search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227210"

    • ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

    சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் பார்வையாளர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதில், காரைக்குடியை சேர்ந்த பாண்டி (32) என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வேலூர் மங்களாம்பட்டியை சேர்ந்த முருகன் (55) என்பவரும் மாடு முட்டி உயிரிழந்துள்ளார்.

    மேலும், மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

    • மஞ்சுவிரட்டு போட்டிக்கு தடைகேட்ட வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
    • அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை பதிவு செய்து கொண்டு வழக்கி னை முடித்து வைத்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்த முரு கேசன் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தி ருந்தார். அதில் கூறியிருப்ப தாவது:-

    மதுரை மாவட்டம், மேலூர் தாலுகாவில் உள்ள கம்பளிப்பட்டி, நாகப்பன் சீவல்பட்டி, கந்துகப்பட்டி, தாயம்பட்டி ஆகிய கிராமங் களை உள்ளடக்கியது நெல்லுக்குண்டுபட்டி கிராமமாகும்.இந்த கிராமத்தில் உள்ள அழகு நாச்சியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டு நாளை முதல் 9-ந் தேதி வரை கோயில் திருவிழாவை நடத்த கிராம மக்கள் ஒன்று கூடி முடிவு செய்துள்ளோம்.

    மேலும் கோயில் திருவிழாவின் கடைசி நாளில் மஞ்சுவிரட்டு மற்றும் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

    கடந்த ஆண்டு சிறுவன் ஒருவன் ஆடல் பாடல் நிகழ்ச்சியின்போது படுகொலை செய்யப்பட்ட காரணத்தால் கிராமத்தில் பெரும் பதற்றம் உருவாகி சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டது.

    அதனால், இந்த ஆண்டு கோயில் திருவிழாவில் மஞ்சுவிரட்டு, ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த வேண்டாம் என கிராம மக்கள் அனைவரும் முடிவு செய்துள்ளோம்.

    இந்நிலையில் கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் 5 கிராம மக்களின் முடிவுக்கு எதிராக மஞ்சு விரட்டு நடத்த அனுமதி கோரி மனு அளித்துள்ளனர். அப்படி, மஞ்சுவிரட்டு நடத்தினால் கிராமத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

    எனவே, மதுரை, மேலூர், நெல்லுக்குண்டு பட்டி கிராமத்தில் மஞ்சுவிரட்டு நடத்த தடைவிதித்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது அரசுத் தரப்பில், மனுதாரர் கூறியது போன்று மஞ்சுவிரட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி கோரி எந்த மனுவும் மாவட்ட நிர்வாகத்திற்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து நீதிபதிகள், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை பதிவு செய்து கொண்டு வழக்கி னை முடித்து வைத்தனர்.

    • திருப்பத்தூர் அருகே நடந்த மஞ்சுவிரட்டில் 500 காளைகள் பங்கேற்றன.
    • இந்த போட்டியில் 19 பேர் படுகாயமடைந்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே குமாரபேட்டை கிராமத்தில் அழகிய நாச்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பங்குனி திருவிழாவையொட்டி 5 ஊர் நாட்டார்கள் சார்பில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. 69-வது ஆண்டாக பாரம்பரிய மஞ்சு விரட்டு நிகழ்ச்சி மாவட்ட நிர்வாக அனுமதியுடன் நடைபெற்றது.

    இந்த மஞ்சுவிரட்டில் காளைகள் அனைத்தும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 16 காளைகள் நிராகரிக்கப் பட்டு 274 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 50 மாடுபிடி வீரர்கள் 2 குழுவாக காளைகளை பிடித்தனர். முன்னதாக வயல்வெளிகளில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன.

    இதில் சீறிபாய்ந்த காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் என 19 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அவசர சிகிச்சை மையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த 2பேர் மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து மற்றும் வருவாய் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அழகியநாச்சி அம்மன் கோவில் விழாக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கறம்பக்குடி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு நடபெற்றது
    • நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும் காளையை அடக்கிய வீரர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுக்கா மாங்கோட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோவில் சந்தன காப்பு திருவிழாவை முன்னிட்டு கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்களால் 4ம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து 11 மஞ்சுவிரட்டு காளைகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு காளையையும் அடக்க ஒன்பது மாடுபிடி வீரர்கள் களத்தில் இறக்கி விடப்பட்டனர்.

    இந்த வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை கறம்பக்குடி தாசில்தார் ராமசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும் காளையை அடக்கிய வீரர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலங்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தீபக் ரஜினி தலைமையில் செய்திருந்தனர். இப்போட்டியை மாங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பார்த்து மகிழ்ந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.


    • மாடுவிடும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
    • காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பெலமாரன அள்ளி கிராமத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மஞ்சுவிரட்டு எனப்படும் மாடுவிடும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது .

    இதன் ஒரு பகுதியாக இன்று பெலமாரன அள்ளி கிராமத்தில் நடைபெற்ற மஞ்சு விடும் நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. கோ பூஜை செய்த பின்னர் கிடாவெட்டி தலையை குழிதோண்டி புதைந்த பின்னர். புனித நீர் காளைகளின் மேல் தெளித்த உடன் முதலில் ஊர் கவுண்டர் காளை அவிழ்த்து விடப்பட்டது.

    அதனை தொடர்ந்து கொம்பன் பட்டம் கொம்பில் கட்டி அலங்கரிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக ஒவ்வென்றாக அவிழ்த்து விட்டனர். ஏராளமான இளைஞர் போட்டி போட்டு காளையை விரட்டி சென்றனர்.சீறி பாய்ந்து வரும் காளைகளின் கொம்பில் உள்ள கொம்பன் பட்டத்தை அதிகமாக அவிழ்த்து எடுக்கும் இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பார்வையாளர்கள் பத்துக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர் காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

    • மஞ்சுவிரட்டில் 126 வீரர்கள் பங்கேற்றார்.
    • துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 17-வது ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி வடமாடு மஞ்சு விரட்டு கண்ணன் கோவில் திட லில் நடந்தது.

    தி.மு.க. மாவட்ட செய லாளர் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கிருஷ்ணாபுரம் கிராம தலைவரும், ஜல்லிக்கட்டு வடமாடு எருதுகட்டு பேரவை தலைவருமான ஆதித்தன் வரவேற்றார்.

    பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான காளைகள் போட்டியில் பங்கேற்றன. போட்டியில் முதல் காளை யாக காஞ்சிரங்குடி செவளைக்காளை களமிறக்கப்பட்டது. 9 பேர் கொண்ட குழு வினர் மாடுபிடிக்க அனுமதிக்கப்பட்டனர். சிவகங்கை மாவட்டம் சோளம்பட்டி தங்கம் நினைவு குழு வீரர்கள் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசு பெற்றனர்.

    காளைகளில் செல்வ குமார் என்பவரது காளை சிறப்பு பரிசு பெற்றது. மாடுபிடி வீரர்களுக்கு 25 நிமிடங்கள் காளையை பிடிக்க நேரம் ஒதுக்கப்பட்டது.

    இதில் மாவட்ட கவுன்சிலர்கள் மண்டபம் மேற்கு கவிதா கதிரேசன், திருப்புல்லாணி ஒன்றிய சேர்மன் புல்லாணி, திருப்புல்லாணி மேற்கு கார்த்திகேஸ்வரி கொத்த லிங்கம், ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் சங்கு (எ) முத்து ராமலிங்கம், திருப்புல்லாணி கிழக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் நாகேஸ்வரன், காஞ்சிரங்குடி ஊராட்சி தலைவர் முனியசாமி, மதுரை பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை கிருஷ்ணா புரம் கிராம பொதுமக்கள், விளை யாட்டுக்குழு, அனைத்து மகளிர் மன்றங்கள் செய்திருந்தன. போட்டியை காண்பதற்கு பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்தக்கோரி மனு அளிக்கப்பட்டது.
    • வடமாடு நல சங்கம் சார்பில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கொடுத்தனர்.

    சிவகங்கை

    வாடிவாசல் மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை ஜனவரி முதல் மே மாதம் வரை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளாக கோவில் திருவிழா மற்றும் விவசாய பணிகள் காரணமாக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் நடந்தன. சிவகங்கை மாவட்ட கலெக்டர் மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு போட்டிகள் மே மாதத்திற்கு பிறகு நடத்த அனுமதி இல்லை என்று அறிவித்தார். மீறி மஞ்சு விரட்டு நடைபெற்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தார்.

    இந்த நிலையில் தமிழ்நாடு வடமாடு நல சங்கம் சார்பில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மதுசூதன் ரெட்டியை சந்தித்து மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்த கால நீட்டிப்பு வழங்க கோரி மனு கொடுத்தனர்.

    பின்னர் கவுரவ தலைவர் பனங்குடி சேவியர் கூறுகையில், வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என்றால் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

    மாநில தலைவர் அந்தோணி, துணைத்தலைவர் பரத்ராஜ் மற்றும் 200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூரில் 23 ஆண்டுகளுக்கு பின் மஞ்சுவரட்டு நடந்தது.
    • இந்த மஞ்சுவிரட்டில் 4 பேர் காயமடைந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தென்மா பட்டு ஆதினமிளகி அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.

    திருவிழாவை முன்னிட்டு தென்மாபட்டு கிராம முக்கியஸ்தர்கள் சின்னையா கோவிலில் இருந்து கிராம பட்டெடுத்து வந்து தென்மாபட்டு கண்மாய் பகுதியில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டு கண்மாய்க்குள் அவிழ்த்து விடப்பட்டது.

    சீறி பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக பிடித்தனர். இந்த மஞ்சுவிரட்டில் 4 பேர் காயமடைந்தனர். இங்கு 23 ஆண்டுகளுக்கு பிறகு மஞ்சுவிரட்டு நடைபெறுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    மஞ்சுவிரட்டு முடிந்தவுடன் கிராம பாரம்பரியமான விருந்து உபசரிப்பு நடைபெற்றது.

    • ஆண்டு முழுவதும் வடமஞ்சுவிரட்டு நடத்த கோரி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • இந்தபோட்டி நடத்துவது மழை பெய்யும், விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் தான்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் அரசு உத்தரவுப்படி ஜனவரி முதல் மே மாதம் வரை 5 மாதங்கள் மட்டுமே வடமஞ்சுவிரட்டு நடத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி அறிவித்து உள்ளார்.

    இந்த நிலையில் வடமஞ்சுவிரட்டு நடத்துவது தொடர்பாக சிவகங்கையை அடுத்த சக்கந்தியில் தமிழ்நாடு வடமாடு நலச்சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் அந்தோணிமுத்து, துணை தலைவர் பாரத்ராஜா முன்னிலை வகித்தார்.

    இதில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கோவில் மற்றும் தேவாலய விழாக்களில் விதிமுறை பின்பற்றியே ஆண்டு முழுவதும் வடமஞ்சுவிரட்டு நடந்து வந்தது.

    வடமாடு மஞ்சு விரட்டு நடத்துவது மழை பெய்யும், விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில்தான். மேலும் வடமாடு மஞ்சுவிரட்டில் சங்கத்தில் பதிவு செய்து, விதிமுறைகளை பின்பற்றும் வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

    முதல்-அமைச்சர் தேர்தல் அறிக்கையில் கூறியது போல் வருடம் முழுவதும் வடமஞ்சுவிரட்டு நடந்த அனுமதிக்க வேண்டும்.

    போட்டியில் மருத்துவ பரிசோதனை செய்த காளைகள் மட்டுமே களமிறக்கப்படுகின்றன. மேலும் தேர்வு செய்யப்படும் காளைகள், வீரர்கள் மட்டுமே களமிறக்கப்படுவதால், பார்வையாளர்கள், பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் இருக்காது.

    ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடப்பதால், வடமஞ்சு விரட்டும் ஆண்டு முழுவதும் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ஜனவரி முதல் மே மாதம் வரை மட்டுமே வடமஞ்சுவிரட்டுக்கு அனுமதி தரப்படும்.மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

    இந்த உத்தரவை திரும்ப பெற்று ஆண்டு முழுவதும் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • மஞ்சுவிரட்டு போட்டியில் 300 காளைகள் பங்கேற்றன.
    • மாடுகளை பிடிக்க இளைஞர்கள் பட்டாளம் குழுமி இருந்தது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது வெள்ளலூர் நாடு. இதனை சார்ந்தது ஒத்தப்பட்டி. இங்குள்ள மந்தை கருப்பணசாமி மற்றும் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள கண்மாய் பகுதியில் தொழு அமைக்கப்பட்டு இருந்தது.

    இதில் மேலூர், வெள்ள லூர், உறங்கான்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் வந்திருந்தது. இதையொட்டி கிராமத்தின் சார்பில் ஜவுளி பொட்டலங்கள் கொண்டு வந்து காளைகளுக்கு வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மாடுகளை அவிழ்த்து விட்டனர். சீறிப்பாய்ந்து மாடுகளை பிடிக்க இளைஞர்கள் பட்டாளம் குழுமி இருந்தது. இதில் ஏராளமான மாடுகளை வீரர்கள் பிடித்தனர். மாடுகளை பிடிக்கும்போது 20-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.

    இதில் காயமடைந்த வீரர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மேலூர் மற்றும் வெள்ளலூர் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த மஞ்சுவிரட்டு போட்டியை காண சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கீழவளவு போலீசார் செய்திருந்தனர்.

    • பள்ளப்பட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
    • 1994-ம் ஆண்டு முதல் வடமாடு மஞ்சுவிரட்டு திருவிழாவின்போது 10 காளை மாடுகள் மட்டுமே பங்கேற்கும் என்பது கிராம மக்களின் பழக்கம் மற்றும் நடைமுறையாகும்.

     மதுரை

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜன். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டம் பள்ளப்பட்டியில் முத்தாலம்மன் கோவிலில் விழாக் குழு தலைவராக உள்ளேன். பள்ளப்பட்டி கிராம பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் திருவிழா வருகிற 15-ந்தேதி அன்று நடத்த முடிவு செய்துள்ளனர். திருவிழாவில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. முக்கியமாக வடமாடு மஞ்சு விரட்டு நடத்தப்படுகிறது.

    1994-ம் ஆண்டு முதல் வடமாடு மஞ்சுவிரட்டு திருவிழாவின்போது 10 காளை மாடுகள் மட்டுமே பங்கேற்கும் என்பது கிராம மக்களின் பழக்கம் மற்றும் நடைமுறையாகும்.

    வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த போலீசாரிடம் அனுமதி கோரினேன். ஆனால், எனது கோரி க்கையை பரிசீலிக்காமல் ெகாரோனா பரவல் உள்ளது என்றும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறி எனது மனுவை நிராகரித்து விட்டனர்.

    எனவே பள்ளப்பட்டியில் முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் வருகிற 15-ந்தேதி வடமாடு மஞ்சுவிரட்ட நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு நீதிபதிகள்சுந்தர் மற்றும் ஸ்ரீமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது, ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை தான் ஜல்லிகட்டு நடத்த மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்க இயலும் என விதிமுறையில் உள்ளது என்று கூறினார்.

    இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் மனுதாரர் தமிழக அரசிடம் மனு அளித்து உரிய நிவாரணம் பெறலாம் என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    • ஆத்தங்கரைபட்டியில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
    • மஞ்சுவிரட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருப்பத்தூர் போலீசார் செய்திருந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அருகே உள்ள ஆத்தங்கரை பட்டியில் பெரியகருப்பர், சின்ன கருப்பர் கோவில் திருவிழா நடந்தது.

    இதை முன்னிட்டு ஆத்தங்கரைபட்டி கிராம தலைவர் செல்வம் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் ஆகியோரின் தலைமையில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான காளைகள் கலந்து கொண்டன. வயல்வெளி பகுதிகளில் ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி பரிசுகளை வென்றனர்.

    மஞ்சுவிரட்டு காண வந்த விருந்தினர்களுக்கும் மாடுகளைக் கொண்டு வந்த வீரர்களுக்கும் அனைத்து வீடுகளிலும் விருந்தோம்பல் நிகழ்ச்சி நடந்தது. மஞ்சுவிரட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருப்பத்தூர் போலீசார் செய்திருந்தனர்.

    ×