search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நட்டாலம்"

    • ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
    • குழித்துறை மறை மாவட்டம் மாத்திரவிளை மறைவட்ட மக்கள் சார்பில் நடந்தது

    கன்னியாகுமரி:

    குழித்துறை மறை மாவட்டம் மாத்திரவிளை மறைவட்ட மக்கள் சார்பில் புனித தேவசகாயம் மக்கள் திருவிழா நட்டாலத்தில் நடைபெற்றது.

    விழாவையொட்டி நேற்று மதியம் புனித தேவசகாயம் ஆளுமையும் பண்புகளும், நமக்கு விடுக்கும் சவால்களும் என்னும் தலைப்பில் இறையியல் பேராசிரியர் அல்போன்ஸ் கருத்துரை வழங்கினார். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், தமிழ் மலங்கரை கலை தொடர்பகம் வழங்கிய புனித தேவசகாயமே என்னும் திரைப்படம் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் வட்டார முதல்வர் மரிய வின்சென்ட் தலைமையில், திருத்தல அதிபர் றசல்ராஜ் முன்னி லையில் ஆடம்பர திருப்பலி நடை பெற்றது. ஜார்ஜ் பொன்னையா மறையுரை நிகழ்த்தினார்.

    கில்பர்ட் லிங்சன், மரிய அற்புதம், ரொமரிக் ததேயுஸ், இயேசுமரியான், தோமஸ், ஷிஜின், தானியேல் ஆசீர்வாதம், றீகன் மோரீஸ், ஜியோ கிளிட்டஸ், ஜஸ்டின் பிரபு, ஜோவின் ஸ்டீபன் மற்றும் பலர் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர்.

    மாத்திரவிளை மறைவட் டத்தைச் சேர்ந்த 23 பங்கு களிலிருந்தும் ஆயிரக் கணக்கான இறைமக்களும், புனித தேவசகாயம் பக்தர் களும் இத்திருப்பலியில் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை வட்டார முதல்வர் மரிய வின்சென்ட் தலைமையில் அருட்பணி யாளர்கள் கில்பர்ட் லிங்சன், ஷிஜின், வட்டார மேய்ப்பு பணி பேரவை துணைத்தலைவர் ஜான் கென்னடி, செயலாளர் வக்கீல் மரிய அருள்தாஸ், விழாக்குழு உறுப்பினர்கள் ஜஸ்டின், ஜஸ்டஸ், போஸ், ஜெனோ ரெனிட்டஸ், மரியரெத்தினம் மற்றும் அனைத்து பக்தசபைகள், இயக்கங்கள், அன்பியங்கள், வட்டார அருட்சகோதரிகள் இணைந்து செய்திருந்தனர்.

    ×