என் மலர்
நீங்கள் தேடியது "கள்ளநோட்டு"
- போலீசார் வருவதை அறிந்த செல்வம் மற்றும் ஒரு கும்பல் தப்பி ஓடியது.
- முக்கிய குற்றவாளியான செல்வம் உள்பட 11 பேர் தலைமறைவாகி விட்டனர்.
திட்டக்குடி:
கள்ளநோட்டு அச்சடித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த அதர் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது39). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளராக இருந்து வந்தார்.
இவருக்கும் ஆவட்டி கிராமத்தை சேர்ந்த சங்கருக்கும் முன் விரோத வழக்கு ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் இருந்து வருகிறது.
இது தொடர்பாக விசாரணை நடத்த நேற்று அதிகாலை 5.15 மணிக்கு செல்வம் வீட்டிற்கு ராமநத்தம் போலீசார் சென்றனர். அங்கு செல்வம் இல்லாததால் வயலில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர்.
போலீசார் வருவதை அறிந்த செல்வம் மற்றும் ஒரு கும்பல் தப்பி ஓடியது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வீட்டை சோதனை செய்தனர்.
அங்கு கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் எந்திரம், துப்பாக்கி, போலீஸ் சீருடை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து செல்வத்தின் வயலில் உள்ள வீட்டிற்கு வந்த ஒருவரையும், அதர்நத்தம் வீட்டிற்கு வந்த மற்றொருவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் திட்டக்குடி ஆலந்தூர் நவீன் ராஜா (29), அதர்நத்தம் கார்த்திகேயன் (28) என்பதும் இவர்ககள் இருவரும் 2 ஆண்டுகளாக செல்வத்திடம் கார் டிரைவராக வேலை செய்ததும் தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து ரூ. 85 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 4 வாக்கி டாக்கி, 2 ஏர் கன், லேப்டாப், போலீஸ் சீருடை, ரிசர்வ் வங்கி முத்திரரை, கார், லாரிகள், ஜே.சி.பி.எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் நவீன் ராஜா, காரத்திகேயன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான செல்வம் உள்பட 11 பேர் தலைமறைவாகி விட்டனர். கள்ள நோட்டு அச்சடிப்பு வழக்கில் செல்வம் தொடர்பில் இருந்ததால் அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் செல்வத்துக்கு சென்னையிலும் ஒரு தனியார் கம்பெனி உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கும் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கள்ள நோட்டு அச்சடித்த கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
- சம்பவ இடத்தில் சோதனை நடத்திய போலீசார் அங்கிருந்து ரூ.85,000 கள்ளநோட்டுகள், வாக்கி டாக்கிகள், ஏர்கன், பிஸ்டல் ஏர்கன், கவுன்டிங் மிஷினை பறிமுதல் செய்தனர்.
- தலைமறைவான செல்வத்தின் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளர் செல்வத்திற்கு சொந்தமான இடத்தை வாடகைக்கு எடுத்த நபர்கள் அங்கு கள்ளநோட்டுகள் அச்சடித்துள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்தில் சோதனை நடத்திய போலீசார் அங்கிருந்து ரூ.85,000 கள்ளநோட்டுகள், வாக்கி டாக்கிகள், ஏர்கன், பிஸ்டல் ஏர்கன், கவுன்டிங் மிஷின் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர்.
மேலும் தலைமறைவான செல்வத்தின் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் வி.சி.க. கடலூர் மாவட்ட பொருளாளர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார்.
கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் செல்வத்தை நீக்கி திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார்.
- சோதனையில் ரூ.85,000 கள்ளநோட்டுகள், வாக்கி டாக்கிகள், ஏர்கன், பிஸ்டல் ஏர்கன், கவுன்டிங் மிஷின் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
- விளைநிலத்தில் தற்காலிகமாக செட் அமைத்து கள்ளநோட்டுகள் அச்சடித்த கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் அதர்நத்தம் கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான மேற்கு மாவட்ட பொருளாளர் செல்வம் விளைநிலத்தை வாடகைக்கு எடுத்த நபர்கள் அங்கு கள்ளநோட்டுகள் அச்சடித்துள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு அதிரடியாக நுழைந்து போலீசார் சோதனை நடத்தினர்.
சோதனையில் ரூ.85,000 கள்ளநோட்டுகள், வாக்கி டாக்கிகள், ஏர்கன், பிஸ்டல் ஏர்கன், கவுன்டிங் மிஷின் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
சம்பவ இடத்தில் காவல்துறை சீருடை, ரிசர்வ் வங்கி முத்திரை உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றிய காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளைநிலத்தில் தற்காலிகமாக செட் அமைத்து கள்ளநோட்டுகள் அச்சடித்த கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
நிலத்தின் உரிமையாளரான வி.சி.க. நிர்வாகி செல்வம் தலைமறைவானதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
- அத்திப்பள்ளி பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள்.
- நெல்லையை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு :
கர்நாடகம்-தமிழக எல்லையில் பெங்களூரு அருகே உள்ள சித்தாபுரா பகுதியில் நல்லக்கனி (வயது 53) என்பவர், நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அதே அலுவலகத்தில் சுப்பிரமணியன் (60) என்பவர் ஆடிட்டராக இருந்து வந்தார்.
இவர்கள் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் ஒரு சதவீத வட்டிக்கு கடன் தருவதாகவும், நகைக்கு கடன் தருவதாகவும் கூறினார்கள். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் சித்தாபுரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதற்கிடையில், பெங்களூருவில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்காக காரில் சிலர் வருவதாக பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்குள்ள அத்திப்பள்ளி பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள்.
அப்போது ஒரு காரில் கத்தை, கத்தையாக 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் கள்ளநோட்டுகளுடன் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதில் மொத்தம் ரூ.1 கோடியே 28 லட்சத்து 68 ஆயிரத்திற்கு கள்ளநோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தார்கள்.
விசாரணையில் அவர்கள் சித்தாபுராவில் நிதி நிறுவனம் நடத்தி வந்த நல்லக்கனி (வயது 55), சுப்பிரமணியன் மற்றும் அஜய்சிங் (48) என்பதும், இவர்கள் நெல்லையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
நல்லக்கனி, கள்ள நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விடும் கும்பலின் தலைவன் ஆவார். கள்ள நோட்டுக்களை பெங்களூருவுக்குள் கொண்டு வந்து, அவற்றை கொடுத்து அதற்கு பதிலாக நல்ல ரூபாய் நோட்டுக்களை பெற்று செல்வதற்காக முடிவு செய்திருந்தார்.
கள்ளநோட்டுகளை மாற்றுவதற்காக சித்தாபுராவில் அலுவலகம் அமைத்திருந்தார். அப்பகுதி மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன், நகைக்கடன் கொடுப்பதன் மூலமாக கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டு, கடன் வசூலிக்கும்போது, அவர்களிடம் இருந்து நல்ல ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் 3 பேரும் திட்டமிட்டு இருந்தனர்.
இதற்காக தாங்கள் அச்சடித்து வைத்திருந்த கள்ளநோட்டுகளை காரில் கொண்டு வந்தபோது போலீசாரிடம் சிக்கி கொண்டனர் என்பது தெரியவந்தது. கைதான 3 பேரிடமும் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.
- கம்பம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் அவ்வப்போது கள்ளநோட்டுகள் புழக்கம் அதிகரித்து வந்தது.
- கம்பத்தில் போலி முத்திரை தாள் மற்றும் கள்ளநோட்டு கும்பல் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் தங்கதுரை, பாலமுருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் கம்பம் மெட்டு ரோடு 18-ம் கால்வாய் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட ஒரு ஜீப்பை மடக்கி சோதனையிட்டனர். அதில் அவர்கள் போலியான 5000 ரூபாய் மதிப்புள்ள 4 முத்திரை தாள்களை வைத்திருந்தது தெரியவந்தது.
ஜீப்பில் வந்த கேரளமாநிலம் இடுக்கி மாவட்டம் உடும்பன் சோலையை சேர்ந்த முகமதுசியாது(41), சிரட்டவேலி பகுதியை சேர்ந்த விபின்தாமஸ்(36) ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கம்பம் 15-வது வார்டு ஓடைக்காரத்தெருவில் உள்ள கோபிகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் போலியான முத்திரை தாள்களை அச்சடித்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கிருந்த மேலும் சில போலி முத்திரை தாள்களை கைப்பற்றினர். இதுமட்டுமின்றி அந்த வீட்டில் இருந்த முத்திரை தாள்கள் அச்சடிக்க பயன்படுத்திய மிசின், பிரிண்டர், ஜெராக்ஸ் மிசின், டோனர், ஸ்டெபிளேசர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
போலி முத்திரை தாள்களை போல கள்ளநோட்டுகள் தயாரித்தும் இவர்கள் புழக்கத்தில் விட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. கம்பம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் அவ்வப்போது கள்ளநோட்டுகள் புழக்கம் அதிகரித்து வந்தது. எனவே இந்த கும்பலுக்கும் அதில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். மேலும் இவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? கள்ளநோட்டுகளை யார் யாருக்கு கொடுத்து புழக்கத்தில் விட வைத்துள்ளனர் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்பத்தில் போலி முத்திரை தாள் மற்றும் கள்ளநோட்டு கும்பல் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வரும் நிலையில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
- பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த லோகநாதன் என்பது தெரிந்தது.
- பிடிபட்ட 2 பேரின் வீடுகளில் நடத்திய சோதனையில் மேலும் ரூ. 2 லட்சத்து 500 கள்ள நோட்டுகள் சிக்கியது.
திருப்போரூர்:
திருப்போரூர் அருகே உள்ள நாவலூரில் மதுக்கடை உள்ளது. இங்கு வந்த வாலிபர் ஒருவர் 500 ரூபாய் நோட்டை கொடுத்து மதுபாட்டில் கேட்டார். அவர் கொடுத்த ரூபாய் நோட்டு மீது சந்தேகம் அடைந்த ஊழியர் பரிசோதித்தபோது அது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது.
இதையடுத்து மக்கடை ஊழியர்கள் அவரை பிடிக்க முயன்றபோது அந்த வாலிபர் தான் ஓட்டிவந்த ஷேர் ஆட்டோவை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த ஆட்டோவை எடுக்க வந்தபோது மதுக்கடை ஊழியர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த லோகநாதன் என்பது தெரிந்தது. பின்னர் அவரை தாழம்பூர் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்து போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவரிடம் நடத்திய விசாரணையில் கூட்டாளியான உத்தண்டி பகுதியை சேர்ந்த எபினேசனுடன் சேர்ந்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து எபினேசனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பிடிபட்ட 2 பேரின் வீடுகளில் நடத்திய சோதனையில் மேலும் ரூ. 2 லட்சத்து 500 கள்ள நோட்டுகள் சிக்கியது.
கைதான இருவரும் செங்கல்பட்டை சேர்ந்த ஒருவரிடம் இருந்து கள்ளநோட்டை வாங்கியதாக தெரிவித்து உள்ளனர். அவரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு கள்ளநோட்டுகள் கிடைத்தது எப்படி? எவ்வளவு கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டனர். இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? யார்? என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மணப்பாறை அருகே காரில் கொண்டு செல்லப்பட்ட போது பிடிபட்டது
- 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை
மணப்பாறை,
திருச்சி மாவட்டம், மணப்பாறைய அடுத்த வையம்பட்டியில் கார் ஒன்றில் அதிக அளவில் கள்ள நோட்டு கொண்டு செல்வதாக வையம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சப் இன்ஸ்பெக்டர் தங்கசாமி தலைமையில் போலீசார் சம்மந்தப்பட்ட சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் கட்டு கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் காரை பணத்துடன் பறிமுதல் செய்ததோடு காரில் வந்த 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் காரில் பணம் கொண்டு வந்தது கோவை கேகே புதூரை சேர்ந்த பார்த்தசாரதி வயது 52, கணவாய் பகுதியை சேர்ந்த டிரைவர் சதீஷ் ஆகியோர் என்பதும் வையம்பட்டியில் செல் போன் கடை நடத்தி வரும் தங்கவேல் என்பவருக்கு கொண்டு வந்ததும் அவர் கடை முன்பு தான் போலீசார் பிடித்ததும் விசாரணை வெளிவந்துள்ளது. பிடிபட்ட பணம் அனைத்தும் கள்ள நோட்டு நோட்டு என்பதும் கேரளாவை சேர்ந்த ஒரு பட தயாரிப்பாளர் கொடுத்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது
- வீட்டு உரிமையாளர் தங்கராஜிடம் போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
- வீட்டிற்கு எப்போது வருகிறார், போகிறார் என்பது தெரியவில்லை. அவரது நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் புகார் அளித்தேன்.
கோவை:
குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் ஹரேந்திரன் என்ற எர்வின் எவின்ஸ் (வயது49). இவர் ஓமியோபதி டாக்டர் எனக் கூறி கோவை வெள்ளலூர் ராமசாமி கோனார் நகரில் உள்ள தங்கராஜ் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.
இந்த நிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள தலையோலபறம்பு போலீசார் கொள்ளை வழக்கு தொடர்பாக எர்வினை கைது செய்து அழைத்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் தங்கராஜ், கைதான எர்வின் எவின்ஸ் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர்.
சோதனையின் போது வீட்டில் போலி தங்க கட்டிகள், மற்றும் ஒரு புறம் அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள், மற்றும் 3 ரப்பர் ஸ்டாம்பு, ஒரு துப்பாக்கி (ஏர்கன்) ஆகியவை இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வீட்டு உரிமையாளர் தங்கராஜிடம் போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கடந்த 45 நாட்களுக்கு முன்பு எர்வின் எவின்ஸ் வாடகைக்கு வந்தார். அவரிடம் உங்களது மனைவி, குழந்தைகள் எங்கே என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பின்னர் வருவார்கள் என்று கூறினார்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த ஒன்றரை லட்சம் ரூபாயை காணவில்லை என என்னிடம் கேட்டார். அதற்கு நான் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டியது தானே என்றேன்.
அதற்கு அவர் வேண்டாம் என கூறிவிட்டார். மேலும் வீட்டிற்கு எப்போது வருகிறார், போகிறார் என்பது தெரியவில்லை. அவரது நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் புகார் அளித்தேன்.
இவ்வாறு அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து போத்தனூர் போலீசார் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட போலி தங்க கட்டிகள் துப்பாக்கி ஒரு பக்கம் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் எர்வினுக்கு எப்படி வந்தது? என விசாரித்து வருகிறார்கள். எர்வின் போலி டாக்டராக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். எனவே கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ள அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் கோவை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
- டிப்-டாப் வாலிபர் காரில் ஏறியதும் கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள மதுபாருக்கு சென்று மது குடித்தார்.
- கோயம்பேடு பஸ்நிலைய போலீசார் டிரைவர் சுதிரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போரூர்:
கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த மர்மநபர் ஒருவர் தான் கீழ்ப்பாக்கம்அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் என்றும் ஆன்மிக சுற்றுலா செல்ல வேண்டும் என்றும் கூறி ஆந்திர மாநிலம் கூடூரில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் காரை பதிவு செய்தார். இதையடுத்து டிரைவர் சுதிர் என்பவர் காருடன் கீழ்ப்பாக்கம் பகுதிக்கு வந்தார். அங்கு தயாராக நின்ற டிப்-டாப் வாலிபர் காரில் ஏறியதும் கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள மதுபாருக்கு சென்று மது குடித்தார். மேலும் உடன் வந்த டிரைவர் சுதிருக்கு ஏராளமான அசைவ உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிட வைத்தார்.
சிறிது நேரத்தில் அவர், தன்னுடன் பணிபுரிந்து வரும் பெண் டாக்டர் ஒருவருக்கு அவசர தேவைக்காக உடனே "கூகுள் பே" மூலம் ரூ.9ஆயிரம் அனுப்ப வேண்டும். ஏ.டி.எம்.ல் பணம் எடுத்து தந்து விடுகிறேன் என்று கூறினார். இதையடுத்து சுதிர் தனது உரிமையாளரிடம் போன் செய்து வாலிபர் கொடுத்த எண்ணிற்கு "கூகுள் பே" மூலம் ரூ.9 ஆயிரம் அனுப்பினார்.
பின்னர் வெளியே சென்ற அந்த நபர் பணத்துடன் திரும்பி 500 ரூபாய் நோட்டுக்களாக ரூ.9 ஆயிரம் பணத்தை டிரைவர் சுதிரிடம் கொடுத்தார். சிறிது நேரத்தில் அவர் அங்கிருந்து நைசாக சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து பாரில் மதுகுடித்த பில் தொகை ரூ.2 ஆயிரம் கட்ட வேண்டும் என்று ஊழியர்கள் தெரிவித்தனர். உடனே சுதிர் தன்னிடம் இறந்த ரூ.500 நோட்டுகளை கொடுத்தபோது அவை கள்ளநோட்டுகள் என்பது தெரிந்தது. டாக்டர் போல் நடித்து நூதனமுறையில் கள்ளநோட்டுகளை கொடுத்துவிட்டு டிப்-டாப் வாலிபர் தப்பி சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து கோயம்பேடு பஸ்நிலைய போலீசார் டிரைவர் சுதிரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரிடம் இருந்த கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதிகளில், 100 மற்றும் 500 ரூபாய் கள்ளநோட்டு புழக்கத்தில் உலா வருகிறது.
- கள்ளநோட்டு புழக்கம் கள்ளநோட்டு பற்றி அறியாத பாமர மக்களிடம், அதிக அளவில் உலா வருகிறது.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சுற்று வட்டார பகுதிகளில், 100 மற்றும் 500 ரூபாய் கள்ளநோட்டு புழக்கத்தில் உலா வருகிறது.
குறிப்பாக சிறு வியாபாரிகள், காய்கறி விற்பனையாளர்கள், கூலி தொழில் செய்யும் நபர்கள், செங்கல்சூளைகளுக்கு வேலைக்கு செல்லும் ஆட்கள் போன்ற நபர்களுக்கு, தெரியாமல் அவர்கள் கையில் கள்ளநோட்டுகள் வந்து விடுகிறது.
இதனை அறியாத பாமர மக்களில் ஒருவர், நேற்று ஊத்தங்கரை, திருவண்ணாமலை சாலையில் உள்ள அரசு மதுபான கடையில், மதுபானம் வாங்க பணம் கொடுத்துள்ளார்.
அதில் 100 ரூபாய் நோட்டு கள்ளநோட்டாக இருந்ததை கண்ட மதுக்கடை பணியாளர், உடனடியாக நோட்டின் மீது பேனாவில் கள்ளநோட்டு என எழுத்தால் எழுதி அவரிடமே ஒப்படைத்தார்.
கள்ளநோட்டு பற்றி அறியாத அந்த நபர் செங்கல்சூளையில் கூலி வேலை செய்துகொண்டு வந்த பணம் கள்ள நோட்டு என கூறியதால், மிகவும் மன வருத்தத்துடன் திரும்பி சென்றார்.
இதுபோன்ற கள்ளநோட்டு புழக்கம், ஊத்தங்கரை பகுதியில், கள்ளநோட்டு பற்றி அறியாத பாமர மக்களிடம், அதிக அளவில் உலா வருகிறது.
இதனால் கூலி தொழிலாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், உரிய நடவடிக்கை எடுத்து கள்ளநோட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ரூபாய் நோட்டுக்களை வாங்கிப் பார்த்த அண்ணாதுரை அவை கள்ள நோட்டுகள் என்பதை தெரிந்து கொண்டார்.
- கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ராஜகணபதி நகரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (40). இவர் அப்பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது கடைக்கு வந்த நபர் ரூ.200 நோட்டுகள் 3 கொடுத்து இறைச்சி வாங்கினார்.
ரூபாய் நோட்டுக்களை வாங்கிப் பார்த்த அண்ணாதுரை அவை கள்ள நோட்டுகள் என்பதை தெரிந்து கொண்டார். இதையடுத்து அவர் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் கரூர் மாவட்டம், பள்ளிப்பட்டியை சேர்ந்த உபைஸ் அலி (24) என்பதும், இவர் மேட்டூர் சதுரங்காடில் உள்ள காஜா மொய்தீன் (40) என்பவருக்கு சொந்தமான பேன்சி ஸ்டோரில் வேலை பார்த்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து சம்பந் தப்பட்ட பேன்சி ஸ்டோரில் மேட்டூர் டி.எஸ்.பி மரியமுத்து மற்றும் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர்.
இதில் கலர் பிரிண்டரை பயன்படுத்தி கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது கண்டுபி டிக்கப்பட்டது. இதையடுத்து கள்ள நோட்டுகள் அச்சடிக்க பயன்படுத்திய செல்போன, கலர் பிரிண்டர், கள்ள நோட்டுகள், காகிதத் தாள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விபரம் வருமாறு:-
மேட்டூர் காவேரி நகரை சேர்ந்த முகமது அலீபா மகனான காஜாமைதீன் (40) மேட்டூரில் 3 இடங்களில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.
இவருக்கு ரூ.20 லட்சம் கடன் ஏற்பட்டது. இந்த கடனை அடைப்பதற்காக திட்டமிட்ட அவர் தனது உறவினரான தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி மஜீத் தெருவை சேர்ந்த முகமது பாபு மகன் அப்துல் அகீம் (24), தனது கடையில் வேலை பார்த்த உபைஸ் அலி (24) என்பவரையும் மேட்டூருக்கு அழைத்து வந்துள்ளார்.
பின்னர் 3 பேரும் மேட்டூர் சதுரங்காடியில் பேன்ஸி ஸ்டோரில் கலர் பிரிண்டர் ஒன்றை வைத்து, அதில் 200 ரூபாய் நோட்டுகளை செல்போன் செயலி மூலமாக நகலெடுத்து, மேட்டூர் முழுவதும் புழக்கத்தில் விட்டுள்ளனர்.
நேற்று காஜாமைதீன் நகல் எடுக்கப்பட்ட 200 ரூபாய் நோட்டுகளை உபைஸ் அலியிடம் கொடுத்து நாட்டுக் கோழி வாங்கி வரும்படி அனுப்பி வைத்தார்.
இந்த நோட்டுகள் போலியானவை என இறைச்சிக் கடைக்காரர் கண்டுபிடித்து விட்டதால் இந்த கும்பல் சிக்கியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து கடை உரிமையாளர் காஜா மைதீன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.
மேலும் இவர்களுக்கு கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்றும், எவ்வளவு கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டனர் என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிரசாரம் முடிந்த பிறகு தன்னுடன் வந்தவர்களுக்கு வேட்பாளர் ஒவ்வொருவருக்கும் 100 ரூபாய் நோட்டுகளை கொடுத்தார்.
- தேர்தல் பிரசாரத்திற்கு வந்தவர்களுக்கு ரூ.300 வழங்கிய வேட்பாளர்கள் தற்போது 500 ரூபாய் வழங்கி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திராவில் வாக்கு சேகரிப்பின் போது தங்களது பலத்தை காட்ட பணம் கொடுத்து ஆட்களை அழைத்து செல்கின்றனர்.
நந்தியாலா மாவட்டம் நந்தி கோட்கூரில் நேற்று அரசியல் கட்சி வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தன்னுடன் தேர்தல் பிரசாரத்திற்கு வருபவர்களுக்கு ரூ.200 தருவதாக அழைத்துச் சென்றுள்ளார். பிரசாரம் முடிந்த பிறகு தன்னுடன் வந்தவர்களுக்கு வேட்பாளர் ஒவ்வொருவருக்கும் 100 ரூபாய் நோட்டுகளை கொடுத்தார்.
வேட்பாளர் கொடுத்த ரூபாய் நோட்டை வீட்டிற்கு எடுத்துச் சென்று பார்த்தபோது அது கள்ளநோட்டு என தெரிய வந்தது. இதனால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வேட்பாளரிடம் கேட்டபோது நான் ஒரிஜினல் நோட்டுகளை தான் கொடுத்தேன் என கூறினார்.
மேலும் சிலர் வேட்பாளர் கொடுத்தது கள்ள நோட்டு என தெரியாமல் கடையில் கொடுத்து மாற்றினர். இது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திராவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே அரசியல் கட்சியினர் வாக்காளர்களை கவருவதற்காக பணம் மற்றும் பரிசு பொருட்களை தாராளமாக விநியோகம் செய்து வருகின்றனர்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தவர்களுக்கு ரூ.300 வழங்கிய வேட்பாளர்கள் தற்போது 500 ரூபாய் வழங்கி வருகின்றனர்.