search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227938"

    • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நாமக்கல் மாவட்ட பிரிவு சார்பில்,மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி நடைபெற்றது.
    • போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி. சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நாமக்கல் மாவட்ட பிரிவு சார்பில்,மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி நடைபெற்றது.

    போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி. சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்ட விளை யாட்டு அலுவலர் கோகிலா முன்னிலை வகித்தார்.

    இந்த சைக்கிள் போட்டி கள், 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ., 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ., 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. ஆகிய பிரிவுகளில் நடந்தது.

    இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். வெற்றிபெற்றவர்களுக்கு முதல் பரிசு - ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு - ரூ.2 ஆயிரம் மற்றும் 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு பரிசு - ரூ.250/- காசோலையையும் சான்றிதழ்கள் நாளை வழங்கப்படுகின்றன.

    • சுற்றுப்புறச்சூழலை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி உறுதி மொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.
    • ராஜ் யோகா ஸ்கேட்டிங் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் அணியினர் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று முதலிடம் பிடித்தது.

    கோவில்பட்டி:

    தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி, நேதாஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி ஆகியவை இணைந்து, பிளாஸ்டிக்கை ஒழிப்போம், துணிப்பையை உபயோகிப்போம், சுற்றுப்புறச்சூழலை பாது காப்போம் என்பதை வலியுறுத்தி உறுதி மொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் போட்டி கோவில்பட்டி உண்ணாமலை பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது.

    போட்டியில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இப்போட்டிக்கு தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி செய லாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். நேதாஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி தலைவர் யுவராஜன் முன்னிலை வகித்தார். சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் துணைத் தலைவர் லாரன்ஸ் வரவேற்றார். உண்ணாமலை பொறியியல் கல்லூரி முதல்வர் சண்முகம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, போட்டிகளை துவங்கி வைத்தார்.

    இதில், ராஜ் யோகா ஸ்கேட்டிங் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் அணியினர் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று முதலிடமும், கோவில்பட்டி கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 2-வது இடமும், குமாரகிரி சி.கே.டி. மெட்ரிக் பள்ளி 3-வது இடமும் பிடித்தனர்.

    வெற்றி பெற்ற அணியினருக்கு கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியப் பாண்டி யன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

    தூத்துக்குடி மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் மற்றும் கேம்ஸ் அசோசியேஷன் செயலாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை நேதாஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி பொதுசெயலாளர் முருகன் செய்திருந்தார்.

    • மாவட்ட அளவிலான குறுவட்ட போட்டியில் திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகள் பதக்கம் வென்றனர்.
    • 5 தங்கம், 10 வெள்ளி, 5 வெண்கலப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் கல்வி மாவட்ட அளவிலான குறுவட்ட போட்டிகள் மேலக்கோட்டை அரசுமேல்நிலைப்பள்ளி, திருமங்கலம் சி.எஸ்.ஐ. உயர்நிலைப்பள்ளியில் நடந்தது.

    இதில் பங்கேற்ற திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தடகளபோட்டிகளில் 5 தங்கம், 10 வெள்ளி, 5 வெண்கலப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். குழுப்போட்டிகளில் 10 போட்டிகளில் இந்த பள்ளி மாணவிகள் முதல் பரிசையும், 5 போட்டிகளில் 2-வது பரிசையும் வென்று மொத்தம் 119 பரிசுகளை பெற்று அரசு பள்ளிகளிலேயே அதிக பரிசு பெற்ற பள்ளி என்ற சாதனையை நிகழ்த்தினர்.

    சாதனை படைத்த மாணவிகளை தலைமையாசிரியர் கர்ணன், பெற்றோர்-ஆசிரியர் கழகத்தலைவர் ஜெயராமன், மேலாண்மைக்குழுத்தலைவர் ஸ்ரீதேவிசண்முகபாண்டி ஆகியோர் பாராட்டினர். பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியைகள் நவமணி, பாலன், சர்மிளா ஆகியோரையும் பாராட்டினர்.

    • 6 குறுமையங்களில் ஆகஸ்டு 22-ந்தேதி முதல் குறுமைய குழு விளையாட்டு போட்டிகள் நடந்து வந்தது.
    • காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிட மாவட்ட கல்வித்துறை வேகம் காட்டி வருவதால், போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 6 குறுமையங்களில் ஆகஸ்டு 22-ந்தேதி முதல் குறுமைய குழு விளையாட்டு போட்டிகள் நடந்து வந்தது.ஒவ்வொரு போட்டியிலும், 14, 17 மற்றும், 19 வயது மாணவ, மாணவிகள் பிரிவில் மாநகராட்சி, அரசு, தனியார் பள்ளி அணிகள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றன. அனைத்து குழு விளையாட்டு போட்டிகளும் முடிந்த நிலையில், தடகள போட்டிகள் எப்போது துவங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு குறுமைய தடகள போட்டிகள் வருகிற 12, 13ம் தேதி 2 நாட்கள் நடக்க இருந்தது. ஆனால் காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிட மாவட்ட கல்வித்துறை வேகம் காட்டி வருவதால், தற்காலிகமாக குறுமைய தடகள போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தின் அனைத்து குறுமையங்களிலும் தடகள போட்டிகள் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என குறுமைய போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • கீழக்கரை குறுவட்டார விளையாட்டு போட்டி நிறைவு விழா நடந்தது.
    • தொழிலதிபர் டத்தோ முகமது யூசுப் சார்பில் நினைவு பரிசுகளை தொழிலதிபர் பீர் முகம்மது வழங்கினார்.

    கீழக்கரை

    தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் கீழக்கரை குறுவட்டார அளவிலான தடகளம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் 10 நாட்களாக தினைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதன் நிறைவு விழா முஸ்லிம் ஜமாத் இஸ்லாமிய இளைஞர் மன்றம் சார்பில் நடந்தது. ஜமாஅத் தலைவர் அப்துல் ஹமீது கான் தலைமை தாங்கினார். செயலாளர் முஹம்மது ரபீக், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் டேவிட் மோசஸ் முன்னிலை வகித்தனர். கமால் பாட்சா நினைவாக மலேசியா டி.எம்.ஒய்.கம்பெனி நிறுவனர் தொழிலதிபர் டத்தோ முகமது யூசுப் சார்பில் நினைவு பரிசுகளை தொழிலதிபர் பீர் முகம்மது வழங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் புல்லாணி பேசுகையில், நடப்பு கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றால் தலா ஒரு பவுன் தங்கம் பரிசளிப்பதாக தெரிவித்தார். மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கருப்பையா, தினைக்குளம் ஊராட்சி தலைவர் சிகப்பியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவி தலைமையாசிரியர் ராமச்சந்திரன் வரவேற்றார்.

    பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் ஜாகிர் உசேன், ஜமாஅத் துணைத் தலைவர் முகம்மது அலி ஜின்னா, ஆர்.எம்.எஸ்.ஏ. தலைவர் பால்ராஜ், எஸ்.எம்.சி. தலைவர் கப்சா பேகம், பள்ளி புரவலர் பாக்கர் அலி, பிச்சைமணி, களிமண்குண்டு தேவதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியைகள் தீபசாந்தினி, எஸ்தர் ஷீபா மெர்லின் நன்றி கூறினர். நிகழ்ச்சியை ஜமாத் செயலாளர் முகம்மது ரபீக், முதுகலை ஆசிரியர்கள் மணிவண்ணன், மணிமொழி, பட்டதாரி ஆசிரியை விஜயலட்சுமி, ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

    • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சேலம் பிரிவு சார்பாக அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 15-ந் தேதி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நடத்தப்படுகிறது.
    • போட்டியில் பங்கேற்க உள்ள மாணவ மாணவியர் தங்களது சொந்த செலவில் சாதாரண கைப்பிடி கொண்ட இந்தியாவில் தயாரான சைக்கிளை கொண்டு வர வேண்டும்.

    சேலம்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சேலம் பிரிவு சார்பாக அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 15-ந் தேதி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நடத்தப்படுகிறது. இதில் 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆவின் பாலகத்தில் தொடங்கி கே.ஆர்.தோப்பு வரை சென்று மீண்டும் ஆவின் பாலகம் வரை 15 கி.மீ.தூரமும், 15 வயது, 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு ஆவின் பாலகம் முதல் அணைமேடு வரை சென்று மீண்டும் ஆவின் பாலகத்துக்கு 20 கி.மீ.தூரமும் போட்டி நடக்கிறது.

    மாணவிகளுக்கு 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆவின் பாலகத்தில் தொடங்கி ஸ்டீல் பிளாண்ட் வரை சென்று மீண்டும் ஆவின் பாலகம் வரை 10 கி.மீ.தூரமும், 15 வயது, 17 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கு ஆவின் பாலகம் முதல் கே.ஆர்.தோப்பு வரை சென்று மீண்டும் ஆவின் பாலகத்துக்கு 20 கி.மீ.தூரமும் போட்டி நடக்கிறது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பெறுபவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் மற்றும் 4 முதல் 10 இடங்களை பெறுபவர்களுக்கு ரூ.250-ம் பரிசு வழங்கப்படும். இந்த பரிசுகள் காசோலையாகவோ அல்லது வங்கி மாற்று வழி மூலமாகவோ வழங்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்க உள்ள மாணவ மாணவியர் தங்களது சொந்த செலவில் சாதாரண கைப்பிடி கொண்ட இந்தியாவில் தயாரான சைக்கிளை கொண்டு வர வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செய்துள்ளது.

    • வருகிற 15, 17-ந் தேதிகளில் மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
    • சிறப்புப் பரிசு வழங்கப்படவுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் அண்ணா, பெரியாா் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் அண்ணா, பெரியாா் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 15, 17-ந் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் மேற்கண்ட நாட்களில் காலை 10 மணிக்கு பள்ளி மாணவா்களுக்கும், பிற்பகல் 2 மணிக்கு கல்லூரி மாணவா்களுக்கும் பேச்சுப்போட்டிகள் நடைபெறுகிறது.

    அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவா்களுக்கு 'தாய் மண்ணுக்குப் பெயா் சூட்டிய தனயன்', 'மாணவா்க்கு அண்ணா', 'அண்ணாவின் மேடைத் தமிழ்', 'அண்ணா வழியில் அயராது உழைப்போம்' ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவா்களுக்கு 'பேரறிஞா் அண்ணாவும் தமிழக மறுமலா்ச்சியும்', 'பேரறிஞா் அண்ணாவின் சமுதாயச் சிந்தனைகள்', 'அண்ணாவின் தமிழ் வளம்', 'அண்ணாவின் அடிச்சுவட்டில், தம்பி !' 'மக்களிடம் செல்' ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறுகிறது.

    பெரியாா் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவா்களுக்கு 'தொண்டு செய்து பழுத்த பழம்', 'தந்தை பெரியாரும் தமிழ்ச் சமுதாயமும்', 'தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள்', 'தந்தை பெரியாா் காண விரும்பிய உலக சமுதாயம்', 'தந்தை பெரியாரும் பெண் விடுதலையும்' ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவா்களுக்கு 'தந்தை பெரியாரும், பெண் விடுதலையும்', 'தந்தை பெரியாரும், மூடநம்பிக்கை ஒழிப்பும்', 'பெண் ஏன் அடிமையானாள்?', 'இனிவரும் உலகம்', 'சமுதாய விஞ்ஞானி பெரியாா்', 'உலகச் சிந்தனையாளா்களும் பெரியாரும்' ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறுகிறது. இதில், மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ. 3 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. மேலும், அரசுப் பள்ளி மாணவா்கள் இருவருக்கு தலா ரூ.2 ஆயிரம் சிறப்புப் பரிசும் வழங்கப்படவுள்ளது.

    மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலராலும், கல்லூரி போட்டிக்கு கல்லூரி கல்வி இணை இயக்குநராலும் தோ்வு செய்து அனுப்பப்படும் மாணவா்கள் மட்டுமே பங்கேற்ற இயலும். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியா் இந்த பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி நடந்தது.
    • வெற்றி பெற்ற அணிகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.

    விருதுநகர்

    இந்தியாவின் சிறந்த ஆக்கி வீரராக திகழ்ந்த தியான் சந்த்தைப் பெருமைப்படுத்தும் வகையில் அவரது பிறந்த நாளான ஆகஸ்டு 29-ந் தேதியை இந்திய தேசிய விளையாட்டு நாளாக கடைபிடிக்கிறது.

    அதனப்படையில், விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் 14-வயதிற்குட்பட்ட மாணவ-மாணவி களுக்கான மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி நடந்தது. இதை கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார்.

    இதில் விருதுநகர் சத்ரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி இந்து நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கல்லூரணி எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் விருதுநகர் காமராஜர் அகாடமி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளும், 14-வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான ஆக்கி போட்டியில், விருதுநகர் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகாசி இந்து நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கல்லூரணி எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ராஜபாளையம் அகாடமி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டனர்.

    மாணவிகளுக்கான இறுதிப்போட்டியில் விருதுநகர் சத்ரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்றது. அந்த அணியை சேர்ந்த மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    தொடர்ந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி, ஆக்கி விளையாடியபடி சிவகாசி உழவர் சந்தை முதல் சாட்சியாபுரம் வரை சென்று நோபல் உலக சாதனை பெற்ற வி.எஸ்.கே.டி. பதின்ம மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 9 வயதான ஜியாஸ்ரீ கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவ -மாணவிகளுக்கு தனித்தனியாக ஹாக்கி விளையாட்டு போட்டி நடைபெற்றது.
    • போட்டியில் முதலிடம், இரண்டாமிடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    இந்திய ஹாக்கி விளையாட்டு வீரர் மேஜர் தயான்சந்த் பிறந்தநாள் தேசிய விளையாட்டு தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி இன்று அவரது 117-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது.‌

    இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

    மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ் வரவேற்றார். மாவட்ட ஹாக்கி பயிற்றுனர் அன்பழகன் மேஜர் தயான்சந்த் சாதனைகளை விரிவாக எடுத்துரைத்தார்.

    விழாவில் மாணவ -மாணவிகளுக்கு தனி தனியாக ஹாக்கி விளையாட்டு போட்டி நடைபெற்றது.

    இதனை கலெக்டர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்து விளை யாட்டு போட்டியை பார்த்தார்.

    முடிவில் வெற்றிபெற்ற முதல், இரண்டாம் இடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்க ப்பட்டது.

    இந்நிகழ்ச்சி யில்தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் , மாவட்ட ஹாக்கி செயலர் ராஜ்குமார் , செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் தர்மலிங்கம், தூய அந்தோணியார் மேல் நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஹெர்பர்ட் ஜோன்ஸ், மாவட்ட வாலிபால் பயிற்றுநர் மகேஷ்குமார், நீச்சல் பயிற்றுநர் ரஞ்சித்கு மார், அவர்கள், மாணவ -மாணவியகள், ஹாக்கி விளையாட்டு வீரர்- வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வட்டார அளவிலான ஆக்கி போட்டி நடந்தது.
    • இதில் 5-0 என்ற கோல் கணக்கில் ஜஸ்டின் மெட்ரிக் பள்ளி அணி வெற்றி பெற்றது.

    சிவகங்கை

    சிவகங்கை வட்டார அளவிலான பள்ளிகளுக்கு இடையே 14 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான ஆக்கி போட்டி சிவகங்கை மாவட்ட திறந்தவெளி விளையாட்டரங்கில் நடந்தது. இறுதிப் போட்டியில் சிவகங்கை புனித ஜஸ்டின் மெட்ரிக் பள்ளி-சுவாமி விவேகானந்தா பள்ளி அணிகள் மோதின.

    இதில் 5-0 என்ற கோல் கணக்கில் ஜஸ்டின் மெட்ரிக் பள்ளி அணி வெற்றி பெற்றது. முதல்வர் புஷ்பம் மற்றும் ஆசிரியர்கள், வெற்றி பெற்ற வீராங்கனைகள், உடற்கல்வி ஆசிரியர் மோகன் ஆகியோரை பாராட்டினர்.

    • 9வது புத்தகத்திருவிழா வருகிற செப்டம்பர் 16-ந்தேதி முதல் தேஜஸ் மகாலில் நடக்கிறது.
    • 1ம் வகுப்பு முதல் கல்லூரி மாணவர்கள் வரை பல்வேறு போட்டிகள் நடைபெறுகிறது.

    உடுமலை :

    உடுமலையில் 9வது புத்தகத்திருவிழா வருகிற செப்டம்பர் 16-ந்தேதி முதல் தேஜஸ் மகாலில் நடக்கிறது. இதனையொட்டி மாணவ, மாணவிகளுக்கான ஓவியம், கட்டுரை, பேச்சுப்போட்டிகள் வருகிற 4-ந் தேதி பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் நடக்கிறது.

    ஓவியப்போட்டிகள் 6 பிரிவுகளாக நடக்கிறது. 1 முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, 'எனக்கு பிடித்த ஓவியம்' என்ற தலைப்பில் நடக்கிறது. 4 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு நான் விரும்பும் பறவை, விலங்கு, 6 முதல் 8 வரை மாணவர்களுக்கு வனம் பரப்பும் இயற்கை காட்சி, 9 முதல் 10க்கு வரலாற்று நிகழ்வுகள் அல்லது நினைவிடங்கள்,11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஐவகை நிலங்கள் என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு நான் விரும்பும் எழுத்தாளர்கள் அல்லது கவிஞர்கள் என்ற தலைப்பிலும் ஓவியப்போட்டிகள் நடைபெறுகிறது.

    கட்டுரை போட்டி 6-8 மாணவர்களுக்கு நான் தலைவரானால் உணவும், உயிரும், 9-10 மாணவர்களுக்கு கல்வி மானுட வளர்ச்சி, நில் கவனி செல் , 11ம் வகுப்பு மாணவர்களுக்கு போதை என்னும் அழிவுப்பாதை, விண்வெளித்துறையில் இந்தியா, வள்ளுவமும், வாழ்வியலும் ஆகிய தலைப்புகளில் நடக்கிறது.கல்லூரி மாணவர்களுக்கு வனமும் வளமும், உழவும் உணவும், வளர்ச்சியின் நோக்கமும் தாக்கமும் ஆகிய தலைப்புகளில் கட்டுரை போட்டி நடக்கிறது. அதே போல் 6-8 மாணவர்களுக்கு 2047ல் இந்தியா என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெறுகிறது

    9-10 மாணவர்களுக்கு ஊடகத்தின் தாகம் என்ற தலைப்பிலும், 11-12 மாணவர்களுக்கு காகிதம் என்னும் ஆயுதம், கல்லூரி மாணவர்களுக்கு என்னை செதுக்கிய புத்தகம் என்ற தலைப்பில் நடக்கிறது. பேச்சுப்போட்டியில் 4 தலைப்புகளில் எந்த பிரிவு மாணவர்களும் பங்கேற்கலாம்.

    • கோவை மாவட்டம் அவிநாசி தென்னாட்டு மாணவர்புலம் மற்றும் தென்புலம் நூலங்காடி அமைப்பினர் சார்பாக தனித்தமிழ் தந்தை மறைமலை அடிகள் பிறந்தநாள் விழா போட்டிகள் நடைபெற்றது.
    • சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளியின் ஆசிரியர்கள் வள்ளிமனோகரன், தீபா, சிவக்குமார் ஆகியோர் பரிசு புத்தகம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள்.

    பரமத்தி வேலூர்:

    75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு கோவை மாவட்டம் அவிநாசி தென்னாட்டு மாணவர்புலம் மற்றும் தென்புலம் நூலங்காடி அமைப்பினர் சார்பாக தனித்தமிழ் தந்தை மறைமலை அடிகள் பிறந்தநாள் விழா போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

    பேச்சு போட்டியில் கலந்து கொண்ட 12-ம் வகுப்பு மாணவிகள் கண்ணகி முதல் பரிசும், பூமதி 2-ம் பரிசும், ஓவிய போட்டியில் 8-ம் வகுப்பு மாணவி தனிகா முதல் பரிசு உட்பட 18 பேரும் பரிசு பெற்றனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளியின் ஆசிரியர்கள் வள்ளிமனோகரன், தீபா, சிவக்குமார் ஆகியோர் பரிசு புத்தகம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள்.

    பாராட்டு விழாவில் ஆசிரிய,ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×