search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அங்கன்வாடி"

    • தனியார் நர்சரி பள்ளிகளுக்கு இணையாக மாவட்டத்தில் 925 அங்கன்வாடி மையங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.
    • அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

    சிறிய குழந்தைகள் அங்கன்வாடி மையத்துக்கு செல்ல மறுத்து வீட்டில் அழுது புரண்டு அடம்பிடிப்பது வழக்கம். குழந்தைகளை பெற்றோர் தூக்கிச்சென்று அங்கன்வாடி மையத்தில் விட்டு செல்வதை பெரும்பாலும் காண முடியும். குழந்தைகளும் வேறு வழியில்லாமல் அங்கன்வாடி ஊழியருக்கு பயந்து அங்கே இருந்து பொழுதை கழித்து செல்வார்கள்.

    ஆனால் திருவள்ளூரில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகள் உற்சாகத்துடனும், சிரித்த முகத்துடன் போட்டி போட்டு வந்து செல்கிறார்கள். இதற்கு அங்குள்ள அங்கன்வாடி பெண் ஊழியரின் கனிவான உபசரிப்பு மற்றும் வரவேற்கும் விதம் காரணமாக உள்ளது. இந்த உபசரிப்பு அங்கன்வாடி மையத்துக்கு வரும் குழந்தைகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 1760 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் தனியார் பள்ளிக்கு நிகராக அங்கன்வாடி மையங்களை மேம்படுத்த "ஸ்மைல்" என்ற புதிய திட்டத்தை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்து உள்ளார். இது மாவட்டத்தில் உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சத்துணவு மற்றும் முன்பள்ளிக் கல்வியில் ஆதரவளிக்கும் திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதில் தனியார் நர்சரி பள்ளிகளுக்கு இணையாக மாவட்டத்தில் 925 அங்கன்வாடி மையங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. குழந்தைகள் உட்கார நாற்காலி வசதி, விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மற்றும் அடிப்படை கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்த நிலையில் திருவள்ளூரை அடுத்த திருவலாங்காடு சின்னம்மா பேட்டையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஊழியராக பணியாற்றி வரும் ருக்மணிதேவி என்பவர் அங்கன்வாடி மையத்துக்கு வரும் குழந்தைகளை வித்தியாசமாக வரவேற்கும் வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் அங்கன்வாடி மையத்துக்கு வரும் குழந்தைகளை கை குலுக்குதல், வணக்கம் தெரிவித்தல், கட்டி அணைத்தல், கைகளால் "பஞ்ச்" கொடுப்பது என வித்தியாசமான முறையில் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார். குழந்தைகளும் மகிழ்ச்சி வெள்ளத்தில் அங்கன்வாடி மையத்துக்கு துள்ளி குதித்தபடி செல்கிறார்கள்.

    மேலும் குழந்தைகள் தங்களை வரவேற்கும் விதத்தை தேர்வு செய்யும் வகையில் அங்கன்வாடிமைய அறையின் வாசல் முன்பு இதற்காக கை குலுக்குதல், கட்டி அணைத்தல், வணக்கம் தெரிவித்தல், கைகளால் பஞ்ச் ஆகியவை அடங்கிய வரைபடம் ஒட்டப்பட்டு உள்ளது.

    இதில் ஒன்றை குழந்தைகள் தேர்வு செய்ததும் அதன்படி அங்கன்வாடி ஊழியர் ருக்மணிதேவி வரவேற்று அனுப்புகிறார். இதனால் குழந்தைகள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். தற்போது சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

    இந்த வீடியோவை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். குழந்தைகளை வரவேற்கும் அங்கன்வாடி ஊழியர் ருக்மணிதேவியை அவர் பாராட்டி உள்ளார்.

    இதுகுறித்து அங்கன்வாடி ஊழியர் ருக்மணி தேவியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அங்கன்வாடி மையத்துக்கு காலையில் வரும் குழந்தைகளை எப்போதும் இதுபோல் தான் வரவேற்பேன். இதனால் குழந்தைகள் மகிழ்ச்சி அடைவார்கள். இதன் காரணமாக குழந்தைகளுடன் நெருக்கமா இருக்க முடியும். இங்கு மொத்தம் 25 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் சந்தோஷமாக வரும்போது பெற்றோருக்கும் மிகவும் நம்பிக்கை ஏற்படும்.

    தற்போது இந்த அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அங்கன்வாடி ஊழியர்களும், பெற்றோர்களும் பாம்பை பார்த்து அலறி அடித்து ஓடினர்.
    • போலீசார், தீயணைப்புத்துறையினர் பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர் .

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 20,30 வது வார்டு காமராஜர் நகர் 1வது வீதியில் அங்கன்வாடி பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது .இங்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் பால்வாடி பள்ளிக்கு வந்து செல்லும் நிலையில் இன்று காலை 9 மணி அளவில் அங்கன்வாடி ஊழியர்கள் பள்ளியை திறக்க வந்தபோது கட்டடத்தில் இருந்து பாம்பு ஒன்று வந்ததாக கூறப்படுகிறது .

    அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பள்ளியில் விட்டு செல்வதற்காக வந்திருந்த பெற்றோர்களும் பாம்பை பார்த்து அலறி அடித்து ஓடினர்.

    இது குறித்து உடனடியாக வடக்கு காவல் நிலையத்திற்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது .சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்புத்துறையினர் பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர் . அங்கன்வாடி கட்டிடம் சிதிலமடைந்த நிலையில் காட்சி அளிப்பதால் கட்டிடத்திற்குள் ஏராளமான பூரான் ,பல்லி பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அவ்வப்போது மாணவர்களை அச்சுறுத்தி வருவதாக அங்கன்வாடி ஊழியர்கள் கவலை தெரிவித்தனர். உடனடியாக இந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • அவிநாசி வட்டாரத்தில் 92 பிரதான அங்கன்வாடி மையங்கள் உள்ளன.
    • 12 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    அவிநாசி :

    அவிநாசி வட்டாரத்தில் 92 பிரதான அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இவற்றில் 12 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 32 சிறியஅங்கன்வாடிகளில் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.காலியாக உள்ள இடங்களுக்கு அருகேயுள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்களுக்கே கூடுதல் பொறுப்பும் வழங்கப்படுகிறது.

    இதனால் பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது. சில நேரங்களில் அங்கன்வாடியில் உள்ள சமையலர் விடுப்பு எடுத்து விட்டால், அங்கன்வாடி பணியாளர்களே கூடுதலாக சமையல் வேலையையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. இதனால் குழந்தைகளுக்கான கற்பித்தல் பணியில் தொய்வு ஏற்படுகிறது.குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மற்றும் உடல்நலன் சார்ந்து அங்கன்வாடி மையங்கள் செயல்பட வேண்டிய நிலையில் இது அரசின் முதன்மை திட்டமாக பார்க்கப்படுகிறது.

    இருப்பினும் தேவைக்கேற்ப பணியாளர்கள் இல்லாததால் திட்டத்தின் நோக்கம் எதிர்பார்த்த பலன் தருவதில் சிக்கல் உள்ளது.இது குறித்து அங்கன்வாடி பணியாளர் சங்கத்தினர் கூறுகையில், திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி மாநிலம் முழுக்க அங்கன்வாடி பணியாளர் மற்றும் சமையலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பினால் மட்டுமே திட்டத்தின் நோக்கம், முழு அளவில் பலன் தரும் என்றனர்.

    • தலைவர்கள் வேடமணிந்த மாறுவேடப்போட்டி நடைபெற்றது.
    • குழந்தைகளுக்கு அங்கன்வாடி ஆசிரியை பிருந்தா பரிசளித்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சித்தம்பலத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில், 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அங்குள்ள குழந்தைகள் பாரதியார்,காந்தி,நேரு, காமராஜர் போன்ற தேச தலைவர்கள் வேடமணிந்த மாறுவேடப்போட்டி நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு அங்கன்வாடி ஆசிரியை பிருந்தா பரிசளித்தார். இதில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வளர் இளம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • அதன்படி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் முகாம் நடைபெற்றது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டத்தில் ஒன்று படுவோம், உறுதி ஏற்போம் திட்டத்தின் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் அங்கன்வாடி பணியாளர்கள், அந்தந்த பகுதி வளர் இளம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வரு கிறது. அதன்படி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் முகாம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி, தனது தாயை 2-வதாக திருமணம் செய்து கொண்ட பிரகாஷ் (வயது 40) என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்வதாக புகார் கூறினார். இது குறித்து விசாரணை செய்ததில் சிறுமி கூறியது உண்மை என தெரியவந்தது.

    இதை அடுத்து நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் சவுண்டேஸ்வரி மற்றும் அதிகாரிகள் குமாரபாளையம் பகுதியில் உள்ள சிறுமியின் வீட்டுக்கு சென்றனர்.

    அங்கு இருந்த பிரகாஷ் மற்றும் சிறுமியின் தாய் துளசி (35) ஆகிய 2 பேரையும் திருச்செங்கோடு மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அச்சிறுமி துளசியின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தை என்பது தெரியவந்துள்ளது. சிறுமி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

    • பழுதான அங்கன்வாடி கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • கட்டிடம் முற்றிலுமாக சுவர்கள் விரிசல் விழுந்து இடியும் நிலையில் உள்ளது. மேலும் ஜன்னல்கள் உடைந்தும், பெயர்த்தும் உள்ளது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே செங்காலன் வயல் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. இங்கு சுமார் 20 குழந்தைகள் பயின்றுவந்தனர்.

    இந்த நிலையில் தற்போது கட்டிடம் முற்றிலுமாக சுவர்கள் விரிசல் விழுந்து இடியும் நிலையில் உள்ளது. மேலும் ஜன்னல்கள் உடைந்தும், பெயர்த்தும் உள்ளது.

    இங்கு பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கட்டிடத்தின் அவல நிலையால் இங்கு கல்வி பயில முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் பயின்று வருகின்றனர். சேதமான நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தின் மிக அருகில் ஆரம்ப பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது.

    ஆரம்ப பள்ளி மாணவ, மாணவிகள் இப்பகுதியில் தான் விளையாடுகின்றனர். மேலும் இந்த பழுதடைந்த கட்டிடத்தின் அருகே குடிநீர் குழாய் இருப்பதால் குடிநீர் குடங்களில் தண்ணீர் பிடித்துச் செல்லும் பொதுமக்களும், ஆரம்ப பள்ளி மாணவ, மாணவிகளும் குடிநீர் தேவைக்காக இந்த கட்டிடத்தின் அருகே சென்று வருகின்றனர்.

    அதிகாரிகளின் மெத்தனத்தால் எந்த நேரத்திலும் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

    எனவே பழைய கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அந்தபகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ராஜபாளையம் தொகுதியில் அங்கன்வாடி பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.
    • இந்த தகவலை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    ராஜபாளையம்

    விருதுநகர்மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ராஜபாளையம் தொகுதியில் ஏழ்மை நிலையிலுள்ள கைம்பெண், கணவரால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் 5 செம்மறியாடு, வெள்ளாட்டு குட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி ராஜபாளையம் அருகே உள்ள சொக்க நாதன்புத்தூரில் நடந்தது.

    பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் திட்டம் (2021-22) சார்பில் 100 பயனாளிகளுக்கு 500 ஆட்டு குட்டிகளை ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், யூனியன்சேர்மன் சிங்கராஜ் ஆகியோர் வழங்கினர்.

    விழாவில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பேசுகையில், கருணாநிதி ஆட்சிக்காலத்தில் விதவை என்ற பெயரை கைம்பெண் என மாற்றியமைத்து அவர்களின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.

    அதுபோல் தற்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் பெண்களின் வளர்ச்சிக்காக அரசு நகர்ப்புற பேருந்துகளில் இலவச பயணம், மாணவி களுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகையாக மாதம் ரூ.1000 என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    அதன்வழியில் பெண்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் நோக்கத்தில் ஆடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    எப்போதும் பெண்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது தி.மு.க.வும், தமிழக முதல்வரும் தான். விரைவில் அங்கன்வாடி பணியாளர்கள் பணி நிரப்பப்படவுள்ளது.அதில் ஏழை, எளிய, கைம்பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.

    இந்த நிகழ்வில் மண்டல இணை இயக்குநர் ரவிச்சந்திரன், துணை இயக்குநர் கோவிந்தராஜ், உதவி இயக்குநர் ராஜேஸ்வரி முனியசாமி, தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், கிளை செயலாளர்கள் அமுதரசன், சின்னதம்பி, சீதாராமன், தங்கப்பன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மாரிமுத்து, மகளிரணி சொர்ணம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அண்ணா நகரில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பலத்த சேதம் அடைந்தது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் புகாரால் அந்த கட்டடம் இடிக்கப்பட்டது.

    அந்த மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த, சுமார் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள், அருகிலுள்ள மகாவிஷ்ணு நகர் அங்கன்வாடி மையத்துக்கு மாற்றப்பட்டனர். 2 ஆண்டுகளாகியும் இடிக்கப்பட்ட கட்டடத்துக்கு மாற்றாக புதிய கட்டடம் கட்டப்படவில்லை. மகாவிஷ்ணு நகர் அங்கன்வாடி மையத்தில் ஏற்கனவே 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது 45க்கும் அதிகமான குழந்தைகள் ஒரே இடத்தில் உள்ளனர். இடப்பற்றாக்குறை ஏற்படுவது மட்டுமன்றி குழந்தைகளை பராமரிப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது.

    அண்ணா நகர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெற்றோர் தங்கள் குழந்தைகளை இங்கு அழைத்து வர வேண்டிய நிலை உள்ளது. இடிக்கப்பட்ட அண்ணா நகர் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்டவேண்டும்என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரூ.10.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையத்தினை தமிழக செய்தித்துறை அமைச்சர் திறந்து வைத்தார்
    • மொரட்டுப்பாளையம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது.

    ஊத்துக்குளி:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் மொரட்டுப்பாளையம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ரூ.10.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையத்தினை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    • அருப்புக்கோட்டையில் ஆபத்தான நிலையில் இயங்கும் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது.
    • டிரான்ஸ்பார்மர் அருகிலேயே அங்கன்வாடி மையம் உள்ளது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 5 வயதுக்கும் குறைவாக உள்ள குழந்தைகள் படிப்பதற்காக நகர் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன.

    சின்ன புளியம்பட்டி, காந்தி மைதானம், சின்னக்கடை தெரு போன்ற பகுதிகளில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களில் சுகாதாரமான காற்றோட்ட வசதி கட்டிடம் கிடையாது. டிரான்ஸ்பார்மர் அருகிலேயே அங்கன்வாடி மையம் உள்ளது இதனால் குழந்தைகள் வெளியில் விளையாட முடியாமல் ஆபத்தான சூழல் உள்ளது.

    குழந்தைகளுக்கு சரியான முறையில் கழிப்பறை வசதி இல்லை என பொதுமக்கள் மற்றும் பெற்றோர் புகார் தெரிவித்தனர். சில அங்கன்வாடி மைய கட்டிடம் விரிசல் அடைந்து சேதமடைந்துள்ளது. சிறு குழந்தைகள் நல்ல காற்றோட்ட வசதியுடன் கூடிய கட்டிடத்தில் படிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • தொழிலாளர்களின் குழந்தைகள் பலரும், தங்களது கல்வியை திருப்பூரில் தொடங்குகின்றனர்.
    • மாநகர் முழுவதும் 12 அங்கன்வாடி மையங்களில் மின்வசதி இல்லாததால், நூற்றுக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளைக் கொண்டது. நாளுக்கு நாள் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் திருப்பூருக்கு தொழில் தேடி வருவதால் நகரம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. தொழிலாளர்களின் குழந்தைகள் பலரும், தங்களது கல்வியை திருப்பூரில் தொடங்குகின்றனர். 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆரம்பக்கால கல்வி மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்தி, குழந்தைகளின் உடல், மொழி, அறிவு மற்றும் சமூக மன எழுச்சி வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பை அங்கன்வாடி மையங்கள். இந்நிலையில் திருப்பூர் மாநகர் கேவிஆர். நகர், பூச்சிக்காடு உட்பட 12 அங்கன்வாடி மையங்களில் மின்வசதி இல்லை என புகார் எழுந்துள்ளது.

    இது தொடர்பாக திருப்பூர் மாநகர மக்கள் கூறும்போது, "திருப்பூர் மாநகராட்சி கேவிஆர். நகர் அங்கன்வாடி மையத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை நம்பி, அப்பகுதியில் வாழும் தொழிலாளர் குடும்பங்கள் ஏராளமாக உள்ளன. தற்போது வரை 30 பேர் படித்துவரக்கூடிய சூழலில், அந்த அங்கன்வாடி மையத்தில் மின்சார வசதி இல்லாததால் குழந்தைகளுக்கு மின்விசிறி மற்றும் மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

    இதேபோல் மாநகர் முழுவதும் 12 அங்கன்வாடி மையங்களில் மின்வசதி இல்லாததால், நூற்றுக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களது மூத்த குழந்தையை அங்கன்வாடியில் சேர்த்தபோதும், மின் வசதி இல்லை. அதேபோல் 3 ஆண்டுகள் தொடங்கி 7 ஆண்டுகள் கழித்து, அதே அங்கன்வாடி மையத்தில் சேர்த்தபோதும் தற்போதும் மின்வசதி இல்லை. இந்த காரணங்களால், பெற்றோர் பலர் தங்களது குடியிருப்பை கடந்து வேறு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சேர்க்கும் நிலை ஏற்படுகிறது. அனைத்து தரப்புக்குமான நன்மை பயக்கும் வகையில், குழந்தைகளின் ஊட்டச்சத்து உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தும் அங்கன்வாடி மையங்கள், அடிப்படை வசதிகளிலும் போதிய கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் (திருப்பூர் மாநகர்) ஜெயலதாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    திருப்பூர் மாநகரில் 12 அங்கன்வாடி மையங்களில் மின்வசதி இல்லை. மின்சாரத்துக்கான வைப்புத்தொகை தலா ரூ. 2800 வீதம், அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் இருந்து நிதி வந்துள்ளது. ஆனால் மின்வசதி ஆன்லைன் முறையில் தான் பதிவு செய்ய முடியும் என்பதால், 12 மையங்களும் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு மின்வாரிய அலுவலகத்திலும் வெவ்வேறு விதமான தகவல்கள் சொல்வதால், நடைமுறை சிக்கல்களால், மின்வசதி வசதி ஏற்படுத்த முடியவில்லை. யார் பெயரில் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. மின் வயர்கள் உள்ளிட்ட மற்ற அனைத்து பணிகளும் முடித்து வைத்துள்ளோம். தற்போது குழந்தைகள் அங்கன்வாடி மையங்களுக்கு வரத்தொடங்கியிருப்பதால், சாப்பிட வைத்த பின், சில குழந்தைகள் தூங்கும். எனவே மின்விசிறி மற்றும் மின் விளக்கு உள்ளிட்டவை தேவை. ஆகவே இது தொடர்பாக விரைவில் 12 அங்கன்வாடி மையங்களுக்கும், விரைவில் மாநகராட்சி மற்றும் மின்வாரியத்திடம் பேசி, மின்வசதி பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ×