search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காளைகள்"

    • வடமாடு விடும் விழாவினை அரசு வழிகாட்டுதலுக்குட்பட்டு நடத்துவது குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.
    • விதிமீறல்களை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் பாதுகாப்பு கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மாவட்ட அளவிலான ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு விடும் விழாவினை அரசு வழிகாட்டுதலுக்குட்பட்டு நடத்துவது குறித்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.

    பின்னர் கலெக்டர் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா அரசு விதிகளின்படி நடத்தப்படுவதற்கான முழு பொறுப்பும் விழாக்குழுவினரைச் சார்ந்ததாகும்.

    ஜல்லிக்கட்டு விழா அமைப்பாளர்களின் சில முக்கியமான கடமைகள் மற்றும் பொறுப்புகள் பின்வருமாறு:-

    ஜல்லிக்கட்டு விழா நிகழ்வுகளை நடத்துவதற்கு அமைப்பாள ர்கள் முன்அனுமதியை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசிடமிருந்து பெறுவார்கள்.

    ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கான கோரிக்கை முன்கூட்டியே எழுத்துப்பூர்வமாக நிகழ்வின் நடத்தப்படவுள்ள தேதியைக் குறிப்பிட்டு முறையான ஆவணங்களுடன் குறைந்தது 15 நாட்களுக்கு முன் மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்க வேண்டும்.

    ஜல்லிக்கட்டு விழாவின்போது நடைபெறும் அனைத்து நிகழ்விற்கும் தாங்களே பொறுப்பு என்னும் உறுதி மொழியும், முழு நிகழ்வும் தேசிய மயமாக்கப்பட்ட நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டுள்ளதற்கான

    விழாக்குழுவினரால் சமர்ப்பிக்க வேண்டும்.

    ஜல்லிக்கட்டு விழாவில் அனுமதிக்கப்பட உள்ள அதிகபட்ச காளைகளின் எண்ணிக்கை, மற்றும் பங்கேற்க எதிர்பார்க்கப்படும் காளைகளின் உத்தேசப் விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    இந்திய பிராணிகள் நல வாரியம் வழங்கி உள்ள பல வகைகள் போதுமான எண்ணிக்கையில் நிறுவப்பட வேண்டும்.

    விதிமீறல்களை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் பாதுகாப்பு கேமராக்கள் அல்லது வெப் கேம்கள், வாடிவாசல் உள்ளிட்ட அரங்கின் முக்கிய இடங்களில் அமைக்கப்பட வேண்டும்.

    மாவட்ட நிர்வாகத்தின் விருப்பப்படி அனுமதிக்கப்படும் கோவில் காளைகளை வாடிவாசல் அருகில் தனி பாதை வழியாக அனுப்பலாம். அந்த கிராம கோவில் காளைகளை மாடுபிடி வீரர்கள் யாரும் தழுவுதல் கூடாது.

    பாக்கு வைத்து அழைக்கப்படும் காளைகளுக்கு தனியாக காளைகள் தங்குமிடம் அமைக்கப்பட வேண்டும்.

    போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் உரிமையாளர்கள் விவரங்களை thanjavur.tn.nic.in என்ற இணையதளத்தில் விழா நடைபெறும் 3 நாட்களுக்கு முன் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.இந்த கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் தமிழ்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மஞ்சுவிரட்டு போட்டியில் 300 காளைகள் பங்கேற்றன.
    • மாடுகளை பிடிக்க இளைஞர்கள் பட்டாளம் குழுமி இருந்தது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது வெள்ளலூர் நாடு. இதனை சார்ந்தது ஒத்தப்பட்டி. இங்குள்ள மந்தை கருப்பணசாமி மற்றும் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள கண்மாய் பகுதியில் தொழு அமைக்கப்பட்டு இருந்தது.

    இதில் மேலூர், வெள்ள லூர், உறங்கான்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் வந்திருந்தது. இதையொட்டி கிராமத்தின் சார்பில் ஜவுளி பொட்டலங்கள் கொண்டு வந்து காளைகளுக்கு வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மாடுகளை அவிழ்த்து விட்டனர். சீறிப்பாய்ந்து மாடுகளை பிடிக்க இளைஞர்கள் பட்டாளம் குழுமி இருந்தது. இதில் ஏராளமான மாடுகளை வீரர்கள் பிடித்தனர். மாடுகளை பிடிக்கும்போது 20-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.

    இதில் காயமடைந்த வீரர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மேலூர் மற்றும் வெள்ளலூர் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த மஞ்சுவிரட்டு போட்டியை காண சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கீழவளவு போலீசார் செய்திருந்தனர்.

    ×