என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆக்கிரமிப்பு அகற்றம்"

    • கலெக்டர் தகவல்
    • ராணிப்பேட்டையில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கை களை முன்வைத்தனர்:-

    பல்வேறு இடங்களில் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளது.

    நீர்நிலை ஆக்கிரமிப்புகள் பாகுபாடு இன்றி அகற்றப்பட்டு, இடங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகிறது, தொடர்ந்து அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகவே இதில் எவ்வித பிரச்சனைகளும் இல்லை.‌ இது போன்ற பிரச்சனைகளை விவசாயிகள் மனுக்களாக வழங்கலாம் என்றார்.

    தொடர்ந்து விவசாயிகள் பேசியதாவது:-

    சீக்கராஜபுரம், வடகால் பொன்னை ஆற்றுக்கால்வாயில் ஆக்கிரம்புகள் உள்ளதால் கடந்த 2 ஆண்டுகளாக பொன்னையாற்றில் தண்ணீர் சென்றும், வடகால் ஏரிக்கு தண்ணீர் வரவில்லை.

    பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் இதுவரையில் ஆழ்துளை போடப்பட்டு பல விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட வில்லை.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் எதிர்வரும் சம்பா பருவத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் எவ்வித அரசியல் தலையிடும் இல்லாமல் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் நேரடியாக நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

    கடன் சங்கங்களில் விவசாயிகள் 6 மாதத்திற்கான பயிர் கடன்கள் வருகின்றனர்.இதனை ஒரு வருட பயிர் கடன் வழங்கும் நடைமுறையாக செயல்ப டுத்தினால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் பிரச்சனைகள் விளை பொருட்கள் நாசமாகிறது. இப்பிரச்சினை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. காட்டுப் பன்றிகளை சுட அரசு உத்தரவிட்டும், வனத்துறை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது என்றனர்.

    • 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் எதிரே பொன்னியம்மன் கோவில் தெரு, போஸ்கோ நகர், தண்டபாணி கோவில் தெரு உள்ளிட்ட பெரிய ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 113 ஏக்டர் பரப்பில் கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகள் என ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தன.

    நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகள் உள்ளிட்ட கட்டி டங்களை இடித்து அப்புறப்படுத்த சென்னை ஜகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகம் எதிரே இருந்த நீர்ப்பிடிப்பு ஆக்கிரமிப்பு கடை அகற்ற முயன்ற போது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் 7 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பேச்சுவார்த்தை நடத்தியதில் ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதிக்கு பிறகு அப்புறப்படுத்த முடிவெடுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆக்கிரமிப்பு கடை களை அகற்றுவது குறித்து போராட்டக் குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

    அப்போது குடியிருப்பு வீடுகளை தவிர்த்து வணிகரீதியான நிறுவனங்கள் மற்றும் கடைகளை சனிக்கிழமை அப்புறப்படுத்திக்கொள்ள சம்பந்தப்பட்டவர்கள் முழு சம்மதம் தெரிவித்தனர்.

    அதனை தொடர்ந்து நேற்று பொதுப்பணித்துறை நீர்வளத்துறை மூலம் 5 பொக்லைன் எந்திரம் மூலம் வருவாய்த்துறையினனர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

    அப்போது போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள், 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • தனிப்பிரிவு மற்றும் நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளுக்கு பல புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது.
    • இருப்பினும், முழுவதுமாக அகற்றவில்லை எனத் தெரிகிறது.

    மங்கலம்பேட்டை, நவ.24-

    விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டையில், விருத்தாசலம்-உளுந்தூ ர்பேட்டை மெயின் ரோடு (எஸ்.எச்.69 மாநில நெடு ஞ்சாலை) மற்றும் கடை வீதியில் 100-க்கும் மேற்ப ட்ட வீடு மற்றும் கடைகள் உள்ளன. இவற்றிற்கு முன்புற பகுதிளில், அரசு மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்து பல கட்டிடங்கள் கட்டப்பட்டி ருப்பதாகவும், இங்குள்ள கடை மற்றும் வணிக நிறுவ னங்களின் முன்புற பகுதி களில் தகர ஷீட்டு களால் ஷெட்டுகள், கொட்ட கைகள் அமைத்து பலர் ஆக்கிரமிப்பு செய்திரு ப்பதாகவும், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்தில் சிக்கிக் கொண்டவர்கள், உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் உரிய நேரத்திற்குள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதற்கு முடியாமலும், பொதுமக்கள் நடந்து செல்வதற்கு கூட வழியில்லாமல் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதால், மங்கல ம்பேட்டை மெயின் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக் கூறி, முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளுக்கு பல புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், விருத்தா சலம் நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) அலுலகம் சார்பில், கடந்த அக்டோபர் மாதம் இறுதியில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில், விருத்தாசலம் நெடுஞ்சாலைத் துறை உட்கோட்டத்திற்கு உட்பட்ட விருத்தாசலம்- உளுந்தூ ர்பேட்டை-விழுப்புரம் சாலையில், மங்கலம்பேட்டை மாநில நெடுஞ்சாலை எண்:69-ல், 13/4 முதல் 16/6 கி.மீ., வரை உள்ள ஆக்கிரமிப்பினை தாங்களாகவே முன்வந்து 15.11.2022 அன்று மாலை 6 மணிக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும். தவறினால் நெடுஞ்சாலைத் துறை மூலம் 16.11.2022 காலை ஆக்கிரமிப்புகளை அகற்றி பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். இதனால் ஏற்படும் எவ்விதமான இழப்பீடுகளுக்கும் நெடுஞ்சாலைத் துறை பொறுப்பேற்காது என்று கூறப்பட்டிருந்தது. இதனால், கடை மற்றும் வீடுகளின் முன்பு போடப்பட்டிருந்த தகர ஷீட் ஷெட்டுகள் மற்றும் கொட்டகைகளை பலர் தாங்களாகவே முன் வந்து அகற்றிக் கொண்டனர்.

    இருப்பினும், முழுவதுமாக அகற்றவில்லை எனத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறை கடலூர் கோட்டப் பொறியாளர் பரந்தாமன் உத்தரவின்பேரில், விரு த்தாசலம் நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் அறிவு க்களஞ்சியம், அப்போது, நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் விவேகானந்தன், சாலை ஆய்வாளர்கள் அருணகிரி, விமலாராணி, ராணி ஆகியோர் தலைமையிலான நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் நேற்று காலை மங்கலம்பேட்டை மெயின் ரோடு, கடைவீதி ஆகிய பகுதிகளில் ஆக்கிர மிப்புகள் அகற்றும் பணியி னை மேற்கொண்டனர். இந்தப் பணியின்போது, மங்கலம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • அதிகாரிகள் பலமுறை அகற்றும்படி எச்சரித்தும், ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.
    • பொக்லைன் வைத்து ஆக்கிரமிப்பு கட்டுமானம் மற்றும் குடில்களை இடித்து தள்ளினர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த தேவநேரி கடற்கரையோரம் அரசுக்கு சொந்தமான 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 40 சென்ட் நிலத்தை அப்பகுதியில், கெஸ்ட் அவுஸ் நடத்தும் சென்னையை சேர்ந்த நபர் ஆக்கிரமித்து வைத்திருந்தார். வருவாய்த்துறை அதிகாரிகள் பலமுறை அகற்றும்படி எச்சரித்தும், ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.

    இந்நிலையில் அங்கு கட்டுமானம் கட்டப்பட்டு, குடில் போட்டிருப்பதாக தகவலரிந்த திருக்கழுக்குன்றம் தாசில்தார் பிரபாகரன், மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன், வருவாய் ஆய்வாளர் ரகு, வி.ஏ.ஓ முனுசாமி உள்ளிட்ட அதிகாரிகள் இன்று மதியம் அங்கு சென்று, பொக்லைன் வைத்து ஆக்கிரமிப்பு கட்டுமானம் மற்றும் குடில்களை இடித்து தள்ளினர். மின் இணைப்பு இருந்ததையும் அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு கானப்பட்டது.

    • முக்கல் நாயக்கன் பட்டிக்கு பேருந்து இயக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
    • வழியில் வேடியப்பன் திட்டு, குளியனூர் திருப்பம் உள்ளிட்ட இடங்களில் பஸ் செல்வதற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லின் மூலம் அகற்றப்பட்டன.

    தருமபுரி, 

    தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் இருந்து ஏ,கொள்ளஅள்ளி வழியாக முக்கல் நாயக்கன் பட்டிக்கு பேருந்து இயக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.இந்நிலையில் அந்த வழித்தடத்தில் இன்று சோதனை ஓட்டம் நடந்தது.

    இதில் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. ஆர்.டி.ஓ. தாமோதரன், தாசில்தார் ராஜராஜன், நகராட்சி ஆணையர் சித்ரா, போக்குவரத்து கழக போது மேலாளர் ஜீவரத்தினம், அதிகாரிகள் மோகன்குமார், தமிழரசன், தருமபுரி கிளை மேலாளர் செல்வராஜ், ஊராட்சி தலைவர் வேடியப்பன், ஒன்றிய கவுன்சிலர் இந்துபெருமாள்சாமி, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஜெய்சங்கர், தாமரைசெல்வி , தருமபுரி பி.டி.ஓ.க்கள் கணேசன், தனபால் உள்ளிட்டோர் அந்த பஸ்சில் பயணம் செய்தனர்.

    வழியில் வேடியப்பன் திட்டு, குளியனூர் திருப்பம் உள்ளிட்ட இடங்களில் பஸ் செல்வதற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லின் மூலம் அகற்றப்பட்டன.

    இனி இந்த வழித்தடத்தில் தொடர்ந்து பேருந்து இயக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    • போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் நடவடிக்கை
    • நோட்டீஸ் அளித்து காலஅவகாசம் அளித்தனர்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் கோட்டை மைதானம் ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருந்தது.

    ஆக்கிரமிப்பு அகற்றம்

    இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுவதால் கோட்டை மைதானம் சுற்றியுள்ள அரசு அலுவலங்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.

    இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன.

    ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி மற்றும் ஆரணி வருவாய் துறையினர் ஏற்கனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் அளித்து காலஅவகாசம் வழங்கினார்கள்.

    இதனையடுத்து நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி தாசில்தார் ஜெகதீசன் ஆகியோர் தலைமையில் கோட்டை வீதி பேருந்து நிலையங்கள் செல்லும் வழியில் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினார்கள்.

    ஆரணி முக்கிய வீதிகளான பேருந்து நிலையங்கள் மற்றும் கோட்டை வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • பெரியார் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • இதனால் பஸ் நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.

    மதுரை

    மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பில் பெரியார் பஸ் நிலையம் புதிதாக கட்டப்பட்டு அதன் ஒரு பகுதி பயன்பாட்டில் உள்ளன.

    புதிய பஸ் நிலையத்தில் உள்ள பிளாட் பாரங்களில் பழக்கடை உள்ளிட்டவற்றை அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது.

    மேலும் இந்த கடைகள் மூலம் குப்பைகளும் அதிக ரித்தது. இதனால் சுகாதார சீர்கேடும், பயணிகளுக்கு தொந்தரவும் ஏற்பட்டது.

    இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் இன்று பஸ் நிலையத்தில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு செய்த பழக்கடைகளை அகற்ற முற்பட்டனர்.

    அப்போது வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் பஸ் நிலையம் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.

    • நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை
    • கால்வாய் அமைக்கும் பணிக்கு குறியீடு

    செங்கம்:

    செங்கம் நகரில் போளூர் சாலையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக கடை மற்றும் வீடுகள் கட்டி பயன்பாட்டில் இருந்து வந்தது.

    இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    செங்கம் மில்லத்நகர் அருகே உள்ள போளூர் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கால்வாய் அமைக்கும் பணிக்கு குறியீடு செய்யப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் பொக்லைன் எந்திரம் மூலம் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    • நோட்டீஸ் வழங்கியும் அகற்றாததால் நடவடிக்கை
    • சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் வகையில் ஊராட்சி மன்ற சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    14 சிறிய கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக ஏலகிரி செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்று ஏலகிரி மலை சிறந்த சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது.

    இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். படகு சவாரி, இயற்கை பூங்கா, சாகச விளையாட்டுகள், பறவைகள் சரணாலயம், உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

    இதனால் அண்டை மாநிலங்களான கர்நாடக, ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வார விடுமுறை நாட்களில் குவிந்து வருகின்றனர். புங்கனூர் பகுதியில் படகு சவாரி இல்லம் அமைந்துள்ளது.

    இது முக்கிய சாலையிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த சாலையின் இரு பக்கங்களிலும் சுற்றுலா பயணிகள் நடப்பதற்காக நடைபாதைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நடைபாதையில் அப்பகுதி மக்கள் கடைகள் வைத்து, ஷீட்டுகள் அமைத்தும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

    இதனால் விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதால் படகு இல்ல சாலைகளில் கூட்ட நெரிசல்கள், வாகன நெரிசல்கள் ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் நடைபாதைகளில் நடக்க வழி வகை செய்ய வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இந்நிலையில் திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆணைக்கிணங்க திருப்பத்தூர் தாசில்தார் சிவப்பிரகாசம் உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர் ரவிமாராஜன், கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் ஆகியோர் ஆக்கிரமித்து இருந்த கடைகளுக்கு மூன்று மாதங்களுக்கு முன் அறிவிப்பு நோட்டீஸ் வழங்கினர்.

    ஆனால் இதுவரை கடைகளை அகற்றாததால் வருவாய்த்துறையினர் நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்து பொக்மூலைன் எந்திரம் மூலம் கடைகளை அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    படகு இல்ல சாலையில் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக, நடைபாதைகளில் இருந்த கடைகளுக்கு 3 மாதங்களுக்கு முன்பு கடைகளை அகற்றக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் கடைகளை அகற்ற துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

    இதனை பெரிதும் பொருட்படுத்தாமல் கடைகளை அகற்றாமல் இருந்த நிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

    விரைவில் சுற்றுலாப் பயணிகளுக்கு நடைபாதையில் நடந்து செல்ல வழிவகை செய்யப்படும் என்றனர். உடன் ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், துணைத் தலைவர் திருமால், ஆகியோர் உடன் இருந்தனர்.

    • எதிர்ப்பை கண்டுகொள்ளாத அதிகாரிகள், போலீசாரின் உதவியுடன் ஆக்கிமிரப்பை அகற்றினார்கள்.
    • பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் 2வது நாளாக சாலை மறியல் போராட்டம்

    சென்னை:

    சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான லூப் சாலையின் மேற்கு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிற 18-ந்தேதிக்குள் மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், லூப் சாலையின் மேற்கு பகுதியில் எந்த ஆக்கிரமிப்புகளும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை தொடர்ந்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மெரினா கடற்கரை லூப் சாலையில் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினார்கள். அப்போது 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் அங்கு திரண்டுவேந்து, மீன் கடைகள் மற்றும் உணவகங்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பை கண்டுகொள்ளாத அதிகாரிகள், போலீசாரின் உதவியுடன் ஆக்கிமிரப்பை அகற்றினார்கள். அங்கிருந்த மீன்கள், வலைகள் ஆகியவற்றையும் அப்புறப்படுத்தினார்கள். பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இரண்டாவது நாளாக இன்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் 2வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் படகுகளை வைத்து மீனவர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களிடம் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. வேலு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    • ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்த இடங்களை சர்வே செய்த போது ஆக்கிரமிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சர்வே பணியை தடுத்து விட்டனர்.
    • சர்வே பணியின் போது ஆக்கிரமிப்பாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது/

    செம்பட்டி:

    செம்பட்டி அருகே மல்லையாபுரத்தில் பொதுப்பாதை இடங்களை சிலர் ஆக்கிரமிப்புகள் செய்திருந்தனர். இதனை அகற்ற வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலை யில் ஆக்கிரமிப்பாளர்கள் சர்வே பணியை தடுத்தனர்.

    இதுகுறித்து செம்பட்டி போலீசில் புகார் செய்ய ப்பட்டது. இதையடுத்து மல்லையாபுரத்தில் ஆக்கிர மிப்புகள் செய்யப்பட்டிருந்த இடங்களை சர்வே செய்த போது ஆக்கிரமிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சர்வே பணியை தடுத்து விட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் பாது காப்புடன் சர்வே செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்தப் பணியில் அக்கரைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி சக்திவேல், ஆத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா, எஸ்.பாறை ப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கணேசன், சர்வேயர் ஈஸ்வரன், எஸ்.பாரைப்பட்டி ஊராட்சி மன்ற செயலர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சர்வே பணியின் போது ஆக்கிரமிப்பாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் தேர் திருவிழா முன்னிட்டு நடவடிக்கை
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

    சோளிங்கர்:

    சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் சித்திரை தேர்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

    10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் பக்தோசித பெரு மாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் காலை மாலை நேரங்களில் நான்கு மாட வீதிகளில் உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    இந்தநிலையில் சுவாமி வீதிஉலா செல்வதற்கு ஏதுவாக பஜார் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    நகராட் சியின் நகரமைப்பு ஆய்வாளர் கவிதா, துப்புரவு ஆய்வாளர் வடிவேல் மேற்பார்வையில் வருவாய்த்துறை உதவி யுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

    அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மண்டல துணை தாசில்தார் அருட்செல்வம், வருவாய் ஆய்வாளர் தமிழரசி, கிராம நிர்வாக அலுவலர் ராஜகோபால், நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் நடராஜன் உடனிருந்தனர்.

    ×