search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224519"

    • தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் தங்கி கல் உடைக்கும் தொழில் செய்து வந்தார்.
    • சமைத்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

    பரமத்தி வேலூர்:

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அரஹாசநல்லி மன்னப்பன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம் (வயது 60). இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா எஸ். வாழவந்தியில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் தங்கி கல் உடைக்கும் தொழில் செய்து வந்தார்.

    இந்நிலையில் ரத்தினம் சமைத்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கல்குவாரி உரிமையாளர் ராஜ்குமார், ரத்தினத்தின் மகள் வெண்ணிலாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார் .தகவலின் அடிப்படையில் ரத்தினத்தின் மகன் விஜயகுமார் மற்றும் அவரது சகோதரி வெண்ணிலா ஆகிய இருவரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது அவர்களது தந்தை ரத்தினம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து 2 பேரும் எஸ். வாழவந்தியில் உள்ள கல்குவாரிக்குச் சென்று அங்கு அவரது தந்தையுடன் வேலை பார்த்தவர்களிடம் விசாரித்த போது ரத்தினம் காலை 9 மணி அளவில் சமையல் செய்து கொண்டிருந்தபோது மயங்கி விழுந்ததாகவும், அங்கு வந்த கல்குவாரியின் உரிமையாளரின் தாயார் சாந்தாமணி சத்தம் போடவே ரத்தினத்துடன் வேலை பார்க்கும் ராஜேந்திரன் மற்றும் குழந்தைவேல் ஆகியோரின் உதவியுடன் ரத்தினத்தை கல்குவாரி உரிமையாளர் ராஜ்குமார் அவரது காரில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், கூறியுள்ளனர்.

    இதுகுறித்து விஜயகுமார் தனது தந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பரமத்தி போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தனியார் கல்லூரி காவலாளி கார் மோதி பலியானார்.
    • ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆஸ்டின்பட்டி போலீஸ் சரகம் தனக்கன்குளம் வெங்கல மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 55). இவரது மனைவி சரஸ்வதி .

    மாரியப்பன் மதுரையில் உள்ள கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு சைக்கிளில் சமயநல்லூர்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்

    அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாரியப்பன் ரத்த வெள்ள த்தில் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீ சார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து சரஸ்வதி கொடுத்த புகாரின்பேரில் கார் டிரைவர் திண்டு க்கல் மாவட்டம் சின்னாள பட்டியை சேர்ந்த தினேஷ் பாபு மீது ஆஸ்டின் பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தவறி விழுந்து 2 வயது சிறுமி பரிதாபமாக இறந்தார்.
    • மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள ஆனையூரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 27). இவரது மகள் ஜனனி (2). இவளுக்கு தலையில் நீர்க்கட்டி இருந்தது. இதற்காக சிறுமி சிகிச்சை பெற்று வந்தார்.

    சம்பவத்தன்று ஜனனி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தாள். இதில் சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடிய சிறுமியை குடும்பத்தினர் மீட்டு உடனே மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜனனி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை அருகே கிச்சன் நிறுவனத்தில் வேலை பார்த்த பெண் பரிதாபமாக இறந்தார்.
    • இது தொடர்பாக நிறுவன உரிமையாளர்கள் 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    சிவகங்கை மாவட்டம், ஈச்சநேரியை சேர்ந்தவர் சுகப்பிரியா. இவர் மதுரை அவனியாபுரம் சந்தோஷ் நகரில் உள்ள ஒரு கிச்சன் உதிரி பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் சுகப்பிரியா நேற்று இரவு பணியில் இருந்த இருந்தார். அப்போது அவருக்கு விபத்தில் படுகாயம் ஏற்பட்டது. அவரை சகஊழியர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக சுகப்பிரியாவின் சகோதரர் முத்துவீரன் அவனியாபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகார் மனுவில் கிச்சன் உபரி பொருட்கள் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் அப்துல் மஜீத் மற்றும் மேற்பார்வையாளர் மீரா மைதீன் ஆகிய இருவரும் பாதுகாப்பு கவசம் இன்றி ஊழியர்களை பணியில் ஈடுபடுத்தினர். இதன் காரணமாக என் சகோதரி மரணம் அடைந்து உள்ளார்.

    எனவே போலீசார் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதன் அடிப்படையில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிச்சன் உபரி பொருட்கள் நிறுவன உரிமையாளர் அப்துல் மஜீத் மற்றும் சூப்பர்வைசர் மீரா மைதீன் ஆகிய 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
    • தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு மல்லன் விளையைச் சேர்ந்தவர் அனீஸ் (வயது 29.

    இவர் கடந்த மாதம் 3-ந் தேதி தனது நண்பர் கோட்டுவிளையைச் சேர்ந்த ரெஜின் (21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் தக்கலை நோக்கிச் சென்றார்.

    கேரளபுரம் இசக்கி யம்மன் கோவில் அருகே சென்ற போது, எதிரே தக்கலை மக்காபாளையம் சாகுல் அமீது என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து உள்ளார்.

    எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. அப்போது அங்கு வந்த கேரளபுரம் கண்ணன் மோட்டார் சைக்கிளும் இந்த விபத்தில் சிக்கியது.

    இதில் அனீஸ், சாகுல் அமீது, கண்ணன் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    விபத்து குறித்து சாகுல் அமீது கொடுத்த புகாரின் பேரில், தக்கலை போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த அனீஸ் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.


    • கடந்த 10 ஆண்டுகளாக லெட்சுமணன் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்.
    • மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வந்தார்.

    வெள்ளகோவில் :

    முத்தூர் அருகே உள்ள முத்துக்கமங்கலத்தில் வசிப்பவர் லெட்சுமணன் வயது (38,)இவர் கடந்த 10 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு முத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வந்த நிலையில் நேற்று பகல் 1 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத போது லட்சுமணன் வீட்டின் விட்டத்தில் கயிறு மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்து போன லெட்சுமணனுக்கு புதன்செல்வி (33) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    • சிக்கன் சாப்பிட்டுவிட்டு, மது அருந்தி விட்டு அவர் இரவு படுக்க சென்று விட்டார். பின்னர் காலை வேலைக்கு செல்ல அவரை அவரது நண்பர்கள் எழுப்பிய போது உமேஷ் ராம் எழுந்திருக்கவில்லை.
    • இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெருந்துறை:

    பீகார் மாநிலம் நிர்பூர் பகுதியை சேர்ந்தவர் உமேஷ் ராம் (வயது 42). இவரும் இவருடைய அண்ணன் தினேஷ் ராம் என்பவரும் பெருந்துறை, சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.

    சம்பவத்தன்று இரவு வேலையை முடித்துவிட்டு உமேஷ் ராம் தொழிலாளர்கள் தங்கம் அறைக்கு வந்துள்ளார். பின்னர் இரவு சிக்கன் சாப்பிட்டுவிட்டு, மது அருந்தி விட்டு அவர் இரவு படுக்க சென்று விட்டார். பின்னர் காலை வேலைக்கு செல்ல அவரை அவரது நண்பர்கள் எழுப்பிய போது உமேஷ் ராம் எழுந்திருக்கவில்லை.

    உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதா கூறினர். இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வாகனத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.
    • திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.

     புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை மேலப்பட்டியை சேர்ந்த குழந்தைவேல் மகன் பாலமுருகன் (வயது 34) விவசாயியான இவருக்கு, திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர் இரு சக்கர வாகனத்தில் மாங்கோட்டையிலிருந்து எம்-தெற்கு தெரு வழியாக சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்தார்.இதில் பலத்த காயம் அடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாலமுருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்வம் குறித்து ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள காப்பரத்தாம் பட்டி. கணபதி நகர் பகுதியை சேந்தவர் கிணற்றில் விழுந்து பள்ளி மாணவன் பாலியானர்.
    • இவர் கே ஆர் தோப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்துவந்தார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகிலுள்ள காப்பரத்தாம் பட்டி .கணபதி நகர் பகுதியை சேந்தவர் வேல்முருகன்.

    இவருடைய மகன் சுதர்சன கிருஷ்ணன் (வயது 16). இவர் கே ஆர் தோப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்துவந்தார்.

    இந்நிலையில் பள்ளியில் சிறப்பு வகுப்பிற்கு சென்ற மாணவர் மதியம் பள்ளியின் அருகில் உள்ள ரத்தினவேல் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் இருந்த கிணற்றில் இறங்கி குளித்ததாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக சுதர்சன கிருஷ்ணன் கிணற்றில் மூழ்கி பலியானான். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்பு வாகனத்தை வரவழைத்து மாணவன் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர். இதுபற்றி தாரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமங்கலம் அருகே வாலிபர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
    • நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள வடகரை கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் கோகுல்(21). இவர் என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார்.

    இவரது நண்பர்கள் கார்த்திக், பொன்ராசு,சிவராம பாண்டி, லோகேஷ், ராகுல் ஆகிய 6 பேரும் திருமங்கலம் அருகே உள்ள சொக்கநாதன் பட்டியில் செல்லையா என்பவருடைய தோட்ட கிணற்றில் குளிக்கச் சென்றனர்.

    அப்போது கோகுல் திடீரென்று கிணற்றில் மூழ்கினார். நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் கோகுல் தண்ணீரில் மூழ்கி பலியானார். இது–குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் 60 அடி ஆழ கிணற்றில் மூழ்கிய கோகுலின் உடலை 6 மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்டனர்.

    அவரது உடல் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிேசாதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.  

    • குடும்பத்தகராறில் தீக்குளித்த கணவர் உயிரிழந்தார்
    • ஒரு மாதகாலமாக பணி ஏதும் இல்லாததால் வீட்டில் இருந்துள்ளார்.

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் கருமங்காடு பகுதியை சார்ந்தவர் அழகப்பன். இவருக்கு நிரோஷா என்ற மனைவியும் இரண்டு ஆண்குழந்தைகளும் உள்ளனர். அழகப்பன் ஈரோட்டில் கூலி வேலை பார்த்துவந்துள்ளார். கடந்த ஒரு மாதகாலமாக பணி ஏதும் இல்லாததால் வீட்டில் இருந்துள்ளார். இதனால் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த அழகப்பன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் 90 சதவீத தீக்காயத்துடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அழகப்பன். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பொன்னமராவதி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்துள்ளார்
    • ராஜாகமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    ராஜாக்கமங்கலம் அருகே காக்கா தோப்பை சேர்ந்தவர் சுயம்புராஜன் இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜலக்ஷ்மி (வயது 38). இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வருவதாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று இவருக்கு திடீரென வலிப்பு நோய் வந்ததாகவும் உடனடியாக அவரை உறவினர்கள் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த தாகவும் கூறப்படுகிறது. அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்துள்ளார்

    இது குறித்து தகவல் இருந்த ராஜாகமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×