search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழுது"

    • பிரிண்டருடன் கூடிய ஜெராக்ஸ் எந்திரத்தை கடந்த 2017-ம் ஆண்டு கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் கடையில் ரூ.67 ஆயிரம் கொடுத்து வாங்கினார்.
    • தொடர்ச்சியான பழுதால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் இழப்பீடாக அந்த நிறுவனம் ரூ.4 லட்சம் தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பூக்கார விளார் ரோட்டை சேர்ந்தவர் உமர்முக்தர் (வயது 33) வக்கீல். இவர் தஞ்சை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர் சங்கத்தில் தேவைக்காக ஜெராக்ஸ் கடை ஒன்றை வேலை ஆட்கள் மூலம் நடத்த முடிவு செய்தார்.

    இதற்கான பிரிண்டருடன் கூடிய ஜெராக்ஸ் எந்திரத்தை கடந்த 2017-ம் ஆண்டு கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் கடையில் ரூ.67 ஆயிரம் கொடுத்து வாங்கினார். ஆனால் வாங்கிய சில நாட்களில் அந்த எந்திரம் பழுதானது. இதையடுத்து சம்பந்த பட்ட கடை நிறுவனத்துக்கு உமர்முக்தர் தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அந்த நிறுவனம் சார்பில் எந்திரம் சர்வீஸ் செய்யப்பட்டது. ஆனால் தொடர்ந்து பழுது ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து கேட்டபோது அந்நிறுவனத்திடம் இருந்து சரியான பதில் வரவில்லை. இதனால் மன உளைச்சல் அடைந்த உமர்முக்தர் தனது நண்பர் வழக்குறைஞரான விக்னேசுடன் இணைந்து தஞ்சை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார்.அதில் ஜெராக்ஸ் எந்திரம் வாங்கிய செலவை விட பழுது பார்ப்பதற்கு ஆகி உள்ளது. தொடர்ச்சியான பழுதால் மன உளைச்சலுக்கு ஆளானேன். எனவே இழப்பீடாக அந்த நிறுவனம் ரூ.4 லட்சம் தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் மோகன்தாஸ் பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். அதில் பாதிக்கப்பட்ட உமர்முக்தருக்கு, சம்ப ந்தபட்ட நிறுவனம் இழப்பீ டாக ரூ.32 ஆயிரம் ஆண்டொன்றிற்கு வட்டி யாக 9 சதவீதம் சேர்த்து இம்முறையீடு தாக்கல் செய்த தேதியான கடந்த 2019 முதல் இந்த மாதம் 8-ந் தேதி வரையில் வழங்க வேண்டும்.

    மேலும் மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவு தொகையாக ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.47 ஆயிரத்தை 6 வார காலத்துக்குள் சம்பந்தபட்ட நிறுவனம் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    • கடந்த 2017-18-ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த உயர் கோபுர மின்விளக்கு சில மாத காலம் மட்டும் பயன்பாட்டில் இருந்த நிலையில் கஜா புயலின் போது சேதமடைந்தது.
    • இரவு நேரங்களில் பெண்கள் பஸ் நிலையத்தில் காத்திருக்க அச்சப்படும் நிலை உள்ளது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் கடைவீதி கிழக்கு கடற்கரை சாலையில் மூன்று சாலைகள் சந்திக்கும் முக்கிய இடத்தில் பஸ் நிலையம் அருகே சில ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சம் மதிப்பீட்டில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது.

    இது கடந்த கஜா புயலின் போது சேதமடைந்தது. தற்போது இதில் உள்ள ஆறு மின்விளக்குகளில் இரண்டு மட்டுமே உள்ளது. இதில் ஒரு மின்விளக்கு மட்டுமே ஒளிர்கிறது.

    இது குறித்து சேதுபாவாசத்திரம் சமூக ஆர்வலர் பாவா கூறுகையில், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பரசுராமன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கடந்த 2017-18-ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த உயர் கோபுர மின்விளக்கு சில மாத காலம் மட்டும் பயன்பாட்டில் இருந்த நிலையில் கஜா புயலின் போது சேதமடைந்தது.

    கிழக்கு கடற்கரை முக்கிய சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விளக்கு சேதமடைந்ததால் அப்பகுதியே இருளாக காணப்படுகிறது. இதன் காரணமாக இரவு நேரங்களில் பெண்கள் பஸ் நிலையத்தில் காத்திருக்க அச்சப்படும் நிலை உள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் ஆகியவற்றிற்கு தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    எனவே சம்பந்தப்பட்ட துறையினர் இந்த உயர்கோபுர மின் விளக்கை சீரமைத்து அனைத்து விளக்குகளும் ஒளிரும் வகையில் புதிதாக அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

    ×