search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 225962"

    • அதிக ஒலி மாசு ஏற்படுத்தும் ஏர்ஹாரன் பொருத்தி வாகனங்களை இயக்கினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
    • வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் சேக்முகமது கூறியதாவது:-

    மோட்டார் வாகன சட்டத்தை பின்பற்றி இரு சக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும். அதன்படியே வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்கு மாறாக இருசக்கர வாகனங்களில் சைலன்சர் மற்றும் கைப்பிடிகளில் தாங்களாகவே மாற்றம் செய்து ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும்.

    மேலும் சைலன்சர்களை தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப அதிக ஒலியுடனோ, விசித்திரமான ஒலிகளுடனோ மாற்றம் செய்து அதிக ஒலி மாசு ஏற்படும் வகையில் இயக்கினால் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இதேபோல மோட்டார் சைக்கிளில் ஹேண்டில் பார்களில் மாற்றம் செய்து இயக்கினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    வாகனங்களில் மக்களை அச்சுறுத்தும் வகையில் சிலர் அதிக ஒலி கொண்ட ஏர்ஹாரன்களை இயக்கி வருகின்றனர். இத்தகைய ஏர்ஹாரன்களை பொருத்தி வாகனங்களை இயக்கினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    இதுதவிர காரில் முன் இருக்கைகள் மற்றும் பின் இருக்கைகளில் பயணம் செய்வோர் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். சீட்பெல்ட் அணிய தவறினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். இது தொடர்பாக கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அதிரடி சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்டத்தில் காவல்துறையுடன் இணைந்து அதிரடி சோதனை நடத்தப்பட்டு மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×