search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 225867"

    சேலம் மேற்கு கோட்டம் சார்பில் அஞ்சல் முகவர் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டன.

    சேலம்:

    சேலம் அஞ்சல் மேற்கு கோட்டத்தில் வருகிற 14-ம் தேதி காலை 11 மணி முதல் 2 மணி வரை பி.எல்.ஐ., ஆர்.பி.எல்.ஐ. நேரடி முகவர் தேர்விற்கான நேர்காணல் நடைபெற உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் வருகிற 14-ந்தேதி சேலம் மேற்கு கோட்ட அலுவலகத்தில் தங்களின் வயது சான்றிதழ், கல்வி சான்றிதழ் மற்றும் முழு விபரங்களுடன் கலந்து கொள்ளலாம்.

    நேர்முக தேர்விற்கான அடிப்படை தகுதிகள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 50 வயது வரை மட்டும் உள்ளவர்கள் கலந்து கொள்ள வேண்டும். ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், முன்னாள் படை வீரர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், சுய தொழில் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் தகுதி உள்ள அனைவரும் பங்கேற்கலாம்.

    ஆயுள் காப்பீடு திட்டத்தில் முன் அனுபவம் இருந்தால் வரவேற்கத்தக்கது. மேற்கண்ட தகுதியினை பூர்த்தி செய்தவர்கள் தங்களது வயது சான்றிதழ், கல்வி சான்றிதழ், ஆதார் நகல் ஆகியவற்றுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஒரு பாஸ்போர்ட் அளவு போட்டோ இவை அனைத்தையும் வருகிற 14-ந்தேதிக்குள் கோட்ட கண்காணிப்பாளர் சேலம் மேற்கு கோட்டம் சேலம் -636005 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

    முகவர் நியமனம் இலக்கா விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும். அஞ்சல் கண்காணிப்பாளர் முடிவே இறுதியானது. இந்த தகவலை சேலம் மேற்கு கோட்டம் அஞ்சல் அலுவலக கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தெரிவித்து–உள்ளார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் அரபு நாட்டு உணவுக்கு பொதுமக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
    • அரபு நாட்டு உணவு வகைகளை மக்கள் மத்தியில் விற்பனை செய்து வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தி லுள்ள கீழக்கரை என்றாலே பிரியாணியும் தொதலும் தான் நினைவுக்கு வரும். கீழக்கரை பிரியாணி சாப்பிடு வதற்காக வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் கீழக்கரைக்கு வருவதுண்டு,

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது பிரியாணியை பின்னுக்குத் தள்ளிவிட்டு மந்தி, கப்சா போன்ற அரபுநாட்டு உணவு வகைகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது,

    ராமநாதபுரம் மாவட்ட த்தை சேர்ந்த ஏராளமா னோர் வளைகுடா நாடு களில் வேலை செய்து வருகின்ற னர். விடுமுறைக்கு சொந்த ஊர் திரும்பியவர்கள் கொ ரோனா பாதிப்பு காரணமாக மீண்டும் அரபு நாடு செல்ல விரும்பாமல் அரபு நாட்டு உணவகங்களை தொடங்கினர்.

    இங்கு தயாரிக்கப்படும் அரபுநாட்டு உணவு வகைகளை மக்கள் மத்தியில் விற்பனை செய்து வருகின்றனர். தினந்தோறும் தயாரிக்கப்படும் உணவு வகைகளை வாட்ஸ்அப் குரூப் மூலம் தெரியப்படுத்தி வருகின்றனர்.

    இந்த உணவு வகைகள் பிரியாணி போன்று ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மீன் ஆகியவற்றில் தயாரிக்கப்படுகிறது. மசாலா எதுவும் பயன்படுத்தாமல் நெய், தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. இதன் ருசி நாவில் எச்சில் ஊற வைக்கிறது. இந்த வகை உணவு கீழக்கரையில் தொடங்கப்பட்டு தற்போது ராமநாதபுரம் மாவட்டம் பகுதிகளில் பரவியுள்ளது. இப்பகுதி மட்டுமன்றி சுற்று வட்டார கிராமங்களில் அதிக கிராக்கி உள்ளது.

    8 பேர் சாப்பிடும் வகையிலான மட்டன் மந்தி ரூ. 2000, சிக்கன் மந்தி ரூ.1650-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேவையானவர்களுக்கு வீடுகளுக்கு நேரடியாகச் சென்று உணவுகளை வழங்கி வருவதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

    தற்போது பிரியாணி என்ற பெயர் மங்கிப்போய் மக்கள் மத்தியில் அரபு நாட்டு உணவு வகைகள் முதலிடத்தை பெற்றுள்ளது. உள்ளூரிலேயே வியாபாரம் செய்வதால் குடும்பம் சகித மாய் நிம்மதியுடன் இருந்து வருவதாக தெரிவித்தனர்.

    ×