search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 225361"

    • பொதுக்குழு கூட்டம் தென்காசி ஸ்ரீசாரதாம்பா கிராண்ட் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
    • கலெக்டர் ரவிச்சந்திரன் அரிசி ஆலை எந்திரங்கள் கண்காட்சியினை தொடங்கி வைக்கிறார்.

    தென்காசி:

    அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க மாநில சம்மேளன பொதுக்குழு கூட்டம் தென்காசியில் உள்ள ஸ்ரீசாரதாம்பா கிராண்ட் திருமண மண்டபத்தில் வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் மாநில சம்மேளன தலைவர் மற்றும் செயலாளர் முன்னிலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு அரிசி ஆலை எந்திரங்கள் கண்காட்சியினை தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

    இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட, தாலுகா சங்க தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்கின்றனர். இத்தகவலை நெல்லை, தென்காசி மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வியாபாரிகள் சங்க தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

    • மயிலாடுதுறை மாவட்டத்தில் 3-வது மரபுசார் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.
    • பாரம்பரிய நெல் மற்றும் இதர பயிர் சாகுபடி முறைகளை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதி சீரமைப்பு திட்டம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சர்வதேச சிறுதானிய ஆண்டு-2023 மற்றும் மரபுசார் பன்முக தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    இதுகுறித்து கலெக்டர் மகாபாரதி பேசியதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டத்தில் 3-வது மரபுசார் பன்முகத் தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் பாரம்பரிய நெல் மற்றும் இதர பயிர் சாகுபடி முறைகளையும், அவற்றை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் முறைகளையும், இங்கு வந்துள்ள விவசாயிகள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    நிகழ்ச்சியில், பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபால், சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

      ஏற்காடு:

      சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 46-வது கோடைவிழா, மர் கண்காட்சி கடந்த 21-ந் தேதி தொடங்கி நடை பெற்று வருகிறது. நாளையுடன் கோடை விழா நிறைவடையும் நிலையில், பல்வேறு விதமான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்து மலர் கண்காட்சியை ரசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்து வருதால், அலங்கார வளைவுகள் மற்றும் பல்வேறு உருவங்களில் இருந்த மலர்கள் வாடின. இதைய டுத்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, நேற்று வாடிய பூக்கள் அனைத்தையும் அகற்றினர்.

      அதற்கு பதிலாக புதிய மலர்கள் கொண்டுவரப்பட்டு, மீண்டும் அலங்கரிக் கப்பட்டது. இதனிடையே, நேற்று மாலை ஏற்காட்டில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் சீதோஷண நிலையில் மாற்றம் ஏற்பட்டு குளிர் நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

      செல்லப்பிராணிகள்

      கண்காட்சி

      கோடைவிழாவின் 7-ம் நாளான இன்று, மலர்கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டுள்ளதால் ஏற்காடு களை கட்டியுள்ளது. ஏற்காடு அண்ணா பூங்காவில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள மலர்களை அவர்கள் கண்டு ரசித்தனர். மலர்களால் வடிவ மைக்கப்பட்ட பல்வேறு உருவங்கள் முன்பும், வண்ணமயமான மலர்களுக்கு முன்பும் நின்று குடும்பத்துடன் புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர். ஏற்காடு படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏற்காட்டில் இன்று சைக்கிள் போட்டி, இளைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டி மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாய் மற்றும் வீட்டு வளர்ப்பு விலங்குகள் கண்காட்சி நடைபெற்றது. இதில் காவல்துறையை சேர்ந்த நாய்களுக்கான கீழ்படிதல், சாகச காட்சிகள் ஆகியவைகளும் இடம் பெற்றன. தொடர்ந்து சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க, நாட்டிய நிகழ்ச்சி, நகைச்சுவை பட்டிமன்றம் மற்றும் இன்னிசை கச்சேரியும் நடத்தப்பட்டது.

      • தினமும் மாலை வேளையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
      • கண்காட்சியுடன் உணவுத்திருவிழாவும் நடைபெற்று வருகிறது.

      சென்னை:

      சென்னை தீவுத்திடலில் சுற்றுலா துறை சார்பில் சர்வதேச கைத்தறி மற்றும் கைவினைப் பொருள்கள் கண்காட்சி கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி தொடங்கியது.

      இந்த கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

      இந்த கண்காட்சியில் 10 வெளிநாடுகளை சேர்ந்த கைவிணை கலைஞர்கள் தங்களது நாட்டு பொருட்களை 30 அரங்குகளில் காட்சிப்படுத்தி உள்ளனர்.

      மேலும் இந்தியாவில் உள்ள 20 வெளி மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் தங்களது படைப்பு களை 83 அரங்குகளில் விற்பனைக்கு வைத்து உள்ளனர்.

      தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்த நெசவு துணி வகைகள், பட்டுச் சேலைகள், கைத்தறி கூட்டுறவு சங்கத்தின் கோ-ஆப்டெக்ஸ் துணி வகைகள், பூம்புகார் கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை 70 அரங்குகளில் உள்ளன. இந்த கண்காட்சியில் மொத்தம் 311 அரங்குகள் இடம்பெற்றுள்ளன.

      இந்த கண்காட்சியில் காஞ்சிபுரம், ஆரணி, திருப்புவனம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பட்டுச் சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், ராசிபுரம் தாழம்பூ கோர்வை பட்டு அலங்கார துணி வகைகள் போன்றவை உள்ளன.

      கைவினைப் பொருட்களில் தஞ்சாவூர் ஓவியங்கள், மரச்சிற்பங்கள், பெண்களுக்கான அணிகலன்கள், இயற்கை மூலிகை பொருட்கள் என ஏராளமான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. இந்த கண்காட்சியுடன் உணவுத்திருவிழாவும் நடைபெற்று வருகிறது. இதற்கான 30 உணவு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

      தினமும் மாலை வேளையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கண்காட்சியை இதுவரை 68 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளார்கள்.

      இந்த காண்காட்சி நாளை மறுநாள் (21-ந் தேதி) முடிவடைகிறது. காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த கண்காட்சியை பார்வையிடலாம்.

      • கண்காட்சியில் சிறப்பாக அரங்கம் அமைத்த வனத் துறைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
      • கூடலூா் மற்றும் நெல்லியாளம் நகராட்சிக்கு 3 ஆம் பரிசும் வழங்கப்பட்டது.

      ஊட்டி

      கூடலூா் மாா்னிங் ஸ்டாா் பள்ளி மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய கோடை விழா வாசனை திரவிய கண்காட்சி புதன்கிழமை நிறைவடைந்தது.

      நிறைவு விழாவுக்கு கூடலூா் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா தலைமை வகித்தாா்.

      கூடலூா் சட்டப் பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன், நகராட்சி ஆணையா் பிரான்சிஸ் சேவியா், நகா்மன்றத் தலைவா் பரிமளா, துணைத் தலைவா் சிவராஜ், தோட்டக்கலை உதவி இயக்குநா் ஜெயலட்சுமி, கூடலூா் வனச் சரக அலுவலா் ராஜேந்திரன் கூடலூர் நகர செயலிளர் இளஞ்செழியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

      நிறைவு விழாவில், கண்காட்சியில் சிறப்பாக அரங்கம் அமைத்த வனத் துறைக்கு முதல் பரிசும், தோட்டக்கலைத் துறைக்கு இரண்டாம் பரிசும், கூடலூா் மற்றும் நெல்லியாளம் நகராட்சிக்கு 3 ஆம் பரிசும் வழங்கப்பட்டது.

      இதில் பொதுமக்கள், தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.

      • வருகிற 20, 21-ம் தேதிகளில் தேயிலை கண்காட்சி நடக்க உள்ளது.
      • சிறு-குறு தேயிலை விவசாயிகளின் சிறப்பு ரக தேயிலையும் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

      கோவை,

      உலக தேயிலை தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் வருகிற 20, 21-ம் தேதிகளில் தேயிலை கண்காட்சி நடக்க உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகம், தேயிலை வாரியம், சுற்றுலா மற்றும் தோட்டக்கலைத் துறை ஆகியவை இணைந்து நடத்துகிறது. தேயிலை கண்காட்சியை முன்னிட்டு வருகிற 20-ம்தேதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பங்ளுகேற்கும் மனித சங்கிலி நடத்தப்படுகிறது.

      குன்னூர் தேயிலை கண்காட்சியை தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் முத்துக்குமார் தலைமையில், நீலகிரி எம்.பி ஆ. ராசா முன்னிலையில், தமிழக சுற்றுலா அமைச்சர் கா.ராமசந்திரன் வருகிற 20-ந் தேதி காலை 11 மணி அளவில் திறந்து வைத்து, கண்காட்சி அரங்குகளை பார்வையிடுகிறார்.

      குன்னூர் தேயிலை கண்காட்சியில் தேயிலை தூளின் பல்வேறு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு, விற்பனை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

      இதுதவிர சிறு-குறு தேயிலை விவசாயிகளின் சிறப்பு ரக தேயிலையும் காட்சிப்படுத்தப்பட உள்ளது.தேயிலை கண்காட்சியில் 25க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, அங்கு கலப்படம் இல்லாத தேயிலை தூள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது.

      அடுத்தபடியாக அகில உலக தேயிலை தினத்தை முன்னிட்டு வருகிற 21-ம் தேதி இண்ட்கோசர்வ் சார்பில் பள்ளி- கல்லூரி மாணவ மாணவிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கட்டபெட்டு தேயிலை தொழிற்சாலையை நேரில் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

      கண்காட்சி அரங்குகளில் தேயிலை தூள் தயாரிக்கும் எந்திரங்களை காட்சிப்படுத்தி, அதன்மூலம் தேயிலை தூள் தயாரிக்கும் முறை குறித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு, விளக்கம் தரபபட உள்ளது.

      எனவே நீலகிரி மாவட்டத்தில் 2 நாட்கள் நடக்கும் தேயிலை கண்காட்சியில் பொது மக்கள் மற்றும் சுற்றுலா ப்பயணிகள் கலந்து கொண்டு, கலப்படம் இல்லாத தேயிலை தூளை பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.

      • தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரியில் வேளாண்மை கண்காட்சி தொடங்கப்பட்டது
      • மாவட்ட கலெக்டர் கற்பகம் வேளாண்மை கண்காட்சியை தொடங்கி வைத்தார்

      பெரம்பலூர்,

      பெரம்பலூரில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தின் சார்பில் வேளாண்மை கல்லூரியில் 3 நாட்கள் நடைபெறும் வேளாண்மை கண்காட்சி நேற்று துவங்கியது.கண்காட்சி துவக்க விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்தார். தனலட்சுமி வேளாண்மை கல்லூரி முதல்வர் சாந்தகோவிந்த் வரவேற்றார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வேளாண்மை கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

      மாவட்ட போலீஸ் எஸ்பி ஷ்யாம்ளாதேவி, கல்விக்குழும துணை தலைவர் அனந்தலட்சுமி, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி நிர்வாக இயக்குனர் நிவானி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றிவைத்தனர்.கவுரவ விருந்தினர்களாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேளாண் விரிவாக்க இயக்குனர் முனைவர் முருகன் , வேளாண் இணை இயக்குநர் சங்கரநாராயணன், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் ரஞ்சன், தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி டீன் ரவிச்சந்திரன் ஆகியோர் பேசினர்.

      கண்காட்சியில் அனைத்து வகையான நாட்டு விதைகள், விதை விதைக்கும் கருவி, மக்காச்சோள புதிய ரக விதைகள், களை எடுக்கும் கருவி, ரசாயன களைக் கொல்லிகள், ரசாயனம் அல்லாத பூச்சி கொல்லிகள், நவீன அறுவடை இயந்திரங்கள், உழவும் உழவு சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் இயந்திரங்கள், வெங்காயத்தாள் உரிக்கும் இயந்திரங்கள், சொட்டு நீர் பாசனம் மற்றும் இதர நுண்ணிய நீர் பாசன இயந்திர வகைகள், நவீன பூச்சி கொல்லி மற்றும் உர தெளிப்பான் எனும் ட்ரோன், விவசாயிகளுக்கு நிதி தரும் வங்கிகள் என 114 அரங்குகளில் விவசாயம் சம்பந்தமான அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இதனை விவசாயிகள், விவசாய கல்லூரி மாணவ,மாணவிகள், பொதுமக்கள் என பலரும் பார்வையிட்டனர். இந்த கண்காட்சி இன்றும், நாளையும் நடைபெறுகிறது. அனுமதி இலவசம். பொதுமக்களும், விவசாயிகளும் பார்வையிட்டு பயன்பெறலாம்.

      • தொல்லியல் கண்காட்சி 13-ந் தேதி தொடங்குகிறது.
      • கண்காட்சியை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைக்க உள்ளார்.

      சிவகாசி

      விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் விஜய கரிசல்குளத்தில் கடந்த ஆண்டு முதல் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்தன.

      இதில் தங்க அணிகலன், திமிலுடன் கூடிய காளை உருவம், சுடு களிமண்ணால் ஆன அழகிய வேலைப்பாடு களுடன் கூடிய அழகிய குடுவை, யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட அழகிய வேலைப்பாடு களுடன் கூடிய கழுத்தில் அணியும் பதக்கம், பெண் சிற்பங்கள், சங்கு வளை யல்கள், கண்ணாடி மணிகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட அணிகலன், சுடுமண்ணாலான தொங்கட்டான், பகடைக்காய், செப்பு நாணயம் உள்ளிட்ட 3 ஆயிரத்து 254 பழங்கால பொருட்கள் கண்டு எடுக்கப்பட்டன.

      இதனை தொடர்ந்து 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. முதல் கட்ட அகழாய்வில் கண்டெடுக்க ப்பட்ட தொன்மையான பொருட்களை காட்சிப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

      இதையடுத்து தற்போது கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தொல் பொ ருட்களை பார்வையிட்டு தொன்மையான மனிதர்க ளின் வரலாற்றை அறியும் வகையில் தொல்லியல் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்ப்பட்டுள்ளது.

      அகழ்வாராய்ச்சி தளத்தில் காட்சிப்படுத்து வதற்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கண்காட்சி வருகிற 13-ந்தேதி (சனிக்கிழமை) முதல் தொடங்க உள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

      கண்காட்சியை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைக்க உள்ளார்.

      • காலமாற்றத்துக்கு ஏற்ப ஆடை உற்பத்தி எந்திரங்களில் புதுமைகள் புகுத்தப்பட்டு, மேம்படுத்தப்படுகிறது.
      • ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி துவங்கி 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

      திருப்பூர் :

      திருப்பூரின் பின்னலாடை உற்பத்தி துறை வளர்ச்சியில், நவீன எந்திரங்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக உள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள், ஆடை தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பு, பிரச்னைகளுக்கு தீர்வாக நவீன தொழில்நுட்பங்களுடன் எந்திரங்களை தயாரிக்கின்றன. காலமாற்றத்துக்கு ஏற்ப ஆடை உற்பத்தி எந்திரங்களில் புதுமைகள் புகுத்தப்பட்டு, மேம்படுத்தப்படுகிறது.

      திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்களின் புதிய தொழில்நுட்ப தேடுதல்களை ஒரே இடத்தில் பூர்த்தி செய்து பின்னலாடை துறை வளர்ச்சிக்கு கைகொடுத்துவருகிறது நிட்ஷோ கண்காட்சி.அவ்வகையில் 21வது நிட்ஷோ கண்காட்சி திருப்பூர் காங்கயம் ரோட்டில் உள்ள டாப்லைட் வளாகத்தில் வருகிற ஆகஸ்டு மாதம் 11-ந்தேதி துவங்கி 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது. கண்காட்சியில் நவீன எந்திரங்களை காட்சிப்படுத்த வெளிநாட்டு நிறுவனங்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன. இது குறித்து நிட்ஷோ கண்காட்சி நிர்வாக இயக்குனர் கிருஷ்ணா கூறியதாவது:- இந்த ஆண்டுக்கான நிட்ஷோ கண்காட்சி வருகிற ஆகஸ்டு மாதம் 11-ந்தேதி துவங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. 6 மெகா அரங்குகள், 400 ஸ்டால்கள் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.ஜெர்மனி, போர்ச்சுக்கல், இத்தாலி, அமெரிக்கா, சீனா, தைவான் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள், அதிநவீன தொழில்நுட்ப நிட்டிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி, தையல் உள்பட பின்னலாடை துறை சார்ந்த அனைத்துவகை எந்திரங்களையும் முழு இயக்க நிலையில் இடம்பெற செய்ய உள்ளன.

      அதிக எந்திரங்களை காட்சிப்படுத்துவதற்காக பல நிறுவனங்கள், 30 ஸ்டால்கள் வரை ஒன்று சேர்த்து வசப்படுத்துகின்றன. இந்த கண்காட்சியில் நிட்டிங் எந்திரங்கள் அதிகளவில் இடம் பெற உள்ளன. போர்ச்சுக்கல் நாட்டு நிறுவனம் மதிப்பு கூட்டு ஆடை தயாரிப்புக்கு கைகொடுக்கும் நவீன டிஜிட்டல் பிரின்டிங் எந்திரத்தை இடம் பெறச் செய்ய உள்ளது.சர்வதேச அளவில், இட்மா ஜவுளி தொழில்நுட்ப கண்காட்சி, ஜூனில் இத்தாலியில் நடைபெற உள்ளது. அதில், இடம்பெறும் அனைத்து எந்திரங்களும் நிட்ஷோவிலும் வைக்கப்பட உள்ளதால் பின்னலாடை துறையினருக்கு வரப்பிரசாதமாக அமையும்.இவ்வாறு அவர் கூறினார்.

      • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கம் சார்பில் வர்த்தக கண்காட்சி நடைபெற்றது.
      • கலெக்டர் ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      தென்காசி:

      தென்காசி மாவட்டக்குழு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சங்கம் சார்பில் மெகா எந்திரங்கள் மற்றும் வர்த்தக கண்காட்சி இலஞ்சி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

      கலெக்டர்

      இதில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் பழனிநாடார், சதன்திருமலை குமார் மற்றும் சோகோ நிறுவனத்தின் சி.இ.ஓ. மற்றும் பவுண்டரான ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

      முன்னதாக தென்காசி மாவட்டக்குழு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சங்கத் தலைவர் அன்பழகன் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்று பேசினார்.

      கலந்து கொண்டவர்கள்

      கண்காட்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், மாவட்ட ஒன்றிய தலைவர் ஷேக் அப்துல்லா, நகராட்சி சேர்மன் சாதிர், துணை சேர்மன் கே.என்.எல். சுப்பையா, இலஞ்சி பேரூராட்சி தலைவர் சின்னதாய் மற்றும் மாவட்ட தொழில் மையம் பொதுமேலாளர் மாரியம்மாள், ஏ.டி., எம்.எஸ்.எம்.இ. தலைவர் சீமியோன் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இசக்கிமுத்து, பி.எம். சிட்கோ நிறுவனத்தின் தலைவர் சத்யராஜ், ஆரம் டிக் நிறுவனத்தின் தலைவர் முருகேசன், ஏ.டி. திறன் மேம்பாட்டு மையம் தலைவர் ஜார்ஜ் பிராங்கிளின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

      முடிவில் தென்காசி மாவட்ட அனைத்து ஊராட்சிமன்ற தலைமை கூட்டமைப்பு தலைவர் டி.கே. பாண்டியன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஜே.பி. பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியரும், தொழில் முனைவோர் ஒருங்கிணைப்பாளருமான அய்யப்பன், செந்தில் கணேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

      • வெம்பக்கோட்டை அருகே தொல்லியல் கண்காட்சிக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடக்கிறது.
      • தொல்லியல் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்ப்பட்டுள்ளது.

      சிவகாசி

      விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் 35 ஆண்டு களுக்கு முன்பிருந்து மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் மூலம் நுண்கற்காலம் முதல் இடைக்காலம் வரை மனிதர்கள் வாழ்ந்ததற்கான பல்வேறு அடையாளங்கள் வெளிப்பட்டுள்ளது.

      இங்கு அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தொல்லியல் ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடந்த முதல் கட்ட அகழ்வாராய்ச்சியில் தங்க அணிகலன், திமிலுடன் கூடிய காளை உருவம், சுடு களிமண்ணால் ஆன அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய குடுவை மற்றும் யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கழுத்தில் அணி யப்படும் பதக்கம், பெண் சிற்பங்கள், சங்குவளை யல்கள், கண்ணாடி மணிகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட அணிகலன், சுடுமண்ணால் ஆன தொங்கட்டான், பகடைக்காய், செப்பு நாணயம் உள்ளிட்ட 3 ஆயிரத்து 254 பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

      இதையடுத்து 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.

      இங்கு கண்டெ டுக்கப்பட்ட தொன்மையான பொருட்களை காட்சிப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இங்கு கோடை விடுமுறையில் சுற்றுலா பயணி கள் மற்றும் பொது மக்கள் தொல்பொருட்களை பார்வையிட்டு தொன்மை யான மனிதர்களின் வர லாற்றை அறியும் வகையில் தொல்லியல் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்ப்பட் டுள்ளது.

      அகழ்வாராய்ச்சி தளத்தில் காட்சிப்படுத்து வதற்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அடுத்த வாரம் முதல் கண்காட்சி தொடங்க உள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

      • வருகிற 6 மற்றும் 7-ந் தேதிகளில் கண்காட்சி நடைபெறுகிறது.
      • 10 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று காய்கறி சிற்ப அலங்காரம் செய்யவுள்ளனர்.

      ஊட்டி,

      காய்கறி கண்காட்சியில் கோத்தகிரி பேரூராட்சி சார்பில் மக்காத குப்பைகளை கொண்டு உருவாக்கப்பட்ட சிற்பங்கள் வருகிற 6 மற்றும் 7-ந் தேதிகளில் காய்கறி கண்காட்சி கோத்தகிரி நேரு பூங்காவில் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் காய்கறிகளான பிரமாண்ட சிற்பங்கள், பறவைகள், வனவிலங்குகளின் உருவங்கள் அமைக்கப்படும். மேலும் பொழுது போக்கு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

      இந்த காய்கறி கண்காட்சியை காண வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவிற்கு வந்து செல்வர். எனவே பூங்காவை அழகுபடுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தற்போது பூங்காவின் நுழைவு வாயில் அருகே எல். இ.டி விளக்குகளுடன் 'ஐ லவ் கோத்தகிரி' என்கிற வாசகம் மற்றும் மலர் அலங்காரத்துடன் ஒரு செல்பி ஸ்பாட், பூங்காவின் மையப் பகுதியில் பிரமாண்டமான பறவையின் சிறகு போன்ற வடிவத்திலான மற்றொரு செல்பி ஸ்டேண்ட் மற்றும் செயற்கை நீரூற்று அருகே நம்ம கோத்தகிரி என்ற வாசகத்துடன் கூடிய செல்பி ஸ்பாட் என 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

      மேலும் 10 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று அரங்குகள் அமைத்து காய்கறி சிற்ப அலங்காரம் செய்யவுள்ளனர். சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவரும் வகையில் தோட்டக்கலை துறை சார்பில் சுமார் 4 டன் எடை கொண்ட காய்கறிகளை கொண்டு ஒரு பிரதான காய்கறி சிற்பமும், 3 சிறிய சிற்பங்களும் அமைக்கப்படுகின்றன. மேலும் கோத்தகிரி பேரூராட்சி சார்பில் மக்காத குப்பைகளை கொண்டு உருவாக்கப்பட்ட சிற்பங்களும் இந்த கண்காட்சியில் இடம் பெறவுள்ளன.

      20 அரங்குகள் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்வது, கலை நிகழ்ச்சிகள் நடத்துமிடத்தை தீர்மானிப்பது, காய்கறி கண்காட்சியை சிறப்பாக நடத்துவது குறித்து குன்னூர் ஆர்.டி.ஓ. பூஷணகுமார் தலைமையில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகிம் ஷா, தோட்டக்கலை உதவி இயக்குநர் ஐஸ்வர்யா, தோட்டக்கலை அலுவலர் சந்திரன், செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் அரங்குகள் அமைப்போர் மற்றும் பிற துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

      ×