search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சலுகைகள்"

    • 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 109 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது.
    • மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    மஹிந்திரா நிறுவனம் தனது XUV300 மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் வரையிலான சலுகைகளை வழங்குகிறது. ஆண்டு இறுதியை முன்னிட்டு இது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இவை கார்ப்பரேட் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன.

    இந்திய சந்தையில் மஹிந்திரா XUV300 மாடலின் விலை ரூ. 7 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 13 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த கார் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

     


    மஹிந்திரா XUV300 மாடலில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ரிவர்ஸ் கேமரா, 1-டச் லேன் சேன்ஜ் இன்டிகேட்டர், குரூயிஸ் கண்ட்ரோல், எலெக்ட்ரிக் டெயில்கேட் ரிலீஸ் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்ற வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன.

    இந்த காரின் டாப் எண்ட் வேரியண்ட்களில் 6 ஏர்பேக் வழங்கப்படுகிறது. இதன் ஸ்டாண்டர்டு வெர்ஷனில் இரண்டு ஏர்பேக் வழக்கமாக வழங்கப்படுகிறது. இதில் உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 109 ஹெச்.பி. பவர், 200 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    டர்போ பெட்ரோல் யூனிட் 129 ஹெச்.பி. பவர், 230 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. டீசல் என்ஜின் 115 ஹெச்.பி. பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இவற்றுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    • ஜியோ புத்தாண்டு சலுகையில் கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
    • இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2024 புத்தாண்டு சலுகையை அறிவித்து இருக்கிறது. ஜியோ பிரீபெயிட் சேவையை பயன்படுத்துவோருக்கு இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பழைய வருடாந்திர பிரீபெயிட் சலுகைகளை ஜியோ மாற்றியமைத்துள்ளது.

    இந்த அறிவிப்பு காரணமாக ஜியோ புத்தாண்டு சலுகையில் பயனர்களுக்கு 24 நாட்கள் வரை கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. நீண்ட கால பிரீபெயிட் ரிசார்ஜ் சலுகையான ரூ. 2,999-இல் கூடுதலாக 24 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

     

    அந்த வகையில், பயனர்கள் வழக்கமான 365 நாட்கள் இன்றி கூடுதலாக 24 நாட்கள் வரை நீண்ட கால சலுகையை பயன்படுத்தலாம். இதன் மூலம் வருடாந்திர ரிசார்ஜ் சலுகையில் பயனர்களுக்கு மொத்தத்தில் 389 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.

    இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்களும் வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இவைதவிர ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோகிளவுட் போன்ற சேவைகளும் வழங்கப்படுகிறது.

    • அமேசான் பிரைம் வீடியோ நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க முடியும்.
    • இந்த சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

    வி நிறுவனம் தனது பிரீபெயிட் சந்தாதாரர்களுக்கு முற்றிலும் புதிய ரிசார்ஜ் சலுகையை அறிவித்து இருக்கிறது. ரூ. 3 ஆயிரத்து 199 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய வி சலுகையில் ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் வீடியோ சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் ரிசார்ஜ் செய்வோர் எவ்வித கூடுதல் கட்டணம் மற்றும் சந்தா செலுத்தாமல் அமேசான் பிரைம் வீடியோ நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க முடியும்.

    ஒரு வருடத்திற்கான ஒ.டி.டி. பலன்கள் மட்டுமின்றி இந்த சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மற்ற முன்னணி நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் இதே போன்ற வருடாந்திர பலன்களை கொண்ட சலுகையை வழங்கி வருகின்றன.

     


    புதிய சலுகை குறித்து வி வலைதளத்தில் இடம்பெற்றுள்ள பதிவில், ரூ. 3 ஆயிரத்து 199 விலை கொண்ட ரிசார்ஜ் சலுகையில் மொத்தம் 730 ஜி.பி. டேட்டா, ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இத்துடன் அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 2 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.

    இதுதவிர புதிய சலுகையில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அன்லிமிடெட் டேட்டாவும் வழங்கப்படுகிறது. மேலும் வார இறுதியில் டேட்டா ரோல் ஓவர் சலுகையும் வழங்கப்படுகிறது. இதில் ஒரு வார காலத்தில் பயன்படுத்தி முடிக்காத டேட்டாவை வார இறுதி நாட்களில் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

    • ஸ்கூட்டர் வாங்குவோருக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகிறது.
    • மிகக் குறைந்த வட்டியில் கடன் சலுகைகள் வழங்கப்படுகிறது.

    ஹீரோ மோட்டோகார்ப்-இன் எலெக்ட்ரிக் வாகன பிரிவு "விடா" எனும் பெயரில் இயங்கி வருகிறது. மேலும் விடா பிராண்டின் V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஆண்டு இறுதியை ஒட்டி சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவை இம்மாத இறுதி வரை வழங்கப்படுகிறது. இதில் ரொக்க பலன்கள், வாரண்டி மற்றும் பல்வேறு பலன்கள் வழங்கப்படுகின்றன.

    அதன்படி விடா V1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவோருக்கு ரூ. 8 ஆயிரத்து 259 மதிப்புள்ள நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 6 ஆயிரத்து 500 தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ், ரூ. 7 ஆயிரத்து 500 வரை லாயல்டி பலன்கள் வழங்கப்படுகின்றன.

     


    ஹீரோ மோட்டோகார்ப் அல்லது விடா வாடிக்கையாளர்களின் குடும்பத்தாருக்கு மட்டுமே லாயல்டி பலன்கள் பொருந்தும். இத்துடன் ரூ. 2 ஆயிரத்து 500 வரை கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் வாடிக்கையாளர்களுக்கு 5.99 சதவீதம் எனும் மிகக் குறைந்த வட்டியில் கடன் சலுகைகள் வழங்கப்படுகிறது.

    விடா V1 ஸ்கூட்டரை மாத தவணையில் வாங்கும் போது இதர கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. மாத தவணையாக மாதம் ரூ. 2 ஆயிரத்து 429-இல் இருந்து வாங்கிட முடியும். நிதி சார்ந்த பலன்களை வழங்குவதற்காக விடா பிராண்டு ஐ.டி.எஃப்.சி., இகோஃபை மற்றும் ஹீரோ ஃபின்கார்ப் போன்ற நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ளது.

    இந்திய சந்தையில் விடா V1 மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 26 ஆயிரம் என துவங்குகிறது. விடா V1 ப்ரோ மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 46 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 110 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. 

    • ஒ.டி.டி. பலன்களை மட்டுமே வழங்குகிறது.
    • வி மூவிஸ் மற்றும் டி.வி. ப்ரோ சந்தா வழங்குகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் ஜியோடிவி பிரீமியம் சந்தா வழங்கும் புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்தது. அந்த வரிசையில், தற்போது வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் வி-யின் ஒ.டி.டி. பலன்களை வழங்கும் புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது.

    சத்தமின்றி அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய வி சலுகையின் விலை ரூ. 202 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், இது வி வழங்கி வரும் வழக்கமான சலுகைகள் போன்றில்லாமல் ஒ.டி.டி. பலன்களை மட்டுமே வழங்குகிறது.

     

    கோப்புப்படம்

    கோப்புப்படம்


    ஒ.டி.டி. பலன்களை வழங்கும் வி சலுகையுடன் வி மூவிஸ் மற்றும் டி.வி. ப்ரோ சந்தா வழங்குகிறது. இத்துடன் 13-க்கும் அதிக ஒ.டி.டி. சேவைகளை வழங்குகிறது. இதில் வாய்ஸ் காலிங், எஸ்.எம்.எஸ். அல்லது டேட்டா போன்ற எந்த பலன்களும் வழங்கப்படவில்லை. இந்த சலுகை ஒரு மாத காலத்திற்கு வேலிடிட்டி கொண்டுள்ளது.

    வி. ரூ. 202 சலுகையுடன் எந்தெந்த ஒ.டி.டி. பலன்கள் வழங்கப்படும் என்பது குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இதில் சோனி லிவ், ஜீ5, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட், ஹங்காமா மற்றும் பல்வேறு ஒ.டி.டி. பலன்களை வழங்கும் என்று தெரிகிறது. இந்த சலுகை வி செயலி மற்றும் வலைதளங்களில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

    • கேலக்ஸி A14 5ஜி மாடலில் எக்சைனோஸ் 1330 பிராசஸர் வழங்கப்படுகிறது.
    • இந்த மாடலில் 50MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி A14 5ஜி ஸ்மார்ட்போனினை சமீபத்தில் அறிமுகம் செய்தது. ரூ. 16 ஆயிரத்து 499 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி A14 5ஜி மாடல் தற்போது ரூ. 13 ஆயிரத்து 499 விலையில் கிடைக்கிறது. இது 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலுக்கானது ஆகும். இதில் ஆக்சிஸ் வங்கி வழங்கும் ரூ. 1000 கேஷ்பேக் தொகையும் அடங்கும்.

     


    கேலக்ஸி A14 5ஜி மாடலின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை முறையே ரூ. 15 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 17 ஆயிரத்து 999 என்று மாறியிருக்கிறது. இதிலும் ரூ. 1000 கேஷ்பேக் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி A14 5ஜி மாடலில் 6.6 இன்ச் HD+LCD ஸ்கிரீன், இன்ஃபினிட்டி வி நாட்ச், 90Hz ரிப்ரெஷ் ரேட், எக்சைனோஸ் 1330 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், 2MP டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

     


    பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் சாம்சங் கேலக்ஸி A14 5ஜி மாடலில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. கேலக்ஸி A14 5ஜி மாடலில் சாம்சங்கின் வாய்ஸ் ஃபோக்கஸ் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் அழைப்புகளின் போது பின்னணியில் உள்ள சத்தத்தை தடுக்கும்.

    இந்த அம்சம் வீடியோ மற்றும் வாய்ஸ் காலிங் செயலிகளான கூகுள் மீட், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ், வாட்ஸ்அப் மற்றும் ஜூம் உள்ளிட்டவைகளிலும் சீராக வேலை செய்யும். இத்துடன் கேலக்ஸி A14 5ஜி மாடலுக்கு நான்கு ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட், இரண்டு ஆண்ட்ராய்டு ஒ.எஸ். அப்டேட்களை பெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • 60 ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை வாரண்டி வழங்கப்படுகிறது.
    • ஏத்தர் நிறுவனம் டிசம்பர் மாத சலுகைகளை அறிவித்துள்ளது.

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டிசம்பர் மாத சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ரூ. 24 ஆயிரம் வரையிலான தள்ளுபடி மற்றும் பலன்கள் வழங்கப்படுகின்றன.

    இதில் ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 1500 வரை கார்ப்பரேட் பலன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் ரூ. 12 ஆயிரம் வரையிலான சேமிப்புகள் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வேறுப்படும். "ஏத்தர் ப்ரோடெக்ட் டி.எம்." பெயரில் நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகிறது. இதில் 5 ஆண்டுகள் அல்லது 60 ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை வாரண்டி வழங்கப்படுகிறது.

     


    ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் இந்திய இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் தங்களது மாடல்களுக்கு சலுகைகளை வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அந்த வகையில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் டிசம்பர் மாத சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

    டிசம்பர் மாத சலுகைகள் தவிர ஏத்தர் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய 450X அபெக்ஸ் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது ஏத்தர் இதுவரை அறிமுகம் செய்ததிலேயே விலை உயர்ந்த மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    • டாடா எலெக்ட்ரிக் கார்களுக்கு சலுகைகள் அறிவிப்பு.
    • இம்மாத இறுதிவரை சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. செலவீனங்கள் தொடர்ந்து அதிகரிப்பதாலும், பணவீக்கம் காரணமாகவும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

    விலை உயர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமலுக்கு வரவுள்ளது. இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா டியாகோ EV மற்றும் டாடா டிகோர் EV மாடல்களுக்கு ரூ. 1.10 லட்சம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது.

    இந்த சலுகைகள் டிசம்பர் 31-ம் தேதி அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படுகிறது. டிகோர் EV காம்பேக்ட் செடான் மாடலுக்கு ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 50 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சேன்ஜ் போனஸ் வடிவில் ரூ. 50 ஆயிரமும், கார்ப்பரேட் போனஸ் ஆக ரூ. 10 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

     


    தற்போது டாடா டிகோர் EV மாடலின் விலை ரூ. 12 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. இந்த மாடலில் 26 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 315 கிலோமீட்டர்ள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

    டாடா டியாகோ EV எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 77 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் கிரீன் போனஸ் தொகையாக ரூ. 55 ஆயிரம் வழங்கப்படுகிறது. எக்சேன்ஜ் போனஸ் ஆக ரூ. 15 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. தற்போது இந்த மாடலின் விலை ரூ. 8 லட்சத்து 69 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது.

    இந்திய சந்தையில் டாடா டியாகோ EV மாடல் மீடியம் ரேன்ஜ் மற்றும் லாங் ரேன்ஜ் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றில் முறையே 19.2 கிலோவாட் ஹவர் மற்றும் 24 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. இவை முறையே 250 கிலோமீட்டர் மற்றும் 315 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகின்றன.

    • பயனர்களுக்கு 14 ஒ.டி.டி. சேவைகளின் சந்தா வழங்கப்படுகிறது.
    • மூன்று பிரீபெயிட் சலுகைகளை ஜியோ அறிவித்தது.

    ஜியோ நிறுவனம் புதிய ஜியோடிவி பிரீமியம் சந்தாவை இந்திய சந்தையில் அறிவித்து இருக்கிறது. இந்த ஒற்றை சலுகையில் பயனர்களுக்கு அதிகபட்சமாக 14 ஒ.டி.டி. சேவைகளின் சந்தா வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோடிவி பிரீமியம் சந்தா வழங்கும் மூன்று பிரீபெயிட் சலுகைகளையும் ஜியோ அறிவித்து இருக்கிறது.

    புதிய சலுகைகள் மாதாந்திர, காலாண்டு மற்றும் வருடாந்திர அடிப்படையில் வழங்கப்படுகிறது. இவற்றின் விலை ரூ. 398 என்று துவங்குகிறது. இவற்றுடன் அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. அழைப்புகள், எஸ்.எம்.எஸ். மட்டுமின்றி பயனர்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ, சோனி லிவ், ஜீ5 மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.

     


    இந்த சலுகைகள் இன்று (டிசம்பர் 15) முதல் வழங்கப்படுகிறது. அனைத்து சலுகைகளுடன் தினமும் 2 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. ஜியோவின் புதிய சலுகைகளின் விலை ரூ. 398, ரூ. 1198 மற்றும் ரூ. 4 ஆயிரத்து 498 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றுடன் அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். பலன்கள் மற்றும் 14 ஒ.டி.டி. சந்தாக்கள் வழங்கப்படுகின்றன.

    ரூ. 398 சலுகையுடன் 12 ஒ.டி.டி. சந்தாக்களும், ரூ. 1198 மற்றும் ரூ. 4 ஆயிரத்து 498 சலுகைகளுடன் 14 ஒ.டி.டி. சந்தாக்கள் வழங்கப்படுகிறது. ஒரு வருட ரிசார்ஜ் சலுகையுடன் ஜியோ எளிய மாத தவணை முறை வசதியை வழங்குகிறது. மூன்று பிரீபெயிட் ரிசார்ஜ்களிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

    ஜியோடிவி பிரீமியம் சந்தா ஜியோ சிம் பயனர்களுக்கானது ஆகும். இத்துடன் ரூ. 148 விலையில் டேட்டா ஆட் ஆன் வவுச்சர் வழங்கப்படுகிறது. இதில் 10 ஜி.பி. டேட்டா மற்றும் 12 ஒ.டி.டி. சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் விலை 28 நாட்கள் ஆகும். ஜியோடிவி பிரீமியம் சலுகைகள் நாளை (டிசம்பர் 16) முதல் வழங்கப்படுகிறது.

    • இந்த பலன்கள் ஒவ்வொரு விற்பனையாளரை பொருத்து வேறுபடும்.
    • இந்த கார் மணிக்கு 100 கி.மீ. வேகத்தை 9 நொடிகளில் எட்டிவிடும்.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் EV பிரைம் மற்றும் நெக்சான் EV மேக்ஸ் மாடல்களுக்கு தள்ளுபடி அறிவித்து இருக்கிறது. நெக்சான் EV ஃபேஸ்லிஃப்ட் மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதற்கு முந்தைய வெர்ஷன் இன்னும் முழுமையாக விற்றுத்தீரவில்லை என்று தெரிகிறது. அந்த வகையில், இரு மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 2 லட்சத்து 60 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

    இவை தள்ளுபடி மற்றும் எக்சேன்ஜ் சலுகைகள் வடிவில் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் டிசம்பர் 31-ம் தேதி அல்லது ஸ்டாக் இருக்கும் வரை வழங்கப்படுகிறது. மேலும் இந்த பலன்கள் ஒவ்வொரு விற்பனையாளரை பொருத்து வேறுபடும்.

    இந்திய சந்தையில் டாடா நெக்சான் EV பிரைம் மாடலின் விலை ரூ. 14 லட்சத்து 49 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 17.5 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த மாடல் ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படும்.

     


    இந்தியாவில் டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடலின் விலை ரூ. 16 லட்சத்து 49 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 20 லட்சத்து 04 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த மாடல் தற்போது ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இரு மாடல்களுடன் அதிகபட்சம் ரூ. 50 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் பலன்கள் வழங்கப்படுகின்றன.

    டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடலில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 141 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 9 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் 40.5 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 437 கிலோமீட்டர்கள் வரை செல்லும்.

    நெக்சான் EV பிரைம் மாடலில் உள்ள மோட்டார் 127 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்துகிறது. இதில் உள்ள 30.2 கிலோவாட் ஹவர் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 312 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க முடியும்.

    • ஜாவா, யெஸ்டி மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிப்பு.
    • டிசம்பர் 31-ம் தேதி வரை சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது.

    ஜாவா மற்றும் யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் தங்களது இருசக்கர வாகனங்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து உள்ளன. இந்த  சலுகைகள் டிசம்பர் 31-ம் தேதி வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவை நீட்டிக்கப்பட்ட வாரண்டி, மாத தவணை சலுகை, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன.

    அந்த வகையில் ஜாவா 42 சிங்கில் டோன் மற்றும் யெஸ்டி ரோட்ஸ்டர் மோட்டார்சைக்கிள் மாடல்களை வாங்க நினைப்போர் தங்களது பழைய மோட்டார்சைக்கிளை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 10 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட ரைடிங் கியர் மற்றும் அக்சஸரீக்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

     


    டிசம்பரில் ஜாவா அல்லது யெஸ்டி மோட்டார்சைக்கிள்களை வாங்குவோர் நான்கு ஆண்டுகள் அல்லது 50 ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை நீட்டிக்கப்பட்ட வாரண்டி சலுகையை எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வாங்கிட முடியும். இத்துடன் ஐ.டி.எஃப்.சி. வங்கி மூலம் ஜாவா மற்றும் யெஸ்டி மாடல்களுக்கு மாதம் ரூ. 1888 முதல் மாத தவணை சலுகை வழங்கப்படுகிறது.

    ஜாவா பிராண்டு ஜாவா 300, ஜாவா 42, ஜாவா 42 பாபர் மற்றும் ஜாவா பெராக் போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. யெஸ்டி பிராண்டின் கீழ் யெஸ்டி ரோட்ஸ்டர், யெஸ்டி ஸ்கிராம்ப்ளர் மற்றும் யெஸ்டி அட்வென்ச்சர் என மூன்று மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 

    • பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஆண்டு முழுக்க வேலிடிட்டி வழங்கும் சலுகைகளை வழங்குகிறது.
    • அவ்வப்போது சலுகை பலன்களை மாற்றுவதை பி.எஸ்.என்.எல். வழக்கமாக கொண்டுள்ளது.

    பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு வழங்கி வரும் ஒருவருட சலுகையில் வேலிடிட்டியை மாற்றியுள்ளது. அதன்படி பி.எஸ்.என்.எல். ரூ. 2 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கும் ஒரு வருடத்திற்கான பிரீபெயிட் ரிசார்ஜ் சலுகையின் வேலிடிட்டி 30 நாட்கள் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. பண்டிகை காலம், விசேஷ நாட்களை ஒட்டி பி.எஸ்.என்.எல். தனது சலுகைகளில் வேலிடிட்டி நீட்டிப்பதை அவ்வப்போது செய்து வருகிறது.

    ரூ. 2 ஆயிரத்து 999 பி.எஸ்.என்.எல். ரிசார்ஜ் சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிடெட் காலிங், தினமும் 3 ஜி.பி. அதிவேக டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் தினசரி டேட்டா தீர்ந்து போகும் பட்சத்தில் டேட்டா வேகம் நொடிக்கு 40Kb-யாக குறைக்கப்பட்டு விடும். இந்த சலுகையின் வேலிடிட்டி முன்னதாக 365 நாட்களாக இருந்தது.

     


    அந்த வகையில், தற்போதைய அறிவிப்பின் படி பி.எஸ்.என்.எல். ரூ. 2 ஆயிரத்து 999 பிரீபெயிட் ரிசார்ஜ் வேலிடிட்டி 365 நாட்களுடன் கூடுதலாக 30 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த சலுகை மார்ச் 1, 2024 வரை வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் பி.எஸ்.என்.எல். செல்ஃப் கேர் செயலியில் பயனர்களுக்கு கூடுதல் டேட்டா மற்றும் இதர பலன்களும் தேர்வு செய்யப்பட்ட ரிசார்ஜ்களில் வழங்கப்படுகிறது. 

    ×