என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பட்டியல்"
- தேர்தல் வாக்குறுதிப்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்ந்திட வேண்டும். உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும்.
- பள்ளிகளில் சுகாதாரத்தை மேம்படுத்த முழு நேர தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்.
ராசிபுரம்:
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ராசிபுரம் ஒன்றிய நிர்வாகிகள் தேர்தல், ராசிபுரத்தில் உள்ள தனியார் நடுநிலைப் பள்ளியில் நடந்தது. ஒன்றிய செயலாளர் கதிரேசன், நாமகிரிப்பேட்டை முருகேசன் ஆகியோர் தேர்தலை நடத்தினர்.
இதில் ஒன்றிய பொறுப்பாளர்களாக 21 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிறகு நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் குணவதி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் லட்சுமி வரவேற்றார். மாவட்ட மகிளர் அணி அமைப்பாளர் பாரதி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சங்கர், மாநில பொருளாளர் முருக செல்வராசன், பொதுக்குழு உறுப்பினர் தியாகராஜன், தணிக்கை குழு உறுப்பி னர் தண்டபாணி, நாமகி ரிப்பேட்டை முன்னாள் ஒன்றிய தலைவர் சிதம்பரம், இலக்கிய அணி அமைப்பாளர் ஜெயவேல் ஆகியோர் பேசினர்.
இதில், தேர்தல் வாக்கு றுதிப்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்ந்திட வேண்டும். உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் மற்றும் முழுநேர கணினி இயக்குபவர் நியமனம் செய்ய வேண்டும்.
பள்ளிகளில் சுகாதா ரத்தை மேம்படுத்த முழு நேர தூய்மை பணியா ளர்களை நியமிக்க வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஒன்றிய பொருளாளர் ஆரோக்ய மேரி நன்றி கூறினார்.
- சேலம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படது. தொடர்ந்து 1.1.2023-ந் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டு படிவங்கள் கடந்த 8-ந்தேதி வரை வரை பெறப்பட்டன.
- அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி செய்து வருகிற ஜனவரி 5-ந்தேதி அன்று இறுதி வாக்காளர் பட்டி யல் வெளியிடும் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
சேலம்:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படது. தொடர்ந்து 1.1.2023-ந் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டு படிவங்கள் கடந்த 8-ந்தேதி வரை வரை பெறப்பட்டன.
அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி செய்து வருகிற ஜனவரி 5-ந்தேதி அன்று இறுதி வாக்காளர் பட்டி யல் வெளியிடும் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் பணிக்காக நியமிக்கப்பட்ட மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா, மாவட்ட கலெக்டர் கார்மேகம் முன்னிலையில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், அனைத்து உதவி பதிவு அலுவலர்கள் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர்கள் ஆகியோ ருடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்துக்காக பெறப்பட்ட படிவங்கள் குறித்தும், களப்பணி குறித்தும், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரால் மேல்த ணிக்கை செய்யப்பட்ட சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான படிவங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த படிவங்கள் இறுதி செய்யப்பட்டு பிழையில்லா வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஷோபனா அறிவுரை வழங்கினார். கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர்கள் விஷ்ணு வர்த்தினி, சரண்யா,
சவும்யா, தணிகாஜலம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சரவணன், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்களார் பதிவு அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை மாநில செயலாளர் அடையாறு பாஸ்கர் வெளியிட்டார்.
- 4 சட்டமன்ற தொகுதியிலும் தலா 100 கொடிக்கம்பங்கள் கல்வெட்டுடன் நிறுவ வேண்டும் என்று கூறினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் ஜக்காரியா தலைமையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் ராமநாதபுரத்தில் நடந்தது. இதில் ஏராளமானோர் போட்டியிட்டனர்.
தற்போது முதற்கட்டமாக மாவட்டத்தில் நகரம் மற்றும் வட்டார அளவிலான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு ள்ளனர்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளரும், ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளருமான அடையாறு பாஸ்கர் ராமநாதபுரத்தில் நகர் மற்றும் வட்டார தலை வர்களின் புதிய பட்டியலை வெளியிட்டார்.
அதன்படி ராமநாதபுரம் நகர் தலைவராக கோபி, ராமேசுவரம் நகர் தலைவராக ராஜீவ் காந்தி, பரமக்குடி நகர் தலைவராக அஹமத் கபீர், கீழக்கரை நகர் தலைவராக அஜ்மல் கான் ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வட்டார அளவிலான தலைவர்களாக திருவா டானை வடக்கு தட்சணா மூர்த்தி, திருவாடானை தெற்கு கணேசன், ஆர்.எஸ்.மங்கலம் வடக்கு மனோகரன், ஆர்.எஸ்.மங்க லம் தெற்கு சுப்பிரமணியன், ராமநாதபுரம் சேகர், மண்ட பம் மேற்கு அன்வர்அலி.
மண்டபம் கிழக்கு செல்லசாமி, திருப்புல்லாணி கிழக்கு சேதுபாண்டியன், திருப்புல்லாணி மேற்கு கந்தசாமி, முதுகுளத்தூர் கிழக்கு ராமர், முதுகுளத்தூர் மேற்கு புவனேஸ்வரன், கடலாடி கிழக்கு தனசேகரன், கடலாடி மேற்கு அப்துல் சத்தார், கடலாடி வடக்கு சுரேஷ் காந்தி, கமுதி தெற்கு கோவிந்தன், கமுதி வடக்கு ஆதி, பரமக்குடி மேற்கு சுப்பிரமணியன், பரமக்குடி கிழக்கு வேலுசாமி, நயினார் கோவில் கார்மேகம், போக லூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்து அடையாறு பாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதியிலும் தலா 100 கொடிக்கம்பங்கள் கல்வெட்டுடன் நிறுவ வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி ராமநாதபுரம் தொகுதிக்கு முன்னாள் மாவட்ட தலைவர் செல்லதுரை அப்துல்லா, திருவாடானை தொகுதிக்கு கருமாணிக்கம் எம்.எல்.ஏ, முதுகுளத்தூர் தொகுதிக்கு மாவீரன் வேலுச்சாமி, பரமக்குடி தொகுதிக்கு செந்தாமரை கண்ணன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு அவர்கள் தலைமையில் தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப்பணி ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தொடங்கப்பட உள்ளது அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் ஜனவரி 15-ந்தேதிக்குள் குறிப்பிட்ட அளவில் கொடி கம்பங்கள் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை கொண்டாட வேண்டும்.
- வாக்குச்சாவடி முகவர் பட்டியல் வழங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. மாநகர ஒன்றிய, பேரூர், பகுதி செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் இறைவன் தலைமையில் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகர் எம்.எல்.ஏ, எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் டிசம்பர் 19 பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடுவது, வாக்குச் சாவடி முகவர் பட்டியல் வழங்க வேண்டியது மற்றும் கழக ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், து.செல்வம், மாவட்ட பொருளாளர் எல். ஜி. அண்ணா, மாவட்ட துணைச் செயலாளர்கள் மணிமாறன், புண்ணிய மூர்த்தி, கனகவள்ளி, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- முகாம்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.
- ஆதார் எண், கைபேசி எண் இணைக்காத வாக்காளர்கள் படிவம் 6-பி பூர்த்தி செய்தும் வழங்கலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் வசதிக்காக இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது.
நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) இந்த சிறப்பு முகாம்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு முகாமில் 2023 ஜனவரி 1-ம் தேதியன்று 18 வயது நிரம்பியவர்கள் அதாவது 2005 ஜனவரி 1-ம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்பாக பிறந்தவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் உள்ளவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் எண் 6ஐ அருகாமையில் உள்ள வாக்கு சாவடிகளில் பெற்று பூர்த்தி செய்து அதனுடன் வயது மற்றும் இருப்பிடத்திற்கான ஆவண நகல்களை இணைத்து தங்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தினை படிவத்தில் ஒட்டி சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கலாம்.
மேலும் இறப்பு, நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு போன்ற காரணங்களின் அடிப்படையில் பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7-ஐ பூர்த்தி செய்தும், வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து வகையான பிழை திருத்தங்கள் மேற்கொள்ள தொகுதி மாற்றம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய, பெயர், உறவுமுறை, புகைப்படம் மாற்றம் செய்ய, காணாமல் போன வாக்காளர் அட்டைக்கு பதிலாக மாற்று அட்டை பெற படிவம் 8-ஐ பூர்த்தி செய்தல், இதுவரை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண், கைபேசி எண் இணைக்காத வாக்காளர்கள் படிவம் 6-பி பூர்த்தி செய்தும் வழங்கலாம்.
பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
அலுவலக வேலை நாட்களில் தாசில்தார் அலுவலக தேர்தல் பிரிவில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி புதிய நிர்வாகிகள் தேர்தல் நடை பெற்றது.
- தேர்ந்து எடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பட்டியலை மாநில காங்கிரஸ் கமிட்டி ஒப்புதலுடன் தேர்தல் அலுவலர்கள் வெளியிட்டனர்
கன்னியாகுமரி:
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிபுதிய நிர்வாகிகள் தேர்தல் நடை பெற்றது. இதில் தேர்ந்து எடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பட்டியலை மாநில காங்கிரஸ் கமிட்டி ஒப்புதலுடன் தேர்தல் அலுவலர்கள் வெளியிட்டனர்.
நகர தலைவர்களாக ஹனுகுமார் (பத்மநாப புரம்), வக்கீல் சுரேஷ்(குழித்துறை), வட்டார தலைவர்களாக வினுட்ராய் (திருவட்டார்மேற்கு), ராஜசேகர் (கிள்ளியூர் கிழக்கு), ரகுபதி (முஞ்சிறை கிழக்கு), விஜயகுமார் (முஞ்சிறை மேற்கு), கிங்ஸிலி சாலமன் (மேல்புறம் கிழக்கு), ரவிசங்கர்(மேல்புறம் மேற்கு),பிரேம்குமார் ( தக்கலை) ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர்.
- கடந்த இரண்டு நாட்களில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் என சிறப்பு முகாம் நடைபெற்றது.
- படிவங்களை பூர்த்தி செய்து நேரடியாக அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சைமாவட்ட கலெக்டர் தினேஷ்பொ ன்ராஜ் ஆலிவர் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரை களின் படி கடந்த 12.11.2022 மற்றும் 13.11.2022 ஆகிய இரண்டு நாட்களில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் காலை 09.30 மணி மாலை 5.30 மணி வரை நடைபெற்றது.
இச்சிறப்பு முகாம்களில் 15704 படிவம் 6 ம், 2122 படிவம் 7 மற்றும் 5441 படிவம் 8 ம் ஆக கூடுதலாக 23267 படிவங்கள் பெறப்பட்டது.
மேலும், ஆன்லைன் மூலமாக 1205 படிவம் 6-ம், 3187 படிவம் 7 மற்றும் 1903 படிவம் 8-ம் ஆக கூடுதலாக 6295 படிவங்கள் ஆன்லைன் மூலமாக பெறப்பட்டது. இச்சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளத் தவறிய பொது மக்கள் எதிர்வரும் 26 (சனிக் கிழமை) மற்றும் 27 ஆகிய தேதிகளில் (ஞாயிற்று கிழமை) நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்களுக்கு உரிய படிவங்களை பூர்த்தி செய்து நேரடியாக அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கலாம், NVSP Portal என்ற இணையதளம் மற்றும் Voters Helpline என்ற செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழகம் முழுவதும் கடந்த 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து இன்று வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
- 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சவாடி மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடந்தது.
சேலம்:
தமிழகம் முழுவதும் கடந்த 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து இன்று வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
சிறப்பு முகாம்
சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளி கூடங்கள், கிராம அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சவாடி மையங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடந்தது.
இந்த முகாம்களில் புதிதாக வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் திருத்தம், முகவரி திருத்தம் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள், பொது மக்களும் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்தனர்.
எம்.எல்.ஏ., மேயர் ஆய்வு
சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு பள்ளியில் நடந்த சிறப்பு முகாமை சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கில் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. , மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கவுன்சிலர் சங்கீதா நீதிவர்மன், முன்னாள் வார்டு செயலாளர் நீதிவர்மன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
இதேபோல கிச்சிப்பாளை யம் நாராயணநகர் பாவடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமை யும் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேவையான விண்ணப் பங்கள் இருப்பு உள்ளதா, முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
மத்திய மாவட்ட அவைத்தலைவர் சுபாசு, மாநகர துணை செயலாளர் கணேசன், 42-வது வார்டு கவுன்சிலர் மஞ்சுளா கணேசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் ஒவ்வொரு வார்டுகளும் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
- வார்டு குழு உறுப்பினர்கள் பட்டியலை உடனே வெளியிட வேண்டும்.
கும்பகோணம்:
கும்பகோணம் மாநகராட்சி உறுப்பினர்கள் அவசர கூட்டம் பழைய நகராட்சி அலுவலகம் படேல் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் சரவணன் தலைமை தாங்கினார்.
துணை மேயர் தமிழழகன், ஆணையர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் ஒவ்வொரு வார்டுகளும் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாவட்ட கலெக்டரின் ஒப்புதல் பெறப்பட்டு, மாவட்ட அரசிதழில் பிரசுரமாக வெளியிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 48 வார்டுகளில் உருவாக்க ப்பட்ட 192 வார்டு பகுதிகளுக்கு அரசாணையில் தெரிவித்துள்ளபடி வார்டு குழு உறுப்பினர்களை நியமனம் செய்ய பட்டியல் தயாரிக்க அனுமதிக்க ப்பட்டுள்ளது என்ற தீர்மானம் வாசிக்கப்ப ட்டது.
அப்போது குறுக்கிட்ட 19 மற்றும் 33-வது வார்டு அ.தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் ஆதிலட்சுமி, கவுசல்யா ஆகியோர் தங்களது வார்டில், வார்டு குழு உறுப்பினர்கள் பட்டியல் வழங்கியுள்ளதை அங்கீகரிக்க வேண்டும் எனக்கூறி வாக்குவாதம் செய்தனர்.
ஆனால் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறி மேயர், துணைமேயர் எழுந்து சென்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஆதிலட்சுமி, கவுசல்யா தங்களுக்கு உரிய விளக்கத்தை மாநகராட்சி மன்றம் தெரிவிக்காததாலும், வார்டு குழு உறுப்பினர்கள் பட்டியலை உடனே வெளியிடக்கோரியும் கூட்டம் நடைபெற்ற படேல் அரங்கில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த 19,33-வது வார்டு கவுன்சிலர்களின் ஆதரவாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு கூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் மாநகராட்சி மேயர், துணை மேயர் ஆகியோரிடம் வார்டு குழு பட்டியல் விவரத்தை கேட்டறிந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் 48 வார்டுகளில் உள்ள 192 வார்டு குழு உறுப்பினர்கள் பட்டியலை நாளை வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடு த்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- போராட்ட குழுவினர் நீக்கப்பட்ட 4 தொழிலாளர்களை உடனடியாக பட்டியலில் சேர்க்க வேண்டும்.
- இச்சம்பவம் குறித்து கிராம முக்கியஸ்தர்கள் கோட்ட மேலாளரை நேரில் சந்திக்குமாறு தெரிவித்தனர்.
மெலட்டூர்:
தேவராயன்பேட்டை அருகே உள்ள பொன்மா ன்மேய்ந்த நல்லூர் கிராமத்தில் இயங்கி வரும் அரசு கொள்முதல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் குமார், காமராஜ், உள்பட 4 தொழிலாளர்கள் திடீரென பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக தெரிகிறது.
மேலும் ஊழியர்கள் வேலை பார்த்த கூலியும் நிறுத்தப்ப ட்டுள்ளது.
இதனை கண்டித்து பாதிக்கப்பட்ட தொழிலா ளர்கள் சார்பில் தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி மனோகர் தலைமையில் தேவராய ன்பேட்டை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாரதி, தி.மு.க ஒன்றிய பிரதிநிதி குமார் உள்பட கிராமமக்கள் பலர் அரசு கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தகவல் அறிந்த நுகர்பொருள் வாணிப கழக கொள்முதல் அலுவலர் சுரேஷ்குமார், பாபநாசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்ட குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது போராட்ட குழுவினர் நீக்கப்பட்ட 4 தொழிலாளர்களை உடனடியாக பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டு மெனவும், அவர்களுக்கு வழங்க வேண்டி கூலி நிலுவை தொகையயையும் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
அதிகாரிகள் தரப்பில் இருந்து பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் சேர்ப்பது குறித்து கோட்ட மேலாளர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் இச்சம்பவும் குறித்து கிராம முக்கியஸ்தர்கள் கோட்ட மேலாளரை நேரில் சந்திக்குமாறு தெரிவித்ததை போராட்ட குழுவினர் ஏற்றுகொண்டு காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- 10 முக்கிய திட்டங்கள் குறித்த பட்டியலை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் அளிக்கலாம்.
- செயல்படுத்த இயலாத திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகப்பட்டினம்:
உங்கள் தொகுதியில் முதல-அமைச்சர் திட்டத்தின் கீழ் தொகுதி மக்களின் பல்வேறு தேவைகளை அறிந்து, அவற்றில் மிக முக்கியமானது என்று எம்.எல்.ஏ. கருதும் 10 முக்கியத் திட்டங்கள் குறித்த பட்டியலை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் அளிக்கலாம்.
மிக முக்கியமான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ள அரசுத் திட்டங்களின் கீழ் செயல்படுத்த இயலாத திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
அதன்படி, நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்து, அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் ஷா நவாஸ் எம்.எல்.ஏ. முன்னிலையில் நடைபெற்றது. அதில், நாகப்பட்டினம் தொகுதியின் முக்கிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- அகில இந்திய அளவில் 251 - 300 போர்டு இடம்பெற்று இரண்டாவது முறையாக சாதனை புரிந்துள்ளது.
- பட்டியலில் கல்லூரி இடம் பெற அயராது பாடுபட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரி தன்னாட்சி - மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தர மதிப்பீட்டு பட்டியலில் அகில இந்திய அளவில் 251 - 300 போர்டு இடம்பெற்று இரண்டாவது முறையாக சாதனை புரிந்துள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற சான்றிதழ் வெளியீட்டு விழாவில் இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி குழுமத்தின் தலைவர் ஜோதிமணி அம்மாள் தலைமை வகித்தார். கல்லூரியின் செயலர் செந்தில்குமார் மற்றும் இணைச் செயலர் சங்கர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்வி குழுமத்தின் ஆலோசகர் பரமேஸ்வரன் மற்றும் கல்லூரி முதல்வர்கள் வாழ்த்துரை வழங்கினர். கல்வி குழுமத்தில் இணை செயலர் தரவரிசை பட்டியல் நகலை கல்லூரி முதல்வரிடம் வழங்கினார். கல்லூரியின் தேர்வு துறை நெறியாளர் சின்னதுரை தேசிய தர மதிப்பீடு பட்டியல் பற்றி விளக்க உரை வழங்கினார். கல்வி குழுமத்தின் செயலர் தேசிய தரவரிசை பட்டியலில் கல்லூரி இடம் பெற அயராது பாடுபட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் மற்றும் பணியாளர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அனைத்து கல்லூரியை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாணவர் சேர்க்கை குழு தலைவர் மணிகண்ட குமரன் மற்றும் ஊடகம் மக்கள் தொடர்பு இயக்குனர் ஆனந்தராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்