என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மயில்"
- தியாகதுருகம் அருகே கிணற்றில் விழுந்த மயிலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.
- கிணற்றுக்கு புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக மின்சார வாரிய அதிகாரிகள் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே தியாகை ஊராட்சிக்கு உட்பட்ட சிறுவல் கிராமத்தைச் சேர்ந்தவர் சோலை (வயது 62), விவசாயி, இவருக்கு அதே பகுதியில் உள்ள முனியப்பர் கோவில் அருகே விவசாய கிணறு மற்றும் நிலம் உள்ளது. நேற்று கிணற்றுக்கு புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக மின்சார வாரிய அதிகாரிகள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்பொழுது மின்வாரிய அதிகாரி ஒருவர் கிணற்றை எட்டிப் பார்த்தபோது கிணற்றின் சுற்று சுவரில் முட்டைகளை அடைகாத்து க்கொண்டிருந்த மயில் திடீரென பறந்தபோது தவறி கிணற்றில் விழுந்தது. இது குறித்து அங்கிருந்தவர்கள் தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் கவிதா தலைமையில் கார்த்திகேயன், அருணாச்சலம், சந்தோஷ்குமார், ஜெகன், சங்கர் உள்ளிட்ட வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 50 அடி க கிணற்றில் தண்ணீரில் விழுந்து கிடந்த பெண் மயிலை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து மயிலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து சிறுவல் காட்டில் பத்திரமாக விட்டு சென்றனர்.
- கோழி, நாய்களை போன்று தெரு, வீதிகளை ஒட்டிய தோட்டம், சாலையோரங்களில் இரை தேடுகின்றன.
- மயில், எலி, மான் போன்றவை விவசாயிகளுக்கு பெரும் தொல்லையாக மாறியுள்ளன.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் மயில்களின் இனப்பெருக்கம் அதிகமாகி கொண்டே செல்வது விவசாயிகளுக்கு தீராத தலைவலியாக மாறி வருகிறது.விவசாய நிலங்களில் எங்கு நோக்கினும் மயில்களை பார்க்க கூடிய சூழல் உருவாகி விட்டது. மனிதர்கள் நெருங்கினாலே, ஓடி ஒளியும் மயில்கள் இன்று மனிதர்களின் சுவாசத்தை உணர்ந்து, அவர்களோடு நேசம் கொள்ள துவங்கியிருக்கின்றன.உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் மயில்களுக்கு தானியம் வழங்கி, மக்கள் பழக்கப்படுத்திக் கொண்டதால் வளர்ப்பு பறவையாகவே மாறி வருகின்றன.
கோழி, நாய்களை போன்று தெரு, வீதிகளை ஒட்டிய தோட்டம், சாலையோரங்களில் இரை தேடுகின்றன.இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:-
விவசாய நிலம், குடியிருப்பு பகுதிகளில் உள்ள பாம்புகளை மயில்கள் தங்களுக்கு உணவாக்கிக் கொள்ளும். இதன் மூலம் பாம்புகளின் இனப்பெருக்கம் கட்டுக்குள் இருக்கும். மயில்கள் இடும் முட்டைகளை, பாம்புகள் உணவாக்கிக் கொள்ளும். மயில்களை, காட்டுப்பூனை, நரி உள்ளிட்ட விலங்கினங்கள் உணவாக்கிக் கொள்ளும். இதன் மூலம் மயில்களின் இனப்பெருக்கம் கட்டுக்குள் இருக்கும்.விவசாய நிலங்களில் உள்ள எலிகளை பாம்புகள் தங்களுக்கு உணவாக்கிக்கொள்ளும். அதன் மூலம் விவசாய நிலங்களில் எலித்தொல்லை கட்டுக்குள் இருக்கும். இப்படி ஒவ்வொரு விலங்கினங்களின் உணவுச்சங்கிலியில் பிற விலங்கினங்களின் தொடர்புடையவையாக இருந்தது.ஆனால் இன்று அந்த நிலை மாறி, உணவுச்சங்கிலி அறுந்ததால் மயில், எலி, மான் போன்றவை விவசாயிகளுக்கு பெரும் தொல்லையாக மாறியுள்ளன. எனவே வனம் அதுசார்ந்த பகுதிகள் இல்லாத திருப்பூரின் புறநகர் பகுதிகளில் மயில்கள் சரணாலயம் போன்ற பிரத்யேக வாழ்விடங்களை உருவாக்குவது மட்டுமே தீர்வு என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்