search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 228165"

    • ஒரு சிறந்த பேராசிரியர் தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழும், விருதும் வழங்கப்பட்டு ஆசிரியர் தினவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.
    • யு.ஜி.சி., நெட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு தேர்வை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் கணினிவழித் தேர்வுகள் நடத்தப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.

    விழாவில் துணைவேந்தர் திருவள்ளுவன் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்ப்பல்க லைக்கழகத்தின்இலக்கி யத்துறையில் முதுகலைப் பயின்று வரும் திருநங்கையருக்கு கல்விக்கட்டணம், விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டண ங்களை யும் பல்கலைக்கழகமே ஏற்கும்.

    அடுத்த ஆண்டு முதல் பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு புலத்தில் இருந்தும் ஒரு சிறந்த பேராசிரியர் தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழும், விருதும் வழங்கப்பட்டு ஆசிரியர் தினவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

    வருகிற 12ந் தேதி வள்ளலார் பிறந்தநாளையொட்டி, அட்சயபாத்திர நாள் விழா கொண்டாடப்படும்.

    இதில், சன்மார்க்க மன்றத்துடன் இணைந்து விடுதி மாணவர்களுக்கு உணவு கட்டணத்தைக் குறைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    யு.ஜி.சி., நெட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு தேர்வை எளிதில் எதிர்கொள்ளும் வகையில் கணினிவழித் தேர்வுகள் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் ஆசிரிய ர்களை பெருமைப்படுத்தும் விதமாக கவிதைகள், கட்டுரைகள், கருத்துரைகள், பாடல்கள் ஆகியவற்றை மாணவர்கள் படைத்தனர்.

    விழாவில் பல்கலைக்கழகப் பதிவாளர் தியாகராஜன், கலைப்புல முதன்மையர் இளையாப்பிள்ளை, மொழிப்புல முதன்மையர் கவிதா, துணைப் பதிவாளர் பன்னீர்செல்வம், அயல்நாட்டு தமிழ் கல்வித்துறை தலைவர் குறிஞ்சிவேந்தன், முனைவர்கள் சீமான், இளையராஜா, வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை முனைவர் பட்ட ஆய்வாளர்கள், ஆய்வியல் நிறைஞர் மாணவர்கள், முதுகலை மாணவர்கள் ஆகியோர் இணைந்து செய்து இருந்தனர்.

    • தேவகோட்டையில் சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகள் கலந்துரையாடல் நடந்தது.
    • மாவட்ட துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், நகர் காவல் ஆய்வாளர் சரவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 75-வது சுதந்திர தினநாளை முன்னிட்டு 1942 ஆகஸ்டு புரட்சியில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்ற சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுடன் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

    நகர மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமை தாங்கினார். தியாகி பாலபாரதி செல்லத்துரை பேரன் இருமதி துரைகருணாநிதி, தியாகி சின்ன அண்ணாமலை பேரன் மீனாட்சிசுந்தரம், தியாகி ராமநாதன் மகன் சத்யா, தியாகி இறகுசேரி முத்துச்சாமி மனைவி பஞ்சரத்தினம், 17 வயதில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட தியாகி ராமு வாரிசு கல்யாண சுந்தரி முன்னிலை வைத்தனர்.

    மாவட்ட துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், நகர் காவல் ஆய்வாளர் சரவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். விழா அரங்கில் இந்த பகுதியில் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பேனர் அமைக்கப்பட்டு இருந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட தியாகிகளில் மற்றும் வாரிசுகள் இப்பகுதியில் நடந்த சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வாழ்க்கை மற்றும் நிகழ்வுகளை புத்தக வடிவில் கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்தனர்.

    • அ.தி.மு.கவின் நீடாமங்கலம் ஒன்றியம், மன்னார்குடி நகர கழகங்களின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் பகுதிகளில் உள்ள மக்கள் பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் அ.தி.மு.கவின் நீடாமங்கலம் ஒன்றியம், மன்னார்குடி நகர கழகங்களின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளரும் அமைப்புச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்.எல்.ஏ தலைமை வகித்தார்.

    கூட்டத்தில்அமைப்பு செயலாளர்சிவாராஜ மாணிக்கம், மன்னார்குடி ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செ ல்வன்,நீடாம ங்கலம் ஒன்றிய செயலா ளர்கள் ஜவகர் மற்றும் ராஜே ந்திரன், மன்னார்குடி நகர செயலாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் பகுதிகளில் உள்ள மக்கள் பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிக்க ப்பட்டது. பொதுமக்களின் தேவைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிமுக நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும் என இரா.காமராஜ் எம்.எல்.ஏ கேட்டுக் கொண்டார்.

    கூட்டத்தில் நீடாமங்கலம் ஒன்றியம் மற்றும் மன்னார்குடி நகர கழகங்களின் நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், 2022-23-ம் ஆண்டு, 11 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
    • முடிவில் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் சங்கர் நன்றி கூறினார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் பெத்தநாய்க்கன்பாளையம் வட்டாரத்தில், தமிழக அரசு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், 2022-23-ம் ஆண்டு, 11 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்டுள்ள கல்யாணகிரி ஊராட்சியில், தரிசு நில விவசாயிகள் தொகுப்புக் குழு அமைப்பு மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் படையாச்சியூர் பி.டி.அழகரசன் தலைமை வகித்தார். வேளாண்மை உதவி அலுவலர் செல்லமுத்து வரவேற்றார். வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் கோதைநாயகி, வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் தாமரைச்செல்வன், தோட்டக்கலை அலுவலர் ஜான்சி, உதவி அலுவலர் மதியழகன், வேளாண் வணிக உதவி அலுவலர் சங்கர், கால்நடை மருத்துவர்கள் குமார், விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர், இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.கூட்டத்தில், தரிசு நில தொகுப்பு விவசாயிகளை ஒருங்கிணைந்து, செந்தாமரை, ரோஜா, மல்லிகை, முல்லை ஆகிய 4 குழுக்கள் அமைக்கப்பட்டது. இதில் கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ், ஊராட்சி செயலர் முருகன் மற்றும் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் சங்கர் நன்றி கூறினார். 

    • கடையம் வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி நெல் பயிரில் வரப்பு பயிராக உளுந்து நடவு செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி விளக்கி கூறினார்.
    • வேளாண்மை உதவி அலுவலரும் நோடல் அதிகாரியுமான பேச்சியப்பன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    கடையம்:

    பொட்டல்புதூர் கிரா மத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுடன் கலந்து ரையாடல் நிகழ்ச்சி நடை பெற்றது.

    நிகழ்ச்சியில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்-அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 132 விவசாயிகளுக்கு 3 தென்னங்கன்றுகள், 15 விவசாயிகளுக்கு உளுந்து விதைகள், 5 விவசாயிகளுக்கு மின்கல தெளிப்பான்கள், 5 விவசாயிகளுக்கு கைத் தெளிப்பான்கள் வழங்கப் பட்டது.

    வரப்பு பயிர்

    மேலும் தோட்டக்கலை துறை சார்பில் பழ மரக்கன்றுகள், காய்கறி விதைகள் தொகுப்பு, டிரம்கள் வழங்கப்பட்டது. உளுந்து விதை பெற்ற விவசாயிகள் தற்போது நடவு செய்யப்பட்டிருந்த நெல் பயிரில் வரப்பு பயிராக உளுந்து பயிரை சாகுபடி செய்திருந்தனர்.

    விவசாயிகளுடன் நடத்திய கலந்துரையாடல் மற்ற விவசாயிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் வீடியோ காட்சி பதிவு செய்யப்பட்டது. கடையம் வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி தலைமை தாங்கி நெல் பயிரில் வரப்பு பயிராக உளுந்து நடவு செய்வதால் ஏற்படும் 3 முக்கிய நன்மைகள் பற்றி விளக்கி கூறினார்.

    அதிக நன்மை

    பொட்டல் புதூர் கிராம ஊராட்சி தலைவர் கணேசன் இத்திட்டத்தில் அதிக நன்மைகள் இருப்பதால் மற்ற விவசாயிகளும் இது போன்று நெல் பயிர் வரப்பில் உளுந்து பயிர் சாகுபடி செய்ய வேண்டும் என்று கூறினார். துணை வேளாண்மை அலுவலர் சுப்புராம் வரவேற்று பேசினார்.

    தோட்டக்கலை உதவி இயக்குனர் ஞானசேகரன் தோட்டக்கலை துறையில் செயல்படுத்த படும் திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறினார். வேளாண்மை அலுவலர் அபிராமி திட்ட விளக்கவுரை ஆற்றினார். வேளாண்மை உதவி அலுவலரும் நோடல் அதிகாரியுமான பேச்சியப்பன் நிகழ்ச்சி ஏற் பாடுகளை செய்திருந்தார்.

    கடையம் வட்டார புள்ளியியல் ஆய்வாளர் சைரஸ் ஆன்ட்ரோ , பொட் டல் புதூர் கிராம நிர்வாக அலுவலர் சுடர் செல்வன், கிராம நிர்வாக உதவியாளர் பாண்டி, வேளாண்மை உதவி அலுவலர்கள் கமல்ராஜன், ஜெகதீஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி, பால்துரை, தீபா, தோட்டக்கலை உதவி அலுவலர்கள், கோவிந்த ராஜ், திருமலைகுமார், இசக்கியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக துணை வேளாண்மை அலுவலர் சுப்பராம் வரவேற்றார்.

    • மதுரையில் தொழில்முனைவோர் சங்க உறுப்பினர்கள் கலந்துரையாடல் நடந்தது.
    • உணவுபதப்படுத்துதல் தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    மதுரை

    வேளாண்மை விற்பனை மற்றும்வேளாண் வணிகத்துறை மூலம் தொழில்முனைவோருக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மதுரைமாவட்டகுறுமற்றும்சிறிய அளவிலான தொழில்முனைவோர் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நடந்தது.

    வேளாண்மை விற்பனைமற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் நடராஜன் தலைமை தாங்கினார்.

    அவர் பேசுகையில், உணவுபதப்படுத்துதல்தொழில்முனைவோருக்குவழங்கப்படும்திட்டங்கள்மற்றும்சலுகைகள்குறித்துஎடுத்துரைத்தார்.

    வேளாண்விளைபொருட்கள்ஏற்றுமதிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், துறையின் கட்டுப்பாட்டில்உள்ளகட்டமைப்புகளைதொழில்முனைவோர் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    மதுரை மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் உணவுப்பூங்கா, முருங்கை ஏற்றுமதிமண்டலம்குறித்தும் விளக்கினார்.

    இதில் சங்கபிரதிநிதிகள், உறுப்பினர்கள், வேளாண்மைவிற்பனைமற்றும் வேளாண்வணிகத்துறை அலுவலர்கள் மற்றும் மாவட்ட தொழில்மைய பொது மேலாளர்ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×