search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கி"

    • மேஜையில் ரூ.6.5 லட்சம் அடுக்கி வைத்து அதனை எந்திரம் மூலம் எண்ணிக் கொண்டிருந்தார்.
    • சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த வங்கி மேலாளர் அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் நரசாபுரத்தில் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு நேற்று பட்ட பகலில் முகமூடி அணிந்தபடி மர்ம நபர் ஒருவர் வந்தார்.

    அவரிடம் முகமூடியை கழட்டி விட்டு உள்ளே செல்லுங்கள் என அங்கிருந்த காவலாளி தெரிவித்தார். அப்போது மர்ம நபர் தன்னுடைய முகத்தில் கொடூரமான நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    அதனை மறைப்பதற்காக தான் முகமூடி அணிந்துள்ளேன். மேலும் எனக்கு குடும்ப கஷ்டம் உள்ளது. அதனால் நகை அடகு வைக்க வந்துள்ளேன் என கூறினார். இதனை நம்பிய காவலாளி அவரை வங்கிக்குள் அனுமதித்தார்.

    இதை தொடர்ந்து மர்ம நபர் கேஷியரிடம் சென்றார். நகை அடகு வைக்க வேண்டும் என கூறினார்.

    அப்போது கேஷியர் காத்திருக்கும் படி வலியுறுத்தினார். மர்ம நபர் அங்கு காத்திருந்தார். அந்த நேரத்தில் அவரது மேஜையில் ரூ.6.5 லட்சம் அடுக்கி வைத்து அதனை எந்திரம் மூலம் எண்ணிக் கொண்டிருந்தார்.

    அப்போது காத்திருந்த முகமூடி நபர் திடீரென தனது பையில் இருந்த பெரிய கத்தியை எடுத்து கேஷியரின் கழுத்தில் வைத்தார். பணம் முழுவதையும் தர வேண்டும் இல்லாவிட்டால் கழுத்தை அறுத்து விடுவேன் என மிரட்டினார்.

    இதனைக் கண்டு வங்கிக்கு வந்திருந்த பொதுமக்கள் ஊழியர்கள் காவலாளி அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

    ஒரு கையில் கத்தியை பிடித்தபடி மற்றொரு கையில் கேஷியர் முன்பு இருந்த பணத்தை தனது பையில் அள்ளிப் போட்டுக் கொண்டார். பின்னர் கத்தியை வெட்டுவது போல ஏந்திக்கொண்டு வங்கிக்கு வெளியே சென்றார். அங்கிருந்து அவரது வாகனம் மூலம் கில்லாடி திருடன் தப்பி சென்று விட்டார்.

    இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த வங்கி மேலாளர் அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வரைந்து வந்தனர். வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் முகமூடி அணிந்த நபர் கத்தியை காட்டி பணத்தை கொள்ளை அடித்த காட்சிகள் பதிவாகி இருந்தன.

    இதன் மூலம் திருடனை தேடி வருகின்றனர். வங்கியில் பட்டப் பகலில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது.

    அரியலூரில் வீட்டு கடனுக்காக தனியார் வங்கி முறைகேடாக வசூல் செய்த ரூ.1.35 லட்சத்தை திருப்பி கொடுக்க உத்தரவு

    அரியலூர்,  

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சிநாதன் என்பவரின் மனைவி லலிதா(வயது 46). கடந்த 2020-ம் ஆண்டு இவர், அரியலூர் தனியார் வங்கியில் ரூ.4.66 லட்சம் வீட்டுக் கடன் பெற்றிருந்தார். அதற்கு அடமானமாக தன்னுடைய வீட்டுப் பத்திரத்தை அந்த வங்கியில் கொடுத்துள்ளார்.

    அந்த வங்கியின் சார்பில் அந்த வீட்டுக் கடன் தொகையிலிருந்து லலிதாவுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரூ.11,398 செலுத்தி இன்சூரன்ஸ் செய்து கொடுத்திருந்தனர். கடன் தவணையை முறையாக செலுத்தி வந்த லலிதா கடந்த 2022ம் ஆண்டு, ஏப்ரல் 13-ந்தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

    கடன் ஒப்பந்த விதிகள் மற்றும் காப்பீட்டு விதிகளின்படி கடன் பெற்றவர் உயிரிழந்து விட்டால் மீதமுள்ள தவணைகளை காப்பீட்டு நிறுவனம் செலுத்த வேண்டும். ஆனால் காப்பீடு நிறுவனம் காப்பீடுத் தொகையைச் செலுத்தவில்லை.

    ஆனால் தனியார் வங்கி தரப்பில் கொளஞ்சிநாதன் மற்றும் அவரது மகன்களை மீதி தவணைகளைக் கட்டுமாறு தொடர்ந்து கட்டாயப்படுத்தி உள்ளனர். அவர்கள் கடந்த மார்ச் மாதம் வரை 11 மாதத் தவணைத் தொகையை செலுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து லலிதாவின் கணவர் கொளஞ்சிநாதனும், அவரது மகன்களும் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த மே மாதம் வழக்குத் தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த வந்த நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் தமிழ்ச்செல்வி, உறுப்பினர்கள் பாலு மற்றும் லாவண்யா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

    இதில் தனியார் வங்கியும், இன்சூரன்ஸ் நிறுவனமும் சேர்ந்து லலிதா பெயரில் செய்திருந்த அடமான ஒப்பந்தத்தை ரத்து செய்து, அவரது வீட்டுப் பத்திரங்களை 30 நாள்களுக்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும். சட்டவிரோதமாகப் பெற்ற 11 தவணைத் தொகைகள் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 850-ஐ வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கு நஷ்ட ஈடாக ரூ.50 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • செல்போனில் அதற்கான குறுஞ்செய்தி அவருக்கு வந்த போது வங்கி கணக்கில் ரூ.756 கோடி இருப்பு தொகை மீதம் இருப்பதாக வந்தது.
    • நாங்கள் எப்போதும் சிறந்த சேவைகளை வழங்குவோம் என உறுதி அளிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே உள்ள வீரப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 29). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் கணேசன் கடந்த 6-ந் தேதி நண்பர் ஒருவருக்கு தான் கணக்கு வைத்துள்ள தஞ்சை தனியார் வங்கி மூலம் ரூ.1000 செலுத்தினார். பின்னர் செல்போனில் அதற்கான குறுஞ்செய்தி அவருக்கு வந்த போது வங்கி கணக்கில் ரூ.756 கோடி இருப்பு தொகை மீதம் இருப்பதாக வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசன் அந்த தனியார் வங்கிக்கு சென்று இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து வங்கியில் உள்ளவர்கள் கணேசனுக்கு வந்த குறுஞ்செய்தி மற்றும் செல்போன் நம்பரை வாங்கி வைத்துக்கொண்டு போனில் தகவல் தெரிவிப்பதாக கூறி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் எந்த தகவலும் தெரியாததால் கணேசன் வங்கி ஸ்டேட்மெண்ட் எடுத்து பார்த்துள்ளார். ஆனால், அதில் ரூ.756 கோடி இருப்பு தொகை காட்டாமல் அவரது சேமிப்பு தொகையை மட்டுமே காட்டியது.

    இந்நிலையில் கணேசன் செல்போன் எண்ணுக்கு மீண்டும் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் சமீபத்தில் தங்களுக்கு அனுப்பப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான இருப்பு தொகை தவறாக காட்டப்பட்டதால் ஏற்பட்ட சிரமத்துக்கு நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். கீழ்க்கண்ட இணைப்புக்குள் சென்று தங்களது இருப்பை சரி பார்த்துக் கொள்ளவும்.

    நாங்கள் எப்போதும் சிறந்த சேவைகளை வழங்குவோம் என உறுதி அளிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் கடந்த சில நாட்களாக நீடித்த குழப்பம் முடிவுக்கு வந்ததால் கணேசன் நிம்மதி அடைந்துள்ளார். 

    • உடனடியாக இதுகுறித்து கருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
    • மர்ம நபர்கள் சுவரில் துளையிட முயன்ற பகுதி நேரடியாக வங்கியின் லாக்கர் அறைக்கு செல்கிறது.

    சேலம்:

    சேலம் கருப்பூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி சந்தைப்பேட்டை பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது.

    நேற்று காலை 11 மணியளவில் இந்த வங்கியின் பின்பக்க சுவரை உடைத்து மர்ம நபர்கள் சிலர் துளையிட்டு கொண்டிருந்தனர்.

    இதனை அந்த வழியாக வந்த வங்கியின் மேலாளர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறத்து கருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருப்பூர் போலீசார் வங்கியின் சுவரை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இதில் மர்ம நபர்கள் சுவரில் துளையிட முயன்ற பகுதி நேரடியாக வங்கியின் லாக்கர் அறைக்கு செல்கிறது.

    எனவே மர்மநபர்கள் கொள்ளையடிக்கும் நோக்கில் சுவரை துளையிட்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம்நபர்களை தேடி வருகின்றனர்.

    • வங்கிகளின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி கடன் முகாம் நடக்கிறது.
    • கலெக்டர் ஆஷா அஜித் தெரிவி்த்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தை சார்ந்த கல்லூரி பயிலும் மாணவர்கள் பயன்பெரும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் (DDC HALL) அடுத்த மாதம் 5-ந் தேதி (செவ்வாய்கிழமை) அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

    எனவே, கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ மாணவியர்கள் அனைவரும் www.vidyalakshmi.co.in என்ற இணையத்தளத்தில் தங்களு டைய விண்ணப் பத்தினை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து, முகாம் நடைபெறும் நாளன்று விண்ணப்பத்தின் நகல், மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோரின் 2 தற்போதைய புகைப்படம், வங்கி பாஸ் புத்தக நகல், இருப்பிட சான்று நகல், வருமான சான்று நகல், ஜாதி சான்று நகல், பான்கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்லூரியில் இருந்து பெறப்பட்ட சான்றிதழ் மற்றும் கல்விக் கட்டண விவரம், பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.

    இம்முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப் பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, பரிசீலனை செய்து மாணாக்கர்களுக்கு உடனடி கடன் ஆணைகள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை மாணாக்கர்கள் பயன்படுத்திக்ககொண்டு , இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    • வெங்கடேசன் வயர்மேனாக பணியாற்றி வருகிறார்.
    • மனைவியின் நகையை அடகு வைப்பதற்காக வெங்கடேசன் வங்கிக்கு சென்றார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் பரணிநகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது45). இவர் பாளை பெருமாள்புரத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

    ரூ. 2 லட்சம் அபேஸ்

    இவர் ஆலங்குளம் பகுதியில் ஒரு இடம் வாங்க முடிவு செய்தார். இதற்காக நேற்று தனது மனைவியின் நகையை அடகு வைப்பதற்காக ஆலங்குளத்தில் தாலுகா அலுவலகம் அருகே உள்ள ஒரு வங்கிக்கு அவர் சென்றார். அங்கு நகையை அடகு வைத்துவிட்டு ரூ. 2 லட்சம் பணத்தை பெற்றார்.

    பின்னர் அந்த பணத்தை தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு, ஆலங்குளத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். தொடர்ந்து சக ஊழியர் ஒருவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அஙகு வைத்து பெட்டியை திறந்து பார்த்தபோது அவரது பணத்தை காணவில்லை.

    சி.சி.டி.வி. காட்சிகள்

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ஆலங்குளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் இருந்த பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். வெங்கடசேன் பணம் எடுத்து வந்த வங்கி முன்பு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த வங்கியின் முன்பு சிலர் நின்று கொண்டு பணம் எடுத்து செல்பவர்களை நோட்டமிட்டு திருடிச் செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வருவதாகவும், பொதுமக்கள் மற்றும் வாகன நடமாட்டம் மிகுந்து காணப்படும் இந்த பகுதியில் மேற்கொண்டு திருட்டு சம்பவம் நடைபெறாமல் இருக்க போலீசார் கூடுதல் கவனம் செலுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஓமலூர் அருேக கடன் தொல்லையால் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
    • குடும்ப தேவைக்காக சிலரிடம் கடன் வாஙகியதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு வங்கிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பூமிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ் 37, இவர் செவ்வாய்பேட்டையில் உள்ள பொதுத்துறை வங்கியில் ஊழியராக பணி புரிந்து வந்தார்.

    இந்த நிலையில குடும்ப தேவைக்காக சிலரிடம் கடன் வாஙகியதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு வங்கிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர் நேற்று வீட்டிலேயே மின் விசிறியில் தூக்கு போட்டு தொங்கினார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அனைத்து கிளைகளும் 4-வது வார சனிக்கிழமை மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
    • இன்றும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டது.

    சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அனைத்து கிளைகளும் 4-வது வார சனிக்கிழமை மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.நேற்றும்,இன்றும் தமிழக அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற இலவச வங்கி கணக்கு தொடங்க ஏதுவாக செயல்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-நேற்றும், இன்றும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டது. புதிய கணக்குகள் தொடங்கும் நடைமுறையினை மேற்கொள்ள பட்டது. எனவும் இதர பணபரிவர்த்தனைகள் மேற்கொள்ள வில்லை எனவும் தெரிவித்துள்ளனர். குடும்பத் தலைவிகள் ரூ 1000 உரிமைத் தொகை பெற இலவச வங்கி கணக்கு துவங்க வங்கிக்கு வரலாம். இந்த வாய்ப்பை மகளிர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

    • சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
    • கூட்டுறவு வங்கிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தகட்டூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கி கட்டிடம் சுமார் 40 ஆண்டுக ளுக்கு முன்பு கட்டப்ப ட்டதாகும். நாள்தோறும் இந்த வங்கிக்கு வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில், தற்போது இந்த வங்கி கட்டிடம் மேற்காரைகள் பெயர்ந்து சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் வங்கிக்கு வரும் மக்கள் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர்.

    எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.

    • நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
    • ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தர விட்டனர்.

    நாகர்கோவில் :

    கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் ரவிசாம் பேனர்ஜி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தனது சேமிப்பு கணக்கை வைத்துள்ளார். இந்த நிலை யில் பணத்தேவைக்காக நாகர்கோவிலில் உள்ள மற்றொரு தேசிய மயமாக்கப் பட்ட வங்கியின் ஏ.டி.எம்.மில் ரூ.5 ஆயிரம் எடுத்த போது பணம் வரவில்லை. ஆனால் அவரது செல்போ னுக்கு பணம் எடுக்கப்பட்ட தாக குறுந்தகவல்கள் வந்துள்ளது.

    உடனே தான் சேமிப்புக் கணக்கு வைத்திருந்த வங்கி மேலாளரிடம் புகார் தெரிவித்துள்ளார். அதற்கு அவர் 2 நாட்களில் அந்த பணம் உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப் பட்டு விடும் என்று கூறியுள்ளார். ஆனால் பணம் திரும்ப கிடைக்க வில்லை.

    இதனால் ரவி சாம்பேனர்ஜி சம்பந்தப் பட்ட வங்கிக்கு வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ஆனால் அதன் பின்னரும், உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான ரவிசாம்பேனர்ஜி குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் தேசிய மய மாக்கப்பட்ட வங்கியின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக்காட்டி நஷ்ட ஈடுடாக ரூ.15 ஆயிரமும், வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் மற்றும் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தர விட்டனர்.

    • ராமநாதபுரத்தில் வருகிற 12-ந்தேதி வங்கி கல்வி கடன் முகாம் நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களுக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் வங்கி கல்விக்கடன் முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 12-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    இதில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று பயன்பெறலாம். இந்த வங்கி கடன் முகாமில் தேசியமய மாக்கப்பட்ட அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் உள்ளிட்ட 17 வங்கிகள் பங்கேற்கின்றன.

    17 வங்கிகள் ஒரே இடத்தில் ஒன்று கூடி மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து ஆவணங்களை சரிபார்த்து விரைந்து கல்வி கடன் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க மாணவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. பொருளாதார சூழல் காரணமாக உயர் கல்வியை தொடர முடியாத மாணவர்கள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்று கல்விக்கடன் பெற்று பயன்பெறலாம்.

    ஏற்கனவே ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 700 மாணவர்களுக்கான உயர் கல்விக்கான உதவியை தன்னுடைய சொந்த நிதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கி வரும் நிலையில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வங்கிகளில் கல்வி கடன் பெற்று பயில விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில் மாணவர்களின் சிரமத்தை இலகுவாக்கும் வகையில் இந்த கல்வி கடன் முகாமை ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருங்கிணைத்துள்ளார்.

    ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாணவர்கள் பொருளாதார தடையால் உயர் கல்வி தொடர முடியாத நிலையில் இருக்கக்கூடாது. வங்கிகளின் மூலம் கல்வி கடன் பெற்று உயர் கல்வியை தொடர விரும்பும் மாணவ-மாணவிகள் இது தொடர்பான விவரங்களை ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அணுகி கேட்டு அறியலாம்.

    ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட மாணவ-மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது உயர்கல்வியை தொடர பயனுள்ள வகையில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி தெரிவித்துள்ளார். 

    • மத்திய அரசின் ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.
    • செப்டம்பர் 30ந் தேதி வரை 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.

    திருப்பூர் :

    மத்திய அரசின் ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.இவ்வகை ரூபாய் நோட்டு எப்போது வேண்டுமானாலும் தகுதிநீக்கம் செய்யப்படலாம் என்ற பேச்சும் இருந்து வந்தது. காரணம் 2,000 ரூபாய் நோட்டு, பணம் பதுக்கலுக்கு அதிகம் பயன்படும் என்ற அச்சம் இருந்தது.

    தற்போதும் பல்வேறு வகையில் பணம் பதுக்கல் அதிகரித்துள்ள காரணத்தால் மக்கள் கைக்கு 2000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கவே இல்லை. ரிசர்வ் வங்கி, 2018-19 ம் ஆண்டில் இருந்து புதிய 2,000 ரூபாய் நோட்டு அச்சடிப்பதை நிறுத்தியது. இந்நிலையில் 2,000 ரூபாய்கள் நீக்கம் செய்யப்படுவதாக அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.வரும் செப்டம்பர் 30ந் தேதி வரை, 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வசம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுக்களை தங்கள் வங்கி கணக்கில் 'டிபாசிட்' செய்து கொள்ளலாம். வேறு எந்த வங்கி கிளைகளிலும் 2,000 ரூபாய் நோட்டுகளை அளித்து அதற்கு இணையான மற்ற ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

    இந்த அறிவிப்பு நடுத்தர மற்றும் சாதாரண மக்களிடம் 2,000 ரூபாய் நோட்டுகள் இல்லாததால், பெரிய பரபரப்பு எழவில்லை. அப்படியே கைவசம் இருந்தாலும் எவ்வித கவலையும் தேவையில்லை. நான்கு மாத அவகாசம் இருப்பதால் நாளை முதல் பதட்டமில்லாமல் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என சிறப்பு ஏற்பாடு செய்துள்ள வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன.

    இதுகுறித்து திருப்பூர் பாரத ஸ்டேட் வங்கியின் உதவி பொது மேலாளர் ஒருவர் கூறியதாவது:- நாளை 23-ந் தேதி முதல் செப்டம்பர் 30ந் தேதி வரை 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.அதற்காக, வங்கி கிளைகளில் சிறப்பு கவுண்டர் திறக்கப்படும்.ஆதார், பான்கார்டு போன்ற ஏதாவது ஆவண விவரங்களுடன், விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து அதிகபட்சம் 20 ஆயிரம் ரூபாய் அளவுக்கு மாற்றிக்கொள்ளலாம்.கைவசம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை ஏ.டி.எம்., மையங்கள் வாயிலாகவோ, நேரடியாகவோ, தங்கள் வங்கி கணக்கில் செலுத்திக்கொள்ளலாம்.அதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை.2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மட்டும், படிவத்தை பூர்த்தி செய்து ஆவண நகல்களுடன் வழங்க வேண்டும்.

    பொதுமக்கள் எவ்வகையிலும் பதற்றமடைய தேவையில்லை. நான்கு மாதம் அவகாசம் உள்ளது. கைவசம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை பாதுகாப்பான முறையில் தங்கள் வங்கி கணக்கில் செலுத்தலாம். 500, 200, 100, 50 ரூபாய் நோட்டுகளாகவும் மாற்றிக்கொள்ளலாம். போதிய அளவுக்கு ரூபாய் நோட்டுகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். 

    ×