search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்சோ"

    • 16 வயது சிறுமி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 15-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை, சிறுமி காணாமல் போனது குறித்து அவரது பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடிவந்த நிலையில், பல்லடம் பஸ் நிலையம் அருகே சிறுமி, வாலிபர் ஒருவருடன் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சிறுமி மற்றும் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணைசெய்த போது அந்த வாலிபர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த முருகவேல் மகன் நித்திஷ்குமார்(வயது 20) என்பதும், சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நித்தீஷ் குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    • போலீசார் காளிங்கராயன்பாளையம் பகுதிக்கு சென்று அங்கு நின்று கொண்டு இருந்த ராஜாவை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
    • அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டி பாளையம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    சித்தோடு:

    அந்தியூர் பகுதியை சேர்ந்த 13 வயதுடைய ஒரு சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    அந்த சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது தாய் அந்த சிறுமியிடம் விசாரி த்தார். அப்போது அந்த சிறுமி அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழி லாளியான ராஜா (36). என்பவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறினார்.

    இது குறித்து பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ன ம்மாள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார். மேலும் அந்த வாலிபரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கட்டிட கூலி தொழிலாளி ராஜா பவானி அருகே உள்ள காளிங்கராயன்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீ சார் காளிங்க ராயன்பாளையம் பகுதிக்கு சென்று அங்கு நின்று கொண்டு இருந்த ராஜாவை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

    போலீஸ் நிலையத்தில் அவரிடம் நடத்திய விசார ணையில் அவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை ஒப்பு கொண்டார். மேலும் அவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் ராஜாவை பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறை யில் அடைத்தனர்.

    • பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    • மாணவியை திருமணம்செய்து கொள்வதாகக் கூறி நெருங்கிப் பழகி பாலியல் தொல்லை கொடுத்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள மைகுண்டு ராவுத்தா் அப்பா தெருவைச் சோ்ந்தவா் மீனவா் வேலுச்சாமி. இவரது மகன் திலீப் (23). கூலித் தொழிலாளியான இவா், வாணியங்குளம் பகுதியில் வசிக்கும் 16 வயது பள்ளி மாணவியுடன் பழகினாா்.

    மாணவியை திருமணம்செய்து கொள்வதாகக் கூறி நெருங்கிப் பழகி பாலியல் தொல்லை கொடுத்தார். மேலும் அந்த சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்து திலீப் மிரட்டினார். இது குறித்து மாணவி, பெற்றோரிடம் புகார் செய்தார். அதன்பேரில் உச்சிப்புளி போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து திலீப்பை கைது செய்தனா்.

    • கள்ளக்குறிச்சியில் போக்சோவில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • மைனர் பெண், அவரது தங்கை (14) அழைத்துக்கொண்டு கள்ளக்குறிச்சி வந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம வெள்ளிமலை அருகே தாழ்தேவனூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் சேகர் (வயது 21) இவர் கர்நாடகா மாநிலம் சிங்கமங்களூர் அருகே பண்ணூர், கங்கவெள்ளி கிராமத்தில் கூலி வேலை செய்து வந்தார். அப்போது அருகில் இருந்த பெட்டிக்கடைக்கு செல்வது வழக்கம். அவ்வாறு அந்த பெட்டி கடைக்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த (17) வயது மைனர் பெண்ணிடம் சேகருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சேகர் மைனர் பெண்ணுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார். தொடர்ந்து அவருடன் போனில் பழகி வந்துள்ளார். இந்நிலையில் சேகர் சொந்த வேலைகா ரணமாக ஊருக்கு திரும்பி வந்து விட்டார். சம்பவத்தன்று மைனர் பெண் சேகரிடம் தொலை பேசியில் பேசினார். அப்போது நானும் உங்கள் ஊருக்கு வந்து விடுகிறேன் என கூறியுள்ளார். அதற்கு சேகர் புறப்பட்டு வா என சொல்லியுள்ளார். அதன்படி மைனர் பெண், அவரது தங்கை (14) அழைத்துக்கொண்டு கள்ளக்குறிச்சி வந்தார். அவர்களை சேகர் தாழ் தேவனூருக்கு அழைத்துச் சென்றார்.

    இதனைத் தொடர்ந்து கடந்த 3- ந் தேதி சேகர் மைனர்பெண்ணை (17) என்பவரை பரிகம் கிராமத்தில்உள்ள அண்ணாமலையார் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக வும், மைனர் பெண்ணிடம் சேகர் உல்லாசமாக இருந்து ள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சேகர் வீட்டில் இல்லாதபோது மைனர் பெண் தனது தங்கையை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சேகரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் மைனர் பெண்கள் இருவரும் கள்ளக்குறிச்சியில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படை க்கப்பட்டனர்.

    • இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    • 17 வயது மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து வந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பெரிய காட்டு பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் பிரதீப் (22). பட்ட தாரி வாலிபர். இவர் அதே பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து வந்தார். அந்த பெண் 6 மாத கர்ப்பிணியாக இருப்பதை அறிந்த பிரதீப் அவரை திருமணம் செய்ய மறுத்து விட்டார். இது குறித்து அந்த பெண் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வள்ளி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை கைது செய்தார். அவரை பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி, கடலூர் கிளை சிறை யில் அடைத்தார்.

    • விருத்தாசலத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கார்கூடல் கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் என்பவரின் மகன் வெற்றிவேல் (20). இவர் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல்துறையினருக்கு வந்த புகாரின் பேரில் வெற்றிவேலை அழைத்து விசாரித்தனர். புகார் உறுதியான நிலையில் வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சிறுமியை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
    • உடல் நலக்குறைவு ஏற்பட்ட சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறினார்.

    வல்லம்:

    தஞ்சை மானோஜிப்பட்டியை சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மகன் அறிவழகன் (வயது 31). பெயிண்டரான இவர் சம்பவத்தன்று 17 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்று ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் வீட்டுக்கு வந்த சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சிறுமியை அவருடைய உறவினர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறினர். கைது இந்தநிலையில் நடந்த சம்பவம் குறித்து சிறுமி அவருடைய குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

    இது குறித்து குழந்தைகள் நல அமைப்பு மூலம் சிறுமியின் தாய் வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிவழகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மங்கலம் பகுதியில் வேன் மூலம் பழங்களை விற்பனை செய்து வருகிறார்.
    • சிறுவனின் பெற்றோர் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் தெரிவித்தனர்.

    வீரபாண்டி :

    மதுரை மாவட்டம் எம்.கல்லாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 36). இவர் தனது குடும்பத்துடன் திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் வசித்து வருகிறார். மங்கலம் பகுதியில் வேன் மூலம் பழங்களை விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக 15 வயது சிறுவனுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து சிறுவனின் பெற்றோர் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரி விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் சிறுவனிடம் அத்துமீறி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர்.

    • இளந்துறை கிராமத்தில் வசிக்கும் ஆதி என்பவர் அப்பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் குளிப்பதை செல்போனில் படம் பிடித்துள்ளார்.
    • ஆதியை போக்சோ சட்டத்திலும், அவரது தந்தை பாலகிருஷ்ணனை மிரட்டல் விடுத்த வழக்கிலும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே திருநீலக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இளந்துறை கிராமத்தில் வசிக்கும்ஆதி என்பவர் அப்பகுதியைச் சேர்ந்த சிறுமி குளிப்பதை செல்போனில் படம் பிடித்து அப்பகுதியில் உள்ள நபர்களுக்கு அனுப்பி உள்ளார்.

    இதுகுறித்து சிறுமியின் தந்தை ஆதியின் தந்தை பாலகிருஷ்ணனிடம்(45) கூறி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார். தனது மகன் அப்படித்தான் செய்வான் என பாலகிரு ஷ்ணன் கூறவே சிறுமியின் தந்தை திருநீலக்குடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    போலீசார்,் ஆதி மற்றும்பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமி குளித்ததை ஆதி செல்போனில் படம் பிடித்தது உண்ைம என்பதும், அவரது தந்தை மிரட்டியதும் உண்மை என தெரியவந்தது.

    இதை தொடர்ந்து ஆதியை போக்சோ சட்டத்திலும், அவரது தந்தை பாலகிருஷ்ணனை மிரட்டல் விடுத்த வழக்கிலும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • பிளஸ்-1 படிக்கும் பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்ளவதாக தொல்லை கொடுத்து வந்தார்.
    • சிவகிரி போலீசில் புகார் செய்ததையத்து போலீசார் போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துசிறையில் அடைத்தனர்.

    ஈரோடு:

    சிவகிரி ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (28). இவர் தனியார் பஸ் டிரைவராக உள்ளார்.

    அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்ளவதாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து பள்ளி மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார்.

    மாணவியின் பெற்றோர் சிவகிரி போலீசில் புகார் செய்ததையத்து போலீசார் போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துசிறையில் அடைத்தனர்.

    • 2 நாட்களுக்கு முன்னாள் போக்சோ வழக்கு சம்பந்தமாக கோழிக்கோடு கோர்ட்டில் ஆஜராகும்படி கார்த்திக்கு சம்மன் வந்தது.
    • கார்த்தியின் தாய் வீட்டின் பின் பகுதிக்கு வந்து பார்த்தபோது அங்கு கார்த்தி புளியமரத்தில் தூக்கில் தொங்குவது தெரியவந்தது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள நடுவகளப்பால் மாரியம்மன் கோவில் மேலத்தெருவை சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது மகன் கார்த்தி (வயது 28). டிப்ளமோ மெக்கானிக் படித்தவர்.

    கடந்த 3 ஆண்டுகளாக கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள முக்கம் கிராமத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். அங்கு அவர் 'போக்சோ' சட்டத்தில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தார். பிறகு கோவையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்னாள் போக்சோ வழக்கு சம்பந்தமாக கோழிக்கோடு கோர்ட்டில் ஆஜராகும்படி கார்த்திக்கு சம்மன் வந்தது. இதுகுறித்து சாமிக்கண்ணு கோவையில் இருந்த கார்த்திக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சொந்த ஊருக்கு வந்த கார்த்தியிடம், சாமிக்கண்ணு கோர்ட்டில் ஆஜராகும்படி பணமும் கொடுத்து வீட்டில் இருந்து அனுப்பி வைத்தார். இந்த நிலையில் கார்த்தியின் தாய் வீட்டின் பின் பகுதிக்கு வந்து பார்த்தபோது, அங்கு கார்த்தி புளியமரத்தில் சேலையால் தூக்கில் தொங்குவது தெரிய வந்தது.

    இதனால் பதறிப்போன அவருடைய தாயார் கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்து கார்த்தியை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், கார்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து களப்பால் போலீஸ் நிலையத்தில் சாமிக்கண்ணு புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×