search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 226238"

    • பிரதமர் மோடி, அண்ணா, கருணாநிதி உருவங்களை வரைந்து அசத்தல்
    • நல்லாசிரியர் விருது பெற்றவர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் வள்ளலார் வீதியைச் சேர்ந்தவர் வை. கோபால கிருஷ்ணன் என்ற கோபால் (வயது 67), ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர்.

    இவர் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றும் போது மாணவர்களை வைத்து ஆண்டுதோறும் ஓவிய கண்காட்சிகளை நடத்தி வந்து உள்ளார்.

    நல்லாசிரியர் விருதும் பெற்றுள்ள வை. கோபாலகிருஷ்ணன் ஓய்வுக்கு பிறகு வீட்டில் முடங்கி கிடக்க கூடாது என்று ஓவியக்கலையில் சிறப்பு படைப்புகளை படைக்க தொடங்கினார்.

    சாதாரணமாக வரையும் ஓவிய படைப்புகளில் இருந்து மாறுபட்டு வண்ண மணலைக் கொண்டு மணல் ஓவியம் வரையும் கலையில் ஆர்வம் காட்டினார். அதன் பயனாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் உருவப்படங்களை மணல் ஓவியமாக வரைந்து சாதனை படைத்து உள்ளார்.

    தான் வரையும் மணல் ஓவிய படைப்புகளை கண்காட்சிபடுத்தியும் வருகிறார். இந்த மணல் ஓவியங்களை உருவாக்குவ தற்காக கன்னியாகுமரி கடற்கரையில் கிடைக்கும் கருப்பு, சிவப்பு, ரோஸ், வெள்ளை போன்ற பல வண்ண கலர் மணல்களை சேகரித்து வைத்துள்ளார்.

    இந்த பல வண்ண மணல்களைக் கொண்டு மகாத்மாகாந்தி, பாரதியார், பிரதமர் நரேந்திர மோடி, முதல்- அமைச்சர் மு. க. ஸ்டாலின் முன்னாள் முதல்-அமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் முகதோற்ற உருவங்களை மணல் ஒட்டோவியமாக வரைந்து சாதனை படைத்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அரசியல் தலைவர்களின் மணல் ஓவியங்களை வரை வதற்கு முன்பு பென்சில் மூலம் அட்டையில் "ஸ்கெட்ச்" போட்டு முன் வரைவு செய்து அதன் மேல் பலவண்ண மணல் களை ஒட்டி இந்த மணல் ஓவியத்தை வரைந்து உள்ளேன்.

    நான் படைத்த மணல் ஓவியங்கள் மற்றும் செய்தித்தாள் காகித ஒட்டோ வியங்களை காமராஜர் பிறந்த தினமான வருகிற 15-ந்தேதிஅன்று நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சிய கத்தில் நடைபெறும் கல்வி வளர்ச்சி நாள் கண்காட்சி யில் இடம் பெற உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சமீபத்தில் கன்னியாகுமரியில் நடந்தசினிமா படப்பிடிப்புக்கு வந்த நடிகர் சூர்யாவிடம் அவரது தந்தை நடிகர் சிவகுமாரின் உருவத்தை இவர் மணல் ஓவியமாக வரைந்து அவரிடம் நேரில் சென்று கொடுத்து பாராட்டை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் மற்றும் கடத்தலை தடுக்க நேற்று கடலோர காவல் குழு போலீசார் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • மாறுவேடத்தில் வரும் போலீசாரை ரோந்து பணியில் இருக்கும் போலீசார் கடல்பரப்பில் அல்லது கடற்கரையோரத்தில் பிடிக்கவேண்டும் என்பது நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம்வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறையில் சாகர்கவாச் எனும் கடல் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை மற்றும் கடத்தலை தடுக்க நேற்று காலை கடலோர காவல் குழு போலீசார் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் இன்று இராண்டாவது நாளாக ரோந்து பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது இப்பணியில் இன்று கடலோர காவல் படையினருக்கு சொந்தமான நிரிலும், நிலத்திலும், செல்ல கூடிய ரோவர் படகு கோடிக்கரைக்கு வந்து ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது மேலும் வேதாரண்யம் பகுதியில் உள்ள 9 சோதனை சாவடிகளும் தீவிர வாகன சோதனையும் நடைபெறுகிறது

    இராண்டாவது நாள் பயிற்சி ஒத்திகையில் வேதா ரண்யம் இன்னல்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழுமம் டி.எஸ்.பி சுரேஷ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் சப்-இன்ஸ்பெ க்டர்கள் பன்னீர்செல்வம், ஆனந்த வடிவேலன் ஏட்டு சசிகுமார்மற்றும் போலீசார் ஆறுகாட்டுதுறை, கோடிக்கரை கடற்கரையில் புதிதாக யாரும் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா? மீன்பிடி படகில் தீவிரவாதிகள் வரும் வாய்ப்புகள் உள்ளதா? மீனவர்களின் படகை பயன்படுத்தி கடத்தல் நடைபெறுகிறதா? என்று சோதனை செய்தனர்.

    பின்னர் படகுமூலம் கடலில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். 2 நாட்கள் நடைபெறும் .

    இந்த ஒத்திகை நிகழ்ச்சி யில் போலீசார் மாறுவேடத்தில் கடலில் இருந்து கரைக்கு வருவார்கள் அவர்களை அடையாளம் கண்டு மறுவேடத்தில்வரும் போலீசாரை ரோந்து பணியில் இருக்கும் போலீசார் கடல்பரப்பில் அல்லது கடற்கரையோரத்தில் பிடிக்கவேண்டும் என்பது ஒத்திகை நிகழ்ச்சியின் நோக்கம் ஆகும்.

    இந்த சாகார் கவாச் ஒத்திகை நிகழ்வில் வேதாரண்யம் போலீசார், உளவு பிரிவு போலீசார், கியூ பிராஞ்ச் போலிசார் என 50 மேற்பட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் ஒரே நேரத்தில் இராண்டாவது நாளாக கடலிலும் மக்கள் கூடும் இடங்களிலும் மற்றும் வாகன சோதனை நடைபெற்று வருவதால் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பள்ளிகள் திறந்ததைத் தொடர்ந்து கடந்த 13-ந்தேதியுடன் நிறைவடைந்தது.
    • விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்லும் “கியூ” செட்டில் ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரிக்கு நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் காணப்படும். இதனால் இந்த 3 மாத காலமும் இங்கு மெயின் சீசன் காலமாகக் கருதப்படுகிறது.

    இதேபோல ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறையை குடும்பத்தோடு குதூகலத்துடன் கொண்டாட சுற்றுலா பயணிகள் இங்கு படையெடுத்து வந்த வண்ணமாக இருப் பார்கள். இதனால் இந்த 2 மாத காலமும் இங்கு கோடை விடுமுறை சீசன் காலமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு கோடை விடுமுறை சீசன் பள்ளிகள் திறந்ததைத் தொடர்ந்து கடந்த 13-ந்தேதியுடன் நிறைவடைந்தது.

    இந்த கோடை விடுமுறை சீசன் நிறைவடைந்ததை தொடர்ந்து கன்னியா குமரிக்கு சுற்றுலா பயணி களின் வருகை அடியோடு குறைந்து விட்டது. தற்போது நாள் ஒன்றுக்கு 1500 முதல் 2000 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்த்து வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் மட்டும் 1500 சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்த்து வந்து உள்ளனர். இதனால் 2 படகு மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

    அந்த படகுகளும் இருக்கைகள் நிரம்பிய பிறகே விவேகானந்தர் மண்டபத்துக்கு புறப்பட்டு செல்கிறது. அதுவரையிலும் சுற்றுலாப் பயணிகள் படகில் சில நிமிட நேரம் காத்திருக்க வேண்டியது உள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததால் விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்லும் "கியூ" செட்டில் ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், விவே கானந்தபுரம் கடற்கரையில் அமைந்துள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் ஆகிய கோவில்களில் பக்தர்களின் கூட்டம் குறைவாகவே காணப்படு கிறது. கன்னியாகுமரியில் உள்ள முக்கடலும் சங்க மிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரைப்பகுதி, காந்தி நினைவு மண்டபம், காம ராஜர் மணிமண்டபம், மீன்காட்சி சாலை, கடற்கரையில் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள், அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, அரசு அருங்காட்சியகம், மியூசியம் வட்டக்கோட்டை பீச், சொத்தவிளை பீச், சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி போன்ற அனைத்து சுற்றுலா தளங்களும் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன. இதனால் கடைகளில் வியாபாரம் இன்றி வியாபாரிகள் தவிக்கிறார்கள்.

    • இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு சர்வதேச யோகா தினம் விவேகானந்தா கேந்திர கடற்கரை வளாகத்தில் நடந்தது
    • நடனம், பரதநாட்டியம், சிலம்பாட்டம் ஒயிலாட்டம், உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது

    கன்னியாகுமரி :

    மத்திய மாநில அரசுகள் இணைந்து இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு சர்வதேச யோகா தினம் கன்னியா குமரி விவேகானந்தபு ரத்தில்உள்ள விவேகானந்தா கேந்திர கடற்கரை வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில்மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் எல். முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிக்கு தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜவஹர் தலைமை தாங்கினார். தேசிய நெடுஞ்சாலை பணி மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி வரவேற்றுப் பேசினார். இதில்குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., பெங்களூரு சி.எப்.எஸ். இயக்குனர் அன்னபிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் யோகா பயிற்சி, நடனம், பரதநாட்டியம், சிலம்பாட்டம் ஒயிலாட்டம், உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    முன்னதாக மத்திய மந்திரி எல்.முருகன் பால்பண்ணை அதிபர்கள் கால்நடை விவசாயிகள் மீனவர்களுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் பேசியதாவது:-

    கடந்த 2014-ம் ஆண்டில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பெரும் முயற்சி யால் ஜூன்21-ந்தேதி உலக யோகா தினமாக அறிவிக்கப்பட்டது. அன்று முதல் அற்புதமான யோகா கலை ஐ.நா. சபையால் உலக யோகா தினமாக ஆண்டுதோறும் ஜூன்

    21-ந்தேதி கடந்த 8 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நமது நாட்டில் இந்த ஆண்டு முழுவதும் 75-வது சுதந்திர பெருவிழாவை கொண்டாடி வரும் வேளையில் உலக யோகா தினத்தை 75 நாட்களுக்கு முன்பே தொடங்கி உள்ளோம்.

    வடக்கே இமயமலை உத்தரகாண்ட் ரிஷிகேஷ் தெற்கு கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இன்றைய தினம் இந்த யோகா தினத்தின் முன்னோடி நிகழ்ச்சியாக யோகா பயிற்சி நடக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை ரீதியாக யோகா தின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன் அடிப்படையில் இன்று இங்கு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் உலக யோகா தின விழா நடத்தப்படுகிறது

    யோகா கலை நமது நாட்டில் தோன்றிய அற்புதமான கலை இன்று உலகம் முழுவதும் போற்றக்கூடிய சிறப்பை பெற்றுள்ளது. யோகா மூலமாக எளிமையாக அதிக செலவு செய்யாமல் மனிதன் நோயை கட்டுப்படுத்த முடியும், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மன அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்த யோகா முக்கிய பங்கு வகிக்கிறது.

    தொடர்ந்து யோகா பயிற்சியும் மூச்சுப் பயிற்சியும் செய்து வந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம். நாம் ஆரோக்கியமாக இருந்தால் தேசம் ஆரோக்கியமாக இருக்கும் என்பதற்காகவும் வருங்கால சந்ததியினருக்கும் இந்த யோகா கலை கொண்டு செல்கிறோம். சர்வதேச யோகா தின மான வருகிற 21-ந்தேதி இந்தியா முழுவதும் 75 ஆயிரம் இடங்களில் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து மத்திய மந்திரி எல்.முருகன் ஏராளமான மாணவர்களுடன் தரையில் அமர்ந்து யோக பயிற்சி செய்தார். இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    ×