search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெற்றி"

    • நடிகர் வெற்றி தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘மெமரீஸ்’.
    • இப்படம் வருகிற 10 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர்கள் ஷியாம் மற்றும் ப்ரவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மெமரீஸ்'. இந்த படத்தில் வெற்றி கதாநாயகனாக நடிக்க பார்வதி அருண் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ரமேஷ் திலக் ஒரு முக்கிய பாத்திரத்தில் இணைந்து நடித்திருக்கிறார்.


    சிஜு தமீன்ஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்துள்ளார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். அர்மோ மற்றும் கிரண் நுபிதால் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சைக்கோ திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் உலகமெங்கும் மார்ச் 10 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் வெற்றி பேசியதாவது, "எட்டு தோட்டாக்கள் முடிந்த உடனே இந்த கதையை என்னிடம் சொன்னார்கள். 2 வருடத்தில் பேசிக்கொண்டே இருந்தோம். அந்த நேரத்தில் வேறு ஹீரோவை வைத்துப் பண்ணுங்கள் என்று சொன்னேன் ஆனால் நான் தான் வேண்டும் என வெயிட் பண்ணி இந்தப்படம் எடுத்துள்ளார்கள். என்னை நம்பியதற்காக இயக்குநர்களுக்கு நன்றி. முழுக்க அடர்ந்த காட்டுக்குள்,  கஷ்டப்பட்டு படம்பிடித்துள்ளோம். எனக்கு இதில் 4 தோற்றங்கள். படம் நன்றாக வந்துள்ளது பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி" என்று பேசினார்.


    இயக்குனர் ப்ரவீன் பேசியதாவது, "மெமரீஸ் வைத்து இதுவரை நிறையப் படங்கள் வந்துள்ளது. ஆனால் இதில் நீங்கள் படம் பார்க்கும் போது நீங்களே அந்த பாத்திரமாக மாறிவிடுவீர்கள் அப்படி மாறி பார்க்கும் போது படம் எளிதாகப் புரியும். இந்தப்படம் உங்களுக்கு நிறைய ஆச்சரியம் தரும்." என்று பேசினார்.


    இயக்குனர் ஷியாம் பேசியதாவது, "நான் மலையாளி, தமிழில் படம் செய்துள்ளேன்.  இக்கதைக்காகக் கேரளாவில் தயாரிப்பாளர் தேடின போது யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. வெற்றி நாயகனாக நடிக்கிறார் என்று கூறியபோது ஷிஜு சார் ஜீவி படம் பார்த்து உடனே படம் செய்யலாம் என ஒத்துக்கொண்டார். வெற்றி இப்படத்தில் 4 தோற்றங்களில் வருவார். இப்படம் மிக சிக்கலான சைக்கலாஜிக்கல் திரில்லர். படம் ஒரு புது அனுபவமாக இருக்கும். உங்கள் ஆதரவைப் படத்திற்குத் தாருங்கள் நன்றி." என்று பேசினார்.

    • 8 தொட்டாக்கள், ஜீவி, c/o காதல், வனம், ஜோதி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் வெற்றி.
    • இவர் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

    ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளியான 8 தொட்டாக்கள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் வெற்றி. இப்படத்தை தொடர்ந்து ஜீவி படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றார். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் சர்வதேச பட விழாக்களிலும் விருதுகள் கிடைத்தன. அதன்பின்னர் c/o காதல், வனம், ஜோதி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.


    இரவு
    இரவு

    இந்நிலையில் வெற்றி நடிக்கும் புதிய படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இரவு என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஜெகதீசன் சுப்பு இயக்கவுள்ளார். மேலும் இதில் சந்தான பாரதி, மன்சூர் அலிகான், பொன்னம்பலம், தீபா சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. 

    • கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்
    • மொத்தம் ரூ.18 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட மகளிர் திட் டம் சார்பில் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூ ராட்சிக்கு உட்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு இடையே கட்டுரை, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகள் நடந்தன.

    இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கும், மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மை யினர் நலத்துறையின் சார்பில் மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய விடுதி காப்பா ளினிகளுக்கும் காசோலை மற்றும் கேடயங்கள் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத் தில் நடந்தது.

    நிகழ்ச்சியில் கலெக்டர் ஸ்ரீதர் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு காசோலை மற்றும் கேடயம் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில் கூறியதாவது:-

    தமிழ்நாடு நகர்புற வாழ் வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர் கள் மற்றும் பகுதி அளவி லான கூட்டமைப்பு உறுப்பி னர்களிடையே ஒற்றுமையை பலப்படுத்தவும், குழுக்களி டையே ஆரோக்கியமான போட்டிகளை உருவாக்கிட வும்போட்டிகள் நடத்தப்பட் டன. மாநகராட்சி, நகராட்சி கள் மற்றும் பேரூராட்சி பகு திகளில் சுய உதவிக் குழுக்க ளால் அடைந்த பலன்கள், சமூக அங்கீகாரம், சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப் புகளில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டி களில் மொத்தம் 329 பேர் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டிகளில் மாநக ராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் முதல் 3 இடங்களை பெற்ற நபர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அந்த வகை யில் ஒவ்வொரு தலைப்பிற் கும் முதல் 3 இடங்களை பெற்ற 27 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்க பட்டன.

    மாவட்ட பிற்படுத்தப்பட் டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நலத்துறை சார்பில் 2021-2022-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான சிறந்த விடுதி காப்பாளினிகளாக தேர்வு செய்யப்பட்ட 3 பேருக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.5 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.3 ஆயிரம் என மொத்தம் ரூ.18 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, தனித்துணை கலெக்டர் திருப்பதி, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) இலக்குவன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலர் ஹரிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாழ்க்கையில் மாணவிகள் சாதித்து வெற்றி பெறுவது எப்படி?
    • பள்ளி- கல்லூரி விடுதி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம்- நாகை சாலையில் உள்ள அரசு கல்லூரி மாணவிகள் விடுதியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை இணைந்து மாணவ- மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர் தலைமை தாங்கினார்.

    நாகை மாவட்ட காப்பாளர் ஆசிரியர் சங்க தலைவர் வைரவமூர்த்தி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் கலந்து கொண்டு வாழ்க்கையில் மாணவிகள் சாதித்து வெற்றி பெறுவது எப்படி என்பது குறித்து பேசினார்.

    முன்னதாக தோப்புத்துறை பள்ளி மாணவ விடுதி காப்பாளர் விஸ்வலிங்கம் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் திருப்பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் துணைக்கண்ணன், நல்லாசிரியர்கள் வீரப்பன், செங்குட்டுவன் மற்றும் திருத்துறைப்பூண்டி அலெக்சாண்டர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    வேதாரண்யம் அரசு கல்லூரி மாணவிகள் விடுதி காப்பாளார் கலைவாணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.முடிவில் நாகப்பட்டினம் பாலிடெக்னிக் விடுதி காப்பாளர் அகிலன் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி- கல்லூரி விடுதி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • வரும் நாடாளுமன்ற தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியை தி.மு.க. வெற்றி பெறபாடுபட வேண்டும்.
    • மயிலாடுதுறை மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிரப்படுத்த வேண்டும்.

    சீர்காழி;

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய அவைத் தலைவர் நெடுஞ்செழியன் தலைமை வைத்தார்.

    தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்துமகேந்திரன், ஜி. என்.ரவி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் முன்னிலை வகித்தனர்.

    தி.மு.க. ஒன்றிய செயலாளர் பஞ்சு குமார் வரவேற்றார். மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் எம்.எல்.ஏ.வுமான நிவேதா முருகன் கலந்து கொண்டு பேசுகையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியை தி.மு.க. வெற்றி பெறபாடுபட வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிர படுத்த வேண்டும் என்றார்

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி மாவட்ட அவைத் தலைவர் சீனிவாசன் ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன் மலர்விழி திருமாவளவன்,ரவிக்குமார் ரவிக்குமார் மாவட்டத் துணைச் செயலாளர் ஞானவேலன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ரவி, மாவட்ட கவுன்சிலர்கள் ஆனந்தன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜிபையர் அகமது, நிர்வாகிகள் துரைராஜன், சசிகுமார், குலோத்துங்கன், ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தற்போதைய கால சூழ்நிலைக்கு ஏற்ப திட்டங்களை தீட்டி செயல்படுங்கள்.
    • தோல்வியை ஒரு பாடமாக, அனுபவமாக எடுத்து கொள்ளுங்கள்.

    உழைப்பு, கல்வி, விளையாட்டு என எதுவாக இருந்தாலும் அனைவரும் விரும்புவது வெற்றியை தான். இந்த வெற்றியை மிகவும் எளிதாக நாம் பெற்று விடலாம்.

    முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. மிக கடுமையாக உழைப்பவர்கள் கூட சில நேரங்களில் தோல்வியை சந்திக்க நேரிடும். தோல்வியை கண்டு துவண்டு விட கூடாது. தோல்வி ஏற்பட்டால் அது எதனால் ஏற்பட்டது, அதில் இருந்து விடுபட என்ன வழி? என தான் ஆராய வேண்டும். மற்றவர்களின் வெற்றியை கண்டு பொறாமை படுவதை காட்டிலும், அவர் எவ்வாறு வெற்றி பெற்றார் என ஆராய்ந்தால் நாமும் வெற்றி பெறலாம்.

    ஏமாற்றம்

    எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் பணபலம், ஆள் பலம் உள்ளவராக இருந்தாலும் அவருக்கும் ஏதாவது ஒரு இடத்தில் தோல்வி, ஏமாற்றம் இருக்க தான் செய்யும். எனவே தோல்வி ஏற்பட்டால் அதற்கான காரணம் என்ன என்று தீவிரமாக யோசிக்க வேண்டும். எங்கே தவறு நடந்துள்ளது என்பதை கண்டுபிடித்து தோல்வியை வெற்றியாக மாற்றுவதற்கான வழிகளை உருவாக்க வேண்டும். தோல்வியை ஒரு பாடமாக, அனுபவமாக எடுத்து கொள்ளுங்கள். ஒரு தடவை தோல்வி ஏற்பட்டது என்பதற்காக அந்த செயலை விட்டு ஒதுங்குவது தவறு. தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து, இனி அதை வெற்றியாக மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை திட்டமிட்டு கொள்ள வேண்டும்.

    வெற்றி தேவதை

    எதிர்கால வெற்றியை இலக்காக வைத்து உழைத்தால் தோல்விகள் தோற்றுப்போகும். வெற்றி தேவதை தேடி வந்து மாலையிடும். வெற்றி மற்றும் தோல்வியை சமமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    கல்வி, அனுபவம், அணுகுமுறை போன்ற காரணத்தாலும் தோல்வி ஏற்படலாம். எனவே உங்களிடம் உள்ள குறைகளை போக்கி வெற்றி வரும் வகையில் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    ஒவ்வொரு முறையும் உங்கள் திட்டங்களை நன்கு ஆராய்ந்து பாருங்கள். தற்போதைய கால சூழ்நிலைக்கு ஏற்ப திட்டங்களை தீட்டி செயல்படுங்கள்.

    எதிர்கால திட்டம்

    தோல்வியில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்ள மறக்க வேண்டாம்.

    தோல்விக்கான காரணங்களை அலசி ஆராயும் போது நடுநிலையுடன் செயல்படுங்கள். உங்கள் மீதும், உங்களின் செயல்பாடுகள் மீதும், எதிர்கால திட்டத்திலும் ஏதேனும் குறைகள் இருந்தால் மறைக்காமல் ஒப்புக் கொள்ளுங்கள்.

    தோல்விகளை அனுபவமாக எடுத்துக் கொண்டு அதிலிருந்து பாடம் கற்று கொள்ள தயங்க வேண்டாம். ஒரு முறை செய்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பது அவசியம். தோல்வி நமக்கு கற்று தந்த பாடத்தை என்றும் நாம் மறந்து விட கூடாது. அவ்வாறு மறக்காமல் செயல்பட்டால் தான் வெற்றி பெற முடியும். எதிலும் விடாமுயற்சியுடன் செயல்படுங்கள். வெற்றியை என்றும் உங்கள் பக்கம் தக்க வைத்துக்கொள்ளுங்கள்.

    திவ்ய பிரபா, 10-ம் வகுப்பு,

    அரசு பள்ளி, மதுரை.

    • ஏழை, பாமரர்களுக்கு சலுகை வழங்குவது திராவிட மாடல்.
    • பணக்காரர்களுக்கு சலுகைகள் செய்வது ஆரிய மாடல்.

    நாகர்கோவில்:

    நாகர் கோவில் மாநகர வடக்கு பகுதி தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நேற்று மாலை நாகர் கோவில் அண்ணா விளையாட்டு மைதானம் அருகே நடந் தது. பொதுக்கூட்டத்திற்கு வடக்கு பகுதி செயலாளர் ஜவகர் தலைமை தாங்கினார். மாநகரச் செயலாளர் ஆனந்த் வரவேற்றார். மாந கர துணைச் செயலாளர் வேல்முருகன், கவுன்சிலர் கலா ராணி, பகுதி செயலாளர்கள் சேக் மீரான், ஜீவா மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக டாக் டர் செந்தில்குமார் எம்.பி. கலந்து கொண்டு பேசிய தாவது:-

    தி.மு.க. கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து பேராசி ரியர், கருணாநிதி ஆகியோர் இணைந்து பாடுபட்டதன் காரணமாக 20 ஆண்டுகளில் தி.மு.க. அசைக்க முடியாத கட்சியாக உருவானது. பேராசிரியருக்கு பொதுக் கூட்டங்கள் நடத்தி வரு கின்றோம். மற்ற கட்சிகள் அவர்களது தலைவர்களை மறந்து விடுகின்றனர்.

    ஜெயலலிதா இறந்த பிறகு அவருக்கு எந்த பொதுக்கூட்டமும் அ.தி.மு.க.வினர் நடத்தவில்லை.உலகம் நமது பண் பாட்டை பேச வேண்டும் என்று கன்னியாகுமரியில் கருணாநிதி திருவள்ளுவ ருக்கு 133 அடி திருவள்ளு வர் சிலையை அமைத்தார்.தமிழக முதல்-அமைச்சர் தமிழகத்திற்கு பல திட்டங் களை நிறைவேற்றி உள் ளார். அதில் மக்களை தேடி மருத்துவம், பெண்க ளுக்கு இலவச பஸ் பயணம் திட்டம், என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.

    உலக நாடுகள் வியக்கும் அளவில் தமிழகத்தில் கல்வி யையும், மருத்துவத்தையும் கொண்டு செல்லும் அள விற்கு தமிழக முதல்-அமைச்சர் பாடுபட்டு வருகிறார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகமாக பேச மாட்டார். ஆனால் செயலாக்கத்தில் தீவிரம் காட்டி வருகிறார். ஆரிய மாடல், திராவிட மாடலுக்கும் உள்ள வித்தி யாசம் பணக்காரர்களுக்கு சலுகைகள் செய்வது ஆரிய மாடல். ஏழை, பாமரர் களுக்கு சலுகை வழங்குவது திராவிட மாடல்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நாகர்கோவில் மாநக ராட்சி மேயரும், திமுக கிழக்கு மாவட்ட செயலாள ருமான மகேஷ் பேசுகையில், இந்துக்கள் என்றால் பாரதியஜனதா என்று மக் களை திசை திருப்பி வருகிறார்கள்.

    தி.மு.க. ஆட்சியில்தான் குமரியில் உள்ள கோவி லுக்கு கும்பாபிஷேம் நடத்த 48கோடி ரூபாய் ஒதுக்கியது. இதுபோல் பழுதடைந்த 100 கோவில்களை புணரமைப்பு செய்ய ரூ.5 கோடியே 83 லட் சத்தை தமிழக அரசு ஒதுக்கி யுள்ளது. அனைத்து மதத்தை யும் ஒன்று போல் நினைத்து வளர்ச்சி என்ற நோக்கில் முதல்-அமைச்சர் செயல்பட்டு வருகிறார். வருகிற நாடாளுமன் றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.

    பொதுக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் விஜயரத்தினம், மாநில மகளி ரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாவட்ட பொரு ளாளர் கேட்சன், மாநில தணிக்கை குழு உறுப்பினர் சுரேஷ்ராஜன், மாநில மீனவரணி துணை செயலாளர் நசரேத் பசலியான், மாநில கலை இலக்கிய பிரிவு செயலாளர் தில்லை செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், லிவிங்ஸ்டன், பாபு, தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணை தலைவர் இ.என். சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதலிடம் பிடித்த மூன்று மாணவர்களுக்கு நினைவு பரிசுகள்.
    • பள்ளி பருவத்தில் மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மதுவிலக்கு காவல்துறை சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இதில் தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் மீனாட்சி சுந்தரம், அலோசியஸ், தலைமை காவலர்கள் சீனிவாசன், ரஞ்சனி பிரியா, செந்தமிழ்ச்செல்வி, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆசிரியை வெற்றி செல்வி அனைவரையும் வரவேற்றார். முதலிடம் பிடித்த மூன்று மாணவர்களுக்கு நினைவு பரிசுகளும் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் நோட்டுகளும் வழங்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரூபாவதி பேசுகையில் பள்ளி பருவத்தில் மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் போதை பழக்கத்திற்கு அடிமையாக கூடாது என்றார்.

    முடிவில் ஆசிரியர் இன்பாலன் நன்றி கூறினார்.

    • கூடைப்பந்து அணிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.
    • செட்டிநாடு வித்யாஸ்ரமம் பள்ளி முதலிடமும் பெற்று வெற்றி பெற்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி குட் சாமரிட்டன் பள்ளியில் மாநில அளவில் சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு இடையேயான
    6 ஆம் ஆண்டு கூடைபந்து தொடர் போட்டிகள் கடந்த 3 ஆம் துவங்கியது.

    19 வயதிற்கு உட்பட்டோருக்கான கூடைப்பந்து தொடர் போட்டியில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்கள் மட்டுமின்றி புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகளையும் சேர்ந்த 192 ஆண்கள் அணி, 104 பெண்கள் அணியும் என மொத்தம் 296 கூடைப்பந்து அணிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.

    சீர்காழி மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் 5 விளையாட்டுமைதா னங்ளில் இரவுபகலாக நடைபெற்ற தொடர் போட்டிகள் நிறைவடை ந்தது.

    மாணவிகளுக்கான இறுதிப்போட்டியில் செட்டிநாடு வித்யாஸ்ரமம் பள்ளி முதலிடமும், கோபாலபுரம் டி.ஏ.வி.பி பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர். மாணவர்களுக்கான இறுதிப்போட்டியில் பொன்னேரி வேலம்மாள் பள்ளி முதலிடமும், ஏற்காடு எம்ரால்ட் வேலி பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர்.

    வெற்றி பெற்ற அணி களுக்கு விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் தலைவர் கே.வி ராதாகிருஷ்ணன், தலைமை வகித்தார். அனிதா ராதாகிருஷ்ணன், இயக்குனர்கள் பிரவீன் வசந்த் ஜபேஷ், அனுஷா மேரி, அலெக்சாண்டர், ரெனிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிபிஎஸ்சி பப்ளிக் பள்ளி முதல்வர் ஆப்ரகாம் எனோக் வரவேற்றார். கல்வி நிறுவனங்களின் தலைவர் ராதாகிருஷ்ணன் வெற்றி கோப்பையை வழங்கி அனைத்து வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினார். நிறைவில் மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகர சிங் நன்றி கூறினார்.

    • தொழில்நுட்பம் சார்ந்தவற்றை அதிகமாக பேசக்கூடாது.
    • ஒருவரிடம் பேசும் போது கண்ணை பார்த்து தான் பேசவேண்டும்.

    பேச்சுத்திறமை பெற்றவர்கள் மட்டுமே இன்று உள்ள சூழ்நிலையில் தொழிலை வெற்றிகரமாக நடத்தி செல்லமுடியும். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் விவரமானவர்களாக இருக்கின்றனர். எனவே, பேச்சுத்திறமை முக்கியத்துவம் பெறுகிறது. பேசத்தெரிந்தால் மட்டுமே வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் கொடுக்கமுடியும். பொதுவாக பெரும்பாலான தொழில்முனைவோர் வாடிக்கையாளர்களிடம் பேசுவதற்கு அதிக நேரம் ஒதுக்க முடியாது. அதே போல் வாடிக்கையாளர்களும் யாருடைய பேச்சையும் கேட்க அதிக நேரம் செலவிட தயாராக இல்லை. எனவே சாதுர்யமான பேச்சின் மூலமே பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்ய முடியும்.

    அண்மையில் நடத்திய ஒரு ஆய்வில் சொல்லக்கூடிய கருத்தில் 7 சதவீதம் மட்டுமே நேரடியாக கேட்பவர்களுக்கு சென்றடைவதாகவும், 55 சதவீதம் சொல்பவரின் அங்க அசைவுகளின் மூலமாகவும், மீதமுள்ள 38 சதவீதம் கருத்து சொல்பவரின் பேச்சு திறமைக்கு ஏற்றவாறு சென்றடைவதாகவும் தெரிய வருகிறது.

    சரியான முறையில் திட்டமிட்டு என்ன பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? எப்படியெல்லாம் பேசக்கூடாது என்பதை முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டும். புள்ளி விவரங்கள், மற்றவர்களின் அனுபவங்கள், தாம் பெற்ற அனுபவங்கள் இவைகளை கலந்து பேசும்போது பேச்சின் சுவை அதிகரிக்கும். கேட்பவர்களும் ஆர்வமாக கேட்பார்கள். தொழில்நுட்பம் சார்ந்தவற்றை அதிகமாக பேசக்கூடாது.

    ஒரே நேரத்தில் இரண்டு ஆட்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும். சில ஆட்கள் தொலைபேசியில் பேசிக்கொண்டே எதிரில் உள்ளவர்களிடம் பேசுவார். தொழிலையும் கவனிப்பார். இம்மாதிரியான செயல்முறைகளை தவிர்க்க வேண்டும். ஒரு நேரத்தில் ஒருவரிடம் தான் பேசவேண்டும். ஒருவரிடம் பேசும் போது கண்ணை பார்த்து தான் பேசவேண்டும். தொடர்ந்து பேசிக்கொண்டே இல்லாமல் நாம் சொல்வதற்கு எந்த அளவிற்கு பதில் உள்ளது அல்லது நாம் சொல்வதில் கேட்பவர்கள் எந்த அளவுக்கு புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதை அறிந்து பேசவேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் வாடிக்கையாளர்களை மட்டம் தட்டி பேசக்கூடாது. பேச்சில் கோபமூட்டும் சொற்களையோ, தன்மான உணர்வுகளை தூண்டும் சொற்களையோ பயன்படுத்தக்கூடாது.

    பேச்சில் எந்த அளவுக்கு நியாயம் உள்ளதோ, அந்த அளவுக்கு பேசுபவர்களின் மதிப்பு உயரும். கைகளை கட்டிக்கொண்டோ அல்லது கைகளை பிசைந்து கொண்டோ பேசக்கூடாது. வாடிக்கையாளர்கள் பெயர் தெரிந்தால் பெயரை குறிப்பிட்டு பேசுவதில் தவறில்லை. முடிந்த அளவுக்கு வாடிக்கையாளர்களின் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    • 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.
    • வெற்றி பெற்ற 60 மாணவர்கள் மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்பர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போட்டியில் 36 பள்ளிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    14, 17, 19 ஆகிய வயதுக்கு உட்பட்டோர் என 3 பிரிவுகளின் கீழ் டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்று வருகிறது. பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ராஜ்கமல் தலைமையில் நடைபெறும் போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் காந்திமதி தொடங்கி வைத்தார்.

    மேலும் மாவட்ட அளவில் நடைபெறும் இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படுவதுடன். போட்டியில் வெற்றி பெற்று 60 மாணவ-மாணவிகள், மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றனர்.

    • மனோரா சுற்றுலாத்தலம் 2-ம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட 300 ஆண்டுகளை கடந்த பொக்கிஷம்.
    • மாவீரன் நெப்போலியன் ஆங்கிலேய படையினரிடம் தோல்வி அடைந்தார்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி, மனோரா சுற்றுலாத்தலத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் உலக மரபு வாரவிழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தஞ்சை தொல்லியல் துறை அலுவலர் தங்கதுரை தலைமை தாங்கி பேசியதாவது:-

    தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் நவம்பர் 19-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை உலக மரபு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதையொட்டி மரபுச் சின்னங்களை கட்டணம் இன்றி பொதுமக்கள், மாணவர்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    மேலும், மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    மனோரா சுற்றுலாத்தலம் 2-ம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்ட 300 ஆண்டுகளை கடந்த பொக்கிஷம். வாட்டலூர் என்ற இடத்தில் நடைபெற்ற போரில், மாவீரன் நெப்போலியன் ஆங்கிலேயப் படையினரிடம் தோல்வி அடைந்தார்.

    நெப்போலியன் தோல்வியை வெளியுலகுக்கு தெரிவிக்கவும், ஆங்கிலேயரின் வெற்றியை கொண்டாடியும், 2-ம் சரபோஜி மன்னரால் உருவாக்கப்பட்டது தான் இந்த மனோரா என்னும் நினைவுச்சின்னம். மாணவர்கள் நினைவுச் சின்னங்களை பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்வில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சத்தியநாதன், சாரண ஆசிரியர் முத்துச்சாமி, காரைக்குடி பட்டாலியன் ஹவில்தார் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம், சாரண இயக்க மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மனோராவில் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

    ×