search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224519"

    • நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே வயிற்று வலியால் மாணவி திடீர் பலியானார்.
    • இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததால் தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அக்கலாம்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்.இவரது மகள் கவிப்பிரியா (வயது 25). இவர் எம்.எஸ்.சி படித்து‌ விட்டு கடந்த 3 வருடங்களாக வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததால் தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயிற்றுவலிக்காக மாத்திரை சாப்பிட்டுள்ளார். ஆனால் கவிப்பிரியாவிற்கு அதிகமாக வயிற்றுவலி வந்துள்ளது.இது குறித்து அவர் அவரது தந்தைக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

    உடனடியாக‌ வீட்டிற்கு வந்த அவரது தந்தை கிருஷ்ணன் கவிப்பிரியாவை நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கவிப்பிரியா உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தியாகதுருகம் அருகே நண்பர்களுடன் கோவிலுக்கு சென்ற மாணவன் மரணம் அடைந்தார்.
    • ஆஞ்சநேயர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்று கொண்டிருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே சித்தலூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் மணிகண்டன் (வயது 17), 10- ஆம் வகுப்பு முடித்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களான குமார் மகன் சந்தோஷ் (17), சங்கர் மகன் கார்த்திக் (17) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சங்கராபுரம் அருகே உள்ள ராவத்தநல்லூர் ஆஞ்சநேயர்

    கோவிலுக்கு சாமி கும்பிட சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை மணிகண்டன் ஓட்டினார். நண்பர்கள் இருவரும் பின்னால் அமர்ந்து வந்தனர். இந்நிலையில் கலைநல்லூர் அருகே சென்றபோது தனக்கு முன்னால் சென்ற காரை மணிகண்டன் முந்திச் செல்ல முயன்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் காரின் மீது மோதியதில் கீழே விழுந்ததாகவும் அப்போது எதிர்திசையில் வந்த மினி பேருந்து இவர்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த மணிகண்டன், சந்தோஷ், கார்த்திக் ஆகியோர் படுகாயமடைந்தனர்.இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மணிகண்டன் இறந்து போனார். சந்தோஷ், கார்த்திக் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

    இதுகுறித்து மணிகண்டன் தந்தை பெரியசாமி கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரபேக்காள் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த குழந்தை இறந்தது.
    • திருப்பாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    உச்சபரம்புமேடு, ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த சேர்ந்தவர் மனோ. கூலித் தொழிலாளி. இவருக்கு ஒன்றரை வயதில் அஸ்விதா என்ற பெண் குழந்தை இருந்தது. சம்பவத்தன்று காலை அஸ்விதா மாடிப்படிக்கட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தது.

    இதில் பலத்த காயமடைந்த குழந்தையை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் காண்பித்தனர். அந்த குழந்தைக்கு சிகிச்சை செய்த டாக்டர்கள், குழந்தைக்கு ஒன்றும் இல்லை, கவலைப்பட வேண்டாம்' என்று கூறி அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் குழந்தை நேற்று நள்ளிரவு திடீரென வீட்டில் மயங்கி விழுந்தது. உறவினர்கள் குழந்தையை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அஸ்விதா பரிதாபமாக இறந்தாள். திருப்பாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களாக அவர் வேலைக்கு சரிவர செல்லாமல் குடித்து விட்டு சுற்றி கொண்டு இருந்தார்.
    • வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    பீகார் மாநிலம் பெருசு ராய் மாவட்டம் கிசான்பூர் பகுதியை சேர்ந்தவர் சுனில்சர்மா (40). இவர் ஈரோடு, நசியனூர் ரோடு கைகாட்டிவலசில் உள்ள கிளாஸ் கம்பெனியில் கார்பென்டராக வேலை பார்த்து அங்கேயே தங்கியிருந்து வந்தார். சுனில் சர்மாவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவர் வேலைக்கு சரிவர செல்லாமல் குடித்து விட்டு சுற்றி கொண்டு இருந்தார். நேற்று இரவு அதே பகுதியில் ரோட்டோரம் இருந்த கல் மேல் உட்கார்ந்து இருந்துள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த சுனில் சர்மா நிலைதடுமாறி கழிவுநீர் கால்வாயில் விழுந்தார். இதில் மூச்சு திணறி, பலத்த காயம் ஏற்பட்டு இறந்து விட்டார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுனில்சர்மா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ருட்டியில் ஓ.பி.எஸ். ஆதரவாளர் திடீர் மாரடைப்பால் இறந்தார்,
    • ஓபிஎஸ் ஆதரவாக பண்ருட்டி 4 முனை சந்திப்பில் குடும்பத்துடன் உடலில் மண் எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயற்சியில் ஈடுபட்டவர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மாளிக்கம்பட்டு ஊராட்சி புது பிள்ளையார் குப்பத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 45), அ.தி.மு.க. மேலவை அமைப்புபிரதிநிதி.இவர் ஓ.பி.எஸ். ஆதரவாளர். அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.சை ஓரம் கட்டுகிறார்கள் என நினைத்து இவர் கடந்த 2 நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்தார்.

    நேற்று காலைஅ.தி.மு.க. பொதுக்குழுகூட்டத்தை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இவர் இதற்கு முன்பு ஓ.பி.எஸ். தர்மயுத்தம் நடத்தியபோது ஓபிஎஸ் ஆதரவாக பண்ருட்டி 4 முனை சந்திப்பில் குடும்பத்துடன் உடலில் மண் எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயற்சியில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாடியில் இருந்து விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • கட்டிட வேலை பார்த்து வந்தார்

    கரூர்:

    கரூர் தெற்கு காந்திகிராமம் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் துரைசாமி (வயது 45). கட்டிட வேலை பார்த்து வந்த இவர், சம்பவத்தன்று வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த துரைசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி துரைசாமி உயிரிழந்தார். இதுகுறித்து தான்தோன்றிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஓமலூரை அடுத்த காமலாபுரத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது பஸ் மோதி முதியவர் பாலியானார்.
    • ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓமலூர்:

    ஓமலூரை அடுத்த காமலாபுரம் கீழ்வீதி பகுதியை சேர்ந்தவர் சின்னப்பையன் (வயது 72). இவர் சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் காமலாபுரம் விமான நிலையம் அருகே உள்ள முனியப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் ரோட்டை கடக்க முயன்றுள்ளார்.அப்போது தர்மபுரியில் இருந்து சேலத்திற்கு வந்த அரசு பஸ் சின்னப்பையன் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சின்னப்பையன் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராசிபுரம் அருகே அடையாளம் தெரியாதவர் வாகனம் மோதி தொழிலாளி பலியானார்.
    • அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள சக்தி நகரைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது60). இவர் ராசிபுரம் அருகே உள்ள பட்டணத்தில் ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு ஓட்டலில் வேலையை முடித்துக்கொண்டு டவுன் பஸ்சில் வீட்டுக்குச் சென்றார்.

    ஆண்டகளூர் கேட் அருகே உள்ள சக்தி நகர் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய அவர் வீட்டுக்கு செல்வதற்காக ரோட்டை கடந்து சென்றார்.அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த கந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்தில் இறந்த கந்தசாமிக்கு பழனியம்மாள் (55) என்ற மனைவியும் ரேவதி (30), மஞ்சுளா (28) என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. 

    • கிணற்றில் குளிக்கச்சென்ற வாலிபர் உயிரிழந்தார்.
    • கிணற்றில் பிணமாக மிதந்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் கிராமத்தில் வசித்து வருபவர் ராம்குமார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் அதே பகுதியை சேர்ந்த ஜவகர்(வயது 34) குளிக்க சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், கிணறு உள்ள பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது கிணற்றில் ஜவகர் பிணமாக மிதந்தார்.

    இதுபற்றி அவர்கள் பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து பார்வையிட்டனர். மேலும் இது பற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் கிணற்றில் இறங்கி ஜவகரின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    • மதுரை அருகே கீழே தவறி விழுந்து பெண் பலியானார்.
    • மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் தெற்குத் தெரு சேர்ந்தவர் பதினெட்டாம்படி கருப்பு. இவருடைய மனைவி வைரமணி (வயது56).

    இவர் கடந்த 15-ந் தேதி வீட்டின் வெளியே இருந்த திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது திண்ணையிலிருந்து வைரமணி கீழே விழுந்து விட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வைரமணி இறந்தார்.

    திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் அருகே குடும்பத் தகராறில் விளையாட்டாக விஷம் குடித்த பெண் பாலியானார்.
    • பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் அருகே உள்ள கொளக்காட்டுப்புதூரைச் சேர்ந்தவர் பிரனேஷ் (வயது 28) கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜோதி(25). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. 3 மற்றும் 5 வயதில் 2 மகன்கள் உள்ளனர்.

    பள்ளிக்கு செல்லும் தங்களது மகன்களுக்கு பள்ளி கட்டணம் செலுத்துவதற்கு ஜோதி தனது கணவர் பிரனேஷிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது கணவன்- மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.‌

    இந்த நிலையில் ஜோதி விளையாட்டாக கடந்த 15-ம் தேதி விஷம் குடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் திடீரென மயக்கமடைந்த அவரை கணவர் பிரனேஷ் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜோதி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோதிக்கு திருமணமாகி 6 வருடங்களே ஆனதால் திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசி விசாரணை நடத்தி வருகிறார்.

    விளையாட்டாக விஷம் குடித்து பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பெருந்துறை அருகே 50 அடி ஆழம் கொண்ட தோட்டத்து கிணற்றில் மூதாட்டி தவறி விழுந்து பலியானார்.
    • பெருந்துறை போலீசார் மூதாட்டி உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள கிரே நகர் பெரிய காடு பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ண கவுண்டர். இவரது மனைவி அம்மணியம்மாள் (வயது 88). கணவர் இறந்து விட்ட நிலையில் அம்மணியம்மாள் தனது மகன் துரைசாமி என்பவரது வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    துரைசாமி அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது தோட்டத்தில் சுமார் 50 அடி ஆழம் கொண்ட 10 அடி தண்ணீர் உள்ள தோட்டத்து கிணறு உள்ளது. நேற்று இரவு அம்மணியம்மாள் கிணற்றின் ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார்.

    உடனடியாக துரைசாமி பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி அம்மணியம்மாள் உடலை கயிறு கட்டி பிணமாக மீட்டனர்.

    பின்னர் பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் அம்மணியம்மாளின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×