என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆறுமுகநேரி"
- தாக்குதல் நடத்திய வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பிரதீப், அலெக்ஸ் ரூபன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை சேர்ந்தவர் பிரபல தொண்டு நிறுவன நிர்வாகியான பாலகுமரேசன்.
தாக்குதல்
ஆறுமுகநேரியில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதாகவும், இதன் விளைவாக சமூக விரோத செயல்களால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி கடந்த ஆண்டு பொதுமக்கள் சாலை மறியல் நடத்தினர். இதில் பாலகுமரேசன் கலந்துகொண்டதால் அவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதனால் அவர் தனக்கு பாதுகாப்பு தர வேண்டுமென்று போலீசாரிடம் மனு கொடுத்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந்தேதி ஒரு கும்பல் பாலகுமரேசனை பயங்கரமான ஆயுதங்களால் தாக்கியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்ட பாலகுமரேசன் தீவிர சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
இவர் மீதான தாக்குதல் வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஆறுமுகநேரி ராஜமன்னியபுரத்தை சேர்ந்த சூசைராஜ் மகன் பிரதீப் என்ற அந்தோணி பிரதீப் (20), காமராஜபுரத்தை சேர்ந்த திலகர் மகன் அலெக்ஸ் ரூபன் என்ற பப்பை (19) ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்குமாறு ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் அளித்த அறிக்கையை மாவட்ட சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட கலெக்டர் செந்தில்ராஜ் பிரதீப், அலெக்ஸ் ரூபன் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தர விட்டார். இதன்படி அவர்கள் இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
- ஆறுமுகநேரி மெயின் பஜார் பகுதியில் காமராஜர் பூங்கா உள்ளது.
- பூங்கா விரைவில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர், கலெக்டர் ஆகியோர் அறிவித்ததாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி நகர அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் அமிர்தராஜ், பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆறுமுகநேரி மெயின் பஜார் பகுதியில் காமராஜர் பூங்கா உள்ளது. இது 1958-ம் ஆண்டில் அப்போதைய பேரூராட்சி தலைவரான இயேசுதாசன்வேதமுத்து மற்றும் எம்.எல்.ஏ வாக இருந்த எம்.எஸ். செல்வராஜன் ஆகியோரின் முயற்சியால் அமைக்கப்பட்டது. இதனை சில நாட்களுக்கு முன்பு பார்வையிட்ட நகராட்சி துறை அமைச்சர் கே.என். நேரு, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் காமராஜர் பூங்கா நவீன வசதிகளுடன் விரைவில் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தனர்.
இது ஆறுமுகநேரி மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சரான பெருந்தலைவர் காமராஜர் பெயரில் அமைந்துள்ள இந்த பூங்கா வளாகத்தில் பேரூராட்சியின் சார்பில் காமராஜரின் முழு உருவ சிலை அமைக்கப்பட உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- குப்பைகளை கொட்டுவதற்காக வெள்ளமடை அருகே 10 ஏக்கரில் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
- ஆறுமுகநேரி பேரூராட்சி நகராட்சியாக மாற்றப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
ஆறுமுகநேரி:
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரிக்கு நேற்று கள ஆய்வு பணிக்காக வருகை தந்தார்.
அவருடன் தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ. சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோரும் வந்தனர். இவர்களை பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணை தலைவர் கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கில் நகரின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது, பேரூராட்சி அலுவலகத்தின் எதிரே உள்ள குப்பை கிடங்கில் குப்பைகளை அகற்றும் பணி முடிந்ததும் அங்கு வணிக வளாகம், பஸ் நிலையம், காய்கறி சந்தை ஆகியவற்றை அமைப்பது என்றும், பேரூராட்சியின் குப்பைகளை கொட்டுவதற்காக வெள்ளமடை அருகே 10 ஏக்கரில் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், மெயின் பஜாரில் உள்ள காமராஜர் பூங்கா மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
மேலும் தார் சாலைகள் அமைக்கும் பணிக்காக ரூ.7 கோடி ஒதுக்கப்படுவதாகவும், விரைவில் ஆறுமுகநேரி பேரூராட்சி நகராட்சியாக மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் வெங்கடேசன், மாரியம்மாள், தீபா, சந்திரசேகர், சிவகுமார், சகாய ரமணி, நிர்மலா தேவி ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து ஆறுமுகநேரி பகுதிகளில் குப்பைகளை சேகரிக்கும் பணிக்காக 15 நவீன பேட்டரி வாகனங்களை அமைச்சர் நேரு வழங்கினார்.
பின்னர் அமைச்சர்கள் கே.என். நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் பஸ் நிலையம் மற்றும் வணிக வளாகம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டனர்.
அப்போது ஆறுமுகநேரி நகர தி.மு.க. செயலாளர் நவநீத பாண்டியன், துணைச் செயலாளர் அகஸ்டின், மாவட்ட பிரதிநிதி ராதா கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- ரெயில்வே வளர்ச்சி குழு நிர்வாகிகள் கூட்டம் அமைப்பின் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆறுமுகநேரியில் நடைபெற்றது.
- திருச்செந்தூர் - சென்னைக்கு நேரடி விரைவு ரெயில் இயக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரியில் ரெயில்வே வளர்ச்சி குழு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் தங்கமணி முன்னிலை வகித்தார். அமிர்தராஜ் வரவேற்று பேசினார்.
நெல்லை - திருச்செந்தூர் இடையில் மின்சார ரெயில் திட்டத்தை வேகப்படுத்தி செயல்முறைக்கு கொண்டு வந்துள்ள தென்னக ரெயில்வே மண்டல மேலாளரை பாராட்டியும், இந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு நூற்றாண்டு விழா கொண்டாடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் நெல்லை - திருச்செந்தூர் இடையிலான ரெயில்வே திட்டத்தை கொண்டுவர அயராது பாடுபட்ட அப்போதைய நெல்லை ஜில்லா போர்டு மெம்பரான ஆறுமுகநேரியை சேர்ந்த டோகோ. பொன்னையா நாடாருக்கு நினைவுத்தூண் அமைப்பது என்றும், ஆறுமுகநேரி ரெயில் நிலைய அணுகு சாலையை தார் சாலையாக மாற்றக் கோரியும், திருச்செந்தூர் - சென்னைக்கு நேரடி விரைவு ரெயில் இயக்க வலி யுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நிர்வாகிகள் முருகேச பாண்டியன், சுகுமார், நடராஜன், வெங்க டேசன், மனோகரன்,கற்பக விநாயகம், கணேஷ் மூர்த்தி, சண்முக சுந்தரம், கந்தபழம், குருசாமி, சீனிவாசன், தங்கேஸ்வரன், சுந்தர், லிங்க பாண்டி, கணேசன் ஆகி யோர் கலந்து கொண்டனர். முருகன் நன்றி கூறினார்.
- காயல்பட்டினம் ரேசிங் பீஜியன் கிளப் சார்பில் 7- வது ஆண்டு புறா பந்தயம் நடைபெற்றது.
- மதுரையிலிருந்து 210 புறாக்கள் பந்தயத்திற்கு விடப்பட்டன.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் ரேசிங் பீஜியன் கிளப் சார்பில் 7- வது ஆண்டு புறா பந்தயம் நடைபெற்றது. சிவகங்கை அருகே உள்ள ஓகுர் மைதானத்தில் இருந்து மொத்தம் 205 புறாக்கள் பறக்க விடப்பட்டன.
இதில் சிவகங்கை-காயல்பட்டினம் இடையிலான 160 கிலோ மீட்டர் விமான தூரத்தை காயல்பட்டினம் கே.டி.எம். தெருவை சேர்ந்த அகமது ரியாஸ் என்பவரது புறா 2 மணி நேரம் 2 நிமிடம் 10 வினாடியில் கடந்து வந்து முதல் இடத்தை வென்றது.
கூடுதலாக 30 வினாடிகளில் வந்த சுலைமான் நகரை சேர்ந்த சதக்கத்துல்லா என்பவரது புறா 2- வது இடத்தையும், அதனையடுத்து 10 வினாடி கழித்து வந்த நைனார் தெருவை சேர்ந்த முகமது ஹாஷிம் என்பவரது புறா 3-வது இடத்தையும் பிடித்தன. இவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை புறா பந்தய கிளப் நிர்வாகிகள் அகமதுரியாஸ், லெப்பை, முகமது ஹாஷிம், அகமது, இப்னு மாஜா ஆகியோர் செய்திருந்தனர்.
இதேபோல் ஆறுமுகநேரி ஸ்டார் ரேசிங் பீஜியன் கிளப் சார்பில் மதுரையிலிருந்து 210 புறாக்கள் பந்தயத்திற்கு விடப்பட்டன.
இவற்றில் 160 கி. மீ. சாலை தூரத்தை 1 மணி 54 நிமிட நேரத்தில் கடந்து வந்த லட்சுமி மாநகரத்தை சேர்ந்த ஜோஸ் வினின்ஸ்டன் என்பவரது புறா முதல் இடத்தை பிடித்தது. மேலும் இவரது இரு புறாக்கள் முறையே 2-வது மற்றும் 3-வது இடங்களை பிடித்தன. இதற்கான ஏற்பாடுகளை கிளப் நிர்வாகிகள் நாராய ணன், ராஜ், பட்டு ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
- மருத்துவ முகாமிற்கு ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார்.
- மருத்துவ முகாமில் 280 பேர் சிகிச்சை பெற்று பயன் அடைந்தனர்.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவமுகாம் ஆறுமுகநேரி கா.ஆ. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் கல்யாணசுந்தரம் முகாமை தொடங்கி வைத்தார். காயாமொழி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாசி, ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சீனிவாசன் மற்றும் டாக்டர்கள் அம்பிகாபதி, அகல்யா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் மகராஜன், ஜெய்சங்கர், ஆனந்த ராஜ் உள்ளிட்ட குழுவினர் சிகிச்சைக்கான நடவடிக்கை களை மேற்கொண்டனர்.
தூத்துக்குடி சுகாதார பணிகளின் துணை இயக்குனர் டாக்டர் பொற்செல்வன், நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன் ஆகியோர் முகாமை பார்வையிட்டனர்.
இதன் மூலம் 280 பேர் சிகிச்சை பெற்று பயன் அடைந்தனர். இவர்களில் 15 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் மேல் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். ரத்த சோகை, வைட்டமின் குறைபாடுகள், கண் சிகிச்சை, பல் சிகிச்சை மற்றும் நீரிழிவு, இரப்பை, குடல் நோய், சிறுநீரக பரிசோதனை ஆகியவை நடந்தன. இலவச மருந்துகளும் வழங்கப்பட்டன.
- மடத்துவிளை புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது.
- நேற்று காலை திருவிழா சிறப்பு திருப்பலி, புதுநன்மை வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி மடத்துவிளை புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது.
விழா நாட்களில் தினசரி திருப்பலி, மறையுறை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடந்தன. விழாவின் ஒவ்வொரு நாளும் குழந்தைகள் தினம், இளையோர் தினம், திருமணம் ஆனவர்கள் தினம், முதியோர் தினம், பக்த சபையார் அன்பியங்கள் தினம், தொழிலாளர்கள் தினம், ஒப்புரவு தினம், ஆலய அர்ச்சிப்பு தினம், பங்கு மக்கள் தினம் என்று கொண்டாடப்பட்டது.
10- வது நாளான நேற்று காலையில் திருவிழா சிறப்பு திருப்பலி மற்றும் புதுநன்மை வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் மணப்பாடு மறை மாவட்ட முதன்மை குரு ஜான் செல்வம், சேர்ந்தபூமங்கலம் பங்குதந்தை செல்வன், அடைக்கலாபுரம் பங்குத்தந்தை பீட்டர் பால் ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து மாலையில் புனித சவேரியார் சொரூப கப்பல் சப்பரபவனி தொடங்கியது.
நிகழ்ச்சியில் ஆறுமுகநேரி பங்கு தந்தை அலாசியஸ் அடிகளார், மடத்துவிளை ஊர்நல கமிட்டி தலைவர் செல்வம் உள்பட திரளா னோர் கலந்து கொண்டனர். சப்பரபவனி மெயின் பஜார் வழியாக சண்முகபுரம் புனித அன்னம்மாள் ஆலயத்திற்கு சென்றது. அங்கு சிறப்பு வழிபாடு முடிந்தபின் மீண்டும் சப்பரபவனி தொடங்கி புனித சவேரியார் ஆலயம் வந்தடைந்தது.
நிறைவு நிகழ்ச்சியாக இன்று காலையில் நன்றி திருப்பலி மற்றும் கொடியிறக்கம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து மதியம் அசனம் நடந்தது.
விழாவிற்கான ஏற்பாடு களை மடத்துவிளை ஊர்நல கமிட்டியினர், ஆறுமுகநேரி பரதர் சமுதாய கமிட்டி தலைவர் செல்வி உள்பட பலர் செய்திருந்தனர்.
- கொடியேற்று நிகழ்ச்சிக்கு அமலிநகர் பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் தலைமை தாங்கினார்.
- நிறைவு நாளன்று புனித சவேரியார் சொரூப கப்பல் சப்பர பவனி நடக்கிறது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி மடத்து விளை புனித சவேரியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் தொடக்கமான கொடியேற்று நிகழ்ச்சிக்கு அமலிநகர் பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் தலைமை தாங்கினார்.
ஆறுமுகநேரி பங்கு தந்தை அலாசியஸ் அடிகளார், சிங்கித்துறை பங்குத்தந்தை ஷிபாகரன், பெரியதாழை துணை பங்கு தந்தை கிங்ஸ்லின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மடத்துவிளை ஊர் நல கமிட்டி தலைவர் செல்வம் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
திருவிழாவில் தினசரி திருப்பலி, மறையுறை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 2- வது நாளான புனித வின்சென்ட் தே பவுல் மற்றும் மரியாவின் சேனையாளர்கள் சார்பில் இன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து பத்து நாள் திருவிழாவில் இளையோர் தினம், திருமணமானவர்கள் தினம், முதியோர் தினம், பக்த சபையார் அன்பியங்கள் தினம், தொழிலாளர்கள் தினம், ஒப்புரவு தினம், ஆலய அர்ச்சிப்பு தினம், பங்கு மக்கள் தினம் ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
நிறைவு நாளன்று புனித சவேரியார் சொரூப கப்பல் சப்பர பவனி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் பங்குத்தந்தை அலாசியஸ் அடிகளார் மற்றும் மடத்துவிளை ஊர்நல கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
- பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு நலக்கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு நலக்கூட்டம் பேரூராட்சி துணைத் தலைவர் கல்யாண சுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
செயல் அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் அலுவலர் செல்வி பிளாரன்ஸ் விளக்க உரையாற்றினார்.
அப்போது அவர் குழந்தைகளை தொழிலாளர் ஆக்குதல், குழந்தை திருமணம் ஆகியவற்றை தடுத்தல், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்தல், குழந்தைகள் நலனுக்கான இலவச தொலைபேசி எண் 1098 மற்றும் அவர்களின் சட்டதிட்ட பாதுகாப்பு பற்றியும் பேசினார்.
வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவின் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள் குறித்த விழிப்புணர்வு பலகையை பேரூராட்சி அலுவலகத்தில் வைப்பது எனவும், பேரூராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் மகாராஜன், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநில தலைவர் டாக்டர் கென்னடி, மாவட்ட தலைவர் ராஜ்கமல், துணைத் தலைவர் உதயகுமார், கா.ஆ. மேல்நிலைபள்ளியின் ஆசிரியர் கண்ணன் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- விழாவில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு தொழிலதிபர் ஜெயச்சந்திரன் 9 தங்க மடல்களை பரிசாக வழங்கினார்.
- வெற்றி பெற்ற மாணவிக்கு ஆதவா அறக்கட்டளை நிறுவனர் பாலகுமரேசன் தங்கப்பதக்கம் மற்றும் பரிசுத்தொகையை வழங்கினார்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா தொழிலதிபர் ஜெயச்சந்திரன் நாடார் தலைமையில் நடைபெற்றது.பள்ளி மேலாண்மை மற்றும் மேம்பாட்டு குழு தலைவர் ஜானகி அம்மாள், பள்ளி நிர்வாக கமிட்டி தலைவர் பேச்சியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சுப்புலட்சுமி வரவேற்று பேசினார்.
விழாவில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு தொழிலதிபர் ஜெயச்சந்திரன் 9 தங்க மடல்களை பரிசாக வழங்கினார்.பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் கல்யாண சுந்தரம், நகர் நல மன்ற தலைவர் பூபால் ராஜன் ஆகியோரும் பரிசுகள் வழங்கினர்.
மாணவிகள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. போதை விழிப்புணர்வு குறித்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு ஆதவா அறக்கட்டளை நிறுவனர் பாலகுமரேசன் தங்கப்பதக்கம் மற்றும் பரிசுத்தொகையை வழங்கி னார்.
விழாவில் ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம், முனைவர் தவசிமுத்து, வார்டு கவுன்சிலர் வெங்கடேசன், காமராஜர் நற்பணி மன்ற செயலாளர் ராமஜெயம், தி.மு.க நகர செயலாளர் நவநீத பாண்டியன், அ.தி.மு.க முன்னாள் நகர செயலாளர் அமிர்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை தேவமலர் நன்றி கூறினார்.
- மாணவ, மாணவிகள்வேடம் அணிந்து கொலுவாக அமர்ந்திருந்தனர்.
- டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி அருகே உள்ள சாகுபுரம் கமலாவதி சீனியர் செகன்டரி பள்ளி யின் சார்பில் தசரா விழாவை முன்னிட்டு மத நல்லிணக்க கொலு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் எல்லா மதமும் எம்மதமே, எதுவும் எங்களுக்கு சம்மதமே, ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை வலியுறுத்தி மத நல்லிணக்கத்தை உணர்த்தும் வகையில் மாணவ, மாணவிகள் அனைத்து மத கடவுள்கள், தேசிய தலைவர்கள், சாத னையாளர்கள், இசை கலைஞர்கள், விலங்குகள் போன்று வேடம் அணிந்து கொலுவாக அமர்ந்திருந்தனர்.
பள்ளியின் அறங்காவலரும் டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவருமான சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். நந்தினி சீனிவாசன் குத்துவிளக்கு ஏற்றினார்.
மற்றொரு அறங்காவ லரும் நிறுவனத்தின் பொது மேலாளருமான ராமச்சந்திரன், பள்ளி முதல்வர் அனுராதா, தலைமை ஆசிரியர்கள் சுப்பு ரத்தினா, ஸ்டீபன் பாலாசீர், நிர்வாகி மதன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- ஆறுமுகநேரியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பயோனிக் முறையில் குப்பை மேடு அகற்றும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
- இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று நவீன வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பயோனிக் முறையில் குப்பை மேடு அகற்றும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாண சுந்தரம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கல்யாண சுந்தரம் முன்னிலை வகித்தார். நிர்வாக அதிகாரி கணேசன் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் குப்பையை அகற்றும் பணிக்கான எந்திரத்தை இயக்கி வைத்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
ஆறுமுகநேரியில் நீண்ட காலமாக இருந்து வந்த குப்பைமேடு பிரச்சினைக்கு இப்போது தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி ரூ.1.44 கோடி செலவில் இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குப்பை கொட்டும் இடத்தை மாற்றுவ தற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும். மேலும் இப்பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. அங்கு இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று நவீன வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானம் அமைக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், ஆறுமுகநேரி நகர செயலாளர் நவநீத பாண்டியன், அவைத் தலைவர் சிசுபாலன், மாவட்ட பிரதிநிதி ராதா கிருஷ்ணன், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்