search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரங்கசாமி"

    • புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக ஆளுநருடன் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம்.
    • ஆளுநருக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு என கூறுகிறார்கள். ஆளுநர் உடனான உறவு சுமூகமாக உள்ளது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி சுவாமி தரிசனம் செய்தார்.

    தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் இருந்து வெளியே வந்த அவர் கோவில் பணியாளர்களுக்கும், பக்தர்களுக்கும் பிரசாதங்களை வழங்கினார்.

    பின்னர் அவர் கோவில் யானை தெய்வானையிடம் ஆசி பெற்றார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக ஆளுநருடன் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம். ஆளுநரின் நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்ளவில்லை என கூறுகின்றனர்.

    எனக்கு வேறு சில நிகழ்ச்சிகளுக்காக வெளியே செல்ல வேண்டியதிருக்கும். இதனை வைத்து ஆளுநருக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு என கூறுகிறார்கள். ஆளுநர் உடனான உறவு சுமூகமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
    • ரேஷன் கார்டுகளுக்கும் அரிசி, சர்க்கரைக்கான பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கான பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

    பாப்ஸ்கோ நிறுவனம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு சிறப்பு அங்காடியை திறந்து மளிகை பொருட்கள் மற்றும் பட்டாசுகள் சிறப்பு தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு சுமார் ரூ.11 கோடி அளவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ரூ.12 கோடி அளவுக்கு விற்பனை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட 25 பொருட்கள் இந்த ஆண்டு மிகவும் மலிவு விலையில் கொடுக்கப்படுகிறது. இந்தத் தொகுப்பு 800 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. பட்டாசு அதன் விலையில் இருந்து 50 சதவீதத்துக்கும் மேல் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    பாப்ஸ்கோ நிறுவனத்துக்கு அரசு சார்பில் ரூ.3.5 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கான்பெட் நிறுவனம் மூலமும் மலிவு விலையில் பொருட்கள் வழங்கப்படுகிறது. பாப்ஸ்கோ, கான்பெட் நிறுவனங்கள் மூலம் பல இடங்களில் சிறப்பு அங்காடிகள் திறக்கப்பட்டிருப்பதால் மக்களுக்கு எளிமையாக பொருட்கள் கிடைப்பதுடன், விலையேற்றமும் கட்டுப்படுத்தப்படுகிறது.

    தீபாவளியையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கான பணம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என தெரிவித்தார்.

    • பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமி, கூட்டணி தர்மத்தை மீறி தன்னிச்சையாக செயல்படுகிறார்.
    • எந்த விவகாரத்திலும் பா.ஜனதாவை ஆலோசிப்பது இல்லை. எம்.எல்.ஏ.க்கள் கருத்துக்களை ஏற்பதில்லை என ஆதங்கப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா அரசு அமைந்து 1½ ஆண்டாகியும், பதவியில் இல்லாத என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு இதுவரை வாரிய தலைவர் பதவிகள் வழங்கவில்லை.

    பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களோடு, ஆதரவு தரும் எம்.எல்.ஏக்களுக்கும் வாரிய பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. பா.ஜனதா மேலிட தலைமையில் இருந்தும் வாரிய பதவி வழங்கும்படி முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் தெரிவித்துள்ளனர்.

    ஆனாலும் இதுவரை வாரிய பதவி வழங்காதது பா.ஜனதா எம்.எல்.ஏக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிருப்தி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளிப்பட்டது. சட்டசபையில் பேசிய பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம், புதிய மதுபான ஆலைக்கு அனுமதி வழங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் தெரிவித்தார். தங்கள் தொகுதிகள் புறக்கணிக்கப்படுவதாகவும், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அரசின் மீது குற்றம்சாட்டினர்.

    இந்நிலையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனைக்கூட்டம் சட்டசபை வளாகத்தில் நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் தலைமை வகித்தார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம், மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணக்குமார், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக், நியமன எம்.எல்.ஏ.க்கள் வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமி, கூட்டணி தர்மத்தை மீறி தன்னிச்சையாக செயல்படுகிறார். எந்த விவகாரத்திலும் பா.ஜனதாவை ஆலோசிப்பது இல்லை. எம்.எல்.ஏ.க்கள் கருத்துக்களை ஏற்பதில்லை என ஆதங்கப்பட்டனர்.

    மத்திய அரசு திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. அதோடு, தங்கள் தொகுதிகளில் கோவில் கமிட்டி முதல் நலத்திட்ட உதவிகள் வழங்குவது வரை தங்களிடம் கேட்காமல் பல முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் புகார் கூறினர்.

    அமைச்சரவை கூட்டமும் நடத்துவதில்லை, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகூட்டத்தையும் நடத்த முன்வரவில்லை என குற்றம்சாட்டினர். அமைச்சர் நமச்சிவாயம் எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தினார். மீண்டும் ஒரு முறை முதல்-அமைச்சரை சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம் என கூறினார்.

    ஏற்கனவே 2, 3 முறை புகார் கூறியும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தன் நிலைப்பாடை மாற்றிக்கொள்ளவில்லை என எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். ஆனாலும், புதுவைக்கு வரும் மத்திய மந்திரி எல்.முருகனுடன் மீண்டும் ஒரு முறை முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.

    அதோடு அடுத்த வாரத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை டெல்லிக்கு சென்று பா.ஜனதா அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சந்திக்க திட்டமிட்டுள்ளனர். அப்போது புதுவை அரசு, அரசியல் குறித்து பேச முடிவெடுத்துள்ளனர்.

    • கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 4-ந்தேதி தீர்த்தக்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.
    • கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அப்பா பைத்தியம் சாமி கோவில் கட்டப்பட்டு 23 ஆண்டுகள் ஆகின்றன. முதல் முறையாக கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டன. தற்போது திருப்பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேகம் இன்று (புதன்கிழமை) காலை 10.15 மணிக்கு நடக்கிறது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 4-ந்தேதி தீர்த்தக்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாலையில் திருவிளக்கு பூஜை, மங்கள வாத்தியம், புனித நீர் வழிபாடு நடந்தது. 5-ந் தேதி காலை வேள்வி பூஜை, இரவு 7 மணிக்கு முதல் கால வேள்வி, இரவு 9 மணிக்கு பூர்ணாகுதி நடந்தது.

    தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. 8.40 மணிக்கு சற்குருவுக்கு 108 திரவியங்கள் மூலம் வழிபாடு நடத்தப்பட்டன. மாலை 3-ம் கால வேள்வி பூஜை நடந்தது. தொடர்ந்து இன்று (புதன்கிழமை) காலை சற்குருவிற்கு 108 திரவிய வழிபாடு நடந்தது. 9.45 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடு நடந்தது. 10.15 மணிக்கு கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகாதீபாராதனை நடந்தது.

    கும்பாபிஷேகத்தில் புதுவை முதல்-மந்திரி ரங்கசாமி, சேலம் ஆர்.டி.ஓ.விஷ்ணுவர்தினி, கோவில் நிர்வாகி முத்துமாணிக்கராஜா மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் வழங்கப்படும்
    • 70 முதல் 80 வயது வரையிலான முதியோர்களுக்கு உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும்

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் ரங்கசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவை வருமாறு:

    புதுச்சேரியில் விவசாயிகள் வாங்கிய ரூ.13 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும். மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் வழங்கப்படும்.

    மரபணு குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும். புதிய சட்டமன்ற கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோ நல வாரியம் அமைக்கப்படும். 70 முதல் 80 வயது வரையிலான முதியோர்களுக்கு உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும். துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கப்படுவர்.

    இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

    • முதியோர் உதவித்தொகை கேட்டு 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக முதல்வர் தகவல்
    • கடலில் மீன் பிடிக்கும்போது விபத்தில் உயிரிழந்தால், மீனவர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம்

    புதுச்சேரி:

    புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது, முதியோர் உதவித்தொகை கோரி விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு, உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, முதியோர் உதவித்தொகை கேட்டு 15 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அனைவருக்கும் அடுத்த மாதம் முதல் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

    90 வயது முதல் 100 வயதுக்குள் உள்ளவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை 3500 ரூபாயில் இருந்து 4000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும், 100 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 7 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். கடலில் மீன் பிடிக்கும்போது விபத்தில் உயிரிழந்தால், மீனவர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய அரசு ஒப்புதல் அளித்ததால் ரூ.10,600 கோடிக்கு புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல்.
    • கால்நடை மையம், காரைக்காலில் வன அறிவியல் மையம் அமைக்கப்படும்.

    புதுச்சேரி சட்டப்பேரவையில் 2022- 23க்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார். சட்டப்பேரவை கூடியதும் நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    மத்திய அரசு ஒப்புதல் அளித்ததால் ரூ.10,600 கோடிக்கு புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி மாநிலத்தில் கால்நடை மையம், காரைக்காலில் வன அறிவியல் மையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

    • சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று முழங்கிய விடுதலை வீரர்களின் தியாகத்தால் அடிமை விலங்கை உடைத்தெறிந்தோம்.
    • தேசத்தின் மாண்பை கட்டிக்காக்கும் பெருமைக்குரிய எல்லா தருணங்களிலும் புதுவை எப்போதும் முன்னணியில் இருந்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரை சாலையில் நடந்த சுதந்திர தின விழாவில் தேசியக்கொடி ஏற்றி முதல்-அமைச்சர் ரங்கசாமி உரையாற்றினார்.

    அவர் ஆற்றிய உரையின் முக்கியம்சங்கள் வருமாறு:-

    நாடு முழுவதும் அமுத பெருவிழாவை கொண்டாடி வரும் இத்தருணத்தில் 75 ஆண்டுக்கு முன் நம் தேசம் இருந்த நிலையை எண்ணிப்பார்க்கிறேன். தங்களை தாங்களே ஆண்டுகொள்ளும் திறமை இந்தியர்களுக்கு இல்லை என்றும், ஆங்கிலேயர் ஆட்சி மறைந்தால் அவர்கள் உருவாக்கிய முற்போக்கு நாகரீம் ஓர் இரவில் அழிந்துவிடும் என்றும் விடுதலைக்கு முன்பு நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் கூறினார்கள்.

    சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று முழங்கிய விடுதலை வீரர்களின் தியாகத்தால் அடிமை விலங்கை உடைத்தெறிந்தோம். நம் உணர்வில் ஊறிய தேசபக்தியால் இந்திய திருநாட்டை தனித்தன்மை மிக்க நாடாக உலகரங்கில் உயர்த்தியுள்ளோம்.

    வேற்றுமையில் ஒற்றுமை என்ற மந்திர சொல் நம்மிடையே சமுதாய கூட்டுறவை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டுறவினால்தான் எந்த ஒரு கற்பனையாலும், செயற்கையான சூழ்ச்சியாலும் பிரிக்கவோ, பிளக்கவோ முடியாத ஒரு பொது சாதனையாக இந்தியாவை வளமாக்கியுள்ளோம்.

    நாடு சுதந்திரம் பெறுவதற்காக தன் இன்னுயிரை ஈந்து அரும்பாடுபட்ட ஆயிரக்கணக்கான விடுதலை வீரர்களின் வீர தியாகத்தையும், நாட்டை உலகரங்களில் ஒப்பற்ற நாடாக உயர்த்த அயராது பாடுபட்ட தேச தலைவர்களையும் நன்றியோடு நினைத்து போற்றுவது நம் அனைவரின் கடமையாகும்.

    அதனடிப்படையில்தான் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை இல்லம்தோறும் தேசியக்கொடி ஏற்றி உள்ளம்தோறும் தேச பக்தியை வெளிப்படுத்தினோம். தேச பக்தி என்பது நம் ஒவ்வொருவரின் உணர்விலும், கலந்தது என்பதை பெருமிதத்தோடு உலகிற்கு உணர்த்தியுள்ளோம்.

    தேசத்தின் மாண்பை கட்டிக்காக்கும் பெருமைக்குரிய எல்லா தருணங்களிலும் புதுவை எப்போதும் முன்னணியில் இருந்துள்ளது. அதுமட்டுமல்லாது, வளர்ச்சியில் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்கி வருகிறது. அந்த சாதனையை எமது அரசு எப்போதும் போல முன்னெடுத்துச்செல்வதில் பெருமிதம் கொள்கிறது.

    புதுவை மக்களின் ஏகோபித்த ஆதரவோடு மீண்டும் ஒரு பொற்கால ஆட்சியை புதுவையில் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடியின் ஆசியோடு, பொறுப்பேற்ற எனது தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த ஓராண்டில் ஆக்கப்பூர்வமான பல வளர்ச்சி பணிகளை செய்துள்ளது.

    விவசாயிகளின் வருமானத்தை பெருக்க சீர்மிகு வேளாண்மைக்கு சிறப்பான திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

    அனைத்து சுகாதார வசதிகளும் மக்களுக்கு எளிதாக கிடைக்க முனைப்போடு செயல்பட்டு வருகிறோம். கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதியும், நிதியும் மத்திய அரசிடம் கோரியுள்ளோம். பள்ளி, கல்லூரி தரவரிசையில் புதுவை 4-ம் இடத்தில் உள்ளது.

    ஆதிதிராவிட, பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக 12 திட்டங்களும், அந்த சமுதாய மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த 12 திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது.மீன் உற்பத்தியை பெருக்கவும், மீனவர் நலனை மேம்படுத்தவும் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செம்மையாக செயல்படுத்தி வருகிறது.

    மகளிர் முன்னேற்றத்திற்காக ஒருங்கிணைந்த பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். நிலமற்ற ஏழை மக்களுக்கு கடந்த ஓராண்டில் 115 பயனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. இலவச அரிசி திட்டத்தின் நேரடி பண பரிமாற்றம் மூலம் அரிசிக்கு பதிலாக பணமாக மானியத்தொகை பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்துக்கு பிறகு சுற்றுலா, விருந்தோம்பல் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது.

    பெரிய விமானங்கள் வந்து செல்லும் வகையில் விமான தளத்தை விரிவுபடுத்த தமிழக பகுதியிலிருந்து 395 ஏக்கர் நிலமும், புதுவை பகுதியில் 30 ஏக்கர் நிலமும் கையகப்படுத்த வேண்டும்.

    இதற்காக ரூ.425 கோடி தேவைப்படுகிறது. இந்த நிதியை மத்திய அரசிடம் கோரியுள்ளோம். இத்திட்டம் நிறைவேறும்போது உலக வரைபடத்தில் புதுவை ஒரு முக்கிய இடத்தை பெறும். மாநில அமைதிக்கு மகத்தான காவல்சேவையை அரசு வழங்கி வருகிறது. காவலர் பணியிடங்கள் வெளிப்படையாக, நேர்மையாக நிரப்பப்பட்டுள்ளன.

    அரசு எந்திரம் தொய்வின்றி இயங்க அரசு ஊழியர்கள் நலனிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். 7-வது ஊதியக்குழு சம்பளம், நிலுவைத்தொகை, காலகட்ட பதவி உயர்வு, பதவி உயர்வு ஆகியவற்றை வழங்கியுள்ளோம். மக்களின் நலன் கருதியும், மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்லவும் எனது அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. வரும்காலத்திலும் இதுபோன்ற புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு முனைப்பாக உள்ளது. மீண்டும் ஒரு முறை மாநில மக்கள் அனைவருக்கும் என் உளம்நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க பாரதம், வளர்க புதுவை மாநிலம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கோரிமேட்டில் உள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமியின் வீட்டு மாடியில் 2 தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளது.
    • போலீசார் வழக்கம் போல் ஒரு தேசியகொடியை ஏற்றியுள்ளனர். அங்கன்வாடி மூலம் கொடுத்த கொடியும் ஏற்றப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

    இதன்படி புதுவையில் பல வீடுகளில் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் கோரிமேட்டில் உள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமியின் வீட்டு மாடியில் 2 தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளது. போலீசார் வழக்கம் போல் ஒரு தேசியகொடியை ஏற்றியுள்ளனர். அங்கன்வாடி மூலம் கொடுத்த கொடியும் ஏற்றப்பட்டுள்ளது.

    இதனை இன்று காலை பால்கனிக்கு மேல்சட்டையின்றி கைலியுடன் வந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி பார்வையிட்டார்.

    இதனை படமெடுத்த ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்தப் படம் வைரலாகி வருகிறது.

    • புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    புதுவை:

    புதுவை கவர்னர் (பொறுப்பு) டாக்டர் தமிழிசை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தயில் கூறி இருப்பதாவது:-

    புதுச்சேரி முதல்-அமைச்சர் அண்ணன் ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தாங்கள் பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • புதுவை லாஸ்பேட்டையில் உள்ள மத்திய உணவு கூடத்தில் இருந்து மதிய உணவு தயார் செய்யப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.
    • மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மாதிரியை முதல்-அமைச்சர் ரங்கசாமி ருசித்து பார்த்து ஆய்வு செய்தார்.

    புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அட்சய பாத்திரம் திட்டத்தின் மூலம் மதிய உணவு வழங்கப்படுகிறது. அரசு, தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    புதுவை லாஸ்பேட்டையில் உள்ள மத்திய உணவு கூடத்தில் இருந்து மதிய உணவு தயார் செய்யப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.

    அந்த தனியார் நிறுவனம் வழங்கும் மதிய உணவில் பூண்டு, வெங்காயம் போன்றவை சேர்க்கப்படாமல் ருசியின்றி வழங்கப்படுவதாக பொது நலஅமைப்பினர் அதிருப்தி தெரிவித்தனர்.

    இந்த நிலையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மாதிரியை புதுவை சட்டப்பேரவை அலுவலகத்துக்கு வரவழைத்த முதல்-அமைச்சர் ரங்கசாமி அதன் தரத்தை ருசித்து பார்த்து ஆய்வு செய்தார். மேலும் அதிகாரிகளிடம் ஆலோசனைகளையும் கூறினார்.

    மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் மாதிரியை முதல்-அமைச்சர், கல்வி அமைச்சர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்து, அதை சாப்பிட்டு பார்த்து கண்காணிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


    ×