search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எந்திரம்"

    • உரிமையாளர் மீது வழக்கு பதிவு
    • களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீசார் தேவிநகர் பகுதியில் ரோந்து.

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே தேவிநகர் பகுதியில் அனுமதி இல்லாமல் பெரிய பாறைகளை உடைத்து சிலர் கடத்துவதாக போலீ சாருக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து களியக்கா விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்கும ரன் தலைமை யில் போலீசார் தேவிநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தனியாருக்கு சொந்தமான நிலத்தில் அனுமதி இல்லாமல் நவீன எந்திரம் மூலம் பாறைகளை உடைப்பது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்தனர். வாகனத்தின் உரிமையாளர் போலீசாரை பார்த்ததும் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து போலீஸ்நிலையம் கொண்டு சென்றனர். மேலும் உரிமையாளரான குழித்துறையை சேர்ந்த சார்லஸ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    • 3 பொக்லைன் எந்திரங்களுடன் வந்த அதிகாரிகள் வீடுகளை இடித்து தள்ளினார்கள்.
    • 50 ஆண்டுகளாக குடியிருக்கும் தங்களுக்கு மாற்றிடம் வழங்காமல் வீடுகளை இடித்ததை கண்டித்து கோஷமிட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இணைக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் பூ கொள்ளை ராணி வாய்க்கால் தெருவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறி 3 பொக்லைன் இயந்திரங்களுடன் வந்த அதிகாரிகள் அந்த வீடுகளை இடித்து தள்ளினார்கள்.

    பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்கிவிட்டு வீடுகளை இடியுங்கள் என ஏற்கனவே கூறியும் அதிகாரிகள் கேட்காமல் வீடுகளை இடித்ததாக கூறி திடீரென ஆற்றுப்பாலம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதை அடுத்து காவல்துறையினர் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட போது கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

    50 ஆண்டுக ளாக குடியிருக்கும் தங்களை மாற்று இடம் வழங்காமல் வீடுகளை இடித்ததை கண்டித்து கோஷமிட்டனர்.

    பின்னர் சமரச பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • கோவில்பத்து கிராமத்திலுள்ள நெல் சேமிப்பு கிடங்கில் சுமைதூக்கும் வேலை பார்த்து வந்தார்.
    • வெள்ளப்பள்ளம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த மண்அள்ளும் எந்திரம் மோதி படுகாயமடைந்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா உம்பளச்சேரியை சேர்ந்தவர் சிவமணி (வயது30).

    இவர் வேதாரண்யம் அடுத்த கோவில்பத்து கிராமத்தில் உள்ள நெல் சேமிப்பு கிடங்கில் சுமைதூக்கும்வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 19ம் தேதி பணி முடித்து வெள்ளப் பள்ளம் அருகே இரு சக்கர வாகனத்தில்சென்றபோது எதிரே வந்த மண் அள்ளும் எந்திரம் மோதி படுகாயம் அடைந்தார்.

    அவரை மீட்டு நாகை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்பு மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்கசை பெற்று வந்த சிவமணி கடந்த 23ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    புகாரின் போரில் வேட்டைக்காரனிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவசேனாதிபதி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • அங்கு வந்து நெல் அறுவடை எந்திரம் கொண்டு நிஜாமுதீன் வயலில் நெல்லை அறுவடை செய்துள்ளார்.
    • அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக தனது வயலுக்கு வந்து பார்த்தபோது அதிர்ந்து போனார்.

    கும்பகோணம்: மீது போலீசார் வழக்கு

    கும்பகோணம் அருகே உள்ள ஆவணியாபுரம் பகுதி சதாம்உசேன் தெருவை சேர்ந்தவர் நிஜாமுதீன் (வயது 52). இவருக்கு சொந்தமான நஞ்சை நிலம் மருத்துவகுடி கிராமத்தில் உள்ளது.

    இதில் நிஜாமுதீன் விவசாயம் செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக கடன் வாங்கி குறுவை சாகுபடி செய்து வந்தார். தற்போது குறுவை நெல் அறுவடைக்கு தயாராக இருந்தது. நேற்று காலை வயலுக்கு சென்ற நிஜாமுதீன் நெல் அறுவடைக்கு தயாராக இருப்பதை கண்டு அதற்கான பணிகளில் ஈடுபட்ட நினைத்து வீடு திரும்பினார்.

    இந்நிலையில் நேற்று மதியம் மேலமருத்துவக்குடி பட்டவெளி தெருவை சேர்ந்த பழனிச்சாமி(38) என்பவர் சிலருடன் அங்கு வந்து நெல் அறுவடை எந்திரம் கொண்டு நிஜாமுதீன் வயலில் நெல்லை அறுவடை செய்துள்ளார்.

    இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்த சிலர் இதுபற்றி நிஜாமுதீனுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக தனது வயலுக்கு வந்து பார்த்தபோது அதிர்ந்து போனார்.

    அங்கு எந்திரத்தை கொண்டு தனது வயலில் தன் உழைப்பில் சாகுபடி செய்யப்பட்டிருந்த குறுவை நெல்லை பழனிசாமி மற்றும் சிலர் மும்முரமாக அறுவடை செய்தது தெரியவந்தது.

    இதுபற்றி நிஜாமுதீன் பழனிச்சாமி யிடம் சென்று எப்படி என் வயலில் நீங்கள் அறுவடை செய்யலாம் என்று தட்டிக் கேட்டுள்ளார்.

    அப்போது பழனிசாமி மற்றும் அவருடன் வந்த கும்பல் நிஜாமுதீனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் செய்வதறியாது தவித்த நிஜாமுதீன் உடனடியாக சென்று திருநீலக்குடி போலீசில் புகார் செய்தார்.

    இதுபற்றி போலீசார் பழனிச்சாமி உள்ளிட்ட சிலர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    மற்றொருவர் உழைப்பில் விளைந்த நெல்லை ஒரு கும்பல் அறுவடை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரிசர்வ் வங்கி விதிப்படி 24 மணி நேரமும் ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை பாதுகாப்பாக காவலுடன் வைக்கவேண்டும்.
    • டிஜிட்டல் எழுத்துக்கள் கண்ணுக்கு தெரியாமல் அழிந்தநிலையில் இருக்கின்றன.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட நுகர்வோர்பாதுகாப்பு மையம் கோரிக்கதிருத்துறைப்பூண்டி நகரில் தேசிய மற்றும் தனியார் வங்கி களின்10 ஏடிஎம் எந்திரங்கள் இயங்கி வருகின்றன. வங்கிகளில் நேரடியாக வரும் கூட்டத்தை குறைப்பதற்காக ரிசர்வ் வங்கி ரோடு ஓரங்களில்ஏடிஎம் எந்திரங்களை 24 மணி நேரம் இயக்கி பணம் எடுக்க வசதியாக தேசியதனியார் வங்கிகளை ஏடிஎம் எந்திரங்கள் அமைக்க அனுமதித்துள்ளது.

    ரிசர்வ் வங்கி விதிப்படி 24 மணி நேரமும் ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தை பாதுகாப்பாக காவலுடன் வைக்கவேண்டும். இதன்படி சிசி டிவியும் கேமராவுடன்அமைக்க ப்பட்டுள்ளது.

    ஆனால் தேசிய மற்றும் தனியார் வங்கிகள் ஏடிஎம்களை முறையாக பராமரி க்கவில்லை.

    இரவு நேரங்களில் பணம் இருப்பதில்லை.

    டிஜிட்டல் எழுத்துக்கள் கண்ணுக்கு தெரியாமல் அழிந்தநிலையில் இருக்கின்றன.

    கோளாறுகளை உடன் சீர் படுத்துவதில்லை.

    அவசரமாக மருத்துவமனை க்குசெல்லும் நோயாளிகள் மற்றும்வெளியூர் பயனாளிகள் ஆகியோர் ஏடிஎம்மில் பணம் எடுக்க இயலாமல் தடுமாறு கின்றனர்.

    இது சம்பந்தமாக திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையத்திற்கு புகாரும் வந்துள்ளது.

    ஆதலால் திருவாரூர் மாவட்ட கலெக்டர் உடனடியாக ஏடிஎம் எந்திரங்களில் ஏற்பட்டுள்ள குறைகளை நீக்கி 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட நுகர்வோர் மையம் சார்பாக மாவட்ட தலைவர் வழக்கறிஞர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

    • மாநகராட்சிக்கு புதை சாக்கடை அடைப்பு நீக்கும் எந்திரம் வாங்கப்பட்டது
    • ரூ.42 லட்சத்தில் தானியங்கி எந்திரம்

    கரூர்:

    கரூர் மாநகராட்சியில் கரூர், இனாம் கரூர் பகுதியில் உள்ள 32 வார்டுகளில் புதை சாக்கடைகள் உள்ளன. இவற்றில் ஏற்படும் அடைப்பு, கழிவுகளை நீக்கம் செய்ய ரூ.42 லட்சத்தில் தானியங்கி புதை சாக்கடை அடைப்பு நீக்கும் எந்திரம் வாங்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து கரூர் மாநகராட்சி அலுவலகம், அண்ணாசிலை அருகேயுள்ள புதை சாக்கடைகள் ஆளிறங்கும் குழியில், தானியங்கி புதை சாக்கடை அடைப்பு நீக்கும் எந்திர பணியை மேயர் கவிதா தொடங்கிவைத்தார்.

    • சாலையை எந்திரம் கொண்டு துளையிட்டு தார் மற்றும் கருங்கல் ஜல்லி அடங்கிய கலவையை வெளியே எடுத்து சோதனை செய்தனர்.
    • சாலை 85 மில்லிமீட்டர் ஆழத்துக்கு தரமாக உள்ளதா மற்றும் உயரம் அகலம் ஆய்வு செய்யப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரிலிருந்து புதுப்பட்டினம் செல்லும் நெடுஞ்சாலை ரூ.1கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் சாலை மேம்படுத்தப்பட்ட பணியை நெடுஞ்சாலை துறையின் மயிலாடுதுறை கோட்ட பொறியாளர் தங்கராஜ், உதவி கோட்ட பொறியாளர் ஆனந்தி, உதவி பொறியாளர் சசிகலா, சாலை ஆய்வாளர் பிரபு, தொழில்நுட்ப உதவியாளர் விமல் ஆகியோர் புத்தூரில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.சாலையை எந்திரம் கொண்டு துளையிட்டு தார் மற்றும் கருங்கல் ஜல்லி அடங்கிய கலவையை வெளியே எடுத்து சோதனை செய்தனர். பின்னர் கோட்ட பொறியாளர் தங்கராஜ் கூறுகையில், சாலை 85 மில்லிமீட்டர் ஆழத்துக்கு தரமாக உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது. உயரம் அகலம் ஆய்வு செய்யப்பட்டது என்றார். சாலை பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

    • மக்கும் குப்பைகளைக்கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்க மக்கும் குப்பைகளை பிரிப்பதற்கு எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
    • கிராமத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உபதலை ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார்.

    ஊட்டி:

    உபதலை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் சுமார் 27.25 லட்சம் மதிப்பீட்டில் மக்கும், மக்காத குப்பைகளை பிரிக்க கூடாரம் அமைத்து மக்கும் குப்பைகளைக்கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்க மக்கும் குப்பைகளை பிரிப்பதற்கு எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த எந்திரத்தின் சோதனை ஒட்டம் தொடங்கியது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், உதவியாளர் ஜெயந்தி, தூய்மைபாரத ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ், ஊராட்சி செயலாளர் சுரேஷ்குமார், உபதலை ஊராட்சிமன்ற தலைவர் சி.பாக்கியலட்சுமி சிதம்பரம் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    அனைத்து வார்டு உறுப்பினர்களையும் தூய்மை காவலர்களையும் அழைத்து எந்திரத்தை இயக்கி, கிராமத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உபதலை ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்தார்.

    • மானிய விலையில் வேளாண் எந்திரம் பெற விவசாயிகளுக்கு வாய்ப்பு உள்ளது.
    • மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தும் வகையில் மதிப்புக்கூட்டும் எந்திரங்கள் மானிய விலையில் விற்கப்படுகின்றன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வா்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விவசாயிகள் விளை வித்த பொருள்களை சந்தைப்படுத்தும் காலம் வரை ஏற்படும் இழப்புகளை குறைத்து சேமிப்புக்கால அளவை அதிகரித்து மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தும் வகையில் மதிப்புக்கூட்டும் எந்திரங்கள் மானிய விலையில் விற்கப்படு கின்றன.

    எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு, தேங்காய் மட்டை உரிக்கும் எந்திரம், சிறிய பருப்பு உடைக்கும் எந்திரம், சிறிய வகை நெல் அரைவை எந்திரம், தானியம் அரைக்கும் இயந்திரம், நிலக்கடலை தோள் உரித்து வகை பிரிக்கும் எந்திரம், கேழ்வரகு சுத்தப்படுத்தி கல் நீக்கும் எந்திரம், மாவரைக்கும் எந்திரம், தீவனம் அரைக்கும் எந்திரம் ஆகியவை 40 சதவிகித மானியம் அல்லது அரசு நிா்ணயித்த உச்சவரம்புத் தொகையில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படுகிறது.

    மேலும் தகவல்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் பிரிவு மற்றும் பரமக்குடியில் உள்ள வேளாண்மைப்பிரிவு உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு தகவல் பெறலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • இங்கு லாரிகளுக்கு மட்டும், பொக்லைன் எந்திரம் மூலம் மணல் நிரப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
    • இந்நிலையில், கோவிந்தநாட்டுசேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் டிராக்டரில் மணல் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    கபிஸ்தலம்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே உள்ள கோவிந்தநாட்டுச்சேரி கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு லாரிகளுக்கு மட்டும், பொக்லைன் எந்திரம் மூலம் மணல் நிரப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கோவிந்தநாட்டுசேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் டிராக்டரில் மணல் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இது தொடர்பாக கடந்த 2-ம் தேதி பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதணன், துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, சுரங்கவியல் துறை உதவி செயற்பொறியாளர் முருகைய்யன் மற்றும் கிராம மக்கள் சார்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 6-ம் தேதி முதல் 1 யூனிட் ரூ.2200-க்கு டிராக்டரில் மணல் வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் கிராம மக்கள் டிராக்டர் மூலம் கொள்ளிடம் ஆற்றில் மணல் எடுக்க சென்ற போது 1 யூனிட்டிற்கு ரூ.3500 வழங்க வேண்டும் என சுரங்கவியல் துறை அதிகாரிகள் மணல் வழங்க மறுத்தனர்.

    இதனை தொடர்ந்து, கிராம மக்கள் கோவிந்தநா ட்டுச்சேரி, கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வரும் அரசு மணல் குவாரியை 20-க்கும் மேற்பட்ட டிராக்டரை கொண்டு மறித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த கபிஸ்தலம் உதவி இன்ஸ்பெக்டர் ராஜ்கமல், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் போராட்டம் கைவிட ப்பட்டது.

    • வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு நடந்தது.
    • முதல் மற்றும் 2-ம்கட்ட சரிபாக்கும் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தற செயல் நேரடி தேர்தல் - 2022 தொடர்பாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் மற்றும் 2-ம்கட்ட நிகழ்வு கலெக்டர் அலுவலக சிறு கூட்டரங்கில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.

    இதில் கலெக்டர் பேசியதாவது:-

    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுரையின்படி, நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தற்செயல் நேரடித் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மாவட்ட அளவில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்காலிக ஒதுக்கீடு செய்வதற்கான முதல் மற்றும் 2-ம்கட்ட சரிபாக்கும் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்திற்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 20 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 40 வாக்குப்பதிவு எந்திரங்களின் சரிபார்க்கும் பணிகள் கடந்த 28.6.2022 அன்று முடிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் நிலையில் உள்ளது.

    தற்சமயம் இளையான்குடி வார்டு 13-ல் நகர்ப்புற உள்ளாட்சி தற்செயல் நேரடித்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான ஒரு வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஒதுக்கீடு செய்வதற்கென அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப்பிரமுகர்கள், போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் மற்றும் இளையான்குடி பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் முன்னிலையில், இணையதளம் வாயிலாக முதல் மற்றும் 2-ம் கட்ட பணிகள் நடந்தது.

    இதில், இளையான்குடி பேரூராட்சிக்கு 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வீரராகவன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ராஜா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப்பிரமுகர்கள், வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • 1 ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை வகுப்புகள் செயல்பட்டு வருகிறது.
    • 160 மாணவிகள் படித்து வருகின்றனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள தீத்தம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி 1922ம் ஆண்டு துவங்கப்பட்டது.

    1 ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை வகுப்புகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தற்போது 250 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 160 மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு வெள்ளகோவில் தன்னார்வு அமைப்பின் சார்பில் நாப்கின் எந்திரம் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் எஸ்.பி. தனலட்சுமி, தலைமை தாங்கினார். உதவி ஆசிரியர் பி.சிவக்குமார் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் தன்னார்வளர்கள் எஸ்.ரவிச்சந்திரன், செந்தில்குமார் ஆகியோர் நேப்கின் எரியூட்டல் எந்திரத்தை பள்ளிக்கு நன்கொடையாக வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் விஜயலட்சுமி, நளினி. மற்றும் மேற்கு தோட்டம் கார்த்திகேயம், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் எஸ். என். சாமிநாதன். பள்ளி மேலாண்மை கல்விக்குழு தலைவர் கஸ்தூரி ரம்யா, உறுப்பினர் பானுமதி உட்பட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ×