search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227058"

    • விஷம் குடித்த காதலன் சாவு; காதலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • கீழவளவு சப்- இன்ஸ்பெக்டர் பாலகிரு ஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது தெற்கு தெரு. இதனை அடுத்துள்ள பாதரம்பட்டியை சேர்ந்தவர் அஜித் (வயது22) இவரும், தெற்கு தெருவை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காத லித்து வந்தனர்.

    இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வெள்ளலூர் அம்பல காரன்பட்டியில் காதல் ஜோடிகள் விஷம் குடித்து விட்டனர்.

    இதுகுறித்து அவர்கள் தங்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இருவரையும் மீட்டு மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஜித் பரிதாபமாக இறந்து விட்டார். அவரது காத லிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மேலூர் டி.எஸ்.பி. ஆர்லியாஸ் ரெபோனி உத்தரவின் பேரில் கீழவளவு சப்- இன்ஸ்பெக்டர் பாலகிரு ஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
    • திருமணம் செய்வதாக கூறி சிறுமியுடன் பிரபு உல்லாசமாக இருந்ததன் விளைவாக அவர் கர்ப்பமடைந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள காமாட்சிபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவருடைய மகன் பிரபு(வயது 23).

    இவர், திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு 15 வயதான சிறுமி வேலையில் சேர்ந்தார்.

    இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இந்த நிலையில் சிறுமி வேலையை விட்டு நின்று விட்டார். பிரபுவும் வேலையை விட்டு விட்டு ஊருக்கு வந்து விட்டார்.

    இந்த நிலையில் திருமணம் செய்வதாக கூறி சிறுமியுடன் பிரபு உல்லாசமாக இருந்துள்ளார். இதன் விளைவாக அவர் கர்ப்பம் அடைந்தார். அதன் பின்னர் சிறுமியை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். இது குறித்து திருவையாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமி புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் சிறுமிக்கு பெண் குழந்தையும் பிறந்தது. இந்த வழக்கு விசாரணை தஞ்சையில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்தது. நீதிபதி சுந்தர்ராஜன் தீர்ப்பு கூறினார்.

    அவர் தனது தீர்ப்பில், பிரபுவுக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.

    • கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வந்த சூர்யா மற்றும் சிந்துவை தனிமையில் சந்தித்து ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார்.
    • பஞ்சாயத்தாரிடம் சிந்துவை திருமணம் செய்து கொள்வதாக ஒத்துக்கொண்ட சூர்யா பின்னர் நாட்களை கடத்த தொடங்கினார்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள மகிழஞ்சேரி பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் சூர்யா (வயது 22). இவர் அப்பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரது மகள் சிந்து (வயது 20) என்பவரை கடந்த 2 வருடங்களாக காதலித்து உள்ளார்.

    இந்நிலையில் வெளி நாட்டிற்குச் சென்ற சூர்யா வீடியோ கால் மூலம் சிந்துவிடம் ஆசை வார்த்தைகள் கூறி தினமும் பேசியுள்ளார். அப்போது, நான் உன்னைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார். மேலும்வெளிநாட்டில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வந்த சூர்யா மற்றும் சிந்துவை தனிமையில் சந்தித்து ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார்.

    இந்நிலையில் சிந்து, சூர்யாவிடம் தன்னை சீக்கிரமாக திருமணம் செய்து கொள் என வலியுறுத்தி உள்ளார். ஆனால் சூர்யா, மறுத்துள்ளார். இதையறிந்த சிந்துவின் குடும்பத்தினர் ஊர் பஞ்சாயத்தில் கூறி இதுபற்றி பேசினர். அப்போது பஞ்சாயத்தாரிடம் சிந்துவை திருமணம் செய்து கொள்வதாக ஒத்துக்கொண்ட சூர்யா பின்னர் நாட்களை கடத்த தொடங்கினார். இதில் ஆத்திரமடைந்த சிந்து, சூர்யாவின் வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்துகொள்ள கூறியுள்ளார். அப்போது சூர்யாவின் பெற்றோர் குமார் மற்றும் கீர்த்திகா ஆகியோர் சிந்துவை மிரட்டி வெளியேற்றி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதனால் சிந்து நன்னிலம் அனைத்து மகளிர் போலீசில் இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் சூர்யாவின் பெற்றோர் குமார், கீர்த்திகா மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் சூர்யாவை தேடி வருகின்றனர்.

    • இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியூட்டும் வேலைகளை செய்து கொடுத்து, காதலை அதிகப்படுத்தலாம்.
    • விடுமுறையில் மனைவியோடு, சமையல் அறையில் கதை பேசியபடி வீட்டுவேலைகளை செய்யலாம்.
    • கணவன்மார்களின் அரைகுறை சமையல் கூட, மனைவிகளுக்கு முழு மனநிறைவை கொடுக்கும்.

    மனைவி சமைக்கும் உணவின் ருசியை குறைகூறும் கணவன்மார்கள், அதை சரிப்படுத்துவதற்கு முயல்வதில்லை. உணவு விஷயத்தில் 'டைனிங் டேபிளோடு' நின்று விடாமல், அடிக்கடி சமையல் அறைக்குள்ளும் 'சர்பிரைஸ் விசிட்' கொடுங்கள். குக்கர் விசில் சத்தம், மிக்ஸி-கிரைண்டர் என இரைச்சல் சத்தத்துடன் சமையல் அறையில் அவதிப்படும் மனைவிக்கு, அன்பு கணவரின் வருகை சற்று ஆறுதலை கொடுக்கலாம். வேலைக்கு செல்லும் நாட்களில் நேரம் ஒதுக்க முடியாவிட்டாலும் விடுமுறை நாட்களிலாவது காய்கறி நறுக்குவது, சப்பாத்தி மாவு தேய்ப்பது போன்ற பணிகளில் ஈடுபடலாம். அதனை அரைகுறையாக செய்தாலும் அதுவும் அன்பு தொல்லையாக மாறி ரொமாண்டிக் பட்டியலில் சேரும்.

    வெளிநாடுகளில் இரவு உணவின்போது பயன்படுத்திய பாத்திரங்களை, மனைவி கழுவி கொடுக்க, கணவன் உணவின் சுவையை புகழ்ந்தபடி துணியை கொண்டு துடைத்து வைப்பார். இதை நம் வாழ்விலும், செய்து பார்க்கலாம். நாள்தோறும் செய்யமுடியாத பட்சத்தில், வார விடுமுறையில் மனைவியோடு, சமையல் அறையில் கதை பேசியபடி வீட்டுவேலைகளை செய்து முடிக்கலாம்.

    விடுமுறை நாட்களில், வீட்டில் ஓய்வெடுக்கும்போது வீட்டை சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டு மனைவியின் வேலைப்பளுவை குறைக்கலாம். குறிப்பாக சோபா செட்டுகளை சுத்தப்படுத்துவது, வீட்டில் படிந்திருக்கும் தூசிகளை அகற்றுவது, பூஜை பொருட்களை சுத்தப்படுத்தி கொடுப்பது... என இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியூட்டும் வேலைகளை செய்து கொடுத்து, காதலை அதிகப்படுத்தலாம். இதுபோன்ற பணிகள், அவர்களுக்கு பூங்கொத்தை பரிசளித்தது போன்ற உணர்வை கொடுக்கும்.

    சில பெண்களுக்கு காபி குடிக்க பிடிக்கும். சிலருக்கு சமோசா, பஜ்ஜி, பகோடா போன்ற நொறுக்குத்தீனிகளை ருசிப்பது பிடிக்கும். சிலருக்கு பிரியாணி, புலாவ் போன்ற உணவுகளை சுவைக்க பிடிக்கும். இப்படி ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விருப்ப உணவு இருக்கும். மனைவியின் விருப்ப உணவை தெரிந்து கொள்வதோடு, அதை சமைக்கவும் பழகலாம். கணவன்மார்களின் அரைகுறை சமையல்கூட, மனைவிகளுக்கு முழு மனநிறைவை கொடுக்கும்.

    • போலீசார் தங்களை தேடி வருவதை அறிந்த ராஜலட்சுமி தனது காதலனுடன் வடமதுரை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.
    • போலீசாருக்கு ராஜலட்சுமியுடன் வந்திருப்பது காதலனா அல்லது கணவனா என்ற குழப்பம் ஏற்பட்டது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகில் உள்ள காக்காயன்பட்டியை சேர்ந்த செல்லம்மாள் மகள் ராஜலட்சுமி(18). பிளஸ்-2 வரை படித்துள்ள இவருக்கும், புத்தூர் கிராமத்தை சேர்ந்த செல்லபாண்டி(20) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 18 வயது நிரம்ப ஒரு சில வாரங்கள் பாக்கி இருந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து இருவீட்டாருக்கும் தெரிவித்தனர்.

    இதனைதொடர்ந்து திருமணம் முடிந்ததும் இருவரையும் தனித்தனியாக பிரித்து வைத்தனர். பின்னர் 18 வயது பூர்த்தி அடைந்ததும் மீண்டும் கணவர் வீட்டிற்கு ராஜலட்சுமி அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் கடந்த 8-ந்தேதி வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து செல்லம்மாள் வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் ராஜலட்சுமி ஏற்கனவே பூசாரிபட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி(21) என்பவரை காதலித்து வந்ததும், அவருடன் மாயமானதும் தெரியவந்தது.

    போலீசார் தங்களை தேடி வருவதை அறிந்த ராஜலட்சுமி தனது காதலனுடன் வடமதுரை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார். போலீசாருக்கு ராஜலட்சுமியுடன் வந்திருப்பது காதலனா அல்லது கணவனா என்ற குழப்பம் ஏற்பட்டது. அதற்கு ராஜலட்சுமி தான் முத்துப்பாண்டியை காதலித்ததாகவும், இவருடன்தான் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் தெரிவித்தார்.

    இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் ஏற்கனவே திருமணமாகி விட்டதால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இவருடன்தான் வாழவேண்டும் என்றால் முறைப்படி முதல் திருமணம் செய்தவரை விவகாரத்து செய்துவிட்டு முத்துப்பாண்டியுடன் சேர்ந்து வாழலாம் என தெரிவித்தனர். மேலும் பெற்றோரிடமும் எடுத்துக்கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • இந்த நிலையில் சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்த சரஸ்வதி தூக்குப்போட்டு மயங்கி கிடந்தார்.
    • இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு நஞ்சைஊத்துக்குளியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சரஸ்வதி (30). இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    சரஸ்வதி அடிக்கடி முன்கோபம்பட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். மேலும் அடிக்கடி சுவற்றில் முட்டிக் கொள்வார். காரணமே இல்லாமல் கணவருடன் கோபித்துக் கொண்டு அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று விடுவார். பின்னர் சமாதானப்படுத்தி உறவினர்கள் அழைத்து வருவார்கள்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்த சரஸ்வதி தூக்குப்போட்டு மயங்கி கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சரஸ்வதியை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்த விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காதல் பிரிவு துயரத்தில் இருந்து மீள்வதற்கு ஒருசில வழிகள் உள்ளன.
    • பிரிவு நிச்சயம் என்று தெரிந்த பின் உங்களால் ஆத்திரத்தை அடக்க இயலாது.

    தற்போதெல்லாம் காதல் விளையாட்டு மாதிரி ஆகிவிட்டது. ஆம், அக்காலத்தில் எல்லாம் காதலுக்காக உயிரையே கொடுத்து வந்தனர். ஆனால் தற்போதெல்லாம் அப்படி இல்லை. சரியாக ஒத்துப்போகாவிட்டால், அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு செல்கின்றனர்.

    மேலும் இன்றைய காலத்தில் காதல் தோல்வி அடைவதற்கு பல காரணங்கள் உண்டு.

    அதில் ஒன்று ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல், கோபப்பட்டு பிரிவது. இப்படி பிரிந்தால் எவ்வித ஏமாற்றமும் தெரியாது. அதுவே வேறு ஒருவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, இருக்கும் காதலை வெட்டிவிடுவர். இந்த வகையை காதல் என்றே சொல்லக்கூடாது.

    மற்றொன்று குடும்பத்தினருக்காக பிரிவது. இதிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று திருமணத்திற்கு முன், இன்னொன்று திருமணத்திற்கு பின். இந்த இரண்டு வகைகளால் காதல் பிரியும் போது, ஏற்படும் துயரத்தில் இருந்து பிரிவது என்பது மிகவும் கடினம்.

    அப்படிப்பட்ட காதல் பிரிவு துயரத்தில் இருந்து மீள்வதற்கு ஒருசில வழிகள் உள்ளன. அந்த வழிகள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, பின்பற்றி அந்த துயரத்தில் இருந்து வெளிவர முயற்சி செய்யுங்கள்.

    அதிர்ச்சி

    தொடக்கத்தில், நம் துணைவர் மற்றொரு ஆணிடமோ அல்லது பெண்ணிடமோ தொடர்பு கொண்டிருப்பதை நம் மனம் ஏற்காது. முதலில் நம்ப மறுக்கும். நாம் இருக்க வேண்டிய இடத்தில் மற்றொருவர் என்பதை முற்றிலும் மனம் ஏற்க இயலாது. அதிலும் உங்கள் துணைவர் உங்களை தவிர வேறு ஒருவருடன் உணர்வுபூர்வமாக நெருங்கி பழகுவதை பார்க்கும் பொழுதோ, உங்களை சுற்றி ஏதோ இழிவான செயலில் ஈடுபடுவதைக் கண்டாலோ, என்ன நடக்கிறது என்று உணர்வது மிக கடினம்.

    இதெல்லாம் கெட்ட கனவா, இல்லை வெறும் பிரம்மையா என்பதை தீர்மானிக்க முயற்சிக்கும் போது, ஒரு மூடுபனியில் இருப்பது போல் இருக்கும். இந்த கட்டத்தில் நீங்கள் உங்களை உணர்வது அவசியம்.

    ஆத்திரம்

    பிரிவு நிச்சயம் என்று தெரிந்த பின் உங்களால் ஆத்திரத்தை அடக்க இயலாது. உடல் நிலை மோசமாக மாறும். எந்த செயலையும் செய்ய முடியாது. வேலைக்கு செல்லாமலும், அன்றாட வேலைகளையும் செய்ய முடியாமலும், எப்போதும் காதல் நினைவையே மனம் நாடும். நடந்தவற்றையே நினைத்து சிந்தித்து கொண்டிருப்பர். பின் பொருட்களை தூக்கி உடைப்பது, கத்துவது, அனைவரிடமும் சண்டை போடுவது மற்றும் தன் சுய கட்டுப்பாட்டை மீறி நடந்து கொள்வது போன்றவைகள் நிகழும். அழுது புலம்புவர். சில நாட்களுக்கு பின் இந்த நிலை மாறும். ஆனால் மனதில் வலி மட்டும் வேரூன்றி இருக்கும். இந்த நிலை போக சரியான முடிவுகளை எடுக்க வழிவகுக்கும்.

    கோபம்

    ஆரம்பத்தில் வன்முறை செயலில் ஆத்திரம் கொண்டு, பின் அந்த வலியிலிருந்து மீண்டு, மனமானது கல்லாகி, ஒரு சாதாரண நிலையை அடைந்திருப்பீர். இந்த நிலையில் தான் பொதுவாக நீங்கள் சமரச கருத்து தொடங்குவது அல்லது விவாகரத்து பற்றிய முடிவு எடுப்பது நடக்கும். ஆழமான காயம் கொண்டிருந்தாலும், நடைமுறை வழக்கிற்கு ஏற்றவாறு முடிவு எடுப்பது நல்லது. அதை விட்டு பழி வாங்குவது என்பது முட்டாள்தனம். ஆகவே இந்த நேரத்தில் துயரத்திலிருந்து வெளிவர வாழ்க்கையின் இலக்குகளை அடைய மிகுந்த ஆர்வத்தை காட்டலாம் அல்லது திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதை பற்றி யோசித்து முடிவெடுக்கலாம்.

    நினைவு சின்னங்கள்

    உங்கள் துணைவருடன் சென்றிருந்த சில இடங்கள், பொருட்கள், மற்றும் நினைவூட்டும் அனைத்தையும் மனதில் இருந்து அழிப்பது நல்லது. காதல் கொண்ட வேளையில் கேட்ட சில பாடல்கள், அவர்களுடன் சென்ற ஹோட்டல்கள் அல்லது அவர்கள் கூறிய வார்த்தைகள், அவர்களால் ஏற்பட்ட நட்பு, உறவுகள் போன்ற அனைத்தையும் தவிர்ப்பது நல்லது.

    புது உறவு

    காதல் தோல்வி அடைந்த உடனே வேறு ஒருவரை நம்பி திருமணம் செய்து கொள்ள வேண்டாம். சில நாட்கள் கழித்து பழகி, பேசி, ஒருவரை புரிந்து பின் திருமணம் முடிப்பது நல்லது. உங்கள் வாழ்க்கைக்கு மற்றொரு நபரை தேர்ந்தெடுக்கும் முன் யோசித்து செயல்பட வேண்டும். இதனால் மறுபடியும் ஏமாற்றம் அடையாமல் இருக்கலாம்.

    இலக்குகள்

    காதல் தோல்வி அடைந்துவிட்டோம் என்று மனம் தளர்ந்து விடாமல், இலக்குகளை தொடர வேண்டும். சதா அதே நினைவாக இருக்காமல், புத்தகம் படிப்பது, பிடித்த வேலைகளை செய்வது, எங்காவது தூரமாக சென்று ஒரு மாத காலம் மன நிம்மதியுடன் இருந்து வருவது, எப்போதும் நம்மை பிஸியாக வைத்து கொள்வது போன்றவற்றை பின்பற்றுவதால், விரைவில் அந்த துயரத்திலிருந்து மீண்டு, இலக்குகளை அடைய முடியும்.

    • விருத்தாசலத்தில் பயங்கரம் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
    • உயிருக்கு போராடிய ரம்யா–வை வயலில் வேலை செய்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கார்மாங்குடி பகுதியை சேர்ந்தவர் அம்பலவாணன். அவரது மகன் ஸ்ரீதர்இவருக்கும் குறிஞ்சிப் பாடி பெத்தநாயகன் குப்பம் பகுதி சேர்ந்த ரம்யா என்ப வரும் 5 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருமணம் நிச்சயக்கப் பட்டது.

    இந்நிலையில் ஸ்ரீதர் புதுப்பெண் ரம்யாவை மோட்டார் சைக்கிளில் கார்மாங்குடிக்கு அழைத்து வந்தார். அப்போது கார்மாங்குடி அருகே வந்த போது இருவருக்கும் இடையில் வாய் தகராறு ஏற்பட்டது.

    ஆத்திரமடைந்த ஸ்ரீதர் தனது மோட்டார் சைக்கிளை சாலை ஓரமாக நிறுத்தி மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த சுத்தியலால் ரம்யாவின் தலையில் அடித்தார். இதனால் அவர் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். பின்னர் ஸ்ரீதர் அங்கிருந்து தனது மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டார்.

    இதனை அருகே வயலில் வேலை செய்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உயிருக்கு போராடிய ரம்யாவை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தற்ேபாது 2 நாட்களுக்கு முன்பு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இன்று காலை சிகிச்சை பலனின்றி ரம்யா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் கொலை வழக்காக மாற்றி இதற்கு காரணமான ஸ்ரீதரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

    • மதுரை அருகே அக்காள்-தம்பியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • அவர் 10-ம் வகுப்பு மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது.

    அவனியாபுரம்

    மதுரை அவனியாபுரம் மீனாட்சி நகரைச் ேசர்ந்தவர் அவனியாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார்.

    அதில், தனது 14 வயது மகள் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். 13 வயது மகன் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இருவரையும் காணவில்லை. முதல் நாள் இரவு 10 மணி வரை வீட்டில் இருந்தனர். அதன் பின்பு இருவரையும் காணவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி ஆணையர் ரமேஷ் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சேதுராமன் ஆகியோர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில் இதே பகுதியை சேர்ந்த சண்முகவேல் மகன் மவுனம் என்ற முனியசாமி (வயது24) அக்காள் மற்றும் தம்பியை கடத்திச்சென்றது தெரியவந்தது.

    போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு மவுனம் என்ற முனியசாமியை கைது செய்தனர். அக்காள்-தம்பி இருவரும் மீட்கப்பட்டனர்.

    கைதான முனியசாமி 10-ம் வகுப்பு மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனால் மாணவியையும், அவரது தம்பியையும் கடத்திச்சென்றது தெரியவந்தது.

    புகார் கொடுத்த 24 மணி நேரத்தில் போலீசார் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து கடத்திச் செல்லப்பட்ட அக்காள் மற்றும் தம்பியை மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காதலிப்பவர் பற்றிய முழு விவரங்களை நீங்கள் தெரிந்துவைத்துக்கொள்வதும் அவசியம்.
    • பார்த்ததும் காதல் என்பது திரைப்படத்திற்கு வேண்டுமானால் சுவாரசியமாக இருக்கலாம்.

    காதல் முளைக்கும் களங்கள் கணக்கற்றவை. கண்டதும் காதல், காணாமலே காதல் என அப்படி முளைக்கும் காதலை நல்லமுறையில் வெளிப்படுத்தினால்தான், அதில் வெற்றிபெற முடியும். அந்தவகையில் காதலை வெளிப்படுத்தும்போது கவனமாக இருக்கவேண்டிய விஷயங்களை இங்கே தொகுத்திருக்கிறோம்... நீங்கள் விரும்பும் ஆண் அல்லது பெண் அழகினாலோ, கல்வி, பணம் அல்லது மற்ற காரணங்களால் ஈர்த்திருக்கலாம்.

    ஆனால், தனக்கு காதல் வந்த காரணத்தை நேரடியாகச் சொல்லாமல், பொய்யான காரணத்தைத் தனக்கு சவுகரியமாகச் சொல்லி காதலை வெளிப்படுத்துவது கூடவே கூடாது. தனக்கு ஏற்கனவே தெரிந்தவராக இருந்தாலும் சரி, புதிதாக அறிமுகமானவராக இருந்தாலும் சரி, உங்கள் காதலை வெளிப்படுத்திய நொடியில் இருந்து அவரிடம் இருந்து 'ஆம்' என்ற பதில் வரவேண்டும் என்பதை எதிர்பார்க்காதீர்கள். 'இது என் விருப்பம், அதே போல உனக்கு என்னைப் பிடித்திருந்தால் மட்டும் சம்மதம் சொல்' என்று கூறலாம்.

    இப்படிச் செய்வது உங்கள் மீது மரியாதையை உயர்த்தும்! 'ஐ லவ் யூ' என்ற வாக்கியமாக இல்லாமல், வேறு எப்படி எல்லாம் இருக்கலாம் என்று சிலர் தேடிப்பிடித்து முயற்சித்து, வித்தியாசமாகச் சொன்னாலும் பெருமளவில் 'ஐ லவ் யூ' என்கிற வாக்கியமே காதலை வெளிப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, 'ஐ லவ் யூ' வை தனக்குப் பிடித்தவரிடம் சொல்வதற்கு முன்பாக, உங்கள் மீது சிறு அளவிலாவது அவருக்கு விருப்பம் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்டு 'ஐ லவ் யூ' சொல்லுங்கள்.

    நீங்கள் விரும்புபவர் உங்களுடைய தோற்றம், பேச்சு, பழகும் விதம் இதையெல்லாம் பார்த்து உங்கள் மீது வேறொரு பிம்பத்தை வைத்திருக்கலாம். ஆனால், நீங்கள் அவர்களின் நினைப்புக்கு அப்படியே நேர்மாறாக இருக்கலாம். பார்த்ததும் காதல் என்பது திரைப்படத்திற்கு வேண்டுமானால் சுவாரசியமாக இருக்கலாம். அதனால், உங்கள் கல்வி, வேலை, குடும்பச்சூழல், உங்கள் எதிர்காலத் திட்டம், பிடித்தவை, பிடிக்காதவை உள்ளிட்ட அடிப்படை விஷயங்களை அவர்களிடம் தெரிவித்து, அவர்கள் அவற்றையெல்லாம் தெளிவாகப் புரிந்துகொண்டார்களா என்று தெரிந்த பின் காதலைச் சொல்வது நல்லது.

    அதே போல காதலிப்பவர் பற்றிய முழு விவரங்களை நீங்கள் தெரிந்துவைத்துக்கொள்வதும் அவசியம்! காதலைச் சொல்லும்போது பயந்த நிலையில் ஏனோதானோவென்று சொன்னால், உங்கள் மீதான நம்பிக்கை குறையக்கூடும். அதற்காக கையில் ஒரு ரோஜா மலரோடு மண்டியிட்டுதான் காதலைச் சொல்ல வேண்டும் என்றில்லை. முகத்துக்கு நேராக கண்களைப் பார்த்து, சிறு புன்னகையுடன் வெளிப்படுத்துங்கள். அதே போல தைரியமானவர் என்பதை வெளிப்படுத்த, அவசரப்பட்டு ஆரம்பத்திலேயே தொடுதல் உள்ளிட்ட செய்கைகள் மூலம் காதலைச் சொன்னால், அதுவும்கூட உங்கள் மீதான மதிப்பீட்டைக் குறைத்துவிடும்.

    காதலைச் சொல்ல இயற்கையான சூழல்களைத் தேர்ந்தெடுப்பது நல்ல மனநிலையைக் கொடுக்கும். அதே நேரத்தில் பீச், பார்க் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களாகவும் இருந்தால், நீங்கள் காதலை வெளிப்படுத்தும்போது, அது மற்றவர்களின் கவன ஈர்ப்பைச் செய்வதாக இருக்க வேண்டாம். நீங்கள் அப்படிச் செய்வது உங்கள் இணைக்குப் பிடிக்காதபட்சத்தில், அவர் உங்களை நிராகரிக்கக்கூடும்.

    அதனால், பொது இடங்களில் காதலை வெளிப்படுத்தும்போது அவருக்கு எந்த வகையிலும் தொந்தரவு இல்லாத சூழலை உருவாக்கிக்கொண்டு காதலை சொல்லுங்கள்! ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் விருப்பம் இல்லாதவரிடம் கட்டாயப்படுத்திக் காதலைச் சொல்வது நல்லதல்ல. அதனால், நீங்கள் காதலிக்கும் நபர் உங்கள் காதலை ஏற்றுக்கொள்ளப் போதுமான அவகாசம் கொடுங்கள். ரத்தத்தால் கடிதம் எழுதுவது, அழுது கெஞ்சுவது, போகும் இடமெல்லாம் பின் தொடர்வது இதெல்லாம் காதலில் சேராது. உங்கள் மீது அனுதாபத்தை ஏற்படுத்தி காதலிக்க வைத்தால், அதுவும் கட்டாயப்படுத்துவது போலத்தான். அதனால், காதலை மெல்லிய பூங்காற்றாய் நுகரப் பழகுங்கள்.

    இணையத்தின் வழியிலேயே பல வேலைகள் நடந்துவிடுகின்றன. ஆணுக்கும் பெண்ணுக்குமான தகவல் தொடர்பு செல்போன் வழியே பரிமாறப்பட்டாலும் நீங்கள் முதன் முதலாக வெளிப்படுத்தும் காதல், நேரில் சொல்லும்படி இருப்பது நல்லது. நேரில் சொல்லும்போது, அந்தத் தருணத்தில் உங்கள் முகங்களில் வெளிப்படும் மலர்ச்சி உங்களுக்குக் கிடைக்கும் வாழ்நாள் பொக்கிஷம். அந்த அனுபவத்தைத் தவறவிடாதீர்கள். செல்போன் இருக்கிறது என்பதால் மனதில் பட்டதை எல்லாம் பட்டென்று சொல்லிவிடலாம் என்ற நினைப்பில் விரும்பத்தகாத வார்த்தைகளைப் பிரயோகம் செய்வது உங்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தும். அதனால், இதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

    • அவ்வப்போது காதலை வெளிப்படுத்துங்கள். அரவணையுங்கள்.
    • துணையின் ஆடை, அலங்காரத்தை பாராட்ட தவறாதீர்கள்.

    வேலைக்கு செல்லுதல், குடும்பத்தை நிர்வகித்தல் என ஒரே மாதிரியான வாழ்க்கை முறைக்கு மாறக்கூடும். அப்படி ஒரே மாதிரியான வாழ்க்கை முறைக்கு பழகிவிடும்போது ஒருவித சலிப்பு எட்டிப்பார்க்கும். காதலிக்கும்போது தன்னிடம் காண்பித்த அன்பை இப்போது வெளிப்படுத்துவதில்லை என்ற எண்ணம் துணையிடம் குடிகொண்டுவிடும். சின்னச் சின்ன விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கிவிட்டால் போதும். அதுபோன்ற எண்ணங்கள் தோன்றாது. அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

    வாரத்திற்கு ஒருமுறை, இல்லாவிட்டால் மாதம் ஒருமுறையாவது வெளி இடங்களுக்கு செல்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். அவை ஷாப்பிங், சுற்றுலா, கடற்கரை, பூங்கா, காபி ஷாப் என எந்த இடமாகவும் இருக்கலாம். அங்கு குடும்ப விஷயங்களை தவிர்த்து மற்ற விஷயங்களை பேசுங்கள். காதலித்த நாட்களை பற்றிய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். அந்த நாட்களை மீண்டும் அன்றாட வாழ்வில் நினைவுபடுத்தும் விதமான செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். அவ்வப்போது காதலை வெளிப்படுத்துங்கள். அரவணையுங்கள். நீங்கள் ஒருவர் மீது ஒருவர் எந்த அளவுக்கு காதல், அன்பு, அக்கறை கொண்டுள்ளீர்கள் என்பதை குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துங்கள்.

    மாதம் ஒருமுறையேனும் துணைக்கு ஆச்சரியம் அளிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுங்கள். பரிசு வழங்குவது, திடீரென சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது, துணைக்கு பிடித்தமான விஷயங்களை செய்வது, பிடித்தமான பொருட்களை வாங்கிக்கொடுப்பது என `சர்ப்ரைஸ்' கொடுக்கும் விதத்தில் செயல்படுங்கள். அவை இருவருக்கும் இடையேயான நெருக்கத்தை அதிகரிக்க உதவும். விடுமுறை நாட்களில் துணைக்கு வீட்டு வேலைகளில் உதவுங்கள். இந்த செயல் அவரின் வேலையை எளிமைப்படுத்தும். அவருடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்பையும் வழங்கும்.

    குழந்தைகள், குடும்பத்தினருடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யலாம். குழுவாக நடனம் ஆடலாம். அவை உடல் மற்றும் மன ரீதியாக உற்சாகத்தை வழங்கும். உணர்வு ரீதியாக ஒன்றிணைந்து செயல்படவும் வழிவகுக்கும். காதலித்த சமயத்தில் நடை, உடை, அழகை பராமரிப்பதற்கு எவ்வளவு ஆர்வம் காட்டினீர்களோ அதனையே இப்போதும் பின் தொடருங்கள். மற்றவர்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுக்கொடுக்கவும் அவை உதவும். துணையின் ஆடை, அலங்காரத்தை பாராட்ட தவறாதீர்கள். சின்ன விஷயமாக இருந்தாலும் அவரது செயல்பாடுகளை மனம் திறந்து பாராட்டுங்கள். இன்னும் சிறப்பாக செயல்பட ஊக்குவியுங்கள். அவை கடந்த கால காதலை உயிர்ப்புடன் வைத்திருக்க பக்கபலமாக அமைந்திருக்கும்.

    • ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
    • இவர்கள் இருவரும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே உள்ள பிலிக்கல்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னாக்கவுண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் கமலி (வயது 22). இவர் பி.எஸ்.சி படித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வந்தார். இதே ஊரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மோகன்ராஜ் (27).

    இவர் பரமத்திவேலூரில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் காதல் ஜோடி ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள ஒரு விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் பாதுகாப்பு கேட்டு நேற்று ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் இருதரப்பு பெற்றோரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்ததால் கமலியை அவரது கணவர் மோகன்ராஜ் உடன் அனுப்பி வைத்தனர்.

    ×