என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சப்பாத்தி"
- உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீட்ரூட்டை உட்கொள்வது மிகவும் நல்லது.
- இதில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 2 கப்,
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.
அரைக்க:
பீட்ரூட் (நடுத்தரமான அளவு) - 1,
சோம்பு - ஒரு டீஸ்பூன்,
மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்,
பூண்டு (விருப்பப்பட்டால்) - 2 பல்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை தண்ணீர் சேர்த்து அரைத்து, வடிகட்டிக் கொள்ளுங்கள்.
வடிகட்டிய சாறுடன் கோதுமை மாவு. நெய், உப்பு சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
பின்னர் மாவை சப்பாத்தியாக திரட்டி வைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான பீட்ரூட் சப்பாத்தி ரெடி.
அழகிய பிங்க் கலரில் கண்ணைக் கவரும் இந்த சப்பாத்தி, குழந்தைகளுக்கு பிடித்தமான அயிட்டம்.
- இந்த சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை.
- குழந்தைகளுக்கு இந்த ரெசிபி மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 1
மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 1 தேக்கரண்டி
ஓமம் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
சின்ன வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஓர் அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் உப்பு, தேவையான அளவு தண்ணீர், சிறிது எண்ணெய் சேர்த்துப் பிசையவும்.
பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், ஓமம், மல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து 30 நிமிடம் அப்படியே வைக்கவும். மாவுக்கலவை அதிகம் இறுக்கமாகவும், இளக்கமாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருக்க வேண்டும்.
சப்பாத்திக்குத் தேவையான அளவில் மாவுகளை உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக தேய்த்து வைக்கவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் செய்து சப்பாத்தியை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பில் போட்டு இருபக்கமும் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சுவையான மசாலா சப்பாத்தி ரெடி.
- இந்த ரெசிபியை குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்சில் வைத்து கொடுக்கலாம்.
- இந்த ரெசிபியை செய்வதற்கு 15 நிமிடங்களே போதுமானது.
தேவையான பொருட்கள் :
சப்பாத்தி - 5,
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்),
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - ஒரு கப்,
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - சிட்டிகை,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.
சப்பாத்திகளின் நடுவே வதக்கிய கலவையை வைத்து பாய் போல சுருட்டவும்.
தோசைக்கல்லை காய வைத்து சுருட்டிய சப்பாத்திகளை வைத்து இருபுறமும் டோஸ்ட் செய்து எடுத்து பரிமாறவும்.
சூப்பரான சப்பாத்தி ரோல் ரெடி.
- இந்த சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும்.
- இந்த சப்பாத்தி செய்வதும் எளிது, சுவையும் அலாதியானது.
தேவையான பொருட்கள் :
பிரெட் துண்டுகள் - 10,
மைதா மாவு - 100 கிராம்,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
பால் - 100 மில்லி,
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்,
நெய் - 4 டீஸ்பூன்.
செய்முறை:
பிரெட் துண்டுகளை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
மைதா மாவுடன் வெண்ணெய், பால், சர்க்கரை, பொடித்த பிரெட் சேர்த்துப் பிசைந்து, 30 நிமிடம் மூடி வைக்கவும்.
இந்த மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு இருபுறமும் லேசாக நெய் தடவி சுட்டு எடுக்கவும்.
இந்த சப்பாத்தியை அப்படியே சாப்பிடலாம்.
பிரெட், சர்க்கரை பால் சேர்ப்பதால் சுவை அருமையாக இருக்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்