search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 225640"

    • பிரதமரின் நீர்பாசன திட்டம் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • உதவி பொறியாளர் ராஜகோபால், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை சார்பில் நடை பெற்று வரும் பிரதமரின் விவசாய நீர்பாசன திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில், சவ்வாஸ்புரம் ஊராட்சியில் பண்ணை உற்பத்தி திட்டத்தின் கீழ் ரூ.5 ஆயிரம் மதிப்பில் கொய்யா பழமரக்கன்றுகள் நடவுசெய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினார். பண்ணை உற்பத்தி திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவருக்கு கலெக்டர் தார்பாலின் வழங்கினார்.

    திருச்சுழி ஊராட்சி ஒன்றி யத்தில், குலசேகரநல்லூர் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ1.5லட்சம் மதிப்பில் வரத்து கால்வாய் சீரமைத்தல் பணிகளையும், ரூ5லட்சம் மதிப்பில் பெரிய தடுப்பணை அமைக்கும் பணிகளையும், கல்லூரணி ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ5லட்சம் மதிப்பில் பெரிய தடுப்பணை அமைக்கும் பணிகளையும், ரூ1.5 லட்சம் மதிப்பில் வரத்து கால்வாய் சீரமைக்கும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    முத்துராமலிங்கபுரம் ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ1.5 லட்சம் மதிப்பில் வரத்து கால்வாய் சீரமைக்கும் பணிகளையும், பொம்மகோட்டை ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ2.5 லட்சம் மதிப்பில் நடுத்தர தடுப்பணை கட்டும் பணிகளையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    காளையார் கரிசல்குளம் ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ2.5லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் நடுத்தர தடுப்பணை கட்டும் பணி களையும், புல்லநாயக்கன் பட்டி ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ2.5லட்சம் மதிப்பிலான வரத்துக்கால்வாய் சீரமைக்கும் பணிகளையும், ரூ.5லட்சம் மதிப்பில் பெரியதடுப்பணை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.

    பரளச்சி ஊராட்சியில் இயற்கை வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5லட்சம் மதிப்பீட்டில் பெரிய தடுப்பணை அமைக்கும் பணிகளையும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ11.5 லட்சம் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சித்துறை மேம்பாட்டு முகமையின் கீழ் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூட விரிவாக்க பணிகளையும், பரளச்சியில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்தும், பின் பொது மக்களிடம் அவர்க ளுக்கு வழங்கப்படும் மருந்துகள் குறித்தும் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநர் பத்மாவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நாச்சியார் அம்மாள், வேளாண்மை துணை இயக்குநர் மோகன்தாஸ் சவுமியன், உதவி பொறியாளர் ராஜகோபால், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • விண்ணப்பங்கள் பரிந்துரை செய்யப்படுகிறது.
    • இத்திட்டத்தில் விண்ணப்பிக்க கல்வி தகுதி ஏதும் இல்லை.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் மானி யத்துடன் கூடிய தொழிற் கடனுதவி பெறுவதற்கு, மாவட்ட தொழில் மையம், கடலூர் அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் பரிந் துரை செய்யப்படுகிறது. அண்ணல் அம்பேத்கார் தொழில் முன்னோடிகள் திட்டத்தினை இந்த ஆண்டு முதல் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்த அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த தொழில் முனை வோர்கள் திட்ட மதிப்பீட்டில் 65 சதவீதம் வங்கி கடனாகவும், 35 சதவீதம் மானியமாகவும் பெறலாம். முன் முனை மானியமாக அதிகபட்சமாக 1.50 கோடி வரை பெறலாம்.

    வங்கி கடன் வட்டியில் 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். ஏற்கனவே தொழில் செய்து வரும் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் தொழிலை விரிவாக்கம் செய்யவும், புதியதாக தொழில் செய்ய விரும்புவோரும் இத்திட்டத் தில் விண்ணப்பித்து பயன் பெறலாம். 18 முதல் 55 வயது குட்பட்டோர், உற்பத்தி, சேவை, வணிகம் சார்ந்த தொழில் தொடங்க லாம். மேலும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க கல்வி தகுதி ஏதும் இல்லை. வாகனங்களை முதன்மை யாக கொண்டு செயல் படுத்தக்கூடிய தொழிழ்களான டாக்சி, சரக்கு வாகனங்கள், பொக் லைன் எந்திரம், கான்கிரீட் எந்திரம், ஜே.சி.பி, அழகு நிலையம், ஆம்பு லன்ஸ் சேவை, உடற் பயிற்சிக் கூடம், கயிறு தயாரித்தல், வியாபாரம், தரி அமைத்தல் மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்கள் தொடங்கு வோரும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

    சுயமுத லீட்டில் தொழில் தொடங்கி னாலும், இந்த திட்டத்தின் மூலம் மானியம் பெறலாம். மேலும், கடலூர் மாவட் டத்தை சேர்ந்த பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த தொழில் முனைவோர்கள் தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் வாழ்வாதாரத்தை மேம் படுத்த, தொழில் தொடங்கி இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும். மேலும், விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கடலூர் அலுவலகத்தினை நேரில் வந்து அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • வாய்க்காலை சீரமைக்க ரூ.733 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது.
    • மே 1-ந் தேதி முதல் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு , திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்ட ங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்த வாய்க்காலை சீரமைக்க ரூ.733 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. வாய்க்காலை புனரமைக்க ஒருத்தரப்பு விவசாயிகள் ஆதரவும், மற்றொரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பும் தெரிவித்தனர். அமைச்சர் முத்துசாமி இருதரப்பு விவசாயிகளையும் அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். எனினும் சுமுகமான முடிவு ஏற்படவில்லை.

    இந்நிலையில் கீழ்பவானி முறைநீர் பாசன கூட்டமைப்பு சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு மே 1-ந் தேதி முதல் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கீழ்பவானி வாய்க்கால் காங்கிரீட் திட்டத்தை கைவிட கோரியும், விவசாயம் காக்க வேண்டியும், மண் கால்வாயிகவே இருக்க வேண்டும் என வலியுறுத்தி அரச்சலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக விவசாயிகள் கடை வியாபாரிகளிடம் ஆதரவு கேட்டிருந்தனர்.

    அதன்படி இன்று காலையில் இருந்து அரச்சலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியான பிச்சாண்டாம் பாளையம், கருக்கம் பாளையம், வாய்க்கால் மேடு ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து விவசாயிகள் மற்றும் வணிகர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரச்சலூர் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் அரச்சலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடையடைப்பு போராட்டம் காரணமாக ஆட்கள் நடமாட்டம் இன்றி வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    கீழ்பவானி வாய்க்காலில், பழைய கட்டுமானங்களில் உள்ள மராமத்துப் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

    புதிதாக வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க கூடாது. வாய்க்காலின் மண் கரை அப்படியே தொடர வேண்டும், கசிவுநீர் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று அரச்சலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் நீர்வடி மேம்பாட்டு திட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • விவசாயிகள் மாவட்ட நீர்வடி மேம்பாட்டு திட்டத்தை பயன்படுத்த வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் மாவட்ட நீர்வடி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊரணிகள் சீரமைத்தல், பண்ணை குட்டைகள் அமைத்தல் விவசாயிகளுக்கு முழு மானியத்துடன் நுண்ணுயிர் பாசன திட்டத்தில் உபகரணங்கள் வழங்கி வருவதை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    விவசாயிகளுக்கு விளை நிலங்களில் பண்ணை குட்டை அமைத்து பயன்பெறும் திட்டம் செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் ஒரு பகுதியில் பண்ணை குட்டை அமைக்கும் பொழுது மழைக்காலங்களில் பெறக்கூடிய தண்ணீர் சேமிப்பதன் மூலம் வறட்சி காலங்களில் விவசாயி களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    அதுமட்டுமின்றி பண்ணை குட்டைகள் அமைப்பது விவசாயி களுக்கு இணை தொழிலாக மீன் வளர்க்க, கறவை மாடுகளுக்கு தீவனப்புல் வளர்க்க பயனுள்ளதாக இருக்கும். எனவே விவசாயிகள் மாவட்ட நீர்வடி மேம்பாட்டு திட்டத்தை பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சரஸ்வதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி, திருவாடனை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் முகமது முக்தார், பாசிப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் உம்மூர் சலீமா நூர் அமீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நவீன கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு
    • இந்த மாதம் இறுதியில் டெண்டர் விடப்படுகிறது

    திருச்சி,

    திருச்சி மாநகராட்சி பகுதியில் வெளியேற்றப்படும் கழிவுநீர் பஞ்சப்பூரில் ஏற்கனவே அமைந்துள்ள டபிள்யூ.எஸ்.பி. மாடல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. இதில் நாள் ஒன்றுக்கு 58 எம்.எல்.டி. அளவுக்கு கழிவு நீரை சுத்திகரிக்கப்படுகிறது. இந்த நிலையில் மேலும் 3 இடங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக கல்கண்டார் கோட்டை மற்றும் பஞ்சகரையில் புதிய மொத்தம் 40 எம்.எல்.டி. அளவுக்கு 2 சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே பஞ்சப்பூரில் ஏற்கனவே இருக்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்துக்கு மாற்றாக 100 எம்.எல்.டி. அளவுக்கு நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் ரூ. 200 கோடியில் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது அந்தத் திட்டத்துக்கான ரூ.200 கோடி நிதியை மாநில அரசு ஒதுக்கி உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் வைத்திநாதன் தெரிவித்தார்.இதுதொடர்பாக மேலும் அவர் கூறும்போது, ஏற்கனவே பஞ்சப்பூரில் அமைந்துள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. ஆனால் அதற்கு மாற்றாக இனிமேல் புதிதாக அமைக்கப்பட இருக்கும் நவீன சுத்திகரிப்பு மையத்துக்கு 10 ஏக்கர் இடம் போதும்.ஸ்ரீரங்கம் மண்டலம் தவிர்த்து மீதமுள்ள அனைத்து மண்டலங்களில் இருந்தும் வெளியேற்றப்படும் கழிவு நீரை இங்கு சுத்திகரிக்க முடியும். இந்த மாத இறுதிக்குள் அதற்கான டெண்டர் விடப்பட்டு அடுத்த மாத தொடக்கத்தில் திட்ட பணிகள் தொடங்கும் என்றார்.

    • தன்னார்வலர்கள் மூலமும் நகரில் உள்ள அனைத்து பூங்காக்களும் முற்றிலும் மேம்படுத்தப்படவுள்ளது.
    • வெள்ளி விழா பூங்கா பின்புறம் அமையவுள்ள ரோடு முற்றிலும் நடைப்பயிற்சிக்காக மட்டுமே ஒதுக்கப்படும்.

    திருப்பூர்:

    சுகாதார துறை அமைச்சர் சுப்ரமணியம் அனைத்து நகரங்களி லும் நடைப்பயிற்சி வழக் கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், மக்கள் உடல் நலம் பேணும் வகையிலும் நடைப்பயிற்சிக்கென நடைபாதை அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.திருப்பூர் மாநகராட்சி பகுதியைப் பொறுத்த வரை கல்லூரி மற்றும் பள்ளிகளின் மைதானங்களில் மட்டுமே நடைப்பயிற்சி மேற்கொள்ளும் விதமாக விசாலமான நிலப்பரப்பு உள்ளது.

    ஒரு சில பகுதிகளில் குடியிருப்பு வாசிகள் தங்கள் பகுதியில் உள்ள சிறு பூங்காக்கள் போன்றவற்றில் உள்ள சிறிய அளவிலான நடை மேடைகளில் நடைப் பயிற்சி மேற்கொள்கின்றனர்.புறநகர் பகுதிகளில் அதிகாலை நேரங்களில் வாகனப் போக்குவரத்து குறைவாக உள்ள போது பெரும்பாலானோர் நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர்.

    திருப்பூர் நகரப் பகுதியைப் பொறுத்த வரை அதிகளவிலான வாகனப் போக்குவரத்து, பல்வேறு பணிகள் காரணமாக தோண்டியும், அரைகுறையாக மூடியும் கிடக்கும் ரோடுகள் கடந்து செல்லவே முடியாத நிலையில் அவற்றில் நடைப்பயிற்சி என்பது மேலும் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளன.இதனால் திருப்பூர் நகரப் பகுதியில் நடைப் பயிற்சிக்கென தனி ஏற்பாடு அவசியமாக உள்ளது.

    இது குறித்து மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:-

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நொய்யல் கரை மேம்பாடு பணி நடக்கிறது. இதில் வெள்ளி விழா பூங்கா பின்புறம் அமையவுள்ள ரோடு முற்றிலும் நடைப்பயிற்சிக்காக மட்டுமே ஒதுக்கப்படும்.ஆண்டிபாளையம் குளம் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டு அங்கு மேம்பாடு பணியில், குளத்தின் கரைப்பகுதி முழுமையாக நடைப்பயிற்சி மேடையாக அமைக்கப்படும்.மூளிக்குளம் கரைகள் சீரமைக்கப்பட்டு அதைச் சுற்றிலும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் விதமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.வடக்கு பகுதியில் புதிதாக ஒரு பெரிய அளவிலான பூங்கா அமைக்க இடம் தேர்வு நடக்கிறது. அங்கு முற்றிலும் நடைப்பயிற்சி மேடை அமைக்கப்படும். மாநகராட்சி சார்பிலும், தன்னார்வலர்கள் மூலமும் நகரில் உள்ள அனைத்து பூங்காக்களும் முற்றிலும் மேம்படுத்தப்படவுள்ளது.

    மக்கள் உடல் நலனில் அக்கறை காட்டும் விதமாக மாதம்தோறும் ஒரு நாள் மகிழ்ச்சியான ஞாயிறு நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது. மாதம் தோறும் ஒரு இடம் தேர்வு செய்து அங்கு உடல் நலம் பேணும் பயிற்சி, விளையாட்டு, பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவு திருவிழா ஆகியன நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • விழாவிற்கு சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார்.
    • சென்னி வீரம்பாளையம் கிராம பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே சிக்காரம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சென்னி வீரம்பாளையம் கிராமத்தில் உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் கிராமிய சேவை திட்டம் தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார்.

    உலக சமுதாய சேவா சங்கத்தின் கோவை மண்டல துணைத் தலைவர் வெள்ளிங்கிரி வரவேற்றார். ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ, பேராசிரியர் பாலமுருகன், ஒருங்கிணைப்பாளர் குரு ரங்கதுரை, வி.பி.எம். நந்தகுமார், ஓய்வு பெற்ற ஆசிரியர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உலக சமுதாய சேவா சங்கத்தின் கிராமிய சேவை திட்ட இயக்குனர் முருகானந்தம் திட்ட விளக்க உரையாற்றினார்.

    உலக சமுதாய சேவா சங்கத்தின் கோவை மண்டல தலைவர் பச்சையப்பன், டாக்டர் ஹரிதாஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் மயிலானந்தன் காணொளி காட்சி வாயிலாக கிராமிய சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இத்திட்டத்தின் மூலம் நோயற்ற வாழ்வு கல்வியில் மேன்மை, சுற்றுப்புற சுகாதாரம், முதியோரை பாதுகாத்தல், மகளிர் மேம்பாடு, குடும்ப அமைதி, கர்மயோக வாழ்க்கை நெறி, மனிதநேயம், மத நல்லிணக்கம், சமுதாய விழிப்புணர்வு ,தூய்மையும் பசுமையும் மிக்க ஆரோக்கியமான அமைதியான கிராமம் என இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என ஊராட்சி தலைவர் ஞானசேகரன் தெரிவித்தார் .

    சென்னி வீரம்பாளையம் கிராம பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. காரமடை மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

    • கலெக்டர் ஸ்ரீதர் நேரில் ஆய்வு
    • பொதுமக்களின் தேவைக் கேற்ப வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட ஏற்றக்கோடு மற்றும் குமரன்குடி ஊராட்சி பகுதிகளில் முடிவுற்ற மற்றும் நடை பெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

    பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அறிவித்து, சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் சாலைகள் அமைப்பது, நீர் நிலைகளை தூர்வாருவது, குடிநீர் வசதி உள்ளிட்ட பொதுமக்களின் தேவைக் கேற்ப வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், ஏற்றக்கோடு ஊராட்சிக்குட்பட்ட குளச்சல் திருவட்டார் சாலை முதல் கட்டைக்கால் சாலை வரை தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.43 லட்சம் மதிப்பில் கருந்தளம் அமைக்கப்பட்டி ருந்த பணியினை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    சிற்றார் பட்டணக்கால் கால்வாய் முதல் கூடளாகம் வரை மகாத்மா காந்தி தேசிக ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.80 லட்சம் மதிப்பில் நடை பெற்று வரும் கால்வாய் தூர்வாரி மேம்படுத்தும் பணியினை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    குமரன்குடி ஊராட்சிக் குட்பட்ட கண்ணன்கரை விளை முதல் கொல்லன் விளை சாலை வரை பத்மநா பபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.8.99 லட்சம் மதிப்பில் அமைக்கப் பட்ட சிமெண்ட் சாலை மற்றும் கட்டி முடிக்கப் பட்ட தடுப்புச்சு வர் பணியினை யும், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சம் மதிப்பில் வடக்கநாடு பகுதியில் புதிதாக கட்டப் பட்டு வரும் அங்கன்வாடி கட்டிட பணி என மொத்தம் ரூ.71.69 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, திருவட்டார் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யசோதா, கீதா, ஊராட்சி மன்ற தலைவர்கள் பால்சன் (குமரன்குடி), ஹெப்சிபாய் கிறிஸ்டி (ஏற்றக்கோடு), உதவி பொறியாளர்கள் சஞ்சு பொன்ராஜன், கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. விடம் நாகை மாவட்ட ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அமிர்தலிங்கம், புயல் குமார், திருமாவளவன், ரவி, திருமுருகன், ராமமூர்த்தி, செந்தில் நாதன் உள்பட 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்தியஅரசு அறிவிக்கும் அகவி லைப்படிக்கு இணையான தொகையை மத்திய அரசு அறிவிக்கும் தேதியிலிருந்து நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும், முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை பெற்றுக்கொ ண்ட ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. இதுகுறித்து அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மூலம் சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொடுத்து பேச வைக்கப்படும் என்றார்.

    • வேளாண் அடுக்கு திட்டம் என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
    • உதவி வேளாண்மை அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    பூதலூர்:

    பூதலூர் வேளாண்மை உதவி இயக்குனர் ராதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழகத்தில் உள்ள விவசாயிகள் தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களின் பயன்களையும் ஒற்றைச் சாளர முறையில் பயன்பெறும் வகையில் வேளாண் அடுக்குத்திட்டம் என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

    வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ச்சி துறை, உணவு வழங்கல் துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்பு, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், விதை சான்றளிப்பு, சர்க்கரை துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உள்ளடங்கிய 12 துறைகளில் விவசாயிகளுக்கு அனைத்து திட்ட பயன்களும் கிடைக்க செய்யும் வகையில் கிரன்ஸ் வலைத்தளத்தில் விவசாயிகளுடைய நில உடமை விவரம் சரிபார்க்க ப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
    இதில் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இத்திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் தங்களது நில உடமை குறித்த ஆவணம், ஆதார் அட்டை நகல் தங்களுடைய புகைப்படம், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் அல்லது உதவி வேளா ண்மை அலுவல ர்கள் அல்லது உதவி தோட்ட க்கலை அலுவலர்க ளை தொடர்பு கொண்டு விவரங்க ளை சரிபார்த்துக் கொள்ளவும் மற்ற விவசாயிக ளுக்கு இதை தெரிவித்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

    • தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் அவற்றை செயல்படுத்துவது இல்லை என ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார்.
    • திட்டங்களை செயல்படுத்த முனைப்பு காட்ட வேண்டும்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடமாடும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா இன்று நடந்தது. அ.தி.மு.க இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் முன்னிலை வகித்தனர்.

    வட்டச் செயலாளர் பொன் முருகன் வரவேற்றார். இதில்

    அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அதி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணையின்படி கோடை காலத்தில் மக்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் பந்தல் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் திறக்கப்பட்டுள்ளது. திருப்ப ரங்குன்றம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகள் இல்லாத வகையில் தற்போது கொலை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்கள் நடந்து வருகிறது.

    பள்ளி மாணவிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் மது கடைகளும் அமைந்துள்ளன. இவற்றை அகற்றக்கோரி சட்டப்பேரவையில் நான் குரல் கொடுத்த போது அதற்காக ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர் மழுப்பலான பதிலை தெரிவித்தார். மதுக்கடைகளை அகற்றுவது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

    மதுரைக்கு மெட்ரோ ெரயில் திட்டம் டைட்டல் பார்க் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தி.மு.க. அறிவித்துள்ளது. அவர்கள் அறிவிப்போடு நிறுத்தி விடுவார்கள். அதனை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் தி.மு.க. அரசு இதுவரை செய்ததில்லை. மதுரை தொழில் வளர்ச்சிக்கு எந்த திட்டத்தையும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அவர்கள் அறிவிக்கவில்லை.

    அதே சமயத்தில் அ.தி.மு.க. ஒரு திட்டத்தை அறிவித்தால் அதை உடனடியாக செயல்படுத்தி காண்பிக்கும். தி.மு.க. அறிவித்த திட்டங்களை செயல்படுத்த முனைப்பு காட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வட்ட செயலாளர் நாகரத்தினம், என்.எஸ். பாலமுருகன், பாலா, தவிடன், முத்துக்குமார், அக்பர் அலி, சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார்.
    • பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் நடந்த ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. இளைய மகன் திருமண வரவேற்பு விழாவில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    பின்னர் அவர் பேசும்போது, மணமக்கள் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ வேண்டும்.

    ஏழை எளிய மக்கள் உயர்தர சிகிச்சை குறைந்த கட்டணத்தில் பெற வேண்டும் என்பதற்காக தஞ்சாவூரில் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டரை காமராஜ் திறந்து வைத்துள்ளார்.

    காவிரி டெல்டா விவசாயி களின் கோரிக்கைகள் அனைத்தையும் தான் ஆட்சியில் இருந்தபோது நிறைவேற்றியவர் எடப்பாடி பழனிச்சாமி.

    அவர் டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார்.

    இது போல் அவர் பல்வேறு நல்ல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினார்.

    காமராஜ் மீது எடப்பாடி பழனிச்சாமி அன்பும் பாசமும் அதிகம் கொண்டவர் என்றார்.

    ×