என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 225021"
- மைக்ரோ ஏ.டி.எம். மூலமாக பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டைகள் மூலம் கடன் வழங்கப்பட்டது.
- கூட்டுப்பொறுப்புக்குழுக்களை சேர்ந்த 10 பேருக்கு ரூ.4.50 லட்சம் கடன் வழங்கப்பட்டது.
சுவாமிமலை:
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் நாகேஸ்வரன் வடக்கு வீதியில் உள்ள சந்திரசேகரபுரம் கூட்டுறவு மொத்த விற்பனை அங்காடியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
பண்டகசாலையின் சுயசேவைபிரிவு மருந்தகங்கள் மற்றும் அலுவலகத்தை ஆய்வு மேற்கொண்டு கும்பகோணம் பகுதி மக்களுக்கு சிறப்பான சேவையாற்றி வருவதாக பாராட்டினார்.
முன்னதாக, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு வருகை தந்த ராதாகிருஷ்ணன், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் பேங்க் ஆன் வீல்ஸ் வேன்-ஐ தொடக்கி வைத்து, மைக்ரோ ஏ.டி.எம். மூலமாக பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டைகள் மூலம் கடன் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, வங்கியின் தலைமை கிளை மூலம் 6 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 70 பேருக்கு ரூ.12 லட்சமும், 2 கூட்டுப்பொறுப்புக்குழுக்களை சேர்ந்த 10 பேருக்கு ரூ.4.50 லட்சமும் கடன் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வங்கி தலைவர் ஆசைமணி, தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, வங்கி மேலாண்மை இயக்குநர் பெரியசாமி, தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் பழனீஸ்வரி, முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, வங்கி முதன்மை வருவாய் அலுவலர் ஜெகத்ரட்சகன், பண்டகசாலை தலைவர் அயூப்கான், பண்டகசாலையின் துணைப்பதிவாளரும் மேலாண்மை இயக்குனருமான சிவசுப்பிரமணியன் மற்றும் துணைப்பதிவாளர்கள் தயாள விநாயக அமல்ராஜ், அட்சயப்பிரியா, கருப்பையா, வங்கியின் உதவி பொது மேலாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- சேலம் மாவட்டம் ஆத்தூர் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பலகார சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்தனர்.
- 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆத்தூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர், மாலினி, தம்பதியர். இவர்கள் கடந்த சில வருடங்களாகவே நரசிங்கபுரம், விநாயகபுரம், திருநாவுக்கரசு நகர், தில்லை நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பலகார சீட்டு நடத்துவதாக மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை வசூல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள் வீட்டை காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர். இதனால் அவர்களிடம் பணம் கட்டியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களிடம் பணம் வசூல் செய்து கொண்டு மோசடி செய்த 2 பேரிடமிருந்து தங்களுக்கு பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என கூறினார்கள். இதை தொடர்ந்து சம்மந்தப்பட்ட சந்திரசேகர், மாலினி ஆகிய இருவரையும் போலீசார் அழைத்து விசாரித்தனர்.
அப்பொழுது விரைவில் அனைவருக்கும் பணத்தை கொடுத்து விடுவதாக அவர்கள் கூறினர். இதை தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.
- ரூ.30.75 லட்சம் அரசு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்.
- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கப்பட்டது
கரூர்:
ரூ.30.75 லட்சம் அரசு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் 62 உள்ளிட்ட 362 மனுக்கள் பெறப்பட்டது.
பின்னர் ரூ.4,14,240ல் 12 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஒரு நபருக்கு தங்கத் தந்தை திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா, தாட்கோ திட்டத் தின் கீழ் 5 பேருக்கு ரூ.26.61 லட்சத்தில் நிலம் வாங்கும் திட்டம், தொழில் முனைவோர் திட்டத்தின் சார்பில் இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டத்தில் அரசு மானியத்துடன் தொழில் தொடங்குவதற்கான ஆணைகள் என மொத்தம் 18 பேருக்கு ரூ.30.75 லட்சத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளைகலெக்டர் வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதின், ஊராட்சிகள் உதவி இயக்குநர் அன்புமணி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை காமராஜர் காலனியை சேர்ந்தவர் ஸ்ரீதரன் (வயது 48). இவர் பட்டு நெசவுத் தொழில் செய்து வருகிறார் .
இவர் அதே பகுதியை சேர்ந்த மணிவண்ணன் ( 50) என்பவரிடம் ரூ. 22 லட்ச ரூபாயை 2018-ம் ஆண்டு கடனாகப பெற்றார். அப்போது ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்திட்டும், மேலும் அவருக்கு சொந்தமாக உள்ள 2,000 சதுர அடி நிலத்தை அடமானமாக வழங்கியுள்ளார்.
மாதம்தோறும் மணிவண்ணன் வங்கி கணக்கில் வட்டியை செலுத்தி வந்தார். ஆனால் வருமான வரி பிரச்சனை வரும் என்பதால் ரொக்கமாக தரும்படி மணிவண்ணன் கேட்டுள்ளார். அதன்படி 14 லட்ச ரூபாய் செலுத்தி உள்ளார்.
இதையடுத்து தான் ஏற்கனவே வழங்கிய ஆவணங்களை கேட்டபோது கூடுதலாக 52 லட்சம் ரூபாய் தந்தால் மட்டுமே வழங்க முடியும், அத்துடன் ஜாமீனாக வழங்கிய அடமான நிலத்தையும் தர இயலாது என மணிவண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் அந்த இடத்தை அதிகரிக்கும் நோக்கில் சுத்தம் செய்து வேலி அமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுகுறித்து கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாக கடந்த 4-ம் தேதி ஸ்ரீதரன் அம்மா பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதனை விசாரித்த போலீசார், மணிவண்ணன் மீது கந்துவட்டி கேட்டு மிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்