என் மலர்
நீங்கள் தேடியது "பயணிகள் ரெயில்"
- செகந்திராபாத்-ஹவுரா ஃபலக்னுமா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் வந்துகொண்டுருந்தது.
- பெட்டிகள் பிரிந்ததை அறிந்த பயணிகள் எச்சரித்தனர்.
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பலாசா அருகே இன்று காலை செகந்திராபாத்-ஹவுரா ஃபலக்னுமா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் வந்துகொண்டுருந்தது.
அப்போது எஞ்சினில் இருந்து ரெயில் பெட்டிகள் தனியாகப் பிரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெட்டிகள் பிரிந்ததை அறிந்த பயணிகள் எச்சரித்ததை அடுத்து ரெயில் எஞ்சினை பின்னோக்கி இயக்கி பெட்டிகளுடன் மீண்டும் இணைக்கப்பட்டது.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, இணைப்பு செயலிழந்ததற்கான காரணத்தைக் கண்டறிய முயன்றுள்ளனர்.
- ஏசி விரைவு ரெயில் (12251) தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.
- யாருக்கும் உயிர்ச்சேதம் மற்றும் காயங்கள் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் இருந்து ஒடிசா செல்லும் ஏசி விரைவு ரெயில் (12251) தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.
பெங்களூரிலிருந்து தமிழகம், ஆந்திரா வழியாக அசாம் மாநிலம் காமாக்யா செல்லும் காமாக்யா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 11:45 மணியளவில் ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள சவுத்வாரில் நெர்குந்தி ரெயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தது.
அப்போது ஏசி பெட்டிகளை மட்டுமே கொண்ட இந்த ரெயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் ஒடிசா தீயணைப்புப் படை மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் காயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஒடிசா தீயணைப்பு துறை இயக்குநர் சுதன்சு சாரங்கி தெரிவித்தார்.
- லட்சக்கணக்கானோர் தங்கள் அன்றாட பணிகளுக்காக ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.
- திருநெல்வேலில் இரண்டாம் ரெயில் வழித்தடத்தில் முழுமையான பாதை புதுப்பித்தல் பணிகள் நடைபெறுகிறது.
நெல்லை:
தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான போக்குவரத்தாக ரெயில் போக்குவரத்து உள்ளது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானோர் தங்களின் அன்றாட பணிகளுக்காக இந்த ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.
உத்தியோகம், மருத்துவ சிகிச்சை, குடும்ப நிகழ்ச்சி உள்பட பல்வேறு காரணங்களுக்காக மக்கள் ரெயில்களில் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருநெல்வேலில் இரண்டாம் ரெயில் வழித்தடத்தில் முழுமையான பாதை புதுப்பித்தல் பணிகள் காரணமாக பின்வரும் ரெயில்கள் மார்ச் 20 முதல் ஏப்ரல் 13 வரை என மொத்தம் 25 நாட்கள் ரத்து செய்யப்படுகின்றன.
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் இடையே மாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில் மற்றும் திருச்செந்தூர்– திருநெல்வேலி இடையே காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலும் மார்ச் 20 முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை ரத்துசெய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது.
- மும்பை சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையத்தில் இருந்து அமராவதி நோக்கி மும்பை-அமராவதி எக்ஸ்பிரஸ் வந்துகொண்டிருந்தது.
- ரெயிலின் வேகம் குறைவாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மகாராஷ்டிராவின் மும்பை சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையத்தில் இருந்து அமராவதி நோக்கி மும்பை-அமராவதி எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை பயணித்துக்கொண்டிருந்தது.
ஜல்கான் மாவட்டத்தில் உள்ள போட்வாட் ரெயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 4 மணியளவில் ரெயில் வந்துகொண்டிருந்தபோது கோதுமை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று ரெயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றது.
அப்போது ரெயில் லாரி மீது மோதி சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு அதை இழுத்துச் சென்றது. இதில் லாரி இரண்டாக உடைந்தது. ரெயிலின் வேகம் குறைவாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
விபத்துக்குப் பிறகு லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை காவல்துறையினரும் ரெயில்வே நிர்வாகமும் தேடி வருகின்றனர்.
லாரி ரெயில்வே தடுப்பை உடைத்து சட்டவிரோதமாக ரெயில் பாதையில் வந்தது தெரியவந்தது. இந்த திடீர் விபத்தால் ரெயிலில் பயணித்த பயணிகள் பீதியடைந்தனர். மேலும் இந்த விபத்தால் சில மணி நேரங்களாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டன. தாண்டவத்தை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- சென்னை- திருச்செந்தூர் ரெயில் பாபநாசம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.
- மத்திய இணை மந்திரி முருகன் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை.
மேட்டுப்பாளையம்-கோவை இடையே வாரத்தின் ஆறு நாட்கள் மட்டுமே பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. ஞாயிற்றுக்கிழமை அந்த ரெயில் இயக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.
இதனையடுத்து மத்திய இணை மந்திரி எல் முருகன், ரெயில்வே துறை அமைச்சகத்திற்கு எழுதியிருந்த கடிதத்தில், மேட்டுப்பாளையம்-கோவை ரெயிலை ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க வேண்டும் என்று ஏராளமான பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தம்மிடம் கோரிக்கை விடுத்ததாக குறிப்பிட்டிருந்தார்.இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதில் அளித்து ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எழுதிய பதில் கடிதத்தில். கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்பட்டதாகவும், வாரத்திற்கு ஆறு நாட்கள் இயக்கப்பட்டு வந்த மேட்டுப்பாளையம்-கோவை பயணிகள் ரெயில் இனி தினசரி இயக்கப்படும் என்றும், சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில், பாபநாசம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ரெயில்வே அமைச்சரின் அறிவிப்பை அடுத்து, வரும் 4ந் தேதி முதல் மேட்டுப்பாளையம்-கோவை பயணிகள் ரெயில் வாரம் முழுவதும் இயக்கப்படும் என்று ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
- மதுரை- போடி இடையே விரைவில் பயணிகள் ரெயில் முழுமையாக இயக்கப்படும்.
- மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
மதுரை
மதுரை-போடி அகல ரெயில் பாதை திட்டத்தில் மதுரை - தேனி வரை பணிகள் முடிந்து ரெயில் போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த நிலையில் தேனி - போடி இடையே 15 கிமீ தொலைவுக்கான அகல ரெயில் பாதை பணிகள் தற்போது முடிந்து உள்ளன. இங்கு ஏற்கனவே ரெயில் என்ஜின் விடப்பட்டு வெள்ளோட்டம் நடத்தப்பட்டது.
தேனி - போடி புதிய அகல ரெயில் பாதையில் நேற்று 120 கி.மீ வேகத்தில் ரெயில் என்ஜின் அதிவேக சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி போடியில் இருந்து புறப்பட்ட ரெயில் என்ஜின், தேனிக்கு 9 நிமிடங்கள், 20 நொடியில் சென்றது. இந்த ஆய்வின் போது லோகோ பைலட் முத்துகிருஷ்ணன், உதவி லோகோ பைலட் அய்யனார் ஆகியோர் ரெயில் இன்ஜினை ஓட்டினார்கள். தேனி- போடி அகல ரெயில் பாதை சோதனையின் போது தென்னக ரெயில்வே கட்டுமான பிரிவு துணை முதன்மை பொறியாளர் சூரியமூர்த்தி, உதவி பொறியாளர் சரவணன் உள்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
மதுரை- தேனி இடையே பயணிகள் ரெயில் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகிறது. தேனி முதல் போடி வரை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு விட்டது. எனவே மதுரை-போடி இடையே பயணிகள் ரெயிலை முழுமையாக இயக்குவது என்று மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
- ராஜஸ்தானில் சூரியநகரி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயில் தடம் புரண்டது.
- இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் பாலி அருகே சூரியநகரி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயிலின் எட்டு பெட்டிகள் இன்று அதிகாலை தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. சூரியநகரி எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயில் பாந்த்ரா முனையத்திலிருந்து ஜோத்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில், அதிகாலை 3.27 மணியளவில் ஜோத்பூர் மண்டலத்தின் ராஜ்கியவாஸ்-போமத்ரா பிரிவுக்கு இடையே ரெயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. விபத்து நிவாரண ரெயில் அனுப்பப்பட்டுள்ளது என வடமேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
- மேற்படி இந்த ெரயில்கள் இயக்கப்பட்டு வந்த கால அட்டவணையும் மாற்றப்பட்டு உள்ளது.
- காலை, மாலை வந்து செல்வதற்கு ஏற்ற நேரத்தில் இந்த ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
திருப்பூர்:
கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட பயணிகள் ெரயில்களை அதே கால அட்டவணைப்படி மீண்டும் இயக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சேலத்தில் ெரயில்வே கோட்ட மேலாளா் சீனிவாசனிடம், மக்களவை உறுப்பினா்கள் பி.ஆா்.நடராஜன் (கோவை ), கே.சுப்பராயன் (திருப்பூா்) ஆகியோா் முன்னிலையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டக் குழு சாா்பில் மாவட்டச் செயலாளா் செ.முத்துக்கண்ணன் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:-
பாலக்காடு - திருச்சி, திருச்சி - பாலக்காடு, கோவை - நாகா்கோவில், நாகா்கோவில் - கோவை, கோவை - சேலம், சேலம் - கோவை ஆகிய 3 பயணிகள் ெரயில்கள் கொரோனா பொது முடக்கக் காலத்தில் நிறுத்தப்பட்டன.பொது முடக்கம் நீக்கப்பட்டு நீண்ட கால தாமதத்துக்கு பிறகு சேலம் - கோவை, கோவை - சேலம் பயணிகள் ெரயில்கள் இயக்கப்பட்டன. இருப்பினும் கடந்த 5 மாதங்களாக இந்த ெரயில் முழுமையாக இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டு விட்டது. இந்த ெரயிலை மீண்டும் முழுமையாக இயக்க வேண்டும்.
மேலும் பாலக்காடு - ஈரோடு, கோவை - நாகா்கோவில் ஆகிய பயணிகள் ெரயிலும், விரைவு ெரயிலாக பெயா் மாற்றப்பட்டு, ஏற்கெனவே அந்த ெரயில்கள் நிறுத்தப்பட்டு வந்த பல புறநகர் ெரயில் நிலையங்களில் தற்போது நிறுத்தப்படாமல் இயக்கப்படுகின்றன. அத்துடன் மேற்படி இந்த ெரயில்கள் இயக்கப்பட்டு வந்த கால அட்டவணையும் மாற்றப்பட்டு உள்ளது.
கல்லூரி, அலுவலகம், தொழில் சாா்ந்த பணிகளுக்கு செல்லக்கூடியவா்கள் ஆயிரக்கணக்கானோா் காலை, மாலை வந்து செல்வதற்கு ஏற்ற நேரத்தில் இந்த ெரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
ஆனால் தற்போது விரைவு ெரயில்களாக நேரம் மாற்றப்பட்டு நிறுத்தங்கள் குறைக்கப்பட்டதால், ஏற்கெனவே பயணித்த ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆகவே அந்த ெரயில்களை மீண்டும் கொரோனாவுக்கு முன் இயக்கப்பட்ட அதே நேரத்தில் இயக்குவதை உறுதி செய்ய வேண்டும்.
கோவை முதல் மதுரை வரை திருப்பூா், ஈரோடு வழியாக புதிய இண்டா் சிட்டி எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்க வேண்டும். கோவை - நாகா்கோவில் இரவு நேர விரைவு ெரயிலில், தூத்துக்குடி இணைப்பு ெரயில் ஏற்கெனவே இயக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த சேவை நிறத்தப்பட்டு விட்டது. ஆகவே மீண்டும் இந்த இணைப்பு ெரயிலை இயக்க வேண்டும். திருப்பூா் ெரயில் நிலையத்தை தரம் உயா்த்த வேண்டும்.கோவை - ராமேசுவரத்திற்கு தற்போது திருப்பூா், ஈரோடு வழித்தடத்தில் வாராந்திர ெரயிலாக இயக்கப்படுவதை தினசரி ெரயிலாக மாற்றி இயக்க வேண்டும்.பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூரின் தேவைக்கு ஏற்ப இங்குள்ள ெரயில் நிலையத்தில் உரிய வசதிகளை பயணிகளுக்கு முழுமையாகச் செய்து தர வேண்டும் என கூறியிருந்தனர்.
- கோவையில் காலை 9.05 மணிக்கு புறப்பட்டு சேலம் செல்லும்.
- சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் :
கோவை-திருப்பூர் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கோவை-சேலம் பயணிகள் ரெயில் வருகிற 30-ந் தேதி வரை 1 மாதத்துக்கு முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.
கோவையில் காலை 9.05 மணிக்கு புறப்பட்டு சேலம் செல்லும் ரெயிலும், அதுபோல் சேலத்தில் மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு கோவை வரும் ரெயிலும் 1 மாதத்துக்கு முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- கவரைப்பேட்டையில் வந்து கொண்டு இருந்த போது ரெயில் என்ஜினில் பழுது ஏற்பட்டது
- ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து என்ஜின் பழுதை சரிசெய்தனர்.
பொன்னேரி:
ஆந்திர மாநிலம் பித்ரகுண்டாவில் இருந்து சென்னை நோக்கி இன்று காலை பயணிகள் ரெயில் வந்து கொண்டு இருந்தது.காலை 7.40 மணியளவில் கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டையில் வந்து கொண்டு இருந்த போது ரெயில் என்ஜினில் பழுது ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து பயணிகள் ரெயில் கவரப்பேட்டை அருகே நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
இதுபற்றி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி வந்த மின்சார ரெயில் நிறுத்தப்பட்டது.
ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து என்ஜின் பழுதை சரிசெய்தனர். பின்னர் காலை 8.45 மணியளவில் அந்த ரெயில் மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது.
நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டதால் கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் வந்த ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது. இதன் காரணமாக கும்மிடிப்பூண்டி-சென்னை மார்க்கத்தில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
- கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
- தென்னக ரயில்வேயில் பயணிகள் ரெயிலுக்கான கட்டணம் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
நகரப் பகுதிகளோடு கிராமப்புற மக்களை இணைக்கும் வகையில் பல ஆண்டுகளாக பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. பாசஞ்சர் ரெயில் என்று கூறப்படும் இந்த ரெயில்கள் எல்லா ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.
முக்கிய நகரங்களில் இருந்து 200 கி.மீ. தூரத்திற்குள் மட்டும் சென்று வரும் ரெயில்களில் கட்டணம் குறைவாக இருந்ததால் மக்கள் அதிகளவில் பயன்படுத்தினர். விவசாய விளைபொருட்கள் எடுத்துச் செல்லவும் இது உதவுவதால் கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த உணவு பொருட்களை நகரப்பகுதிகளுக்கு கொண்டு வருவது வழக்கம்.
எல்லா ரெயில் நிலையங்களிலும் நின்று செல்வதால் பயணிகள் ரெயில்களுக்கு கிராம மக்கள் இடையே அதிக வரவேற்பு இருந்தது.
இதற்கிடையே, கொரோனா காலத்தில் பயணிகள் ரெயில், மெயில் எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றப்பட்டது. இதனால் கட்டணம் உயர்த்தப்பட்டு வசூலிக்கப்பட்டது. இது அப்போது எதிர்ப்பை ஏற்படுத்தினாலும் கொரோனா காலத்தில் பெரிதாக பேசப்படவில்லை. கடந்த 3 ஆண்டாக மெயில் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் இந்த ரெயில்கள் பயணிகள் ரெயில்களாக மாற்றம் செய்து ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. கடந்த 21-ம் தேதியில் இருந்து இது மீண்டும் நடைமுறைக்கு வந்தது.
நாடு முழுவதும் உள்ள மெயில் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரெயில்களாக மாற்றப்பட்டதால் கட்டணமும் குறைந்தது. தமிழகத்தில் சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட டிவிஷன்களில் இயக்கப்படும் இத்தகைய ரெயில்களில் இனி சாதாரண கட்டணம் வசூலிக்கப்படும். இதன்மூலம் அதிகபட்சமாக ரூ.30 வரை கட்டணம் குறைய வாய்ப்புள்ளது.
இதுவரையில் மெயில் எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. புதிய அறிவிப்புக்கு பிறகு பயணிகள் ரெயில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட கட்டணம் தற்போது குறைக்கப்பட்டு உள்ளது.
- ரெயில்வே துறையில் கோவிட் காலத்தில் ஏற்றப்பட்ட கட்டண உயர்வை கைவிடக்கோரிய போராட்டத்திற்கு வெற்றி.
- வெளிப்படையாக அறிவித்தால் எதிர்கட்சி கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக கருதப்படும் என்பதால் சாதாரணக் கட்டணத்தை வசூலிக்க சத்தமில்லாமல் சுற்றறிக்கை.
சென்னை:
மதுரை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ரெயில்வே துறையில் கோவிட் காலத்தில் ஏற்றப்பட்ட கட்டண உயர்வை கைவிடக்கோரிய போராட்டத்திற்கு வெற்றி.
வெளிப்படையாக அறிவித்தால் எதிர்கட்சி கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக கருதப்படும் என்பதால் சாதாரணக் கட்டணத்தை வசூலிக்க சத்தமில்லாமல் சுற்றறிக்கை.
தேர்தல் வந்தால் தான் எளிய மனிதர்களின் கோரிக்கை மத்திய அரசின் நினைவுக்கு வருகிறது என கூறியுள்ளார்.
இரயில்வே துறையில் கோவிட் காலத்தில் ஏற்றப்பட்ட கட்டண உயர்வை கைவிடக்கோரிய போராட்டத்திற்கு வெற்றி.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) February 27, 2024
வெளிப்படையாக அறிவித்தால் எதிர்கட்சி கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக கருதப்படும் என்பதால் சாதாரணக் கட்டணத்தை வசூலிக்க
சத்தமில்லாமல் சுற்றறிக்கை.
தேர்தல் வந்தால் தான் எளிய மனிதர்களின்… pic.twitter.com/Bl508PUJxc