என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முயற்சி"

    • தப்பி சென்ற மர்ம நபர்களுக்கு வலை வீச்சு
    • திருவட்டார் போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே மாஞ்சக்கோணம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). இவர் ரப்பர் ஷீட் மொத்த வணிகம் செய்து வருவதுடன், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வருகிறார்.

    இவரது ரப்பர் கடை மற்றும் குடோன் பிணந்தோடு பகுதியில் உள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை மர்ம நபர்கள் 2 பேர் ஒரு காரில் வந்து ரமேசின் குடோன் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த 2 பண்டல் ரப்பர் ஷீட்டுக்களை திருடியுள்ளனர். இதனை ரமேஷ் செல்போனில் இணைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா வழியாக நாகர்கோவிலில் இருந்தவாறு கவனித்தார்.

    இதையடுத்து அவர் உடனடியாக குடோன் அருகில் உள்ள தனது வேலையாட்களுக்கு தகவல் கூறினார். அவர்கள் விரைந்து வந்து குடோனுக்கு சென்று அவர்களை பிடிக்க முயன்ற போது மர்ம நபர்கள், ரப்பர் ஷீட்டையும் ஓட்டி வந்த காரையும் விட்டு, விட்டு தப்பியோடி விட்டனர்.

    இது குறித்து ரமேஷ் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் போலீசார் மர்ம நபர்கள் விட்டு சென்ற காரை பறிமுதல் செய்தனர். மேலும் மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    திருவட்டார் அருகே தெங்குவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜப்பன் (61). இவருக்கு சொந்தமாக ரப்பர் மரங்கள் உள்ளது. இவர் வீட்டின் பின்பக்கம் அதனை உலற வைத்திருந்தார். ரப்பர் ஷீட்டுகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.1500 ஆகும்.

    இதுகுறித்து திருவட்டார் போலீசில் ராஜப்பன் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி புலியிறங்கி பகுதியை சேர்ந்த பாலஸ் (55) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரமத்திவேலூர் தாலுகா பரமத்தியில் கடந்த ஒரு வாரமாக பூட்டிய வீடுகளை குறி வைத்து தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது.
    • கடந்த வாரம் பரமத்தி ஆசிரியர் காலனியில் உள்ள தனியார் பள்ளி பஸ் டிரைவர் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டி இருந்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தியில் கடந்த ஒரு வாரமாக பூட்டிய வீடுகளை குறி வைத்து தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது.

    கடந்த வாரம் பரமத்தி ஆசிரியர் காலனியில் உள்ள தனியார் பள்ளி பஸ் டிரைவர் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டி இருந்தனர்.

    அதேபோல் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் வெளியூரில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், அவரது வீட்டின் கதவை உடைத்து கைவரிசை காட்டியதும் தெரிய வந்துள்ளது.

    இந்த 2 வீடுகளிலும் பணமோ, மதிப்புமிக்க பொருட்களோ கொள்ளை போகாததால் சம்மந்தப்பட்டவர்கள் போலீசில் புகார் கொடுக்கவில்லை. எனினும் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, பரமத்தியில் இருந்து கபிலர்மலை செல்லும் சாலையில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி எழுந்து கூச்சலிட்டார். இதையடுத்து அவரை கத்தியை காட்டி மிரட்டிய மர்ம நபர்கள், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவங்கள் பரமத்தியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பரமத்தி நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில், பரமத்தி போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது. 

    • அரிசி மூடைகளை பதுக்கி வைத்த நபர் குறித்து விசாரணை
    • பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூடைகள் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    கன்னியாகுமரி:

    குளச்சல் சப் - இன்ஸ்பெக்டர் தேவராஜ், சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் பயிற்சி சப் - இன்ஸ்பெக்டர் ரிச்சர்டு ஜோசப் ஆகியோர் நேற்று மாலை குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து சென்றனர்.

    வாணியக்குடி பகுதியில் செல்லும்போது அங்கு மீன் கடை அருகில் ஒரு மறைவான இடத்தில் சிறு பிளாஸ்டிக் மூடைகளில் ரேசன் அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். உடனே அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது 40 மூடைகளில் சுமார் 2 டன் ரேசன் அரிசி இருந்தது தெரிய வந்தது.உடனே போலீசார் அரிசி மூடைகளை மீட்டு வாடகை வாகனம் மூலம் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.தொடர்ந்து போலீசார் அங்கு அரிசி மூடைகளை பதுக்கி வைத்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூடைகள் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    • கடந்த 21 நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த நித்தியா (20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டேன்.
    • எனவே காரிப்பட்டி போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து தனது மனைவியை மீட்டுத்தர வேண்டும் என்பதற்காகவே கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றேன் என்றார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே உள்ள மின்னாம்பள்ளி ராஜமாணிக்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் ராகதேவன் (வயது 21). இவர் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே திடீரென தான் மறைத்து கொண்டு வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ராகதேவனை தடுத்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் கூறுகையில், கடந்த 21 நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த நித்தியா (20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். கடந்த 3 நாட்களுக்கு முன்பு நித்யாவின் பெற்றோர் வந்து, நித்யாவை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டனர். மேலும் நித்யாவை அழைத்து வர, அவர் வீட்டிற்கு சென்றபோது என்னை விரட்டி விட்டனர்.

    எனவே காரிப்பட்டி போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து தனது மனைவியை மீட்டுத்தர வேண்டும் என்பதற்காகவே கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றேன் என்றார். போலீசார் தொடர்ந்து ராகதேவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார்
    • அவசர போலீஸ் எண் 100-க்கு தகவல் தெரிவித்ததையடுத்து மண்டைக்காடு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    மண்டைக்காடு அருகே கருமன்கூடலை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க தொழி லாளி ஒருவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் லட்சுமிபுரம் சென்றார். பின்னால் அவரது நண்பர் இருந்தார்.

    மோட்டார் சைக்கிளில் கருமன்கூடல் சானலில் மெயின் ரோட்டில் செல்லும் போது மண்டைக்காட்டி லிருந்து லட்சுமிபுரம் நோக்கி வேகமாக 2 மோட்டார் சைக்கிளில் 4 வாலிபர்கள் சென்றனர். அந்த மோட்டார் சைக்கிள்கள் கருமன்கூடல் தொழிலாளி மோட்டார் சைக்கிள் மீது மோதுவது போல் சென்றது. மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்திய தொழிலாளி வேகமாக வந்த வாலிபர்களை 'பார்த்து போகக்கூடாதா?' என கண்டித்து சென்றார்.

    இதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள் தொழிலாளி யின் மோட்டார் சைக்கிளை துரத்தி சென்று லட்சுமிபுரம் கல்லூரி அருகில் வழிமறித்து தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். இரு தரப்பி னர்களும் கடும் வாக்கு வாதம் செய்தனர். கை கலப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பதட்ட மடைந்த அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் அவசர போலீஸ் எண் 100-க்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து மண்டைக் காடு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். போலீசை கண்டதும் கும்பலில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் பண்ணா மல் உருட்டிக் கொண்டே போனார். மீதி நின்ற வாலிபர்களிடம் சப்- இன்ஸ்பெக்டர் வில்சன் விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் வாலி பர்கள் திங்கள் நகர் பகுதியை சேர்ந்த வர்கள் என்பதும், மண்டைக் காட்டில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் திங்கள்நகர் பகுதிக்கு செல்லும்போது தொழிலாளியிடம் தகராறு செய்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் இரு தரப்பினரையும் எச்சரித்து அனுப்பினர்.

    • சேலத்தில் இன்று காலை கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென மறைத்து வைத்திருந்த டீசலை எடுத்து இருவரும் தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
    • எங்களுக்கு சொந்தமான 30 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை எனது மாமாவும், தி.மு.க பிரமுகரும் சேர்ந்து அபகரித்துக் கொண்டு தர மறுக்கின்றனர்.

    சேலம்:

    சேலம் வீராணம் மெயின் ரோடு டி.எம்.செட் பகுதியை சேர்ந்த மோகனா மற்றும் அவரது மகன் கோவிந்தராஜ் ஆகியோர் இன்று காலை கலெக்டர் அலுவலகம் வந்தனர். அப்போது, அவர்கள் நுழைவு வாயில் முன்பு திடீரென மறைத்து வைத்திருந்த டீசலை எடுத்து இருவரும் தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

    இதை பார்த்த கலெக்டர் அலுவலக பாதுகாப்பில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோவிந்தராஜ் கூறும்போது:-

    எங்களுக்கு சொந்தமான 30 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை எனது மாமாவும், தி.மு.க பிரமுகரும் சேர்ந்து அபகரித்துக் கொண்டு தர மறுக்கின்றனர். மேலும் நிலத்தை கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

    இதுகுறித்து அம்மா பேட்டை போலீஸ் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வாழ வழியில்லாமல் இருக்கும் நாங்கள் இறப்பதே மேல் என நினைத்து, தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, எங்கள் நிலத்தை உடனடியாக மீட்டு தர வேண்டும் என்றார். 

    • பெண் சுயநினைவின்றி கிடந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்
    • திருவட்டார் போலீசார் அதிரடி நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே உள்ள கொக்கவிளை பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண் வீட்டில் ரத்தக் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

    அந்தப் பெண் சுய நினைவின்றி இருந்ததால், குடும்பத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அந்தப் பெண் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மகள், திருவட்டார் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்ட னர். அப்போது ஒரு வாலிப ரின் நடவடிக்கையில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அவரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பேசி உள்ளார். போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது, அந்த வாலிபர், சுயநினைவின்றி கிடந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதும், அதற்கு அவர் மறுத்ததால் தாக்கி விட்டு சென்றதும் தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து அந்த வாலிபரை போலீசார் கைது செயதனர். விசார ணையில் அவரது பெயர் எட்வின் (வயது 28) என்ப தும், தனியார் மினரல் வாட்டர் கம்பெனியில் வேலை பார்ப்பதும் தெரிய வந்தது. கைதான எட்வின் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-

    பக்கத்து வீட்டில் வசித்த பெண் மீது எனக்கு மோகம் இருந்தது. சம்பவத்தன்று அந்தப் பெண், உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அலங்காரம் செய்து சென்றார். இதனை பார்த்ததும் எனக்கு அவர் மீது மேலும் ஆசை ஏற்பட்டது.

    அதன்பிறகு நான் மது அருந்தினேன். அந்தநேரத்தில் நிகழ்ச்சி முடிந்து அந்த பெண் வீடு திரும்பினார். அதனை பயன்படுத்தி நானும் வீட்டுக்குள் புகுந்தேன். பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    மேலும் அவர் சத்தம் போட்டதால் கழுத்தை நெரித்தேன்.கட்டிலில் அவரது தலையை மோதிய தில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். பின்னர் நான் வீட்டில் இருந்து வெளியேறி விட்டேன்.

    இதற்கிடையில் அவரது கணவர் வந்து மனைவி சுயநினைவின்றி கிடப்பதை பார்த்து அலறினார். நானும் அங்கு சென்று அவருக்கு உதவுவது போல் நடித்தேன். மேலும் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரித்த போது, நானும் அங்கே இருந்து, நகைக்காக தாக்குதல் நடந்திருக்கலாம் என்று கருத்துக்களை தெரிவித்தேன். ஆனால் என் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார், என்னை கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    எட்வினை கைது செய்தது குறித்து போலீசார் கூறுகையில், சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய போது, எட்வின் பேசியது மற்றும் அவரது நடவடிக்கைகள் சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் இருந்தது. எனவே அவரை கண்காணிக்க முடிவு செய்தோம். அவருக்கே தெரியாமல், அவரை கண்காணித்தோம். இதில் சந்தேகம் மேலும் அதிகரித்ததால் எட்வினை பிடித்து விசாரித்தோம். முதலில் மறுத்த அவர், பின்னர் உண்மையை ஒத்துக் கொண்டார் என்றனர்.

    • ஆத்தூர் பஸ் நிலைய பகுதியில் புறநகர் காவல் நிலையத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக மண்ணெண்ணையை தலையில் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்தார்.
    • இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் பஸ் நிலைய பகுதியில் புறநகர் காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையம் அருகில் பழ வியாபாரம் செய்து வருபவர் மகேஸ்வரி. இவரது கணவர் மண்டைக்கட்டு ( வயது 40). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்நிலையில் மகேஸ்வரிக்கும் மண்டைக்கட்டுக்கும் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பஸ் நிலையப் பகுதியில் பழ வியாபராம் செய்து வந்த மனைவி மகேஸ்வரியிடம், மண்டைக்கட்டுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது மண்டைக்கட்டு கையில் வைத்திருந்த மண்ணெண்ணையை தலையில் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்தார்.

    இதை பார்த்து பஸ் நிலையப் பகுதியில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓடினர். உடனடியாக போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசார், அங்கு வந்து அவரை அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் மண்டைக்கட்டு தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி, பஸ் நிலையப் பகுதியிலேயே தீ வைத்து எரித்து, பின்னர் சிகரெட்டை கையில் வைத்துக் கொண்டு பஸ் நிலையப் பகுதியில் உலா வந்தார். இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் பஸ் நிலைய பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • பெண் கூச்சலிட்டதால் திருடன் தப்பி ஓட்டம்
    • பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர்

    திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நேற்று அதிகாலை அவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர், அந்த பெண்ணிடம் தங்க சங்கலியை பறிக்க முயன்றார். இதனால் திடுக்கிட்டு எழுந்த அந்த பெண் சுதாரித்து கொண்டு திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டார். இதையடுத்து அந்த மர்மநபர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி, அந்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, சுமார் 5 செண்ட் நத்தம் புறம்போக்கு நிலத்தில் கூரை அமைத்து குடியிருந்து வருகின்றனர்.
    • இதையடுத்து, கடந்த சில நாட்களாக கூரையை அகற்றிவிட்டு அட்டை வீடு அமைக்க பொருட்களை வாங்கி இருந்தனர்.

    மகுடஞ்சாவ:

    சேலம் மாவட்டம் இடங்கணசாலை, மாட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி மனைவி ஆராயி (வயது 42). இவருக்கு மோகனா (25) என்ற மகளும், பிரியா (22) என்ற தங்கையும் உள்ளனர்.

    இவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, சுமார் 5 செண்ட் நத்தம் புறம்போக்கு நிலத்தில் கூரை அமைத்து குடியிருந்து வருகின்றனர். இதையடுத்து, கடந்த சில நாட்களாக கூரையை அகற்றிவிட்டு அட்டை வீடு அமைக்க பொருட்களை வாங்கி இருந்தனர்.

    இந்த நிலையில், இடங்கண சாலை நகராட்சியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் உள்ளிட்ட 3 பேர், வீடு கட்ட ரூ.2 லட்சம் பணம் கேட்டதாக கூறப்படு கிறது. மேலும் பணம் கொடுக்கவில்லை என்றால் வீடுகட்ட அனுமதிக்க மாட்டோம் என மிரட்டியதாக ஆராயி கடந்த 15-ந் தேதி சேலம் கலெக்டர் அலு வலகத்தில் புகாரளித்தார்.

    இந்நிலையில் நேற்று பொக்லைன் எந்திரத்துடன் வந்த சங்ககிரி வருவாய்து றையினர், ஆராயி வீடு கட்ட வைத்திருந்த பொருட்கள், அவரது கூரை வீடு மற்றும் மரங்களை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரியா உடலில் மண்ணென்னை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    அவரை, பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார் தடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த சங்ககிரி டி.எஸ்.பி. ஆரோக்யராஜ் சம்பந்த பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, சமாதானம் செய்தனர். அதனை தொடர்ந்து ஆராயி குடும்பத்தினர் இடங்கணசாலை வி.ஏ.விடம் மனு அளித்து சென்றனர்.

    இது குறித்து ஆராயி கூறியதாவது:-

    நான் கடந்த 20 ஆண்டுகளாக இதே நிலத்தில் குடியிருந்து வருகிறேன். அதற்கு ரசீது உள்ளது. சில தினங்களுக்கு முன் 5 செண்ட் நிலத்தின் ஒரு பகுதியில் அட்டை வீடு கட்ட ஏற்பாடு செய்ய முயன்றபோது, தி.மு.க.,பிரமுகர் ஒருவர் என்னிடம் வந்து இங்கு வீடு கட்ட வேண்டும் என்றால் ரூ.2 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றார்.

    நான் பணம் தர மறுக்கவே, பணம் கொடுக்கவில்லை என்றால் உன் நிலத்தை பள்ளி மைதானத்திற்கு சேர்த்துவிடுவேன் என மிரட்டி சென்றார். தற்போது, அவர் கூறியது போல் நேற்று அதிகாரிகள் உதவியுடன் நிலத்தை பள்ளி மைதானத்திற்கு சேர்க்க நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    இதனால் குழந்தை மற்றும் தங்கையுடன் வீடு இல்லாமல் தவிக்கிறேன். எனவே அரசு எனக்கு அதே இடத்தில் 2 செண்ட் நிலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மைதானம் செல்ல 2 இடங்களில் வழியுள்ள நிலையில் வேண்டும் என்றே எங்கள் நிலத்தை கேட்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • வாழப்பாடி அடுத்த புத்தியம்பாளை யத்தை சேர்ந்த பொன்னம் மாள் மற்றும் அவரது 2 மகள்கள் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர்.
    • எனது பெயரில் இருந்த சொத்தை, எனது 2 மகள்களுக்கும் பிரித்து கொடுக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில், வாழப்பாடி அடுத்த புத்தியம்பாளை யத்தை சேர்ந்த பொன்னம் மாள் (வயது 60) மற்றும் அவரது 2 மகள்கள் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர்.

    அவர்களிடம் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    எனது பெயர் பொன்னம்மாள். எனக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகன், எனது கணவர் பெயரில் இருந்த 2 1/2 ஏக்கர் நிலத்தை எடுத்துக் கொண்டார். என் பெயரில் 1 1/2 ஏக்கர் சொத்து இருந்தது. இதை எனது இளைய மகன் லோகநாதன் எடுத்துக்கொண்டார்.

    எனது பெயரில் இருந்த சொத்தை, எனது 2 மகள்களுக்கும் பிரித்து கொடுக்க வேண்டும். இதனை வற்புறுத்தி தீக்குளிக்க முயன்றதாக கூறினார். இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டாஸ்மாக் கடை கொள்ளை முயற்சி நடந்தது.
    • காமிரா காட்சிகள் வெளியானதால் பரபரப்பு நிலவியது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வீரசோழன் - மானாசாலை செல்லும் வழியில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு முருகன், பாலகிருஷ் ணன் ஆகியோர் விற்பனை யாளர்களாகவும், திருச்சுழியை சேர்ந்த இரு ளாண்டி சூப்பர்வைசராக வும் பணியாற்றி வருகின்ற னர்.

    இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை அடித்து நொறுக்கிவிட்டு கடையில் இருந்த மதுபான பாட்டில்களை மூட்டை களாக கட்டி தூக்கிக் கொண்டு வெளியே வந்துள்ளனர்.

    அப்போது இரவு ரோந்து செல்லும் வீரசோழன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கமல் மற்றும் போலீசார் அந்தப்பகுதியில் வருவதை கண்ட மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையில் திருடிய மதுபாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.

    இது தொடர்பாக கடையின் சூப்பர்வைசர் இருளாண்டி கொடுத்த புகாரின் பேரில் வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே டாஸ்மாக் கடையில் புகுந்து மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடும் சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×