என் மலர்
நீங்கள் தேடியது "விழிப்புணர்வு பேரணி"
- வளர்ந்த நாடாக உருவாக்க ஊழலற்ற இந்தியா என்ற தலைப்பில் நடந்த பேரணி நாகர்கோவில் டதி பள்ளியில் இருந்து தொடங்கியது
- மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு பங்கேற்றனர்
நாகர்கோவில் :
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் நாகர்கோவிலில் விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது. வளர்ந்த நாடாக உருவாக்க ஊழலற்ற இந்தியா என்ற தலைப்பில் நடந்த பேரணி நாகர்கோவில் டதி பள்ளியில் இருந்து தொடங்கியது. அமைச்சர் மனோ தங்கராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு பங்கேற்றனர். விழிப்புணர்வு பேரணி மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, மணி மேடை,வேப்ப மூடு வழியாக மீண்டும் டதி பள்ளியை வந்தடைந்தது.
நிகழ்ச்சியில் கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகரன் பிரசாத்,லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு பீட்டர் பால், முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தேசிய ஒற்றுமை நாளை முன்னிட்டு, அத்திமுகம் கிராமத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- இந்த நாளின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றி பேரணியை தொடங்கி வைத்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே அத்திமுகத்தில் உள்ள அதியமான் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில், தேசிய ஒற்றுமை நாளை முன்னிட்டு, அத்திமுகம் கிராமத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் ஸ்ரீதரன், இந்த நாளின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றி பேரணியை தொடங்கி வைத்தார். இதில், மாணவ, மாணவியர்கள் ஒற்றுமை விளக்க பலகைகளை ஏந்தி முழக்கமிட்டு சென்றவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, கல்லூரி முதல்வர் தலைமையில், கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் அனைவரும் ஒன்றிணைந்து தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்றனர்.
- திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டம் சார்பில் விநியோகம்
- ஏராளமனோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டம், திருப்பத்தூர் கோட்டம் சார்பில் மழைக்காலங்களில் பொதுமக்கள் மின் சாதனங்களை கையாள்வது குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு செயற்பொறியாளர் அருள் பாண்டியன் தலைமை வகித்தார். உதவி செயற்பொறி யாளர்கள் பிரபு, கண்ணன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக உதவி கலெக்டர் லட்சுமி, தாசில்தார் சிவப்பிரகாசம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி பேரணியை தொடங்கி வைத்து பேசினர்.
விழிப்புணர்வு பேரணி வாணியம்பாடி மெயின் ரோடு, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சப் கலெக்டர் அலுவலகம் வழியாக மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தின் அருகில் முடிவடைந்தது.
பேரணியில் உதவி செயற்பொறியாளர்கள் சுப்பிரமணி, சந்தானம், உதவி பொறியாளர்கள், முகமது முஸ்தபா, சுதாகர், பி.சோமு, மனோஜ், உள்ளிட்ட மின்வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
- 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்
- 1 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து ெசன்றனர்
வேலூர்,
காட்பாடி ஆக்ஸிலியம் கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் மற்றும் சைக்காலஜி துறை, சமூகப் பணித் துறை சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
ஆக்ஸிலியம் கல்லூரி முதல்வர் ஜெயன்சாந்தி, சமூகப்பணித் துறைத் தலைவர் ஷர்மி அல்தாப், ஊடகத்துறை ராதிகா மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
பேரணி ஆக்ஸிலியம் கல்லூரியில் இருந்து தொடங்கியது. டான் போஸ்கோ பள்ளி காட்பாடி வழியாக 1 கிலோமீட்டர் தூரம் வரை சென்று விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பினர்.
- இந்திய மருத்துவ சங்கம் மற்றும் ஆத்தூர் பாரதியார் ஹைடெக் இன்டர்நேஷனல் பள்ளி இணைந்து புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடத்தியது.
- இதில், 500-க்கும் மேற்பட்ட பாரதியார் ஹைடெக் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவிகள் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூரில் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் ஆத்தூர் பாரதியார் ஹைடெக் இன்டர்நேஷனல் பள்ளி இணைந்து புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடத்தியது. ஆத்தூர் சாரதா ரவுண்டானாவில் தொடங்கி காமராஜர் சாலை, ரங்கசாமி தெரு, கடைவீதி, ராணிப்பேட்டை பஸ் நிலையம் வழியாக பேரணி நடைபெற்றது. இதில், 500-க்கும் மேற்பட்ட பாரதியார் ஹைடெக் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் மருத்துவர்கள் ஊர்வலமாக சென்றும், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்திய மருத்துவ சங்க செயலாளர் கிருபா சங்கர், டாக்டர்கள் ஃபீலோ செல்விக்குமுதம், அருண் குமார், சுரேஷ் சுப்பிரமணியம் உள்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
- வாக்குச்சாவடி மையங்களை அணுகி படிவங்களை பூர்த்தி செய்து தர வேண்டும்.
- பாரதிபுரம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று வாக்காளர் விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தினர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் அல்லது முகவரி மாற்றம் செய்யப்படும் வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி மையங்களை அணுகி படிவங்களை பூர்த்தி செய்து தர வேண்டும் என தெரிவிக்கும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேரணி இலக்கியம்பட்டி, செந்தில் நகர், பாரதிபுரம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று வாக்காளர் விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தினர்.
- உயர்நிலைப் பள்ளியில் தொடங்கி துங்காவி முழுவதும் அனைத்து வீதிகளிலும் நடத்தப்பட்டது.
- தூண்டுப் பிரசுரமும் யோகா விழிப்புணர்வு பற்றிய கோஷங்களும் எழுப்பப்பட்டு பேரணி நடத்தப்பட்டது.
உடுமலை :
யோகா விழிப்புணர்வு பேரணியை முன்னாள் எம். எல். ஏ., இரா. ஜெய ராமகிருஷ்ணன் துவங்கி வைத்தார் . துங்காவிஅரசு உயர்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய யோகா விழிப்புணர்வு பேரணியில் உடுமலை அறிவுத்திருக்கோயில் மனவளக்கலை யோகா ஆசிரியர்கள் மற்றும் ஸ்ரீஜீவிஜி விசாலாட்சி கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவியர்கள், மற்றும் நாட்டு நல பணித்திட்ட அலுவலர் முனைவர் பா. சிரஞ்சீவி நாட்டு நலப் பணித்திட்ட துணை அலுவலர் ம. மாலினி கலந்துஆகியோர் கொண்ட னர். இப்பேரணியானது உயர்நிலைப் பள்ளியில் தொடங்கி துங்காவி முழுவதும் அனைத்து வீதிகளிலும் நடத்தப்பட்டது. பேரணியின் போது பொதுமக்களுக்கு யோகா விழிப்புணர்வு பற்றிய தூண்டுப் பிரசுரமும் யோகா விழிப்புணர்வு பற்றிய கோஷங்களும் எழுப்பப்பட்டு பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணி பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது.
மேலும் ஸ்ரீ ஜீவிஜி விசாலாட்சி கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் துங்காவி அரசு உயர்நிலைப் பள்ளியின் கடந்த ஆண்டு நாட்டு நலப்பணிதிட்ட தில் வைக்கப்பட்ட மரக்கன்றுகளுக்கு களை எடுத்தும் தண்ணீர் ஊற்றியும் தூய்மை பணி மேற்கொண்டனர். தொடர்ந்து ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி கல்லூரி மாணவிகள் துங்காவி அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கும் பொது அறிவு மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- மாற்றுத்திறனாளிகளை பள்ளியில் சேர்ப்பது குறித்து பிரசாரம் நடந்தது
- மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகொண்டாபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மையத்தில் நேற்று காலை மாற்றுத்திறன் மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பழனி, தலைமையாசிரியர் எம் ஆனந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
போளூர் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் சுரேஷ், செல்வதுரை, ஆசைத்தம்பி, சங்கீதா சிறப்பு கல்வியாளர்கள் விஜயலட்சுமி ஸ்டெல்லா பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், ஜேஆர்சி ஆலோசக ஆசிரியர் சந்திரநாதன் உள்பட மாணவ மாணவிகள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
இதில் மாற்றுத்திறன் மாணவர்களையும் பள்ளியில் சேர விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
கண்ணமங்கலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் கண்ணமங்கலம் பேரூராட்சி சார்பில் திட கழிவு மேலாண்மை விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.
உதவி தலைமை ஆசிரியர் சாந்தி தலைமையில் நடந்த இப்பேரணியில், முதுகலை ஆசிரியர்கள் சுப்பிரமணியன், ரவி, தனபால், பட்டதாரி ஆசிரியர்கள் ராஜா, சதீஷ், திருஞானசம்பந்தம், உள்பட பேரூராட்சி (துப்புரவு) பணியாளர்கள் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் நாகராஜ் துவக்கி வைத்தார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின்படி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் சார்பில் அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் நாகராஜ் துவக்கி வைத்தார். பேரணியில் மாணவ, மாணவிகள், உடற்கல்வி ஆசிரியர்கள், பள்ளியின் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.
பேரணி பள்ளியில் துவங்கி பேரூந்து நிலையம் வழியாக வட்டாச்சியர் அலுவலகம் வரை சென்று மீண்டும் பள்ளியில் முடிவுற்றது. பேரணியில் மாணவர்கள் ஊனம் என்பது அடையாளம் அல்ல, மாற்றத்திற்க்கான திறன் மாற்றுத்திறன் போன்ற வாசகங்களை எழுப்பி சென்றனர்.
- ஆலமரத்துப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி களுக்கான விழிப்புணர்வு பேரணி தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது.
- பேரணியில் 6 மற்றும் 7 வகுப்பு மாணவ மாணவிகள் மற்றும் பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.
பாப்பாரப்பட்டி.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை அடுத்த ஆலமரத்துப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி களுக்கான விழிப்புணர்வு பேரணி தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது.
இதில் வட்டார வளமை மேற்பார்வையாளர் சரவணன், ஆசிரியர் பயிற்றுனர் வளர்மதி , சுதாகர் மற்றும் சிறப்பு பயிற்றுநர்கள் ராஜலட்சுமி, கமலேசன் குழு வளமை ஒருங்கிணைப்பாளர் மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேரணியில் 6 மற்றும் 7 வகுப்பு மாணவ மாணவிகள் மற்றும் பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.
- அலங்காநல்லூர் அரசு பள்ளியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- ஆசிரியர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்தில் உள்ள மணியஞ்சி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்த்தலுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தலைமை ஆசிரியர்கள் ஜோசப் சகாயம், சுபா ஆகியோர் தலைமை தாங்கினர்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரமேஷ்ராஜ் முன்னிலை வகித்தார். வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் தேவி, மைவிழிசெல்வி, சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு பேரணியின் போது பொதுமக்களிடம் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி மற்றும் அடிப்படை உரிமைகளை பற்றி விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.
- கோணகப்பாடி ஊராட்சி சார்பில் தூய்மை விழிப்புணர்வு நடைபயண நிகழ்ச்சி நடந்தது.
- நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் அம்சவள்ளிசதீஷ்குமார் தலைமை தாங்கினார்.
தாரமங்கலம்:
உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கோணகப்பாடி ஊராட்சி சார்பில் தூய்மை விழிப்புணர்வு நடைபயண நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் அம்சவள்ளிசதீஷ்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பிரபு முன்னிலை வகித்தார். தாரமங்கலம் கிழக்கு ஒன்றிய திமுக துணைச்செயலாளர் சதீஷ்குமார் பேரணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நீலாயினி, அத்திகட்டானுர் அரசு தொடக்க பள்ளி தலைமைஆசிரியர் சாந்தி, நிரஞ்சனா, வார்டு உறுப்பினர்கள் சவிதா, லோகேஸ்வரி சின்னுசாமி, மேகலாதயாளன், செல்வி மாதேஷ், மணி மற்றும் பணித்தள பொறுப்பாளர்கள், தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், டேங்க் ஆப்ரேட்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்ற அலுவலத்தில் இருந்து ெதாடங்கிய விழிப்புணர்வு பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசு பள்ளி வளாகத்தில் நிறைவு அடைந்தது.