search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெற்றி"

    • கர்நாடகத்தில் கிடைத்த வெற்றி நாளை தேசம் முழுவதும் கிடைக்கட்டும்
    • தலைவர் ராகுல்காந்தி பிரதமராக அரியணை ஏறுவதற்கு அச்சாரமாக இருக்கட்டும்

    நாகர்கோவில் :

    விஜய்வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சோனியா காந்தியின் வழிகாட்டுதலின்படி தலைவர் ராகுல் காந்தியின் பிரம்மாஸ்திரமான 'பாரத் ஜோடோ 'யாத்திரையை பிரதிபலிக்கும் வகையிலும், பிரியங்கா காந்தியின் உணர்ச்சிகரமான பிரசாரத்தின் மூலமும் இன்று கர்நாடகத்தில் கிடைத்த வெற்றி நாளை தேசம் முழுவதும் கிடைக்கட்டும். தனிப்பெரும் பான்மையோடு ஆட்சி அமைக்கும் கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு எனது வாழ்த்துகள். கடந்த 9 ஆண்டுகளாக இந்திய மக்களையும் இந்திய ஜனநாயகத்தையும் மண்ணில் குழி தோண்டி புதைக்கும் வகையில் செயல்பட்டு வந்த பா.ஜ.க. அரசுக்கு எதிராக வாக்களித்து கர்நாடக மக்கள் இந்திய ஜனநாயகத்தை மீட்டெடுத்துள்ளனர்.

    சிலிண்டர் விலை உயர்வு, ஏழை, எளிய மக்களை வஞ்சிக்கும் திட்டங்கள், எதிர்த்து கேள்வி கேட்கும் அனைவரையும் ஒடுக்கும் செயல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை மக்கள் நாள்தோறும் கடந்த 9 ஆண்டுகளில் சந்தித்து வந்திருந்தனர். சிறுபான்மை மக்களை வஞ்சிக்கும் எண்ணத்தோடு செயல்பட்டு மதப் பிரச்னைகளை தூண்டி குளிர் காய நினைத்த பா.ஜ.க அரசை கர்நாடக மக்கள் இன்று வீட்டுக்கு அனுப்பி உள்ளனர். என்னென்ன சதி வேலைகள், என்னென்ன ஒடுக்குமுறைகள் எதற்கும் அடங்காமல், ஒடுங்காமல் கர்நாடக மாநிலத்தையே பம்பரம் போல் வலம் வந்து, இன்று மதசார்பின்மைக்கு எதிரான மாநிலங்களில் கர்நாடகமும் இணைந்திருப்பது தலைவர் ராகுல் காந்திக்கு கிடைத்த பரிசு. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக பணிபுரிவதற்கு வாய்ப்பாக ஹாசன் நாடாளுமன்ற தொகுதி மேலிடபார்வையாளராக என்னை நியமித்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு எனது நன்றிகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பேரியக்கம் வெற்றி பெற்று தலைவர் ராகுல்காந்தி பிரதமராக அரியணை ஏறுவதற்கு அச்சாரமாக இருக்கட்டும், நாடு வளம் பெறட்டும்.

    இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேசிய திறனாய்வுத் தேர்வு மற்றும் குரூப்-4 தேர்வு, காவலர் தேர்வு என போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
    • சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அரசு பொது நூலக கட்டிடத்தில் நூலக வாசகா் வட்டத்தின் சார்பில் தேசிய திறனாய்வுத் தேர்வு மற்றும் குரூப்-4 தேர்வு, காவலர் தேர்வு என போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

    வாசகா் வட்ட தலைவா் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சிசுந்தரம், வாசகர் வட்ட துணைத்தலைவா் ஆதிமூலம், இணைச்செயலாளா் செண்பகக்குற்றாலம், போட்டித்தேர்வு பொறுப்பாளா் விழுதுகள் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனா். வாசகர் வட்ட பொருளாளா் தண்டமிழ்தாசன் சுதாகர் வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

    தொடர்ந்து செங்கோட்டை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் தேசிய திறனாய்வுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற 23 மாணவ, மாணவிகள், குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்ற 13 மாணவ, மாணவிகள், காவலர் தேர்வில் வெற்றி பெற்ற 6 மாணவ, மாணவிகள், ரெயில்வே தேர்வில் 1 மாணவர் என மொத்தம் 43 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் பரிசுகள் வழங்கினார். ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி சுடலை, ஜே.பி.கல்லூரி முதல்வர் ஜான்கென்னடி, அகாடமி இயக்குநர்கள் மாரியப்பன், அருணாச்சலம், ஒருங்கிணைப்பாளா் ரமேஷ், எஸ்.எம்.எஸ்.எஸ்.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க தலைவா் ஜவஹர்லால்நேரு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா். நுாலகர் ராமசாமி நன்றி கூறினார்.

    • விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம், கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
    • விழாவிற்கு கல்லூரி முதல்வர் தமிழரசி தலைமை தாங்கினார்.

     விழுப்புரம்:      

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு போட்டிகள் மற்றும் கவின் கலை மன்ற விழா நடைபெற்றது.  விழாவிற்கு கல்லூரி முதல்வர் தமிழரசி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் செல்வராஜ், வரலட்சுமி, லலிதா, இந்திரா, முப்பாலிகை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திரா வரவேற்றார். விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம், கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கும் விழாவில் பேசிய ஸ்ரீநாதா போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து மாணவ-மாணவிகளிடம் போதைப் பொருள் பற்றி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். முன்னாள் முதல்வர் நாகலட்சுமி நன்றி கூறினார். இதில் சண்முகம், அருண், புவனேஸ்வரி, தயாளமூர்த்தி, சண்முகசுந்தரம், பாலகுமார், விஜயகுமாரி உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • எந்த செயலையும் தள்ளி போடுவதற்கு நம்மிடம் காரணங்கள் இருக்கும்.
    • கேள்விகள் கேட்பதை என்றுமே நிறுத்திக்கூடாது என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியுள்ளார்.

    மனிதராய் பிறந்த எல்லோரிடத்திலுமே ஆற்றலும், அறிவும்,திறமையும் உண்டு. பலர் தங்களது தகுதியையும், திறமையையும் அறியாமல் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடுகிறார்கள். நம்மை நாமே கேள்வி கேட்பதன் மூலமாக நமக்குள் மறைந்துள்ள திறமைகளை கண்டறிந்து அவற்றின் மூலம் வாழ்வில் உயர முடியும்.

    பலம்என்ன ?

    தங்களுடைய குறைகளையும் பலவீனங்களையும் எளிதாக அறிந்து கொள்ளும் பலர் பலம் என்னவென்று அறிவதற்கு சிரமப்படுவார்கள். நம்மிடம் இருக்கும் திறமைகள் என்னென்ன? நாம் எதில் சிறப்பாக செயல்படுகிறோம்? எவற்றில் எல்லாம் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறோம்? என்பது போன்ற கேள்விகளை நம்மிடம் நாமே கேட்பதன் மூலம் நம்முடைய பலம் என்ன என்பதை எளிதாக கண்டறியலாம்.

    பிறரிடம் கேட்டறிதல்

    எதிர்மறையான சூழ்நிலையில் சிக்கி இருக்கும் போது நமது பலம் என்னவென்று தெரியாமல் போக வாய்ப்பு உண்டு. அந்த சமயங்களில் பெற்றோர் ஆசிரியர், நெருங்கிய நண்பர் போன்றவர்களிடம் நாம் எதில் சிறப்பாக செயல்படுகிறோம்? என கேட்டறிந்து அந்த திறமைகளை மெருகேற்றிக்கொள்ளலாம்.

    தள்ளிப்பபோடுவது கூடாது

    நமது கேள்விகளுக்கு விடை கிடைத்து திறமைகளை அறிந்த பிறகு அவற்றை வளர்த்து கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். எந்த செயலையும் தள்ளி போடுவதற்கு நம்மிடம் காரணங்கள் இருக்கும். அவற்றை ஒதுக்கிவைத்துவிட்டு நம்மைவளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும்.

    தயக்க வேண்டாம்

    திறமைகளை மேம்படுத்தி கொள்ளும் முயற்சியின்போது நமக்குள் பல சந்தேகங்கள் எழலாம். எந்த தயக்கமும இல்லாமல் அவற்றுக்கான விடைகளை நமது முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். புதிதாக ஒரு செயலை செய்யும் போதோ ஒரு விஷயத்தை கற்கும்போதோ மனதில் கேள்விகள் உருவாகும். அவற்றுக்கான விடைகளை கேட்டறிந்து அதற்கேற்ப செயல்பட்டு முன்னேறலாம்.

    முக்கியமான கேள்வி

    முன்னேற நினைக்கும் ஒவ்வொருவரும் நிச்சயமாக ஒரு கேள்வியை தினந்தோறும் தங்களிடம் கேட்டுக்கொள்ள வேண்டும். அன்றைய நாள் முடிந்த பிறகு தாங்கள் செய்த செயல்களை ஆராய்ந்து இதுதான் என்னுடைய சிறப்பான செயலா? என கேட்டு கொள்ளும் போது நாம் செய்த தவறுகள் நமக்கு தெரியவரும் அவற்றை திருத்திக்கொண்டு ஒவ்வொரு நாளையும் சிறப்பான நாளாக மாற்றி அமைக்க வேண்டும்.

    கேள்விகள் கேட்பதை என்றுமே நிறுத்திக்கூடாது என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியுள்ளார். நம்மிடம் நாம் கேட்கும் கேள்விகளும், அதற்கு பெறுகிற பதில்களும் நமது முயற்சிக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும்.

    • பிளஸ்-2 தேர்–வில் மாணவி கே. சவுந்–தர்–ய–லட்–சுமி 600-க்கு 594 மதிப்–பெண்–கள் பெற்று கட–லூர் மாந–கர அள–வில் முதல் இடத்–தைப் பெற்றுள்ளார்.
    • பள்–ளி–யின் தாளா–ளர் டி.மாவீ–ர்மல் சோர–டியா, முதல்–வர் எம்.சந்–தோஷ்–மல் சோர–டியா ஆகி–யோர் பாராட்டி இனிப்பு மற்–றும் பரிசு வழங்கினர்.

    கடலூர்:

    கட–லூர் லட்–சுமி சோர–டியா நினைவு மெட்–ரிக் மேல்– நி–லைப்–பள்–ளி–யில் 2022-23-ம் க ல்– வி– ய ாண்– டு க்– க ா ன பிளஸ்-2 தேர்–வில் மாணவி கே. சவுந்–தர்–ய–லட்–சுமி 600-க்கு 594 மதிப்–பெண்–கள் பெற்று கட–லூர் மாந–கர அள–வில் முதல் இடத்–தை–யும், மாவட்ட அள–வில் 2-ம் இடத்–தை–யும் பெற்று சாதனை படைத்–துள்–ளார். வி. ஸ்ரீஹ–ரிணி 600-க்கு 591 மதிப்–பெண் பெற்று பள்–ளி–யில் 2-ம் இடம் பெற்–றுள்–ளார். இந்த 2 மாண–வி–களும் வணி–க–வி–யல், கணக்கு பதி–வி–யல் மற்–றும் கணினி பயன்–பாட்–டில் முழு மதிப்–பெண் பெற்–றும் சாதனை படைத்–துள்–ள–னர்.

    மேலும் எம்.திவ்யா 600-க்கு 580 மதிப்–பெண் பெற்று 3-ம் இடம் மற்–றும் வேதி–யி–யல் மற்–றும் கணினி அறி–வி–யல் பாடத்–தில் முழு மதிப்–பெண்–ணும் பெற்–றுள்–ளார். எஸ். நந்–திதா 600-க்கு 572 மதிப்–பெண் பெற்று 4-ம் இடத்–தி–லும், சி.யுவ–ஸ்ரீ 600-க்கு 566 மதிப்–பெண் பெற்று 5-ம் இடத்–தை–யும் பெற்று சாதனை படைத்–துள்–ள–னர். பாட–வா–ரி–யாக முழு–மதிப்–பெண் பெற்–ற–வர்–கள் 8 மாண–வர்–களும், 500-க்கு மேற்–பட்ட மதிப்–பெண் பெற்–ற–வர்–கள் 26 மாண–வர்–களும், 450-க்கும் மேற்–பட்டமதிப்–பெண் பெற்–ற–வர்–கள் 21 மாண–வர்–களும் உள்–ள–னர்.

    வெற்றி பெற்ற மாண–வர்–க–ளுக்கு பள்–ளி–யின் தாளா–ளர் டி.மாவீ–ர்மல் சோர–டியா, முதல்–வர் எம்.சந்–தோஷ்–மல் சோர–டியா மற்–றும் உதவி தலைமை ஆசி–ரி–யர் பத்–தா–கான் ஆகி–யோர் பாராட்டி இனிப்பு மற்–றும் பரிசு வழங்கினர்.

    • வடலூர் எஸ்.டி. ஈடன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
    • தேர்வில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளை பள்ளியின் முதல்வர் சுகிர்தாதாமஸ், நிர்வாக இயக்குனர் தீபக்தாமஸ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    கடலூர்:

    வடலூர் எஸ்.டி. ஈடன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. வடலூரில் கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வரும் எஸ். டி. ஈடன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பொதுத் தேர்வில் 285 மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் தேர்வு எழுதிய 285 மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.  இப்பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளில் 75 பேர் 500 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 550க்கு மேல் 25 பேரும், 570 மதிப்பெண்ணுக்கு மேல் 7 மாணவர்களும் பெற்றுள்ளனர். மாணவி கோபிகா 586 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், மாணவி ஈஸ்வரி 579 மதிப்பெண் பெற்று 2-ம் இடமும், மாணவி சாஜிதா 575 மதிப்பெண்ணுடன் 3-ம் இடமும் பெற்றுள்ளனர். தேர்வில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளை பள்ளியின் முதல்வர் சுகிர்தாதாமஸ், நிர்வாக இயக்குனர் தீபக்தாமஸ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.பிளஸ்-2 பொதுத் தேர்வில் 285 மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் தேர்வு எழுதிய 285 மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளில் 75 பேர் 500 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 550க்கு மேல் 25 பேரும், 570 மதிப்பெண்ணுக்கு மேல் 7 மாணவர்களும் பெற்றுள்ளனர். மாணவி கோபிகா 586 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், மாணவி ஈஸ்வரி 579 மதிப்பெண் பெற்று 2-ம் இடமும், மாணவி சாஜிதா 575 மதிப்பெண்ணுடன் 3-ம் இடமும் பெற்றுள்ளனர். தேர்வில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளை பள்ளியின் முதல்வர் சுகிர்தாதாமஸ், நிர்வாக இயக்குனர் தீபக்தாமஸ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • . வள்ளலார் பள்ளியில் இந்த ஆண்டு 247 மாணவ, மாணவியர் பிளஸ்-2 பயின்று வந்தனர்..பிளஸ்-2 தேர்வுக்கான முடிவுகள் இன்று காலையில் வெளியிடப்பட்டது. இதில் வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து தேர்வெழுதிய 247 மாணவர்களும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
    • . இதில் சுவாதி என்ற மாணவி பள்ளி அளவில் முதலிடம் பெற்றதோடு, உயிரியல் குரூப்பில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளார். இவர் இயற்பியல், வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்ணும், தமிழ், ஆங்கிலம், கணிதம், உயிரியல் பாடங்களில் 100-க்கும் 99 மதிப்பெண்களும் பெற்று 600-க்கு 596 மதிப்பெண்ணுடன் மாநில அளவில் 2-ம் இடமும் பள்ளி அளவில் முதலிடமும் பெற்றுள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி கொள்ளுக்காரன்குட்டையில் வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் இந்த ஆண்டு 247 மாணவ, மாணவியர் பிளஸ்-2 பயின்று வந்தனர். கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்வில் 247 மாணவர்களும் தேர்வெழுதினர்.பிளஸ்-2 தேர்வுக்கான முடிவுகள் இன்று காலையில் வெளியிடப்பட்டது. இதில் வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து தேர்வெழுதிய 247 மாணவர்களும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இதில் சுவாதி என்ற மாணவி பள்ளி அளவில் முதலிடம் பெற்றதோடு, உயிரியல் குரூப்பில் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளார். இவர் இயற்பியல், வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்ணும், தமிழ், ஆங்கிலம், கணிதம், உயிரியல் பாடங்களில் 100-க்கும் 99 மதிப்பெண்களும் பெற்று 600-க்கு 596 மதிப்பெண்ணுடன் மாநில அளவில் 2-ம் இடமும் பள்ளி அளவில் முதலிடமும் பெற்றுள்ளார். மாணவி அட்சயா 584மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் 2-ம் இடமும், மாணவன் அண்புமணி 583 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் 3-ம் இடமும் பிடித்துள்ளார். மேலும், இந்த பள்ளி கடலூர் மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைவர் திருமால்வளன், தாளாலர் கே. நடராஜன், வள்ளலார் கிட்ஸ் பள்ளி தாலாளர் மற்றும் செயலாளர் சக்கரவர்த்தி, பொருளாலர் ராஜா, கண்ணன், சுப்பிரமணி, ஜனார்த்தனன், மணிவாசகம், சாரங்கபாணி, செல்வராஜ், சரவணன், திருவேங்கடம், சண்முகம், சரோஜாம்மாள், வள்ளலார் கல்வியியல் கல்லூரி ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துக்களை கூறினர். மேலும், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சால்வை அணிவித்தும், இனிப்பு வழங்கியும், கேக் வெட்டியும் கொண்டாடினார்கள்.

    • போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த 8 அணிகள் பங்கேற்றன.
    • ஆண்கள் பிரிவில் முதல் பரிசை கோவை அணி பெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தில் நடிகர் ரஜினிகாந்தின் 73-வது பிறந்தநாள் விழா மற்றும் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு 9-ம் ஆண்டு ஆண்கள் மற்றும் பெண்க ளுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது.

    தருவைகுளம் முத்து ரஜினிகாந்த் கைப்பந்து கழகம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினி ரசிகர்மன்றமும் இணைந்து நடத்திய போட்டியில் தூத்துக்குடி, சென்னை, கோவை, ஈரோடு, நெல்லை உட்பட தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த 8 அணிகள் பங்கேற்றன.

    2 நாட்கள் நடைபெற்ற போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் பரிசை பெற்ற கோவை அணியும், 2-ம் பரிசை பெற்ற சென்னை அணிக்கும் பெண்கள் பிரிவில் முதல் பரிசை பெற்ற ஈரோடு அணிக்கும், 2-ம் பரிசை பெற்ற சென்னை அணிக்கும் ரொக்க பரிசு மற்றும் வெற்றி கோப்பைகளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கர்நாடக மாநில ரஜினிகாந்த் ரசிகர்மன்ற தலைவர் சந்திரகாந்த் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினி ரசிகர்மன்றத்தினர் விஜய் ஆனந்த், ஜெயபால், அசோக்ராஜ், விஜய் சாம்சன், ரமேஷ் கார்த்திகேயன், கண்ணன், லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி மாநகராட்சி 5-வது வார்டு சேது பாதை ரோடு பகுதியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு லதா ரஜினிகாந்த் பாரத சேவா நிர்வாகிகள், துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கினர். விருதுநகர் மண்டல பொறுப்பாளர் ரஜினி முருகன் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜலெட்சுமி சுரேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட இணை ஒருங்கிணைப் பாளர் ராஜமனுவேல், நிர்வாகிகள் குமாரசாமி, செல்வம், சிரிதேவி, முனீஸ்வரி, ஜோதி காமாட்சி, கோவில்பட்டி முத்து மாரியப்பன், விக்னேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • முதுமலை புலிகள் காப்பக கோப்பையில், 1,200 மீ., துாரம் இலக்கை நோக்கி, 8 குதிரைகள் ஓடின.
    • கோடை மழையால், 5 போட்டிகள் ரத்து செய்யப்பட்டது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில், மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில், கோடை சீசனின் முதல் நிகழ்ச்சியாக குதிரை பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு குதிரை பந்தயம் ஏப்., 1 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.

    நேற்றைய குதிரை பந்தயத்தில், முதுமலை புலிகள் காப்பக கோப்பையில், 1,200 மீ., துாரம் இலக்கை நோக்கி, 8 குதிரைகள் ஓடின. 'கிங் சன்' என்ற குதிரை, 1.22 நிமிடத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

    வெற்றி பெற்ற குதிரையின் பயிற்சியாளர், ஜாக்கிக்கு முதுமலை புலிகள் காப்பக கோப்பையை, முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா பங்கேற்று வழங்கினார். ஊட்டியில் திடீரென பெய்த கோடை மழையால், 5 போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. குதிரை பந்தயத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

    • பைங்காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிகா என்ற மாணவி 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • ஆசிரியர்களை பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டினர்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அருகே பைங்காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிகா என்ற மாணவி 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

    வெற்றிபெற்ற மாணவியையும், பயிற்றுவித்த தலைமை யாசிரியர் மற்றும் ஆசிரியர்களை பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டினர்.

    • கோலப்போட்டியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
    • போட்டியில் 12 பேருக்கு ஆறுதல் பரிசாக குக்கர் வழங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கான கோலப்போட்டி நடந்தது. தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, முன்னாள் எம்.பி. விஜிலாசத்யானந்த், ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, பூசைபாண்டியன், நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி, புளியங்குடி விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்று பேசினார்.

    இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். முதல் பரிசு பெற்ற சுப்புலட்சுமிக்கு பிரிட்ஜ், 2-ம் பரிசு பெற்ற குருக்கள்பட்டியை சேர்ந்த பெண்ணிற்கு கிரைண்டர், 3-ம் பரிசு பெற்ற பெண்ணிற்கு மிக்ஸி மற்றும் ஆறுதல் பரிசாக 12 பேருக்கு குக்கர் வழங்கப்பட்டது. இதில் நகர அவைத் தலைவர் முப்பிடாதி, முன்னாள் யூனியன் சேர்மன் அன்புமணி கணேசன், இளைஞர் அணி சரவணன், தி.மு.க. நகர துணைச் செயலாளர்கள் மாரியப்பன், முத்துக்குமார், சுப்புத்தாய், வக்கீல் சதீஷ், வார்டு செயலாளர்கள் வீரமணி, வீரா, சிவா, கோமதிநாயகம், காளிசாமி மற்றும் பிரகாஷ், ரகுமான், ஜெயக்குமார், கேபிள் கணேசன், முருகன், வைரவேல், குமார், கோமதிசங்கர், பிரபாகரன் மற்றும் நகர நிர்வாகிகள், நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பெண்களை குறி வைத்து அரங்கேறும் கிண்டல், கேலி அத்துமீறல் அதிகமாக இருக்கிறது.
    • வார்த்தை, சைகை என்று எந்த வடிவத்திலும் கேலி, கிண்டல் செய்ய கூடாது.

    ஒருவர் குண்டாக இருக்கிறாரா? அல்லது ஒல்லியாக இருக்கிறாரா? என்பது முக்கியம்இல்லை. ஆரோக்கியமாக இருக்கிறாரா? என்பது தான் முக்கியம். அது போல் கருப்பாக இருக்கிறாரா? அல்லது சிவப்பாக இருக்கிறாரா? என்பது அவசியம் இல்லை. நல்ல மனநிலையில் இருக்கிறாரா? என்பதே முக்கியம். இனம், மொழி, உருவம், நிறம் போன்றவற்றை வைத்து யாரையும் எடை போட கூடாது. மேலும் அதை அளவீடாக கொண்டு கேலி, கிண்டல் செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளவும் முடியாது.

    சாமுத்திரிகா லட்சணம்

    உச்சி முதல் பாதம் வரை ஆண் மற்றும் பெண்ணின் உடல் உறுப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்று சாமுத்திரிகா லட்சணம் கூறுகிறது. ஆனால் ஒவ்வொரு மனிதரும் உடல் ரீதியாக தனித்தன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஒருவரை போல் மற்றொருவர் இருக்கு முடியாது. இதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

    ஆனாலும் குடும்பங்கள், பள்ளிக்கூடங்கள், பணியிடங்கள் என அனைத்து இடங்களிலும் உருவக்கேலி செய்வது தொடர்கிறது. மேலும் ஒருவரின் உருவம், நடை, உடை, பாவனை போன்றவற்றை பார்த்து உருவக்கேலி செய்வது இன்றளவும் நீடித்து கொண்டு இருக்கிறது. இதனால் சம்மந்தப்பட்ட நபரின் உள்ளார்ந்த மன உணர்வு மற்றும் செயல்திறனை கூட முடக்கி விடுகிறது. அதோடு கேலி செய்பவரின் மனநிலை எந்த அளவில் இருக்கிறது என்பதையும் பிரதிபலிக்கும்.

    வார்த்தை, சைகை என்று எந்த வடிவத்திலும் கேலி, கிண்டல் செய்ய கூடாது. ஏன் என்றால் கேலி, கிண்டலுக்கு ஆளாகும் மாணவர்கள் படிப்பை பாதியில் விடுதல், தொழிலாளர்கள் பணியில் இருந்து விலகுதல் போன்ற முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். சிலர் கேலி, கிண்டல் அவமானத்தால் ஏற்படும் வலியில் வாழ்வை முடித்துக் கொள்ளும் தவறான முடிவை எடுக்க கூடிய நிலைக்கு கூட தள்ளப்படுகின்றனர். எனவே உருவக்கேலி என்பது மனித உரிமை மீறல் ஆகும்.

    தன்னம்பிக்கையை இழக்க கூடாது

    ஒருவரின் நிறம், உயரம், எடை, கண் பார்வை, முடி என உருவத்தை பார்த்து யார் கேலி கிண்டல் செய்தாலும் கவலைப்பட தேவை இல்லை. எது பலவீனம் என்று கூறுகிறார்களோ அதையே பலமாக்கி முன்னேறியவர்கள் அதிகம் உள்ளனர். எனவே எந்த நிலையிலும் தன்னம்பிக்கையை இழந்து விடக்கூடாது.

    ஒரு மாணவருக்கு உடல் அல்லது மனதளவில் கேடு, அவமானம் அல்லது குழப்பத்தை ஏற்படுத்துவது கேலி வதை என்று கூறப்படுகிறது. எனவே தான் கல்வி நிறுவனத்துக்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கேலி செய்வது, உடந்தையாக இருப்பது போன்றவை தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.

    எனவே கேலி வதை தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டால் உடனடியாக கல்வி நிறுவன நிர்வாகத்தினர் விசாரணை நடத்த வேண்டும். அது போன்ற குற்றங்களில் ஈடுபடும் மாணவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விதிகள் வகுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான கேலி, கிண்டல் என்பது அவர்களை துன்புறுத்துவதாக கருதப்படுகிறது. அந்த பாதிப்புக்கு ஆளாகும் குழந்தைகளை மீட்டு சரி செய்ய வேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரியரின் கடமை ஆகும்.

    கேலி, கிண்டல்

    இது போல் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுக்கு 12 சதவீதம் அதிகரித்து வருவதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதில் ஈவ் டீசிங் எனப்படும் பெண்களை குறி வைத்து அரங்கேறும் கிண்டல், கேலி அத்துமீறல் அதிகமாக இருக்கிறது. அது சில நேரங்களில் பெண்களின் உயிரை பறிக்கும் அளவுக்கு சென்று விடுகிறது. ஈவ்டீசிங் குற்றங்கள் நிகழ ஆணாதிக்க மனோபாவமே காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

    ஒரு ஆணின் முறை தவறிய நடத்தை அல்லது செயலால் ஒரு பெண்ணுக்கு அச்சம், பயம், அவமானம், தொல்லை மற்றும் உடல்ரீதியான தாக்குதலுக்கு உள்ளாவது ஈவ்டீசிங் என்று கூறப்படுகிறது. இந்த குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கலாம் என்று சட்டம் கூறுகிறது. செல்போன்கள், இணையதளம் மூலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. எனவே பெண்களுக்கு ஆபாச குறுஞ்செய்தி, உருவப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வெளியிடும் நபர்களுக்கு தண்டனையை கடுமையாக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சரகம் பரிந்துரை செய்து உள்ளது.

    நாகரிக சமுதாயம்

    ஒருவரை கேலி, கிண்டல், அவமதிப்பு செய்வதில் ஈடுபடுபவர்களை தண்டிக்க சட்டங்கள் உள்ளன. ஆனால் அதையும் தாண்டி கேலி, கிண்டல்களை தைரியமாக எதிர் கொள்ள வேண்டும். அது ஒன்று தான் எந்த அவமதிப்பில் இருந்தும் நம் வாழ்வை காத்துக்கொள்ளும் ஒரே வழியாக இருக்கும்.

    மேலும் ஒவ்வொருவரும் மனரீதியாக தங்களை உயர்ந்த சிந்தனையுடன் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் கேலி கிண்டலால் அடுத்தவர்களுக்கு ஏற்படும் வலியை நாம் புரிந்து கொண்டால் அவர்களுக்கு மதிப்பளிக்க கற்றுக் கொள்வோம். அதை நோக்கி செல்வது தான் நாம் நாகரிக சமுதாயத்தில் வாழ்கிறோம் என்பதற்கு சான்றாக இருக்கும்.

    ×