search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமறைவு"

    • இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.
    • ஆந்திர மாநில வனச்சரகர் வெங்கட் ரமணா தலைமையில், வனத்துறை அதிகாரிகள் வெளாம்பள்ளி, சித்தேரி மலை கிராமங்களுக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    அரூர்,

    ஆந்திர மாநிலத்தில் செம்மரங்கள் வெட்டி கடத்தியதாக தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வெளாம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் சுந்தரவேலு (21), அதே ஊரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் அருணாசலம் (32) ஆகியோரை அந்த மாநில வனத்துறையினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்தனர்.

    இந்த நிலையில் , நீதிமன்ற காவலில் இருந்து ஜாமீனில் இருவரும் வெளி வந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து, ஆந்திர மாநில வனச்சரகர் வெங்கட் ரமணா தலைமையில், 5 பேர் கொண்ட வனத்துறை அதிகாரிகள் வெளாம்பள்ளி, சித்தேரி மலை கிராமங்களுக்கு வந்து தலைமறைவாக இருப்பவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த விசாரணையின் போது அரூர் வனச்சரகர் நீலகண்டன் உள்ளிட்ட தமிழக வனத்துறையினர் உடனிருந்தனர்.

    • கண்காணிக்கும் வகையில் மாவட்ட எல்லைப் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை, மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • போலீசார் மோட்டார் சைக்கிள் மற்றும் ரேஷன் அரிசியை உணவு கடத்தலில் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இருந்து சமீப காலமாக கர்நாடகா மாநிலத்திற்கும், ஈரோடு மாவட்டத்தில் தங்கி இருக்கும் வெளி மாநிலத்தவர்களுக்கும் ரேஷன் அரிசியை அதிகளவில் விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசியை கடத்தி வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

    எனவே இதனை கண்காணிக்கும் வகையில் மாவட்ட எல்லைப் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை, மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி மலையில் ஏரகனஹள்ளி -திகினாரை சாலையில் தாளவாடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் மூட்டையுடன் வந்து கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு அருகில் இருந்த புதரில் சென்று தப்பி சென்று விட்டனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டைகளை திறந்து பார்த்தபோது ரேஷன் அரிசி கடத்தி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

    பின்னர் போலீசார் மோட்டார் சைக்கிள் மற்றும் ரேஷன் அரிசியை உணவு கடத்தலில் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

    மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் ரேஷன் அரிசி கடத்தல் ஈடுபட்டது திகினாரையை சேர்ந்த மாதேவா, ஜெயலட்சுமி என தெரிய வந்தது. தப்பி ஓடிய இருவரையும் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    • ராதாபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • கோபம் கலந்த பாசத்தை வெளிப்படுத்தி கதறி அழுதனர்

    கன்னியாகுமரி :

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் பண்டாரக்குளம் பகுதியை சேர்ந்தவர் சுடலை. இவரும், இவரது மனைவி முத்துபேச்சியும் கடந்த ஒரு வருடமாக குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே பெரியவிளை கடற்கரை பகுதியில் கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர். இவர்களது 14 வயது சிறுமி ராதாபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த பள்ளி கோடை விடுமுறையை முன்னிட்டு சிறுமி பெரியவிளை வந்து பெற்றொருடன் தங்கினாள். இந்நிலையில் கடந்த மாதம் 27-ந்தேதி இரவு பெற்றோருடன் படுத்து தூங்கிய சிறுமியை காணவில்லை. சிறுமியை ஈத்தாமொழி அருகே சுண்டபற்றி விளையை சேர்ந்த தேங்காய் வெட்டும் தொழிலாளி செல்வகுமார் (35) என்பவர் கடத்தி சென்றதாக கூறப்பட்டது.

    இதுகுறித்து தாயார் முத்துபேச்சி குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் செல்வகுமார் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். போலீசார் இருவரையும் தேடுவதை அறிந்த செல்வகுமார் நேற்று மாணவியை மணவாளக்குறிச்சிக்கு பஸ் ஏற்றி விட்டு தலைமறைவானார்.

    இந்நிலையில் நேற்று காலை மகளிர் சப்-இன்ஸ்பெக்டர் பிரேமா மண்டைக்காடு அருகே பரப்பற்று பகுதியில் ரோந்து செல்லும்போது, அங்கு தனியாக ஒரு சிறுமி அழுது கொண்டிருந்தாள். போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த சிறுமி பெரியவிளை கூடாரத்திலிருந்து காணாமல் போனவர் என தெரியவந்தது. உடனே போலீசார் சிறுமியை போலீஸ் நிலையம் அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக சிறுமியை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி மீட்கப்பட்ட தகவலறிந்த உறவினர்கள் குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்தில் திரண்டனர். அவர்கள் போலீஸ் நிலையத்திலேயே சிறுமியை பேசி, கோபம் கலந்த பாசத்தை வெளிப்படுத்தி கதறி அழுதனர். இது காண்போரின் நெஞ்சை உருக்கியது.

    • பெண்ணை தாக்கி வீட்டை சேதப்படுத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்
    • மேலும் தலைமறைவான சண்முகநாதனை தேடி வருகின்றனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே ஒச்சத் தேவன்கோட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னையா. இவரது மனைவி முனீஸ்வரி (வயது49). இவர்களது மகன் கோட்டைச்சாமி (26) என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் (28) என்பவருக்கும் முன்பகை இருந்தது.

    இந்த நிலையில் சண்முக நாதன் தனது நண்பர்கள் சிவபாரதி (20), முத்து ராமலிங்கம் (28) ஆகியோ ருடன் பொன்னையா வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் முனீஸ்வரி தனியாக இருந்தார். அவரை 3 பேரும் சேர்ந்து அவதூறாக பேசி அடித்து கீழே தள்ளி விட்டனர். பின்னர் வீட்டின் ஓடுகளை கம்பால் தாக்கி சேதப்படுத்தி உள்ளனர். மேலும் அங்கிருந்த டிராக்டரில் ஏறி தப்பி சென்றனர். டிராக்டரை அருகே உள்ள கருவேல மர காட்டுப்பகுதியில், நிறுத்தி விட்டு சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து கோவிலாங் குளம் போலீஸ் நிலையத் தில் முனீஸ்வரி அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவபாரதி மற்றும் முத்துராமலிங்கம் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான சண்முகநாதனை தேடி வருகின்றனர்.

    • குமரி மாவட்ட தனிப்படையினர் விரைந்தனர்
    • ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் மட்டும் 6 வழக்குகள் உள்ளன.

    கன்னியாகுமரி :

    ஆரல்வாய்மொழி கிறிஸ்து நகரை சேர்ந்தவர் ஏசுதாசன் (வயது 62). செங்கல் சூளை அதிபரான இவர், கடந்த 9-ந்தேதி இரவு ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக போலீ சார் நடத்திய விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்திருப்பது தெரியவந்தது. அதே பகுதியை சேர்ந்த ரவுடி அன்பு என்ற அன்பழகன், விஜயன், திருப்பதிசாரம் மணிகண்டன், மிஷன் காம்பவுண்ட் தங்கஜோஸ் ஆகியோர் தான் கொலை யாளிகள் என தெரியவர, போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

    மேலும் கொலையாளி களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அப்போது மலைப்பகுதியில் கொலையாளிகள் பதுங்கி இருக்கலாம் என கிடைத்த தகவலின் அடிப்படையில், டிரோன் மூலம் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    இதில் தங்கஜோஸ் போலீசாரிடம் சிக்கினார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தங்கஜோஸ் மீது பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் மட்டும் 6 வழக்குகள் உள்ளன. ரவுடிகள் பட்டியலிலும் அவரது பெயர் உள்ளது.

    இவர், அன்புவுடன் சேர்ந்து ஏசுதாசனை கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தங்கஜோசின் சகோதரிகள் இருவர், சென்னையில் போலீசாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கைதான தங்கஜோசிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள அன்பு உள்ளிட்ட 3 பேரையும் தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்ற னர். அவர்களது போட்டோக் களை வெளியிட்டு, பொதுமக்களிடம் பரப்புரை செய்தும் வருகின்றனர். இதற்கிடையில் கொலை யாளிகள் கேரளாவில் பதுங்கி இருப்பதாக தனிப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படையினர் அங்கு விரைந்துள்ளனர். இது குறித்து போலீசார் கூறும்போது குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றனர்.

    • 14 வயது பள்ளி சிறுமிக்கு, அதே பகுதியை சேர்ந்த எலட்டிரிசியன் அன்புசெல்வன் (வயது 27) என்பவர் பாலியல் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது
    • போலீசாருக்கு பயந்து அன்பு செல்வன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நெடுங்காடு பகுதியை சேர்ந்த 14 வயது பள்ளி சிறுமிக்கு, அதே பகுதியை சேர்ந்த எலட்டிரிசியன் அன்புசெல்வன் (வயது 27) என்பவர் பாலியல் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது. தலைமறைவுஇதுகுறித்து சிறுமியின் தந்தை நெருங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அன்புசெல்வனை தேடி வந்தனர்.      இந்நிலையில், கடந்த 13-ந்தேதி அன்புசெல்வன் வீட்டில் பதுங்கி இருப்பதாக நெடுங்காடு போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் போலீசார் விரைந்தனர். அப்போது போலீசாருக்கு பயந்து அன்பு செல்வன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஆபத்தானநிலையில் இருந்த அன்பு செல்வனை போலீசார் மீட்டு, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 4 நாட்கள் சிகிச்சையில் இருந்த அன்பு செல்வன் உடல்நிலை சரியானதை அடுத்து போலீசார் போக்சோ வழக்கில் அன்புசெல்வனை கைது செய்து காரைக்கால் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 5 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.
    • வடக்கு போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கொலை முயற்சி வழக்கில் கைதான திருப்பூர் பெரியாயிபாளையத்தை சேர்ந்த நவீன் ஆனந்த் (வயது 29) என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல் முகவரியே மாற்றி குடியேறி தலைமறைவாக இருந்தார்.

    இந்த நிலையில் வடக்கு போலீசார் அருள் புரத்தில் நேற்று நவீன் ஆனந்த்தை கைது செய்து ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வடக்கு போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

    • 10 மகளிர் குழு உறுப்பினர்களிடம் ஒரு லட்சம் வட்டியில்லா கடன் தருவதாக கூறி முன்பணமாக ரூ.34 லட்சம் பெற்று மோசடி செய்தனர்.
    • இந்நிலையில் பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றம் நடுவர் எண்-1 மகேஷ், ஜெரால்ட்க்கு பிடி ஆணை பிறப்பித்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி வி.ஆண்டிக்குப்பம் கிராமத்தில் கடந்த 2011-ம் ஆண்டு அன்னை தனியார் தொண்டு நிறுவனம் செயல்பட்டது. இங்கு 10 மகளிர் குழு உறுப்பினர்களிடம் ஒரு லட்சம் வட்டியில்லா கடன் தருவதாக கூறி முன்பணமாக ரூ.34 லட்சம் பெற்று மோசடி செய்தனர். இது சம்மந்தமாக திருச்சி கருமண்டபம் சேர்ந்த ஜெரால்ட் (வயது 31) என்பவரின் மீது பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் 8 வழக்குகள் விசாரணையில் இருந்து வருகிறது. இதில் நீதிமன்றத்தில் ஜெரால்ட் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததார்.

    இந்நிலையில் பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றம் நடுவர் எண்-1 மகேஷ், ஜெரால்ட்க்கு பிடி ஆணை பிறப்பித்தார். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் குருசாமி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், ராஜசேகரன் மற்றும் தலைமை காவலர் பாபு ஆகிய தனிப்படையினர் திருச்சியில் தலைமறைவாக பதுங்கியிருந்த ஜெரால்ட்டை பிடித்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • நாட்டு துப்பாக்கி - கார் பறிமுதல்
    • சமையலுக்காக வைத்திருந்த மிளா இறைச்சியை வனத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    நாகர்கோவில்:

    அழகியபாண்டியபுரம் வனச்சரகம் தடிக்காரன்கோ ணம் அருகே பால்குளத்தில் உள்ள ஒரு தனியார் தோட் டத்தில் மிளா வேட்டை யாடப்படுவதாக மாவட்ட வன அதிகாரி இளைய ராஜாவுக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தர விட்டார். அதன் பேரில் உதவி வன அதிகாரி சிவகுமார் தலைமையில் வனவர்கள் பிரபு, பிரவீன் மற்றும் வன ஊழியர்கள் சரவணன், வேல்முருகன், சுரேஷ், பென்சாம், பிரபு சிங், பிரவீன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தடிக் காரன்கோணம் வனப்பகுதி வீரப்புலியில் உள்ள ஒரு தோட்டத்தில் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் மிளா இறைச் சியை சமையலுக்கு தயார் செய்து கொண்டு இருந்தது தெரியவந்தது.

    இதைப்பார்த்த அதிகா ரிகள் உடனே வீட்டின் உரிமை யாளரான மனக்கா விளையை சேர்ந்த ராஜேஷ் குமார் (வயது 43) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி னர். அப்போது ராஜேஷ் குமார் மற்றும் தடிக்காரன் கோணத்தை சேர்ந்த ஜெகன் (29), ஜோஸ் மற்றும் சிவராஜன் ஆகியோர் சேர்ந்து மிளாவை வேட்டை யாடியது தெரியவந்தது.

    வனத்துறையினர் ராஜேஷ்குமார் மற்றும் ஜெகன் இருவரையும் கைது செய்தனர். ஜோஸ், சிவராஜன் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். மிளாவை வேட்டையாட பயன்படுத்திய ஒரு நாட்டு துப்பாக்கி, ஒரு கார், ஒரு ஸ்கூட்டர் மற்றும் சமையலுக்காக வைத்திருந்த மிளா இறைச்சி ஆகிய வற்றை வனத்துறை அதிகாரி கள் கைப்பற்றினர்.

    இதுபற்றி உதவி வன அதிகாரி சிவகுமார் கூறியதாவது:-

    மிளா வேட்டையாடியது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். கைது செய்யப் பட்டவர்களிடமிருந்து ஒரு நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இன்னொரு நாட்டு துப்பாக்கி தலைமறைவாக உள்ளவர்களிடம் உள்ளது. இந்த மிளா வேட்டையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்று விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மோகன் (வயது 54). இவரை கடந்த 2009-ம் ஆண்டு, அம்மாபேட்டை போலீசார் ஒரு வழக்கில் கைது செய்தனர்.
    • இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி 3 நாள் பரோலில் வெளியே வந்த மோகன், மீண்டும் சிறைக்கு செல்லவில்லை.

    சேலம்:

    சேலம் அழகாபுரம் மிட்டாபுதூர் சித்தாகவுண்டனூர் தெரு, டி.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 54).

    இவரை கடந்த 2009-ம் ஆண்டு, அம்மாபேட்டை போலீசார் ஒரு வழக்கில் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டு கோவை சிங்காநல்லூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி 3 நாள் பரோலில் வெளியே வந்த மோகன், மீண்டும் சிறைக்கு செல்லவில்லை.

    இதையடுத்து சிங்காநல்லூர் ஜெயில் சூப்பிரண்டு ஊர்மிளா, நேற்று இதுகுறித்து அழகாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்கு பதிவு செய்து, மோகனை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • 2013-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு
    • இவர் 2002-ம் ஆண்டு மருதங்கோடு பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தார்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் அருகே புத்தன் சந்தை பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார் (வயது 37). இவர் 2002-ம் ஆண்டு மருதங்கோடு பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தார்.

    இந்நிலையில் 2013-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.இதையடுத்து சுனில் குமார் தலைமறைவானார். இதனால் அவரை போலீசார் தொடர்ந்து 10 ஆண்டுகளாக தேடி வந்தனர். சுனில் குமார் எங்கு இருக்கிறார் என தெரியாமல் இருந்தது.

    இந்நிலையில் நேற்று மாலை பளுகலை அடுத்த கண்ணுமாமூடு பகுதியில் சுனில் குமார் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. அமர்வு நீதிமன்றத்தில் துரைசாமி இந்த வழக்கில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.
    • வருகிற 13-ந்தேதி காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் ஆற்றோரம் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் எலும்பன் என்கிற துரைசாமி (வயது 2). இவர் மீது சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. இந்த வழக்கு விசாரணை சேலம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆனால் துரைசாமி இந்த வழக்கில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இதனால், அவர் பிணையில் வெளிவர இயலாதபடி பிணை ஆனை கோர்ட்டு பிறப்பித்துள்ளது. மேலும் அவர் மீது மீதான குற்ற முறையீட்டுக்க பதில் அளிக்க வருகிற 13-ந்தேதி காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    அவர் தலைமறைவான 27.3.2003-ம் ஆண்டு முதல் போலீசார் பல்வேறு இடங்களில் அவரை தேடி வருகின்றனர். ஆனாலட போலீசாரின் கண்களில் படாமல் தொடர்ந்து டிமிக்கி கொடுத்து வருகிறார். இதனால் எலும்பன் என்கிற துரைசாமி பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என சேலம் டவுன் போலீஸ் நிலையம் வெளியீட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×