search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்நடை"

    • 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட வேண்டும்.
    • கால்நடை சேதம் ஏற்படாதவாறு தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் தென்மேற்கு பருவமழை - 2023 குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடா்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி பேசி யதாவது பேசியதாவது:-

    தென்மேற்கு பருவமழையையொட்டி, மாவட்ட கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியா் அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள், வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட வேண்டும்.

    அனைத்து தகவல் தொடா்பு சாதனங்களுடன் சுழற்சி முறையில் பணியாளா்களை நியமித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளைக் கண்காணிக்க வேண்டும்.

    கலெக்டர் அலுவலகத்தில் கட்ட ணமில்லா தொலைபேசி அமைக்க வேண்டும். வருவாய்த் துறையினா் தலைமையில் மண்டல அளவிலான குழுக்களை நியமிக்க வேண்டும்.

    ஒவ்வொரு குழுவும் 5 அல்லது 7 பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கண்காணிக்க வேண்டும்.ன

    அனைத்து துறை அலுவலா்களும் பேரிடா் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை எல்லா வகையிலும் சமாளிப்பதற்கும், நிவாரண பணிகளில் எந்தவித தொய்வும் ஏற்படாத வகையிலும், உயிா்சேதம், கால்நடை சேதம் ஆகியவை ஏற்படாதவாறு தேவையான தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    தென்மேற்கு பருவமழையை எதிா்கொள்ள அனைத்து துறை அலுவலா்களும் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்), ஸ்ரீகாந்த் (வளா்ச்சி) , ஆணையர் சரவணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    • ஓசூரில் 3 கோடியே 5 லட்சம் மதிப்பில் கால்நடை பன்முக மருத்துவமனை கட்டிடம் அமைக்கப்பட வுள்ளது.
    • இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில், ஓசூரில் 3 கோடியே 5 லட்சம் மதிப்பில் கால்நடை பன்முக மருத்துவமனை கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.

    மேலும் இதில், துணை மேயர் ஆனந்தய்யா, 24-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மஞ்சம்மா, மற்றும் துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கன்றுகளுக்கு குடற்புழு நீக்க முகாம் ஆகியவை நடைபெற்றது.
    • கால்நடைகளுக்கு தீவனங்கள் மற்றும் பச்சை புற்கள் வழங்கினார்.

    மன்னார்குடி:

    ரோட்டரி மாவட்ட அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் தளிக்கோட்டை மற்றும் மன்னார்குடியில் கால்நடைகளுக்கு அன்னதானம் கால்நடைகளுக்கு தீவனங்கள் வழங்குதல், கன்றுகளுக்கு குடற்புழு நீக்க முகாம் ஆகியவைகள் நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் கோபால கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    இதில் உதவி ஆளுநர் டாக்டர் பாலகிருஷ்ணன் தீவனங்கள் மற்றும் பச்சை புற்கள்வழங்கினார். திட்ட இயக்குனர் ரமேஷ், செயலர் அன்பழகன், மண்டல செயலர் ரெங்கையன், ஹரிரவி, முன்னாள் தலைவர்கள் நடராஜன், சாந்தகுமார், தளிக்கோட்டை பால் உற்பத்தியாளர்கள் ரமணி, குமுதம். சங்க செயலர் சாரதா, சுமதி, அசோக்குமார், சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் விஜயகுமார் நன்றி கூறினார்.

    • விவசாயிகள் கால்நடைகளால் கிடைக்கும் பால் விற்பனை மற்றும் கால்நடைகள் விற்பனை மூலம், வருவாய் ஈட்டி வருகின்றனர்.
    • விவசாயிகளின் தோட்டங்களுக்கே வந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லா விட்டால் கால்நடை வளர்ப்பதை கைவிடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

    பல்லடம்:ன

    பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விவசாயத்திற்கு அடுத்ததாக கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. விவசாயிகள் கால்நடைகளால் கிடைக்கும் பால் விற்பனை மற்றும் கால்நடைகள் விற்பனை மூலம், வருவாய் ஈட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பால் விற்பனை விலை விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. இது குறித்து கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் கூறியதாவது:- விவசாயத்துடன் கால்நடைகள் வளர்ப்பதன் மூலமாக கிடைக்கும் வருவாய் சற்று உதவிகரமாக இருந்தது. இந்நிலையில் தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், பால் விற்பனை விலை போதுமானதாக இல்லை. அரசு 4.3 சதவீத கொழுப்பு சத்தும், 8.2 சதவீத புரதச் சத்தும் கொண்ட பாலுக்கு ஒரு லிட்டருக்கு 32 ரூபாய் அறிவித்துள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு ஒரு லிட்டருக்கு 29 முதல் 30 ரூபாய் தான் கிடைக்கிறது.

    கலப்பு தீவனம் கிலோ 24 ரூபாயாக உயர்ந்துள்ளது. பருத்தி, புண்ணாக்கு கிலோ 50 ரூபாயாகவும், சோளத்தட்டு, வைக்கோல், மக்காச்சோளம் ஆகியவற்றின் விலையும் அதிகரித்துள்ளது.மேலும் தொழிலாளர்களுக்கான கூலி, பராமரிப்பு செலவு பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையில் அரசு ஆவின் கொள்முதல் விலையை பல ஆண்டுகளாக உயர்த்தவில்லை. விளை பொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை இல்லாததால் சிரமமான நிலையில் பால் உற்பத்தி மட்டுமே வாழ்வாதாரத்திற்கு உதவியாக உள்ளது. தற்போது தீவன விலை உயர்வால் பால் உற்பத்தியிலும் நஷ்டம் ஏற்படுகிறது. தமிழக அரசு மாட்டுப்பால் ஒரு லிட்டருக்கு 45 ரூபாய் வாங்க வேண்டும். எருமைப்பால் லிட்டருக்கு ரூ.55 என நிர்ணயம் செய்ய வேண்டும். கால்நடை தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும். விவசாயிகளின் தோட்டங்களுக்கே வந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லா விட்டால் கால்நடை வளர்ப்பதை கைவிடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • குன்னூர் நகராட்சியின் மாதாந்திர கூட்டம், தலைவர் ஷீலா கேத்ரின் தலைமையில் நடந்தது.
    • கால்நடைகளை பராமரிக்க வசதியில்லாதால் மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியின் மாதாந்திர கூட்டம், தலைவர் ஷீலா கேத்ரின் (திமுக) தலைமையில் நடந்தது. இதில் அனைத்து நகரமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

    அப்போது நகரமன்ற உறுப்பினர் சாந்தா சந்திரன் கூட்டத்தில் பேசும்போது, என் வார்டில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வில்லை, கழிப்பிட வசதி செய்து தரக்கோரி பல மாதங்களாக கோரிக்கை விடுத்து உள்ளேன். ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என தெரிவித்தார். இதற்கு ஆணையர் பதிலளிக்கையில், அந்த பகுதியில் துப்புரவு பணிகளை விரைவாக செயல்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

    அடுத்தபடியாக நகராட்சி உறுப்பினர் சரவணன் பேசுகையில், என் வார்டு அடங்கிய பகுதியில் ஆடு-மாடு வதைக்கூடம் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. அங்கு ஏற்கெனவே செத்த கால்நடைகளை இறைச்சிக்காக கொண்டு வருகின்றனர் என்று குற்றம் சாட்டினார். இதற்கு ஆணையர் பதில்அளிக்கையில், அனைத்து பகுதிகளிலும் மாதம் 4 முறை மாஸ் கிளீனிங் செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.

    காட்டேரி வார்டு உறுப்பினர் குமரேசன் பேசும்போது, என் வார்டில் யானை, கரடி உள்ளிட்ட விலங்குகள் இரவு நேரத்தில் நெடுஞ்சாலைக்கு வருகிறது. ஆனால் அந்த பகுதியில் போதிய மின்விளக்குகள் இல்லை. எனவே பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். என் வார்டில் அனைத்து பகுதிகளிலும் போதிய மின்விளக்குகள் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு தலைவர் மின்சார வசதி செய்து தரப்படும் என உறுதி அளித்தார்.

    குன்னூர் நகராட்சி கூட்டத்தின்போது, அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடங்களை நகராட்சி நிா்வாகம் கண்டுகொள்வதில்லை. ஆனால் சிறிய அளவில் வீடுகளை கட்டும்போது அதிகாரிகள் தொந்தரவு செய்வதாக நகா்மன்ற உறுப்பினா்கள் குற்றம் சாட்டினா். மேலும், நகராட்சியில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்துகள் நடக்கிறது. எனவே அவற்றை பிடித்து சென்று பராமரிக்கும் திட்டம் உள்ளதா என்று கேள்வி எழுப்பினா். அதற்கு கால்நடைகளை பராமரிக்க வசதியில்லை, எனவே மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையா் உறுதியளித்தார்.

    முன்னதாக, மாவட்ட திட்டக்குழு உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டு உள்ள குன்னூா் நகா்மன்ற உறுப்பினா் ராமசாமிக்கு நகா்மன்ற துணைத் தலைவா் வாசிம் ராஜா (திமுக), அதிமுக நகா்மன்ற உறுப்பினா் சரவணகுமாா் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

    • சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
    • சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.

    ராஜபாளையம்

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கால்நடை பராமரிப்பு துறை, ஆவின் மற்றும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் இணைந்து ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு தேவதானத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமை நடத்தியது.

    தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.

    இதில் 1,037 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல் பணி, மலடுநீக்க சிகிச்சைப் பணி, தடுப்பூசிப்பணி, சிறு அறுவை சிகிச்சைப்பணி உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் சிறப்பு கண்காட்சிகள், பால் தீவனம் உற்பத்தியை அதிகரிப்பதற்கான விளக்கவுரை, தீவனப்பயிர் கண்காட்சி, ஆவின் பால்பொருட்கள் கண்காட்சி, கால்நடை பண்ணைகள் குறித்து புத்தக கண்காட்சி ஆகியவை அமைக்கப்பட்டு கால்நடை வளர்ப்போர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

    முகாமில், சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் கோவில் ராஜா, ராஜபாளையம் யூனியன் சேர்மன் சிங்கராஜ், ஆவின் பொது மேலாளர் ஷைக் முகமது ரபி, வட்டாட்சியர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அலங்காநல்லூர் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
    • மருத்துவ குழுவினர் கால்நடைகளை பரிசோதனை செய்து மருந்துகளை வழங்கினர்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டி கிராமத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணைந்து சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் முகாமை தொடங்கி வைத்தார். அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் தன்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி, துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆவின் பொது மேலாளர் சாந்தி வரவேற்றார். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் நடராஜகுமார், துணைப் பதிவாளர் பால்வளம் செல்வம், உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கால்நடைகளை பரிசோதனை செய்து மருந்துகளை வழங்கினர். சிறந்த பசுவிற்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • முகாமில் 156 மாடுகளுக்கு குடல் புழு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • ப்ரூஸசெல்லா தடுப்பூசி 20 மாடுகளுக்கும், பி. பி .ஆர் தடுப்பூசி 250 மாடுகளுக்கும் செலுத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே எடமேலையூரில் தமிழக அரசின் சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

    இந்த முகாமை கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.

    நீடாமங்கலம் ஒன்றிய குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட கால்நடை துறை இணை இயக்குனர் ஹமீது அலி, துணை இயக்குனர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த முகாமில் 156 மாடுகளுக்கு குடல் புழு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ப்ரூஸசெல்லா தடுப்பூசி 20 மாடுகளுக்கும், பி. பி .ஆர் தடுப்பூசி 250 மாடுகளுக்கும், மினரல் மிக்சர் 75 மாடுகளுக்கும் செலுத்தப்பட்டது.

    சிறந்த முறையில் பராமரிக்கப்பட்ட ஒன்பது மாடுகளுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.

    இதில் ஓய்வு பெற்ற கால்நடை துறை துணை இயக்குனரும் மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை தலைவருமான டாக்டர் பாலகிருஷ்ணன், உழவர் பயிற்சி மைய டாக்டர் கதிர்செல்வம், ஆவின்பால் பொது மேலாளர் டாக்டர் ராஜசேகரன், டாக்டர் மகேந்திரன், ஆவின் விஜயலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் கோமளா மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
    • இந்த தகவலை கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    மதுரை

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பெரிய அளவிலான கால்நடை மருத்துவ முகாமானது நாளை (28-ந்தேதி) அலங்காநல்லூர் வட்டாரம், முடுவார்பட்டி கிராமத்தில் நடைபெற உள்ளது. முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை பணி, குடற்புழு நீக்கம், தடுப்பூசி பணி, சிணை பரிசோதனை, மலட்டுதன்மை நீக்கம் மற்றும் கால்நடை பரிசோதனை, ஊட்டசத்து வழங்குதல், தீவனக் கன்றுகள் விநியோகித்தல் ஆகியவைகள் வழங்கப்பட உள்ளது. எனவே முடுவார்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் உள்ள கால்நடை வளர்ப்போர்கள் இதில் பங்கேற்று பயனடையலாம்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    • நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் தீவன பகுப்பாய்வு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அலுவலகத்தின் வெள்ளிவிழா நேற்று நடந்தது.
    • தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல் கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வெள்ளி விழா நினைவு தூணை திறந்து வைத்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் தீவன பகுப்பாய்வு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அலுவலகத்தின் வெள்ளிவிழா நேற்று நடந்தது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல் கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வெள்ளி விழா நினைவு தூணை திறந்து வைத்தார்.

    மேலும், 3 நாள் நடைபெறும் கண்காட்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் 7 கால்நடை மருத்துவக் கல்லூரிகள், 3 கால்நடை உணவுத்துறை சார்ந்த இதர மருத்துவ கல்லூரிகள் செயல்படுகின்றன.

    நடபாண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த 12-ந் தேதி இணைய வழியில் தொடங்கியது. வரும் 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுவரை இளநிலை கால்நடை மருத்துவ படிப்பு மற்றும் கால்நடை உணவுத்துறை சார்ந்த படிப்பு கள் என மொத்தமாக 16,794 பேர் விண்ணப்பித்துள்ளனர். நடபாண்டில் புதிய மருத்துவ படிப்புகளோ, புதிய கல்லூரிகளோ தொடங்கப்படவில்லை.

    தமிழகத்தை பொறுத்தவரை கறிக்கோழிக்கு 1.5 லட்சம் டன், கோழி பண்ணைகளுக்கு 2 லட்சம் டன், கறவை மாடுகளுக்கு 2 லட்சம் டன் அடர் தீவனம் மாதந்தோறும் தேவைப்படுகிறது. எனவே விவசாயிகள் தீவனப் பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

    • விளாச்சேரியில் கால்நடை தடுப்பூசி முகாம் நடந்தது.
    • தகுதியான கன்றுகளுக்கு கால்நடை மருந்தகத்தின் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    மதுரை

    மதுரை விளாச்சேரி பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய நோய் தடுப்பு திட்டத்தின்கீழ் கால்நடை களில் ஏற்படும் 'புருசெல்லா' எனும் கன்று வீச்சு நோய்க்கு 2-வது சுற்று தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. தகுதியான கன்றுகளுக்கு கால்நடை மருந்தகத்தின் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. டாக்டர் சிவக்குமார் மற்றும் ஆய்வாளர்கள் தமிழ்செல்வி, செந்தாமரை ஆகியோர் இந்த பணியை மேற்கொண்டனர்.

    முகாமில் அவர்கள் கூறியதாவது:- புருசெல்லா ேநாய் கால்நடைகளில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது. இது புருசெல்லா எனும் நுண்ணுயிர் கிருமியால் ஏற்படுகிறது. இந்த நோய் மனிதர்களின் மூட்டு மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. 4-ல் இருந்து 8 மாத வயதுடைய பெண் பசு, எருமை கன்றுகளுக்கு உரிய பாதுகாப்பு முறை களை பின்பற்றி ஒருமுறை தடுப்பூசி செலுத்தினால் வாழ்நாள் முழுவதும் அவைகளை இந்த நோயில் இருந்து காப்பாற்றுவதோடு மனிதர்களுக்கு பரவுவதையும் தவிர்க்கலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மர்ம விலங்கு கடித்ததில் கன்று குட்டிகள் காயம் ஏற்பட்டு இறந்து கிடந்தது.
    • கால்நடை மருத்துவர் மூலமாக பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த சின்னவீரம் பட்டியைச் சேர்ந்தவர் அருளானந்தம்.விவசாயி. இவருக்கு சொந்தமான நிலம் பெரிய கோட்டை கிராமத்தில் உள்ளது. அருளானந்தம் சாகுபடி பணிகளுடன் சேர்த்து கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டு வருகிறார்.இவர் சுமார் ஒரு வயது மதிக்கத்தக்க இரண்டு கன்று குட்டிகளை தோட்டத்து சாளையில் கட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.நேற்று காலை வந்து பார்த்தபோது அடையாளம் தெரியாத மர்ம விலங்கு கடித்ததில் கன்று குட்டிகள் வயிறு மற்றும் தொடை பகுதியில் காயம் ஏற்பட்டு இறந்து கிடந்தது.

    அதைத்தொடர்ந்து சந்தேகம் அடைந்த அருளானந்தம் உடுமலை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.அதன் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.அதைத் தொடர்ந்து கன்றுக் குட்டிகளுக்கு கால்நடை மருத்துவர் மூலமாக பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டது.அதில் தெரு நாய்கள் கடித்ததில் கன்று குட்டிகள் இறந்தது தெரிய வந்தது.அதைத் தொடர்ந்து வனத்துறையினர் சார்பில் அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு உள்ளது.மேலும் ரோந்து பணியிலும் வனத்துறையினர் ஈடுபட்டு வருவதுடன் வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.வனத்துறையினரின் நடவடிக்கையால் விவசாயிகள் நிம்மதி அடைந்து உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,

    சின்னவீரம்பட்டி பகுதியில் வளர்ப்பு கோழி பண்ணைகள் உள்ளது.அதில் இறக்கும் கோழிகளை முறையாக அப்புறப்படுத்துவதில்லை. ஆங்காங்கே திறந்த வெளியில் வீசி விடுகின்றனர்.இதனால் அந்தப் பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்கள் இறந்த கோழிகளை உணவாக்கி வருகிறது.கோழிகள் கிடைக்காத சமயத்தில் மாமிசத்தின் மீது உள்ள மோகத்தால் விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளை தெருநாய்கள் துன்புறுத்தி வருகிறது. இதனால் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் பண்ணைகளில் இறக்கும் கோழியை முறைப்படி குழி தோண்டி புதைப்பதும் அவசியமாக உள்ளது.அவர்களது அலட்சியமே தெரு நாய்களுக்கு ரத்தவெறி பிடித்து கால்நடைகள் பாதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக இழப்பு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து சம்மந்தப்பட்ட துறையினர் கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதும் கடமையாகும் என்று தெரிவித்தனர்.

    ×