search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 226121"

    • இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிரமாஸ்திரா.
    • இப்படம் மூன்று பாகங்களாக உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    'ஏ தில் கே முஸ்கில்' படத்தை தொடர்ந்து ஆலியாபட், ரன்பீர் கபூர் இணைந்து நடித்த திரைப்படம் பிரமாஸ்திரா. இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், நாகர்ஜூனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 9 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.


    பிரமாஸ்திரா

    சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ரன்பீர் கபூர் பிரமாஸ்திரா -2 படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, "பிரமாஸ்திரா 2 மற்றும் 3 பண்ண இருக்கிறோம். அதற்கான கதையை இயக்குனர் அயன் முகர்ஜி எழுதிக்கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பிரமாஸ்திரா 2 படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர், ஆலியா பட் இணைந்து நடித்துள்ள படம் பிரமாஸ்திரா.
    • மூன்று பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    'ஏ தில் கே முஸ்கில்' படத்தை தொடர்ந்து ஆலியாபட், ரன்பீர் கபூர் இணைந்து நடிக்கும் படம் பிரமாஸ்திரா. இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், நாகர்ஜூனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 9 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    ஆலியாபட் -  ரன்பீர் கபூர்

    இதையடுத்து ரன்பீர் கபூர், ஆலியாபட் உடன் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜெய்னில் உள்ள மகாகாளி கோவிலுக்கு வருகை தந்துள்ளார். அப்போது இந்து அமைப்பினர் சிலர் ஆலியா, ரன்பீரை மகாகாளி கோவிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கோஷமிட்டு கருப்புக் கொடி காட்டியுள்ளனர்.

    அதுமட்டுமல்லாமல் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் லேசான தடியடி நடத்தப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியதாக கூறப்படுகிறது. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் இருவரும் தரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஆலியாபட் - ரன்பீர் கபூர்

    கடந்த 2011 ஆம் ஆண்டு ரன்பீர் கபூர் தனது பட புரோமோஷன் விழாவின் போது மாட்டிறைச்சி தனக்கு பிடிக்கும் என்று கூறிய வீடியோ தற்போது வைரலானதைத் தொடர்ந்து இந்த போராட்டம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது..

    • இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர், ஆலியா பட் இணைந்து நடித்துள்ள படம் பிரமாஸ்திரா.
    • மூன்று பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    'ஏ தில் கே முஸ்கில்' படத்தை தொடர்ந்து ஆலியாபாட், ரன்பீர் கபூர் இணைந்து நடிக்கும் படம் பிரமாஸ்திரா. இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், நாகர்ஜுனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    பிரமாஸ்திரா

    ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும், கரண் ஜோகரின் தர்மா புரொடக்‌ஷன் நிறுவனமும் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரீத்தம் இசையமைத்துள்ளார். ஹிந்தி, தமிழ் என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம் மிகப் பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ளது. மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 9 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    இதையடுத்து, இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் சென்னை வந்துள்ளனர். அப்போது பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் நாகர்ஜுனா, "சென்னைக்கு வருவது சொந்த வீட்டுக்கு வருவது போல் இருக்கிறது. எனது பயணம் இங்கு தான் தொடங்கியது. "விக்ரம்" திரைப்படம் அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்துள்ளது. கமல் சார் எனக்கு மிகவும் பிடித்த நாயகன்" என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

    • இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர், ஆலியா பட் இணைந்து நடித்துள்ள படம் பிரமாஸ்திரா.
    • மூன்று பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    'ஏ தில் கே முஸ்கில்' படத்தை தொடர்ந்து ஆலியாபாட், ரன்பீர் கபூர் இணைந்து நடிக்கும் படம் பிரமாஸ்திரா. இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், நாகர்ஜூனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும், கரண் ஜோகரின் தர்மா புரொடக்‌ஷன் நிறுவனமும் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரீத்தம் இசையமைத்துள்ளார். ஹிந்தி, தமிழ் என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம் மிகப் பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ளது. மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 9 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.


    பிரமாஸ்திரா

    இப்படத்தின் முதல் பாடல் "கேசரியா" அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் "தேவா தேவா" பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை சித்ஸ்ரீராம் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடியுள்ளனர்.

    "தேவா தேவா" பாடலின் அனுபவம் குறித்து நடிகர் ரன்பீர் கபூர் கூறியதாவது, "நான் பாடலை முழுமையாக ரசித்தேன், தனிப்பட்ட முறையில் பல நிலைகளில் அதை தொடர்புபடுத்த முடியும். இந்த பாடல் ஒருவரை ஆன்மீக ரீதியில் மிகவும் சக்திவாய்ந்ததாக உணர வைக்கிறது, மேலும் எல்லோரும் அதை உணர்ந்து மகிழ்வார்கள் என்று நம்புகிறேன்" என கூறினார். 

    ×