search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்நடை"

    • அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு கால்நடை மருத்துவமனை கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.
    • தி.மு.க. நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவிலில் கால்நடை மருத்துவமனை புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    அமைச்சர் மெய்ய நாதன் கலந்து கொண்டு புதிய கால் நடை மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.

    முன்னதாக அமைச்சருக்கு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்பழகன் பூரண கும்பம் வரவேற்பு அளித்தார்.

    விழாவில் பூம்புகார் நிவேதா முருகன் எம்.எல்.ஏ., கோட்ட கால்நடை மருத்துவ இணை இயக்குநர் ஈஸ்வரன், கால்நடை மருத்துவர் அன்பரசன், திமுக துணை செயலாளர் ஞான வேலன், பி.எம்.சீதர், ஒப்பந்ததாரர் மயிலாடுதுறை கார்த்திக், ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன், துணை தலைவர் உமாராணி உள்பட தி.மு.க.நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், ஆடு மற்றும் கோழி தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.
    • முகாமில் 500-க்கும் மேற்பட்ட கால்நடை பயன்பெற்றன.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகாதாணிக்கோட்டகம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை முகாம் நடைபெற்றது.

    இம்முகாம் கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் சஞ்சீவ்ராஜ், உதவி இயக்குனர் ஆசான் இப்ராகிம் அறிவுரையின் பேரில் நடைப்பெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார், கால்நடை உதவி மருத்துவர்கள் சரவணகுமார் , சண்முகநாதன் முன்னிலை வகித்தார்.

    இந்த முகாமில் கால்நடை நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை கருவூட்டல், சினை பரிசோதனை,மலடு நீக்கம், கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், ஆடு மற்றும் கோழி தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.

    இந்த முகாமில் 500 க்கும் மேற்பட்ட கால்நடை பயன்பெற்றன, இதில் சிறந்த கால்நடை கன்றுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது மற்றும் சிறந்த கால்நடை பராமரிப்பு உரிமையாளர்களுக்கு மற்றும் மேலாண்மைகான விருது வழங்கப்பட்டன மேலும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கபட்டது.

    இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் மற்றும வார்டு உறுப்பினர்கள், கால்நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். 

    • கால்நடைகளுக்கு ஏற்படும் தோல் கழலை நோய் குறித்து அச்சப்பட தேவையில்லை என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • பண்ணைகளை சுற்றி நீர் தேங்காமல் பராமரிக்கவும், கழிவுகளை அவ்வப்போது அப்புறப்படுத்தவும், கிருமி நாசினி நடைபாதையை பராமரிக்க வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் வடக்கு மாநிலங்களான ராஜஸ்தான், குஜராத் ஆகியவற்றில் தோல் கழலை நோய் பரவி அங்குள்ள கால்நடைகளை தாக்கி அதிகளவு இறப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நமது மாநிலத்தில் வடக்கு மாவட்டங்களில் இந்த நோய் கால்நடைகளை தாக்கியுள்ளது. இது ஒரு வைரஸ் கிருமியால் ஏற்படும் நோய் ஆகும்.

    உண்ணிகள் மற்றும் கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரப்பப்படுகிறது. நோய் தாக்கப்பட்ட கால்நடை களுக்கு காய்ச்சல், தீவனம் உண்ணாமை, தோல்களில் தடிப்பு ஆகிய அறிகுறிகள் தென்படும். இந்த நோயானது சிறு கன்றுகள் முதல் கறவைமாடுகள் வரை அனைத்தையும் தாக்கக் கூடியது.

    மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கால்நடை மருத்தவரை அணுகி சிகிச்சை அளிக்க வேண்டும். அனைத்து கால்நடை மருத்துவ நிலை யங்களிலும் போதிய அளவு மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப் புத்துறையினர் குழுக்கள் அமைத்து இந்த நோயின் நிலைமை குறித்தும், நோய் கிளர்ச்சி குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு விருதுநகர் மாவட்டத்திற்கு ஒரு லட்சம் தோல் கழலை நோய் தடுப்பூசி மருந்தை வழங்கியுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறையினர் ஊராட்சி மன்ற தலைவருடன் இணைந்து முன் அறிவித்து விளம்பரம் செய்து குழுக்கள் மூலமாக இந்த நோய்க்கான தடுப்பூசி பணியை திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றனர்.

    தங்கள் கிராமங்களுக்கு தடுப்பூசிப்பணி குழுவினர் வருகை தரும்போது கால்நடைகளுக்கு தவறாமல் தடுப்பூசியை போட்டுக்கொள்ளவும், பிறருக்கு அறிவுறுத்தவும் விவசாயிகள் கேட்டுக்கொ ள்ளப்படுகிறார்கள்.

    அரசு வழங்கும் இலவச தடுப்பூசியினை போட்டுக்கொண்டால் இந்த நோய் வராமல் தடுக்கலாம். தடுப்பூசி செலுத்திய பின்னர் 21 நாட்கள் கழிந்த பிறகே கால்நடைகளின் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். அதற்குள் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சை செய்வது அவசியம் ஆகும்.

    விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை இந்த நோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. நோய் தடுப்பூசி பணி தொடர்ந்து மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. கால்நடை வளர்ப்போர் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தங்கள் பண்ணைகளை சுற்றி நீர் தேங்காமல் பராமரிக்கவும், கழிவுகளை அவ்வப்போது அப்புறப்படுத்தவும், கிருமி நாசினி நடைபாதையை பராமரிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஈச்சங்கோட்டை உயிரின கால்நடை பெருக்கு பண்ணை துணை இயக்குனர் அலுவலக வளாகததில் ஏலம் நடைபெறுகிறது.
    • பனைமரங்கள், இலுப்பை மரங்கள், மா மரங்கள், முந்திரி மரங்கள் , இலவம் மரங்கள், புளிய மரங்கள், பலா மரங்கள், நெல்லி மரங்கள் ஏலமிடப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள உயிரின கால்நடை பெருக்கு பண்ணையில் பலன் தரும் மரங்களான காய்ப்பில் உள்ள 675 மரங்களின் மகசூலை அனுபவிக்கும் உரிமம் ஜூலை 2022 முதல் ஜூன் 2023 முடிய ஆண்டிற்கான பொது ஏலம் வருகிற 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

    ஈச்சங்கோட்டை உயிரின கால்நடை பெருக்கு பண்ணை துணை இயக்குனர் அலுவலக வளாகததில் இந்த ஏலம் நடைபெறுகிறது.

    இதில் பனைமரங்கள் 100, இலுப்பை மரங்கள் 25, மா மரங்கள் 95, முந்திரி மரங்கள் 10 , இலவம் மரங்கள் 80, புளிய மரங்கள் 325, பலா மரங்கள் 7, நெல்லி மரங்கள் 5 ஏலமிடப்படுகிறது.

    ஏலம் அரசு விதிமுறைகளின்படி பகிரங்கமாக பொது ஏலம் நடத்தப்படும். ஒவ்வொரு வகை பலன்தரும் மரங்களும் தனித்தனியே ஏலமிடப்படும்.

    ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் டேவணித்தொகை ரூ.3 ஆயிரத்துக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் துணை இயக்குனர், உயிரின கால்நடை பெருக்குப்பண்ணை, ஈச்சங்கோட்டை என்ற பெயருக்கு 4-1-2023 அன்று அல்லது அதற்கு பின்னர் பெறப்பட்ட வங்கி வரைவோலை மற்றும் ரேஷன்கார்டு அல்லது ஆதார்கார்டு நகல் ஆகியவற்றை வருகிற 19-ந்தேதி காலை 10.30 மணி முதல் மாலை 5 மணிக்குள் அலுவலகத்தில் கொடுத்து பதிவு டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். 5 மணிக்கு மேல் ஏலத்தில் கலந்து கொள்ள பதிவுகள் மேற்கொள்ளப்பட மாட்டாது.

    வங்கி வரைவோலையில் குறிப்பிட்ட விண்ணப்பதாரரின் பெயரில் மட்டுமே பதிவு செய்து டோக்கன் வழங்கப்படும்.

    ஒரு விண்ணப்பதாரின் பெயரில் உள்ள வரைவோலையை மற்றவரின் பெயரில் பதிவு செய்து டோக்கன் வழங்கப்பட மாட்டாது. ஏலம் எடுத்தவர் ஏலம் கோரிய முழுத்தொகையையும் ரொக்கமாக செலுத்த வேண்டும்.

    செலுத்த தவறினால் அவரால் செலுத்தப்பட்ட டேவணித்தொகையை இழக்க நேரிடும்.

    தவிர்க்க இயலாத காரணத்தால் ஏலத்தை நிறுத்தவோ, தள்ளி வைக்கவோ துணை இயக்குனருக்கு முழு அதிகாரம் உண்டு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பசு மாடுகளுக்கு அம்மை பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
    • பெரியம்மையால் மாடுகள் பாதிக்கப்பட்டிருந்தால், விவசாயிகள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

    குடிமங்கலம் :

    திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு வட்டாரங்களில் பசு மாடுகளுக்கு அம்மை பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய் நாட்டு மாடுகளை காட்டிலும் கலப்பின மாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.கடிக்கும் பூச்சிகள், உண்ணிகள், கொசுக்கள் மூலம் பாதிக்கப்பட்ட மாடுகளில் இருந்து மற்ற மாடுகளுக்கு பரவுகிறது.

    நோயுற்ற மாடுகளின் எச்சம், ரத்தம், கொப்புளங்கள் மற்றும் விந்தணுக்கள் மூலம் பரவுகிறது. நோயுற்ற தாய் பசுவிடம் இருந்து கன்றுக்கும் பரவுகிறது.இதற்கான சிகிச்சை முறை பற்றி, கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- பெரியம்மையால் மாடுகள் பாதிக்கப்பட்டிருந்தால், விவசாயிகள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.வெற்றிலை 10, மிளகு 10 கிராம், கல் உப்பு 10 கிராம், வெல்லம் ஆகியவற்றை அரைத்து, தேவையான அளவு நாக்கில் தடவி கொடுக்க வேண்டும்.

    குப்பை மேனி இலை, வேப்பிலை, துளசி இலை, மருதாணி இலை (ஒவ்வொன்றிலும் ஒரு கைப்பிடி), மஞ்சள் தூள் 20 கிராம், பூண்டு 10 பல் ஆகியவற்றை அரைத்து 500 மி.லி., நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து கொதிக்க வைத்து பின்னர் ஆற விட்டு காயங்களை சுத்தப்படுத்திய பின் மருந்தை மேலே தடவ வேண்டும்.காயத்தில் புழுக்கள் இருந்தால், சீத்தாப்பழ இலையை அரைத்து காயத்தில் தடவ வேண்டும். அல்லது பச்சை கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் கலந்து காயத்தில் விட்டு புழுக்களை அப்புறப்படுத்தி பின்னர் மருந்து போட வேண்டும்.முக்கியமாக நோயுற்ற மாடுகளை தனிமைப்படுத்த வேண்டும். பண்ணையின் சுத்தம், சுகாதாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும். கிருமி நாசினி கொண்டு கொட்டகையை சுத்தம் செய்ய வேண்டும். கொட்டகையை காற்றோட்டமாகவும், சூரிய ஒளிபடுமாறும் அமைக்க வேண்டும் என்றனர்.

    மேலும் அவர்கள் கூறுகையில், பாதிக்கப்பட்ட மாடுகள், அதிக காய்ச்சல், பசியின்மை, சோர்வு மற்றும் உடல் எடை குறையும். கண்களில் வீக்கம் மற்றும் நீர் வடிதல் இருக்கும். அதிக உமிழ்நீர் சுரப்பும் இருக்கும். பால் உற்பத்தி குறையும். தலை, கழுத்து, கால்கள், மடி, இனப்பெருக்க உறுப்புகள் போன்றவற்றில் 2 முதல் 5 செ.மீ., அளவுக்கு கொப்புளங்கள் தென்படும். தோலின் மீது ஏற்படும் இந்த கொப்புளங்கள் உறுதியாக வட்டமாக நன்கு உப்பியிருக்கும். மிகப்பெரிய கொப்புளங்கள் சீழ் பிடித்து புண்ணாகி பின்னர் அதன் தழும்புகள் தோலில் இறுதி வரை மறையாமல் இருக்கும். கொப்புளங்களில் புழுக்கள் உருவாகவும் வாய்ப்புள்ளது என்றனர்.  

    • மலடு நீக்கம், குடற்புழு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
    • 500 -க்கும் மேற்பட்ட கால்நடை கலந்து கொண்டு பயன்பெற்றன.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா செம்போடை ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இம்முகாம் கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் சஞ்சீவ்ராஜ், உதவி இயக்குனர் ஆசான் இப்ராகிம் ஆகியோாரின் ஆலோசனை பேரில் நடைப்பெற்றது.

    முகாமை ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் தொடங்கி வைத்தார்.

    இதில் கால்நடை உதவி டாக்டர்கள் சண்முகநாதன், முருகேசன் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல், பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்கம், குடற்புழு நீக்கம் உள்ளிட்ட சிகிச்சை அளித்தனர்.

    இதில் 500 -க்கும் மேற்பட்ட கால்நடை கலந்து கொண்டு பயன்பெற்றன.

    முகாமில் சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் பரிசு வழங்கினார்.

    இதில் கால்நடை ஆய்வாளர் மாசிலாமணி மற்றும் வார்டு உறுப்பினர்கள், கால்நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • முகாமில் 100-க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
    • பொதுமக்களுக்கு கால்நடை பராமரிப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வெறிநோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாம் தேத்தாகுடி தெற்கு கிராமத்தில் நடைபெற்றது.

    கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சஞ்சீவ்ராஜ், உதவி இயக்குனர் ஆசான் இப்ராகிம் அறிவுரை பேரில் நடைபெற்ற முகாமில் 100-க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் வனஜா சண்முகம் தலைமை தாங்கினார்.

    மாவட்ட கவுன்சிலர் சோழன், கால்நடை உதவி மருத்துவர்கள் முருகேசன், சண்முகநாதன், சரவணகுமார், கால்நடை ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு உதவியாளர், ஊராட்சி மன்ற துணை தலைவர் அழகேசன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கால்நடை உரிமையாளர்கள் பலர் ஆகியோர் கலந்துகொண்டனர். முகாமில் பொதுமக்களுக்கு கால்நடை பராமரிப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    • பல விவசாயிகள் கால்நடைகளுக்கு போதுமான தீவனத்தை உற்பத்தி செய்ய போராடி வருகின்றனர்.
    • கால்நடை தீவனத்துடன் இணைத்து கொடுக்கும்போது பால் உற்பத்தி 15 முதல் 20 சதவீதம் அதிகரிக்கும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டாரம், திருவத்தேவன் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் அசோலா வளர்ப்பு செயல்விளக்கம் விவசாயிகளுக்கு நடத்த ப்பட்டது.

    மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) பாலசரஸ்வதி விவசாயிகளிடம் பேசிய போது, அசோலா ஒரு அற்புதமான பசுந்தீவ னம். மேலும் இது ஒரு மிதக்கும் நீர்வாழ் உயிரி ஆகும்.

    இது தண்ணீரின் மேற்பரப்பில் வளரக்கூ டியது. கால்நடை தீவனப் பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு காரண மாக பல விவசாயிகள் கால்ந டைகளுக்கு போதுமான தீவனத்தை உற்பத்தி செய்ய போராடி வருகின்றனர்.

    அசோலா கால்நடைகள், மீன், முயல் மற்றும் கோழி களுக்கு ஏற்ற நிலையான தீவனமாகும். இது தவிர பண்ணையில் உயிர் உரமாகவும் பயன்படுத்த ப்படுகிறது. அசோலா சாகுபடிக்கு குறைந்த அளவு முதலீடு போதுமானது.

    இது நல்ல தீவனம் மற்றும் உயிர் உரத்திற்கான குறைந்த விலை கொண்ட மாற்றுத் தீர்வாகும் என எடுத்துக் கூறினார்.

    அசோலா வளர்ப்பு குறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி (பொ) பேசியதாவது, அசோலா வளர்ப்ப தற்காக பிளாஸ்டிக் தாள் தொட்டி மற்றும் குளத்தை பயன்படுத்தலாம். அசோலா சாகுபடி குளத்தை உருவாக்குவதற்கு ஓரளவு நிழலாக உள்ள பகுதியை தேர்ந்தெடுத்தால் மிகவும் சிறப்பு.

    ஏனெனில் 30 சதவீதம் சூரிய ஒளி தேவைப்படுகிறது. அதிக சூரிய ஒளி வளர்ச்சியை பாதிக்கும். மரத்தின் அடியில் உள்ள பகுதி மிகவும் ஏற்றதாகும். பெரிய அளவில் அசோலாவை வளர்க்க திட்டமிட்டால் சிறிய கான்கிரீட் தொட்டியை உருவாக்கலாம்.

    கோழிகளுக்கு அசோலா அளிப்பதால் எடை மற்றும் முட்டை உற்பத்தி அதிகரிக்கிறது.1.5 முதல் 2 கிலோ அசோலா கால்நடை தீவனத்துடன் இணைத்து கொடுக்கும்போது பால் உற்பத்தி 15 முதல் 20 சதவீதம் அதிகரிக்கும்.

    ஆடு, முயல் மற்றும் மீன்களுக்கு அசோலா உணவளிக்கலாம் என்றார்.அசோலா வளர்ப்பு செயல் விளக்கத்திற்கான ஏற்பாடு களை உதவி வேளாண்மை அலுவலர் எம்.பிரதீபா, அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ஆ.தமிழழகன் மற்றும் வீ.ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • திட்ட தொழில் சாரா வல்லுநர் லெட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
    • 62 பயனாளிகளுக்கு சுமார் ரூ.75 ஆயிரம் மதிப்பில் அலுமினிய அன்னக்கூடை வழங்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமத்தில் தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் குழுவில் உள்ள கால்நடைகள் வளர்க்கும் பெண்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய கவுன்சிலர் மோகன் தலைமையில் நடைபெற்றது.

    ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி முன்னிலை வகித்தார்.

    முன்னாக திட்டத்தின் தொழில் சாரா வல்லுநர் லெட்சுமி அனைவரையும் வரவேற்றார்.

    இதில் 62 பயனாளிகளுக்கு சுமார் ரூ.75 ஆயிரம் மதிப்பில் அலுமினிய அன்னக்கூடை, சில்வர் பால் வாலி ஆகியவை வழங்கப்பட்டது.

    இதில் ஊராட்சி உநுப்பினார்கள் பாலசுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன், செங்குட்டுவன், லோகநாதன், கலையரசன், குழு நிர்வாகிகள், உறுப்பினார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முகாமில் கலந்து கொண்ட 204 மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
    • துரைசாமி உட்பட விவசாயிகள், கால்நடை மருத்துவ பணியாளர்கள்அ,லுவலர்கள் கலந்து கொண்டனர்.

     வெள்ளகோவில்.டிச.28-

    வெள்ளகோவில் ஒன்றியம், வேலப்பநாயக்கன் வலசு ஊராட்சி கள்ளமடை என்ற இடத்தில் திருப்பூர் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் பிரகாசம் தலைமையில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.முகாமில் கலந்து கொண்ட 204 மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. 865 செம்மறி ஆடுகள், 137 வெள்ளாடுகளுக்கு பெரியம்மை தடுப்பூசி போடப்பட்டது.

    நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி போடப்பட்டது. தற்போது கால்நடைகளை அம்மை நோய் தாக்கி வருவதால் வெள்ளகோவில் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள 8 கால்நடை மருந்தகங்களில்,கால்நடைகளுக்கு பெரியம்மை தடுப்பூசி போட்டு நோய்களிலிருந்து கால்நடைகளை காப்பாற்றி கொள்ள வேண்டும் என கால்நடை மருத்துவர் பகலவன் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த முகாமில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சோமசுந்தரம் மற்றும் முன்னாள் பாசன சபை தலைவர் துரைசாமி உட்பட விவசாயிகள், கால்நடை மருத்துவ பணியாளர்கள்அ,லுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆடு, மாடு, கோழிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மருந்து மாத்திரை வழங்கப்பட்டது.
    • கன்று வளர்த்த விவசாயிகள் 3 பேருக்கு கேடயம்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஒன்றியம் அக்கரைவட்டம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது

    முகாமில் 1100 க்கும் மேற்பட்ட மாடு, ஆடு, கோழி, போன்ற கால்நடைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மருந்து, மாத்திரைகள், வழங்கப்பட்டு கால்நடைகளை பராமரிப்பது குறித்தும் சிறப்பான மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது மருத்துவ முகாமில் கால்நடை மருத்துவர்கள், கலியபெருமாள், தினேஷ்குமார், கால்நடை ஆய்வாளர், செல்வேந்திரன், ஆகியோர் கொண்ட குழுவினர் ஆலோசனை வழங்கினர்,

    மேலும், கால்நடை மருத்துவ சிறப்பு முகாம் காண ஏற்பாடுகளை அக்கரைவட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர், கண்ணையன், சிறப்பாக செய்திருந்தார் முகாமில் சிறந்த கிடேரி கன்று வளர்க்கும் விவசாயிகள் 3 பேருக்கு பரிசு பொருள், சிறந்த கால்நடை விவசாயிகள் 3 பேருக்கு கேடயம் வழங்கப்பட்டது,

    இறுதியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அக்கரைவட்டம் ஊராட்சி மன்ற தலைவர் இரா, கண்ணையன் நன்றி கூறினார்.

    • பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஒன்றியம், கு.அய்யம்பாளையம் கிராமத்தில் கால்நடை சுகாதார சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • இம்முகாமில் கு.அய்யம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அழைத்து வந்த 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஒன்றியம், கு.அய்யம்பாளையம் கிராமத்தில் கால்நடை சுகாதார சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் கால்நடை மருத்துவர்கள் மணிவேல், தனவேல், செந்தில்குமார், கால்நடை ஆய்வாளர் பொன்னம்மாள், கால்நடை பராமரிப்பு உதவியாளர் சுரேஷ் , துரைசாமி, தடுப்பூசி பணியாளர்கள் பிரபு மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கான சிறப்பு சிகிச்சை மற்றும் ஆலோ சனைகள் வழங்கினார்.

    இதில், சிறந்த முறையில் கால்நடை வளர்ப்பு முறைகளை கையாளும் முன்னோடி விவசாயி களுக்கு, அ.குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் விருதுகள் வழங்கி னார். இம்முகாமில் கு.அய்யம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அழைத்து வந்த 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. முகாமிற்கு தேவையான ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட கிராமத்தினர் செய்திருந்தனர்.

    ×