என் மலர்
நீங்கள் தேடியது "slug 226712"
- பேருந்தின் பின் படிக்கட்டு அருகே குழந்தையுடன் அமர்ந்திருந்த பெண் தலைக்குப்புற கைக்குழந்தையுடன் சாலையில் அலறி கொண்டு கீழே விழுந்தார்.
- போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் தனியார் பேருந்து ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடலூர்:
பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி வந்த தனியார் பஸ் நெல்லிக்குப்பம் அடுத்த கீழ்பட்டாம்பாக்கம் பகுதியில் அதிவேகமாக வந்த நிலையில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் மீது மோதாமல் இருக்க ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்தார்.
அப்போது பேருந்தின் பின் படிக்கட்டு அருகே குழந்தையுடன் அமர்ந்திருந்த பெண் தலைக்குப்புற கைக்குழந்தையுடன் சாலையில் அலறி கொண்டு கீழே விழுந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் குழந்தையையும், பெண்ணையும் மீட்க ஓடினர். இதனை கவனிக்காத ஓட்டுநர் மீண்டும் பஸ்சைஇயக்கத் தொடங்கினார்.
அப்போது அங்கு இருந்தவர்கள் கூச்சலிடத்தால் பஸ்சை நிறுத்தினார். அந்த குழந்தையையும் தாயையும் அங்கிருந்த பொதுமக்கள் காப்பாற்றி லேசான காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் நடைபெற்ற பிறகு அந்தப் பெண் புகார் எதுவும் கொடுக்காமல் சென்று விட்டார்.
இந்த நிலையில் இந்த பெண் பஸ்சில் இருந்து தலைக்குப்பற விழும் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த உத்தர விட்டதை தொடர்ந்து நெல்லிக்குப்பம் போலீசார் இந்த சம்பவத்தில் காயம் அடைந்த பெண் யார் என தேடி வந்தனர்.
நேற்றிரவு இந்த பெண் கடலூர் மாவட்டம் சின்னப்பகண்டை கிராமத்தை சேர்ந்த சித்தானந்தன். இவரது மனைவி ரம்யா (வயது30). இவர்களது பெண் குழந்தை கீர்த்தனா (வயது 3) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த பெண் வீட்டிற்கு சென்ற போலீசார் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.
அப்போது அதிவேகமாக பேருந்து வந்த நிலையில் ஓட்டுனர் திடீரென பிரேக் பிடித்ததால் கையில் குழந்தை வைத்திருந்த நிலையில் பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டு தான் வெளியில் விழுந்ததாக அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் கணவர் சித்தானந்தன் கொடுத்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் தனியார் பேருந்து ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பஸ்சை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டியது மற்றும் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தும் விதமாக செயல்பட்டதாக 2 பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை
- நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. இன்று கலெக்டர் அரவிந்த் பொதுமக்களை சந்தித்து மனுக்களை வாங்கினார். கலெக்டர் அலுவல கத்திற்கு மனு அளிக்க வந்த பொது மக்கள் பலத்த சோத னைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
தக்கலை ஒன்றிய பா.ஜனதா தலைவர் ஸ்ரீ பத்மநாபன் தலைமையில் ஏராளமானோர் வந்து மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
திங்கள்நகர்-தக்கலை செல்லும் குறிப்பிட்ட சில மினிபஸ்கள் அரசு அனுமதி பெற்ற கிராமப்புற வழித்தடங்களான பதியூர், பள்ளந்தட்டுவிளை, நெல்லியாரகோணம் வழி யாக இயங்காமல் ஆலங்காடு சந்திப்பு, மைலோடு, வட்டம் சந்திப்பு வழியாக இயக்கப்படுகின்றன.
இதனால் பதியூர், பள்ளந்தட்டுவிளை, நெல்லியார கோணம் பகுதிகளை சேர்ந்த பொது மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வெளியிடங்களுக்கு செல்ல 2 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே மாணவர்களின் கல்வி மற்றும் பொதுமக்க ளின் நலன் கருதி பதியூர், பள்ளந்தட்டுவிளை, நெல்லியாரகோணம் வழியாக மினி பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தனியார் பஸ் மோதி வியாபாரி பலியானார்.
- நாவினிப்பட்டி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டியைச் சேர்ந்தவர் சர்க்கரை முகமது (வயது 60). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை அவர் மோட்டார் சைக்கிளில் அதே பகுதியில் உள்ள ஆற்றுப்பாலத்தில் சென்றார்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த தனியார் பஸ் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அறிந்த நாவினிப்பட்டி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விபத்து பற்றி அறிந்த மேலூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயம் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான சர்க்கரை முகமது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சாலை விரிவாக்கப்பணி காரண மாக அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. எனவே சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இந்த வழியாக செல்லும் வாகனங்கள் மித வேகத்தில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபாரி மீது மோதிய பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த கோரிக்கைகளை போலீசார் ஏற்றுக் கொண்டதால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர்.
- திருப்பூரில் இருந்து கோவைக்கு நேற்ற மாலை ஒரு தனியார் பஸ் புறப்பட்டது.
- பெண் பஸ்சை விட்டு இறங்க மறுத்து தெக்கலூரில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அவினாசி :
திருப்பூரில் இருந்து கோவைக்கு நேற்ற மாலை ஒரு தனியார் பஸ் புறப்பட்டது. அதில் ஏறிய ஒரு பெண் தெக்கலூருக்கு டிக்கட் கேட்டுள்ளார். அதற்கு நடத்துனர் தெக்கலூரில் பஸ் நிற்காது என்று கூறியதாகவும் இதனால் அந்த பெண்ணுக்கும் கன்டக்டருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அந்த பெண் டிக்கெட் எடுப்பதற்காக கொடுத்த பணத்தை தூக்கிவீசியதாக கூறப்படுகிறது.
எனவே அப்பெண் பஸ்சை விட்டு இறங்க மறுத்து தெக்கலூரில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்த பொதுமக்கள் ஒன்றுகூடி தெக்கலூர்பைபாஸ் ரோட்டில் நின்று அந்த பஸ்சை நிறுத்தி சிறைபிடித்தனர். அப்போது டிரைவர் மற்றும் கன்டக்டர் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பின் பஸ் விடுவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- பேருந்து வசதி இல்லாததால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை பொதுமக்கள் பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
- போக்குவரத்துக் கழக அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வீரபாண்டி :
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பலவஞ்சிபாளையம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 1280 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கிருந்து ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் திருப்பூரில் உள்ள பள்ளிக்கும் கல்லூரிக்கும் அதே போல் ஏராளமான பொதுமக்கள் பனியன் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.
இப்பகுதியில் பேருந்து வசதி இல்லாததால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை பொதுமக்கள் பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு 54 வது வார்டு கவுன்சிலர் அருணாச்சலம் சொந்த முயற்சியால் திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியன்,4ம் மண்டல தலைவர் இல. பத்மநாதன் ஆகியோர் போக்குவரத்துக் கழக அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, குடிசை மாற்று வாரியம் அடுக்குமாடி குடியிருப்பு பொது மக்களுக்கு 3 மினி பேருந்துகளை ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை இயக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சி வஞ்சி நகர் பகுதியில் நடைபெற்றது.மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர் பத்மநாபன், 54 வது வார்டு கவுன்சிலர் அருணாச்சலம், 57 வது வார்டு கவுன்சிலர் கவிதா கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று மினி பேருந்துகளை துவக்கிவைத்தனர். இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பயணித்தனர் . முதல் நாள் அனைவரும் இலவசமாக பயணித்தனர்.
- அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும்.
- மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடத்தப்பட்டது
நாகர்கோவில்:
நாகர் கோவில் மாநக ராட்சிக்குட் பட்ட வடசேரி பஸ் நிலை யத்தில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண் காட்சி நேற்று நடைபெற் றது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரி வித்ததாவது:-
தமிழக அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக் காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதல் மைச்சர் தொடங்கிவைத்த திட்டங்களான, முதல மைச்சரின் விரிவான மருத் துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட் டம், மக்களை தேடி மருத்து வம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம், குறவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கி யது, கன்னியாகுமரிமாவட் டத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படை யில் சீரமைக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டது.
இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட் டம், விவசாயிகளுக்குபுதிய மின் இணைப்புகள் வழங் கும் திட்டம், கலைஞரின் வரும்முன் காப்போம் திட் டம், நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலை வாய்ப்புத்திட்டம், காணி பழங்குடியினர்களுக்கு நிலஉரிமை ஆணை வழங்கியது. மீனவர்களின் நலன் கருதி பனிக்கட்டி நிலை யங்களை திறந்து வைத்தல், மகளிர் சுய உதவிக்குழுவி னர்களுக்கு கடனுதவிகள் வழங்கியது. முதலமைச்ச ரின் ஊட்டம் தரும் காய்க றித் தோட்டம் திட்டம், புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டம்,
மின் சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணி யின்போது காலமானவர்க ளின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கியது. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதி வண்டிகள் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு திட் டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக அமைக் கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொது மக்கள் பார்வையிட்டு அர சின் திட்டங்களை தெரிந் துகொண்டு அனைத்துத் திட்டத்தின்கீழ் வழங்கப்ப டும் அரசு நலத்திட்ட உத விகளை பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவி த்தார்.
- சேலம் 5 ரோட்டில் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்த போலீஸ்காரரிடம் செல்போன் மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
- மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் செல்போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி நாச்சினாம்பட்டியை சேர்ந்தவர் வீராசாமி (வயது 35). இவர் சென்னை ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார்.
சொந்த ஊருக்கு வந்த வீராசாமி நேற்று முன்தினம் வேலைக்கு புறப்பட்டார். இரவு 11 மணி அளவில் சேலம் 5 ரோட்டில் பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர், அவரிடம் இருந்த ரூ.24 மதிப்புள்ள செல்போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வீராசாமி பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போனை பறித்து சென்ற 2 பேரை தேடி வருகின்றனர்.
- ராமன் புதூர் பகுதியில் நேற்று மாலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதிரடி சோதனை மேற்கொண்டார்.
- அந்த வழியாக வந்த பஸ்சில் மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்து கொண்டிருந்தனர்
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் அரசு பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வதால் விபத்துக்கள் நேரிட கூடும் என்றும் இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்திற்கு புகார்கள் சென்றது.
இதையடுத்து மாவட்டம் முழுவதும் காலை, மாலை நேரங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தர விட்டார். மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
நாகர்கோவில் ராமன் புதூர் பகுதியில் நேற்று மாலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதிரடி சோதனை மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக வந்த பஸ்சில் மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்து கொண்டிருந்தனர். உடனே அந்த பஸ்சை தடுத்து நிறுத்தினார். பஸ்சில் உள்ளே இடமிருந்த பிறகும் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த மாணவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அறிவுரைகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள்.அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். போலீசாரின் சோதனையின்போது பள்ளி மாணவர்களும் சிக்கினார்கள். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அந்த மாணவர்களிடம் பேசினார்.அவர்களின் வயது குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அப்போது ஒரு மாணவனுக்கு 18 வயதுக்கு குறைவாகவே இருந்தது. உடனே அந்த மாணவரை எச்சரித்தார். வாகன ஓட்டும்போது ஹெல்மெட் லைசென்ஸ் கட்டாயம் இருக்க வேண்டும். சாலை விதிகளை கடை பிடிக்க வேண்டும். சிறு வயதிலேயே சாலை விதிகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக வாகனம் ஓட்டுவது நமக்கு நல்லதல்ல என்று அறிவுரைகளை வழங்கினார்.
ஹெல்மெட் மற்றும் சாலை விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கவும் அவர் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
- டிரைவர் தாக்கப்பட்டதாக கூறி போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் போராட்டம்
- மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் காஞ்சாம்புறம் ஆலங்கோடு பகுதியை சேர்ந்த சாமு வேல் (வயது 25), தனது மனைவி அபிதா(20) வுடன் மார்த்தாண்டம் மார்க்கெ ட்டுக்கு பொருட்கள் வாங்க இருசக்கர வாகனத்தில் சென்றார்.மார்க்கெட் பகுதியில் சென்ற போது, அப்பகுதி யில் சென்ற அரசு பஸ் சாமுவேலின் இருசக்கர வாகனத்தில் மோதியது.இந்த விபத்தில் சாமு வேலின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதைய டுத்து சாமுவேல், பஸ் டிரைவருடன் வாக்கு வாதம் செய்தார். அப்போது சாமுவேல் மற்றும் அவரது மனைவிக்கு பஸ் டிரைவர் கொலை மிரட்டல் விடுத்த தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் படுகாய மடைந்த சாமுவேலை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ள னர்.இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி அரசு பஸ் டிரைவர் கொல்லங்கோடு அணுகோடு பகுதியைச் சேர்ந்த ஏசுதாஸ் (55) என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையில் டிரைவர் ஏசுதாஸ், தான் தாக்கப்பட்டதாகவும், இதனால், குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மார்த்தாண்டம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் டிரைவர் ஏசுதாசுக்கு ஆதரவாக குழித்துறை பணிமனை சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பணி யாளர்கள் போராட்டம் நடத்தினர்.
- இன்று காலை பரிதாப சம்பவம்
- ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
நாகர்கோவில் வடசேரி யில் இருந்து நெல்லைக்கு அரசு சொகுசு பேருந்து இன்று காலை புறப்பட்டுச் சென்றது.பஸ்ஸை டிரைவர் ராதாகிருஷ்ணன் ஓட்டினார்.
வெள்ளமடம் பகுதியில் பஸ் சென்ற போது எதிர்பாராதவிதமாக ரோட்டோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த 85 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் மீது பஸ் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர்ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆரல்வாய் மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் பலியான மூதாட்டி வெள்ள மடம் பகுதியைச் சேர்ந்த செண்பக வடிவு (வயது 85) என்பது தெரிய வந்தது.
அவர் அந்த பகுதியில் தனது சகோதரி வீட்டில் தங்கி இருந்தார்.இன்று காலை வீட்டிலிருந்து வெளியே வந்த போது அவர் மீது பஸ் மோதி பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது. மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 2 டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர்
- பள்ளி வாகனத்தில் மாணவர்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரிக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமானோர் சுற்றுலா வருகின்றனர்.
அவர்கள் வேன், கார், பஸ் என பல வாகனங்களில் வருவதால் கன்னியாகுமரி மட்டுமின்றி குமரி மாவட்டம் முழுவதுமே போக்குவரத்து நெரிசல் காணப்படும். இந்த நிலையில் கன்னியாகுமரி அருகே உள்ள சுவாமிநாத புரத்தில் சுற்றுலா பயணி களை ஏற்றிக் கொண்டு மினி பஸ் புறப்பட்டது.
இந்த பஸ் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே பள்ளி வேன் வந்தது. எதிர்பாராதவிதமாக அந்த வேன், சுற்றுலா பஸ் மீது பயங்கரமாக மோதியது.
இதில்2வாகனங்களும் பலத்த சேதமடைந்தது. பள்ளி வாகன டிரைவர் பாக்கியராஜ் மற்றும் சுற்றுலா பஸ் டிரைவர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதிர்ஷ்டவசமாக பள்ளி வாகனத்தில் மாணவர்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அரசு பஸ்சில் பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
- கால்கள் மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறியது.
பல்லடம் :
கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் அழகம்மாள் (வயது70). இவர் சேலத்தில் வசிக்கும் மகன் வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட்டு பேத்தி நிவேதா, பேரன் பரணிதரன் ஆகியோருடன் நேற்று ஈரோட்டிலிருந்து பொள்ளாச்சிக்கு செல்லும் அரசு பஸ்சில் பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அந்த பஸ் பல்லடம் பஸ் நிலையத்தில், பயணிகளை இறக்கி விட்டு புறப்பட தயாரானது. அப்போது பஸ் நிலையத்தில் உள்ள சுகாதார வளாகத்திற்கு சென்று வருவதாக பேரன், பேத்தியிடம் கூறிவிட்டு பஸ் புறப்பட்டது கவனிக்காமல், பஸ்சில் இருந்து அழகம்மாள் இறங்கினார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவரின் கால்கள் மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் - பக்கம் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பல்லடம் பஸ் நிலையத்தினுள் பிளாஸ்டிக்கில் ஆன வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது. அது தற்போது உடைந்து போனதால் பஸ்கள், மற்றும் வாகனங்கள், அளவுக்கு அதிகமான வேகத்தில் செல்வதால் விபத்து ஏற்படுகிறது. எனவே பஸ் நிலையத்தில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.