search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீதாஜீவன்"

    • ஏழை எளிய ஓதுக்கப்பட்ட மக்களுக்காக திட்டங்களை தீட்டி தமிழக மக்களுக்கு பணியாற்றியவர் கலைஞர் என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
    • இந்த ஆட்சியில் நரிக்குறவர்களுக்கு வீட்டு மனை பட்டா, வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி மாணவரணியினருக்கான திராவிட மாடல் பயிற்சி அரங்கம் எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

    அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி வரவேற்புரையாற்றினார்.

    கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    தி.மு.க. திராவிடமாடல் ஆட்சி என்பது அனைவருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது தான்.

    ஏழை எளிய ஓதுக்கப்பட்ட மக்களுக்காக திட்டங்களை தீட்டி தமிழக மக்களுக்கு பணியாற்றியவர் கலைஞர். எங்களுக்கு எம்மதமும் சம்மதம் மதஉணர்வை மதிக்கிறோம். மதவெறியை எதிர்க்கிறோம்.

    இந்த மொழியை அழிக்க வேண்டும் என்றால் இனத்தை அழிப்பதற்கு சமம். அதை மீட்டெடுக்கும் வகையில் தமிழ் மொழி செம்மொழி அந்தஸ்தை ஏற்படுத்தியவர் கலைஞர்.

    இந்த ஆட்சியில் நரிக்குறவர்களுக்கு வீட்டு மனை பட்டா, வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    கோவில் கோபுரத்தை பார்த்து கும்பிட்டு சென்றவர்களை உள்ளே செல்ல முடியாத நிலை இருந்ததை மாற்றியது தி.மு.க. தான். இதுபோல் பல சாதனைகளை முன்நிறுத்தி மக்களுக்காக உழைத்தது தி.மு.க. தான். நம்முடைய முதல்-அமைச்சர் 24 மணிநேரத்தில் 20 மணி நேரமும் நாட்டுமக்களுக்காக உழைக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

    தி.மு.க. மாநில செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜுவ்காந்தி, மாநில திட்டத் துணைத்தலைவர் ஜெயரஞ்சன் ஆகியோர் மாணவ, மாணவிகளிடையே பேசினர்.

    அப்போது சுதந்திர தினம், குடியரசு தினம், சமூக நீதி, மண்டல் கமிஷன், காவிரி நீர் பங்கீடு குறித்து டிவிசன் உருவாக்கிய பிரதமர் யார்?, தி.மு.க. தோன்றிய காலம் உள்ளிட்ட பல்வேறு கடந்த கால கருத்துகளை மாணவ மாணவிகளுக்கு தெரியும் வகையில் அதன் கருத்துகளை அவர்கள் மத்தியில் பேசி அதற்கான கேள்வி- பதில்களுக்கு சரியான விடை தெரிவிக்க வேண்டும் என்றார்.

    அதற்கு சரியான பதிலளித்த மாணவ, மாணவிகள் 100 பேருக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் கீதாஜீவன், ஜெயரஞ்சன், ராஜுவ்காந்தி, மேயர் ஜெகன் பெரியசாமி ஆகிேயார் கைகடிகாரம் வழங்கினர்.

    கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன், செல்வின், பொருளாளர் ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, துணை மேயர் ஜெனிட்டா, மாநகரட்சி மண்டலத்தலைவர்கள் அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் கஸ்தூரிதங்கம், அன்பழகன், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தனர்.
    • உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கந்தசாமிபுரத்தில் அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், (திட்டம்) ரங்கநாதன் உதவி ஆணையர்கள் சேகர், ராமச்சந்திரன், மாநகராட்சி நகர்நல அலுவலர் அருண்குமார், சுகாதார துறை அதிகாரி ஸ்டாலின் பாக்கியநாதன், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் நிர்மல் ராஜ், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அந்தோணி கண்ணன்,

    தொண்டரணி துணை செயலாளர் ராமர், மாநகர வர்த்தக அணி துணை செயலாளர் கிறிஸ்டோபர் , விஜயராஜ், கவுன்சிலர்கள் கற்பக கனிசேகர், ஜான்சிராணி, நாகேஸ்வரி, அந்தோனி பிரகாஷ்மார்சல், தெய்வேந்திரன், வட்டச் செயலாளர் சதிஷ் குமார், சுகாதார ஆய்வாளர் ஹரி கணேஷ்,

    போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை செயலாளர் அல்பர்ட், பிரதிநிதிகள் பிரபாகர் லிங்க ராஜ், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி மற்றும் மணி, ஜோஸ்பர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாநகராட்சி முழுவதும் 400 இடங்களில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

    ×