search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224691"

    • விளையாட்டு உபகரணங்கள், எழுது பொருட்கள் உள்பட பல்வேறு கல்வி உபகரணங்கள் வழங்கல்.
    • பாட்டு போட்டி, பேச்சு போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசு.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த மேலநம்மங்குறிச்சி ஊராட்சி ஒன்றியதொடக்க ப்பள்ளியில் முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகள் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    அனைவரையும் தலைமையாசிரியர் மகாதேவன் வரவேற்றார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளைய ராஜா நேரு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து சிறப்புரையாற்றினார்.

    விழாவில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மேரி, கிராம கமிட்டி உறுப்பினர்கள், இல்லம் தேடி தன்னார்வலர்கள், பெற்றோர்கள், சத்துணவு ஊழியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திருமுகம் நேரு படத்தை பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

    அப்போது மேலநம்ம ங்குறிச்சி கிராம கமிட்டி உறுப்பினர்கள் பள்ளிக்கு தேவையான பீரோ, மேசை, நாற்காலி, மின்விசிறி, விளையாட்டு உபகரணங்கள், எழுது பொருட்கள் என சுமார் 25 ஆயிரம் மதிப்புள்ள பல்வேறு உபகரண பொருட்களை பள்ளிக்கு வழங்கினார். மேலும், பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகளும் வழங்கப்ப ட்டது.

    தொடர்ந்து,பாட்டு போட்டி, பேச்சு போட்டி களில் பங்கேற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு குலுக்கல் முறையில் விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. முடிவில் ஆசிரியர் கார்த்திக் நன்றி கூறினார்.

    • 6 கவுண்டர்களில் கல்லாவில் இருந்த பணம் திருட்டு.
    • இரண்டாவது தளத்தில் உள்ள லிப்ட் வழியாக உள்ளே சென்று பணம் திருட்டு.

    பேராவூரணி:

    பேராவூரணி அரசு மருத்துவமனை எதிரில் தனியாருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது.

    இந்த நிலையில் நள்ளிரவில் இங்கு வந்த மர்ம நபர்கள் மாடி வழியாக இறங்கி கடையில் உள்ள பொருட்களை திருடி உள்ளனர். மேலும், 6 கவுண்டர்களில் கல்லாவில் இருந்த ரொக்க பணம் ரூ.1 லட்சம் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பேராவூரணி இன்ஸ்பெக்டர் செல்வி சம்பவ இடத்திற்கு சென்று கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது இரண்டாவது தளத்தில் உள்ள லிப்ட் வழியாக உள்ளே சென்று பணம் திருடி சென்றது தெரியவந்தது.

    முகத்தை துணியால் மூடிய நிலையில் திருடிய நபர் பச்சை கலர் டி சர்ட் மற்றும் கருப்பு கலர் டிராயர் அணிந்து இருந்தார்.

    இது பற்றி மன்சூர் அலி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • கழிவு நீர்களை உடனடியாக அகற்ற வேண்டும்.
    • பழைய டயர்கள் கொசு உற்பத்தியாகும் பொருட்களை வைத்து கொள்ளக் கூடாது.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஒன்றியம் அக்க ரைவட்டம் ஊராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத் துறையுடன் இணைந்து அக்கரைவட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர், கண்ணையன் தலைமையில், அதம்பை சுகாதார ஆய்வாளர், எஸ், ராமநாதன் மற்றும் குழுவினர் இணைந்து ஊராட்சியில் இயந்திரம் மூலம் கொசு மருந்து 6 வார்டுகள் முற்றிலும் அடிக்கப்பட்டு கொசு ஒழிப்பு நடவடிக்கை, மற்றும் வீடுகளில் ஆங்காங்கே கழிவு நீர்களை உடனடியாக அகற்ற வேண்டும் வீட்டின் அருகே பழைய டயர்கள் கொசு உற்பத்தி ஆகும் பொருட்களை வைத்துக் கொள்ளக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • காலாவதியான பொருட்களை கண்டறிந்து அழிக்க வேண்டும்
    • பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை

    கன்னியாகுமரி:

    கண்ணணூர் ஊராட்சிக்குட்பட்ட வீராலிகாட்டு விளை பகுதியில் நேற்று மாலை மறைவான பகுதியில் ஒரு டெம்போவில் பேக்கரி பொருட்களை ரோட்டோரம் கொட்டி வைத்துவிட்டு மின்னல் வேகத்தில் டெம்போ சென்றது.

    சிறிது நேரத்தில் அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் ரோட்டோரம் சாக்லெட், பிஸ்கட் மற்றும் குளிர்பானங்களை கொட்டி இருந்ததை கண்டு பெட்டி பெட்டியாக வீட்டுக்கு எடுத்து சென்றனர். இது அந்த பகுதி முழுவதும் பரவியது. உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வந்த பார்த்தனர். அனைத்து பொருள்களும் காலாவதி யானவை என தெரிய வந்தது.

    உடனே அந்த பகுதி மக்கள் கண்ணணூர் ஊராட்சி மன்ற தலைவர் ரெஜினி விஜிலாபாய் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ் ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதற்கிடையில் மீண்டும் அதே இடத்திற்கு மற்றொரு டெம்போ காலா வதியான பேக்கரி பொருள் களை கொட்ட வந்தது. உடனே ஊராட்சி மன்ற தலை வரும், வார்டு உறுப்பி னர்கள் ஜெயா அனிதா, மற்றும் ஊர்மக்க ளும் சேர்ந்து வாகனத்தை சிறை பிடித்தார்கள்.

    உடனே திருவட்டார் போலீஸ் நிலையத்திற்கும், உணவு, பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும், கிராம நிர்வாக அதிகாரி களுக்கும், சுகாதார துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.

    அவர் கள் வந்து பார்த்து ஆய்வு செய்து போது வேர்க்கிளம்பி பகுதியை சேர்ந்த பேக்கரி கடையில் உள்ள காலாவதியான பொருள்கள் என்று தெரிய வந்தது. உடனே கடை யின் உரிமையாளர் வர வழைக்கப்பட்டனர்.

    கண்ணனூர் ஊராட்சி மன்றம் சார்பாக இரண்டு டெம்போக்களுக்கும் அபராதமாக ரூ.2100 விதிக்கப்பட்டது. அந்த பணம் உடனே பேக்கரி கடை உரிமையாளரிடம் இருந்து வசூலிக்கப்பட்டது.

    தீவிர விசாரணைக்கு பிறகு அந்த கடை உரிமை யாளரிடம் காலாவதியான பொருள்கள் அனைத்தும் அழிக்க வேண்டும் என்று எழுத்து பூர்மாக அதிகாரிகள் எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர்.

    சுமார் 3, 4 ஆண்டுகளாக ஒரு பேக்கரி கடையில் இவ்வளவு காலாவதியான பொருட் களை எப்படி பாது காத்து வைத்தார்கள் என்பது குறித்து உடனே மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதே மாதிரி மாவட்டம் முழுவதும் உள்ள பேக்கரி கடைகளிலும் உள்ள பொருட்களை ஆய்வு செய்ய வேண்டும். காலாவதியான பொருட்களை கண்டறிந்து அழிக்கவேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.

    • உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர்களுக்கு நெப்டிம் நிறுவன தொழில்நுட்ப வல்லுநர்களால் விளக்கி கூறப்பட்டது.
    • முடிவில் முதன்மை செயல் அலுவலர் சிந்துஜா நன்றி கூறினார்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு சிறு விவசாயிகள் வேளாண் வணிக நட்பமைப்பு மற்றும் வேளாண் வணிக துறையின் இலால்குடி தென்றல் கூட்டுப்பண்ணை சார்பாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு நெப்டிம் மூலமாக இரண்டு நாள் வேளாண் விளைபொருட்கள் மதிப்பு கூட்டுதல் பயிற்சி மற்றும் கண்டுணர் சுற்றுலா பயிற்சி தஞ்சாவூர் தேசிய உணவு கழக உணவு பதன தொழில் நிலையத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் வேளாண் அலுவலர் சிவகாமி, தொழில்நுட்ப உதவி பேராசிரியர் ஹேமா, தொழில்நுட்ப வல்லுநர் ராஜ்குமார், உதவி பேராசிரியர் ஆனந்தகுமார் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.

    இப்பயிற்சியில் நெல், பயறு வகை பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்கள்,சிறுதானிய பயிர்கள், வாழை, இதர தோட்டக்கலை பயிர்கள் ஆகியவற்றின் மதிப்பு கூட்டுதல் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு தொழில்நுட்பங்கள் சிப்பமிடுதல், பிராண்டிங் மற்றும் வணிக தொடர்புகள் ஏற்படுத்தி கொடுத்தல் ஆகியவை இலால்குடி தென்றல் கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குனர்களுக்கு நெப்டிம் நிறுவன தொழில்நுட்ப வல்லுநர்களால் விளக்கி கூறப்பட்டது.

    இதில் இலால்குடி உதவி வேளாண் அலுவலர் சிவசக்தி, மண்டல ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் மற்றும் இலால்குடி தென்றல் கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் மற்றும் உழவர் ஆர்வலர் குழு தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் முதன்மை செயல் அலுவலர் சிந்துஜா நன்றி கூறினார்.

    • அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
    • பள்ளியில் தேவையான விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் உள்ள கிராமங்களில் குடியரசு தினம், சுதந்திர தினம், மே தினம் ,காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது.

    இந்த நிலையில் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சித் தினத்தன்றும் கிராம சபை கூட்டத்தை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கிடையில் கிராம சபை கூட்டம் போல நகர்ப்புற உள்ளாட்சிகளான மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் வார்டு தோறும் அந்தந்த கவுன்சிலர்கள் தலைமையில் வார்டு கமிட்டி அமைக்கப்பட்டு பொதுமக்கள் பங்களிப்புடன் பகுதி சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியது.

    அதன்படி உள்ளாட்சி தினமான இன்று தமிழகத்தில் முதல் முறையாக பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.

    மேலும் முதல் முறையாக தஞ்சை, கும்பகோணம் என 2 மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் என இரண்டு நகராட்சிகள் மற்றும் வல்லம், சுவாமிமலை உள்பட14 பேரூராட்சிகளிலும் முதல் முறையாக பகுதி சபை கூட்டம் நடைபெற்றது.

    தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளிலும் இந்த பகுதி சபை கூட்டங்கள் நடந்தன. தஞ்சை மாநகராட்சி வார்டு எண் 1 பள்ளியக்ரகாரம் பகுதியில் பகுதி சபா கூட்டம் மாமன்ற உறுப்பினர் செந்தமிழ் செல்வன் தலைமையில் நடைபெற்றது.

    துரை. சந்திரசேகரன் எம் .எல் .ஏ, மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் கலந்து கொண்டு வரவேற்றார்.

    கூட்டத்தில் 1 வார்டு 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு நடந்தன. பொதுமக்கள் சேர்ந்து ராமானுஜம் என்பவரை கமிட்டி உறுப்பினராக தேர்ந்தெடுத்தனர்.

    கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசிய விவரம் வருமாறு:- சிங்கப்பெருமாள் கோவில் அருகே வேகத்தடையும். பள்ளி அக்ரஹாரம் பகுதியில் உடற்பயிற்சி கூடமும்.

    நவீன கழிப்பிடமும்,சேதமடைந்த ரேஷன் கடையை சீரமைத்தும். அங்கன்வாடிக்கு புதிய கட்டிடமும் கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றி தர வலியுறுத்தி பேசினர்.

    ஆசிரியர் ஒருவர் பேசும்போது, நகராட்சி பள்ளியில் மாணவர்கள் அமர்ந்து உணவருந்தும் கூடத்தின் மேற்கூரையை சீரமைக்க வேண்டும். போதிய அளவில் உடற்பயிற்சி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றார்.

    அப்போது 6-ம் வகுப்பு மாணவி ஒருவர் பேசும்போது:-

    நான் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறேன். எங்கள் பள்ளியில் குடிநீர், கழிவறை வசதி செய்ய வேண்டும். பள்ளியில் தேவையான விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுக்க வேண்டும் என்று பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.மாணவியின் பேச்சை அனைவரும் ரசித்தனர்.

    பொதுமக்களின் கோரிக்கைகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கரந்தை பகுதி செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் தஞ்சை மாநகராட்சி 25-வது வார்டு உட்பட்ட பகுதியான கீழ ராஜவீதி மணிகர்ணிகேஸ்வரர் கோவிலில் நடந்த பகுதி சபை கூட்டத்துக்கு கவுன்சிலர் தெட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார்.

    இதில் பொதுமக்கள் தங்களது வார்டு சம்பந்த கோரிக்கைகள் குறித்து பேசினர்.

    • ஓய்வறையில் தூய்மை பணியாளர்களின் வாழ்வதாரம் மேம்படுத்தல் எந்திரம், கூடை பின்னும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வெண்ணீர் போடும் மின்சார எந்திரம் உள்ளிட்டவை அறையில் வைக்கப்பட்டுள்ளது.

    வேதாரண்யம்:

    தூய்மை பணியாளரு–க்கென ஓய்வறை வழங்க வேண்டும் என தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு கேட்டுக் கொண்டார்.

    அந்த அறிவிப்பை அடுத்து நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ் ஆலோசனைபடி தூய்மை பணியாளர்களுக்கு புதிய ஓய்வறை கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    இந்த ஓய்வறையை கலெக்டர் அருண்தம்புராஜ் திறந்து வைப்பதற்காக வருைா தந்தார்.

    திடீரென அவர் அருகில் நின்ற தலைஞாயிறு பேருராட்சி தூய்மை பணியாளர் மாரிமுத்துவைவை அழைத்து கட்டிடத்தை திறக்க வைத்தார் .கட்டிடத்தை திறந்த மாரிமுத்து ஆனந்த கண்ணீர்விட்டார்.

    ஓய்வறையை உடனடியாக கட்டிக்கொடுத்த தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலர் குகனை பாராட்டி கலெக்டர் அருண்தம்புராஜ் சால்வை அணிவித்தார்.

    அந்த ஓய்வறையில் தூய்மை பணியாளர்களின் வாழ்வதாரம் மேம்படதையல் இயந்திரம், கூடை பின்னும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    மேலும்உணவு உண்பதற்கான டைனிங் டேபிள், கேரம் போர்டு, தாயங்கட்டை, பல்லாங்குழி உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள் முதலுதவி பெட்டி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வெண்ணீர் போடும் மின்சார இயந்திரம் உள்ளிட்டவை அந்த அறையில் வைக்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் பேருராட்சி மன்ற தலைவர் செந்தமிழ் செல்வி பிச்சையன், துணைத்தலைவர் கதிரவன், பேருராட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னாள் பேருராட்சி தலைவர்கள் சாந்தி சுப்பிரமணியன், ராஜேந்திரன் மற்றும் துப்பரவு பணியாளர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

    கலெக்டரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்தது.

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.28லட்சத்து 67 ஆயிரத்து 146-க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய், எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 20.54குவிண்டால் எடை கொண்ட 6 ஆயிரத்து92தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.23.89-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.17.66-க்கும், சராசரி விலையாக ரூ.23.15-க்கும் என மொத்தம் ரூ.45ஆயிரத்து 149-க்கு விற்பனையானது.

    அதேபோல் 264.44½ குவிண்டால் எடை கொண்ட 527 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.80.80-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.73.99-க்கும், சராசரி விலையாக ரூ.78.40-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.74.11-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.11-க்கும், சராசரி விலையாக ரூ.73.79-க்கும் என மொத்தம் ரூ.19 லட்சத்து 93 ஆயிரத்து 581-க்கு விற்பனையானது.

    அதேபோல் 131.77½வரை குவின்டால் எடை கொண்ட430 மூட்டை நிலக்கடலைக்காய் விற்பனைக்கு வந்தது. நிலக்கடலைக்காய் அதிக விலையாக ரூ73.90-க்கும், குறைந்த விலையாக 63.40 -க்கும், சராசரி விலையாக 72.20 -க்கும் என ரூ8 லட்சத்து 73 ஆயிரத்து 565 க்கு விற்பனையானது.

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.28லட்சத்து 67 ஆயிரத்து 146-க்கு விற்பனையானது.

    • அக்டோபர் 4-ம் தேதி ஆயுதபூஜையும், 5-ம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்படுகிறது.
    • இவ்விழாவை முன்னிட்டு வட மாநிலங்களில் வெள்ளி கொலுசு, மெட்டி, அரைஞான் கொடி, குங்குமசிமிழ் உள்பட பல வெள்ளிப் பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைபெறும்.

    சேலம்:

    வெள்ளி கொலுசு உற்பத்தி தொழில் சேலத்தில் பிரசித்தி பெற்ற தொழிலாக விளங்குகிறது. சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளிப் பொருட்கள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், கேரளா, ஆந்திரா மற்றும் வடமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

    இந்த நிலையில் வருகிற அக்டோபர் 4-ம் தேதி ஆயுதபூஜையும், 5-ம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு வட மாநிலங்களில் வெள்ளி கொலுசு, மெட்டி, அரைஞான் கொடி, குங்குமசிமிழ் உள்பட பல வெள்ளிப் பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைபெறும். இதையொட்டி வெள்ளிப் பொருட்கள் கேட்டு வட மாநில வியாபாரிகள் ஆர்டர் கொடுத்துள்ளனர்.

    இதனால் சேலம் செவ்வாய்ப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளிப் பொருட்கள் உற்பத்தியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நவராத்திரி விழாவின் போது வடமாநிலங்களில் பெண்கள் லைட் வெயிட் கொலுசு, குங்குமச்சிமிழ், மெட்டி அதிகளவில் வாங்குவார்கள். இதையொட்டி வெயிட் கொலுசு, குங்குமச்சிமிழ், மெட்டி அதிகளவில் குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடக,ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    இந்த தகவலை சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை சங்க தலைவர் ஆனந்தராஜன் தெரிவித்தார்.

    • பரமத்திவேலூர் அருகே சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.11 லட்சத்து 72 ஆயிரத்து 661-க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    பரமத்திவேலூர் அருகே சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய், எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம்,.பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணை நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 25.40குவிண்டால் எடை கொண்ட 7 ஆயிரத்து 194தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.23.06-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.18.06-க்கும், சராசரி விலையாக ரூ.22.59-க்கும் என மொத்தம் ரூ.53 ஆயிரத்து 372-க்கு விற்பனையானது.

    அதேபோல் 153.51½ குவிண்டால் எடை கொண்ட 322 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.78.76-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.74.10-க்கும், சராசரி விலையாக ரூ.77.99-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.48-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.99-க்கும், சராசரி விலையாக ரூ.72.12-க்கும் என மொத்தம் ரூ.11 லட்சத்து 19 ஆயிரத்து 289-க்கு விற்பனையானது. சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.11 லட்சத்து 72 ஆயிரத்து 661-க்கு விற்பனையானது.

    • 35 மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • மூங்கில் கூடைகள், பனைப்பொருட்கள், விளையாட்டு பொம்மைகள் உள்ளிட்டவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் சார்பில் கைவினை பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழு விற்பனை அங்காடி தொடங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி புன்னைந ல்லூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் நேற்று முன்தினம் தஞ்சை தாரகைகள் கைவினைப் பொருட்கள் மகளிர் சுய உதவி குழு விற்பனை அங்காடியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

    அப்போது கலெக்டர் கூறியதாவது :-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிகுழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களுக்குசிறந்த ஒரு விற்பனை வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும் பொருட்டு தஞ்சை தாரகைகள் கைவினைப் பொருட்கள் அங்காடி என்ற சிறப்பு அடையாளத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அனைத்து மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு கூடுதல் விற்பனை வாய்ப்பும், கூடுதல் வருவாயும் வேலை வாய்ப்பும் ஏற்படுத்தித் தரும் வகையில் ஒரு இலக்குடன் உருவாக்கப்படுகிறது.

    ஏற்கனவே தஞ்சை மாநகராட்சியில் பூ மாலை வணிக வளாகத்தில் தஞ்சை தாரகைகள் கைவினைப் பொருட்கள் மகளிர் சுய உதவி குழு விற்பனை அங்காடி தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து.

    கல்லணையிலும் விற்பனை அங்காடி தொடங்கப்பட்டன. இதன் மூலம் 35 மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதன் மூலம் 125 குழு உறுப்பினர்கள் நேரடியாகவும், மறைமுகமா கவும் வேலை வாய்ப்பினை பெற்று வருகின்றனர்.

    தற்போது புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் தஞ்சை தாரகைகள் கைவினை பொருட்கள் மகளிர் சுயஉதவி க்குழு விற்பனை அங்காடி தொடங்கப்பட்டுள்ளது.

    இதில் தஞ்சை தலையாட்டி பொம்மைகள், பொய்க்கால் குதிரைகள், கால் மிதியடி, பொம்மை வகைகள், பைகள், மூங்கில் கூடைகள், பனைப்பொருட்கள், விளையாட்டு பொம்மைகள் உள்ளிட்டவை விற்பனை க்காக வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் பக்தர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் இதனை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் லோகேஸ்வரி, தாசில்தார் மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், அறிவானந்தம், மகளிர் திட்ட உதவி அலுவலர் சிவா, ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா தனசேகர், தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் அருளானந்த சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அரிசி, மாவு, தயிர், வெண்ணை, நெய் போன்ற உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும்.
    • ஈமச்சடங்கு மற்றும் மயான செலவின் மீது போடப்பட்ட வரியை ரத்து செய்ய வேண்டும்.

    தரங்கம்பாடி:

    ஒன்றிய பிஜேபிஅரசின் மக்கள் விரோத கொ ள்கையை கண்டித்து செம்பனார்கோயில் பி எஸ் என் எல் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம் செய்தனர்.

    போராட்டத்திற்கு மாவட்ட விவசாய சங்க செயலாளர் வீரராஜ், செம்பனார்கோயில் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் தாங்கினர்.

    அப்போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது.

    அரிசி மாவு தயிர் வெண்ணை நெய் போன்ற உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி ரத்து செய்ய வேண்டும்.

    ஈமச்சடங்கு மற்றும் மயான செலவின் மீது போடப்பட்ட வரியை ரத்து செய்ய வேண்டும்.

    உயிர் காக்கும் மருந்து மீது விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்ய வேண்டும்.

    மின்சார விநியோகத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழ ங்காதே. உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் செய்தனர்.

    நிகழ்ச்சியில் வேதநாயகம், சின்னத்துறை, இராதா கிருஷ்ணன், தவசிமுத்து, தரணி, தமிழ்ச்செல்வி, உள்ளிட்டோர் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டவர்.

    ×