணிகள், பச்சை மணிகள், பானை ஓடுகள் முதலியன கிடைத்துள்ளன.

    இதில் சில பழங்கால மண்பானை ஓடுகளில் பிராமி எழுத்துகளும் இடம்பெற்றுள்ளன. இதேபோல் பட்டறை பெரும்புதூரில் பல கோயில் சார்ந்த கல்வெட்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் பல்லவ மன்னன் அபராஜிதவர்மன் காலத்திய கல்வெட்டுகள் முக்கியமானது. இவை தொல்லியல் துறையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

    தற்போது பட்டறை பெரும்புதூரில் 3-ம்கட்ட அகழாய்வு பணி 3 குழிகளில் நடைபெற்று வருகிறது. கண்ணாடி மணிகள், சுடுமண் மணிகள், விளையாட்டு சில்லுகள், பானை ஓடுகள் உள்ளிட்ட பழைய உபகரணங்கள் கிடைக்கப்பெற்றது. தொடர்ந்து இந்த ஆய்வு பணி நடந்து வருகிறது. இதில் சுமார் 25 பேர் தினமும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த அகழ்வாராய்ச்சி வருகிற செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது. 6 மாதங்கள் நடைபெறும் இந்த விரிவான அகழ்வாராய்ச்சி தொல்லியல் துறையை சேர்ந்த பாஸ்கர் தலைமையில் நடந்து வருகிறது. இதில் பழங்கால தமிழர்களின் வாழ்க்கை முறை குறித்த மேலும் பல ஆச்சரியமூட்டும் பொருட்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

    • கடந்த 2 மாதங்களாக நடந்துவரும் இந்த அகழாய்வில் வரலாற்று கால தொல்லியல் சான்றுகள் கண்டறியப்பட்டது.
    • கண்ணாடி மணிகள், சுடுமண் பொம்மைகள், சூடுமண்ணாலான பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வடக்குப்பட்டு ஊராட்சியில் உள்ள நத்தமேடு பகுதியில் அகழாய்வு பணி தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் கடந்த ஜூலை மாதம் 3-ந் தேதி தொடங்கப்பட்டது. கடந்த 2 மாதங்களாக நடந்துவரும் இந்த அகழாய்வில் வரலாற்று கால தொல்லியல் சான்றுகள் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அகழாய்வு பணியானது தொல்லியல் மேட்டின் தென்கிழக்கு பகுதியில் சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த பகுதியில் வண்ணம் பூசிய பானை ஓடுகள் மற்றும் குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள், ரோமானிய பானை ஓடுகள் போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் 1½ கிராம் தங்கத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள் 2 கிடைத்துள்ளது.

    மேலும் கண்ணாடி மணிகள், சுடுமண் பொம்மைகள், சூடுமண்ணாலான பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளது. அகழாய்வு குறித்து தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து கூறும்போது, நத்தமேடு தென்கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வு பணியில் கிடைத்த பொருட்கள் 4 ஆயிரம் ஆண்டுகள் முதல் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்களாக இருக்கலாம் என அவர் கூறினார்.

    • ஆதிச்சநல்லூரை பொறுத்தவரை இதுவரை 5-க்கும் மேற்பட்ட தொல்லியல் அகழாய்வுகள் நடந்துள்ளது.
    • கிராமங்களில் உள்ள கோவில்களில் கல்வெட்டுகளை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

    செய்துங்கநல்லூர்:

    தாமிரபரணி நதிக்கரையோரப்பகுதிகளில் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை உள்ளது.

    இந்த பகுதிகளில் அனைத்தும் தற்போது தொல்லியல் வரலாறுகளில் முக்கியப்பகுதிகளாக உள்ளது. குறிப்பாக ஆதிச்சநல்லூரில் தான் இந்தியாவிலேயே முதன் முதலில் அகழாய்வு பணிகள் நடந்தது.

    ஆங்கிலேய ஆய்வாளர் அலெக்சாண்டர் ரியா என்பவர் ஆதிச்சநல்லூர், கொற்கை உள்பட 38 இடங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் தொல்லியல் இடங்கள் உள்ளதாகவும், அதில் 21 இடங்கள் இறந்தவர்களை புதைக்கப்பயன்படுத்திய பரம்பு பகுதிகளாகவும், 17 இடங்கள் மக்கள் வாழந்ததை உறுதிப்படுத்தும் வாழ்விடப்பகுதிகளாக இருந்தாகவும் அவரது அறிக்கைகளிலும், குறிப்புகளிலும் கூறியுள்ளார்.

    ஆதிச்சநல்லூரை பொறுத்தவரை இதுவரை 5-க்கும் மேற்பட்ட தொல்லியல் அகழாய்வுகள் நடந்துள்ளது. இதில் மத்திய அரசு சார்பில் மூன்று முறையும் தமிழக தொல்லியல் துறை சார்பில் 2 முறையும் நடந்தது. பலமுறை வெளிநாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்களும் இந்த பகுதியில் ஆய்வுப் பணிகள் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் தான் கடந்த வருடம் தமிழக அரசு தொல்லியல் ஆய்வாளர் தங்கதுரை தலைமையில் ஒரு குழுவினரை கொண்டு பாபநாசத்தில் இருந்து புன்னக்காயல் வரை தாமிரபரணி நதி பாயும் பகுதியின் இருபுறமும் உள்ள கிராமங்களில் கள ஆய்வு மேற்கொண்டு எந்தெந்த கிராமங்களில் தொல்லியல் அடையாளங்கள் உள்ளது என்பதை அறிக்கையாக சமர்பிக்கும்படி தெரிவித்திருந்தது.

    அதன் பணிகள் கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக நடந்து வரும் நிலையில் தற்போது அந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது கிராமங்களில் உள்ள கோவில்களில் கல்வெட்டுகளை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

    இதற்கிடையில் பாபநாசம் தொடங்கி தாமிபரணி ஆறு கடலில் கலக்கும் புன்னக்காயல் வரை 100-க்கும் மேற்பட்ட தொல்லியல் இடங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதில் அதிக அளவில் வாழ்விடப்பகுதிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

    ஏற்கனவே தாமிரபரணிக்கரை நாகரீகம் மிகவும் தொன்மையான நாகரீகம் என்பதை சிவகளை அகழாய்வின் அறிக்கைகள் மூலம் வெளி உலகத்திற்கு கொண்டு வந்தது. தற்போது இந்த கள ஆய்வும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

    தொடர்ந்து கள ஆய்வுப்பணிகள் நிறைவு பெற்றவுடன் இதனை தமிழக அரசு அறிக்கையாக விரைவில் வெளியிடும் என்று தெரிவித்துள்ளது.

    • கீழடியில் 8-ஆம் கட்ட அகழாய்வுப்பணிகள் முடிந்த பிறகு அகழாய்வு வைப்பகம் திறந்து வைக்கப்படும் என அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • புதிய தொழில்நுட்பத்தில் ஒலி அமைப்புடன் கண்ணாடியில் காட்சிப்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், கொந்தகை கிராமத்தில், கீழடியில் கட்டப்பட்டு வரும் புதிய அகழாய்வு வைப்பக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதை அமைச்சர்கள் எ.வ.வேலு, பெரியகருப்பன், பி.மூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

    அகழாய்வு வைப்பக கட்டுமானப் பணிகள் முழுமை பெற்றுள்ளது. அகழ் வைப்பகத்தில் அகழ்வராய்ச்சியின் மூலம் கண்டெடுக்கப் பொருட்கள் உலகத்தரத்திலான வகையில் காட்சிப்படுத்த துறை வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, வரைபடங்கள்

    தயாரிக்கப்பட்டு சுவற்றில் காட்சிப்படுத்த வேண்டிய பொருட்கள், புதிய தொழில்நுட்பத்தில் ஒலி அமைப்புடன் கண்ணாடியில் காட்சி ப்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது.

    அந்தவகையில் ஏறத்தாழ 10,210 வகை பொருட்களை காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அகழ்வராயச்சி பொ ருட்களை காட்சிப்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்ப ணிகளால் அகழாய்வு வைப்பகம் திறந்து வைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது வரை கிடைத்துள்ள பொருட்களையும் காட்சிப்படுத்த இதுவும் ஒருவகையில் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

    தற்போது 8-ஆம் கட்ட அகழாய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முழுமையாக நிறைவு பெற்றபின் முதலமைச்சர் மூலம் அகழாய்வு வைப்பகம் திறந்து வைக்கப்படும். கீழடியில் அகழ்வராய்ச்சியின் மூலம் கிடைக்கும் பொருட்களை காட்சிப்படுத்தியும் அந்த பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு புரியும் வகையில் குறும்படங்கள் மூலம் விளக்கப்படுத்திடவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    முன்காலத்தில் பயன்படுத்திய பொருட்கள் முதல் தற்போது வரை பயன்படுத்திய பொருட்கள் குறித்த குறும்படம் தயாரிக்கப்படும். இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு ஜனவரி மாதத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது தமிழரசிரவிக்குமார் எம்.எல்.ஏ., முதன்மை தலை மைப்பொறியாளர் விஸ்வநாதன், மதுரை மண்டல தலைமைப்பொ றியாளர் ரகுநாதன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (பாரம்பரிய கட்டிடக்கோட்டம்) மணிகண்டன், தொல்லியியல் துறை இணை இயக்குநர் ரமேஷ், திருப்புவனம் பேரூராட்சித்தலைவர் சேங்கைமாறன், கீழடி ஊராட்சி மன்றத்தலைவர் வெங்கடசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தட்டையான வடிவில் முதுமக்கள் தாழியின் மூடி கண்டெடுப்பு.
    • 3,500 ஆண்டுகளுக்கு முன்னரே பனை சார்ந்த பொருள் பயன்பாடு.

    சிவகளை:

    தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளையில் மத்திய தொல்லியல் துறை மண்டல இயக்குனர் அருண்ராஜ் தலைமையிலான குழுவினர் அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆதிச்சநல்லூர் பரும்பு, பாண்டியராஜா கோவில், கால்வாய் ரோடு, புளியங்குளம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 8 பிரிவுகளாக அகழாய்வு செய்யப்படுகிறது. இங்கு ஏராளமான முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள், இரும்பாலான ஆயுதங்கள், தங்கத்தாலான காதணி, நெற்றிப்பட்டயம் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    சங்ககால மக்களின் வாழ்விட பகுதிகளும் கண்டறியப்பட்டது. இந்நிலையில் நேற்றைய பணியின்போது தட்டையான வடிவில் முதுமக்கள் தாழியின் மூடி கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் பனை ஓலைப்பாய் அச்சுகள் இருந்துள்ளது. அந்த அச்சுகள் பனை ஓலையால் ஆனதா அல்லது கோரைப்புல்லில் நெய்யப்பட்டதா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    முதுமக்கள் தாழிகள் செய்யும் போது, அதனை காய வைப்பதற்கு இந்த பனை ஓலை பாய் அல்லது கோரைப்பாயின் மேல் வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும் போது 3,500 ஆண்டுகளுக்கு முன்னரே முன்னோர்கள் பனை மற்றும் பனை சார்ந்த பொருட்களை பயன்படுத்தியுள்ளது உறுதி ஆகி உள்ளது. ஆதிச்சநல்லூரில் அகழாய்வில் பழமையான நாகரித்தைச் சேர்ந்த பொருட்கள் கிடைத்து வருவதால் தொல்லியல் ஆய்வாளர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

    • ஆதிச்சநல்லூர் சென்ற கனிமொழி குழியில் கிடைத்த பொருட்களையும், ஆய்வுக்குழிகளையும் பார்வையிட்டார்.
    • தங்கம் கிடைத்த குழிக்குள் ஏணி வழியாக அவர் இறங்கி அங்கே கிடைத்த வெண்கல பொருட்கள், வாள் உள்ளிட்ட பொருட்களை பார்வையிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளையில் நடந்து வரும் அகழாய்வு பணிகளை பார்வையிட நேற்று தூத்துக்குடி எம்.பி. கனிமொழி சென்றார். அவர் முதலில் சிவகளையில் நடந்து வரும் அகழாய்வு பணிகளை பார்வையிட்டார். அவருடன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வந்தார்.

    தாமிரபரணி நதிக்கரையோரம் பாண்டியராஜா கோவில் அருகே நடைபெறும் அகழாய்வு பணிகள், அதில் கிடைத்த முதுமக்கள் தாழிகள், தங்கப்பொருட்களை பார்வையிட்டார். தொடர்ந்து சிவகளையில் அகழாய்வு இயக்குனர் பிரபாகரன் தலைமையிலான ஆய்வாளர்கள் அவருக்கு விளக்கமளித்தனர்.

    அங்கிருந்து ஆதிச்சநல்லூர் சென்ற கனிமொழி குழியில் கிடைத்த பொருட்களையும், ஆய்வுக்குழிகளையும் பார்வையிட்டார். அங்கு தங்கம் கிடைத்த குழிக்குள் ஏணி வழியாக அவர் இறங்கி அங்கே கிடைத்த வெண்கல பொருட்கள், வாள் உள்ளிட்ட பொருட்களை பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்கத்தால் ஆன நெற்றிப்பட்டயம் மற்றும் காதணி கண்டுபிடிக்கப்பட்டது, முக்கியமான கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது.

    ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 145 வருடங்களுக்கு முன்பு ஜெர்மன் பெர்லின் நகர் உள்பட வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ஆதிச்சநல்லூர் பொருட்களை கண்டுபிடித்து அதை கொண்டு வந்து ஆதிச்சநல்லூரில் அமைய உள்ள அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். நான் அதற்கான கடிதம் அளிப்பேன். தொடர்ந்து அந்த பொருட்களை மீட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆதிச்சநல்லூர் அகழாய்வில் இதுவரையிலும் ஒரு மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழியே கண்டறியப்பட்டு உள்ளது.
    • கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த 3 பேர் கொண்ட குழுவினரும் ஆதிச்சநல்லூருக்கு வந்தனர்.

    தூத்துக்குடி:

    மத்திய தொல்லியல் துறை மண்டல இயக்குனர் அருண்ராஜ் தலைமையிலான குழுவினர் அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆதிச்சநல்லூர் பரும்பு, பாண்டியராஜா கோவில் அருகில், கால்வாய் ரோடு, புளியங்குளம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 8 பிரிவுகளாக அகழாய்வு செய்யப்படுகிறது.

    இங்கு ஏராளமான முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள், இரும்பாலான ஆயுதங்கள், தங்கத்தாலான காதணி, நெற்றிப்பட்டயம் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சங்ககால மக்களின் வாழ்விட பகுதிகளும் கண்டறியப்பட்டது.

    இந்த நிலையில் ஆதிச்சநல்லூர் தாமிரபரணி ஆற்றங்கரையில் பாண்டியராஜா கோவில் அருகில் தொல்லியல் துறையினர் 8 இடங்களில் குழிகள் தோண்டி அகழாய்வு செய்தனர். அவற்றில் ஒரு குழியில் 2 மூடிகளுடன் கூடிய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் அருகில் சில மண்பாண்ட பொருட்களும் இருந்தன.

    ஆதிச்சநல்லூர் அகழாய்வில் இதுவரையிலும் ஒரு மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழியே கண்டறியப்பட்டு உள்ளது. தற்போது 2 மூடிகளுடன் கூடிய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது தொல்லியல் ஆய்வாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    2 மூடிகளுடன் கூடிய முதுமக்கள் தாழியை தொல்லியல் துறையினர் திறந்து ஆய்வு செய்தனர். அதில் மனித மண்டை ஓடு, கை, கால் எலும்புகள் போன்றவை இருந்தன.

    இதற்கிடையே, மகாராஷ்டிர மாநிலம் புனே டெக்கான் கல்லூரி மானுடவியல் துறை ஆய்வாளர் வீனா முன்சீப், ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த மனித எலும்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மனித எலும்புகளை ஆய்வகத்துக்கு எடுத்து சென்று சோதனை நடத்தி, அவற்றின் தொன்மையை உறுதி செய்ய முடியும் என்று தெரிவித்தார்.

    இதேபோன்று கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த 3 பேர் கொண்ட குழுவினரும் ஆதிச்சநல்லூருக்கு வந்தனர். இங்கு அகழாய்வில் கிடைத்த உலோக பொருட்களின் வகைகள், அவற்றின் கலந்துள்ள தனிமங்கள், தொன்மையை கண்டறிவதற்காக 'லாண்டா' என்ற கருவி மூலம் ஆய்வு மேற்கொண்டனர்.

    • அகழாய்வில் வேலைபாடுகளுடன் கூடிய சுடுமண் பொம்மை கண்டுபிடிக்கப்பட்டது.
    • கலைத்திறன் மற்றும் தொன்மையையும் அறிய முடிகிறது என்று இப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பேசினர்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த மார்ச் 16-ந் தேதி முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகிறது.

    வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து மேற்கொள்ளப்பட்ட மேற்பறப்பு அகழாய்வின் மூலம் இந்த தொல்லியல் மேட்டில் நுண்கற்காலம் முதல் இடைக்காலம் வரை தொடர்ந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் வெளிப்பட்டுள்ளன.

    இங்கு அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து தமிழக அரசு இங்கு அகழாய்வு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வெம்பக்கோட்டை அகழாய்வு பணியில் அவ்வப்போது பல்வேறு பொருட்கள் கிடைத்த நிலையில் இதற்கு முன்பு சுடு களிமண்ணால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய குடுவை மற்றும் யானைத்தந்தத்தினால் செய்யப்பட்ட அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கழுத்தில் அணியப்பட்ட பதக்கம், புகைக்கும் குழாய், அழகிய வேலைபாடுகளுடன் கூடிய தங்க அணிகலன் உள்ளிட்ட பல பொருட்கள் கண்டறிப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து பழங்காலத்தில் பண்டைய கால மக்கள் கலை ஆர்வத்தை அறிந்து கொள்ளும் வகையில் நுனுக்கமான வேலைப்பாடுகள் அடங்கிய சுடு மண்ணால் செய்யப்பட்ட அழகிய ஆண் பொம்மை கண்டறியப்பட்டுள்ளது. இது அமர்ந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பொம்மையின் தலை கிடைக்கவில்லை. இங்கு நடக்கும் அகழாய்வு பணியின் போது பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்து வருகிறது.

    இதன் மூலம் இந்த பகுதியில் வாழ்ந்த மனிதர்கள் கலைநயம் மிக்கவர்களாக இருந்துள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது. இந்த பொருட்கள் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திற்குட்பட்ட பொருளாக இருக்கும் என தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர். அடுத்தடுத்து பல கலைநயம் மிக்க பொருட்கள் கண்டறியப் படுவது இந்த பகுதியின் கலைத்திறன் மற்றும் தொன்மையையும் அறிய முடிகிறது என்று இப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பேசினர்.

    • சங்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டுமான அமைப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • முதல் முறையாக சிவகளை அகழாய்வு பணியில் வாழ்விடப் பகுதியில் தங்கப்பொருள் கிடைத்துள்ளது ஆய்வாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளையில் கடந்த 2 வருடமாக மாநில அரசு சார்பில் அகழாய்வு பணிகள் நடந்து வந்தது.

    இந்த ஆண்டு கடந்த மார்ச் மாத இறுதியில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது. இதற்காக சிவகளை பரம்பு மற்றும் ஸ்ரீமூலக்கரை பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தையும், ஸ்ரீ பராக்கிரமபாண்டி திரடு, பொட்டல் கோட்டை திரடு பகுதியில் முன்னோர்களின் வாழ்விடப்பகுதிகளை கண்டறியவும் இந்த பணிகள் நடந்து வருகிறது.

    தற்போது வரை 20-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதில் சிவகளை பரம்பு மற்றும் ஸ்ரீமூலக்கரையில் இதுவரை 50க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் நடந்த ஆய்வுப்பணியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்டசில்கள், புகைப்பான், ஆட்டக்காய்கள், பாசிமணிகள், வளையல் துண்டுகள், காதணிகள், எலும்பால் செய்யப்பட்ட கூர்முனைக் கருவிகள், முத்திரைகள் உள்பட 80 தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    இதற்கிடையில் சங்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டுமான அமைப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செங்கல் கட்டுமானத்தில் உள்ள ஒரு செங்கல் 25 சென்டி மீட்டர் நீளமும், 16 சென்டி மீட்டர் அகலமும், 5 சென்டி மீட்டர் உயரமும் உள்ளது.

    இந்த நிலையில் தற்போது பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் நடந்து வரும் அகழாய்வு பணியில் தங்கத்தால் ஆன பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த தங்கத்தால் ஆன பொருள் என்ன என்பது தெரியவில்லை. அந்த தங்கத்தில் மேல் சிறு சிறு கோடுகள் உள்ளது.

    ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியை பொறுத்த வரை இறந்தவர்களை புதைத்த இடத்தில் தான் தங்கப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    ஆனால் முதல் முறையாக சிவகளை அகழாய்வு பணியில் வாழ்விடப் பகுதியில் தங்கப்பொருள் கிடைத்துள்ளது ஆய்வாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கொங்கராயக்குறிச்சியில் முற்கால பாண்டியன் மாறன் சடையனால் 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வலம்புரி பிள்ளையார் கோவில் உள்ளது.
    • 1899 முதல் 1905-ம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் அகழாய்வு மேற்கொண்ட அலெக்சாண்டர் ரியா தனது ஆய்வு அறிக்கையில் இதற்கான சான்றுகளை கூறியுள்ளார்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணிக்கரையில் கொங்கராயக்குறிச்சி அமைந்துள்ளது.

    வலம்புரி பிள்ளையார் கோவில்

    வரலாற்று பெருமை வாய்ந்த இவ்வூரில் முற்கால பாண்டியன் மாறன் சடையனால் 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வலம்புரி பிள்ளையார் கோவில் உள்ளது.

    மண்ணில் புதைந்து தற்போது சில வருடங்களுக்கு முன்பு வெளிப்பட்ட வீரபாண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் 11-ம் நூற்றாண்டில் ஜடவர்மன் ஸ்ரீ வல்லப பாண்டியனால் கட்டப்பட்டது.

    பைரவர்

    தென் சீர்காழி என்றழைககப்படும் இந்த சிவன் சட்டநாதர் என்றழைக்கப்படும் பைரவர் மிகவும் பழைமையானாவர்.

    இந்த கோவில்கள் இரண்டும் மண்ணுக்குள் புதைந்தே காணப்படுகின்றது. அதிலும் பழைய வெயிலுகந்தம்மன் மற்றும் மாலை அம்மன் கோவில்கள் முழுவதும் மண்ணுக்குள் புதைந்து கோவிலின் விமானங்கள் மட்டுமே வெளியே தெரியும்படி காட்சியளிக்கிறது.

    அடிக்கடி வரலாற்று ஆற்று வெள்ளத்தில் அழிந்து போன இந்த ஊரில் தான் 19-ம் நூற்றாண்டில் கிறிஸ்தவ பிரசங்கியார் ரேணியஸ் அடிகளார் கிறிஸ்தவ ஆலயம் மற்றும் கிறிஸ்தவ குடியிருப்புகளை உருவாக்கியுள்ளார்.

    தொல்லியல் துறை நடவடிக்கை

    வீரபாண்டீஸ்வரர் கோவிலை போன்று இவ்வூரில் மேலும் பல கோவில்களையும் மண்ணுக்குள் புதைந்துள்ளது. இந்த ஆலயங்களை வெளியே கொண்டு வர தமிழகம் மற்றும் மத்திய தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுகக வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து இந்த ஊரை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் விக்னேஷ் கூறியதாவது:-

    எங்கள் ஊரில் பல கோவில்கள் மண்ணுக்குள் புதைந்து உள்ளது. கொங்கராயக்குறிச்சியின் வரலாறு 9ம் நூற்றாண்டுடன் நிறைவு அடையவில்லை.

    உலக நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படும் ஆதிச்சநல்லூர் வரலாற்றுடன் இணைந்து முடிவுரை இல்லாத வரலாற்றில் பயணிக்க தொடங்கியுள்ளது.

    அலெக்சாண்டர் ரியா

    இதற்கான சான்றுகளை 1899 முதல் 1905-ம் ஆண்டு ஆதிச்சநல்லூரில் அகழாய்வு மேற்கொண்ட அலெக்சாண்டர் ரியா தனது ஆய்வு அறிக்கையில் கூறியுள்ளார்.

    அதன்படி, தாமிரபரணி ஆற்றின் வடகரையில் ஆதிச்சநல்லூருக்கு எதிரே அமைந்துள்ள கொங்கராயக்குறிச்சி கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட செங்கல் கட்டுமானம் ஒன்றை கண்டதாகவும், ஆதிச்ச நல்லூர் தாழிக்காட்டில் புதைக்கப்பட்ட மனிதர்களின் வாழ்விடம் கொங்கராயக்குறிச்சியாக தான் இருந்திருக்க வேண்டும் என்றும் அலெக்சாண்டர் இரியா தெரிவித்துள்ளார்.

    இத்தகைய வரலாற்றுப் பெருமை கொண்ட இவ்வூரின் பழம்பெயர் முதுகோனூர் என்பதை மண்ணுக்குள் புதைந்து காணப்படும் வலம்புரி பிள்ளையார் கோவில் 10-ம் நூற்றாண்டு வட்டெழுத்து கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகின்றது.

    வாய்மொழி கதைகள்

    இந்த கொங்கராய குறிச்சியில் இருந்த பூர்வகுடி களே ஆதிச்சநல்லூர் தாழிக்காட்டில் புதையுண்டு உள்ளனர் என்பதை உணர்த்தும் விதமாக கொங்கராயக்குறிச்சி மக்களிடம் இன்று வரை வாய்மொழி கதைகள் வழக்கத்தில் உள்ளது.

    மேலும், கொங்க ராயக்குறிச்சி கிராமத்தின் காடு, திரடு போன்ற பல்வேறு பகுதிகளில் பானை ஓடுகள், தாழியின் சிதைந்த பாகங்கள் அதிக அளவில் கிடைக்கின்றன.

    இந்த பானை ஓடுகள் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதிகளில் கிடைத்த பொருட்களை ஒத்தே காணப்படுகின்றது. இப்படி பல சான்றுகள் ஆதிச்ச நல்லூர் கொங்க ராயக்குறிச்சி வரலாற்று தொடர்பை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது.

    எனவே, ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் புதைந்த முதுமக்களின் வாழ்விடங்களை கண்டறிய வேண்டும் என்றால் கொங்க ராயக்குறிச்சி கிராமத்தில் தொல்லியல்துறை அகழாய்வு மேற்கொள்ள வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போது ஆதிச்ச நல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளும் மத்திய தொல்லியல் துறை யினரும், தாமிரபரணி கரையில் உள்ள அகழாய்வு இடங்களை தேடி ஆய்வு செய்யும் மாநில தொல்லியல் துறையினரும் கொங்க ராயகுறிச்சி மீது அதிக ஈடுபாடு கொண்டு அகழாய்வு மேற்கொள்ள வேண்டும். இங்குள்ள பழமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • அகழாய்வில் பண்டையகால பொருட்கள் கிடைத்தன.
    • யானை தந்தம் உட்பட 1000-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளம் பகுதியில் கடந்த மார்ச் மாதம் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு, விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    25 ஏக்கர் பரப்பளவில் வைப்பாற்றின் கரையில் பண்டைய காலத்தில் மக்கள் வாழ்ந்த வரலாறு குறித்து அறிவதற்காக கீழடி போன்று அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. தற்போது வரை 10 அகழாய்வு குழிகள் 10 அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ளன.

    இதில் ஏராளமான யானை தந்ததால் செய்யப்பட்ட அணிகலன்கள், விலை மதிப்பெற்ற சூது பவளம், பெண்கள் அணியும் தொங்கட்டான்கள், காதணிகள், கண்ணாடி பாசிமணிகள், சூடு மண்ணால் செய்யப்பட்ட பாத்திரங்கள், யானை தந்தம் உட்பட 1000-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.

    9-வது அகழாய்வு குழுவில் ஏராளமான சுடுமண்னால் செய்யப்பட்ட மண்பாண்ட பாத்திரங்கள், முதுமக்கள் தாழி, 40-க்கும் மேற்பட்ட சிறிய வடிவிலான குடங்கள் மண்ணில் புதைந்துள்ளன. தொல்லியல் துறை அதிகாரிகள் முன்னிலையில் முதுமக்கள் தாழி மற்றும் இந்த குடங்களை சேதமடையாமல் எடுப்பதற்காக தயார் நிலையில் வைத்துள்ளனர்.

    முதுமக்கள் தாழி மற்றும் மண் குடங்களில் ஆராய்ச்சி செய்யும் போது எந்த காலத்தில் மக்கள் வசித்துள்ளார்கள் என்பதை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும். மேலும் ஏராளமான விலை உயர்ந்த ஆபரணங்களும் கிடைத்துள்ளன. விரைவில் உயர் அதிகாரிகள் பார்வையிட்ட பின் எடுக்கப்பட்ட பொருட்களை அருங்காட்சியமாக வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×