search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 225656"

    • நாமக்கல், மோகனூர் சாலையில், கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் மீன் வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.
    • இப்பயிற்சியில் மீன் பண்ணை அமைத்தல், மீன் குஞ்சுகளை தேர்வு செய்தல், புதிய தொழில்நுட்ப முறையில் மீன் வளர்ப்பு, நோய், நீர் மேலாண்மை பற்றியும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    நாமக்கல்:

    வேளாண் அறிவியில் நிலைய தலைவர் டாக்டர் அழகுதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    நாமக்கல், மோகனூர் சாலையில், கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் (கேவிகே) வருகிற 17-ந் தேதி காலை 10 மணிக்கு, ஒருங்கிணைந்த பண்ணை முறையில் மீன் வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.

    இப்பயிற்சியில் மீன் பண்ணை அமைத்தல், மீன் குஞ்சுகளை தேர்வு செய்தல், புதிய தொழில்நுட்ப முறையில் மீன் வளர்ப்பு, நோய், நீர் மேலாண்மை பற்றியும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள், முதுநிலை கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்.

    இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விவசாயிகள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • மீன்பிடிப்பதில் விதி மீறல் செய்ததாக ஒரே மாதத்தில் 117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • படகுகளுக்கான எரிபொருளும் ரத்து செய்யப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன் கூறியதாவது:-

    தமிழ்நாடு கடல் மீன் பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தில் இரட்டை மடி, சுருக்கு மடி வலைகள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. இவற்றைப் பயன்படுத்துவது குற்றமாகும். எனவே தடை மீறும் மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. மீன்வள சட்ட அமலாக்க துறையினர், மீன்வளத்துறை அதிகாரிகளுடன் இணைந்து ராமேசுவரம், மண்டபம், தொண்டி, புதுமடம் பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

    நடப்பாண்டில் ஜனவரி மாதத்தில் மட்டும் தடையை மீறி இரட்டை மடி, சுருக்குமடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடித்தது தொடர்பாக ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதி மீனவர்கள் மீது 117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மீனவர்களின் இரட்டை மடி, சுருக்கு மடி வலைகளும் மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் ஜன.23-ந்தேதி வரை 16 லட்சத்து 70ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    பிடிபட்ட மீன்கள் ஒரு லட்சத்து 67 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. படகுகளுக்கான எரிபொருளும் ரத்து செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

    • 1 கிலோ மீன்கள் ரூ.600 வரை விற்பனையாகிறது.
    • வழக்கத்தை விட ஒரு கிலோவிற்கு ரூ.50 முதல் ரூ.200 வரை மீன்விலை அதிகரித்து இருந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் சின்ன ஏர்வாடி, கீழக்கரை, பெரியபட்டினம், மாயாகுளம், முத்துப் பேட்டை, மற்றும் திருப்பா லைக்குடி, மோர்ப்பண்ணை, முள்ளிமுனை, காரங் காடு, வட்டாணம், பாசிப்பட்டினம், எஸ்.பி.பட்டினம் உள்பட 20–க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் மீன்பிடி தொழில் பெரிய அளவில் இல்லை. இதனால் மீன்மார்க்கெட்டுக்கு கடந்த சில வாரங்களாக மீன்வரத்து வெகுவாக குறைந்து. மீன்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் நகரை மீன், ஊடகம், விளைமீன், முரல் போன்ற ஒரு சில மீன் வகைகளை தவிர பல்வேறு வகையான மீன் வகைகள் விற்பனைக்கு வருவதில்லை. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் மார்க்கெட் களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப் பட்டது.

    நகரை, செங்கனி, பாறை மீன்கள் 1 கிலோ ரூ.500–க்கும், முரல், கலிங்க முரல், நண்டு போன்றவை ரூ.500 முதல் ரூ.600 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. கடற்கரைப் பகுதியில் வெளியூர் வியாபாரிகள் ஏராளமானோர் வந்து செல்வதால் மீன்களை போட்டி போட்டு கொண்டு அதிக விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர்.

    ராமநாதபுரம், கீழக்கரை, தேவிபட்டிணம் போன்ற மீன் மார்க்கெட்டில் வழக்கத்தை விட ஒரு கிலோவிற்கு ரூ.50 முதல் ரூ.200 வரை மீன்விலை அதிகரித்து இருந்தது. இதனால் மீன் உணவு பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    வழக்கமாக பிப்ரவரியில் கணவாய், நண்டு அதிகமாக வலையில் சிக்கும். தற்போது வாடைக்காற்று இல்லாத நிலையிலும் மீன்கள் அதிகமாக கிடைக்காததால் நாள்தோறும் ஏமாற்றத்துடன் கரை திரும்பி வருகின்றனர். இதனால் நஷ்டமடைந்துள்ள மீனவர்கள் தங்கள் குடும்ப செலவுகளை ஈடுகட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். டீசல் உட்பட படகில் வரும் சக ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

    • குளத்தில் நீர் வற்றாமல் அப்பகுதிக்கு முக்கிய நீர்நிலை ஆதாரமாக உள்ளது.
    • ஆகாயத்தாமரை செடிகள் அதிகம் இருப்பதால் மீன் கூட பிடிக்க முடியாமல் உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட பச்சாந்தோப்பு அருகே கரிக்குளம் உள்ளது.

    இந்த குளத்தை அருகில் உள்ள பச்சாந்தோப்பு, ஆற்றாங்கரை தெரு, தைக்கால் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் குளிப்பதற்கும் மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வந்தனர்.

    மேலும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயிலிருந்து உபரி நீர் வருடம் முழுவதும் இந்த குளத்தில் வந்து சேர்கிறது.

    இதனால் கோடையிலும் குளத்தில் நீர் வற்றாமல் அப்பகுதிக்கு முக்கிய நீர்நிலை ஆதாரமாக உள்ளது.இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் குளம் குடிமராமத்து பணியில் தூர்வாரப்பட்டது.

    ஆனால் கடந்த 1 ஆண்டாக கரிக்குளம் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் உள்ளது.

    இதனால் குளத்தில் ஆகாயத் தாமரை செடிகள், கொடிகள் மண்டி புதர் போல் காட்சியளிக்கிறது.குளத்தின் படிக்கட்டுகள் சுகாதாரமற்று காணப்படுகிறது.

    இதனால் குளத்தினை பயன்படுத்த முடியாமல் மக்கள் உள்ளனர்.

    மேலும் கடந்த ஆண்டு இக்குளம் மீன் பாசி குத்தகைக்கு விடப்பட்டு குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் அதிகம் இருப்பதால் மீன் கூட பிடிக்க முடியாமல் உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து கரிக்குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பிரதமருக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கடிதம்
    • மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்தவர் ஜெஸ்லின். இவரது மகன் ராஜேஷ்குமார் உள்பட 5 மீனவர்கள் சவுதி அரே பியா நாட்டின் கத்திப் என்ற பகுதியில் அரே பிய முதலாளிக்கு சொந் தமான விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    அப்போது ஈரான் கடல் கொள்ளையர்கள் சவுதி அரேபிய கடலுக் குள் வந்து மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீது சரமாரி யாக துப்பாக்கியால் சுட் டனர். இதில் ராஜாக்கமங் கலம் துறையைச் சேர்ந்த ராஜேஷ் குமார் தனது இடது கண் ணில் குண்டடிப்பட்டும், காது தொண்டை பகுதி யிலும் குண்டடிக்காயம் பட்டும் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். மேலும் படகில் இருந்த ஜிபிஎஸ், எக்கோ சவுண்டர், வயர் லெஸ் மற்றும் மீனவர் கள் பிடித்து வைத்தி ருந்த மீன்களையும், மீனவர் கள் பயன்படுத்திக் கொண்டி ருந்த செல்போன் அனைத் தையும் ஈரான் கடற்கொள் ளையர்கள் கொள்ளைய டித்து சென் றுள்ளனர். இது சம்பந்த மாக தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. பிரதம ருக்கும், இந்திய வெளியு றவுத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், வெளிநாடுகளில் மீன்பிடி தொழிலில் ஈடு பட்டுள்ள இந்தியர்களுக்கு குறிப்பாக குமரி மாவட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர் களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் சவுதி அரேபிய கடலில் ஈரான் கடற்கொள்ளையர் சுட் டதில் ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்த ராஜேஷ் குமார் என்ற மீனவர் குண்டடிப்பட்டு படுகாயம் அடைந் துள்ளார். அவ ருக்கு அவர் பணி புரிந்த நிறுவனம் தகுந்த இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் வெளிநாடுகளில் சென்று மீன்பிடி தொழிலில் ஈடுப டுகின்ற மீனவர்கள் அச்ச மின்றி மீன்பிடி தொழிலில் ஈடுபடுவதற்கு உத்தரவா தம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுக ளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்கள் மீது தாக்குதல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த சம்பவத் திற்கு முற்றுப்புள்ளி வைக் கும் விதத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • பொங்கல் பண்டிகையொட்டி பெரும்பாலான வீடுகளில் முதல் நாள் மற்றும் 2-வது நாளான நேற்றும் சைவ உணவுகளை சமைத்து அதனை சாமிக்கு படையலிட்டு கும்பிடுவது வழக்கம். 3-வது நாளான காணும் பொங்கல் அன்று அசைவ பிரியர்கள் இறைச்சி வாங்கி உண்பார்கள்.
    • காணும் பொங்கல் பண்டிகையொட்டி சேலத்தில் இறைச்சி, மீன் கடைகளில் அலைமோதிய கூட்டம் அலைமோதியது.

    சேலம்:

    பொங்கல் பண்டிகை ஓட்டி நேற்று முன்தினம் சேலம் மாநகரில் பெரும்பாலான இறைச்சி மற்றும் மீன்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    தொடர்ந்து நேற்று திருவள்ளுவர் தினத்தை ஒட்டி மீன் கடைகள் இறைச்சி கடைகளை அடைக்க மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டு இருந்தது.

    இதையொட்டி இறைச்சி, மீன் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அசைவ பிரியர்கள் கறி சாப்பிட முடியாமல் அவதி அடைந்தனர்.

    இந்த நிலையில், இன்று காலை சேலம் மாநகரில் உள்ள இறைச்சி கடைகள், மீன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. காலை முதலே இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

    இதைத்தொடர்ந்து1 மணி நேரம் வரை காத்து நின்று கடைகளில் இறைச்சியை பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதேபோல மீன் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

    1 கிலோ ஆடு இறைச்சி ரூ.800-க்கு விற்பனையானது. அதேபோல சூரமங்கலம் பகுதியில் உள்ள மாநகராட்சி மீன் சந்தை மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள மீன் சந்தைகளிலும் மீன்கள் விற்பனை அதிக அளவில் நடந்தது.

    • கோடியக்கரை கடற்கரையில் இன்று மாட்டு பொங்கலை முன்னிட்டு மீன் வாங்க பொதுமக்கள் கடற்கரையில் குவிந்தனர்.
    • கோடியக்கரை மீனவர்கள், பாம்பன், காசிமேடு பகுதியில் இருந்து சுமார் 5 டன் வாலைமீன்களை இறக்குமதி செய்து செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் இன்று மாட்டு பொங்கலை முன்னிட்டு மீன் வாங்க ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதல் கடற்கரையில் குவிந்தனர்.

    இதனால் வழக்கத்திற்கு மாறாக மீன் விலை இரு மடங்காக உயர்ந்தது.

    இருப்பினும் இன்று அசைவம் சமைத்து உண்ண வேண்டும் என்பதால் விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் காலாமீன், ஷீலாமீன், திருக்கைமீன், வாலைமீன், வாவல் மீன், நண்டு, இறால் உள்ளிட்டைவைகளை அதிக அளவில் வாங்கி சென்றனர்.

    பொதுமக்கள் தேவை அறிந்து கோடியக்கரை மீனவர்கள் பாம்பன் மற்றும் காசிமேடு பகுதியில் இருந்து சுமார் 5 டன் வாலைமீன்களை இறக்குமதி செய்து கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்தனர்.

    • குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000- க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகிறது.
    • விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன் பிடித்து கரை திரும்பும்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000- க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகிறது.

    விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள் தங்கி மீன் பிடித்து கரை திரும்பும். ஆழ்கடல் பகுதியில்தான் கணவாய், இறால், புல்லன், கேரை, சுறா போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும். தற்போது குளச்சல் கடல் பகுதியில் கணவாய், கிளி மீன்கள், நாக்கம் மீன்கள் கிடைத்து வருகின்றன.ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகளில் 45 படகுகள் நேற்று கரை திரும்பின.இவற்றுள் நாள் ஒன்றுக்கு 20 டோக்கன்கள் முறையில் விசைப்படகுகளில் இருந்த மீன்கள் இறக்கப்பட்டன. அவற்றுள் கிளி மீன்கள், நாக்கண்டம் மற்றும் கணவாய் மீன்கள் கிடைத்தன.

    மீனவர்கள் அவற்றை மீன் ஏலக்கூடத்தில் குவித்து வைத்து விற்பனை செய்தனர். ஒரு கிலோ கிளி மீன்கள் தலா ரூ.105 விலை போனது.கடந்த நாட்களை விடவும் ரூ.25 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.சின்ன கிளி மீன் தலா கிலோ ஒன்றுக்கு ரூ.80 முதல் ரூ.85 வரை விலை போனது. நாக்கண்டம் தலா கிலோ வழக்கமாக ரூ.40 க்கு விலை போனது. தோட்டு கணவாய் தலா கிலோ ஒன்றுக்கு ரூ.385 விலையும், ஓலக்கணவாய் வழக்கமாய் ரூ.240-க்கும், ஸ்குட் கணவாய் ரூ.415 க்கும், நிப்புள் கணவாய் ரூ.180-க்கும் விலைபோனது.

    கிளி மீன்கள் பற்பசை தயாரிப்பதற்கும், நாக்கண் டம் மீன்கள் மீன் எண்ணை மற்றும் கோழி தீவனம் தயாரிப்பதற்கும் வியாபாரிகள் போட்டிப் போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர்.

    • மீன் வளர்ப்புக்கு மானியம் வழங்கப்படும்
    • கலெக்டர் கவிதா ராமு தகவல்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் 2021-22-ன் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்வளர்ப்பு விவசாயிகளுக்கு பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு 40 சதவீதம் மானியமும், பெண் பயனாளிகளுக்கு மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு 60சதவீதம் மானியமும் கூடிய ஏழு புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கு, சொந்த நிலம் அல்லது குத்தகை நிலம் (குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பதிவு செய்யப்பட்ட குத்தகை ஒப்பந்தம்) இருத்தல் வேண்டும். மீன்வளர்ப்பு, மீன்குஞ்சு வளர்ப்பிற்கு ஏற்ற நீர் ஆதாரம் இருத்தல் வேண்டும். கடந்த 2018-19 முதல் 2020-21 முடிய உள்ள ஆண்டு வரை உள்ள கால கட்டத்தில் மத்தியஃமாநில அரசிடமிருந்து உள்ளீட்டு மானியம் பெற்ற மீன் வளர்ப்பு விவசாயிகள் இம்மானியம் பெறுவதற்கு தகுதியற்றவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

    மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் புதுக்கோட்டை மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை வரும் 15-ந் தேதி க்குள் புதுக்கோட்டை மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் அளிக்குமாறு அல்லது தபாலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்ப டுகிறது.

    மேலும் அலுவலக முகவரி, மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், பிளாட் எண்.1 டவுன் நகரளவு எண்.233ஃ1, அன்னை நகர், நிஜாம் காலனி விஸ்தரிப்பு, புதுக்கோட்டை, தொலைபேசி எண் 04322 266994, அலைபேசி எண் 93848 24268 ஆகும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
    • உறவினா்கள் இருவரோடு வெள்ளக்கோவில் உத்த மபாளையம் வட்டமலை அணைக்குச் சென்று மீன் பிடித்துள்ளாா்.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவில் மூலனூா் சாலையில் வசித்துவந்தவா் விஜய் (23), கட்டுமானத் தொழிலாளி. இவா், உறவினா்கள் இருவரோடு வெள்ளக்கோவில் உத்த மபாளையம் வட்டமலை அணைக்குச் சென்று மீன் பிடித்துள்ளாா். அப்போது, விஜய்க்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, அவரை ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். எனினும், வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

    இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • மீன் விலை குறைவால் காலை நேரத்தில் வியாபாரம் சற்று சூடுபிடிக்கிறது.
    • புரட்டாசி மாதம் நிறைவு பெறும் வரை வியாபாரம் சற்று குறைவாக தான் இருக்கும்.

    உடுமலை :

    தற்போது புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. இம்மாதத்தில் இறைவனை வேண்டி விரதமிருக்கும் பலர் அசைவத்தை தவிர்ப்பர்.

    இந்நிலையில் உடுமலையில் வஞ்சிரம் கிலோ 450 ரூபாய், விளாமீன் 350, பாறை 300, அயிலை 120, சங்கரா 250, முறால் 300, கட்லா 150, ரோகு 130, ஜிலேபி 80 ரூபாய்க்கு விற்கிறது. முந்தைய வாரங்களோடு ஒப்பிடுகையில் மீன் விலை குறைவால் காலை நேரத்தில் வியாபாரம் சற்று சூடுபிடிக்கிறது.ஆனால் நேரம் செல்லசெல்ல கூட்டம் குறைவதால் மீன் விற்பனை குறைகிறது. புரட்டாசி மாதம் நிறைவு பெறும் வரை வியாபாரம் சற்று குறைவாக தான் இருக்கும். தற்போது வரத்து இயல்பாக இருப்பதால் வஞ்சிரம் உட்பட அனைத்து மீன்களின் விலையும் குறைத்தே விற்கப்படுகிறது என மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை
    • மீன்கள் மீது ஐஸ்கட்டி மட்டும் போட்டு வைத்திருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகரில் சுகாதாரத்தை பேண மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    நாகர்கோவில் டதி பள்ளி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் தர மற்ற மீன்கள் சப்ளை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதைய டுத்து ஆணையாளர் ஆனந்த மோகன் அந்த உணவகத்தில் அதிரடி சோதனை நடத்த உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து இன்று காலை மாநகராட்சி நகர் நல அதிகாரி ராம்குமார், சுகாதார ஆய்வாளர்கள் ஜான்,ராஜேஷ் ஆகியோர் குறிப்பிட்ட உணவகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் தரமற்ற மீன்கள் உணவ கத்தில் இருந்தது தெரிய வந்தது. அங்கு மீன்களை பதப்படுத்த எந்த ஒரு வசதியும் இல்லாதது சோதனையில் கண்டறியப்பட்டது.

    மீன்கள் மீது ஐஸ்கட்டி மட்டும் போட்டு வைத்திருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து அங்கிருந்த மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.உணவகத்தில் இருந்த 500 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட உணவகத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

    ×