search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகப்பட்டினம்"

    • 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் காட ம்பாடி மறைமலைநகரில் உள்ள பழமை வாய்ந்த கருமாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. ஏழைப் பிள்ளையார் கோவிலில் இருந்து நூற்றுக்கும்மேற்ப ட்ட பெண்கள் அம்ம னுக்கு பூதட்டுகளை கையில் ஏந்தியவாறு கருமாரியம்மன் கோவில் வரை ஊர்வலமாக சென்றனர்.பின்னர் கோவி லை சென்றடைந்த பக்தர்கள் அங்கு தங்களது நேர்த்தி க்கடன் நிறைவேற்றும் விதமாக அம்மனுக்கு பூவால் அபிஷேகம்செய்து மகா தீபாராதனை காண்பி க்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • முகாம்களில் 25,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு மெகா தடுப்பூசி முகாம்” நடைபெற உள்ளது.
    • மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நடக்க முடியாத நபர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெ க்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் வருகிற 12-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையம் ஆகியவை சேர்த்து சிறப்பு முகாம்களில் 25,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு மெகா தடுப்பூசி முகாம்" நடைபெற உள்ளது.

    மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நடக்க முடியாத நபர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    மேலும், விடுப்பட்டு போன முன்களப் பணியா ளர்கள், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் இரண்டாவது தடுப்பூசி தவணை செலுத்திக் கொள்ளவுள்ள நபர்கள் தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள்.

    செப்டம்பர் 2021-க்கு முன் இரண்டாவது தடுப்பூசி செலுத்திக் கொண்ட 60 வயதிற்கு மேற்பட்டு உள்ள அனைவருக்கும், சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் ஆகியோர் அனைவரும் தவறாது பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருப்பூண்டியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீசுயம்பு மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா முன்னிட்டு அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.
    • தேரடி விநாயகர் கோவிலில் இருந்து பழங்கள், மங்கள பொருட்கள், பட்டுப்பாவாடை, வேண்டுதல் நிறைவேற வேண்டி கரகம் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீசுயம்பு மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா முன்னிட்டு அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.

    இதில் தேரடி விநாயகர் கோவிலில் இருந்து பழங்கள், மங்கள பொருட்கள், பட்டுப்பாவாடை, வேண்டுதல் நிறைவேற வேண்டி கரகம் எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    அதைத்தொடர்ந்து அம்மனுக்கு பால்,பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், மஞ்சள்,இளநீர் உள்ளிட்ட 11 வகையான திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    ×