என் மலர்
நீங்கள் தேடியது "அரசு மருத்துவமனை"
- தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வதால் மருத்துவமனை எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.
- தீ விபத்து நடந்த அறையில் இருந்த பெண்கள் வேறு வார்டுக்கு பத்திரமாக மாற்றப்பட்டனர்.
தஞ்சாவூா்:
தஞ்சாவூா் பழைய பஸ் நிலையம் அருகில் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை அமைந்துள்ளது. தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் தினமும் ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். குறிப்பாக இந்த மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் அதிக அளவில் நடந்து வருகிறது.
இதற்காக மருத்துவமனையில் பிரசவ வார்டுக்கு என்று தனி கட்டிடம் இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஏராளமான பிரசவம் நடந்து வருகின்றன. மேலும் பிரசவத்திற்காக கர்ப்பிணி பெண்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வதால் மருத்துவமனை எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.
இந்த நிலையில் இன்று மதியம் திடீரென பிரசவ வார்டின் முதல் தளத்தில் தீ பற்ற தொடங்கியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் பிரசவத்திற்காக வந்திருந்த கர்ப்பிணி பெண்கள், உடன் வந்த உறவினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அலறி அடித்துக்கொண்டு வெளியேறினர். அப்போது மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள தீயணைப்பான் கருவிக்கொண்டு ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் தகவல் அறிந்து உடனடியாக தஞ்சாவூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
உடனடியாக தீயை அணைத்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு வந்து ஆய்வு செய்து துரித நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையடுத்து தீ விபத்து நடந்த அறையில் இருந்த பெண்கள் வேறு வார்டுக்கு பத்திரமாக மாற்றப்பட்டனர்.
ஏ.சி.யில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருந்தாலும் மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனையில் தீ விபத்து நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உத்தவ் லால் ஜோஷி என்ற முதியவர் தனது நோய்வாய்ப்பட்ட மனைவியுடன் சிகிச்சைகாக வந்திருந்தார்..
- வீடியோ வைரலான நிலையில் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இளம் மருத்துவர் ஒருவர் முதியவரை கொடூரமாக தாக்கியுள்ளார்.
ஏப்ரல் 17 அன்று நடந்த இந்த சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
உத்தவ் லால் ஜோஷி என்ற அந்த முதியவர் தனது நோய்வாய்ப்பட்ட மனைவியுடன் சத்தர்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தார்.
மற்ற அனைவரையும் போல வரிசையில் நின்றிருந்தபோது எதிர்பாராத விதமாக மருத்துவர் வந்து தன்னைத் தாக்கியதாக அவர் கூறுகிறார்.
அவர் ஊடகத்திடம் கூறியதாவது, ஏன் வரிசையில் நிற்கிறீர்கள் என்று மருத்துவர் கூச்சலிட்டார். விளக்க முயற்சிக்கும்போது மருத்துவர் தன்னை தாக்கி வெளியே இழுத்துச் செல்ல முற்பட்டார் என்று தெரிவித்தார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 26 வயதான மனைவி ஸ்வேதா சனிக்கிழமை ஒரு சாலை விபத்தில் இறந்தார்.
- வார்டு பாய் விஜய் ஒரு காதணியை போலீசாரிடம் ஒப்படைத்து, தரையில் அதைக் கண்டதாகக் கூறினார்.
உத்தரப் பிரதேசத்தில் மாவட்ட அரசு மருத்துவமனையில் பெண்ணின் சடலத்தில் இருந்த தங்க காதணிகளை வார்டு பாய் ஒருவர் திருடிய வீடியோ வைரலாகி வருகிறது.
தகவலின்படி, ஷாம்லி மாவட்டத்தில் பாப்ரி பகுதியின் ஹிரன்வாடா கிராமத்தைச் சேர்ந்த சச்சின் குமாரின் 26 வயதான மனைவி ஸ்வேதா சனிக்கிழமை ஒரு சாலை விபத்தில் இறந்தார். உடல் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
பாப்ரி காவல் நிலையப் பெண் போலீசார், பிரேத பரிசோதனைக்கு முன் உடலைப் பரிசோதிக்கத் தொடங்கியபோது, அந்தப் பெண்ணின் காதணிகள் காணாமல் போனதைக் கவனித்தனர்.
விசாரணையின் போது, வார்டு பாய் விஜய் ஒரு காதணியை போலீசாரிடம் ஒப்படைத்து, தரையில் அதைக் கண்டதாகக் கூறினார். அவரது வாக்குமூலங்களில் சந்தேகம் இருந்ததால், சிசிடிவி காட்சிகள் சரிபார்க்கப்பட்டது.
சிசிடிவி காட்சிகளில், வார்டு பாய் விஜய் அந்தப் பெண்ணின் உடலில் இருந்து காதணிகளைக் கழற்றியது பதிவாகியிருந்தது.
போலீசார் அவரை விசாரிக்க தேடியபோது, அவர் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றுவிட்டார். பெண்ணின் குடும்பத்தினர் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை தேடி வருகின்றனர்.
- குழந்தையின் உறவினர்கள் அஞ்செட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் ஆம்புன்சில் இருந்த குழந்தையின் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே கடுகுநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மனைவி பிரீத்தா, இவர்களுக்கு 4 வயதில் பிரசாந்த் என்ற ஆண் குழந்தை இருந்தது.
இந்நிலையில், கடந்த 30-ந் தேதி வீட்டின் படியிலிருந்து பிரசாந்த் தவறி கீழே விழுந்ததாக அஞ்செட்டி அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் குழந்தைக்கு காலில் அடிப்பட்டுள்ளதாக கூறி கட்டு போட்டு அனுப்பி உள்ளனர். பின்னர் மீண்டும் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் நேற்று முன்தினம் ரண ஜன்னியால் பாதிக்கப்பட்டு குழந்தை பிரசாந்த் உயிரிழந்தது.
அதனால் மருத்துவர்கள் தனி ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ஊருக்குள் செல்லாமல் நேரடியாக குழந்தையின் சடலத்தை மயானத்திற்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக இருந்ததால் குழந்தை இறந்ததாகவும், மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தையின் உறவினர்கள் அஞ்செட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் ஆம்புன்சில் இருந்த குழந்தையின் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சென்ற அஞ்செட்டி வட்டாட்சியர் கோகுல், தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி ஆனந்தராஜ், மாவட்ட சுகாதார அலுவலர் ரமேஷ் குமார், அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் பங்கஜம் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு குழந்தையின் உடல் நல்லடக்கம் செய்ய கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- முதலில் நோயாளிகளுக்கான டோக்கன் பதிவு செய்யும் அறைக்கு சென்று அவர் ஆய்வு செய்தார்.
- பரிசோதனை முடிவுகள் குறித்த ஆவணங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்று புகார் தெரிவித்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இருந்து ராதாபுரம் செல்லும் சாலையில் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது.
இந்த ஆஸ்பத்திரியில் இன்று காலை 8 மணி அளவில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
முதலில் நோயாளிகளுக்கான டோக்கன் பதிவு செய்யும் அறைக்கு சென்று அவர் ஆய்வு செய்தார். அப்போது கணினி மூலமாக டோக்கன் பதிவு செய்யவில்லையா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அங்கிருந்த ஊழியர் கணினி பழுதில் இருப்பதால் சீட்டு எடுக்க முடியவில்லை என்று கூறினார். உடனடியாக அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர்.
தொடர்ந்து, டாக்டர்கள் எத்தனை மணிக்கு வருகிறார்கள்? எத்தனை மணிக்கு பணியை முடித்து செல்கிறார்கள் என்பது குறித்த விவரங்களை அந்த பெண் ஊழியரிடம் கேட்டுக்கொண்டார்.
பின்னர் பணியில் இருந்த டாக்டர்களிடம், நாள் ஒன்றுக்கு நோயாளிகள் வரும் எண்ணிக்கை, எந்தவிதமான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது? பொதுவான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகிறதா? என்பது குறித்தும் அமைச்சர் விசாரித்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் உள்ள ஆய்வகம், கட்டுப்போடும் இடம், எக்ஸ்ரே உள்ளிட்டவைகள் எடுக்கும் அறைகளில் ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்குள்ள பொது நோயாளிகள் பிரிவுக்கு சென்றார்.
அங்கே சிகிச்சையில் இருந்த மூதாட்டி உள்பட நோயாளிகளிடம் சிகிச்சைகள் தரமாக வழங்கப்படுகிறதா? உணவு சரியான நேரத்தில் வழங்கப்படுகிறதா? என்று விசாரித்தார்.
பின்னர் மருத்துவமனை வளாகங்களில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அங்கிருந்து புறப்பட தயாரானார். அப்போது அங்கு வந்த கூடன்குளம் பஞ்சாயத்து தலைவி வின்சி மணியரசு, அரசு ஆஸ்பத்திரியில் சி.டி. ஸ்கேன் எடுக்கப்படுகிறது. ஆனால் அதற்கான பரிசோதனை முடிவுகள் குறித்த ஆவணங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்று புகார் தெரிவித்தார்.
உடனே அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்கு பணியில் இருந்த டாக்டர்களிடம் இது குறித்து விளக்கம் கேட்டு பதிலளித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
- அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கு காலாவதியான மருந்துகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது.
- குரங்கு காய்ச்சல், இன்ப்ளூயன்சா மற்றும் பல வைரஸ் நோய்கள் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பரவுவதற்கான காரணம் என்ன? என விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவிட்டார்.
சென்னை:
கோவை அரசு மருத்துவமனை மருந்து ஸ்டோர் பொறுப்பாளராக இருந்த முத்துமாலை ராணி, நிறுத்தி வைக்கப்பட்ட தனது ஓய்வூதிய பலன்களை வழங்க கோரி தாக்கல் செய்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார்.
அப்போது, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கு காலாவதியான மருந்துகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது.
கொரோனா பாதிப்புக்கு பின், குரங்கு காய்ச்சல், இன்ப்ளூயன்சா மற்றும் பல வைரஸ் நோய்கள் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பரவுவதற்கான காரணம் என்ன? என விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவிட்டார். மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் புதிது புதிதாக நோய்கள் பரவுவதற்கான காரணங்கள், மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருவதால், அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அரசுத்தரப்பில் கோரப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்டு, வழக்கின் விசாரணையை நவம்பர் 4-ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள் வினியோகிப்பது என்பது தீவிரமானது எனவும், இதில் மருந்து நிறுவனங்களுக்கும், சுகாதார துறைக்கும் தொடர்பு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், அரசு மருத்துவமனைகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் உண்மையில் ஏழை மக்களை சென்றடைவதில்லை என தெரிவித்த நீதிபதி, அந்த மருந்துகள் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டதாக பதிவுகள் செய்யப்படுகின்றன என வேதனை தெரிவித்தார்.
- பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, செயல் அலுவலர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி உள்ளிட்டோர் இருந்தனர்.
- அவிநாசி - சேவூர் ரோட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆய்வு மேற்கொண்டனர்.
அவிநாசி:
அவிநாசி அரசு மருத்துவமனையில் பொது பிரிவு, வெளி நோயாளிகள் பகுதி, பிரசவ அறை, அறுவை சிகிச்சை அரங்கு, எக்ஸ்ரே,அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார். அப்போது சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் உடனிருந்தார்.
பின் மருத்துவர்களிடம் உள் மற்றும் வெளி நோயாளிகள் வருகை, பிரசவத்திற்காக வரும் பெண்களின் வருகை குறித்தும் கேட்டனர். குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை கண்காணிக்க வைத்துள்ள இன்குபேட்டர், எடை பார்க்கும் கருவிகள் உள்ளிட்டவை சரியாக வேலை செய்கிறதா என கலெக்டர் ஒவ்வொன்றாக இயக்கி சரி பார்த்தார்.
நோயாளிகளுடன் தங்குவோர் அறைகளில் சென்று பார்வையிட்டனர். அவிநாசி - சேவூர் ரோட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆய்வு மேற்கொண்டனர்.
கருவலூரில் ராமநாதபுரம் பகுதியில் சாலை பணிகள், நரியம்பள்ளி, அவிநாசி வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடந்தது. அப்போது அவிநாசி வட்டாட்சியர் ராஜேஷ், வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல், பி.டி.ஓ., விஜயகுமார், பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, செயல் அலுவலர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி உள்ளிட்டோர் இருந்தனர்.
- காரைக்குடி அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு செய்து நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
- இந்த ஆய்வின் போது இணை இயக்குநர், தலைமை மருத்துவர் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் இருந்தனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு, பரிசோதனை ஆய்வகம், இயன்முறை சிகிச்சை பிரிவு மருந்தகம், அவசர சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி, அறுவை சிகிச்சை பிரிவு ஆகியவற்றை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது வருகை பதிவேட்டில் மொத்த மருத்துவர்களின் எண்ணிக்கை, வருகைபுரிந்த மருத்துவர்கள், விடுப்பில் உள்ள மருத்துவர்கள், சிறப்பு பிரிவு மருத்துவர்கள் எண்ணிக்கை, குழந்தை களுக்கு போடப்படும் தடுப்பூசி குறித்தும், புற நோயாளிகள் பிரிவிற்கு சென்று சிகிச்சை பெற வந்துள்ள பொது மக்கள், சிகிச்சை அளிக்கப்படும் விதம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
மகப்பேறு பகுதியில் கர்ப்பிணிகளை பரிசோதிக்கும் வெளிநோயாளிகள் பிரிவில் மாதம்தோறும் 1200 பேருக்கும், உள்நோயாளிகள் பிரிவில் மாதம்தோறும் 600 பேருக்கும், பிரசவிக்கும் தாய்மார்கள் மாதம்தோறும் 300 முதல் 400 பேருக்கும், குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளும் தாய்மார்கள் மாதம்தோறும் 100 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்படும் சிசு பராமரிப்பு பகுதியில் மாதம்தோறும் 300 வெளி நோயாளி குழந்தைகளுக்கும், 150 உள்நோயாளி குழந்தை களுக்கும் சிகிச்சை அளிக்க ப்படுகிறது.
பொது வெளி நோயாளி கள் பிரிவில் மாதம்தோறும் 20 ஆயிரம் பேருக்கும், விபத்து மற்றும் அவரச சிகிச்சை பிரிவின் கீழ் மாதம்தோறும் 200 நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சீறுநீரக சுத்திகரிப்பு பிரிவில் மாதம்தோறும் 25 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எலும்பு முறிவு அறுவை சிகிச்சை, கர்ப்பபை அகற்றும் சிகிச்சை, பித்தப்பை கல் அடைப்பு அகற்றுதல், கர்ப்பவாய் பரிசோதனை நுண்துளைகள் அறுவை சிகிச்சையும் நடைபெறு கிறது.
தொற்றுநோய் பிரிவு, மனநலபிரிவு, செவி திறன் ஆய்வு பிரிவு, குழந்தைகளுக்கான வெளிநோயாளி மற்றும் உள்நோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு ஆகிய பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை மற்றும் இதர நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையின் வலதுபுற பகுதியில் 300 மரக்கன்றுகளை நடும் பணியின் தொடக்கமாக கலெக்டர் மரம் நடும் பணியை தொடங்கிவைத்தார்.
இந்த ஆய்வின் போது இணை இயக்குநர் இளங்கோ மகேஸ்வரன், தலைமை மருத்துவர் தர்மர், வட்டாச்சியர் கண்ணன் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் இருந்தனர்.
- அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நவீன சிகிச்சைக்கான கூடுதல் கட்டிடங்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில், பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், பொதுப்பணித்துறை மூலம் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதி உதவியுடன் கட்டப்படும் மருத்துவமனைக் கட்டிடங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதி மற்றும் மாநில நிதி பங்களிப்புடன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நவீன சிகிச்சைக்கான கூடுதல் கட்டிடங்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
இத்திட்டப்பணிகள் சுமார் ரூ.477.70 கோடி மதிப்பீட்டில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, சேலம் மாவட்டம், அம்மாபேட்டை அரசு மருத்துவமனை, திருநெல்வேலி மாவட்டம், கண்டியப்பேரி அரசு மருத்துவமனை, திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அரசு மருத்துவமனை மற்றும் திருப்பூர் மாவட்டம், வேலம்பாளையம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் நடைபெற்று வருகின்றன.
இந்த திட்டப் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில், பொதுப்பணித்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
- மேலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் ஆய்வு நடத்தினர்.
- அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஜெயந்தி, டாக்டர்கள் செந்தில்குமரன், கார்த்திக், ஆனந்தி, திவ்ய ஷாலினி, ஸ்ரீதரன் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலூர்
மேலூர் அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை சார்பாக காயகல்பம்-2022 திட்டத்தின் கீழ் தேசிய நல்வாழ்வு திட்ட ஒருங்கிணைப்பாளரும், தென்காசி அரசு மருத்துவமனையின் டாக்டருமான கார்த்திக், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையின் டாக்டர் காளிராஜ், செவிலியர் அலமேலு மங்கயற்கரசி ஆகியோர் மேலூர் அரசு மருத்துவமனை வளாகம், உள்நோயாளிகள் பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, சமையல் அறை, பிரசவ வார்டு, மருத்துவ அறை, பரிசோதனை ஆய்வு கூடம், அலுவலகம் ஆகியவை தூய்மையாக இருக்கிறதா? என்று ஆய்வு செய்தனர்.
அப்போது மேலூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஜெயந்தி, டாக்டர்கள் செந்தில்குமரன், கார்த்திக், ஆனந்தி, திவ்ய ஷாலினி, ஸ்ரீதரன் ஆகியோர் உடனிருந்தனர்.
- எம்.ஜி.ஆர்.நகர், உள்பட 50கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.
- உரிய நேரத்தில் அவசர சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது.
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது எமரால்டு.
இப்பகுதியை சுற்றிலும் நேருநகர், நேருகண்டி, லாரன்ஸ், கோத்தகண்டி, அண்ணாநகர், எம்.ஜி.ஆர்.நகர், உள்பட 50கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.
சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் நிறைந்த எமரால்டு சுற்றுவட்டார பகுதிகளில் அரசு, தனியார் மருத்துவ மனைகள் இல்லாததால் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் பலவிதமான நோய்களுக்கு சிகிச்சை பெற தொலை துாரமுள்ள மஞ்சூர் அல்லது ஊட்டி போன்ற பகுதிகளுக்கே சென்று வர வேண்டியுள்ளது.
இதனால் காலவிரயம், கூடுதல் செலவினம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. மேலும் உரிய நேரத்தில் அவசர சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது.
இதையடுத்து சுற்றுவட்டார கிராமங்க ளின் மையப்பகுதியாக உள்ள எமரால்டில் மருத்து வமனை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதை தொடர்ந்து அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு எமரால்டு பகுதியில் அரசு மருத்துவமனை கட்டப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த மே மாதம் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஊட்டியில் நடந்த விழாவில் காணொளி காட்சி மூலம் மருத்துவமனையை திறந்து வைத்தார். இதை தொடர்ந்து மருத்துவ மனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து நோயாளிகளுக்கு தேவையான வசதிகளுடன் மருத்துவமனையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என எமரால்டு சுற்றுவட்டார கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
- மதுரை அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
- கடன்பட்டாவது குழந்தை பாக்கியம் பெறவேண்டும்’ என்பது தம்பதிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மதுரை
மதுரை கே.கே. நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்த வெரோனிகா மேரி என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சென்னை மருத்துவக் கல்வி இயக்ககத்திடம் ஒரு சில கேள்விகளை எழுப்பி இருந்தார்.
அதில் 'மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம், செராமிக் பற்கள் கட்டுதல், காக்ளியர் இம்பிளான்ட் ஆகிய சிகிச்சைகள் நடைமுறையில் உள்ளதா? என்பது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தன.
அதற்கு தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்ககம் கொடுத்து உள்ள உள்ள பதிலில், "மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் இல்லை. இருந்த போதிலும் அங்கு விரைவில் செயற்கை கருத்தரிப்பு மையம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று அரசு கொள்கை முடிவு எடுத்து உள்ளது.
இது தவிர மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனையில் செராமிக் பற்கள் கட்டுதல், காது-மூக்கு- தொண்டை சிகிச்சை பிரிவில் காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை வசதிகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் குழந்தை இல்லா தம்பதி யர் எண்ணிக்கை அதிக ரித்து வருகிறது. இதனால் உடல்ரீதியாக மட்டுமின்றி மனரீதி யாகவும் எண்ணற்றோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது ஒரு சில குடும்பத்தை விவகாரத்து வரை கொண்டு சென்று விடுகிறது.
எனவே 'எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை. கடன்பட்டாவது குழந்தை பாக்கியம் பெறவேண்டும்' என்பது தம்பதிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனை நன்கு புரிந்து கொண்ட தனியார் மையங்கள், சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்கின்றன. எனவே அங்கு பணக்காரர்களுக்கு மட்டுமே குழந்தையை பாக்கியம் கிட்டும் என்ற நிலை உள்ளது.
தமிழகத்தில் 155 தனியார் கருத்தரித்தல் சிகிச்சை மையங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக மதுரையில் மட்டும் 11 மையங்கள் உள்ளன. ஆனால் தமிழகத்தில் ஒரு அரசு மருத்துவமனையில் கூட செயற்கை கருத்தரிப்பு மையங்கள் இல்லை.
எனவே மதுரை அரசினர் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் ஒன்றை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும். அப்படி செய்தால் குழந்தை இல்லாத ஏழை- எளிய தம்பதிகளும் இங்கு வந்து இலவசமாக சிகிச்சை பெற இயலும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.