search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 228238"

    • அணைக்கரைப்பட்டியில் ரூ. 20 லட்சத்தில் கட்டப்பட்ட துணை சுகாதாரநிலையம் அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
    • மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கலந்து கொண்டு துணை சுகாதா நிலையத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசுகையில், முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற போது கொரோனா நோய் தொற்று இருந்ததால், அந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் மக்களை மீட்டெடுத்த துறை

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை ஆகும்.

    இதன்மூலம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் முதல் தவணை, 2-ம் தவணை மற்றும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு, பொதுமக்களை பாதுகாத்து வருகிறார். இது தவிர, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பரிசோதனை மேற்கொண்டு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்கு மருந்துகள் வழங்கியும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் பொதுமக்களின் நலனும் காக்கப்பட்டு வருகிறது.

    கிராமப்புற–மக்களுக்கு பயனுள்ள வகையில் சிவகங்கை மாவட்டத்தில் 12 நடமாடும் மருத்துவமனைகள் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. அணைக்கரைப்பட்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களுக்கு தேவையானதாகவும், பயனுள்ள வகையிலும் இங்கு நிரந்தர கட்டிடத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அரசு துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    அதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கென திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

    அதனைத்தொடர்ந்து, சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், யாதவா திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் மூலம், ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் மின்சாரத் திருவிழா, சாதனைகளை எடுத்துரைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று கலை நிகழ்ச்சி நடத்திய மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.

    • நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.
    • எம்.எல்.ஏ. திறந்துவைத்தார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 2 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பிள்ளைபாளையம் மற்றும் சூசாழன்மாதேசி ஆகிய கிராமங்களில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பல்வே தரப்பினரும் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூரில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறக்கப்பட்டது.
    • மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கு உரிமையியல் (சிவில்) வழக்குகள் ஏராளமாக தாக்கலாகி வந்தது.

    சிவில் வழக்குகளை தனியாக விசாரிக்க நீதிமன்றம் மற்றும் கூடுதல் நீதிபதிகள் இல்லாததால் வழக்குகளின் விசாரணை தாமதமாவதாக பொதுமக்களும் வக்கீல்களும் கூறி வந்தனா். எனவே உரிமையியல் வழக்குகளை விசாரிக்க தனியாக நீதிமன்றம் அமைக்க வேண்டும் என அரசுக்கு வக்கீல் சங்கத்தின் தலைவர் கணேசன், செயலாளர் முருகேசன், மற்றும் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை ஐகோர்ட்டு, திருப்பத்தூரில் தனி நீதிபதியுடன் உரிமையியல் நீதிமன்றம் தொடங்க உத்தரவிட்டது.

    இதனையடுத்து திருப்பத்தூரில் உள்ள நீதிமன்ற வளாகத்தின் மேல் தளத்தில் புதிய உரிமையியல் நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கூடுதல் மாவட்ட நீதிபதி சத்யதாரா, திருப்பத்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மும்தாஜ், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், வழக்கறிஞர் சங்கத் தலைவர் கணேசன், ரவி உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனா்.

    வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கணேசன் வரவேற்றார். தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜி.சுதாகர், காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, இளையான்குடி குற்றவியல் நடுவர் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகள், காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆத்மநாபன், அரசு வழக்கறிஞர்கள், திருப்பத்தூர் வழக்கறிஞர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    • காமராஜர் மார்க்கெட் தற்காலிக கடைகள் திறக்கப்பட்டது
    • மேயர் கவிதா திறந்து வைத்தார்.

    கரூர்

    கரூர் காமராஜர் மார்க்கெட் தற்காலிக கடைகள் திறக்கப்பட்டன. கரூர் காமராஜர் மார்க்கெட்டில் புதிய வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக அங்குள்ள கடைகள் இடித்து அகற்றப்பட்டு வருகிறது. இதற்காக அங்குள்ள வியாபாரிகளுக்கு இரட்டை வாய்க்கால் பாலத்தில் 68 தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதற்கட்டமாக 21 கடைகள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கரூர் மாநகராட்சி மேயர் கவிதா திறந்து வைத்தார். கடைகள் ஒதுக்கீடு தொடர்பாக வியாபாரிகளிடையே சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை சுமூகமாக தீர்வு காணப்பட்டது.

    • ரசிகர் மன்ற பெயர் பலகை திறப்பு விழா மாவட்ட தலைவர் சன் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
    • சிறப்பு அழைப்பாளர்களாக அந்தியூர் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மாதேஷ் துணைத் தலைவர் சாக்கு பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்து இனிப்புகள் வழங்கி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூர் மற்றும் ஒன்றிய உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பாக அந்தியூர் தவிட்டுப்பாளையம் அம்பேத்கர் வீதி, வேலாயுதம் வீதி, அண்ணா சாலை, சிங்கார வீதி, தேர் வீதி, செல்லப்ப கவுண்டன் வலசு ஆகிய இடங்களில் புதிய ரசிகர் மன்ற பெயர் பலகை திறப்பு விழா மாவட்ட தலைவர் சன் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.

    ஒன்றிய பரிந்துரையாளர் ம.ரமேஷ் குமார் வரவேற்றார்.

    மன்றத்தின் மாவட்டச் செயலாளர் சசிகுமார் மாவட்ட பொருளாளர் பகிர் மாவட்ட துணை பொருளாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளர்களாக அந்தியூர் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மாதேஷ் துணைத் தலைவர் சாக்கு பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்து இனிப்புகள் வழங்கி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

    நகர பொறுப்பாளர்கள் பிரகாஷ், திவாகர் ஈரோடு ஒன்றிய தலைவர் முத்தமிழ் பிரபாகர், பவானி நகரத் தலைவர் கதிரவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர் மன்ற நிகழ்ச்சி ஏற்பாடுகளை ரமேஷ் குமார், நாகராஜ், பார்த்திபன், மாதேஷ், கார்த்திகேயன், தினேஷ் பாபு மணிகண்டன், மாதேஷ், சுமை ரமேஷ், வேல்முருகன், சரவணன், கோபால், விவேக் தியாகு, சரவணன், லோகநாதன்மற்றும் மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் செய்திருந்தனர்முடிவில் அந்தியூர் நகர பொறுப்பாளர் ஜெயக்குமார் கூறினார்

    • அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டு, 2022-2023 ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கின.
    • பள்ளியில் பிளஸ்-2 முடித்துவிட்டு, தற்போது முதல் முதலாக கல்லூரிக்கு அடியெடுத்து வைப்பதால் மாணவ- மாணவிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் காணப்பட்டனர்.

    சேலம்:

    தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கீழ் ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் தமிழகம் முழுவதும் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பி.பி.ஏ உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவா்கள் சோ்க்கைக்கான (2022-2023) விண்ணப்பப் பதிவு இணையதள முகவரிகளில் கடந்த மாதம் ஜூன் 22-ம் தேதி தொடங்கியது.

    117 கல்லூரிகள்

    இதையடுத்து கடந்த 7-ந்தேதியுடன் (வியாழக்கிழமை) விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நிறைவடைந்தது. இதையடுத்து கவுன்சிலிங் முடிவடைந்து, மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதுபோல் தனியார் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு அட்மிஷன் தீவிரமாக நடைபெற்றது.

    சேலம்

    சேலம் கருப்பூரில் உள்ள அரசு பெரியார் பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 22 அரசு கல்லூரிகள், 4 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 91 சுயநிதி கல்லூரிகள் என மொத்தம் 117 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன.

    இதில் 2021-2022 ம் ஆண்டு தருமபுரி மாவட்டம் ஏரியில் கட்டப்பட்ட புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 2022-2023-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பகுதியில் கட்டப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றை கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதல்-அமைச்சர் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கோடை விடுமுறை

    இந்த நிைலயில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை, மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2021-2022 கல்வியாண்டுக்கான செமஸ்டர் தேர்வு கடந்த மே மாதம் தொடங்கி ஜூன் மாதம் முதல் வாரம் வரை நடந்து முடிந்தது.

    செமஸ்டர் தேர்வு நிறைவு பெற்றதை தொடர்ந்து கோடை விடுமுறை விடப்பட்டு இருந்தது. கோடை விடுமுறை நேற்றுடன் முடிவடைந்தது.

    வகுப்புகள் தொடங்கின

    கோடை விடுமுறை நிறைவடைந்ததை அடுத்து இன்று சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டு, 2022-2023 ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கின.

    இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவ- மாணவிகள் இன்று கல்லூரி முதல் நாள் என்பதால் உற்சாகமாக கல்லூரிக்கு வந்தனர். பள்ளியில் பிளஸ்-2 முடித்துவிட்டு, தற்போது முதல் முதலாக கல்லூரிக்கு அடியெடுத்து வைப்பதால் மாணவ- மாணவிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் காணப்பட்டனர். அவர்களை 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவ- மாணவிகள் பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.

    ஆலோசனை

    மேலும் வகுப்பு பேராசியர்கள், பேராசிரியைகளும், மாணவ- மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இதற்கான முன்னேற்பாடுகளை கல்லூரி முதல்வர்கள் செய்திருந்தனர்.

    கடந்த கல்வி ஆண்டில் கொரோனா பிரச்சினையால் பாட திட்டங்கள் குறைக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு முழுமையாக அனைத்து பாடங்களையும் நடத்துமாறு பேராசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

    இன்று கல்லூரி முதல் நாளையொட்டி கல்லூரி வளாகங்கள் சீரமைக்கப்பட்டு, வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு இருந்தது. 

    • மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில் செல்பி மோகத்தால் ஆற்றின் நடுவில் சிக்கிய 3 வாலிபர்கள் சிக்கனார்கள்.
    • பெரும் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    மேட்டூர்:

    மேட்டூர் அணை நேற்று நிரம்பியதை அடுத்து அணைக்கு வரும் நீர் வரத்தை பொறுத்து உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக காலையில் வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் திறப்பானது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு மாலையில் வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

    செல்பி மோகம்

    இந்த நிலையில் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள மல்லிக்குட்டை பகுதியை சேர்ந்த ரவி, பிரபு, தினேஷ் ஆகிய 3 வாலிபர்கள் செல்பி மோகத்தால் மேட்டூர் அனல் மின் நிலையம் அருகே தண்ணீர் வெளியேறும் பாதையில் இறங்கி காவிரி ஆற்றின் நடுவே ஒரு பாறையின் மீது நின்று தண்ணீர் சீறி பாய்ந்து ஓடும் காட்சியை செல்பி எடுத்து ரசித்தனர்.

    இந்த நிலையில் 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்படும் தண்ணீரின் அளவு திடீரென அதிகரிக்கப்பட்டதால் பாறையை மூழ்கடித்தபடி வெள்ளம் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடியது. இதனை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களால் பாறையில் இருந்து தண்ணீரை கடந்து கரையேற முடியாமல் தவித்தனர். உடனடியாக அவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர்.

    அவர்களின் கூக்குரல் கேட்டு அங்கு இருந்த பொதுமக்கள் மேட்டூர் கருமலைக்கூடல் போலீசார் மற்றும் மேட்டூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். 3 வாலிபர்களையும் மீட்கும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டனர். ஆனால் ஆற்றில் வெள்ளம் அலை அடித்தப்படி சீறி பாய்ந்து ஓடியதால் மீட்பு குழுவினருக்கு சாவல் ஏற்பட்டது. இதனால் பதற்றம் அதிகரித்தது. இருப்பினும் மீட்பு குழுவினர் ஒருவருக்கொருவர் கயிறு கட்டிக்கொண்டு ஆற்றில் இறங்கி சற்று தூரம் நடந்தனர். ஆற்றில் கரடு முரடான பாறைகள் உள்ளதால் தண்ணீர் சுழல் அடித்தப்படி சென்றது. இதில் காப்பாற்ற முயன்ற வீரர் ஒருவரை வெள்ளம் இழுத்து சென்றது. அவர் நீச்சல் அடித்து கரை திரும்பினார்.

    இதனால் மீட்பு நடவடிக்கையில் ேதாய்வு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அறிந்து மேட்டூர் உதவி கலெக்டர் சரண்யா, தாசில்தார் முத்துராஜா மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரின் நடுவில் சிக்கிக்ெகாண்ட 3 வாலிபர்களை பத்திரமாக மீட்பதற்கான வழிமுறைகளையும், ஏற்பாடுகளையும் செய்தனர்.

    மீட்பு குழுவினர் கயிற்றில் கல்லை கட்டி இளைஞர்களிடம் வீசினர். அவர்கள் கயிற்றை பிடித்துக் கொள்ள மறுமுனை கயிற்றை மீட்பு குழுவினர் பத்திரமாக பிடித்துக்கொண்டனர். அதன் பிறகு இளைஞர்கள் தங்களது இடுப்பில் கயிற்றை கட்டிக் கொண்டு தண்ணீரில் குதித்து அடுத்தடுத்து பத்திரமாக கரைக்கு வந்து சேர்ந்தனர்.

    சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி மீட்பு குழுவினர் 3 பேரையும் பத்திரமாக மீட்டனர். இதன் காரணமாக மேட்டூர் அனல் மின் நிலைய சாலையில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மீட்பு குழுவினரை பொதுமக்கள் பாராட்டினர். ஆபத்தை உணராமல் இளைஞர்கள் ஆற்றில் இறங்கி செல்பி எடுக்க முயன்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மொடக்குறிச்சி வடக்கு ஒன்றிய பா.ஜ.க .அலுவலகத்தை மொடக்குறிச்சி சரஸ்வதி எம். எல். ஏ. கலந்துகொண்டு திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.
    • தொடர்ந்து பல்வேறு கட்சியில் இருந்து விலகி நூற்றுக்கும் மேற்பட்டோர் பா.ஜ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி வடக்கு ஒன்றிய பா.ஜ.க .அலுவலகத்தை மொடக்குறிச்சி சரஸ்வதி எம். எல். ஏ. கலந்துகொண்டு திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.

    முன்னதாக வடக்கு ஒன்றிய தலைவர் ரெயின்போ கணபதி வரவேற்றார்.

    மாநில பொதுச்செ–யலாளர் ஏ. பி .முருகா–னந்தம் முன்னிலை வகித்தார். தொடர்ந்து பல்வேறு கட்சியில் இருந்து விலகி நூற்றுக்கும் மேற்பட்டோர் பா.ஜ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.

    தெற்கு மாவட்ட செயலாளர் பாயிண்ட் மணி,தெற்கு மாவட்ட தலைவர் எஸ். டி செந்தில்குமார்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.எஸ். சவுந்தரம், பொதுச் செயலாளர்கள் சிவகாமி, செந்தில், மகேஸ்வரன், ஈஸ்வரமூர்த்தி, வேதானந்தம், மாவட்ட பொருளாளர் சுதர்சனம்,–மற்றும் ஒன்றிய மாவட்ட பிரதிநிதிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையத்தில் இரட்டைமலை சீனிவாசன் உருவப்படம் திறக்கப்பட்டது.
    • மாநில தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம்-மதுரைரோட்டில் பழைய பஸ் நிலையம் அருகே சிவகுலத்தோர் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் இரட்டைமலை சீனிவாசன் உருவப்பட திறப்பு விழா நடந்தது.

    மாநில தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வேல்முருகன், பொருளாளர் சுகுநாதன் முன்னிலை வகித்தனர்.மாநில மகளிரணி தலைவி கலையரசி வரவேற்றார்.

    முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இரட்டைமலை சீனிவாசனின் உருவ படத்தை திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேஷ், மாவட்ட தலைவர் லட்சுமிகாந்தன், மாவட்டமகளிரணி தலைவி தமிழ்செல்வி, நகர செயலாளர் சரவணகுமார், ஒன்றிய செயலாளர் ராசுக்குட்டி, வனராஜ், முனியசாமி,இளைஞரணி முனிசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் குமரன் நன்றி கூறினார்.

    • ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க காவல் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
    • மேலும் ஏதாவது சந்தேகம் இருப்பின் 9655220100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 3,552 இடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    தேர்வுக்கான விண்ணப்பங்களை தகுதியுள்ள தேர்வர்கள் இணையதளம் மூலம் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்ப உதவிடும் வகையில் ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காவல் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மேலும் ஏதாவது சந்தேகம் இருப்பின் 9655220100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆலங்குடியில் அரசு கலை அறிவியல் கல்லூரி - முதல்வர் திறந்து வைத்தார்
    • அமைச்சர் மெய்யநாதன் குத்துவிளக்கேற்றினார்

    புதுக்கோட்டை: :

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, திருமயம் என 2 அரசுக் கல்லூரிகள் தொடங்கப்படும் என கடந்த சட்டப்பேரவையில் அறிவிக்கப்படடது. தொடர்ந்து ஆலங்குடி அரசு கலை, அறிவியல் கல்லூரிக்காக கீழாத்தூர் சமத்துபுரம் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. நடப்பாண்டு கல்லூரிக்கான சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து ஆலங்குடி சந்தைப்பேட்டைபகுதியில் வாடகை கட்டடத்தில் கல்லூரிக்கான தற்காலிக இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்நிலையில், கணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் கல்லூரியை திறந்து வைத்தார்.

    விழாவில், பங்கேற்று சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் குத்துவிளக்கு ஏற்றிவைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் உஷா செல்வம், திருவர ங்குளம் ஒன்றிய ஆணையர் ஆயிஷா ராணி, கிராம வட்டார வளர்ச்சி கோகுல கிருஷ்ணன், புதுக்கோட்டை மன்னர் கல்லூரியின் முதல்வர் திருச்செல்வம், ஆலங்குடி பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம், அறந்தாங்கி சேர்மன் மகேஸ்வரி சண்முகநாதன், மகளிர் திட்ட இயக் குனர் ரேவதி, புதுக்கோட்டை அஞ்சுகா மீனாட்சிசுந்தரம், வீரமணி, பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆலங்குடி சுற்றியுள்ள ஊராட்சி மன்ற தலைவர்க ள் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் ஏராளமான கலந்துகொண் னர் ஆலங்குடி நகர தலைவர் பழனிகுமார் நன்றி கூறினார்.

    • இளைஞர்களுக்காக இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் திறப்பு விழா நடைபெற்றது.
    • அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார்

    அரியலூர்:

    அரியலூர் செந்துறை சாலையில் எம்.பி. கல்வி அறக்கட்டளை சார்பில் தமிழக அரசின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை அரியலூர் எம்.எல்.ஏ. வக்கீல் கு.சின்னப்பா தலைமையில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.அரியலூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் மலர்விழி, மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் ராமன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரமேஷ், மாவட்ட திறன் அலுவலர் செல்வம், வக்கீல் சங்க தலைவர் மனோகரன், நகராட்சி தலைவர் சாந்தி, நகராட்சி துணைத் தலைவர் கலியமூர்த்தி, முன்னாள் நகர் மன்ற தலைவர் முருகேசன்,தா.பழுர் ஒன்றிய கவுன்சிலர் எழிலரசன், மதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேல், ஒன்றிய செயலாளர் சங்கர், மற்றும் பாலச்சந்தர், பிரபு, ஆகாஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த பயிற்சி மையத்தில் இலவச திறன் பயிற்சிகள், கல்வி ஆலோசனை சேவைகள், வேலைவாய்ப்பு ஆலோசனைகள், போட்டி தேர்வுக்கான பயிற்சிகள், ஆளுமை மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்டவைகள் அளிக்கப்படுகிறது. இதனை வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.





    ×