search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 228238"

    • காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    • முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், மாநகராட்சி ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை மாநகராட்சி 1-வது வார்டு பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான நகர்புற நலவாழ்வு மையத்தினை (ஆரம்ப சுகாதார நிலையம்) அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நிதி ஒதுக்கீடு செய்து, அமைத்து நேற்று காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இதன் தொடர்ச்சியாக வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி நகர்புற நலவாழ்வு மையத்தினை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி மரக்கன்று நட்டு வைத்து சிறப்பித்தார்.

    நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியன், வட்ட செயலாளர் ராஜசேகரன், பிரபாகரன், மண்டல சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் பவுன்ராஜ், மருத்துவர் அஸ்வின்ராஜ், உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, காங்கிரஸ், கொ.ம.தே.க உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், மாநகராட்சி ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  

    • திருப்பரங்குன்றத்தில் நகர்புற நலவாழ்வு மையம் திறக்கப்பட்டது.
    • மாமன்ற உறுப்பினர் சுவேதா சத்யன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    திருப்பரங்குன்றம்

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் நகர்புற நலவாழ்வு மையத்தினை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். அதில் மதுரை மாநகராட்சியில் 45 இடங்கள் உட்பட மதுரை மேற்கு மேற்கு மண்டலத்தில் 11 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறந்து வைக்கப்பட்டன.

    திருப்பரங்குன்றத்தில் நடந்த நலவாழ்வு மைய திறப்பு விழாவிற்கு மாமன்ற உறுப்பினர் உசிலை சிவா தலைமை வகித்தார். மாநகராட்சி உதவி ஆணையர் சுரேஷ்குமார், உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல மருத்துவர் தேவி வரவேற்றார். மேற்கு மண்டலத்தலைவர் சுவிதா விமல் குத்துவிளக்கேற்றி மையத்துதை வக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாநகராட்சி சுகாதார அலுவலர் விஜயகுமார், ஆய்வாளர் முருகன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் சாமிவேல் உள்ளிட்ட ஏராளமானோர் பஙேக்ற்றனர். தொடர்ந்து கர்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

    இதேபோல திருநகர் மகாலெட்சுமி காலனியில் நகர்புற நலவாழ்வு மையத்தினை மாமன்ற உறுப்பினர் சுவேதா சத்யன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். 

    • புதிய போக்குவரத்து காவல் நிலையம் திறப்பு விழா நடந்தது.
    • சார்பு ஆய்வாளர்கள் காவலர்கள் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் எதிரே 27 சென்ட் இடத்தில் ரூ.99 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் புதிய நகர போக்குவரத்து காவல் நிலையம் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்றது.

    கட்டுமான பணிகள் முடிந்த நிலையில் புதிய காவல் நிலையத்தை காணொலி காட்சி மூலம் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைத்தார். தொடர்ந்து புதிய காவல் நிலையத்தில் விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் குத்துவிளக்கு ஏற்றி மரக்கன்றுகள் நட்டார். அப்போது ராஜபாளையம் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு போக்குவரத்து காவலர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என காவல்துறைக்கு அறிவுரைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன், போக்குவரத்துக் காவல்துறை ஆய்வாளர் லாவண்யா, ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் சார்லஸ், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கண்ணாத்தாள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் காவலர்கள் கலந்து கொண்டனர்.

    • திருமங்கலத்தில் புதிதாக கட்டப்பட்ட நகர்புற நலவாழ்வு மையம் திறக்கப்பட்டது.
    • காலை 8 மணிமுதல் பகல் 12 மணிவரையிலும், மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரையில் செயல்படும்.

    திருமங்கலம்

    திருமங்கலம் நகராட்சி 5-வது வார்டில் ரூ.25 லட்சம் மதிப்பில் நகர்ப்புற நலவாழ்வு மையம் கட்டப்பட்டுள்ளது. இதனை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து நகர்புற நலவாழ்வு மையத்தில் திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். விழாவில் 5-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் திருக்குமார், திருமங்கலம் நகர்புற நலவாழ்வு மையத்தின் மருத்துவர் டாக்டர் அருண்பாரத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் திருமங்கலம் நகர தி.மு.க. செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள் வீரக்குமார்,சின்னசாமி, ஜஸ்டின்திரவியம், பெல்ட்முருகன், வினோத், சரண்யாரவி, மச்சவள்ளி,ரம்ஜான்பேகம் ஜாகீர்உசேன், முத்துகாமாட்சி, மங்களகவுரி, காங்கிரஸ் கவுன்சிலர் அமுதா, செக்கானூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவஅலுவலர் டாக்டர் உமாமகேஸ்வரி, நகராட்சி பொறியாளர் முத்து, சுகாதார அலுவலர் சண்முகவேலு ஓவர்சீஸ் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த சுகாதாரமையம் காலை 8 மணிமுதல் பகல் 12 மணிவரையிலும், மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரையில் செயல்படும்.

    • தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்
    • சைபர் கிரைம் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படும் - போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

    சூலூர்,

    கோவை மாவட்டத்தில் ஏற்கனவே 4 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்தநிலையில் சூலூர் மற்றும் கோட்டூரில் புதிய மகளிர் போலீஸ் நிலையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன.

    இந்த 2 புதிய மகளிர் போலீஸ் நிலையங்களை தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

    சூலூரில் நடந்த மகளிர் போலீஸ் நிலைய திறப்பு விழாவில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர், டி.ஐ.ஜி. விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டார். போலீஸ்நிலையத்தை டி.எஸ்.பி. ைதயல் நாயகி ரிப்பன் வெட்டி திறந்தார். போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் மற்றும் பிரமுகர்கள் குத்து விளக்கேற்றி வைத்தனர்.

    தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாரா யணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சூலூர் காவல் நிலையத்தில் எண்ணற்ற வழக்குகள் மகளிர் சார்ந்து வருவதால் பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.

    தற்போது அங்கு செல்ல வேண்டியது இல்லை. சூலூரில் தொடங்கப்பட்டு உள்ள மகளிர் காவல் நிலையத்திலேயே தீர்வு காணலாம்.

    அனைத்து உட்கோட்டத்திலும் விரைவில் மகளிர் காவல் நிலையம் உருவாக்கப்படும். அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் சைபர் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படும். மகளிர் எந்த நேரத்திலும் மகளிர் காவல் நிலையங்களை அணுகி சைபர் தொடர்பான குற்றங்களுக்கு புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில், கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி முருகேசன், கண்ணம்பாளையம் பசுபதி, சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன், வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பரசு, சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜ், தி.மு.க. கோவை மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் செல்வகுமார், சூலூர் பேரூராட்சி உறுப்பினர் விஜயகுமார், பாஜக மகளிர் மாவட்ட அணி தலைவர் ரேவதி, பொருளாளர் கார்த்திகேயினி, கண்ணம்பாளையம் பேரூராட்சி உறுப்பினர் பத்மநாபன், மகளிர் அமைப்பு தன்னார்வலர் வெற்றிச்செல்வி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    சூலூர் மகளிர் போலீஸ் நிலையம் கோவில்பாளையம், கருமத்தம்பட்டி, சூலூர், சுல்தான்பேட்டை, செட்டிப்பாளையம் உள்ளிட்ட 6 போலீஸ்நிலையங்களை உள்ளடக்கி இருக்கும். 

    • 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும்
    • கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேளதாளங்கள் முழங்க 3 முறை வலம் வர செய்தனர்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 24-ந்தேதி முதல் 10 நாட்கள் தொடர்ந்து நடை பெற்றது. திருவிழாவை யொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமயஉரை, இன்னிசை கச்சேரி, பரத நாட்டியம், போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இந்த வைகாசி விசாக திருவிழா நிறைவு பெற்றதை யொட்டி நள்ளிரவில் முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து ஆடி அமாவாசை, தை அமாவாசை, கார்த்திகை தீபத் திருவிழா, புரட்டாசி மாத நவராத்திரி பரிவேட்டை திருவிழா, வைகாசி விசாகம் ஆகிய 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் 10-ம் திருவிழா அன்று நள்ளிரவு திறக்கப்பட் டது. அந்த வாசல் வழியாக உற்சவ அம்பாள் விக்ர கத்தையும், மூலஸ்தானத்தில் உள்ள ஸ்ரீபலி விக்ரகத்தையும் கோவில் மேல்சாந்திகள் விட்டல், பத்மநாபன், சீனிவாசன், கண்ணன், நிதின்சங்கர், மற்றும் கீழ் சாந்திகள் ராம்பிரகாஷ், ராமகிருஷ்ணன் ஆகியோர் பூஜைகள் நடத்தி கோவிலுக்குள் பிரவேசிக்க செய்தனர்.

    அதன் பிறகு அந்த விக்ரகங்களை வெள்ளி பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேளதாளங்கள் முழங்க 3 முறை வலம் வர செய்தனர். அத்துடன் வைகாசி விசாக திருவிழா நிறைவடைந்தது. முன்னதாக காலையில் சிறப்பு பூஜைகள் நடத்தி கொடி இறக்கப்பட்டது.

    இதில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோ வில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற ஜூன் 11,12-ந்தேதிகளில் சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
    • அண்ணா பூங்கா வளாகத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலையைத் திறந்து வைக்கிறார்.

    சேலம்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற ஜூன் 11,12-ந்தேதிகளில் சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 11-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சேலம் வரும் அவர் அன்று சேலம், அண்ணா பூங்கா வளாகத்தில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலையைத் திறந்து வைக்கிறார். பின்னர் சேலம், பழைய பேருந்து நிலையத்தினை பொது மக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கிறார்.

    மேலும், இளம்பிள்ளை கூட்டுக் குடிநீர் திட்டத்தி னைத் தொடங்கி வைத்து, சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 1 லட்சம் பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

    இதனைத்தொடர்ந்து, அரசு அலுவலர்களுடனான கலந்துரையாடல் கூட்டமும் நடைபெற உள்ளது.

    பின்னர், 12-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு காவிரி டெல்டா பகுதி விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைக்கி றார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரு கைக்கான முன்னேற்பாடு பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு இன்று ஆய்வு செய்தார். விழா நடைபெற உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி மைதானத்தையும் அவர் பார்வையிட்டார்.

    ஈரடுக்கு பேருந்து நிலையம்

    சேலம் மாநகராட்சியில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1200 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் சேலம் பழைய பஸ் நிலையப் பகுதியில் ரூ.97 கோடி மதிப்பில் ஈரடுக்கு பஸ் நிலையம் பிர மாண்டமாக கட்டப்பட்டு பணிகள் முடியும் நிலையில் உள்ளது. இந்த பஸ் நிலை யத்தை வருகிற 11-ந் தேதி மாலை முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.

    இதையொட்டி ஈரடுக்கு பஸ் நிலைய கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு இன்று ஆய்வு செய்தார். அப்போது தரைதளம் மற்றும் முதல் தளம் பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்ட அவர் தொடர்ந்து பஸ் நிலையத்தில் மின்விளக்கு கள் அமைக்கும் பணி களையும், சுத்தப்படுத்தும் பணிகளையும் துரிதமாக முடிக்க உத்தரவிட்டார்.

    இந்த நிகழ்ச்சிகளின் போது கலெக்டர் கார்மேகம், எஸ்.ஆர் பார்த்திபன் எம்.பி, ராஜேந்திரன் எம்.எல்.ஏ, மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் பொறுப்பு அசோக் குமார், கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் எஸ்.ஆர் சிவலிங்கம், மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் டி.எம் செல்வகணபதி, போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, மாவட்ட துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ் குமார், உதயநிதி ஸ்டாலின் மன்ற மாவட்ட தலைவர் ராஜ்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • சுற்றுவட்டார பகுதிகளில் குழந்தைகள் மையம் கடந்த 25-ந் தேதி முதல் திறந்து செயல்பட்டு வருகிறது.
    • குழந்தைகளை பெற்றோர்கள் மற்றும் அங்கு பணியில் உள்ள ஆசிரியர்கள் வீட்டில் கொண்டு சேர்ப்பது என வழக்கமாக நடந்து வருகின்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் குழந்தைகள் மையம் கடந்த 25-ந் தேதி முதல் திறந்து செயல்பட்டு வருகிறது. இதில் 3-4 வயது உள்ள குழந்தைகள் அங்கு பணியில் உள்ள ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் மூலம் மதியம் வரை குழந்தை கள் மையத்தில் உள்ளனர். மதிய உணவு அங்கு இலவச மாக வழங்கப்படுகிறது.

    அதற்கு பிறகு குழந்தை களை பெற்றோர்கள் மற்றும் அங்கு பணியில் உள்ள ஆசி ரியர்கள் வீட்டில் கொண்டு சேர்ப்பது என வழக்கமாக நடந்து வருகின்றது. தற்பொ ழுது கோடை காலத்தை முன்னிட்டு ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பதை அரசு ஒத்திவைத்துள்ளது. இதில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படு கிறது. இந்த நிலையில் குழந்தைகள் மையத்தை மட்டும் முன்னதாகவே திறந்து உள்ளதால் குழந்தைகளின் பெற்றோர்க ளுக்கு அதிருப்தியை ஏற்ப டுத்தி உள்ளது. கோடை வெயில் இன்னமும் சுட்டெரிப்பதால் குழந்தை கள் வாடி வதங்கி மையத் துக்கு செல்வதை பார்த்து பெற்றோர் குமுறுகின்றனர்.

    இது குறித்து பரமத்தி வேலூர் குழந்தைகள் மைய ஆசிரியரிடம் கேட்டபோது:-

    கோடை விடுமுறையாக 15 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 25-ந் தேதி குழந்தைகள் மையம் திறக்கப்பட வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்ட னர். அதற்குப் பிறகு மாற்று உத்தரவு எதுவும் வர வில்லை. அதனால் நாங்கள் வழக்கமாக கடந்த 25-ந் தேதி முதல் குழந்தைகள் மையம் திறந்து செயல்பட்டு வருகிறது.

    இதுகுறித்து குழந்தை களின் பெற்றோர்கள் கூறியதாவது:-

    சிறு வயது குழந்தைகளை எல்.கே.ஜி., வகுப்புகள் போல் குழந்தைகள் மையத்திற்கு அனுப்பி வைக்கிறோம். கோடைகால வெப்பத்தை தாங்க முடியாமல் இருக்கும்போது 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளி திறப்பு தேதி மாற்றம் செய்துள்ளனர். ஆனால் குழந்தைகள் மையம் மட்டும் திறப்புக்கு அதிகாரிகள் உத்தரவிட்டது எங்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மேலும் பெரும்பாலான குழந்தைகள் மையம் மேற்கூரை சிமெண்ட் அட்டை போட்ட கட்டிடத்தில் தான் இயங்கி வருகிறது. குழந்தைகள் கோடை வெப்பத்தை தாங்க முடியாமல் உடல் சோர்வு அடைகின்றனர்.

    மற்ற வகுப்புகளுக்கு தேதி மாற்றம் செய்தது போல் குழந்தைகள் மையகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு 7-ந் தேதி தொடங்கப்பட வேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரிஸ்டோ மேம்பாலத்தில் சென்னை அணுகுச்சாலை இணைப்பு பாலத்திதை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.
    • 8 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவு பெற்ற பணிகள்

    திருச்சி,

    தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் சார்பில், திருச்சி ரெயில்வே ஜங்ஷன் மேம்பாலத்தின் புதிய கட்டுமான பணிகள் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அதன்படி திருச்சி மாநகரில் அகலம் குறைந்த திருச்சி ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக புதிய மேம்பாலம் அமைக்கும் பணி 2 கட்டங்களாக கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக அரிஸ்டோ ரவுண்டானாவை மையமாக வைத்து திண்டுக்கல் சாலை, மத்திய பேருந்து நிலையப்பகுதி, ஜங்ஷன் ரெயில் நிலையம் மற்றும் மதுரை சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் பாலம் கட்டும் பணி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏற்கனவே கொண்டு வரப்பட்டது. இதில் ராணுவத்திற்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதத்தால் பாலத்தின் 20 விழுக்காடு பணிகள் தடைபட்டுபோனது. இந்நிலையில் சென்னை-மதுரை சாலையை இணைக்கும் வகையிலான மன்னார்புரம் பகுதியில் ராணுவத்திற்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டதால் இந்த பகுதியில் அணுகு சாலை அமைக்க முடியாமல் இருந்தது. இதையடுத்து இந்த தொகுதி எம்.பி. திருநாவுக்கரசர் டெல்லியில் மத்திய மந்திரிகளை பலமுறை நேரில் சந்தித்து 0.66 ஏக்கர் ராணுவ நிலத்தை பெற்றுக்கொடுத்தார். அதன்பின்னர் பணிகள் வேகமடைந்தன. பல்வேறு கட்ட தொடர் நடவடிக்கைக்குப்பின் இராணுவத்துறைக்கு சொந்தமான நிலத்தின் மதிப்பான ரூ.8.45 கோடிக்கு சம மதிப்பிலான உட்கட்டமைப்பை அமைத்து தருகிறோம் என்பதன் அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செயலாக்கம் ஏற்பட்டதனை தொடர்ந்து அணுகு சாலை அமைக்க கடந்த 05.05.2022 அன்று ராணுவ நிலம் கிடைக்கப்பெற்றது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவால் 14.05.2022 அன்று ரூ.3.53 கோடி மதிப்பிட்டில் அரிஸ்டோ மேம்பாலத்தின் சென்னை செல்லும் பகுதிக்கு அணுகு சாலை, ராணுவ நிலத்தை ஒட்டிய சுற்றுச்சுவர், சேவைச்சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைப்பு போன்ற பணிகள் துவக்கி வைக்கப்பட்டு தற்போது அதற்கான பணிகள் முடிவுற்றுள்ளது. பாலத்தில் மின்விளக்கு பொருத்தும் பணிகள் மற்றும் பாலத்தில் சாலை பாதுகாப்பு பணிகள் போன்றவையும் முடிவுற்ற நிலையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் இருசக்கர வாகனங்களில் பேரணியாக பாலத்தை கடந்து சென்றனர். நிகழ்ச்சியில் எம்.பி. திருநாவுக்கரசர், மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், ஸ்டாலின் குமார் எம்.எல்.ஏ., மாநகர போலீஸ் கமிஷனர் சத்யபிரியா, ஆணையர் வைத்திநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர்கள் கிருஷ்ணசாமி, செல்வி,மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாவட்ட ஊராட்சித் தலைவர் தர்மன் ராஜேந்திரன், அவைத்தலைவர் அம்பிகாபதி,, பகுதி செயலாளர் மோகன்தாஸ்,கவுன்சிலர்கள் முத்து செல்வம், எல்.ரெக்ஸ், கலைச்செல்வி, கவிதா செல்வம், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், வக்கீல் சரவணன், பொருளாளர் இளையராஜா, முத்துக்கிருஷ்ணன், பிரியங்கா பட்டேல், உறந்தை செல்வம், எழிலரசன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

    பின்னர் திருநாவுக்கரசர் எம்.பி. கூறும்போது, இந்த பாலத்தை கட்டி முடிப்பதற்கு பெரிதும் உதவிய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இனிமேல் தொங்குபாலம் என்ற பெயர் மறையும் என்றார்.

    • 14 நாட்களில் ரூ.1.04 கோடி உண்டியல் காணிக்கை வசூல்
    • 2 கிலோ தங்கம், 5 கிலோ வெள்ளியும் கிடைக்கப்பெற்றது

    மண்ணச்சநல்லூர், 

    திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். இந்த கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.அவ்வாறு பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி, கோயிலின் மண்டபத்தில் நடைபெற்றது. கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். 1 கோடியே 4 லட்சத்து 24 ஆயிரத்தி 485 ரூபாயும், 2 கிலோ 759 கிராம் தங்கமும், 5 கிலோ 117 கிராம் வெள்ளியும், 113 வெளிநாட்டு கரன்சிகள், 264 வெளிநாட்டு நாணயங்கள் காணிக்கையாக கிடைக்கப் பெற்றன. காணிக்கை எண்ணிக்கை மாதம் இருமுறை எண்ணப்படுகிறது. இதற்கு முன் மே மாதம் 9-ந்தேதி எண்ணிக்கை நடைபெற்றது.

    • 3 போலீஸ் நிலையங்கள் அமைக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
    • தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கோவை வந்து புதிய போலீஸ் நிலையங்களை திறந்து வைக்க உள்ளார்.

    கோவை,

    கோவை மாநகரில் 15 சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர 3 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களும் உள்ளன.

    இந்தநிலையில், கோவை மாநகரில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை கண்காணிக்கவும், பதற்றம் மிகுந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பை அதிகமாக்கி ரோந்து பணியை மேற்கொள்ள 3 போலீஸ் நிலையங்கள் அமைக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி, கவுண்டம்பாளையம், கரும்புக்கடை, சுந்தராபுரம் என 3 புதிய போலீஸ் போலீஸ் நிலையங்களுக்கான இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பணியிடங்கள் குறித்த விவரங்களை டிஜிபி அலுவலகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

    கவுண்டம்பாளையம் போலீஸ் நிலையத்தில் 2 இன்ஸ்பெக்டர்கள், 5 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், உட்பட 25 பேர் போலீசார், கரும்பு கடை போலீஸ் நிலையத்தில் 2இன்ஸ்பெக்டர்கள், 7 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 25 பேர் மற்றும் சுந்தராபுரம் போலீஸ் நிலையத்தில் 2 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 11 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 25 பேர் என போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இது குறித்து கோவை மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கரும்புக்கடை போலீஸ் நிலையம் ஆயிஷா மஹால் அருகேயும், கவுண்டம்பாளையத்தில் மின் வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் வாடகை கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சுந்தராபுரத்தில் வாடகை கட்டிடத்தில் செயல்பட உள்ளது.

    இதனைத் தொடர்ந்து இந்த புதிய 3 போலீஸ் நிலையங்களும் பயன்பாட்டுக்கு வர தயார் நிலையில் உள்ளன.

    இதனைத் தொடர்ந்து வருகிற 26ந்தேதி (வெள்ளிக்கிழமை) தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கோவை வந்து புதிய போலீஸ் நிலையங்களை திறந்து வைக்க உள்ளார்.

    • ெதாகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
    • மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    காரைக்குடி நகராட்சி முத்துக்கருப்பன்-விசாலாட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் முத்துப்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ -மாணவிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில் காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கழிப்பறை கட்டுவதற்கு ரூ.10 லட்சமும், கலையரங்கம் அமைப்பதற்கு ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகள் நிறைவடைந்தது. இந்த நிலையில் அதனை சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி ஆகியோர் திறந்து வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் ராம்குமார், மனோ கரன், ராதா பாண்டியராஜன், அஞ்சலிதேவி, ரத்தினம், அமுதா, காங்கிரஸ் நகர செயலாளர் குமரேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ், தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி, ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×