என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்காசி"

    • அதிகபட்சமாக தென்காசியில் 42 மில்லி மீட்டர், செங்கோட்டையில் 38 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
    • தென்காசியில் அதிகாலை 4 மணிக்கு தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று இரவு தொடங்கி பெரும்பாலான இடங்களில் இன்று அதிகாலை வரையிலும் கனமழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. சில இடங்களில் அதிகாலை முதல் கனமழை பெய்தது. நள்ளிரவில் சில இடங்களில் பயங்கர இடி-மின்னலுடன் மழை பெய்தது.

    அதிகபட்சமாக தென்காசியில் 42 மில்லி மீட்டர், செங்கோட்டையில் 38 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. ஆய்குடியில் 23 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது . மழை காரணமாக குற்றாலத்தில் மிதமான அளவில் அனைத்து அருவியிலும் தண்ணீர் கொட்டி வருகிறது.

    தென்காசியில் அதிகாலை 4 மணிக்கு தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. பாவூர்சத்திரம், ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு 2 மணி அளவில் சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுரண்டை சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    அணைகளை பொறுத்தவரை குண்டாறு மற்றும் அடவிநயினார் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக குண்டாறு அணையில் 26.20 மில்லி மீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 11 மில்லி மீட்டரும் மழை பெய்தது. ராமநதி மற்றும் கடனாநதி அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் தலா 8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்தது. நெல்லை மாநகரப பகுதியிலும் இரவில் மழை பெய்த நிலையில் இன்றும் அதிகாலையில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    மாநகரில் பாளையங்கோட்டையில் 7.20 மில்லி மீட்டரும், நெல்லையில் 6.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. மாவட்டத்தில் அம்பை, கண்ணடியன் கால்வாய் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்தது. இன்றும் அதிகாலையில் சாரல் மழை பெய்தது. அணைகளை பொறுத்தவரை பாபநாசம் அணையில் லேசான சாரல் மழை பெய்த நிலையில் சேர்வலாறு அணை பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 23 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அணையின் நீர்வரத்து 214 கன அடியாக இருந்து வருகிறது. அணை நீர்மட்டம் உயர்வில் பெரிய அளவில் மாற்றம் எதுவும் இல்லை.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தாறு, கடம்பூர், விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி பகுதிகளில் சிறிது நேரம் மழை பெய்தது.

    • சுமார் 1500 ஆண்டுகள் பழமையான கோவில்.
    • முருகன் பாதமும், அருகில் சிவலிங்கமும் உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் சிவகிரி என்னும் ஊரில் உள்ள மலை மீது அமைந்திருக்கிறது, பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில். சுமார் 1500 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவிலின் மூலவராக 'பால சுப்பிரமணியர்' உள்ளார். உற்சவரின் திருநாமம், முத்துக்குமாரர் என்பதாகும். இவ்வாலய தீர்த்தமாக சரவணப் பொய்கை உள்ளது.

    சூரபத்மனை அழித்த பிறகு தெய்வானையை மணப்பதற்காக, முருகப்பெருமான் திருப்பரங்குன்றம் புறப்பட்டார். அப்போது முருகனை தரிசனம் செய்ய வேண்டி அகத்திய முனிவர் இந்த மலையில் தவம் செய்து கொண்டிருந்தார்.

    அவருக்கு தரிசனம் அளித்த முருகப்பெருமான், அகத்தியரின் விருப்பப் படியே இந்த மலை மீதும் வாசம் செய்தார். பின்னாளில் இம்மலை மீது ஆலயம் எழுப்பப்பட்டது. இங்கு பாலகராக முருகப்பெருமான் காட்சியளிக்கிறார்.

    எனவே இவர் 'பாலசுப்பிரமணியர்' என்று பெயர் பெற்றார். அகத்தியருக்கு முருகன் காட்சி தந்த இடத்தில் பாத மண்டபம் இருக்கிறது. இங்கு முருகன் பாதமும், அருகில் சிவலிங்கமும் உள்ளது.

    பாதகமான கிரக அம்சங்களை எதிர்கொள்பவர்கள், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணத்திற்காக இங்கு வழிபாடு செய்கிறார்கள். பக்தர்கள் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர்.

    பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள், அந்த பிரச்சினைக்கு காரணமான கிரகத்திற்கு உரிய நாளில் இங்குள்ள முருகனை வழிபட்டு சென்றால், நல்ல பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


    இங்கு முருகப்பெருமான் தனது ஜடாமுடியையே, கிரீடம் போல சுருட்டி வைத்த கோலத்தில் காட்சி தருகிறார். இது முருகப்பெருமானின் அரிய வடிவம் ஆகும்.

    கிரகப் பிரச்சினை உள்ளவர்கள், ராசி சின்னங்களுடன் ஒரு உலோகத் துண்டை (தகடு), முருகப்பெருமானின் பாதத்தில் வைக்கிறார்கள். இதன்மூலம் பக்தர்களின் கிரக சம்பந்தமான பிரச்சனைகள் அகலும் என்பது ஐதீகம்.

    மலைகள் மற்றும் நீர் வளங்களால் சூழப்பட்ட இயற்கை எழில் மிகுந்ததாக, இந்த மலைக் கோவில் திகழ்கிறது. பாலசுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ள குன்று 'சக்தி மலை' என்று அழைக்கப்படுகிறது. இடதுபுறம் சிவன் மலை உள்ளது.

    சிவனுக்கும், சக்திக்கும் இடையில் சோமாஸ்கந்த வடிவத்தில் இங்குள்ள முருகன் காட்சி தருகிறார். முருகன் சன்னிதியின் வலதுபுறம் சுந்தரேஸ்வரரும், இடதுபுறம் அன்னை மீனாட்சியும் உள்ளனர்.

    பங்குனி பிரம்மோற்சவத்தில் உற்சவரான முத்துக்குமாரர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகிறார். திருவிழாக் காலங்களில் மூன்று நாட்கள் மட்டுமே முருகப்பெருமானின் ஊர்வல தரிசனம் கிடைக்கும். மற்ற நாட்களில் கோவிலுக்குள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும்.

    இவ்வாலயத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, சண்டிகேஸ்வரி, பைரவர், நவக்கிரகங்கள், சனி பகவான், அஷ்டபுஜ துர்க்கை மற்றும் இடும்பன் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. முருகப்பெருமானின் கருவறை கோஷ்டத்தில் பிரம்மா மற்றும் சண்டிகேஸ்வரரின் எதிரே லிங்கோத்பவருக்கு தனிச் சன்னிதி உள்ளது.

    மலையின் நடுவில் காளி அன்னை சன்னிதி உள்ளது. காலையிலும், மாலையிலும் முதல் பூஜை இந்த காளியம்மனுக்குத்தான் செய்யப்படுகிறது. அதன் பிறகுதான் முருகப்பெருமானுக்கு வழிபாடு நடைபெறும்.

    பவுர்ணமி தினங்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இக்கோவிலில் உள்ள முருகப்பெருமான் நவக்கிரக முருகனாக போற்றப்படுகிறார். இங்கு உள்ள விநாயகருக்கு 'அனுக்ஞை விநாயகர்' என்று பெயர்.


    பங்குனி பிரம்மோற்சவம், ஐப்பசியில் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், மாசி மகம் ஆகியவை இந்த கோவிலில் சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழாக்கள் ஆகும். திருச்செந்தூர் கோவிலில் செய்யப்படும் முறைப்படியே, இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன.

    பொதுவாக கந்தசஷ்டி விழா 6 நாட்கள் நடைபெறும். ஆனால் இந்த ஆலயத்தில் 11 நாட்கள் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. 11-வது நாளில் முருகப்பெருமானுக்கு முடிசூட்டு விழா நடைபெறும்.

    அப்போது அரியணையில் முருகனை அமரச் செய்து, தங்க கிரீடம் அணிவித்து, அரச அதிகாரத்தை குறிக்கும் செங்கோல் கொடுக்கப்படும். பின்னர் அரச அங்கியில் முருகன் வீதி உலா வருவார். இதனை 'பட்டினப் பிரவேசம்' என்று சொல்வார்கள்.

    இந்த ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    மதுரையில் இருந்து குற்றாலம் செல்லும் வழித்தடத்தில் 108 கி.மீ. தொலைவில் சிவகிரி உள்ளது. ராஜபாளையத்தில் இருந்தும் தென்காசிக்கு பேருந்து வசதி உள்ளது. அந்த பேருந்துகள் சிவகிரி வழியாகத்தான் செல்லும். சிவகிரி பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் கோவில் அமைந்துள்ளது.

    • தீபாவளி தொடர்விடுமுறை முடிந்ததையடுத்து நேற்று காலை முதலே ஏராளமானவர்கள் மீண்டும் வெளியூருக்கு புறப்பட்டு சென்றனர்.
    • தென்காசி புதிய பஸ் நிலையத்தில் வெளியூர் செல்லும் பஸ்கள் முழுவதும் நிரம்பி சென்றது.

    தென்காசி:

    தீபாவளி பண்டிகை கடந்த 24-ந்தேதி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்வந்தனர். அந்தவகையில் தென்காசி மாவட்டத்திற்கு ஏராளமானவர்கள் வந்தனர்.

    இந்நிலையில் தீபாவளி தொடர்விடுமுறை முடிந்ததையடுத்து நேற்று காலை முதலே ஏராளமானவர்கள் மீண்டும் வெளியூருக்கு புறப்பட்டு சென்றனர். இதற்காக சிறப்பு பஸ்களும் இயக்கபட்டது. இதனால் தென்காசி பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது. குறிப்பாக தென்காசி புதிய பஸ் நிலையத்தில் சென்னை, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பஸ் முழுவதும் நிரம்பி சென்றது.

    இதேபோல் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ற அனைத்து ெரயில்களிலும் மக்கள் போட்டி போட்டு முன்பதி வில்லாத பெட்டிகளில் இடம் பிடித்து பயணம் மேற்கொண்டனர்.

    • தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ முகாம் நாளை நடைபெற உள்ளது.
    • மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டு சிகிச்சை அளிக்க உள்ளனர்.

    தென்காசி:

    பிங்க் அக்டோபர் 2022 கொண்டாடுவதையொட்டி தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு சிறப்பு மருத்துவ முகாம் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெற உள்ளது.

    முகாமை இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் முரளி சங்கர் தலைமையில் முகாம் நடைபெறுகிறது.

    இதில் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மார்பில் கட்டி, வலி, மார்பகக் காம்புகள் உள்போகுதல், மார்பகக் காம்புகளில் இருந்து திரவம் வருதல், மார்பக சருமம் சிவந்து போதல், குடும்பத்தில் யாருக்கேனும் மார்பக புற்றுநோய் இருத்தல், போன்ற ஏதேனும் தொந்தரவு இருப்பின் அவர்கள் முகாமில் கலந்துகொண்டு பயன் பெறலாம். தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த அரசு அறுவை சிகிச்சை நிபுணர்கள், மகப்பேறு நிபுணர்கள்,ஸ்கேன் மருத்துவர்கள்,பொது மருத்து வர்கள் என பலர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க உள்ளனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தென்காசி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப் பாளர் ஜெஸ்லின், உறைவிட மருத்துவர் ராஜேஷ் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் முகாமில் மார்பக சுயபரிசோதனை முறைகள் விளக்கப்படுகின்றன. இம்முகாமில் தென்காசி மாவட்ட பெண்கள் கலந்துகொண்டு, மார்பக பிரச்சினைகள் இருப்பின் அவை ஆரம்ப நிலையிலேயே கண்ட றியப்பட்டு சரியான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அதன் மூலம் பயன்பெறலாம் என கேட்டுக் கொள்ளபட்டுள்ளது.

    • வேதாம்புத்தூர் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது.
    • நியாய விலை கடையில் பொருட்களின் தரத்தினையும் சுன் சோங்கம் ஐடக் சிரு ஆய்வு மேற்கொண்டார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பாளர் சுன் சோங்கம் ஐடக் சிரு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன்படி வேதாம்புத்தூர் கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

    அப்பகுதியில் உள்ள சுமார் 342 வீடுகளில் 1898 பேர் வசித்து வருகின்றனர். அதில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 1489 பேர், 1402 நபர்களுக்கு பரி சோதனை செய்யப்பட்டதில் 38 நபர்களுக்கு ரத்த அழுத்த நோயும், 28 நபர்களுக்கு நீரழிவு நோயும், 30 நபர்களுக்கு ரத்த அழுத்த நோய் மற்றும் நீரழிவு நோய் கண்டறியப்பட்டு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது. மேலும் இத்திட்டத்தின் மூலம் 6 பயனாளிகளுக்கு பிசியோதெரபியும், 4 பயனாளிகளுக்கு முட நீக்கியல் சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து வடகரை கீழ்படாக பேரூராட்சி பகுதியில் வா வா நகரம் ஊரணியை தூர்வாரி ஆளப்படுத்தி கரையை பலப்படுத்தும் பணிகள், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பாலா மார்த்தாண்டபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் என்னும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மாணவர் களுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சிகள் குறித்தும், துரைச்சாமிபுரம் நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பொரு ட்களின் தரத்தினையும் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் ஆகாஷ், கீழ் பிடாகை பேரூராட்சி தலைவர் ஷேக் தாவூத், பேரூராட்சி செயல் அலுவலர் தமிழ்மணி, துணை இயக்குனர் முரளி சங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், மாவட்ட வழங்கள் அலுவலர் சுதா,பாலமர்த்தாண்டபுரம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • முகாமை மருத்துவர் பிரேமலதா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
    • மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் மார்பக பரிசோதனையின் அவசியத்தை எடுத்துக் கூறினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் 'பிங்க் அக்டோபர் 2022' கொண்டாடப்பட்டது. இதையொட்டி மார்பக புற்றுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாமை இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா குத்துவிளக் கேற்றி தொடங்கி வைத்தார்.

    மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் மார்பக பரிசோதனையின் அவசியத்தையும், கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றியும் எடுத்துக் கூறினார்.

    முகாமில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சொர்ணலதா, விஜயகுமார், முத்துக்குமாரசாமி, கார்த்திக், ஜெரின், விக்னேஷ்,பொது மருத்துவர்கள் லதா,கீதா, மல்லிகா,ஸ்கேன் மருத்துவர் நாகஜோதி, காது மூக்கு தொண்டை நிபுணர் மணிமாலா, மகப்பேறு மருத்துவர்கள்,செவிலிய கண்காணிப்பாளர்கள் பத்மாவதி, திருப்பதி, பயிற்சி மருத்துவர்கள் மேக்லி, எஸ்தர்,மருத்துவமனை செவிலியர்கள் மருத்துவமனை பணியாளர்கள் என அனைவரும் முகாமில் கலந்து கொண்டனர்.

    இதில் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கீழ்கண்ட அறிகுறிகளான மார்பில் கட்டி, வலி, மார்பகக் காம்புகள் உள்போகுதல், மார்பகக் காம்புகளில் இருந்து திரவம் வருதல், மார்பக சருமம் சிவந்து போதல், குடும்பத்தில் யாருக்கேனும் மார்பக புற்றுநோய் இருத்தல் போன்ற ஏதேனும் தொந்தரவு இருப்பவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். தென்காசி மாவட்டத்தை சார்ந்த அரசு அறுவை சிகிச்சை நிபுணர்கள், மகப்பேறு நிபுணர்கள்,ஸ்கேன் மருத்து வர்கள்,பொது மருத்துவர்கள் என பலர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றனர்.

    முகாமில் சுமார் 92 பயனாளிகள் பயன் பெற்றனர்.அனைவருக்கும் மார்பக பரிசோதனை செய்து, ஸ்கேன் மற்றும் மாமோ கிராம் செய்து சிகிச்சை அளி க்கப் பட்டது. அனைத்து ஏற்பாடு களை யும் உறைவிட மருத்துவர் எஸ் எஸ் ராஜேஷ் ஏற்பாடு செய்திருந்தார். என்.ஹச்.எம் நோடல் ஆபீசர் மருத்துவர் கார்த்திக் அறிவுடை நம்பி நன்றி கூறினார்.

    • ஆர்ப்பாட்டத்திற்கு பாரதீய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமை தாங்கினார்.
    • முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா கண்டன உரையாற்றினார்

    தென்காசி:

    தி.மு.க. அரசை கண்டித்து தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே நடை பெற்றது. மாவட்ட பாரதீய ஜனதா கட்சி தலைவர் ராஜேஷ் ராஜா தலைமை தாங்கினார்.

    பாரதீய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான சசிகலா புஷ்பா கண்டன உரையாற்றினார். மாநில வர்த்தக அணி தலைவரும் தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் பார்வையாளருமான ராஜா கண்ணன்,மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாலகுருநாதன், அருள்செல்வன், ராமநாதன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன்,மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் மருது பாண்டியன், தொழில் பிரிவு மாநில செயலாளர் மகாதேவன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் அன்புராஜ்,சாரதா பாலகிருஷ்ணன், ராம ராஜா, பாண்டித்துரை, மாவட்ட துணைத் தலைவர்கள் முத்துக்குமார் பால்ராஜ், பாலமுருகன், முத்துலட்சுமி பால ஸ்ரீனிவாசன்,மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், ராஜலட்சுமி ஜானகி, புலிக்குட்டி,அர்ஜுனன், தென்காசி நகரத் தலைவர் மந்திரமூர்த்தி, கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் மாரியப்பன், மாநில மாவட்ட அணி பிரிவு மண்டல் கிளை கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பா.ஜ.க. வினர் கலந்து கொண்டனர்.

    • மதுரை நாடார் மகாஜன சங்க தேர்தலில் என்.ஆர்.தனபாலன் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
    • எஸ்.வி.கணேசன் தலைமையில் பல்வேறு நாடார் சங்கத்தினரை சந்தித்து வாக்கு சேகரித்தனர்.

    சுரண்டை:

    மதுரை நாடார் மகாஜன சங்க தேர்தல் வருகிற நவம்பர் 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுரை வெள்ளச்சாமி நாடார் கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது. இதில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். மற்ற பதவிகளுக்கான வேட்பாளர்கள் அவரது தலைமையில் மூன்று பனைமரம் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

    இந்த நிலையில் என்.ஆர்.தனபாலன் தலைமையில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் ஆதரித்து, தென்காசி மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவர் சுரண்டை எஸ்.வி.கணேசன் தலைமையில், பாண்டியாபுரம், கடையாலுருட்டி, சேர்ந்தமரம், கள்ளம்புளி ஆகிய கிராமங்களுக்கு சென்று பல்வேறு நாடார் சங்கத்தினரை சந்தித்து 3 பனை மரம் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.

    தென்காசி மாவட்டத்தில் நாடார் மகாஜன சங்கம் மூலம் நர்சிங் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி அமைக்கப்படும், மத்திய, மாநில அரசு பணிகளில் சேர்வதற்கான பயிற்சி அளிக்கப்படும், பின்தங்கிய மகளிர் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த சிறு தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு, தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் வேட்பாளர்கள் கே.வி.கண்ணன், சேர்மராஜ், ஆனந்தராஜ், சின்னத்தம்பி மற்றும் நாடார் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லையில் இருந்து பெங்களூருவிற்கும் தென்காசி வழியாக சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்
    • தென்காசி சுற்றுவட்டாரப் பகுதியினர் பெங்களூரு மற்றும் ஓசூருக்கு பணிநிமித்தமாக சென்று வருகின்றனர்.

    தென்காசி:

    தற்போது நெல்லையில் இருந்து தென்காசி வழியாக தாம்பரம் மற்றும் மேட்டுப்பாளையத்திற்கும், தென்காசி வழியாக எர்ணாகுளம் - வேளாங்கண்ணி ஆகிய சிறப்பு ரெயில்களை தென்னக ரெயில்வே இயக்கிவருவது ரெயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்த சிறப்பு ரெயில்களைப் போலவே நெல்லையில் இருந்து பெங்களூருவிற்கும் தென்காசி வழியாக சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    தற்போது தென்மேற்கு ரெயில்வே சார்பில் மைசூரில் இருந்து மயிலாடுதுறை மற்றும் தூத்துக்குடிக்கு வாராந்திர சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில்கள் வரும் நவம்பர் 4,11,18 ஆகிய தேதிகளில் வெள்ளிக்கிழமை தோறும் இயக்கப்படுகிறது.

    மறு மார்க்கத்தில் 5,12,19 ஆகிய தேதிகளில் சனிக்கிழமை தோறும் தூத்துக்குடி மற்றும் மயிலாடுதுறையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இதைப்போலவே தென்காசி வழியாக பெங்க ளூருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    பணி நிமித்தமாக

    அம்பை,பாவூர்சத்திரம், தென்காசி,ராஜபாளையம், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பெரும்பாலோனார் பெங்களூரு மற்றும் ஓசூருக்கு பல்வேறு பணிநிமித்தமாக சென்று வருகின்றனர். மேலும் கல்லூரி மாணவர்களும் பலர் பெங்களூருவில் பயின்று வருகின்றனர். தென் மாவட்டங்களில் இருந்து பெங்களூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பேருந்துகளில் மிக அதிக தொகை கொடுத்து செல்லும் நிலைதான் தற்போது உள்ளது.

    மேலும் தென்காசி மற்றும் நெல்லை மேற்கு பகுதி மக்கள் பெங்களூர் செல்ல நெல்லை ரெயில் நிலையத்திற்கு சென்று நாகர்கோவில் - பெங்களூர் ரெயிலை பிடிக்க வேண்டும்.

    அது போல சங்கரன் கோவில், ராஜபாளையம், சிவகாசி பகுதி மக்கள் பெங்களுர் செல்ல கோவில்பட்டி அல்லது விருதுநகர் ரெயில்நிலையம் சென்று தூத்துக்குடி-மைசூரு ரெயிலை பிடிக்க வேண்டும். இதனால் தேவையற்ற பண விரயமும், கால விரயமும் பொதுமக்க ளுக்கு ஏற்படுகிறது.

    இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறுகையில்,

    பெங்களூரில் 315 கோடி செலவில் முழுவதும் குளிரூட்டப்பட்ட சர். விஸ்வேஸ்வரையா ரெயில்வே நிலையம் பொதுமக்களின் பயன் பாட்டுட்டுக்கு வந்துள்ளது. இந்த புதிய முனையத்தில் 7 நடைமேடைகள், 3 ரெயில் பராமரிப்பு பிட் லைன்கள், பராமரிப்பு பணி முடிந்த பின் ரெயில்களை பார்க்கிங் செய்ய 8 ஸ்டேப்பிலிங் லைன்களும் உள்ளன. பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு அம்பாச முத்திரம், தென்காசி, ராஜபாளையம், மதுரை, நாமக்கல் வழியாக பெங்க ளூருக்கு ரெயில் இயக்க வேண்டும். நெல்லையில் காலியாக இருக்கும் 2 ரெயில்களை கொண்டு 2 சிறப்பு ரெயில்கள் இயக்குவதை போல, பெங்களூருவில் காலியாக நிற்கும் ரெயில் பெட்டிகளை கொண்டு பெங்களூரு - நெல்லை இடையே தென்காசி வழியாக சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும்.

    ஏற்கனவே மைசூர் மற்றும் பெங்களூருக்கு தென்மேற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்கள் இயக்க ஆர்வம் காட்டுவதால் தெற்கு ரெயில்வே அதற்கு வழித்தட அனுமதி கொடுத்து பெங்களூருக்கு ரெயில்களே இல்லாத ராஜபாளையம், தென்காசி, அம்பை வழியாக நெல்லைக்கு இயக்க அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நகர் மன்ற தலைவர் சாதிர் தலைமையில் வார்டு சபை கூட்டம் நடைபெற்றது.
    • குப்பைகளை தனித்தனியாக பிரித்து வழங்க வேண்டும் எனவும் சாதிர் கேட்டுக்கொண்டார்.

    தென்காசி:

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நேற்று கிராம சபை கூட்டம் போன்று நகராட்சி வார்டு பகுதிகளில் வார்டு சபா கூட்டம் நடைபெற்றது.

    அதன்படி தென்காசி நகராட்சிக்குட்பட்ட 18 -வது வார்டு பகுதியில் நகர் மன்ற தலைவர் சாதிர் தலைமையில் வார்டு சபை கூட்டம் நடைபெற்றது.

    இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்துகொண்டு தங்கள் பகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து நகர்மன்ற தலைவரிடம் கூறினர்.

    இதனை கேட்டறிந்த நகர்மன்ற தலைவர் சாதிர் பொதுமக்களின் முறையான குடிநீர் வசதி, சாலை வசதி ,தெருவிளக்கு வசதி உள்ளிட்டஅடிப்படை வசதிகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும் என உறுதி அளிக்கிறேன் என்று பொதுமக்களிடம் தெரிவித்தார். மேலும் தங்கள் பகுதியில் உள்ள குப்பைகளை வாறு கால்களில் போடாமல் அதனை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பிரித்து சேகரிக்க வசதியாக 2 வண்ணங்களில் குப்பைத் தொட்டிகளை வார்டு பகுதி சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்களுக்கு நகர் மன்ற தலைவர் சாதிர் தனது சொந்த செலவில் வழங்கினார்.

    மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    மேலும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் எந்நேரமும் அடிப்படை வசதிகள் குறித்து தன்னை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தென்காசி ம.தி.மு.க. நகர செயலாளர் வெங்கடேஸ்வரன், நகர தி.மு.க. பொருளாளர் சேக் பரீத், தென்காசி நகராட்சி யின் சுகாதார ஆய்வாளர் மாதவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஒருங்கிணைந்த தென்காசி மாவட்ட செயற்குழு கூட்டம் சங்கரன்கோவில் நடைபெற உள்ளது.
    • கூட்டத்திற்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமை தாங்குகிறார்.

    தென்காசி:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது:-

    தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஒருங்கிணைந்த தென்காசி மாவட்ட செயற்குழு கூட்டம் வருகிற 23-ந் தேதி (புதன்கிழமை) சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற உள்ளது.

    கூட்டத்திற்கு வரு வாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமை தாங்குகிறார். கூட்டத்தில் டிசம்பர் 5-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி வேல்ஸ் மெட்ரிக் பள்ளியில் நடைபெறும் அரசு விழா வில் கலந்து கொள்ள வருகிறார். அந்த விழாவினை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோ சனைகள் நடைபெற உள்ளது.

    எனவே இந்த கூட்டத்தில் தலைமை நிலைய நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், பிற அணி அமைப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    • நூலக வார விழாவில் யோகா போட்டி இரு பிரிகளாக நடைபெற்றது.
    • பள்ளி மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.

    தென்காசி:

    தென்காசி வ.உ.சி. வட்டார நூலகத்தில் நூலக வார விழாவின் 7-ம் நாள் நிகழ்ச்சியில் யோகா போட்டி ஜூனியர் மற்றும் சீனியர் என இரு பிரிகளாக நடைபெற்றது.

    நிகழ்ச்சியை அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதில் தென்காசி வட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.

    ஏற்பாடுகளை த.மு.எ.க.ச. மாவட்ட செய லாளர் பக்ருதீன் அலி அகமது, போட்டி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ஆறுமுகம்,யோகா பயிற்சியாளர் அரவிந்த் யோகாலயா, மருது சுபாஷ், வட்டார நூலகர் பிரம்ம நாயகம், கிளைநூலகர் சுந்தர், நூலகர்கள் ஜூலியாராஜ செல்வி, நிஹ்மத்துன்னிஸா, அம்பை நூலகர் சதிஷ், வாசகர் வட்ட நிர்வாகிகள் குழந்தைஜேசு, முருகேசன் ஆகியோர் செய்து இருந்தனர்.

    ×