என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகைகள்"

    • இந்தியா உலகின் மிகச்சிறந்த ரத்தினக் கற்கள் பதித்த நகைகளை உற்பத்தி செய்கிறது.
    • ரத்தின கல் நகைகள் அப்போதும் பிரபலமாக இருந்தன.

    இந்திய நகை வடிவமைப்பாளர்கள் மற்றும் கைவினைஞர்களால் ரத்தினங்கள் பல்வேறு வகைகளில் நகைகளில் பாதிக்கப்பட்டது. இந்த கலையில் சில, 5000 ஆண்டுகள் பழமையானவை;

    1. குந்தன் நகைகள்:

    இந்திய ரத்தின நகைகளில் இந்த குந்தன் நகை வடிவம் முகலாயர்களின் அரச ஆதரவின் கீழ் செழித்து வளர்ந்தது; இன்னமும் இது பாரம்பரிய திருமணங்களில் ஒரு அங்கமாக உள்ளது. இந்த கலை வடிவத்தில், ஒரு ரத்தினத்துக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொடுப்பதற்காகவும், பக்கத்தில் உள்ள ரத்தினங்களிலிருந்து தனிமைப்படுத்துவதற்காகவும் தூய தங்கப் படலத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரம், குந்தன் நகைகளுக்கு மிகவும் பிரபலமானது.

    நவீன தழுவல்: தெளிவான வண்ணங்களைக் கொண்ட கனிம பூச்சுகள் குந்தன் கலையில் பல மாறுபாடுகளைக் கொண்டு வந்துள்ளன. மேலும், வெள்ளியால் செய்யப்பட்ட குந்தன் நகைகள் ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் பீகார் மாநிலங்களில் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளன.

    2. ஜடாவ் நகைகள்:

    ஜடாவ் நகைகள் "பொறிக்கப்பட்ட நகைகள்" என்றும் அழைக்கப்படுகிறது, மேலும் இது திருமணம் அல்லது பண்டிகைகள் போன்ற மங்களகரமான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த தனித்துவமான கலைப்படைப்பு பல ரத்தினம், மாற்று ரத்தினம், விலையுயர்ந்த கற்கள், படிகங்கள் மற்றும் மணிகள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது, அவை திடமான தங்கத் தகட்டில் பதிக்கப்பட்டுள்ளன. இந்திய கைவினைஞர்களின் உள்நாட்டுத் திறன்கள் மேற்கிலும் இந்த வடிவத்தை மிகவும் பிரபலமாக்கியுள்ளன.

    நவீன தழுவல்: இப்போதெல்லாம், ஜடாவ் கலை முலாம் பூசுவதையும் இணைக்கப்பட்டு ஆபரணத்திற்கு தனித்துவமான வண்ணத்தை வழங்குகிறது. மேலும், அழகியல் மதிப்பை மேலும் கூட்ட பட்டை தீட்டப்படாத வைரம் ஒரு மையக் கல்லாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

    3. லாக் நகைகள்:

    லாக் நகைகளின் (Lacquer) பல்வகை அழகு அதை உலகம் முழுவதும் பிரபலமாக்கியுள்ளது. இந்த கலை முன்பு ராஜஸ்தானி பழங்குடியினருக்கு மட்டுமே இருந்தது, ஆனால் இன்று இதன் சந்தை மிகப்பெரியது. டிமானியன், பாஜுபந்த் மற்றும் வளையல்கள் போன்ற லாக் ஆபரணங்கள் பல வடிவமைப்பாளர்களின் சேகரிப்பில் தவிர்க்க முடியாததாகும்.

    நவீன தழுவல்: பழங்காலத்தில், லாக் ஆபரணங்களை அழகுபடுத்த கண்ணாடிகள் மற்றும் கண்ணாடி மணிகள் பழங்குடியினரால் பயன்படுத்தப்பட்டன, ஆனால் இப்போது ரத்தினங்கள் பதிக்கப்படுகின்றன. மேலும், இந்த வகையான நகைகள் ஒப்பீட்டளவில் மலிவு விலையில் இருப்பதால், இது இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது.

    4. நவரத்தின நகைகள்:

    அணிபவரின் நலனை உறுதிப்படுத்த, நவரத்தின நகைகளில், ஒன்பது மங்களகரமான கற்கள் ஒரே ஆபரணத்தில் பதிக்கப் படுகின்றன. இந்த ஒன்பது ரத்தினங்கள் மாணிக்கம், முத்து, வைரம், மரகதம், பவளம், பூனைகண், நீலம் , புஷ்பராகம் மற்றும் கார்னெட் ஆகும்; ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உள்ளது. உதாரணமாக, ரூபி தீய ஆவிகளை விரட்டுவதற்கு இணைக்கப்பட்டது; பவளம் நோய்களைக் குணப்படுத்துவதற்கும், கூர்மையான நினைவாற்றலுக்கும்; முத்து அமைதியைப் பேணுவதற்கும், புஷ்பராகம் அணிபவரின் நீண்ட ஆயுளுக்கும், மரகதம் ஏமாற்றுவதைத் தவிர்ப்பதற்கும் ஆகும்.

    நவீன தழுவல்: பாரம்பரியமாக, நவரத்ன கற்கள் பெரும்பாலும் மோதிரங்கள் மற்றும் பதக்கங்களில் பயன்படுத்தப்பட்டது, ஆனால் இப்போது அவை காதணிகள், வளையல்கள், கவசங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல ஆபரணங்களை அழகுபடுத்தப் பயன்படுத்தப்படுகின்றன. இது பல்வேறு வண்ணங்களைக் கொண்டிருப்பதால் பல்வேறு இந்திய உடைகளுக்கு நன்றாக பொருந்தும்.

    5. பச்சிகம் நகைகள்

    இந்த பச்சிகம் நகை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் உருவானது, இன்றும் சமகால பேஷன் நகைகளின் இன்றியமையாத அங்கமாக உள்ளது. இது குந்தன் வேலையுடன் ஒரு குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டுள்ளது, ஆனால் ஒரு தெளிவற்ற மற்றும் உடையக்கூடிய தோற்றத்தைக் கொண்டுள்ளது. பொதுவாக பட்டை தீட்டப்படாத ரத்தின கற்கள் மற்றும் கண்ணாடி வேலைப்பாடுகள் பயன்படுத்தி பச்சிகம் நகைகள் செய்யப்படுகின்றன. பச்சிகம் நகையின் அழகு மற்றும் அதன் வசீகரம் யாரையும் அதன்பால் விழ வைக்க போதுமானது.

    நவீன தழுவல்: முன்பு தங்கம் மற்றும் பிளாட்டினம் ஆகியவை பச்சிகம் கலைப்படைப்புக்கு அடித்தளமாக பயன்படுத்தப்பட்டிருந்தாலும், இப்போது வெள்ளி பயன்படுத்துவதால் குறைந்த விலையில் கிடைக்க வழி செய்கிறது.

    6. மணிகளால் ஆன நகைகள்

    மணிகளால் ஆன நகைகள், ஒரு காலத்தில் ராஜஸ்தான், ஹரியானா மற்றும் பஞ்சாப் பகுதிகளில் மட்டுமே இருந்தது, ஆனால் இப்போது உலகின் அனைத்து பகுதிகளிலும் நன்கு அறியப்படுகிறது. பழைய நாட்களில், கல் பதித்த மணிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு, பெரும்பாலும் தலை அணிகலன்கள், கணுக்கால்கள் மற்றும் கவசங்களாகப் பயன்படுத்தப்பட்டன. மேலும், கடினமான கனிம மணிகள் பயன்படுத்தப் பட்டு கழுத்தில் அணியும் நகைகள் மற்றும் பிற ஆபரணங்களை அழகுபடுத்த பயன்படுகிறது.

    நவீன தழுவல்: மணி மற்றும் கல் ஆபரணங்களின் தனித்துவமான நகைகள் இப்போது எளிதாகக் கிடைக்கிறது. இந்த நகைகளில், கற்கள் மையப் பகுதியில் பதிக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் ஆபரணத்தை அசாதாரணமாக்க மணிகள் சுற்றி அமைக்கப் பட்டுள்ளன.

    7. சமகால கற்கள் பதித்த நகைகள்:

    இந்த வகையான நகைகள் பல வகை கலைகளை கலந்து ஒரு நவநாகரீக ஆபரணத்தை உருவாக்குவதாகும் . பொதுவாக, ரத்தினங்கள் மற்றும் மாற்று ரத்தினங்களை(ராசி கற்கள் அலாதவைகளை) வழக்கத்திற்கு மாறாக கலந்து ஒரு புதுப்பித்த நகையை உருவாதாக்கும். இன்று கற்களை அமைப்பதற்கான தளமாக ஸ்டெர்லிங் வெள்ளி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. விலை குறைவாக கிடைக்கச் செய்ய, அரிதாக, செம்பு மற்றும் பித்தளை கூட ஆபரணங்கள் செய்ய அடித்தள உலோகமாக பயன்படுத்தப்படுகிறது.

    • வீட்டில் 4 பவுன் நகைகள் திருட்டு போனது.
    • முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை கட்டியாவயல் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (வயது 49). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் வெளியில் சென்று விட்டு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 4 பவுன் நகைகள் திருட்டு போகியிருந்தது. இது தொடர்பாக திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். திருட்டு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

    • கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது கஞ்சா புழக்கம் குறைந்து உள்ளது.
    • சபரிமலை சீசன் தொடங்க உள்ள நிலையில் கன்னியாகுமரிக்கு அதிக அளவு பக்தர்கள் வருகை தருவார்கள். எனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் இன்று நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

    குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது கஞ்சா புழக்கம் குறைந்து உள்ளது. சிறிய அளவில் மட்டுமே கஞ்சா புழக்கம் இருந்து வருகிறது. அதை முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    கன்னியாகுமரிக்கு நாட்டின் பல்வேறு பகுதி களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். எனவே கன்னியாகுமரி நுழைவு வாயில் பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். குமரி வரும் வாகனங்களின் பதிவு எண்ணை சேமித்து வைக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட உள்ளது.

    நாகர்கோவில் மாநகர பகுதிகளில் புதிதாக கட்டப்ப டும் வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளோம். ஏற்கனவே வணிக நிறு வனங்களில் கேமராக்கள் இருப்பதால் குற்றங்கள் தற்போது குறைந்து உள்ளது. நகை பறிப்பு சம்பவங்களும் குறைந்து உள்ளன.

    கோவிலில் உண்டியல் திருட்டு, வீடு புகுந்து திருட்டு ஆகிய சம்பவங்களை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். நேசமணிநகர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 2 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

    குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 30 வழக்குகளில் 150 பவுன் நகை மீட்கப்பட்டு உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 573 பவுன் நகை மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உண்டியல் மற்றும் வீடு புகுந்து திருட்டுகள் தொடர்பான வழக்குகளில் 150 வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே தனிப் படைகள் அமைத்து அந்த வழக்குகளை முடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    சபரிமலை சீசன் தொடங்க உள்ள நிலையில் கன்னியாகுமரிக்கு அதிக அளவு பக்தர்கள் வருகை தருவார்கள். எனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்காக வெளியூரில் இருந்து ஒரு பட்டாலியன் போலீசை பாதுகாப்பு பணிக்காக கேட்டு உள்ளோம்.

    கந்துவட்டி தொடர்பான புகார்கள் இருந்தால் நாகர் கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கொடுக்கலாம். கந்துவட்டி தொடர்பான புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    குமரி மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் உள்ளன. அந்த பெட்ரோல் பங்க் உரிமை யாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க அறிவுறுத்தி உள்ளோம். அங்கு அமைக்கப்படும் கண்காணிப்பு கேமராக்கள் முழுவதையும் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிக்கும் வகை யில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

    நித்திரவிளை அருகே மாணவி அபிதா பலியானது தொடர்பாக நடந்த பிரேத பரிசோதனையில் மாணவி விஷம் குடித்ததற்கான அறிகுறி இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

    களியக்காவிளையை அடுத்த பாறசாலையில் மாணவர் ஷாரோன் கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அவருடைய காதலி கிரீஷ்மா கைது செய்யப்பட்டு கேரளா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவரை குமரி மாவட்டத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கை குமரி மாவட்டத்திற்கு மாற்றுவது தொடர்பாக எந்த தகவலும் இது வரை வரவில்லை.

    சுசீந்திரம் அருகே மேல கிருஷ்ணன்புதூரில் ரோட்டோரத்தில் ராஜதுரை என்பவர் மர்மமான முறையில் கொலை செய்ய ப்பட்டு கிடந்தார். இந்த வழக்கில் முக்கிய தடயம் சிக்கி உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாவட்டத்தில் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் படி அபராத தொகை விதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 1,851 ஹெல்மெட் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பிலிகிரி வேலைப்பாட்டில் உருவாகின்றன.
    • தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பிலிகிரி வேலைப்பாட்டில் உருவாகின்றன.

    பெண்கள் மனதை கவரும் வகையில் புதிய புதிய வடிவமைப்புடன் நகைகள் வெளிவரும் போது தான் அதனை வாங்குதில் அதிக ஆர்வம் கொள்கின்றனர். பார்த்தவுடன் இந்த நகை வடிவமைப்பு எவ்வளவு அழகாக உள்ளது, இதனை எப்படி செய்திருப்பார்கள் என்றவாறு பல கேள்விகளை எழுப்புவதில் தான் அதன் மதிப்பே உள்ளது. அந்த வகையில் பெண்கள் அணிகின்ற நகைகளின் ஓர் வடிவமைப்பு உக்தி (அ) உருவாக்கும் முறை தான் பிலிகிரி வேலைப்பாடு.

    அதி உன்னதமான மேம்பட்ட கைவினை வேலைப்பாடு என்பதில் தனித்து விளங்குவது பிலிகிரி வேலைப்பாடு. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இந்த பிலிகிரி வேலைப்பாட்டில் உருவாகின்றன. பிலிகிரி வேலைப்பாடு மூலம் எந்தவிதமான உருவம், வடிவம், வித்தியாசமான வளைவுகள் போன்றவற்றை உருவாக்க முடியும். ஒரே மாதிரியான தங்க நகைகளை வாங்கி அணிபவர்களுக்கு வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட பிலிகிரி நகைகள் ஆர்வத்தை தூண்டுகின்றன.

    பிலிகிரி நகை வடிவமைப்பின் சிறப்பு

    பிலிகிரி நகைகள் என்பது தனிப்பட்ட முறையில் வடிவமைப்பது. விலையுயர்ந்த உலோகத்தை மெல்லிய நூல்களாய் உருவாக்கி அதனை கொண்டு கைநேர்த்தியுடன் வடிவமைப்பதே பிலிகிரி நகைகள். அதாவது மெல்லிய பூக்கள், அழகிய சுழல் வேலைப்பாடு, கண்கவர் சிற்ப வடிவம், டெக்கோ ஸ்டைல் போன்றவாறு அற்புதமான பலவித வடிவமைப்பு உத்திகளுடன் நகை வடிவமைப்பு ஒருங்கிணைந்த பணியாக மேற்கொள்ளப்படுகிறது. எந்த வடிவமைப்பும் பிலிகிரி வேலைப்பாட்டில் செய்ய முடியாது என்று கூறமுடியாது.

    வரலாற்று சிறப்புமிக்க பிலிகிரி நகைகள்

    பிலிகிரி நகைகள் என்பது பழங்கால கலைவடிவம், நகைவடிவமைப்பு உத்தியில் நகைக்கான தனிசிறப்பு, வரலாற்று பின்னணி கொண்டதாகவும் உள்ளது. பிலிகிரி வேலைப்பாடு என்பது விருதுகள், பெரிய சின்னங்கள் மற்றும் ஆடைகளில் பொத்தான்கள் போன்றவாறு அலங்கார அணிவகுப்பிற்கு முன்பு பயன்படுத்தப்பட்டு வந்தன. பிலிகிரி நகைகள் என்பது 5000 ஆண்டுகளுக்கு முந்தைய மெசபடோமியா பகுதிகளிலேயே காணப்பட்டது. அதுமட்டுமின்றி ரோமானிய அரச குடும்பங்களிலும் பிலிகிரி வடிவமைப்பு உத்திகளில் உருவான நகைகள் அதிகளவு பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன. இதன் பின்னர் வந்த தலைமுறையினர் பழங்கால நகை வடிவமைப்பு ஓவியங்கள் மற்றும் வரையப்பட்ட முறைகளை பயன்படுத்தி புதிய நவீன உத்திகளை பயன்படுத்தி ஏராளமான நகைகளை பிலிகிரி முறையில் உருவாக்கி தந்தனர்.

    பிலிகிரி நகை உருவாக்கம்

    நகையை உருவாக்கும் முன் தங்கம் மற்றும் வெள்ளி என்பது மெல்லிய கம்பிகளாக உருவாக்கப்பட்டு அதன் மூலம் சிறு வடிவங்கள் உருவங்கள் வளைத்தும், பின்னப்பட்டும் உருவாகின்றன. இந்த சிறு சிறு வடிவங்கள் இணைத்து பெரிய நகைகளாக உருவாகின்றன இந்த கம்பிகளுடன் சிறு மணிகள் இணைப்பு இந்த நகை உருவாவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வெவ்வேறு வடிவமைப்பு சிற்பங்கள் மற்றும் ஓவிய அமைப்புகள் பின்னல் போன்று வளைவுகளாய் செதுக்கப்படுகிறது. கைநேர்த்தியுடன் செதுக்கப்படும் இந்த நகைகள் வடிவம் பெறுவது என்பது அற்புதமான கலை பணியாக உள்ளது. எனவே பிலிகிரி நகைகள் என்பது அதற்கென உள்ள பிரத்யேகமான வடிவமைப்பாளர்கள் மூலமே உருவாக்கம் பெறுகின்றன. நவீன வடிவில் பிலிகிரி நகைகள் கூடுதல் பொலிவுடன் வருகின்றன.

    நவீன வடிவமைப்புடன் கூடிய பிலிகிரி நகைகள்

    தற்போது பல நகை விற்பனை கூடங்களிலும் தனிப்பட்ட பிலிகிரி நகை பிரிவுகளையே காணலாம். அதில் அதிகபட்ச கலைநயம் மற்றும் ஜொலிக்கும் அமைப்புகள் கொண்டவாறு நகைகள் உருவாகின்றன. பொதுவாக பளிச்சிடும் மஞ்சள் வண்ண தங்க நகைகள் என்பது பிலிகிரி நகைகளாக வெளிவரும் போது மாறுபட்ட மஞ்சள், செம்மை, வெண்மை சாயலுடன் அதிக பளபளப்பு மற்றும் ஜொலிப்புடன் வருகின்றன. சல்லடை போன்ற அமைப்புடன் பெரிய பாந்தமான நகைகள் முதல் சிறிய அளவிலான நகைகளும் உலா வருகின்றன.

    பூக்கள் என்பது ஒவ்வொரு இதழ்களாக, அடுக்குகளாக விரிந்தவாறு உள்ள அமைப்புடன் நகைகளால் உருவாக்கப்படுகின்றன. பூக்கள் என்பதால் எடை அதிகரிக்காத வண்ணம் மெல்லிய கம்பிகள் கொண்டு இயந்திரம் மற்றும் கைவினை இணைந்தவாறு இதன் உருவாக்கம் உள்ளது.

    வித்தியாசமான கோணம் மற்றும் வளைவுகளுடன் கூடிய பிலிகிரி நெக்லஸ்கள் கழுத்தில் அணியும் போது புதிய ஓவியமாகவும், சிற்பமாகவும் ஜொலிக்கின்றன எனலாம். மற்ற நகைகள் போன்ற அழுத்தமான எம்போஸ் செய்யப்பட்ட வடிவமைப்புகள் காணாது. உயிரோட்டமான வடிவங்கள் கண்ணுக்கு விருந்தாகின்றன. பிலிகிரி நகைகளில் அழகிய பிரேஸ்லெட்கள், காதணிகள், நெக்லஸ்கள், சிறுசிறு மோதிரங்கள் போன்றவை நவீன உத்தியை பயன்படுத்தி மேம்பட்ட அழகுடன் உலா வருகின்றன. பார்த்தவுடன் பரவசமூட்டும் பிலிகிரி நகைகள் அதிக எடையில்லாத மெல்லிய நகைகள் என்பதுடன் பிரமாண்டமான நகை தோற்றத்தை தருவதால் பெண்கள் விரும்ப தொடங்கியுள்ளனர்.

    • காலம் கடந்தும் இதன் கலைநயம் மக்களால் பெரிதும் போற்றப்படுகிறது.
    • பார்ப்பதற்கு அழகாகவும் கண்ணைக் கவரும் வகையிலும் இருக்கும் குந்தன் காரி.

    கலைநயம் மிக்க நகைகளை அனைவரும் விரும்புவர். பழமையான நகைகளில் அக்காலத்து கலைநயம் மிகுந்து காணப்படும். அவற்றின் நிறங்களும் தனித்துவமான தன்மையும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். பல்வேறு காலகட்டங்களில் பல வகையான கலைநயம் மிக்க நகைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில இன்றளவும் மிகவும் பிரபலமாக உள்ளன. அவற்றை காண்போம்.

    தாராகாஷி

    இந்த வகையான கலைநயம் மிகுந்த நகை வகை 1500 களில் ஒரிசாவில் வளர்ச்சி அடைந்தது. இது கிரேக்க பிலிகரி வேலைபாட்டின் மாற்றி அமைக்கப்பட்ட வடிவமாகும். இயற்கையில் உள்ள வடிவங்களை இது பிரதிபலிக்கின்றது. தாராகாஷி நகைகள் தாவர மற்றும் உயிரினங்களின் வடிவங்களை கொண்டு வடிவமைக்கப்படும். மெல்லிய வெள்ளி கம்பிகளால் இந்த நகைகள் செய்யப்படும். பொதுவாக வட்ட வடிவத்தில் மையப்பகுதி இருக்கும். இவை நெக்லஸ், இடுப்பு மற்றும் கைகளில் அணியும் ஆபரணமாக பயன்படுத்தப்பட்டது. தற்போது மோதிரங்கள், காதணிகள், கால்கொலுசு, போன்ற ஆபரணங்கள் பெண்களிடம் மிகப் பிரபலமாக உள்ளது. காலம் கடந்தும் இதன் கலைநயம் மக்களால் பெரிதும் போற்றப்படுகிறது.

    தேவா

    தேவா பதினாறாம் நூற்றாண்டைச் சார்ந்த கலைநயம் மிக்க நகை ஆகும். இன்றளவும் ராஜஸ்தான் குஜராத் போன்ற இடங்களில் இது மிகவும் பிரபலமாக உள்ளது. 23 கேரட் தங்கத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டது. இது மிகச் சிறப்பான மணிகளும் பதக்கங்களும் இணைத்து ஆரம் போல் செய்யப்பட்டிருக்கும். இதை உருவாக்கியவர் பிரதாப் காரியா நட்டுலால் சோனியாவால் என்ற பொற்கொல்லர் ஆவார். மகாராஜா சுமன் சிங் இந்த நகையை கவனித்தார். அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. அவர் காலத்தில் இந்த கலைநயம் மிகவும் வளர்ச்சி அடைந்தது. இந்தப் பதக்கங்களில் உள்ள கலைநயம் மனதைக் கவரும் வகையில் இருக்கின்றது.

    பச்சிகம்

    பச்சிகம் குஜராத் மாநிலத்தில் கட்ச் என்ற ஊரில் உருவானது. குஜராத்தி மொழியில் பச்சிகர் என்றால் பொற்கொல்லர் என்று பெயர். அந்த பெயரில் இருந்து பச்சிகம் என்று பெயர் பெற்றது. இது பிளாட்டினம் மற்றும் வெள்ளி உலோகங்களால் தயாரிக்கப்படுவது. பொதுவாக கண்ணாடி மணிகள் விலை குறைந்த கற்கள் இவற்றைக் கொண்டு கலைநயத்தோடு பச்சிகம் உருவாக்கப்படுகிறது. மோதிரங்கள் வளையல்கள், கொலுசு, காதணிகள், நெத்திச்சுட்டி மற்றும் நெக்லஸ் போன்ற பல வகையான நகைகள் செய்யப்படுகின்றது இவற்றில் பதித்த கண்ணாடி மணிகள் மற்றும் அதன் அமைப்பும் கண்களை பறிக்கும் வண்ணம் சிறப்பாக இருக்கும்.

    மீனாகாரி

    மீனாகாரி ராஜா மான்சிங் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது எனாமல் கொண்டு செய்யப்படும் நகையாகும். இதை செய்வது சற்று கடினமானது. இந்த நகையை வடிவமைக்கும் போது அரக்கு குச்சிகளில் வைப்பார்கள். அதன் இடையே உள்ள துவாரங்களில் எனாமல் தூள்களை தூவுவார்கள். பிறகு அதை சூடேற்றுவார்கள். அந்த தூள் உருகி அந்த இடம் முழுதும் நிரப்பும் வரை சூடேற்றுவார்கள். பிறகு வடிவங்களை பொறித்து வெள்ளி அல்லது தங்கத்தால் நகையை செய்து முடிப்பார்கள். மிக அழகாக காட்சி அளிக்கும் இந்த நகையின் கலைநயம் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் இருக்கும். பிகானீர்- ராஜஸ்தான், வாரணாசி - உத்திரபிரதேச, ஹைதராபாத் - ஆந்திர பிரதேசம் மற்றும் கொல்கத்தாவில் செய்யப்படும் மீனாகாரி நகை வகைகள் உலகம் முழுதும் பிரபலமானவை. நாத்வராவின் வெள்ளி மீனாகாரி நகைகள் இளைய தலைமுறையினர் மத்தியில் மிகவும் பிரபலமானது.

    குந்தன்காரி

    19 ஆம் நூற்றாண்டில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அரசவைகளில் உருவானது குந்தன் காரி நகைவகையாகும். இது வைரம், வைடூரியம், மாணிக்கம் மற்றும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்படுவது. பார்ப்பதற்கு அழகாகவும் கண்ணைக் கவரும் வகையிலும் இருக்கும் குந்தன் காரி பிரேஸ்லெட், நெக்லஸ்கள், காதணிகள் மற்றும் கொலுசுகள் இன்றைய நவீன நாகரிக காலத்திலும் மணப்பெண்களால் விரும்பப்படுவதாகும். விலையுயர்ந்த கற்களின் வேலைப்பாடு மனம் கவரும் வகையிலும் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இருக்கும். கற்களை நெருக்கமாக பொருத்தி சிறப்பாக செய்யப்பட்டிருக்கும்.

    ஜடோ

    இது மீனாக்காரி நகையின் அழகையும் குந்தன் காரின் நகையின் ஆடம்பரத்தையும் சிறப்பாக இணைத்து செய்யப்பட்ட நகையாகும். இது முகலாயர் காலத்தில் நமக்கு அறிமுகமான நகை வகையாகும். இந்த நகையில் அண்கட் வைர பொய்க்கிஸ் மற்றும் மாற்று மதிப்புள்ள கற்கள் இவற்றை கொண்டு வடிவமைக்கப்பட்டதாகும். பொதுவாக வைரப் பொய்கிகள் தங்கம் அல்லது வெள்ளி இழைகளால் சுற்றப்பட்டு இருக்கும். இதனால் கற்களின் பளபளப்பு தன்மை அதிகரிக்கும். இந்தப் போல்கிகள் அரக்கால் செய்யப்பட்ட வடிவமைப்புக்குள் அழுத்தி வைக்கப்படும். பிறகு தங்கம் கொண்டு இவற்றை செய்து முடிப்பார்கள். பல வண்ணம் கொண்ட மாற்றுக் கற்கள், விலை உயர்ந்த கற்கள் இவற்றால் ஜடோ நகைகள் செய்யப்படும். மணப்பெண்களை அலங்கரிக்கும் இந்த நகை கண் கவரும் வகையில் இருக்கும். அதன் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்ட கற்கள் மிகவும் அழகாக காட்சி அளிக்கும்.

    விக்டோரியன்

    இவை ஐரோப்பிய நகை வகையை சார்ந்தவை. பிரிட்டிஷ்காரர்களால் கொண்டுவரப்பட்டது. இந்த நகைகள் தங்கம், பிளாட்டினம் மற்றும் வெள்ளியால் செய்யப்படுபவை. மேலும் இவை கற்கள் மற்றும் சாதாரணமாக கிடைக்கக் கூடிய பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்படுபவை. இவை ஆங்கிலோ-இந்தியன் கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றவை. மலிவான விலையில் கிடைப்பதால் இன்றளவும் இந்திய பெண்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. பிரேஸ்லெட் மற்றும் தலையில் அணியும் ஆபரணங்கள் இந்திய பெண்களால் இன்றளவும் விரும்பப்படுகிறது. இவை நம் பாரம்பரிய உடைகளான புடவை, சல்வார் கமிஸ், காக்ரா சோலி, தோத்தி குரதாஸ் போன்ற எந்த ஆடைகளுக்கும் பொருந்தி போகக் கூடிய வகையில் உள்ளதால் இந்திய கலாச்சாரத்திற்கு மிகவும் பொருந்துகின்றது. குறைவான விலை மற்றும் கலைநயம் மிகுந்த வடிவமைப்பால் இந்த நகை அனைவராலும் விரும்பப்படுகிறது. நெக்லஸ், வளையல் போன்றவை இன்றளவும் இந்திய பெண்களால் பயன்படுத்தப்படுகின்றது

    • 145 பவுன் நகையை திருடியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • இதையடுத்து அவரை அங்கு அழைத்துச் சென்ற போலீசார், தீபக் காட்டிய இடத்தில் தோண்டி பார்த்தனர். அப்போது அங்கு 27 பவுன் நகைகள் இருந்தது.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பிரபல நகை கடைகள் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்தவர் தீபக் (வயது 28). இவர் அந்த கடையிலிருந்து 145 பவுன் நகையை திருடியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பின்னர் ஊழியர் தீபக்கை இன்ஸ்பெக்டர் ஆனந்த 2 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார். அப்போது, திருடிய நகைகளை வங்கிகளில் அடகு வைத்த தீபக், அந்த பணத்தை கொண்டு ஆன்லைன் கிரிக்கெட் விளையாடியது தெரியவந்தது. மேலும் 44 பவுன் நகையை வங்கியில் அடகு வைத்ததற்கான ரசீதுகளையும் அவர் கொடுத்தார். அந்த நகைகளை நீதிமன்றம் மூலமாக மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    அதே நேரத்தில் திருடிய நகைகளை அல்லிக்குட்டை பகுதியில் உள்ள பச்சாயி அம்மன் கோவில் பகுதியில் புதைத்து வைத்திருப்பதாகவும் தீபக் போலீசாரிடம் கூறினார்.

    இதையடுத்து அவரை அங்கு அழைத்துச் சென்ற போலீசார், தீபக் காட்டிய இடத்தில் தோண்டி பார்த்தனர். அப்போது அங்கு 27 பவுன் நகைகள் இருந்தது. அதனை போலீசார் மீட்டனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • முத்துக்கள் மிகவும் மென்மையானவை.
    • சில சோதனைகளைச் செய்தால் கண்டுபிடித்து விடலாம்.

    ஒரிஜினலுக்கும் போலிக்கும் பார்க்கும் போது வித்தியாசம் தெரியாது. சில சோதனைகளைச் செய்தால் கண்டுபிடித்து விடலாம். முதல் டெஸ்ட், முன் பற்களில் முத்தை வைத்து மெதுவாக பிரஷ் செய்வது போல தேய்க்க வேண்டும். பற்களில் 'கரகர' என்ற மெல்லிய சத்தத்துடன் உராய்வுத் தன்மை தெரிந்தால் அது ஒரிஜினல். வழுக்கிக் கொண்டு ஓடினால் சந்தேகமே

    இல்லாமல் அது பிளாஸ்டிக். 2வது டெஸ்ட் இரண்டு முத்துகளை எடுத்து உரசுங்கள். உராய்வுத் தன்மை இருந்தால் ஒரிஜினல். வழுக்கிக் கொண்டு ஓடினால் அது போலி. 

    இதிலும் திருப்தி ஏற்படாவிட்டால் 3வது கட்ட சோதனையைச் செய்யலாம். அதாவது, முத்தை உடைத்துப் பார்ப்பது. உடைத்ததும் உள் பக்கம் அடுக்கடுக்காக இருந்தால் அது ஒரிஜினல். ஒழுங்கற்ற வடிவத்தில் இருந்தால் அது போலி. இதற்கும் அடுத்த கட்டம் லேப்புக்கு எடுத்துச் சென்று சோதனை செய்து பார்ப்பது. கடைசியாக உள்ள இரண்டு சோதனைகளைச் செய்ய வேண்டிய தேவை அதிகம் ஏற்படாது. முதல் இரு கட்ட சோதனையிலேயே போலியின் சாயம் வெளுத்து விடும். இது தவிர, ஒரிஜினல் முத்தின் எடை அதிகமாக இருக்கும். போலியின் எடை குறைவாக இருக்கும். இப்போது சிலர், எடையை அதிகப்படுத்தி ஒரிஜினல் மாதிரியே விற்கிறார்கள். அவை செராமிக் மற்றும் கண்ணாடியில் உருவாக்கப்பட்டவை. பிளாஸ்டிக்கால் ஆன முத்து வெயிட்லெஸ் ஆக இருக்கும்... விலை குறைவாகவும் இருக்கும்.

    எப்பொழுதுமே முத்து நகைகளை மற்ற நகைகளுடன் அணிவதைத் தவிர்க்க வேண்டும். முத்துக்கள் மிகவும் மென்மையானவை. எனவே முத்துக்களில் எளிதில் சிராய்ப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படி வைத்தால், உராய்வு ஏற்பட்டு முத்து நகைகள் சீக்கிரமே பாழாகிவிடும். முத்தினால் செய்த மாலைகள், நெக்லஸ்கள் மற்றும் ஹாரம் போன்றவற்றை தொங்கிய நிலையிலேயே வைக்கக்கூடாது.

    இவ்வாறு தொங்கவிடும் பொழுது முத்துச் சரங்கள் தளர்வடைய வாய்ப்புள்ளது. முத்து நகைகளை சாதாரண குளோரின் கலந்த நீரில் கழுவுவதை தவிர்த்து சுத்தமாக காய்ச்சி வடிகட்டிய நீரில் கழுவலாம். முத்து நகைகளை அணிந்து கொண்டு ஹேர் டிரையர் உபயோகிப்பது, ஒப்பனை செய்து கொள்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    உடைகளை அணிந்து, மேக்கப் எல்லாம் போட்டு முடித்த பிறகுதான் முத்து நகைகளை அணிய வேண்டும். அதே போல் வீட்டுக்கு வந்ததும் அவற்றைக் கழற்றி வைத்த பிறகுதான் மற்ற வேலைகளைத் தொடர வேண்டும்.

    ஒப்பனை பொருட்களில் இருக்கும் ரசாயனங்களும், ஹேர் டிரையரில் இருந்து வரும் அதிகப்படியான சூடான காற்று முத்துக்கள் நிறம் மாறுவதற்கும், விரிசல் அடைந்து உடைவதற்கும் காரணமாக அமைந்துவிடும்.

    பெர்ஃப்யூம், சோப் போன்ற ரசாயனப் பொருட்கள் முத்து நகைகள் மீது படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

    முத்து நகைகளை ஒரு வெள்ளைத் துணியில் சுற்றி வைத்திருப்பது நல்லது. இப்படிச் செய்தால் முத்து, நீண்ட நாட்கள் உழைக்கும்.

    • நகைகளை அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
    • நகைகளை பிரத்யேகமாக இருக்கும் பெட்டிகளில் வைக்க வேண்டும்.

    வைரம், ரூபி, எமரால்டு,நீலக்கல், புஷ்பராகம், சாலிடர் போன்ற கற்கள் பதித்த நகைகளை மற்ற நகைகளுடன் அணிவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு தனியாக அணியும் பொழுது அவற்றில் உராய்வு ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. கற்கள் பதித்த நகைகளில் நுணுக்கமான வேலைப்பாடுகள் இருப்பதால் வெகு சீக்கிரமாகவே அழுக்கு படிந்து நாளடைவில் அவற்றை நாம் சரிவர சுத்தம் செய்ய மறந்தால் நகையின் பிரகாசம் மங்கி பித்தளை போல தோன்றி விடக்கூடிய ஆபத்துகள் அதிகம் இருக்கின்றது.

    எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த நகைகளை கவனித்து அவற்றைச் சுத்தம் செய்து பத்திரமாக அவற்றிற்கென பிரத்யேகமாக இருக்கும் பெட்டிகளில் வைக்க வேண்டும். நகைகளை வெளியில் அணிந்து சென்று விட்டு வந்த பிறகு அப்படியே சுருட்டி மடக்கி பைகளிலோ அல்லது பெட்டிகளிலோ வைக்கக்கூடாது.இவ்வாறு மடக்கி வைக்கும் பொழுது விரைவிலேயே நகைகள் உடைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே நகைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு தரமான சாட்டின் துணியால் வடிவமைக்கப்பட்ட நகைபெட்டிகளைப் பயன்படுத்துங்கள்.

    நகைகளை அணிந்துகொண்டே குளிப்பது, துணிகளை துவைப்பது, பாத்திரங்களை கழுவுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.குறிப்பாக நீச்சல் குளங்களில் குளிக்கும் பொழுது அங்கிருக்கும் குளோரின் கலந்த நீரானது நகைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் நகைகளை கழற்றி வைத்துவிட்டு குளிப்பது நல்லது.அதேபோல் நகைகளில் அதிகப்படியான அழுக்குகள் படிந்திருந்தால் அவற்றை நகை கடைகளில் கொடுத்து தரமான முறையில் சுத்தம் செய்து வாங்கிக் கொள்வது சிறந்தது.

    அதை விடுத்து, காணொளிகளைப் பார்த்து நாமாகவே நகைகளை சுத்தம் செய்யும் பொழுது அதில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.நகைகளை அணிந்துகொண்டு அதன் பின்னர் வாசனை திரவியங்களை நகைகளில் படும்படி ஸ்பிரே செய்து கொள்வதை தவிர்க்க வேண்டும். இந்த ரசாயன திரவங்கள் நகைகளின் மீது படும்பொழுது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

    இதனால், தரமான தங்கத்தினால் செய்யப்பட்ட நகைகளாக இருந்தாலும் அவை நிறம் மாறுவதற்கும், வலுவின்றி தொய்வடைந்து அறுபடுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். நகைகளை அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்வதையும் தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி செய்யும் போது வெளிப்படும் அதிகப்படியான வியர்வையானது நகைகளில் படிந்து நகைகளின் பொலிவைக் குறைத்துவிடும்.சிறிய நகையாகவே இருந்தாலும் உடற்பயிற்சியின்போது அவற்றை அணிவதை தவிர்க்க வேண்டும்.

    இப்பொழுது வளையல், கம்மல், மோதிரம், நெக்லஸ் மற்றும் மாலைகளை வைப்பதற்கு தனித்தனியாக வடிவமைக்கப்பட்ட நகை பெட்டிகளை நகைக்கடைகளிலேயே விற்பனை செய்வதைப் பார்க்க முடிகின்றது.நான்கு ஜோடி கம்மல் முதல் ஆறு ஜோடி, 12 ஜோடி என பல ஜோடிகளை ஒரே பெட்டியில் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது போல் நகை பெட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை மடக்கி வைத்துக் கொள்வது போல் வடிவமைத்திருக்கிறார்கள். இவ்வாறு மடக்கும் பொழுது கம்மல்கள் ஒன்றுடனொன்று உரசாமல் இருப்பதுபோல் அதன் வடிவமைப்பு இருக்கின்றது.

    மேலும் இடத்தை அடைக்காமல் சிறிய இடத்திலேயே இதுபோன்ற பெட்டிகளில் அதிகமான நகைகளை வைத்துக்கொள்ள முடியும். மேலும் வெளியூர்களுக்கு நகைகளை எடுத்துச் செல்லும் பொழுதும் இந்தப் பெட்டிகள் மிகவும் கனக்கச்சிதமாக நம்முடைய கைப்பைகளில் அடங்கிவிடும்.இதேபோல் வளையல்கள், மோதிரம், மூக்குத்தி, நெக்லஸ் போன்றவற்றை ஒரே பெட்டியில் தனித்தனியாக வைத்துக் கொள்வதற்கு உண்டான இடங்களுடன் வந்திருக்கும் பெட்டிகளும் நம்முடைய நகைகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கும், வீட்டில் எந்தச் சேதமும் ஏற்படாமல் வைத்துக் கொள்வதற்கும் உண்டான சிறந்த வழிகளில் ஒன்றாகும்.

    எவ்வளவு அவசரமாக இருந்தாலும் தங்க நகைகளை, இமிடேஷன் நகைகளுடன் வைப்பதை தவிர்க்க வேண்டும்.ஆண்டுக்கு ஒரு முறையாவது அனைத்து நகைகளையும் சரிபார்த்து அவற்றுக்கு பாலிஷ் தேவைப்பட்டால் கடைகளில் கொடுத்து பாலிஷ் செய்து வைத்துக்கொள்ளலாம்.

    • ஒரு நகையுடன் மற்றொரு நகையை சேர்த்து வைக்கக் கூடாது.
    • முத்து நகைகளை மற்ற நகைகளுடன் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

    தங்கம், வைரம், வைடூரியம், முத்து, பவளம் என எந்த நகைகளாக இருந்தாலும் அவற்றை உரிய முறையில் பராமரித்து பாதுகாத்தால் மட்டுமே அவை பல தலைமுறைகளையும் தாண்டி மிகவும் பிரகாசமாகவும், உறுதியாகவும் நம்முடன் பயணம் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.தலைமுறைகளைத் தாண்டி பயணம் செய்வதற்கு மட்டுமல்லாமல் நாம் அவற்றை உபயோகப்படுத்தும் காலத்திலேயே அவை பழைய நகைகள் போன்ற தோற்றத்தை தராமல் இருப்பதற்கு அவற்றுக்கு சரியான பராமரிப்பை வழங்க வேண்டியது அவசியமாகும்.

    தங்க நகைகள்

    தங்கத்தினால் செய்த நகைகளை அன்றாடம் உபயோகப்படுத்தும் பொழுது அவற்றில் நாம் தலைக்குத் தேய்த்துக் கொள்ளும் எண்ணை,முகத்திற்கு பயன்படுத்தும் ஒப்பனைப் பொருட்கள் போன்றவை படிந்து விரைவிலேயே பொலிவிழந்து பழைய நகை போன்ற தோற்றத்தை தரத் துவங்கிவிடும். அழுக்குப் படிந்து பொலிவிழந்து இருக்கும் நகைகளை மாதம் ஒருமுறையாவது வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு மிக மென்மையான ஷாம்பு கலந்து அதில் ஊறவைத்து மென்மையான பிரஷ் கொண்டு தேய்த்துக் கழுவலாம்.

    அதேபோல் நகைகளை அடிக்கடி சுத்தம் செய்வதும், கடினமான பிரஷ் கொண்டு கழுவுவதும், துணி துவைக்கும் சோப்பை உபயோகப்படுத்தி சுத்தம் செய்வதும் கூடாது.மிகவும் நவீன தோற்றத்துடன் வரும் நகைகளை வெளியில் அணிந்து சென்று வந்த பிறகு மெல்லிய பருத்தித் துணியில் துடைத்து, ஆறவைத்து பின்பு நகைகளை தனித்தனியாக வைப்பதற்கு என்று இருக்கும் பெட்டிகளில் வைக்க வேண்டும்.

    எப்பொழுதும் ஒரு நகையுடன் மற்றொரு நகையை சேர்த்து வைக்கக் கூடாது. நகைகளை சேர்த்து வைக்கும் பொழுது அவை ஒன்றுடன் ஒன்று உரசி தேய்மானத்தை ஏற்படுத்திவிடும்.அதுமட்டுமல்லாமல் அவை ஒன்றுடன் ஒன்று பிணைந்து அவற்றை எடுக்கும் பொழுது சேதாரத்தை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே நகைகளை ஒரே பெட்டியில் வைக்க நேரிட்டாலும் ஒவ்வொன்றையும் தனித்தனியாக மெல்லிய துணிகளில் சுற்றி ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்துக் கொள்ளலாம்.

    முத்து நகைகள்

    எப்பொழுதுமே முத்து நகைகளை மற்ற நகைகளுடன் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.முத்துக்கள் மிகவும் மென்மையானவை. எனவே முத்துக்களில் எளிதில் சிராய்ப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.முத்தினால் செய்த மாலைகள், நெக்லஸ்கள் மற்றும் ஹாரம் போன்றவற்றை தொங்கிய நிலையிலேயே வைக்கக்கூடாது. இவ்வாறு தொங்கவிடும் பொழுது முத்துச் சரங்கள் தளர்வடைய வாய்ப்புள்ளது.முத்து நகைகளை சாதாரண குளோரின் கலந்த நீரில் கழுவுவதை தவிர்த்து சுத்தமாக காய்ச்சி வடிகட்டிய நீரில் கழுவலாம்.முத்து நகைகளை அணிந்து கொண்டு ஹேர் டிரையர் உபயோகிப்பது, ஒப்பனை செய்து கொள்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.ஒப்பனை பொருட்களில் இருக்கும் ரசாயனங்களும், ஹேர் டிரையரில் இருந்து வரும் அதிகப்படியான சூடான காற்று முத்துக்கள் நிறம் மாறுவதற்கும், விரிசல் அடைந்து உடைவதற்கும் காரணமாக அமைந்துவிடும்.

    பவள நகைகள்

    இந்த நகைகள் நேரடியான சூரிய வெயில் மற்றும் அதிகப் படியான சூட்டினால் நிறம் மாற வாய்ப்புள்ளது. நாம் உபயோகிக்கும் அழகு சாதனப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள், கூந்தல் எண்ணெய் மற்றும் ஸ்பிரே, துணிகளுக்கு உபயோகிக்கும் சோப்பு மற்றும் ரசாயனங்கள் பவள நகைகளில் படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.பவள நகைகளில் அழுக்கு படிந்திருந்தால் மென்மையான சோப்பு கலந்த நீரில் துணி அல்லது மென்மையான பிரஷ்ஷை உபயோகப்படுத்தி அழுக்கை அகற்றலாம்.

    கல் வைத்த நகைகள்

    வைரம், ரூபி, எமரால்டு,நீலக்கல், புஷ்பராகம், சாலிடர் போன்ற கற்கள் பதித்த நகைகளை மற்ற நகைகளுடன் அணிவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு தனியாக அணியும் பொழுது அவற்றில் உராய்வு ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. கற்கள் பதித்த நகைகளில் நுணுக்கமான வேலைப்பாடுகள் இருப்பதால் வெகு சீக்கிரமாகவே அழுக்கு படிந்து நாளடைவில் அவற்றை நாம் சரிவர சுத்தம் செய்ய மறந்தால் நகையின் பிரகாசம் மங்கி பித்தளை போல தோன்றி விடக்கூடிய ஆபத்துகள் அதிகம் இருக்கின்றது.

    எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த நகைகளை கவனித்து அவற்றைச் சுத்தம் செய்து பத்திரமாக அவற்றிற்கென பிரத்யேகமாக இருக்கும் பெட்டிகளில் வைக்க வேண்டும்.நகைகளை வெளியில் அணிந்து சென்று விட்டு வந்த பிறகு அப்படியே சுருட்டி மடக்கி பைகளிலோ அல்லது பெட்டிகளிலோ வைக்கக்கூடாது.இவ்வாறு மடக்கி வைக்கும் பொழுது விரைவிலேயே நகைகள் உடைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே நகைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு தரமான சாட்டின் துணியால் வடிவமைக்கப்பட்ட நகைபெட்டிகளைப் பயன்படுத்துங்கள்.

    நகைகளை அணிந்துகொண்டே குளிப்பது, துணிகளை துவைப்பது, பாத்திரங்களை கழுவுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.குறிப்பாக நீச்சல் குளங்களில் குளிக்கும் பொழுது அங்கிருக்கும் குளோரின் கலந்த நீரானது நகைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் நகைகளை கழற்றி வைத்துவிட்டு குளிப்பது நல்லது.அதேபோல் நகைகளில் அதிகப்படியான அழுக்குகள் படிந்திருந்தால் அவற்றை நகை கடைகளில் கொடுத்து தரமான முறையில் சுத்தம் செய்து வாங்கிக் கொள்வது சிறந்தது. அதை விடுத்து, காணொளிகளைப் பார்த்து நாமாகவே நகைகளை சுத்தம் செய்யும் பொழுது அதில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    நகைகளை அணிந்துகொண்டு அதன் பின்னர் வாசனை திரவியங்களை நகைகளில் படும்படி ஸ்பிரே செய்து கொள்வதை தவிர்க்க வேண்டும். இந்த ரசாயன திரவங்கள் நகைகளின் மீது படும்பொழுது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இதனால், தரமான தங்கத்தினால் செய்யப்பட்ட நகைகளாக இருந்தாலும் அவை நிறம் மாறுவதற்கும், வலுவின்றி தொய்வடைந்து அறுபடுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். நகைகளை அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்வதையும் தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி செய்யும் போது வெளிப்படும் அதிகப்படியான வியர்வையானது நகைகளில் படிந்து நகைகளின் பொலிவைக் குறைத்துவிடும்.சிறிய நகையாகவே இருந்தாலும் உடற்பயிற்சியின்போது அவற்றை அணிவதை தவிர்க்க வேண்டும்.

    இப்பொழுது வளையல், கம்மல், மோதிரம், நெக்லஸ் மற்றும் மாலைகளை வைப்பதற்கு தனித்தனியாக வடிவமைக்கப்பட்ட நகை பெட்டிகளை நகைக்கடைகளிலேயே விற்பனை செய்வதைப் பார்க்க முடிகின்றது.நான்கு ஜோடி கம்மல் முதல் ஆறு ஜோடி, 12 ஜோடி என பல ஜோடிகளை ஒரே பெட்டியில் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது போல் நகை பெட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை மடக்கி வைத்துக் கொள்வது போல் வடிவமைத்திருக்கிறார்கள். இவ்வாறு மடக்கும் பொழுது கம்மல்கள் ஒன்றுடனொன்று உரசாமல் இருப்பதுபோல் அதன் வடிவமைப்பு இருக்கின்றது.

    மேலும் இடத்தை அடைக்காமல் சிறிய இடத்திலேயே இதுபோன்ற பெட்டிகளில் அதிகமான நகைகளை வைத்துக்கொள்ள முடியும். மேலும் வெளியூர்களுக்கு நகைகளை எடுத்துச் செல்லும் பொழுதும் இந்தப் பெட்டிகள் மிகவும் கனக்கச்சிதமாக நம்முடைய கைப்பைகளில் அடங்கிவிடும்.இதேபோல் வளையல்கள், மோதிரம், மூக்குத்தி, நெக்லஸ் போன்றவற்றை ஒரே பெட்டியில் தனித்தனியாக வைத்துக் கொள்வதற்கு உண்டான இடங்களுடன் வந்திருக்கும் பெட்டிகளும் நம்முடைய நகைகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கும், வீட்டில் எந்தச் சேதமும் ஏற்படாமல் வைத்துக் கொள்வதற்கும் உண்டான சிறந்த வழிகளில் ஒன்றாகும்.எவ்வளவு அவசரமாக இருந்தாலும் தங்க நகைகளை, இமிடேஷன் நகைகளுடன் வைப்பதை தவிர்க்க வேண்டும்.ஆண்டுக்கு ஒரு முறையாவது அனைத்து நகைகளையும் சரிபார்த்து அவற்றுக்கு பாலிஷ் தேவைப்பட்டால் கடைகளில் கொடுத்து பாலிஷ் செய்து வைத்துக்கொள்ளலாம்.

    • நகாசு வேலைப்பாடு தென்னிந்தியாவில் இருந்து உருவானது என்று கூறப்படுகின்றது.
    • இந்த டிசைன்கள் அற்புதமாக, தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.

    தங்க நகைகளில் போல்கி வேலைப்பாடு, பச்சிகம் வேலைப்பாடு, மீனாகாரி வேலைப்பாடு,குந்தன் வேலைப்பாடு, ஜாடு வேலைப்பாடு, தந்த வேலைப்பாடு, ஆன்டிக் வேலைப்பாடு மற்றும் டெம்பிள் வேலைப்பாடு என பல வேலைப்பாடுகள் இருந்தாலும் நகாசு வேலைப்பாடு தனக்கென ஒரு முத்திரையை பதித்திருக்கின்றது என்பதை மறுக்க முடியாது. சிக்கலான டிசைன்களை மிகவும் அழகாக நகைகளில் செதுக்கிக் கொண்டுவரும் வேலைப்பாடு நகாசு என்று அழைக்கப்படுகின்றது. இதில் பெரும்பாலும் கோவில் வடிவமைப்புகள், பறவைகள் மற்றும் விலங்குகள் போன்றவை இடம்பெறுவதைப் பார்க்க முடியும். இவ்வகை நகாசு வேலைப்பாடு தென்னிந்தியாவில் இருந்து உருவானது என்று கூறப்படுகின்றது.இந்த வேலைப்பாட்டில் மிகவும் கடினமான வளைவுகள் மற்றும் வடிவங்களை மிகவும் தத்ரூபமாக கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு நகை வடிவமைப்பாளர் செயல்படுகிறார்கள்.

    இந்த நகைகளைத் தயாரிப்பதில், ஒவ்வொரு படியும் மிகவும் நுட்பமானதாகக் கூறப்படுகிறது.அதாவது ஓவியம் வரைதல், செதுக்குதல், வேலைப்பாடு செய்தல், பின்னர் வேலைப்பாடு செய்தவற்றை முழுமையாக தாக்கல் செய்தல் போன்ற நான்கு படிகளை இந்த வேலைப்பாடு கொண்டிருக்கின்றது.

    முதல் படியாக எந்த டிசைனில் நகை செய்ய வேண்டுமோ அந்த டிசைனை பேப்பர் மற்றும் தங்கத்தாளில் வரைகிறார்கள்.தங்கத் தாளில் வரைந்த பிறகு, முழு வடிவமைப்பு மற்றும் முக்கிய அம்சங்களைத் தெளிவாகக் காண்பிக்கும் வகையில் தங்கத்தாள் சுத்தியலால் அடிக்கப்படுகிறது (உதாரணமாக தெய்வங்களின் முகக் கோடு, கைகள் மற்றும் கால்களின் வளைவுகள், மாலை, பீடம் போன்ற முக்கிய அலங்காரங்களை தெளிவாக காண்பிக்கும் விதத்தில் சுத்தியலால் அடிக்கப்படுகிறது). தாளை சுத்தியலால் அடித்த பிறகு, அதன் உண்மையான தோற்றம் மற்றும் அதன் மாற்றம் ஆகியவை தோராயமாக தீர்மானிக்கப்படுகின்றது. மிகச்சிறந்த நகை வடிவமைப்பாளரால் மட்டுமே இதுபோன்ற நகாசு வேலைகளை மிகவும் சிறப்பாகவும்,கூர்மையாகவும், குறிப்பிட்ட நேரத்திலும் செய்து கொடுக்க முடியும்.

    எந்தக் கலையையும் போலவே,இந்தக் கலையிலும் வடிவமைக்கப்படும் முகமானது நகையின் ஆன்மாவை உருவாக்குகிறது. நகாசு வேலைப் பாட்டில் முக அம்சங்களை முடிந்தவரை நன்றாக உருவாக்க வேண்டும் என்பதில் நகை வடிவமைப்பாளர்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள். மிகவும் திறமைவாய்ந்த, அனுபவம் நிறைந்த நகை வடிவமைப்பாளர்களால் மட்டுமே இந்த வேலைப்பாட்டை மிகவும் சிறப்பாகச் செய்ய முடியும் என்று கூறப்படுகின்றது. மகிழ்ச்சியான, கூர்மையான மற்றும் அழகான டிசைன்களின் வெளித்தோற்றம் அருமையாக வருவதற்காக எடுத்துக்கொள்ளப்படும் முயற்சிதான் நகைகளின் இறுதி மதிப்பை உயர்த்துகின்றது.

    நகாசு வேலை முடிவடைந்த பிறகு, அடுத்தபடியாக அதிகப்படியாக இருக்கும் தங்கத் தாள்கள் கத்தரித்து அகற்றப்படுகின்றன. இவை கூறுவதற்கு எளிதாக இருந்தாலும் அவற்றைக் கத்தரிக்கும் பொழுது கவனமாக இல்லையென்றால் சிறிய தவறும் அதிகமாக முயற்சி எடுத்து சிறப்பாக செய்த வேலையை கெடுத்து விடக் கூடியதாக அமைந்து விடும்.

    நகாசு வேலை செய்யப்பட்ட பகுதியைத் தவிர அதிகப்படியாக இருக்கும் தங்கத் தாள்கள் கத்தரித்து எடுக்கப்பட்ட பிறகு வடிவமைக்கப்பட்ட டிசைன் பகுதியின் பின்புறத்தை மூட வேண்டும். இல்லையென்றால் மிகவும் மெல்லிய தங்க தாளில் வடிவமைக்கப்பட்ட டிசைன் வளைந்து நெளிந்து போவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.பின்புறம் மூடக்கூடிய தங்கத் தாளின் தடிமன் டிசைன் செய்யப்பட்ட அளவிற்கு ஏற்ப மாறுபடும்.டிசைனின் பின்புறம் மூடுதல் முடிந்ததும், கரடுமுரடான விளிம்புகள் மென்மையாக்கப்பட்டு,இறுதியாக நகைகள் சுத்தம் செய்யப்பட்டு மெருகூட்டப்படும். அதைத் தொடர்ந்து நகைகளுக்கு கவர்ச்சியான தோற்றத்தைக் கொடுக்க ஒரு சிறப்பான பழங்கால பாலிஷ் உபயோகப் படுத்தப்படுகின்றது.

    மிகவும் நுட்பமான இந்த நகாசு வேலைப்பாட்டில் வரும் டாலர்கள் மிகவும் சிறப்பாகக் கூறப்படுகின்றன.இரண்டு மயில்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டி இருப்பது போல் செய்யப்பட்டிருக்கும் டாலரில் கெம்ப்,வெள்ளை மற்றும் பச்சை கற்கள் பதித்து நடுவில் பெரிய சான்ட் ஸ்டோன் வைத்து டாலரின் கீழ்ப்புறத்தில் சிறிய தங்க குண்டுகள் தொங்குவது போல் வடிவமைக்கப்பட்டிருப்பது அபாரமாக இருக்கிறது.

    கிருஷ்ண பகவான் குழல் ஊத அவரின் இருபுறமும் கோபியர்கள் நடனமாட பின்புறம் அகன்று விரிந்திருக்கும் மரம் அதனைச் சுற்றிலும் கற்கள் பதிக்கப்பட்டு இருப்பதுபோல் செய்யப்பட்டிருக்கும் மனோகரி நகாசு வேலைப்பாடுடன் உருவாக்கப்பட்டிருக்கும் டாலரை விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது என்று சொல்லலாம். மாங்காய் டிசைனின் நடுவில் தாமரை மலரில் அமர்ந்தவாறு லக்ஷ்மி வீற்றிருக்க அதனைச் சுற்றிலும் வண்ணக் கற்களாலான மயில்கள் தோகைகளை தொங்க விட்டது போல் அமர்ந்திருப்பது இந்த வேலைப்பாட்டின் சிறப்பிற்கு மற்றொரு உதாரணம்.

    அன்னப்பறவையின் மேல் அம்மன் அமர்ந்திருப்பது போன்றும், லக்ஷ்மியின் பல்வேறு அம்சங்களையும் நகாசு வேலைப் பாட்டில் மிகவும் அற்புதமாக வடிவமைத்திருக்கிறார்கள். திரிசங்கு ஆபரணம், கஜலட்சுமி நெக்லஸ், தூரிகா நெக்லஸ், கண்டி நகாசு நெக்லஸ், ஊசி நெக்லஸ், ஆதிரா காசு நெக்லஸ், சிந்தூரி கண்டி நெக்லஸ் ,ஸ்வர்ணமுகி நெக்லஸ், லக்ஷ்மி மாங்காய் நெக்லஸ், சந்தியாபரணம் போன்றவை நகாசு வேலைப்பாடுடன் செய்யப்படும் நெக்லஸ்களுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றன.

    கருடன் தோற்றத்தில் வரும் கை விரல் மோதிரம் மற்றும் சாரி பின்களும் நகாசு வேலைப்பாட்டில் மிகவும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நகாசு வேலைப்பாட்டில் வரும் ஒட்டியாணங்களுக்கு ஈடு இணை வேறு எதுவும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு டிசைன்கள் மிகவும் அற்புதமாக, தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.

    கை வளையல்கள் என்று எடுத்துக்கொண்டால் அன்னப்பறவை, மயில், லட்சுமி, விநாயகர் என அனைத்தையும் மிகவும் அழகாக நகாசு வேலைப் பாட்டில் தங்கத்தில் கற்கள் பதித்து வடிவமைத்திருக்கிறார்கள். இத்தகைய வேலைப்பாட்டுடன் வரக்கூடிய இந்த நகைகளுக்கு முன்னால் வேறு எந்த நகையும் போட்டி போட முடியாது என்று சொல்லும் அளவுக்கு இந்த நகைகளின் வேலைப்பாடு மிகவும் அம்சமாக இருக்கின்றது.

    கெம்பு கற்களைப் பதித்து செய்யப்பட்டிருக்கும் ஜிமிக்கிகள், பச்சை, நீலம் என கற்களைப் பதித்து செய்யப்பட்டிருக்கும் அருமையான வேலைப்பாட்டுடன் கூடிய நகாசு ஜிமிக்கிகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எனலாம். இவை மட்டுமல்லாது நகாசு வேலைப்பாட்டுடன் வரும் நெக்லஸ்கள், ஹாரங்கள்,வங்கிகள் மற்றும் தலை அலங்கார நகைகளையும் பார்ப்பவர்கள் கட்டாயம் வாங்காமல் இருக்க மாட்டார்கள்.

    மிகவும் நுணுக்கமான வேலைப்பாட்டுடன் செய்யக்கூடிய எந்த ஒரு வேலையையும் இது நகாசு வேலை என்று இன்றளவும் மக்கள் குறிப்பிடுவதைப் பார்க்க முடியும்.

    • நகைக்கு பதில் பேக்கில் கூலாங்கற்களை வைத்து கொடுத்தனர்.
    • வீட்டிற்கு வந்து பேக்கில் நகைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாதாக்கோட்டை சாலை வெற்றி நகரை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி அமுதா (வயது 65). சம்பவத்தன்று இவர் பால் வாங்குவதற்காக வீட்டில் இருந்து வெளியே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது வைரம் நகரில் அவர் சென்றபோது அங்கு இருந்த 2 மர்ம நபர்கள், நகைகளை கழுத்தில் அணிந்து இருக்காதீர்கள். யாராவது திருடி கொண்டு போய் விடுவார்கள்.

    எங்களிடம் கழற்றி கொடுங்கள். நாங்கள் பாதுகாப்பாக பேக்கில் வைத்து தருகிறோம் என அமுதாவிடம் கூறினர். இதனை உண்மை என்று நம்பிய அமுதா தான் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை கழட்டி கொடுத்தார்.

    பின்னர் அந்த மர்ம நபர்கள் அமுதாவின் கவனத்தை திசை திருப்பி பேக்கில் கூலாங்கற்களை வைத்து கொடுத்தனர். வீட்டிற்கு வந்து பார்த்தபோது பேக்கில் நகைகள் இல்லாததைக் கண்டு அமுதா அதிர்ச்சி அடைந்தார்.

    அப்போதுதான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்தார்.

    இது குறித்து அவர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இவ்வகை நகைகள் நீண்ட நாட்களுக்கு புதிது போலவே இருக்கும்.
    • அனைத்து வகையான நகைகளும் இந்த முறையில் தயாரிக்கப்படுகின்றன.

    தங்கத்தின் மீது யாருக்குத் தான் ஆசை இருக்காது? ஆனால், எல்லா காலங்களிலும் தொடர்ந்து தங்க ஆபரணங்களையே பயன்படுத்த முடியுமா? தொடர்ந்து பயன்படுத்துவதால், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தங்க வளையல் வளைந்து நெளிந்து தேய்ந்து போகிறது. ஒவ்வொரு முறையும் வளையல் மாற்றும் போது செய்கூலி, சேதாரம் எல்லாம் போட்டு கூட்டி கழித்து வயிற்றில் புளியைக் கரைப்பார்கள். அதனால், அன்றாட பயன்பாட்டிற்காக பலரும் இப்போது, தங்க நகைகளுக்கு மாற்றாக பெண்டட்டுகள் போன்ற செயற்கை நகைகள் பக்கம் திரும்பி விட்டனர்.

    தங்கத்தின் விலை அதிகரித்து வரும் இவ்வேளையில், பல பெண்களின் விருப்பமாக இருப்பது 1 கிராம் தங்க நகைகள். பித்தளை, தாமிரம் மற்றும் உலோகக் கலவைகளின் மேல் 1 கிராம் தங்கத்தை மேல் பூச்சாகப் பூசி இவை தயாரிக்கப்படுகின்றன.

    தங்க நகைகள் போலவே பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும் கண்களைக் கவரும் 1 கிராம் தங்க நகைகள், விலை உயர்ந்த நகைகளுக்குச் சிறந்த மாற்றாகும். இவ்வகை நகைகள் நீண்ட நாட்களுக்கு புதிது போலவே இருக்கும். தினசரி அணியக்கூடிய எளிமையான வடிவமைப்பு முதல் மணப்பெண்களுக்கான ஆடம்பரமான டிசைன்கள் வரை, கம்மல், வளையல், செயின், ஆரம், நெக்லஸ், மோதிரம், கொலுசு என அனைத்து வகையான நகைகளும் இந்த முறையில் தயாரிக்கப்படுகின்றன.

    ஒன் கிராம் கோல்டு என்று விற்கப்படும் நகைகளில் மற்ற உலோகத்தின் மேல் தங்க நிறத்தில் முலாம் பூசி விற்கிறார்கள். சருமத்தின் மேல் இருக்கும் வியர்வை மற்றும் அழுக்குகள் மீது இந்த உலோகம் உரசும் போது ஏற்படும் எதிர்வினையாலும் ஒவ்வாமை ஏற்படக்கூடும். உலோக ஒவ்வாமை இருப்பவர்கள் கூடியவரை செயற்கை நகைகள் அணிவதை தவிர்க்கலாம்.

    அப்படியும் விருந்து, விசேஷங்களில், உறவினர் வீடுகளுக்கு செல்ல நேர்கையில் என்று செயற்கை நகைகளை அணிந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் சில இருக்கின்றன. இவற்றை கடைபிடித்தால், சருமத்தைப் பாதுகாக்கலாம். 

    செயற்கை நகைகளை போட்டுக் கொண்டு வெளியில் சென்று விட்டு, வீட்டுக்கு வந்தவுடன் நன்றாக சுத்தம் செய்து உலர வைத்து, காட்டன் உள்ள பெட்டிகளில் காற்றுப் புகாமல் இறுக்கமாக மூடி வைத்துவிட வேண்டும். 

    தங்கமுலாம் பூசிய நகைகள் அணிந்துள்ள சருமப் பகுதியில் பர்ஃப்யூம் உபயோகிக்க வேண்டாம். செயற்கை நகைகளை அணிவதற்கு முன் அவை சருமத்தில் படும் இடங்களில் ஈரம் இல்லாமல், துடைத்து உலர வைத்த பின் அணிவது நல்லது.

    ×