search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெற்றி"

    • தென்காசி வ.உ.சி.வட்டார நூலகத்தில் 55-வது தேசிய நூலக வாரவிழா கொண்டாடப்பட்டது.
    • மாணவ-மாணவிகளுக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் பரிசு வழங்கினார்.

    தென்காசி:

    தென்காசி வ.உ.சி.வட்டார நூலகத்தில் 55-வது தேசிய நூலக வாரவிழா கொண்டாடப்பட்டது. தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், பழனிநாடார் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர்.

    தனுஷ்குமார் எம்.பி. முன்னிலை வகித்தார். வட்டார நூலகர் பிரமநாயகம் வரவேற்றார்.

    நகர்மன்ற உறுப்பினர் காதர் மைதீன், ஆகாஷ் பிரண்ட்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குநர் மாரியப்பன், தென்காசி கேன்சர் சென்டர் இயக்குநர் பாரதிராஜா, நிலா ஸ்வீட்ஸ் உரிமையாளர் பிரபுதேவகுமார், வட்டார கல்வி அலுவலர் இளமுருகன், வாசகர் வட்ட துணைத்தலைவர் மைதீன், ஆசிரியர் ஆறுமுகம், ஓவிய பயிற்சியாளர் ஜெயசிங், அரவிந்த் யோகாலயா பாலசுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    விழாவில் தி.மு.க. மாவட்ட பொருளாளர் ஷெரீப், செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, செங்கோட்டை நகரச்செ யலாளர் வெங்கடேஷ், கோமதி நாயகம், சமீம், இஸ்மாயில், ஜெகதீசன், பொதுக்குழு உறுப்பினர் தமிழ்செல்வி, வக்கீல் கண்ணன், மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் பரிசு வழங்கினார்.

    கிளை நூலகர் சுந்தர் நன்றி தெரிவித்தார்.விழா ஏற்பாடுகளை நூலகர்கள் ஜீலியா ராஜசெல்வி, நிஹ்மத்துன்னிஸா, அம்பை நூலகர் சதீஷ், வாசகர் வட்ட நிர்வாகிகள் குழந்தை ஜேசு, முருகேசன் செய்திருந்தனர்.

    • கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி சுகாதார ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாட குறிப்பேடு மற்றும் எழுதுபொருட்கள் வழங்கல்.

    வேதாரண்யம்:

    தூய்மை பாரத இயக்கம் சார்பில் வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு ஊராட்சியில் உலக கழிவறை தின சுகாதார ஓட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கோடியக்காடு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தலைமை வகித்து சுகாதார ஒட்டத்தை துவக்கிவைத்தார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சரவணன், ஊராட்சியின் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் சுபா, கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன், அஞ்சலக அலுவலர், மகளிர் குழுக்கள், தூய்மை பணியாளர்கள், சுந்தரம் அரசு உதவி தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் நீலமேகம் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து விழிப்புணர்வு உறுதிமொழியும், எடுத்துக்கொண்டனர்.

    உலக கழிவறை தினம் நிகழ்வில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்களுக்கும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி பாட குறிப்பேடு மற்றும் எழுதுபொருட்களை வழங்கினர்.

    • வெற்றிபெற்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டது
    • நீரினைப்பயன்படுத்துவோர் சங்கத் தேர்தலில்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீர்நிலைகளின் நீரினைப் பயன்படுத்துவோர் 34 சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியானது.

    இந்தநிலையில் பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மொத்தமுள்ள 34 தலைவர் இதில் 8 தலைவர்கள் தவிர, மற்ற 26 தலைவர் பதவிகள் மற்றும் 91 உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    மீதமுள்ள 8 தலைவர்கள் மற்றும் 10 உறுப்பினர்கள் பதவிகளுக்கு நேற்று காலை முதல் வாக்குப்பதிவு விறு, விறுப்பாக நடைபெற்றது. இதில் கல்லாலங்குடி தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தல் கடும் பரபரப்புக்கு இடையே இரண்டு மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

    அனைத்து வாக்குச்சாவடிகளில் இருந்தும் வாக்குப் பெட்டிகள் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு, மாலை நான்கு மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.வாக்குகள் என்னப்பட்டு மாலை 6 மணிக்கு மேல் தலைவர்கள் 8 பேர் வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.

    வெற்றி பெற்ற தலைவர்களான விஜயரெகுநாதபுரம் செல்வராசு, குளவாய்பட்டி பானுமதி, மேலாத்தூ ர் குமார், கல்லாலங்குடி பாண்டியன், கொத்தமங்கலம் முத்துத்துரை, மாங்காடு பாலசுப்பிரமணியன், வல்லாத்திராக்கோட்டை, வாண்டாக்கோட்டை, பூவரசகுடி, மணியம்பலம் இவைகளுக்கு கருப்பையா, நம்புகுழி முத்து ஆகிய 8 தலைவர்களாகவும் மற்றும் பத்து உறுப்பினர்கள் என வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர்.

    பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலரும், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியருமான முருகேசன் மற்றும் ஆலங்குடி தாசில்தார் செந்தில் நாயகி ஆகியோர் வெற்றி பெற்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.

    • 3 மாணவர்களும், இம்மாதம் கோவையில் நடைபெறும் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.
    • குமரி மாவட்ட அளவில் பல்வேறு பள்ளிகள் மற்றும் ஸ்கேட்டிங் கிளப்களில் பயிற்சி பெறும் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சுங்கான்கடை வின்ஸ் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் தேசிய அளவில் ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் நடத்துவதற்கு தகுதியான 200 மீட்டர் ரோலர் ஸ்கேட்டிங் மைதானம் உள்ளது. இது தென் தமிழகத்தில் மிகப்பெரிய மைதானம் ஆகும். இம்மைதானத்தில் மாநில அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் பங்குபெற தகுதியான போட்டியாளர்களை குமரி மாவட்ட அளவில் தேர்வு செய்யும் தகுதி சுற்று நடைபெற்றது.

    சென்னை தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஸ்கேட்டிங் கிளப் -ம் இணைந்து குமரி மாவட்ட அளவில் 5 பிரிவுகளில் ஸ்கட்டிங் போட்டிகளை நடத்தின. குமரி மாவட்ட அளவில் பல்வேறு பள்ளிகள் மற்றும் ஸ்கேட்டிங் கிளப்களில் பயிற்சி பெறும் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    வின்ஸ் பள்ளி மாணவர்களும் பங்கேற்று மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றனர். மாணவர்கள் பிபின்குமார், பபின்குமார், ஹாட்ரியல் வின்சென்ட் ஆகியோர் வயது அடிப்படையிலான போட்டிகளில் வெற்றி பெற்றனர்.

    3 மாணவர்களும், இம்மாதம் கோவையில் நடைபெறும் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு வின்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் கோப்பை, பதக்கம் சான்றிதழ்களையும் வழங்கி கவுரவித்தார். மேலும் அவர்கள் மாநில அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தி ஊக்கப்படுத்தினார்.

    போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கன்னியாகுமரி மாவட்ட ஸ்கேட்டிங் கிளப் செயலாளர் குமார் ஜேசுராஜன் மற்றும் ஸ்கேட்டிங் பயிற்சியாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • 12-ம் வகுப்பு படித்து முடித்து நீட் தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றார்.
    • பள்ளி சார்பிலும், கிராம மக்கள் சார்பிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ஆந்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த குமார்- பவானி தம்பதியினர்.

    விவசாயக் கூலிகளான இவரது மகள் ராஜேஸ்வரி.

    இவர் ஆந்தக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்து இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி அதில் வெற்றிப் பெற்றார்.

    அவருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

    அவருக்கு அவர் படித்த பள்ளியின் சார்பாக பாராட்டு விழா நடைப்பெற்றது.

    பள்ளியின் தலைமையாசிரியர் துரைமுருகு தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் பள்ளியின் சார்பிலும் கிராம மக்களின் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் மாணவி ராஜேஸ்வரியை வெகுவாக பாராட்டினர்.

    • 19 வயதுடையவருக்கான சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம்.
    • 17 வயது பிரிவு ஆண்கள் கபடி போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாமிடம்.

    பேராவூரணி:

    பேராவூரணி அரசு மேல்நிலைப்பள்ளி, 12 ஆம் வகுப்பு மாணவர் இன்பன் கார்த்தி, பாபநாசத்தில் கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற, 19 வயதுடையவருக்கான சைக்கிள் பந்தயப் போட்டியில் கலந்து கொண்டு, மாவட்ட அளவில் முதலிடத்தை பெற்றார்.

    இதன் மூலம் இவர் மாநில அளவிலான போட்டிக்கு பங்கு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இதேபோல் இப்பள்ளியில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள், 17 வயது பிரிவு ஆண்கள் கபடிப் போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.

    வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை, பள்ளித் தலைமை ஆசிரியர் முதல்வன், உடற்கல்வி ஆசிரியர்கள் திருநாவுக்கரசு, சோலை, முத்துராமலிங்கம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • மதிப்பில்லாமல் செய்யப்படும் எந்த ஒரு செயலும் வெற்றி பெறுவதில்லை.
    • இதை கடைபிடித்தால் நிச்சயம் நம் வாழ்வில் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

    பிரபலமான தொழில் அதிபர் டாட்டாவுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் உண்டு. அவர் தான் பயன்படுத்தும் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார். இதனால் விலை மலிவாக நிறைய பேனாக்களை வாங்கி, தொலைத்து விடுவார். இந்த கவனக்குறைவை நினைத்து மிகவும் மனம் வருந்தினார்.

    அப்போது டாட்டா தன் நண்பருக்கு ஒரு ஆலோசனை வழங்கினார். மிகவும் விலை உயர்ந்த பேனா ஒன்று வாங்க சொன்னார். அதன் படியே 22 காரட் தங்கத்தால் ஆன பேனா ஒன்றை வாங்கினார்.

    பிறகு 6 மாதம் கழித்து டாட்டா அந்த நண்பரை சந்தித்தார்.பேனா மறதியை பற்றி விசாரித்தார்.

    அந்த தங்க பேனாவை தான் மிகவும் கவனமாக வைத்துக் கொள்வதாகவும், முன்பு இருந்ததை விட தன்னுடைய செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

    இதுதான் நம்முடைய வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கிறது. நாம் மதிப்பாக உணரும் ஒவ்வொன்றையும் கவனத்துடன் பார்த்துக்கொள்கிறோம்...

    1. உடலை மதிப்பாக உணர்ந்தால், சாப்பிடுவதில் கவனம் செலுத்துவோம்.

    2. நண்பனை மதிப்பாக உணர்ந்தால், மரியாதை கொடுப்போம்.

    3. பணத்தை மதிப்பாக உணர்ந்தால், அவசிய செலவுகள் செய்வோம்.

    4. உறவுகளை மதிப்பாக உணர்ந்தால், முறிக்க மாட்டோம்.

    5. வியாபாரத்தை மதிப்பாக உணர்ந்தால், அர்ப்பணிப்புடன் செய்வோம்.

    6. வாழ்க்கையை மதிப்பாக உணர்ந்தால், உயர்ந்த நோக்கத்துடன் வாழ்வோம்.

    மதிப்பில்லாமல் செய்யப்படும் எந்த ஒரு செயலும் வெற்றி பெறுவதில்லை. இதை கடைபிடித்தால் நிச்சயம் நம் வாழ்வில் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

    • இறகு பந்து போட்டியில் சரசுவதி நாராயணன் கல்லூரி அணி வெற்றி பெற்றது.
    • மதுரை காமராசர் பல்கலைக்கழக ‘பி’ மண்டல கல்லூரிகளுக்கான இறகு பந்து போட்டி விவேகானந்த கல்லூரியில் நடைபெற்றது.

    மதுரை

    மதுரை காமராசர் பல்கலைக்கழக 'பி' மண்டல கல்லூரிகளுக்கான இறகு பந்து போட்டி விவேகானந்த கல்லூரியில் நடைபெற்றது. 8 கல்லூரி அணிகள் பங்கு பெற்ற இப்போட்டியில் சரசுவதி நாராயணன் கல்லூரி அணி முதலிடம் பெற்றது.

    இதன்மூலம் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மண்டலங்களுக்கு இடையேயான இறகு போட்டிக்கு சரசுவதி நாராயணன் கல்லூரி அணி தகுதி பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் கண்ணன், துணை முதல்வர் மோதிலால், வணிகவியல் துறைத்தலைவர் ஜெயக்கொடி மற்றும் உடற்கல்வி இயக்குநர் யுவராஜ் ஆகியோர் பாராட்டினர்.

    • தோல்வியை கண்டு துவண்டு விட கூடாது.
    • தோல்வியை ஒரு பாடமாக, அனுபவமாக எடுத்து கொள்ளுங்கள்.

    உழைப்பு, கல்வி, விளையாட்டு, வாழ்க்கை என எதுவாக இருந்தாலும் அனைவரும் விரும்புவது வெற்றியை தான். இந்த வெற்றியை மிகவும் எளிதாக நாம் பெற்று விட முடியாது. அதற்கு விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் அவசியம்.

    துவண்டு விட கூடாது

    முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. மிக கடுமையாக உழைப்பவர்கள் கூட சில நேரங்களில் தோல்வியை சந்திக்க நேரிடும். தோல்வியை கண்டு துவண்டு விட கூடாது. தோல்வி ஏற்பட்டால் அது எதனால் ஏற்பட்டது, அதில் இருந்து விடுபட என்ன வழி? என்று தான் ஆராய வேண்டும். மற்றவர்களின் வெற்றியை கண்டு பொறாமைபடுவதை காட்டிலும், அவர் எவ்வாறு வெற்றி பெற்றார் என ஆராய்ந்தால் நாமும் வெற்றி பெறலாம்.

    ஏமாற்றம்

    எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் பணபலம், ஆள் பலம் உள்ளவராக இருந்தாலும் அவருக்கும் ஏதாவது ஒரு இடத்தில் தோல்வி, ஏமாற்றம் இருக்க தான் செய்யும். எனவே தோல்வி ஏற்பட்டால் அதற்கான காரணம் என்ன என்று தீவிரமாக யோசிக்க வேண்டும். எங்கே தவறு நடந்துள்ளது என்பதை கண்டுபிடித்து தோல்வியை வெற்றியாக மாற்றுவதற்கான வழிகளை உருவாக்க வேண்டும்.

    தோல்வியை ஒரு பாடமாக, அனுபவமாக எடுத்து கொள்ளுங்கள். ஒரு தடவை தோல்வி ஏற்பட்டது என்பதற்காக அந்த செயலை விட்டு ஒதுங்குவது தவறு. தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து, இனி அதை வெற்றியாக மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை திட்டமிட்டு கொள்ள வேண்டும்.

    வெற்றி தேவதை

    எதிர்கால வெற்றியை இலக்காக வைத்து உழைத்தால் தோல்விகள் தோற்றுப்போகும். வெற்றி தேவதை தேடி வந்து மாலையிடும். வெற்றி மற்றும் தோல்வியை சமமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    கல்வி, அனுபவம், அணுகுமுறை போன்ற காரணத்தாலும் தோல்வி ஏற்படலாம். எனவே உங்களிடம் உள்ள குறைகளை போக்கி வெற்றி வரும் வகையில் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    ஒவ்வொரு முறையும் உங்கள் திட்டங்களை நன்கு ஆராய்ந்து பாருங்கள். தற்போதைய கால சூழ்நிலைக்கு ஏற்ப திட்டங்களை தீட்டி செயல்படுங்கள்.

    எதிர்கால திட்டம்

    தோல்வியில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்ள மறக்க வேண்டாம். தோல்விக்கான காரணங்களை அலசி ஆராயும் போது நடுநிலையுடன் செயல்படுங்கள். உங்கள் மீதும், உங்களின் செயல்பாடுகள் மீதும், எதிர்கால திட்டத்திலும் ஏதேனும் குறைகள் இருந்தால் மறைக்காமல் ஒப்புக் கொள்ளுங்கள்.

    தோல்விகளை அனுபவமாக எடுத்துக் கொண்டு அதிலிருந்து பாடம் கற்று கொள்ள தயங்க வேண்டாம். ஒரு முறை செய்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பது அவசியம். தோல்வி நமக்கு கற்று தந்த பாடத்தை என்றும் நாம் மறந்து விட கூடாது. அவ்வாறு மறக்காமல் செயல்பட்டால் தான் வெற்றி பெற முடியும். எதிலும் விடாமுயற்சியுடன் செயல்படுங்கள். வெற்றியை என்றும் உங்கள் பக்கம் தக்க வைத்துக்கொள்ளுங்கள்.

    ராஜேஸ்வரி, அரசு கலைக்கல்லூரி, மதுரை.

    • சென்னையில் நடைபெறவிருக்கும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
    • மயிலாடுதுறை மாவட்ட மாணவ- மாணவிகளுக்கு வன உயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன.

    நாகப்பட்டினம்:

    நாகூரில் வன உயிரின வார விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு போட்டிகள் நாகூர் தனியார் பள்ளியில் நடந்தது.

    மாணவர்களுக்கு ஓவிய போட்டி, வண்ணம் தீட்டுதல், வினாடி வினா, ஆங்கில பேச்சு போட்டி தமிழ் பேச்சு போட்டி, ஆங்கில கட்டுரை போட்டி, தமிழ் கட்டுரை போட்டிகள், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்டன.

    இதில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் வெற்றி பெற்ற முதல் இடம் பிடித்த மாணவர்கள் சென்னையில் நடைபெறவிருக்கும் மாநில அளவிலான போட்டி களில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    வன உயிரின காப்பாளர் யோகேஷ் குமார் மீனா ஆலோசனையின் பேரில் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மாணவ மாணவிகளுக்கு வன உயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன.

    வனத்துறை வனச்சரகர் ஆதி லிங்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

    முன்னதாக நடைபெற்ற விழாவில் நாகை மாவட்டதேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட தேசியபசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் ஆகியோர் உயிரின வார விழா அனுசரிப்பதின் அவசியத்தை எடுத்துக் கூறினர்.

    விழாவில் பள்ளி முதல்வர் பெனெட் மேரி, காரைக்கால் சுந்தரபாண்டியன், மரம் சௌந்தரராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நடுவர்களாக அசோக் மணிவண்ணன் பாஸ்கரன் செங்குட்டுவன், ஐசக் காட்சன், பிரியா ஆகியோர் செயல்பட்டனர்.

    பள்ளி ஆசிரியர்கள் சிவா, ரகு, பாஸ்கர் ஆகியோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். அ

    க்டோபர் 2 முதல் அக்டோபர் எட்டு வரை நடைபெற இருக்கின்ற வன உயிரின வாரத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன என்று வன உயிரின காப்பாளர் யோகேஷ் குமார் மீனா தெரிவித்தார்.

    • இளையோர் தடகள போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன.
    • முதல் நாள் போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட தடகளச் சங்கம், தூத்துக்குடி தொழில் வர்த்தக சங்கம் இணைந்து நடத்திய இளையோர் தடகள போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. போட்டிகள் 14 வயதுக்குடப்பட்டவர்கள், 16 வயதுக்குட்பட்டவர்கள், 18 வயதிற்குட்பட்டவர்கள், 20 வயதிற்குட்பட்டவர்கள் என நடைபெற்றன. ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.

    பள்ளி கல்லூரிகளில் பயிலும் சுமார் 1500 ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர். முதல் நாள் போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தொடங்கி வைத்தார். ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், என பல போட்டிகள் நடத்தப்பட்டன. 2 நாட்கள் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பால்சாமி தலைமையில் நடைபெற்றது.

    தூத்துக்குடி துறைமுக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஷர்மிளா ஜெனிட்டா வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட தடகள சங்க செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் அருள் சகாயம், தூத்துக்குடி தொழில் வர்த்தக சங்க இணைச் செயலாளர் தீரமகாராஜன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அக்டோபர் 2-வது வாரம் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் திருவண்ணாமலையில் நடைபெற உள்ளது.

    • விழாவில் 224 மாணவர்களுக்கும், 59 மாணவிகளுக்கும் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
    • சிறப்பாக படிக்கும் மாணவர்கள் இந்திய அளவில் நடத்தப்படும் உயர்பதவிக்கான தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலை ப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இவ்விழாவில் 224 மாணவர்களுக்கும், 59 மாணவிகளுக்கும் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

    தலைமை யாசிரியர் அறிவுடைநம்பி வரவேற்றார். சீர்காழி மாவட்டக் கல்வி அலுவலர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.

    பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தமிழக அரசின் விலையில்லா சைக்கிளை வழங்கி பேசுகையில், சிறப்பாக படிக்கும் மாணவர்கள் இந்திய அளவில் நடத்தப்படும் உயர் பதவிக்கான தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும்" என்றார்.

    இதில் சீர்காழி நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர், தி.மு.க ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகரமன்ற துணைத்தலைவர் சுப்பராயன், சீர்காழி நகரமன்ற உறுப்பினர்கள் நித்யாதேவிபாலமுருகன், ரமாமணி, வேல்முருகன் வாழ்த்துரை வழங்கினர்.

    உதவி தலைமை ஆசிரியர்கள் துளசிரெங்கன், வரதராஜன், தி.மு.க நிர்வாகி செந்தில், இருபால் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் பள்ளியின் உதவித்தமையாசிரியரும் உடற்கல்வி இயக்குநருமான முரளிதரன் நன்றி கூறினார்.

    ×